எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 57 மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த 2006 எழுத்தாளர் விழா ! பதிப்புலகத்திலும் சோலியான் குடுமிகளை கண்டோம் ! முருகபூபதி


உயிர்ப்பு தொகுப்பின் வெளியீட்டு அரங்கு 2006  ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் திகதி சனிக்கிழமை பிரஸ்டன் நகர மண்டபத்தில் , மரபு கலை, இலக்கிய இதழை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு.  விமல். அரவிந்தன் தலைமையில் நடந்தது என்று கடந்த 56 ஆவது அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அன்று நடந்த விழா இங்கு வதியும் மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமிக்கும் அரங்காகவே சிறப்புற்றிருந்தது.  குறிப்பிட்ட ஆறாவது எழுத்தாளர் விழா பற்றி ஊடகங்களில்  வெளியான பதிவை இங்கே மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

புலம் பெயர்ந்து வந்த  தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும்


அழைத்து வந்திருந்த போதிலும் இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் , அந்த இயல்புகளுக்கும் அப்பால் அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழின அடையாளம் பேணப்படவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் பணிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் அதே சமயம் – புகலிட இலக்கியத்தை ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பிரயத்தனமும் நீட்சி பெற்றுள்ளது.


2006  ஜனவரி 7 ஆம் 8 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த ஆறாவது எழுத்தாளர் விழாவின் நிகழ்ச்சிகள், விழா அமைப்பாளர்களின் நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அறிகுறியை காண்பிக்கிறது.

“அறிந்ததைப் பகிர்தல் , அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த எழுத்தாளர் விழா , பின்பு ஆண்டுதோறும் மாநிலங்களில் நடைபெற்றது.

இம்முறை ஆறாவது எழுத்தாளர் விழா மெல்பன்  பிரஸ்டன் (Preston Town Hall , Melbourne) நகர மண்டபத்திலும் , பண்டூரா (Bundoora Park) பூங்காவிலும் இரண்டு நாட்கள் நடைபெற்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் (2001 முதல் 2005 வரையில் ) எழுத்தாளர் லெ. முருகபூபதி இவ்விழாக்களின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.

இம்முறை (ATLAS) என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (Australian Tamil Literary & Arts Society) என்ற அமைப்பு இவ்விழாவை ஒழுங்கு செய்திருந்தது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , பத்திரிகையாளர்கள் , ஊடகவியலாளர்கள் வருடாந்தம் ஒன்றுகூடும் இவ்விழாவில் இம்முறை கருத்தரங்கு ,நூல் விமர்சன அரங்கு , நூல் வெளியீடு , குறும் திரைப்பட அரங்கு , கவியரங்கு என ஐந்து நிகழ்வுகள் இடம் பெற்றன.

சமூகம் . கல்வி , இலக்கியம் முதலான தலைப்புகளில் கருத்தரங்கு அமர்வுகள் முதல்நாள் விழாவில் காலைமுதல் மாலை வரை நடைபெற்றன.

விழாவை ஒழுங்கு செய்த அமைப்பின் கீதத்தை மெல்பன் கவின்கலை இசைக்கல்லூரி மாணவர்கள் பாடியதைத் தொடர்ந்து , திருமதி.உஷாகெளரி சந்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் என். செல்வராஜா ஆவணப்படுத்தியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம் முருகபூபதி

மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வந்தால்,


இலங்கையின் தமிழ்த்தேசிய தினசரியான வீரகேசரி பத்திரிகைக்கு 93 வயது பிறந்துவிடும்.

இலங்கைத் தமிழ் இதழியலில் காத்திரமான சேவையை மேற்கொண்டுவந்திருக்கும் வீரகேசரி  சமூக, அரசியல் செய்தி ஏடாக மாத்திரம் துலங்காமல், கலை, இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும் காத்திரமான பணிகளை தொடர்ச்சியாக வழங்கியது.

