அஞ்சலிக்குறிப்பு: சங்கீதக் கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் நினைவுகள் முருகபூபதி


சில வாரங்களுக்கு முன்னர்   இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை  பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார்.

அவரது சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன்  ஏற்கனவே இலங்கை வானொலிக்காக இசையமைத்து பாடியிருக்கிறார். அவற்றின் ஒலிநாடாக்கள் தொடர்பாக பேசுவதற்குத்தான் வடிவேலன் அருந்ததியின் தொடர்புகளைக் கேட்டிருந்தார்.

 “நான்  வசிப்பது மெல்பனில். அருந்ததி சிட்னியிலிருக்கிறார்.  எவ்வாறாயினும் முயற்சித்து அவரது தொடர்பிலக்கத்தை பெற்றுத் தருகின்றேன்.    என்று அவருக்குச்சொல்லிவிட்டு,  சிட்னியில் வதியும் 


எழுத்தாளர்களும் வானொலி ஊடகர்களுமான கானா. பிரபா, மற்றும் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர் ஆகியோரை தொடர்புகொண்டு, அருந்ததி பற்றி விசாரித்தேன்

அவர்கள்  அருந்ததியின் தொடர்பு இலக்கத்தை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார்கள்.  அதற்கிடையில் கடந்த  மார்ச்  மாதம் 17 ஆம் திகதி திங்கட் கிழமை, அருந்ததி மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான தகவலை கானா. பிரபா சொன்னார்

எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்பதை இசையரசி கலாநிதி அருந்ததியும் நிரூபித்துவிட்டார்.

அருந்ததி ஶ்ரீரங்கநாதனை முதல் முதலில் 1980 களில் இலங்கை வானொலி கலையகத்தில் சந்தித்திருக்கின்றேன்.  அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவ்வேளையில் அங்கு தமிழ்ச்சேவைப் பணிப்பாளராகவிருந்த ( அமரர் ) வி. ஏ. திருஞானசுந்தரம்.

இவர் இலங்கை வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு என்னைக் கேட்டதுடன், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அருந்ததி ஶ்ரீரங்கநாதனையும்  எனக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆடிய ஆட்டம் அடங்கியே போனது !














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்  …. அவுஸ்திரேலியா 




ஓடுவார் ஆடுவார் ஓயாமல் இருக்கார் 
தேடுவார் திரட்டுவார் தெரியாது வைப்பார்
பிள்ளைக்கும் சொல்லார் பேணிபவளுக்கும் சொல்லார்
கள்ள மனத்துடன் காலத்தைக் கழிப்பார்

அரைக்காசு கொடுக்கார் அனுபவிக்க மாட்டார்
அடுத்தவர் அழுதிட ஆனந்தப் படுவார்
மனைவிக்கும் ஈயார் மக்கட்கும் ஈயார்
தெரியாது வைத்ததை தினந்தொட்டு மகிழ்வார்

தான தர்மத்தை ஈனமாய் நினைப்பார்
தற்பெருமை பேசுவதில் தனியின்பம் பெறுவார்
ஊனமுடை எண்ணத்தை உளமுளதும் நிறைப்பார்
உண்மையினை உணராமல் உயிரோடு உலவுவார்

சொல்லை நீட்டிச் சொன்னால் சோதனை வருமா?

சங்கர சுப்பிரமணியன் - 

தேநீர் விடுதியில் முகுந்தனும் முரளியும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கொஞ்சநாட்களாகவே முரளியின் முகத்தில் ஒரு இனம்புரியாத சோகம் தவழ்வதை உணர்ந்தவன் இன்று எப்படியும் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன்,

“முரளி, நானும் கொஞ்சநாட்களாகவே கவனித்து வருகிறேன். நீ எதையோ பறிகொடுத்தது போல் இருக்கிறாயே?” என்று கேட்டான்.

“கொஞ்ச நாட்களாகவே என் மனதை ஒன்றை அரித்துக் கொண்டிருக்கிறது. யாராவது கேட்டால் அதைச் சொல்லி மனதில் உள்ளதை இறக்கி வைக்கலாம் என்றிருந்த வேளை நீ கேட்கிறாய்” என்றான்.

“அப்படியா? சொல். உன் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்த புண்ணியம் எனக்கு கிடைக்கட்டும்” என்ற முகுந்தன் கேட்டதும் தன்மனதில் தேக்கி வைத்திருந்த சோகத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தான்.

