தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
படித்ததில் பிடித்த கவிதை " சிதறும் நிறங்கள்"
.
தி.ஞானசேகரன் எழுதிய `அவுஸ்திரேலியப் பயணக்கதை’ - கே.எஸ்.சுதாகர்
.
பயணங்கள் போவது பலருக்கும் பிடித்தமானது. புதிய இடங்களைத் தரிசிப்பதிலும், அங்கு வாழும் மனிதர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதிலும், அவற்றிற்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும் பலருக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் அவற்றை ஏனையவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், மிகவும் சுவையாகப் பதிவு செய்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் தி.ஞானசேகரன் அவர்கள் - இலண்டன் பயண அனுபவங்கள், ஐரோப்பிய பயண அனுபவங்கள், கனடா பயண அனுபவங்கள், வட இந்திய பயண அனுபவங்கள், அவுஸ்திரேலியப் பயணக்கதை என ஐந்து பயண அனுபவப் புத்தகங்களை வரவாக்கியிருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில், நான் வியந்து வாசித்த `அவுஸ்திரேலிய பயணக்கதை’ என்னும் நூல் பற்றிப் பார்க்கலாம்.
இந்த நூல் 1999 ஆம் ஆண்டு ஞானம் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றது. நூலின் அணிந்துரையை பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களும், முன்னுரையை திரு லெ.முருகபூபதி அவர்களும் எழுதியிருக்கின்றார்கள்.
நூலின் ஆரம்பக் கட்டுரைகளில் அவுஸ்திரேலியா பற்றிய புள்ளிவிபரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவை 1999 ஆம் ஆண்டுக்குரிய தகவல்கள் என்பதால், தற்போதையை தகவல்களை இங்கே பதிவு செய்வது சாலவும் பொருத்தமாக இருக்கும்.
அவுஸ்திரேலியாவில் பூர்வீக மக்கள் சுமார் 60,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்து, 1788 ஆம் ஆண்டளவில் வந்த கைதிகள் மற்றும் அவர்களுடன் கூட வந்தவர்களினால் உருவாக்கப்பட்ட நாடே இன்றைய நவீன அவுஸ்திரேலியா ஆகும். இன்று அவர்களின் பரம்பரையினர் சீரும் சிறப்புமாக வாழ்ந்துகொண்டு, புதிதாகக் குடியேறியவர்களையும் வாழ வைத்திருக்கின்றார்கள். அவுஸ்திரேலியா 270 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்கள் இணங்கி வாழும் ஒரு பல்லின நாடாக மிளிர்வதுடன், அதன் வளர்ச்சி ஏனைய நாடுகளைக் காட்டிலும் பல மடங்கு முன்னேற்றத்தையும் கொண்டிருப்பதைக் காணலாம்.
இந்நூலாசிரியர், சுமார் 225 ஆண்டுகளைக் கொண்ட நவீன அவுஸ்திரேலியாவை, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு முறைகளுடன் ஒப்பிட்டு முடிச்சுப் போடுவதைப் பார்த்து நான் வியந்து நிற்கின்றேன். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வருகையும் ஏறக்குறைய 225 ஆண்டுகளைக் கொண்டதுதான். ஆனால் அவர்களின் கடும் உழைப்பும், சிந்திய இரத்தமும் அவர்களின் வாழ்வை உயர்த்தப் பயன்படவில்லை, நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரவே பயன்பட்டிருக்கின்றது என்பதை அறியும்போது ஏதோ ஒரு நெருடல் மனதில் வந்து போகின்றது.
அவுஸ்திரேலியா, இலங்கையை விட 120 மடங்கு பெரிதானது. ஆனால் சனத்தொகையில் இலங்கையை விட சிறிதளவே (அவுஸ்திரேலியா - 27 மில்லியன்கள், இலங்கை – 22 மில்லியன்கள்) கூடுதலாகவுள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ட்ஸ்மேனியா என்னும் தீவு, இலங்கையின் பரப்பளவைக் கொண்டது என்பதும் ஆச்சரியமான தகவல் ஆகும். தற்போது அவுஸ்திரேலியாவின் சனத்தொகையில் 57% ஐரோப்பியர்கள் வாழ்கின்றார்கள். அதில் 33% ஆங்கிலம் பேசும் வெள்ளையர்கள். இந்த நாட்டிற்கு சொந்தமான பூர்வீக குடிகள் 3.8%. இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து குடியேற்றம் எவ்வளவு வேகமாக நடைபெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
நினைப்பினின்று அகற்றிவிடு !
.
நிலைபெறுமா றெண்ணிநிற்க
நிலையில்லா பொருளையெலாம்
துன்பமெனும் நினைப்பதனைத்
அன்புடனே அணைத்துவிட
ஆத்திரத்தை மூட்டைக்கட்டி
கூசுகின்ற வார்த்தைகளை
உன்விருப்பைத் திணித்துவிட
தாமரையின் இலைமீது
தோழர் அநுரகுமார திஸ்ஸநாயக்காக்கு ஓர் திறந்த மடல்! - நடராஜா குருபரன்
.
