மின்னொளி மண்கவ்விய வேளையதில்...

.

மின்னொளி மண்கவ்விய வேளையதில்

என்னறையைக்  கவ்வியது

கண் மறையப் பேதலிக்கும் பேரிருள்

என்னவிது ஏதாயிற்றோவெனக்

உள்ளமதைக் குளறுபடியாக்கியது

இருட்டோ இன்னும் எதுவோவென

மருட்டி மனம் ஏங்கையில்

வெள்ளமென நுதல் வடிந்த வேர்வை

படிந்தது சட்டையெல்லாம்.

இன்னும் இருள் பொறுக்காதென

பத்த வைத்த மெழுகுவத்தியுடன்

அவசர விளக்கும் அணிசேர்க்க

இத்தனைநாள் புலனாகா அழுக்கெல்லாம்

என்னறையில் உறைந்திருத்தல் வெளிச்சமாயிற்று.

மூளியவள் மெழுகுச் சிரசாக என் மேசை

மாசு மறுவின்றி துலங்கும் காலம்

ராஜேஷ் வைத்யாவின் இசை மழையில் நனைந்தேன் - கானா பிரபா

.
வீணை விற்பன்னர் ராஜேஷ் வைத்யாவின் "இது ஒரு நிலாக்காலம்" இசை மழையில் நனைந்தேன் - கானா பிரபா



வீணை வாத்திய வாசிப்பில் துறைபோந்த ஒரு வாத்திய விற்பன்னர், திரையிசைப் பிரியராகவும், அதுவும் குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் ரசிகராகவும் அமைந்து விட்டால், அவர் படைக்கும் நிகழ்ச்சி எப்பேர்ப்பட்ட பரவசத்தைக் கொடுக்குமோ அதைத்தான் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி சனிக்கிழமை திரு ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி வாயிலாகக் கிட்டியது. 

"இது ஒரு நிலாக்காலம்" என்ற கவித்துவமான தலைப்போடு வீணைக்கலைஞர் திரு ராஜேஷ் வைத்யா இந்த நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கின்றார் அந்த ஒற்றைத் தலைப்பே இந்த நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டது. "சுப்ரதீபம்" என்ற சிட்னியின் உள்ளூர் இசைக்கலைஞர்களோடு ஒன்றிணைந்து படைக்கவிருக்கும் நிகழ்ச்சி பெப்ரவரி 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு Redgum Function Centre, Wentworthvilleஇல் நடக்கவிருக்கிறது என்றதுமே கொஞ்சம் அவ நம்பிக்கையோடுதான் போனேன். கையில் ஒரு புத்தகமும் எடுத்துச் செல்லுவோமா என்று கூட நினைத்தேன். ஏனென்றால் ஆறு மணி என்றால் ஏழு மணிக்கு நிகழ்ச்சியை நடத்துவது தானே நமது பாரம்பரியம்? ஆனாலும் என் நினைப்பை ஏமாற்றி விட்டிருந்தது அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் குழாம், ஐந்தரை மணிக்கே வந்து முகாமிட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி பத்து நிமிடமே தாமதத்தில் ஆரம்பித்தது. இளையோர்களின் சுருக் நறுக் அறிமுகத்தோடு இதோ நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டது.

இது ஒரு நிலாக்காலம்...




சுப்ரதீபம் கலையரங்கம் என்ற புதிய களத்தில்
இராஜேஷ் வைத்தியாவின் 'இது ஒரு நிலாக்கால' அரங்கேற்றம்.
தரமான சிட்னிக் கலைஞர்களும் கலந்த சிறப்பித்த
இதமான இசை நிகழ்வாக அமைந்ததில் மகிழ்ச்சி.

அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள்,
'எம் இதயவீணையை மீட்டவைக்கும் திறமைமிகு இராஜேஷ் வைத்தியா’ என்று
தன் நண்பர் வீணை வித்தகர் இராஜேஷ் அவர்களை விழித்திருப்பார்.
உண்மையான வாழ்த்து அது; வெறும் பாராட்டு வார்த்தைகளில்லை என்பதை,
சென்ற சனி மாலை இது ஒரு நிலாக்கால இசை நிகழ்வில் இணைந்து கொண்ட
இரசிகர்களும் நாமும் உணர்ந்து இலயித்திருந்தோம்.

சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது

.

சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது, விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது!


சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.
நடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வாக்களிக்க விஜய் ரீவியோ தான் நினைத்த போட்டியாளர் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்குகளை அறிவிக்க விடாது முடிவினை அறிவித்தது நீங்கள் யாவரும் அறிந்ததே..! ஆனால் இப்போழுது சிலரால் இவர்களின் வாக்குகள்.
வெளிச்சத்திற்க்கு வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில்
Total Votes 15,840,172
Jessica 10,353, 440
Anushya 2,103,555
Spoorthi 1,311,630
Srisha 1,102,017
Haripriya 506,221
Bharath 463,309
இவ் முடிவுகள் உத்தியோக பூர்வமற்றவையாக இருந்தாலும் முடிவினை அறிவிக்கும் போது விஜய் ரீவி வாக்குகளை அறிவிக்காதமையினால் ஏதோ ஒரு கள்ளத்தனம் இருப்பது நம்ப முடிகின்றது. இவ் வாக்கு முடிவினை நம்பகூடியதாகவும் இருக்கின்றது. எது எப்படியோ அனைத்து மக்களையும் விஜய் ரீவி ஏமாற்றி விட்டது என்பதே உண்மை.
nantri puthinamnews.com

உலகச் செய்திகள்


சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் விசேட முகாமில் சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் விசேட முகாமில் சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி

24/02/2015     5 வய­து­டைய சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லான சிறார்கள் இரா­ணுவ பயிற்சி முகா­மொன்றில் பயிற்சி பெறு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்றை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வெளி­யிட்­டுள்­ளனர்.

சிரிய ரக்கா நக­ரி­லுள்ள அல் -பாரூக் சிங்கக் குட்­டி­க­ளுக்­கான நிறு­வனம் என பெயர் சூட்­டப்­பட்ட தீவி­ர­வாத பயிற்சி முகா­மி­லேயே மேற்­படி சிறு­வர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது.

திருக்குறள் போட்டிகள் – 2015 03.08



இப்போட்டிகள் மார்ச் மாதம் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. போட்டிகளின் முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் மின்னஞ்சல் அல்லது  தொலைபேசி மூலம் அறியத்தரப்படும். போட்டிக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் அடுத்து நடத்தும் விழாவில் வழங்கப்படும்.
போட்டி நடத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்.

பிரிவுகள்    பிறந்த திகதி விவரம்

பாலர் ஆரம்பப்பிரிவு    8.03.2010 இலும் அதற்குப் பின்னரும் பிறந்தவர்கள்
பாலர் பிரிவு    8.03.2008 முதல் 7.03.2010  வரை பிறந்தவர்கள்
கீழ்ப்பிரிவு    8.03.2006 முதல் 7.03.2008  வரை பிறந்தவர்கள்
மத்திய பிரிவு.     8.03.2003 முதல் 7.03.2006  வரை பிறந்தவர்கள்
மேற்பிரிவு    8.03.2000 முதல் 7.03.2003 வரை பிறந்தவர்கள்
அதிமேற்பிரிவு    8.03.1996 முதல் 7.03.2000 வரை பிறந்தவர்கள்

போட்டிகளுக்கான விவரங்கள்
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவம், மனனம் செய்யவேண்டிய குறள்களின் விவரங்களை பின்வரும் போட்டிக்குழு அங்கத்தினர்களிடமும்,  தமிழ்முரசு அவுஸ்திரேலியா  (www.tamilmurasuaustralia.com)  இணையத்தளப் பத்திரிகையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
ஈழத்து   இலக்கிய  வளர்ச்சியில்   பிரதிபலன் எதிர்பார்க்காமல்    பங்களித்த  பரோபகாரி துரை. விஸ்வநாதன்.
   
