கண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில் - கானா பிரபா

.
இசைஞானி இளையராஜாவின் சமீபகால உலக இசைச்சுற்றுலாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே 2009 ஆம் ஆண்டில் இதே எடுப்பிலான ஒரு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவிலும் நிகழ ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருந்தது. அப்போது சிட்னி சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வழியாகவே இசை வழங்கிச் சிறப்பிப்பதாகப் புதுமையானதொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத தடங்கல்களால் அது நிறைவேறாது போகவே, இந்த ஆண்டு மே மாதம் சிட்னி, மெல்பர்ன் ஆகிய நகரங்களில் இசைஞானி இளையராஜாவுடன் அவர் குழுவில் இருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுடன் நிகழ்ச்சியை அமைக்க இருந்த திட்டமும் கடைசியில் ரத்துச் செய்யப்பட்டு இந்தத் தடவை மூன்றாவது முயற்சியில் பலித்திருக்கிறது. ஆனால் சிட்னியில் இந்த நிகழ்ச்சி நடைபெறாத சூழலில், மெல்பர்னில் மட்டும் நிகழ்ந்தேறியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சிட்னி, மெல்பர்ன் ஆகிய இரு இடங்களிலுமே நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன். ஈற்றில் மெல்பர்ன் நிகழ்ச்சியாவது சாத்தியமாயிற்றே என்று பயண ஏற்பாடுகளைச் செய்தேன். வார இறுதி கூடவே AFL எனப்படும் உதைபந்தாட்டப்போட்டியும் இதே நாளில் மெல்பர்னில் நடப்பதால் சிட்னியில் இருந்து பெருங்கூட்டம் மெல்பர்ன் நோக்கிப் படையெடுத்தது.


மெல்பர்னுக்கு வந்து சேர்ந்ததோடு ஹோட்டலுக்குப் போய் உடைகளை மாற்றி மாலை நான்கு மணிக்கெல்லாம் Melbourne convention Centre போய்விட்டேன். அப்போதே அரங்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ரசிகர்கள் கூடத்தொடங்கினர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் உதவியுடன் மெல்ல அரங்கத்துக்குள் சென்றேன். ஒரு பெரிய பலாப்பழத்தை அறுத்துப் பிரித்து வைத்ததுபோல நீண்ட அரைவட்ட அரங்கம் அது. ஐயாயிரத்து ஐநூறு பேர் கொள்ளக்கூடிய விசாலமான நவீன வசதிகளுடன் அமைந்து அட்டகாசமான தோற்றத்துடன் இருந்தது. அங்கே நான் உள்ளே நுழைந்ததும் என் கண்கள் நேரே அரங்கத்தை நோக்கித் தான் ஊடுருவின. மேடையிலே ஆர்மோனியப்பெட்டியை ஒருபக்கம் அணைத்துக்கொண்டே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டியுடன் இசைஞானி நிற்கிறார். ஒரு கணம் இது கனவுலகமா என நினைத்துக்கொண்டேன். புகைப்படங்களிலும், ஒளிப்படங்களிலும் பார்த்துப் பழகிய ராஜா அதைவிட நிதமும் ஏதாவது ஒரு அவர் இசையமைத்த பாடலைக் கேட்டுக்கொண்டே வாழ்வதால் அந்தச் சந்திப்பு அந்நியப்படவில்லை. மேடைக்கு நெருக்கமான என் இருக்கையில் பசை ஆனேன். ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கண்காணித்துச் சீர் செய்துகொண்டிருந்தார் ராஜா. அந்தச் சூழல் எனக்கு பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இருக்குமாற் போல ஒரு பிரமையை ஏற்படுத்தியது. ஐந்து மணிக்கெல்லாம் இசை ஒத்திகை ஓய்ந்தது, மீண்டும் ஐந்தரை மணிக்குக் கூடுவோம் என்று தமக்குள் ஒரு அறிவிப்பை ஏற்படுத்திவிட்டுக் கலைந்தனர்.

செத்ததறிவானோ ? --இரா எட்வின்



.
முற்றாய் முடிந்ததும்
போர்த்தினார்களா?

முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?

போர்த்தப் பட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது

“ யாரு பெத்த புள்ளையோ...”

 வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி

எங்க போயிட்டிருந்தானோ?
தேம்புகிறாள்
இன்னொரு தாய்

“ இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”

உயர்திணையின் இலக்கிய சந்திப்பு. - ஆக்கம்: கார்த்திகா. கணேசர்

.