வீரகேசரி பாசறையில் வளர்ந்த பலர், பின்னாளில் சிறந்த ஊடகவியலாளர்களாகவும், படைப்பிலக்கியவாதிகளாகவும் உருமாறினர்.


எண்ணிலடங்கா சிறுகதைகள், தொடர்கதைகள் , அரசியல் ஆய்வுகளை வெளியிட்டு வந்திருக்கும் வீரகேசரி , இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பதிப்புத்துறையிலும் தீவிர கவனம் செலுத்தியது.  1971 ஆம் ஆண்டு முதல் 1983 வரையிலும் நாடெங்குமிருந்த வீரகேசரி விற்பனை நிலையங்களில் காணப்பட்ட வீரகேசரி  பிரசுரங்களை மூத்த தலைமுறை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

வாசகர்கள் மலிவு விலையில் வாங்கிப் படிக்கத்தக்கவாறு, கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணத்தில் முகப்பு ஓவியங்களுடன் வெளியான வீரகேசரி பிரசுர நாவல்கள் பற்றிய விரிவான ஆவணப்பதிவை வரவாக்கியிருக்கிறார் இங்கிலாந்தில் வதியும் நூலகர் என். செல்வராஜா.

எமது மத்தியில் நூலியல், நூலகவியல் துறைகளில் இவர் அயர்ச்சியின்றி தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் பணிகளின் மூலம் தமிழ் உலகம் அறுபதிற்கும் மேற்பட்ட ஆவணங்களை இவர் மூலம் பெற்றிருக்கிறது.

நூல்தேட்டம், நூலகவியல்  ஆகியவற்றின் ஆசிரியராகவும் விளங்கும் செல்வராஜா, எங்கட புத்தகங்கள், அச்சாண்டி ஆகியன உள்ளிட்ட பல ஈழத்து இதழ்களின் ஆலோசகராகவும் இயங்கிவருபவர்.

நூலகர் செல்வராஜாவின் தீவிர தேடலும் உழைப்பும், இந்த ஆண்டு வெளியாகியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம் நூலிலும் வெளிப்பட்டுள்ளது.

வீரகேசரி பிரசுரங்கள் மூலம் தங்கள் நாவல்களை கண்ட பல படைப்பாளிகள் தற்போது எம்மத்தியில் இல்லை.  எனினும் அவர்களின் எழுத்துக்கள் இன்றளவும்  தலைமுறை தாண்டியும் பேசப்படுகின்றன.

ஈழத்து இலக்கிய வளர்ச்சி, பல பரிமாணங்களைப் பெற்று வளர்ந்து, இறுதியில் போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் என நீட்சிகொண்டது.

வீரகேசரி பிரசுரங்கள், போர்க்காலம் கருக்கொள்ளத் தொடங்கிய 1983 காலப்பகுதியில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது.

1970 களில் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம், உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து வளர்ப்பதற்கும், அதே சமயம் தென்னிந்திய வணிக இதழ்களை கட்டுப்படுத்தவும், திரைப்படக் கூட்டுத்தாபனத்தை உருவாக்கி அதன் மூலம் மானியம் வழங்கி, உள்நாட்டு தமிழ்த்திரைப்பட தயாரிப்புக்கு வாய்ப்பு வசதிகளையும் வழங்கியது.

பரிசு - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 

ஜெமினி கணேசன்,சரோஜாதேவி இருவருடைய நடிப்பிலும் ஸ்ரீதருடைய இயக்கத்திலும் கல்யாணப் பரிசு படம் வெளியாகி பெரும் வெற்றியை கண்டது. இதற்கு நான்காண்டுகள் கழித்து ஒரு படம் எம் ஜி ஆர்,சாவித்ரி நடிப்பில் வெளிவந்து வெற்றி படமானது. அந்தப் படத்தின் பேர் பரிசு. ஆரம்பத்தில் காதல் பரிசு என்று பேர் வைக்கப் பட்டு என்ன காரணத்தாலோ காதல் தவிர்க்கப் பட்டு பரிசானது. படத்தின் பெயரில் காதல் தவிர்க்கப் பட்டாலும் படம் என்னவோ காதல் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான்.