                   
துரை  விஸ்வநாதன் 
            

கம்பனுக்கு  ஒரு  சடையப்ப  வள்ளலும்  - கார்ல் மார்க்ஸ_க்கு  ஒரு ஏங்கல்ஸ_ம்    இருந்தமையால்   காவியத்திலும்    - காலத்திலும் மானுடம்    மேன்மையுற்றது  என்பார்கள்.
இலங்கையில்   1970  இற்குப்பின்னர்    இலக்கிய  வளர்ச்சிக்கு இலக்கியம்    படைக்காமலேயே   அளப்பரிய  சேவைகள் புரிந்தவர்களாக   சிலர்  எம்மால்  இனம்  காணப்பட்டனர்.
அவர்களில்  ஓட்டப்பிடாரம்  ஆ. குருசாமி,  எம். ஏ. கிஷார்,  ரங்கநாதன் ஆகியோரின்    வரிசையில்   போற்றப்படவேண்டியவர்  துரை. விஸ்வநாதன்  அவர்கள்.    இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்   இயங்கு  சக்திகளாகவும்  மல்லிகை   கலை  இலக்கிய மாசிகைக்கு  பக்கபலமாகவும்  இவர்கள்  திகழ்ந்தார்கள்.
1990   களில்  மல்லிகை  ஜீவா   கொழும்புக்கு  இடம்பெயர்ந்தபொழுது அவரதும்   மல்லிகையினதும்  எதிர்காலம்  கேள்விக்குறியானது. ஆனால்  -  விரைவிலேயே    ஆச்சரியக்குறியாக்கியவர்  துரைவி  என எம்மவர்களினால்   அன்புடன்  அழைக்கப்பட்ட  துரை  விஸ்வநாதன் அவர்கள்.
தமது   வாழ்நாள்  முழுவதும்   கலை,  இலக்கிய  ரசிகராகவே  இயங்கி    மறைந்த  துரைவியின்  இழப்பு  ஈழத்து  இலக்கிய வளர்ச்சிப்பாதையில்     ஈடுசெய்யப்பட  வேண்டிய  பாரிய  இழப்பாகும்.
துரைவி    அவர்கள்  தினகரன்  பத்திரிகையில்  ராஜ  ஸ்ரீகாந்தன் ஆசிரியராக    பணியாற்றிய  காலத்தில்  நடத்தப்பட்ட  சிறுகதைப்போட்டிக்கு    ஒரு   இலட்சத்து  ஒரு   ரூபாய்  வழங்கி ஊக்குவித்த   பெருந்தகை.     மலையக  இலக்கியவாதிகளுக்கும் மலையக    இலக்கிய  ஆய்வுகளுக்கும்  ஆதர்சமாகத்திகழ்ந்தவர்.
விஸ்வநாதன்   தமிழ்  நாட்டில்  துரையூரில்    28-02-1931  ஆம்  திகதி பிறந்தார்.    1945   இல்    இலங்கை  வந்தார்.    வர்த்தகத்துறையில் ஈடுபட்ட  அவர் ,   1963    இல்   கண்டியில்  திருமணம்    முடித்து  1966 இல்    மாத்தளையில்   தமது   வர்த்தகத்தை     விஸ்தரித்தார்.    1976 இல்    அவர்  இலங்கைத்தலைநகருக்கு  பிரவேசமானது இலக்கியத்துறைக்கு    கிட்டிய   பாக்கியம்  எனலாம்.