நண்பர் நடராஜா குருபரன் அவர்கள் தனது முகப்பு புத்தகத்தில் பிரசுரித்ததை இங்கு தருகின்றேன் .
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville
29-11- 2025 Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை
30-11-2025 Sun: மாத்தளைசோமுவின் 100 சிறுகதைகள் நூல் வெளியீடு ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.
பல்லாண்டு வாழ்க - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
.
தமிழ் சினிமா உலகில் ஆண்டாண்டு காலமாக உழன்று கொண்டிருக்கும் படத் தயாரிப் பாளர்களுக்கு இல்லாத அதிர்ஷ்டம் திடிரென்று முளைத்த தயாரிப்பாளர்களுக்கு கிட்டி விடுவதுண்டு. அவர்களுள் இருவர் தான் இதயம் பேசுகிறது மணியன், வித்துவான் வே. லஷ்மணன். இவர்கள் இருவரும் எம் ஜி ஆர் எனும் நட்சத்திர நடிகரின் முழு ஆசியினால் படத் தயாரிப்பாளர்களாகி வெற்றி கண்டவர்களாவர். மூன்று வருடங்களுக்குள் மூன்று படங்களை எம் ஜி ஆர் நடிப்பில் தயாரித்த பெருமை இவர்களுக்குண்டு.
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்-1…..சங்கர சுப்பிரமணியன்.
.
எதையும் தொடங்க ஒரு தொடக்கப்புள்ளி வேண்டுமல்லவா? தொடக்கப்புள்ளி என்றால் பிள்ளையார் சுழியோ ஶ்ரீராமஜெயமோ அல்ல. எனது தொடக்கப்புள்ளி சாயனாரா சிங்கப்பூரா என்று சிங்கப்பூரில் இருந்து தொடங்கியது.
இளமைக் காலம் இந்தியாவில் இருந்தபோது பிரபலமான சாயனாரா சிங்கப்பூரா என்ற நான் கேட்ட திரைப்படப் பாடலின் வரிகள் எப்படியாவது சிங்கப்பூர் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. ஆனால் இப்போது சிங்கப்பூர் எனக்கு புழக்கடை போல் ஆகிவிட அதுவே எனது சீனப் பயணத்துக்கு தொடக்கப்புள்ளியாகவும் ஆனது.
உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக நானும் மனைவியும் சிங்ஙப்பூர் சென்றபோது ஐந்து நாட்கள் தங்கியிருந்து பின் சீனப் பயணத்தை தொடங்கினோம். உறவினர் திருமணத்துக்கு சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் தங்க வேண்டுமா என்று எண்ணாதீர்கள். முதல்நாள் வரவேற்பு, மறுநாள் திருமணம் அடுத்த நாள் எங்களுக்கு விருந்து உபசரிப்பு என்று மூன்று நாட்கள் ஓடின.
அவர்கள் திருமணத்துக்கு சிங்கப்பூர் வந்ததற்காக சிங்கப்பூரை எங்களுக்கு சுற்றிக்காட்ட விரும்பினார்கள். அவர்களிடம் நாங்கள் சிங்கப்பூரை எத்தனையோ முறை நன்றாக சுற்றிப் பார்தத்துவிட்டோம் என்று கூறினோம். அதற்கு இப்போது சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவாக்கிய “க்ளௌவுட் ஃபாரஸ்ட்” மற்றும் “கார்டன்ஸ் பை தி பே”போன்ற சுற்றுலாத் தளங்களை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று அழைத்துச் சென்றார்கள்.
உண்மையிலேயே நாங்கள் அந்த இடங்களைப் பார்க்கவில்லை. க்ளௌவுட் ஃபாரஸ்ட் என்ற இடத்தில் சில குறிப்பிட்ட நாடுகளிலுள்ள மரம் செடிகள் மற்றும் மலர்ச்செடிகளை வைத்து அழகு படுத்தி இருக்கிறார்கள். அவற்றில் ஆஸ்திரேலியா கார்டனும் அடங்கும். இதனால் பத்து நாட்கள் செல்லவேண்டிய சீனப்பயணம் ஓரு வாரத்துக்குள் முடிந்தது.
இருப்பினும் ஒருசில இடங்கள் தவிர பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும் பார்த்து முடித்தோம். எல்லா இடங்களையும் பார்த்துவிடவும் முடியாது. ஆஸ்திரேலியாவிலேயே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. ஆசைதீர குடித்தவரும் இல்லை அழுக்கு போக குளித்தவரும் இல்லை என்று யாரோ எங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.

.jpg)
.jpeg)
.jpg)