மாதம்  தவறாது நடப்பது உயர்திணையின் இலக்கிய சந்திப்பு.
15 சந்திப்புகள் நடந்தேறி விட்டது. அத்தனையும் அறிவுக்கு விருந்து. ஒன்று போல் ஒன்று அமைவதில்லை.அத்தனையிலும் பேசப்பட்ட விஷயங்கள் பல. இது ஒரு கலந்துரையாடல் போல் அமைவது. ஏதோ ஒரு விஷயம் பற்றி ஒருவர் எடுத்துக் கூறஇ அதையிட்ட அறிவு பூர்வமான கலந்துரையாடல் தொடரும். சிறுகதை தொட்டு தமிழ் இலக்கிய கற்பு நெறி வரை பல பல அலசி விட்டோம். மதக் கோட்பாடுகளிலே அதீத நடக்க முடியாத விஷயங்களைக் கூறி மத சிந்தனையை வளர்த்தமை பற்றி சந்திரலேகா வாமதேவா ஒரு சந்திப்பில் எடுத்துக் கூறினார்.பெண்களாக ஒரு நாள் சந்தர்ப்ப வசமாகக் கூடி விடஇ ஆன் ஆதிக்கம் பற்றி எமது வாழ்க்கை அனுபவங்களோடு பகிர்ந்தோம்.
கோகிலா மகேந்திரனின் சிறுகதை புலம் பெயர்ந்த நாட்டு பேரூந்து பயணம் எமது ஊர் பயணங்களோடு ஒப்பிட்டு எழுதி வாசித்தமை எமது நாட்டு மனித உறவை நாம் இங்கு இழந்து தவிப்பதை உணர்த்தியது.

தியாகி தீலீபன் 26ம் ஆண்டு நினைவஞ்சலி 27.09.2013

.



சாமி மீண்டும் பொம்மையாய்ப் போனார்

.

நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்களை விற்றுக் கொண்டிருந்தான் அந்த தள்ளு வண்டிக்காரன். அவ்வப்போது வறண்டு வெடித்துக் கிழிந்துவிடும் தொண்டையை அவனது வேட்டியை விடவும் அழுக்காயும் பழுப்பாயும் உள்ள பாட்டிலைத் திறந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உப்புத் தண்ணீரால் ஈரப்படுத்தி ஒட்ட வைத்துக் கொள்வான்.

சின்னது, நடுத்தரம், பெரியது என்று காசுக்கு தக்க அளவில் அவனிடம் கடவுள்கள் இருந்தனர். அவனது தள்ளு வண்டியில் எல்லாக் கடவுள்களும் இருந்தனர். ஒரு அடி அளவுள்ள பிள்ளையார் பொம்மை இருபத்தி ஐந்து ரூபாய் எனில் அதே அளவுள்ள ஏசுநாதர் பொம்மையும் அதே விலைதான். அவனுக்கு எந்த சாமியும் உசத்தி இல்லை எந்த சாமியும் தாழ்ச்சி இல்லை.

துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே அவன் வண்டியைத் தள்ளிய ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சின்னப் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியது.  அப்போது ஏற்பட்ட ஒரு சன்னமான குலுக்கலில் ஒரு கடவுள் பொம்மைக்கு உயிர் வந்து விட்டது.

" என்ன சுப்பு, எப்படி போகுது பொழப்பு?”

அவுஸ்திரேலிய திரை அரங்குகளில் ராஜா ராணி

அவுஸ்திரேலிய திரை அரங்குகளில்  காண்பிக்கப்பட இருக்கிறது  ஆரியா  மற்றும் நயன்தாரா நடித்த  ராஜா ராணி 

சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

.

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரமாவதற்கு  tamilmurasu1@gmail.com  or   paskiho@hotmail.com , karunalojana@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்

05 - 10 - 2013       Sat       நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு
                                          பெருமையுடன் வழங்கும் இனிய தமிழ் மாலை 2013
                                          at 5pm Hoskin Auditorium, James Ruse Agricultural High School
                                          Felton Street, (Off Baker Street) Carlingford.


19 - 10 - 2013           Sat       Jaffna College Alumni Association Silver Jubilee celebrations
                                           at 6:30 pm.

26 - 10 - 2013          Sat       யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்
                                             நிகழ்வு

26 - 10 - 2013           Sat      யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் வழங்கும்                                                           அரங்காடல் 2013 Reverside Theatre 6.00 PM

 26 - 10 - 2013         Sat      கம்பன் கழகம் அவுஸ்திரேலியா வழங்கும்
                                          கம்பன் விழா முதலாம் நாள் 

 27 - 10 - 2013         Sun      கம்பன் கழகம் அவுஸ்திரேலியா வழங்கும்
                                          கம்பன் விழா இரண்டாம் நாள்

17 - 11 - 2013           Sun      தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பழைய மாணவர்
                                              சங்கத்தின்   நிகழ்வு

24 - 11 - 2013           Sun      மானிப்பாய் இந்து/மகளிர் பழைய மாணவர்
                                              சங்கத்தின்   நிகழ்வு

08 - 12 - 2013          Sun   AMAF proudly presents
                                          முத்தமிழ் மாலை  at 5.30PM.