போலீஸ் துப்பறியும் அதிகாரியான வேணு குற்றவாளிகளை கண்டு பிடிக்க பயங்கர காடு சூழ்ந்த பகுதிக்கு தனியாக வருகிறான். அங்கே கௌரி என்ற படகோட்டும் பெண்ணின் அறிமுகம் உண்டாகிறது. அறிமுகம் காதலாகிறது. துப்பறியும் வேலையுடன் காதல் வேலையும் தொடர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் வேணுவை கொலை செய்ய வரும் கொலையாளி ஆள்மாறாட்டத்தில் வேணுவின் நண்பன் ரகுவை குத்தி கொன்று விடுகிறான். இதனால் ரகுவின் தங்கை மாலா நிர்கதியாகிறாள். அவளுக்கும் ஒரு காதலன்

இருப்பதை அறியும் வேணு அவனிடம் மாலாவை மணக்கும் படி கேட்கிறான். அவனோ தனக்கொரு தங்கை இருப்பதாகவும் அவளை வேணு மணந்தால் தான் மாலாவை மணப்பதாக நிபந்தனை விதிக்கிறான். தனக்காக உயிரை விட்ட ரகுவுக்கு நன்றிக்கடன் பட்ட வேணு தன்னுடைய காதலைத் துறந்து விஸ்வத்தின் தங்கையை மணக்க விஸ்வம் மாலாவை மணக்கிறான். ஆனால் முதல் இரவன்றே தனக்கு வாய்த்த மனைவி ஒரு மன நோயாளி என்று வேணுவுக்கு தெரிய வருகிறது!

இப்படி அமைந்த படத்தின் கதையை பிரபல கதாசிரியராக கே பி கொட்டாரக்காரா எழுதியிருந்தார். படத்துக்கான வசனங்களை ஆரூர்தாஸ் எழுதினார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வெற்றி படமான பாசமலரில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் வேணுவாக எம் ஜி ஆர் நடித்தார். போலீஸ் அதிகாரியாக வீரத்தை காட்டுபவர்,காதல் காட்சிகளில் மகிழ்ச்சியை காட்டுபவர் காதலியை பிரியும் போதும், மன நோயாளியை மணக்கும் போதும் உருக்கமான நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்கிறார். அவருக்கு இணையாக சாவித்திரியும் ஆடிப் பாடி, பின்னர் சோகத்தை வெளிப்படுத்தி தன் நடிப்பாற்றலை எம் ஜி ஆர் படத்தில் காட்டியிருந்தார். இருவரும் நடிப்பில் சோடை போகவில்லை.

படத்தில் இரண்டு வில்லன்கள் . அதட்டுவததற்கு எம் ஆர் ராதா என்றால் அடிதடிக்கு நம்பியார். ராதா பேசும் வசனங்கள் சூப்பர். நான் வச்ச குறி தப்பாது என்று ராதா சொல்வதும் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கா என்று எம் ஜிஆர் ராதாவிடம் கேட்பது பிற்காலத்தில் நடந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது!

சிகிச்சை முடிந்து திரும்பியிருக்கும் ஆசிரிய பெருந்தகை திருமதி வாசுகி தவபாலனை வரவேற்கின்றோம் ( யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவர்கள் )


யாழ் . வைத்தீஸ்வரா கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் தனது மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட  விடுப்பை  முடித்துக் கொண்டு தனது கடமையை மீண்டும் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

 கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.  நன்மை செய்பவர்களையும்


உண்மையாக சேவை செய்பவர்களையும் கடவுள் என்றுமே கருணையோடு அரவணைப்பார்.                             அந்த வகையில் எங்கள் அனைவரையும் காக்கும் வைத்தீஸ்வரப் பெருமான்  எங்கள் அனைவராலும் மதிக்கப்படும்,  விரும்பப்படும் அன்னையை காத்து மீண்டும் கல்விச் சேவை ஆற்றிட அடி வானில் காலைக் கதிரவன் பல வர்ணங்களுடன்  தனது ஒளிக் கதிர்களை பரப்பி உலகிற்கு ஒளியை கொடுப்பது போல் மீண்டும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுக்கு எடுத்துக்காட்டாய் வலம் வரும் அன்னையை வரவேற்பதில்   மகிழ்ச்சியடைகின்றோம்.

