மரண அறிவித்தல்



                      திருமதி தேவராணி தவஞானம்


  யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும், Sydney Toongabbie  யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவராணி தவஞானம் புதன்கிழமை 19.05.2010 அன்று சிவபதம் அடைந்தார்.


அன்னார் காலம் சென்ற சின்னையா தவஞானத்தின் அன்பு மனைவியும், காயத்திரி ((Brisbane) , சற்குமார், மாயத்திரி (Sydney) ஆகியோரின் பாசம் மிக்க தாயாரும், சுரேந்திரா ((Brisbane), வருணி, அரவிந்தன் (Sydney) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர்.


இவர் தமயந்தி, கஜன், அருந்ததி ((Brisbane), சரவணன், சக்தி (Sydney), ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் வெள்ளி 21.05.10ம் திகதி மாலை 5 மணி முதல் மாலை 9 மணி வரை TJ Andrews Funeral Parlor, 2 Auburn Road, Auburn ல் பார்வைக்கு வைக்கப்படும்.

அந்திமக் கிரியைகள் சனி 22.05.10ம் திகதி காலை 9 மணிக்கு 15 Heather Street, Girraween இலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

தகனக்கிரிகைகள் பிற்பகல் 1.30 மணிக்கு West Chapel, Pinegrove Crematorium, Pinegrove Memorial Park, Kington Street (off Great Western Highway), Minchinbury ல் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


மேலதிக விபரங்களுக்கு 96312920 வில் தொடர்பு கொள்ளவும்.
பகவத் கீதை இலவசமாக கற்றுக்கொள்ளுங்கள்!!



Westmead Progress Hall
Saturday 22nd May at 5.00 pm!!



நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அவுஸ்திரேலிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் அறிவிப்பு


நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில், 4 பிரதிநிதிகளை நியு சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இருந்து தெரிவு செய்வதற்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
மரண அறிவித்தல்

        திருமதி மேரி ரெஜினா அல்(f)பிரட்


பிறப்பு   : 04.04.1934                                    இறப்பு : 15.05.2010
நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரி ரெஜினா அல்பிரட் அவர்கள் 15.05.2010 அன்று இறைபதம் எய்தினார்.
பிறந்தநாள் வாழ்த்து 15 . 05 .2010  செல்வி ஆரதி கதிர்



Burwood ச்  சேர்ந்த கதிர் நித்தியா  தம்பதிகளின் அன்புப் புதல்வி  ஆரதி கதிர்  15 . 05 .2010 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
மேலும் பார்ப்பதற்கு இடதுபக்கம் உள்ள மேலும் சில பக்கங்களின் கீழ் பிறந்தநாள் வாழ்த்தை அழுத்தவும்
உலகத்தை சுற்றி வந்த ஜெசிக்கா வற்ஷன்


                                                                                    கரு (கு கருணாசலதேவா)

சிட்னி துறைமுகத்தில் ஏராளமான மக்கள் கூட்டம் உலகத்தை தன்னம்தனியாக ஒரு படகு மூலம் சுற்றி வந்த ஒரு புதிய கதாநாயகியை சென்ற சனிக்கிழமை மே மாதம் 15ம் திகதி பிற்பகல் 2 மணி அளவில் வரவேற்றார்கள். நூற்றுக்கும் அதிகமான படகுகள் இந்த வரவேற்பில் பங்குபற்றின.
ஆஸ்திரேலிய பாராளுமன்ற வரவு செலவு திட்டம் 2010

சென்ற செவ்வாய்க்கிழமை மே மாதம் 11ம் திகதி ரட் அரசாங்கம் தனது மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை பாரளுமன்றத்தில் வெளியிட்;டது. மூன்று வருடத்துக்குள் பணம் “சிவப்பு” இலிருந்து “கறுப்பு” ஆக வரவு செலவு மிகுதித்தொகை மூன்று வருடங்களுக்கு முன்னராகவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது


நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் 5 பேர் மரணம்
                                                                                               செய்தி தொகுப்பு : கரு

இலங்கைத் தமிழர்கள் 5 பேர் அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கேட்டுச் சென்ற போது படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் காணமால் போனார்கள்.
64 இலங்கைத் தமிழர்கள் பயணம் செய்த இந்த படகு, அவுஸ்திரேலியா நாட்டின் எல்லையில் இந்தியப் பெருங்கடலில் பழுதடைந்தது.
மேமாதக் காற்றுச் சொன் சேதி                                                  

கவிதை xxxxx   செ. பாஸ்கரன்





வணங்குவதற்கு ஒரு மண்

                                                                                       அ. முத்துலிங்கம்

புறநானூறில் ஒரு பாடல் உள்ளது. குறுங்கோழியூர் கிழார் சேரமானைப் பார்த்து பாடியது.
'உன்னுடைய மண்ணை கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே உண்ணுவர். எதிரிகள் உண்ண முடியாது.' பழந்தமிழர் சொந்த மண்ணை மாற்றான் அபகரிக்காமல் பாதுகாப்பதற்காகப் போர்புரிந்தார்கள். அதுவே ஒரு வாழ்வுமுறையாக அமைந்தது. மண்ணுக்காக போர்புரிந்து மரித்த வீரர்களுக்கு நடுகல் எழுப்பி அவர்களை வழிபடுவது தமிழர் பண்பாடாகியது.