வாழ்வா? சாவா? மரணத்தின் தருணத்தில் ஒரு தமிழ் இளைஞன்

.
பத்து மாதத்தில் மகனின் பிறப்புக்குக்காக காத்திருந்த தாய் பத்து ஆண்டுகளாக தன் மகன்வாழ்வானா  வீழ்வானா எனக்  காத்திருக்கும் கொடுமை
” பாலி நைன் “ மயூரன் சுகுமாரன் உயிர் ஊசலாடுகிறது.
வழக்குரைஞர் சந்திரிகா சுப்ரமண்யன்


உன்னை நான் சுமந்த ஒவ்வொரு மணித்துளியும்  
என் கண் முன் நீ வாழ்வாய் என்றே எண்ணியிருந்தேன்.
மரணத்தின் வாசலில் நீ மணிக்கணக்காய் காத்திருக்க
மனம் இரங்க நானும்  மண்டியிட்டு வேண்டி நின்றேன்
ஒரு தாயின் தவிப்பு இது என்பதே உண்மை.
என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்அவன் செய்ததவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” என்று  கதறுகிறார் ,  மயூரனின்  தாய் ராஜினிபத்துமாதத்தில் மகனின் பிறப்புக்குக்காக காத்திருந்த அந்தத்தாய் பத்து ஆண்டுகளாக தன் மகனின்வாழ்க்கைக்காகக் காத்திருந்தது போன்ற அவஸ்தையும் கொடுமையும் எந்தத் தாயினாலும்தாங்க முடியாத ஒன்றாகும்.

சிட்னி , மெல்பேர்ன் திரை அரங்குகளில் காண்பிக்கப்படுகிறது காக்கிச் சட்டை

.
அரங்கு நிறைந்த காட்சிகளாக சிட்னி திரையரங்கில் காக்கிச் சட்டை. இத்திரைப்படம் வரும் மார்ச் 11ம் திகதிவரை சிட்னியில் காண்பிக்கப்படவுள்ளது


சங்க இலக்கியக் காட்சிகள் 41- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
கட்டியணைத்தான், காதல் பிறந்தது!



காட்டாற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனைக் கண்ணுற்ற இளம் பெண்கள் அதிலே நீராட விரும்புகிறார்கள். வெள்ளத்தினுள் இறங்கி நீந்தி விளையாடுகிறார்கள். அவர்களிலே தலைவியும் ஒருத்தி. தங்களை அறியாமல் நீண்ட நேரமமாக நீச்சலடித்து விளையாடியதால் தலைவிக்குக் களைப்பு ஏற்படுகிறது. அவளால் மேலும் நீந்த முடியவில்லை. அவளின் கைகள் சோர்வடைகின்றன. அவளை நீர் அடித்து இழுத்தச் செல்கிறது.  செய்வதறியாது ஏனைய பெண்கள் எல்லோரும் அழுது கூச்சலிடுகிறார்கள். உதவிகோரிக் கத்துகிறார்கள். அவர்களின் அவலக்குரல் கேட்டு அங்கே ஓர் இளைஞன் வருகிறான். ஆற்றிலே குதிக்கிறான். தண்ணீரில் இழுபட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் தலைவியைக் காப்பாற்றிக் கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்டுவந்து  கரை சேர்க்கிறான். தலைவிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. இருவரும் மனமொத்த காதலர்களாகின்றனர். அவன் அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். அதனால் தனது பெற்றோரை முறைப்படி பெண்கேட்டுவருமாறு அனுப்புகிறான். அவர்களும் தலைவியின் பெற்றோரின் விட்டுக்கு வருகிறார்கள். முறைப்படி தமது மகனுக்குப் பெண்கேட்கிறார்கள்.

காக்கி சட்டை: முதல் நாள் முதல் பார்வை

.