2014

08 - 03 - 2014          Sat      Vembadi Girls' High School 175th Anniversary celebration 

29 - 03 - 2014          Sat     Abayakaram proudly presents their Annual Program

16 - 08 -  2014  -         Sat     Musical concert by Dr. Myuri Kantharajah விபரம் பின்னர் தரப்படும்



மெல்பேர்ணில் நடைபெறும் நிகழ்வுகள்

23 - 08 -  2014  -         Sat     Musical concert by Dr. Myuri Kantharajah விபரம் பின்னர் தரப்படும்


திரும்பிப் பார்க்கின்றேன் -09 -முருகபூபதி

.

வடமேல்மாகாணத்தில்  தமிழுக்கு  உயிரும்  உணர்வுமூட்டிய   கலைஞர்  உடப்பூர்   சோமஸ்கந்தர்


இலங்கையில்    வடமேல்   மாகாணத்தில்    இந்து  சமுத்திரத்தாயை   அணைத்தவாறு   ஒரு  தமிழ்க்கிராமம்.  யாழ்ப்பாணம்   செல்லும்   சிலாபம் - புத்தளம்   பாதையில்    பத்துலுஓயா    என்ற  இடத்திலிருந்து   இடதுபுறம்   செல்லும்   பாதையில்    பயணித்தால்    கடலை  நோக்கிச்செல்லலாம்.   அந்தக்கடலின்   கரையில்  எழில்கொஞ்சும்   கிராமம்  உடப்பு.
  அங்கு    பூர்வகுடிமக்களாக   வாழ்பவர்கள்    இந்து  தமிழர்கள்.    அவர்களின்   கலாசாரம்  தனித்துவமானது.  1960   களில்     முதல்  முதலாக   நான்  அங்கு  சென்றபொழுதுää  அந்தக்கிராமத்தில்    தமிழர்களைத்தவிர   வேறு   இனத்தவர்கள்   இருக்கவில்லை.       அந்த  மக்கள்   தமிழகத்தில்   இராமேஸ்வரம்   பகுதியிலிருந்து     வந்து    குடியேறி   கடல்   தொழிலையே   சீவனோபாயமாகக்கொண்டு    வாழ்ந்து  வந்தனர்.
திரளபதை   அம்மன்     கருமாரியம்மன்     கந்தசாமி    முத்துமாரியம்மன் ஐயனார்      பிள்ளையார்.   காளி  ஐயப்பன்   முதலான   தெய்வங்களுக்கு   கோயில்களை   நிருமாணித்து   வணங்கியும்  அதேசமயம்   இராக்குருசி   காட்டுமாரியம்மன்    முதலான   சிறுதெய்வ  வழிபாடுகளிலும்    ஈடுபட்டுவந்தனர்.


எரிந்த நூலகத்திற்கு நூல்கள் சேர்த்தவர் மறைவு

.


Nantri: euthayan

இனிய தமிழ் மாலை 2013 - 05.10.2013

.

உலகச் செய்திகள்


பாகிஸ்­தானில் தேவா­ல­யத்தின் மீது தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தாக்­குதல்; 81 பேர் பலி

நைரோபி கடைத் தொகுதி தமது கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு படையினர் அறிவிப்பு

பாகிஸ்தான் பூகம்பம்: 280 பேர் பலி

பாகிஸ்­தானில் தேவா­ல­யத்தின் மீது தற்­கொலை குண்­டு­தா­ரிகள் தாக்­குதல்; 81 பேர் பலி

23/09/2013  வட­மேற்கு பாகிஸ்­தானில் பெஷாவர் நக­ரி­லுள்ள தேவா­ல­ய­மொன்றில் ஞாயிற்­றுக்­கி­ழமை இரு தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களால் நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தல்­களில் 81 பேர் பலி­யா­ன­துடன் 100 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

கடந்த சில வரு­டங்­களில் பாகிஸ்­தானில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான தாக்­குதல் சம்­ப­வ­­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது.


ஜெயலலிதா, எம்.எஸ்.வி., அமிதாப், ஸ்ரீதேவிக்கு விருது!!

.