முகுந்தா, என் சிறுவயது நண்பன் கணேசனைப் பற்றி உனக்குத் தெரியும். ஒரு வெள்ளந்தி. அவனிடம் ஒன்றை சோதனை செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில்
கடந்த வாரம் நடந்த ஒன்றைப்பற்றி கூறினான்.

எனது இன்னொரு நண்பன் பீட்டர். அவன் கைபேசி அங்காடி ஒன்றை வைத்து நடத்துகிறான். கடை வியாபாரம் எல்லாம் எப்படி நடக்குது என்று எப்ப கேட்டாலும் ஒன்னு நல்ல நடக்குதுன்னு சொல்லணும் இல்ல சுமார் என்றாவது சொல்லணும் ஆனால் அவன் பதிலில் எப்பவுமே ஒரு போலித்தனம் இருக்கும்.

அவன் சொல்லும் சூப்பர் என்ற பதிலில்தான் போலித்தனம் தெரியும் என்றான். உனக்கு தமிழில் பதில் கூறாமல் சூப்பர் என்று ஆங்கிலத்தில் பதில் சொல்கிறான். இதிலென்ன போலித்தனம் இருக்கிறது என்று நீ நினைக்கலாம். ஆனால் அவன் சொல்லும் விதம் அப்படியல்ல. அதாவது சூப்பர் என்று நாமெல்லாம் சொல்வதுபோல் சொல்லமாட்டான். சற்று வித்தியாசமாக வினோதமான தொணியில் சூ...ஊ…ஊ…ப்பர் என்பான்.

அவன்  அதை ஒரு புதுமையாக இருக்கட்டும் என்ற நோக்கில் சொல்வதாயிருந்தாலும் அவன் அப்படி நீட்டி முழக்குவதில் ஒரு செயற்கைத் தன்மை இருப்பதை உணர முடிந்தது. அப்படி சொல்வதை அவன் விருப்பம் என்றாலும் அவன் சொல்லும்விதம் என்னதான் அவன் என் நண்பன் என்றாலும் அப்படிச் சொல்லி கேட்கும்போது எரிச்சல் உண்டாகிறது.

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய யாதுமாகி ( பாகம் -02 ) மின்னூல் மெய்நிகரில் வெளியீடு !


அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ. முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி ( 02 ஆம்  பாகம் ) மின்னூல்  அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு   இம்மாதம் அமேசன் கிண்டிலில் வெளியாகிறது.

இதன் வெளியீட்டு அரங்கு இம்மாதம் ( மார்ச் )  15 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் இடம்பெறும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாதுமாகி – முதலாம்  பாகத்தின்  மின்னூலை வெளியிட்டிருக்கும் முருகபூபதி, இந்த ஆண்டு மீண்டும், அதன் இரண்டாம் பாகத்தினை வெளியிடுகிறார்.

முதல் பாகத்தில் 28 பெண் ஆளுமைகள் இடம்பெற்றனர்.  குறிப்பிட்ட நூலை தற்போதும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் யாதுமாகி                     ( இரண்டாம் பாகத்தில் )

( அமரர்கள்  )  யோகா பாலச்சந்திரன்,  மகேஸ்வரி சொக்கநாதர் , பாக்கியம் பூபாலசிங்கம்,  கமலி ஞானசுந்தரன்,  பராசக்தி சுந்தரலிங்கம் , கலாலக்ஷ்மி தேவராஜா, சங்கீத கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன்,   மற்றும் ,

  புஸ்பராணி தங்கராஜா, கலையரசி சின்னையா,   ஞானலக்‌ஷ்மி ஞானசேகரன்,   ஆனந்தராணி பாலேந்திரா,  மெல்பன் மணி ,   யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ,   சந்திரகௌரி சிவபாலன்,  ரேணுகா தனஸ்கந்தா ,  சாந்தி சிவக்குமார் ,   விஜயலக்ஷ்மி இராமச்சந்திரன் ,   நவஜோதி யோகரட்ணம்,  பூங்கோதை – கலா ஶ்ரீரஞ்சன்,   கவிஞி  அனார்,   தேவகி கருணாகரன் ,   சூரியகுமாரி ஶ்ரீதரன் பஞ்சநாதன் ,   தேவகௌரி  சுரேந்திரன் ,   சியாமளா யோகேஸ்வரன் ,   வசந்தி தயாபரன் ,   உஷா ஜவகார் ,   பத்மா இளங்கோவன்,    ராணி சீதரன் ,   சுபாஷினி சிகதரன் ,    சிவநேஸ் ரஞ்சிதா ஆகியோரின் கலை, இலக்கிய, கல்வி, சமூக தன்னார்வத் தொண்டுப்பணிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இரவும் பகலும் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோ நடிகராக ஒருவர் 1965ம் ஆண்டு