சிவகார்த்தியேன் நடிப்பில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் துரை செந்தில்குமார், காக்கி சட்டை படத்தின் மூலம் போலீஸ் கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.
மீண்டும் எதிர்நீச்சல் டீம் இணைந்தது என்பதால், எதிர்பார்ப்புகள் எகிறி அடித்தன. அந்த எதிர்பார்ப்பை காக்கி சட்டை நிறைவேற்றியதா?
கான்ஸ்டபிளாக இருக்கும் சிவகார்த்திகேயன் கடமை தவறாமல் கண்ணியமாக, நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அதற்கான சாத்தியங்கள் இல்லாததால், இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் விரக்தியை வெளிப்படுத்துகிறார். நிஜமான போலீஸ்காரன்னா ஒரு கேஸ் பிடி. அப்புறம் பார்க்கலாம் என்று பிரபு சவால் விடுகிறார். அப்படி ஒரு கேஸ் சிவகார்த்திகேயனிடம் சிக்குகிறது. அந்த கேஸில் சிக்கியவர்கள் கதி என்ன ஆகும்? இதுதான் காக்கி சட்டை படத்தின் கதை.
காக்கி சட்டை திரைப்படத்தின் டிரெய்லர் உங்களுக்கு நினைவிருக்கலாம். சட்டத்தை காப்பாத்தணும். பொதுமக்களைப் பாதுகாக்கணும். குற்றவாளிகளைத் தண்டிக்கணும். இந்த தொனியில் சிவகார்த்திகேயன் இன்ஸ்பெக்டராக போலீஸ் ஜீப்பில் இருந்து மாஸ் ஹீரோ எஃபக்டில் இறங்கி வரும்போது விசில் பறக்கிறது.
அந்தக் காட்சி முடிந்ததும் ஒரு ட்விஸ்ட். ரசிகர்கள் சின்னதாய் சிரித்தபடி கூர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

வீடியோவை கீழே பார்க்கலாம் 

நனவிடை தோய்தல் -இராஜரட்ணம் சிவநாதன் - அவுஸ்திரேலியா

.
இந்து  சமுத்திரத்திலிருந்து  பசுபிக்  சமுத்திரம் வரையில்
  
                  
(நீர்கொழும்பில்   அண்மையில்   வெளியிடப்பட்ட   நெய்தல்  நூலில் இடம்பெற்ற  கட்டுரை)
உலகமயமாதல்  (Globalization )  என்பது  இன்றைய   உலகில்  முக்கியமான  உரையாடல்.   உலகம்  கைக்குள்    வந்துள்ளதற்கு  இன்றைய நவீன    விஞ்ஞான    தொழில்   நுட்பங்கள்    பிரதான காரணம்.    எனினும்  நாம் பிறந்த -  வளர்ந்த -  வாழும்  நாடுகள்  தொழில்  நுட்பங்களினால்  இன்றைய    இணைய  யுகத்தில்  பதிவாகியிருந்தாலும்  உணர்வுபூர்வமாக அவை   எமது  ஆழ் மனதில்  தங்கியிருக்கிறது.
உலகத்தை  சமுத்திரங்கள்  பிரித்து  எல்லை    வகுத்தாலும்  உணர்வுகளுக்கு எல்லைகள்    இல்லை.   நீர்கொழும்பின்  வாழ்வும்   வளமும்   தொடர்பான இலக்கியத்தொகுப்பிற்கு  எழுத  முனைந்தபொழுது  எனக்கு  இன்றைய நவீன  விஞ்ஞான   தொழில்  நுட்பத்திற்கு  அப்பால்  நான்  பிறந்த  வளர்ந்த தற்பொழுது   வாழும்  நாடுகள்தான்  உடனடி  நினைவுக்கு  வந்தன.
ஒவ்வொரு   மனிதர்களின்  வாழ்விலும்  கடந்த  காலம்  நிகழ்காலம் எதிர்காலம்  இரண்டறக்கலந்திருக்கிறது.   இலங்கையின்  வடக்கில்  எனது தந்தையாரின்  பூர்வீக  ஊர்  காங்கேசன்துறை.   அம்மாவின்  ஊர் சித்தங்கேணி.
அவர்களுடனும்   எனது  சகோதரர்களுடனும்  இந்த  ஊர்களில்  பிறந்து வாழ்ந்திருந்தாலும்    எமது    தந்தையாரின்  தொழில்சார் இடமாற்றங்களினால்  இலங்கையின்  வேறு  பிரதேசங்களுக்கும்  செல்ல நேர்ந்திருக்கிறது.
ஒருவகையில்  இது  இடப்பெயர்வுதான்.   எமது  தந்தையாருக்கு  1968 இற்குப்பின்னர்   இடமாற்றம்  கிடைத்தது  நீர்கொழும்பில்.    இலங்கையின் மேற்கில்   இந்து  சமுத்திரத்தின்  அலையோசை    கேட்கும்  இந்த  ஊரில் புனித    செபஸ்தியார்   தேவாலயத்தின்   அருகே  கடலின்  அலை ஓசையையும்    தேவாலயத்தின்  மணியோசையையும்  கேட்டவாறே விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரிக்கு  படிக்கச்சென்றேன்.
தந்தையார்     நீர்கொழும்பில்  கடற்றொழில்  திணைக்களத்தில் பணியாற்றினார்.    நீர்கொழும்பு,  கடலும்  கடல் சார்ந்த  நகரமும்  என்பது அனைவரும்    அறிந்ததே.    இங்கு  வாழ்ந்த   பெரும்பான்மையான கத்தோலிக்க    மக்களின்  வாழ்வாதாரத்திற்கு  உதவியது  கடல்  தொழில். அவர்களின்    பொருளாதாரம்  மேம்படவேண்டும்   என்பதற்காகவே கடற்றொழில்    அமைச்சும்  கடல்  சார்ந்த  ஊர்களில்  திணைக்களங்களும் கடற்றொழில்    பயிற்சி  நிலையங்களும்  அமைக்கின்றன.