இந்திய சினிமா 100 நிறைவு விழா :

Indian Cinema 100 year Celebration Function : Jayalalitha, MSV, Amithabh, Sridevi receives award
இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று, சினிமாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதா, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

இந்திய சினிமா நூறு ஆண்டு கடந்ததை கொண்டாடும் விதமாக இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. தமிழக அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழா, சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், கடந்த 21ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. நிகழ்ச்சியின் முதல்நாளை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். பிறகு தமிழ் சினிமாவின் ரஜினி, கமல், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி, காஞ்சனா, செளகார் ஜானகி உள்ளிட்ட 50 கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

4 மாநில நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள்


சினிமா நூற்றாண்டு விழாவில் நான்கு மாநில திரை நட்சத்திரங்களின் க‌லை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல்நாளில் தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரண்டாம் நாளில் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகளும், மூன்றாம் நாளில் மலையாள திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகளும் தொடர்ந்து அன்றைய தினம் மாலையில் நான்கு மாநில திரையுலகினருக்கும் நட்சத்திர ஓட்டலில் சிறப்பான விருந்தும் கொடுக்கப்பட்டது.

இலங்கைச் செய்திகள்


விக்னேஸ்வரனை சந்திக்கின்றார் குர்ஷித்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

யாழில் தனிச் சிங்களத்தில் அடையாள அட்டைகள்

உள்ளக விசாரணையின்றேல் சர்வதேச பொறிமுறை நிச்சயம் : அரசாங்கத்துக்கு நவநீதம்பிள்ளை காலக்கெடு


விக்னேஸ்வரனை சந்திக்கின்றார் குர்ஷித்

25/09/2013   இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள சி.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.
அடுத்த மாத ஆரம்பத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் குர்ஷித் விஜயம் செய்யவுள்ளார்.
அவர் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் குர்ஷித், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் விக்னேஸ்வரனையும்  அவர் சந்திக்க உள்ளார்.   நன்றி வீரகேசரி

.


 தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்!!!

.

ஓடியாடி வேலை செய்த காலம் போய்ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதேப்போல் அத்துடன் உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம்,போதிய ஓய்வு இல்லாததுஉடற்பயிற்சி செய்யாததுதூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால்சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கிஉடலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடுகிறது. இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர,நிரந்தரமானவை அல்ல. மேலும் இவ்வாறு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால்அவை இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துவிடும். எனவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட,இயற்கை பொருட்களால் சரிசெய்வதன் மூலம்அதிலிருந்து நிரந்தரத் தீர்வையும் பெறலாம். ஆனால் பலர் இயற்கை பொருட்கள் நல்ல தீர்வைத் தருவதில்லை என்று அதனை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. உடலில் உள்ள பிரச்சனைகளை உடனே சரிசெய்யும் பொருட்கள் எப்போதுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எந்த ஒரு பொருள் மெதுவாக பிரச்சனைகளை சரிசெய்கிறதோஅது அந்த பிரச்சனையை முற்றிலும் சரிசெய்துவிடும். அதுமட்டுமல்லாமல்எந்த வலிக்கு எந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியாக தெரியாததால்பலரால் இயற்கை பொருட்களால் நல்ல பலனை உடனே பெற முடிவதில்லை. இப்போது அப்படி உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை சரிசெய்யும் சில நிவாரணிகளைப் பார்ப்போமா!!!

உலக தமிழ் இலக்கிய மாநாடு சிட்னியின் மாநாட்டு பாடல்

.

ஒரு புயலும் சில பூக்களும் - சமீலா யூசுப் அலி

.
உணர்வின் வேர்கள்
Manதாகிக்கும்
இரவுக்கர்ப்பத்தில்
என் மெளன விசும்பல்!

புத்தகங்களுக்குள்
வசிக்கும்
விழிகளில்...
யுகங்கள் அழுத வலி!

தொண்டைக்குள்
தூண்டில் முள்ளாய்
என் இதயம்!

பொங்கிப்பிரவகிக்கும்
என்
ஞான சமுத்திரம்
தாளில் இறங்குகிறது...
துளித்துளியாய்...

ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல் பிறக்கட்டும்!