அவுஸ்திரேலியா மெல்பனில் பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழா

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியகலைச்சங்கத்தின் பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரையில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திருமதி அருண்.விஜயராணியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கு பிரதிநிதிகளுக்கான தேர்தல்                            செய்தி தொகுப்பு : கரு

சென்ற வெள்ளிக்கிழமை மே மாதம் 7ம் திகதி தேர்தலுக்குரிய நியமனப்பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி நாள் என்று குறிப்பிடப்பட்டது. நான்கு பிரதிநிதிகள் தேவைப்படும் நியூ சவுத் வேல்ஸ் மானிலத்திற்கு எட்டுப்பேர் விண்ணப்பித்துள்ளனர்.


ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த திரைப்படம்

நாடு கடந்த ஈழத்தை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா பாரளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
                                                                                                      செய்தி தொகுப்பு : கரு
நாடு கடந்த ஈழத்தை அங்கீகரிக்கும்படி அவுஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலும் மற்றும் ஏனைய ஐரோப்பா நாடுகளிலும் நடத்தப்பட்ட நாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்ததை அடுத்தே அவர் இதை கூறுவதாக கூறியிருக்கிறார், பச்சைக்  கட்சி உறுப்பினர் அமண்ட் ப்றேச்ணன். சமீபத்தில் நடத்து முடிந்த அந்தத் தேர்தலில் கண்காணிப்பு உத்தியோகத்தராக பணியாற்றி இருந்தார். அவர் அவுஸ்திரேலியா அரசை நடந்து முடிந்த நாடு கடந்த ஈழத்துக்கான தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்குமாறு கோரியுள்ளார்.
பகவத் கீதை - புகைப் பழக்கத்தை விடுவது எப்படி?
ஹரே கிருஷ்ணா!

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரக் கட்டுரை குறித்து கேள்வி கேட்ட ஒருவர், தீய பழக்கங்களை எப்படி கை விடுவது என்று கேட்டு இருந்தார். அது குறித்து இவ்வாரம் கலந்தாராயலாம் என்று தீர்மானித்தேன்.
பிறந்தநாள் வாழ்த்து 12 . 05 .2010

செவன் கில்லைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை றோஸ்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வன் கிரிஷான்  12 . 05 .2010 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
மேலும் பார்ப்பதற்கு  இடதுபக்கம் உள்ள மேலும் சில பக்கங்களின் கீழ்  பிறந்தநாள்  வாழ்த்தை அழுத்தவும்
மலேசியத்தலைநகரில் எனது மனதைக்கவர்ந்த பத்துமலை(BATU CAVES) முருகன் கோயில்


  சாந்தினி புவனேந்திரராஜா - மெல்பேர்ண்

அண்மையில் நான் மலேசியாவுக்குப் போயிருந்தபோது, மலேசியா முழுவதையும் சுற்றிப்பார்க்க முடியவில்லை, ஆனாலும் மலேசியத்தலைநகரின் முக்கியமான பலவற்றையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவற்றில் எனது மனதைக்கவர்ந்தது, என்னைப்பிரமிக்க வைத்தது பத்துமலை முருகன் கோயில்
மகாகவி சுப்பிரமணியாரதியார் பிறந்த 125-வது ஆண்டு நினைவாக காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம்

பாரதியாரின் தத்துவப் பார்வை

                                                      சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம்

இந்திய நாட்டின் ஈடிணையற்ற தமிழ்ப் புலவன் சுப்பிரமணியபாரதி;. நூற்றியிருபத்தைந்து ஆண்ருகளுக்கு முன் தோன்றிய பாரதியின்; பாடல்கள் தமிழ் இலக்கியத் துறையில் புதிய பரிமாணத்தை உண்டாக்கின. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துதல் கொடுததன. அறியாமை, வறுமை, சமுதாய அநீதி போன்றவற்றை அகற்ற முயன்றன. இன மொழி மான உணர்வை ஊடடின. புல்வகைப் பண்பாடும் கலாச்சாரமுங் கொண்ட, பல்லின மக்கள் வாழும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வழிவகுப்பதாகவும் அவை அமைந்தன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீடு வாங்குவோருக்கு புதிய வரி
                                                                                             செய்தி தொகுப்பு கரு
வீடு அல்லது ஏதாவது காணிகள் $500,000 யிற்கு மேலே பெறுமதியுடையனவாயின் அவற்றை வாங்குவோருக்கு புதிய வரி அறவிடப்படும் என காணி நில மந்திரி ரொனி கெலி சென்ற வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார். சிட்னியில் சராசரி வீடு ஒன்றுக்கு ஏறக்குறைய $200 கூடுதலான வரி செலுத்த நேரிடும். $1 மில்லியன் வீட்டிற்கு $1000 வரை வரி செலுத்த வேண்டும். $600இ000 பெறுமதியுள்ள வீட்டிற்கு $200 வரியும் $1.2 மில்லியன் வீட்டிற்கு $1500 வரியும் செலுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010

இடம்: பிரஸ்டன் நகரமண்டபம் (மெல்பன்)
நாள்:22-5-2010 காலம்: சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை
வேலை அற்றோர் தொகை உயர்வடைந்துள்ளது

நியூ சவுத் வேல்ஸில் வேலை அற்றோர் தொகை 5.5 விளுக்காட்டில் இருந்து 5.8 விளுக்காடுகளாக உயர்வடைந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நிதியாளர் Eric Roozendaal இக் காலப் பகுதியில் புதிதாக 10 ஆயிரம் வேலைகள் உருவாக்கபட்டுள்ள போதும் வேலையற்றோர் தொகை அதிகரித்துள்ளது எனவும் இது பலர் புதிதாக வேலை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளமையைக் காட்டுகின்றது என்று தெரிவித்தார்.