பேராசிரியர் க.கைலாசபதி நினைவுப் பேருரை.- பேராசிரியர் சி.மௌனகுரு

.
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களது மறைவின் 32 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நினைவுப் பேருரை 15.02.2015 மாலை 4.30 மணிக்கு கொழும்பு 6 ல் உள்ள தர்மராம மாவத்தையில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.'பண்பாட்டின் தன்மைகளும் இலங்கைத் தமிழர்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி.மௌனகுரு உரையாற்றினார்.
செல்வி திருச்சந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மண்டபம் நிறைய கல்விமான்களும் படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் நிறைந்திருந்த சிறப்பான கூட்டம். 

திருமதி கைலாசபதி அவர்களும் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தார்.
இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.செல்வி திருச்சந்திரன் பேராசிரியர் கைலாசபதியுடனான தனது உறவு மூன்று நிலைப்பட்டது என்றார்.




இன்று அன்று | 1931 பிப்ரவரி 27: ஆசாதின் வீரமரணம்

.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாதின் ஆல்பிரெட் பூங்கா, 84 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் துப்பாக்கிகளின் முழக்கத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்தப் பூங்காவைச் சுற்றிவளைத்த போலீஸார் 25 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞனைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள். “ஆங்கிலேயக் காவல் துறையிடம் ஒருபோதும் கைதாகவே மாட்டேன். சுதந்திர மனிதனாகவே மரிப்பேன்” என்று சூளுரைத்திருந்த அந்த மாவீரன், கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் அமெரிக்கத் தயாரிப்பான ‘கோல்ட்’ கைத்துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தான். இனி தப்பிக்க வழியில்லை எனும் நிலை வந்தபோது, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தான். அந்த இளைஞனின் பெயர் சந்திரசேகர் ஆசாத்.
மத்தியப் பிரதேசத்தின் பாவ்ரா கிராமத்தில், 1903 ஜூலை 23-ல் பிறந்தவர் சந்திரசேகர் திவாரி. 1921-ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் அவர் ஈர்க்கப்பட்டார். தனது 15 வயதில் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது பெயரை ‘ஆசாத்’ என்று தெரிவித்தார் (விடுதலை என்று அர்த்தம்). சிறைதான் தனது முகவரி என்றார். எனினும் வயதைக் காரணம் காட்டி அவருக்குச் சிறைத் தண்டனை தராமல், கசையடி வழங்க உத்தரவிட்டார் நீதிபதி. ஒவ்வொரு கசையடிக்கும், ‘பாரத மாதா வாழ்க!’ என்று அவர் முழங்கியதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் அவர் பெயருடன் ‘ஆசாத்’ எனும் சொல் ஒட்டிக்கொண்டது.

புகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும்: இளையராஜா

.

புகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் என்று அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் உறுப்பினர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் வகையில், அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தின் தொடங்க விழா இன்று நடைபெற்றது. இத்திட்டத்தை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியது:
"'தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியார் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி என்று தோன்றும். 'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற கூறியிருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் செல்வங்களை எல்லாம் இங்கு கொண்டு வந்து சேருங்கள் என்றும் சொல்லிவிட்டார். அதிலும் எனக்கு உடன்பாடில்லை.
'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு அங்கு சேர்ப்பீர்' என்று பாடியிருக்க வேண்டும். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போட வேண்டும் என்று தான் பாடியிருக்க வேண்டும். ஜகத்தினை எதற்கு அழிக்க வேண்டும். இயற்கைத் தான் விழைத்துக் கொட்டுகிறதே.

ஏ.வின்சென்ட் ஒளியில் கலந்த கலைஞன்!

.

‘வின்சென்ட் மாஸ்டர்’ என்று தமிழ் சினிமா உலகினரால் அன்புடன் அழைக்கப்படும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் காலமாகிவிட்டார். 1928-ம் ஆண்டு கோழிக்கோட்டில் பிறந்த வின்சென்டின் தாய்மொழி கொங்கணி. தந்தையின் புகைப்பட ஸ்டுடியோவில் கிடைத்த அனுபவத்தால் புகைப்படக் கலையில் சிறுவயதிலேயே வின்சென்ட்டுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
1947-ம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் கே.ராம்நாத் மற்றும் கமால் கோஷிடம் அனுபவம் பெற்றார். அதற்குமுன்பு அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த படம் ‘ப்ரதுகு தெருவு’ என்ற தெலுங்குப் படம். இளைஞராக இருந்த வின்சென்டை இப்படத்தின் ஒளிப்பதிவுக்காகப் பரிந்துரைத்தவர் பழம்பெரும் நடிகை பானுமதி.
தமிழில் ‘அமரதீபம்’ வாயிலாக வின்சென்ட் தனது சகாப்தத்தைத் தொடங்கினார். அமரதீபம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் தந்தை ரத்னம். அமரதீபத்தின் கதை, வசனம் ஸ்ரீதர். அப்போதுதான் ஸ்ரீதர்-வின்சென்ட் என்ற காவியக் கூட்டணி தொடங்கியிருக்க வேண்டும்.
கேமரா வின்சென்ட்
தமிழ் சினிமாவைக் காட்சிசார்ந்த கலையாக மாற்றியதில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்டுக்குப் பெரிய பங்குண்டு. கேமரா வின்சென்ட் என்று அக்காலத்திலேயே ஒளிப்பதிவாளரைச் சுட்டி வெகுஜனங்கள் பேசும் முதல் கௌரவம் இவருக்குத்தான் கிடைத்தது. இயக்குநர் ஸ்ரீதருடன் இவர் சேர்ந்து பணியாற்றிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவை.
ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ அக்காலத்தில் தொழில்நுட்ப ரீதியில் சோதனை முயற்சியாகப் பேசப்பட்டது. அந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து முடிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் 28. நான்கே பேர்தான் நடிகர்கள். ‘சொன்னது நீ தானா’ என்ற இறவாப் புகழ்பெற்ற அந்தப் பாடல் ஒரு சின்ன அறையில் எடுக்கப்பட்டது. வின்சென்ட்டின் வருகைக்கு முன்பு ஃப்ளாட் லைட்டிங் என்று சொல்லப்படும் முறையே ஒளியமைப்பில் இருந்தது.