உருவானார். அவர்தான் ஜெய்சங்கர். அறுபது வருடங்களுக்கு முன் தயாரான இரவும் பகலும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்த இவர் அதன் பின் இரவும் பகலுமாக நடித்து திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டினார் .


பி ஏ பட்டதாரியான ஜெய்சங்கர் நடிப்பின் மீதான அபரிதமான

ஆர்வத்தால் டெல்லியில் தான் செய்து வந்த தொழிலை ராஜினாமா செய்து விட்டு சென்னை வந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆரம்பத்தில் ஏவி எம் எடுத்த அன்னை படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியும் அவரின் கண்கள் சிறிய கண்கள் அதனால் உணர்ச்சிகளை திரையில் வெளிப்படுத்த முடியாது என்று கூறி இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இருவரில் கிருஷ்ணனால் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் இரண்டாண்டுகள் கழித்து இசையமைப்பாளர் டி ஆர் பாப்பா வழியாக வாய்ப்பு இவருக்கு கிட்டியது. சிட்டாடல் ஸ்டூடியோ அதிபர் ஜோசப் தாளியத்திடம் பாப்பா ஜெய்சங்கரை அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணனால் நிராகரிக்கப்பட்ட அவரின் சிறிய கண்கள் தாளியத்துக்கு பிடித்து விட்டது. தான் தயாரிக்கும் இரவும் பகலும் படத்துக்கு ஹீரோவாக ஜெய்யை ஒப்பந்தம் செய்தார் தாளியத் .

நட்சத்திர நடிகர்களை தவிர்த்து புது நடிகர்களை போட்டு படம் எடுத்து வெற்றி காணும் தாளியத் இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுகத்தை அறிமுகப்படுத்தியதோடு நின்று விடாமல் கதாநாயகியாகவும் சி . வசந்தாவை அறிமுகப்படுத்தினார். நகைச்சுவைக்கு தேங்காய் சீனிவாசன் தெரிவாகி , பின்னர் விநியோகஸ்த்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய நாகேஷ் ஒப்பந்தமானார். இவர்களுடன் எஸ் ஏ அசோகன், பண்டரிபாய், எஸ் வி ராமதாஸ், காந்திமதி, எனத்தே கன்னையா, ஆகியோரும் நடித்தனர்.

இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

செம்மணியில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே! - நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையில் முதலாவது ஷெல் எரிபொருள் நிலையம் திறப்பு

இரண்டு மாதங்களில் 162 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்!

அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் ! 


பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 

Published By: Vishnu

01 Mar, 2025 | 04:16 AM
image

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

கடும் மோதலில் முடிவடைந்த டிரம்ப் ஜெலென்ஸ்கி சந்திப்பு – வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் உக்ரைன் ஜனாதிபதி

விமானதாக்குதல் - விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார் டிரம்ப் - யாரை இலக்குவைப்பது என்பதை தளபதிகளே தீர்மானிக்கலாம்

யுத்த நிறுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்த அச்சத்திற்கு மத்தியில் காசாவில் குளிரினால் குழந்தைகள் இறக்கின்றன- என்பிசி நியுஸ்

பாலஸ்தீன மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள்இஸ்ரேலிய சிறைச்சாலைகளில்- கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல்போயுள்ளனர்

ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் - ஜேர்மனியின் புதிய சான்சிலர் மேர்ஸ்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு 



கடும் மோதலில் முடிவடைந்த டிரம்ப் ஜெலென்ஸ்கி சந்திப்பு – வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் உக்ரைன் ஜனாதிபதி 

01 Mar, 2025 | 08:51 AM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவேளை இருவரும் உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

மாவை நித்தியின் சிலப்பதிகாரம் 09/03/2025