தமிழ் சினிமா

MailPrint
தேசிங்கு ராஜா

ஒரு கிராமத்தில் நடக்கும் காதல், கொமடி மற்றும் ஊர்ப்பகை ஆகியவற்றை கலந்து கட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் இயக்குனர் எழில்.
புலியூர், கிளியூர் என இரண்டு ஊர்களுக்கிடையே உள்ள பரம்பரை பிரச்சனையில் இருந்து படம் துவங்குகிறது.
கிளியூரை சேர்ந்த இதயக்கனி என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார் விமல். புலியூரை சேர்ந்த தாமரை என்னும் கதாபாத்திரத்தில் பிந்துமாதவி வருகிறார்.
படம் ஆரம்பத்தில் விமலுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் என்று விமலின் மாமாக்கள், சிங்கம் புலி மற்றும் சாம்ஸ் கோவிலில் பிராத்தனை செய்கிறார்கள்.
அங்கு பிந்துமாதவியை சந்திக்கிறார் விமல். பார்த்தவுடனே அவள் மீது காதல் வயப்படுகிறார். முதலில் காதலை மறுக்கும் பிந்துமாதவி பிறகு ஏற்றுக்கொள்கிறார்.
பாட்டன்கள் காலத்தில் இருந்து இந்த இரண்டு ஊர்களுக்கிடையே சண்டை இருந்து வருகிறது. விமல் அப்பாவை பிந்துமாதவி அப்பா கொன்றுவிடுகிறார்.
பதிலுக்கு விமலின் தாத்தா பிந்துமாதவியின் அண்ணனை ஆள் வைத்து வெட்டிக் கொலை செய்கிறார். பதிலுக்கு விமலை தீர்த்துகட்ட பிந்துமாதவியின் அப்பாவும், சித்தப்பாவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் இவர்களின் காதல் வலுவடைகிறது. இதன் உச்சக்கட்டமாக கொஞ்சம் அவசரப்பட்டு உடல் ரீதியாக ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.
இவர்களின் காதல் விடயம் பிந்துமாதவியின் வீட்டுக்கு தெரியவந்து பிரச்சினை பெரியதாக வெடிக்கிறது. பிந்துமாதவி, தன் அப்பாவை சமாதானம் செய்து விமலை ஊர் எல்லையில் உள்ள கோவிலுக்கு தனியாக வரும்படி அழைக்கிறார்.
அங்கு விமலை தீர்த்து கட்டவேண்டும் என அவள் அப்பாவும், சித்தப்பாவும் கங்கணம் கட்டுகிறார்கள்.
ஆனால் அங்கு விமலுக்கும், பிந்துமாதவி அப்பாவுக்கும் இடையே சண்டை ஆகிறது.
கோபத்தில் பிந்துமாதவி கழுத்தில் தாலி கட்டுகிறார் விமல். அந்த இடத்திற்கு விமலின் ஆட்கள் வந்து பிந்துமாதவியின் அப்பாவை கொலை செய்துவிடுகிறார்கள். விமலையும் அழைத்து சென்று விடுகிறார்கள்.
இந்நிலையில் ஊர் பஞ்சாயத்தை கூட்டி பிந்துமாதவியை விமலுடன் அனுப்பி வைக்கிறார்கள். அவள், நான் உன்னிடம் சேர்ந்து குடும்பம் நடத்த வரவில்லை உன்னை கொலை செய்யதான் வருகிறேன் என்கிறாள்.
அதன் பின்பு ஊர் பிரச்சனை என்னவானது? பிந்துமாதவி விமலுடன் சேர்ந்தாரா? என்று மீதிக்கதை தொடர்கிறது.
விமலுக்கு பழகிய வேடம். ரொம்பவே இயல்பாக நடித்திருக்கிறார். மனைவியிடம் பாவமாக கெஞ்சும்போது மவுனகீதங்கள் பாக்யராஜை நினைவுபடுத்துகிறார். சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தாமரை கதாபாத்திரத்தில் வரும் பிந்துமாதவி பாவடை தாவணியில் மிகவும் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கொமடியன்களாக வரும் சிங்கம் புலி, சாம்ஸ் மற்றும் சூரி கொமடியில் கலக்குகிறார்கள்.
விமலின் தாத்தாவாக வரும் வினுசக்கரவர்த்தி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். மிகவும் கோபக்காரனாக, பிந்துமாதவியின் சித்தப்பாவாக வரும் ரவிமரியா கிளைமாக்ஸில் நல்ல நகைச்சுவை நடிகராக ஒரு ரவுண்ட் வந்துள்ளார்.
டி.இமான் இசையில் ‘நெலாவட்டம் நெத்தியிலே..’ பாடல் தாளம் போட வைக்கிறது. இந்தப் பாடலுக்கு தாமிரபரணி பானு குத்தாட்டம் ஆடுகிறார்.
கொமடியை மட்டும் தனது அஸ்திரமாக எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருக்கும் எழிலின் இயக்கத்தில் தேசிங்கு ராஜா ஒரு கொமடி ராஜா!
நன்றி விடுப்பு