இலங்கைச் செய்திகள்


ராஜபக்ஷ குடும்பத்துடன் டோனியின் உறவு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: பிரதமர்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

தனியார் பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்

விமலின் மனைவி கைது

உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்




ராஜபக்ஷ குடும்பத்துடன் டோனியின் உறவு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: பிரதமர்



தமிழ் சினிமா


தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்




தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் நடிகர்களுக்கிடையேயான ஈகோ குறைந்து கொண்டே போகிறது போல, விஜய், அஜித்தில் ஆரம்பித்து விஜய் சேதுபதி வரை இரண்டு ஹீரோ படங்களில் நடிக்க சம்மதிக்கின்றனர்.
அந்த வகையில் அட்டக்கத்தி தினேஷ், நகுல், ஐஸ்வர்யா தத்தா, பிந்து மாதவி, சதீஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் தான் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும். இப்படத்தை அறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
கதை
படத்தில் காதல், நகைச்சுவை தாண்டி கொஞ்சம் சயின்ஸும் பேசப்பட்டுள்ளது என்பது தான் கொஞ்சம் வித்தியாசம். நகுல் கல்லூரி மாணவர்களுக்கு ப்ராஜக்ட் எழுதி தருபவராக வர, இவருக்கு ஐஸ்வர்யா தத்தாவின் அறிமுகம் கிடைக்கிறது. சில நாட்களில் இவர்கள் நட்பு வழக்கம் போல் காதலாக மாறுகிறது.
அதேபோல் இன்னொரு பக்கத்தில் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷனில் வேலை பார்க்கும் தினேஷிற்கு, பிந்து மாதவி மீது காதல், இதையெல்லாம் விட காமெடியன் சதீஸும் இப்படத்தில் மூன்றாவது ஹீரோவாக வந்து செல்கிறார்.
ஏனெனில் படத்தில் இவருக்கும் ஜோடி உண்டு, இவர்கள் எல்லோரும் எப்படி காதலில் இணைந்தார்கள், என்பதை மட்டும் இல்லாமல் பல சயின்ஸ் சுவாரசியங்கள் கூறி முடிகிறது கிளைமேக்ஸ்.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
நகுல் ஒரு இளம் விஞ்ஞானி போல் யதார்த்தமாக நடித்துள்ளார். அதிலும், இவர் செய்து காட்டும் சயின்ஸ் விஷயங்கள் எல்லாம் ஈர்க்கின்றது. நகுலின் அம்மாவாக வரும் ஊர்வசி, வழக்கமான தன் கலகல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அட்டக்கத்தி தினேஷ் எப்போதும் போல் தன் அப்பாவி முகத்தில், குறிப்பாக பில்டிங் விற்கும் காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார். சதீஸ் படம் முழுவதும் வந்து நகைச்சுவைக்கு கேரண்டி கொடுக்கிறார்.
க்ளாப்ஸ்
சதீஸின் நகைச்சுவை காட்சிகள் நன்றாக வந்துள்ளது. தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம், பிந்து மாதவியும் தன் கதாபாத்திரம் உணர்ந்து நன்றாகவே நடித்துள்ளார்.
அட்டக்கத்தி தினேஷ் படத்திற்கு படம் தன் நடிப்பை மெருகேற்றி வருகிறார். இந்த படத்திலும் இவரது நடிப்பு அனைவரையும் கவரும் படி உள்ளது. நகுல்-ஐஸ்வர்யா தத்தா காதல் காட்சிகள் புதுமையாக உள்ளது.
பல்ப்ஸ்
சில காட்சிகளில் சயின்ஸ் பற்றி பேசும் போது கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகிறது.
மொத்தத்தில் தமிழுக்கு எண் 1ஐ கண்டிப்பாக ரசிகர்கள் அழுத்தலாம்.
ரேட்டிங்-3/5
நன்றி cineulagam