 அன்புக்கு தாயாய், கண்டிப்புக்கு தந்தையாய், ஆலோசனைக்கு


உற்ற நண்பராய், மாதா பிதா குரு தெய்வம் என்ற சொல்லுக்கு  அமைவாக செயலாற்றும் அன்னைதான்  திருமதி வாசுகி தவபாலன் அவர்கள்.  

 இவ்வாறு யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவ நண்பர்கள், நலன்விரும்பிகள்,  மற்றும்  யாழ் வண்ணார்பண்ணை சமூகத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  “ 2017 இல் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து எமது கல்லூரிக்கு மனப்பூர்வமான அர்ப்பணிப்புடன் தனது முழு நேர உழைப்பை செலுத்தி வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. எமது பாடசாலையை கல்வியிலும் இணைப்பாட விதானங்களிலும் பெரும் வளர்ச்சி அடைய செய்து வருகிறார். மாணவர்களின் வளர்ச்சிக்காக அதிபர் அவர்கள் எடுத்து வரும்,  எடுக்கவிருக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவையும் அனுசரணையையும் வழங்க தயாராக இருப்பதாக உலகெங்கிலும் வாழ்ந்து வரும் நமது முன்னாள் மாணவர்களும் மற்றும் மாணவர் சங்கங்களும்  தொடர்ச்சியாக தொலைபேசி ஊடாக உறுதி அளித்து வருகின்றனர் என்ற செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

 2016 -  2017   காலப்பகுதியில்  யாழ்.  வைத்தீஸ்வராவின் முதல் பெண் அதிபராக திருமதி வாசுகி தவபாலன் பதவியில் அமர்ந்தார். இவர் பாடசாலையைப் பொறுப்பேற்றபோது பாடசாலையின் மாணவர் தொகை 1968 ஆம் ஆண்டு இருந்ததிலிருந்து  ஏறத்தாழ ஐந்தில் ஒன்றாகக் குறைந்திருந்தது.

 இந்நிலையானது  பாடசாலையின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. ஆனாலும், அதிபரதும், ஆசிரியர்களதும் முயற்சியால் பொதுப் பரீட்சை அடைவுகளில் கடந்த காலங்களைவிட பாரிய முன்னேற்றத்தை  காண முடிந்தது.

  2017 முதல் 2020  காலப்பகுதியில் 18 தொடக்கம் 23 வீதமான மாணவர்கள்,  பல்கலைக்கழகத்தில் பிரவேசிக்கும்   அளவுக்கு  முன்னேற்றத்தை  காண முடிந்தது.   விளையாட்டிலும் ஏனைய பாடங்களிலும் புறப்பாட விதான செயல்பாடுகளிலும் மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில்  வைத்தீஸ்வரா மாணவர்கள் பங்குபற்றி உயர்ந்த இடங்களைப் பெற முடிந்தது .

வடக்கும் – தெற்கும் இணையும் காலம் வருமா..? அவதானி


இலங்கையில் மக்கள் அன்றாடாம் உண்ணும் அரிசி, பாண் மற்றும்  அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் உட்பட  பயன்படுத்தும்  எரிபொருள் என்பன விலையேறும்போது,  தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்குமே பொதுவாகத்தான் உயர்கிறது.

ஆனால்,  அரச வேலை வாய்ப்பு, பதவியுயர்வு என வரும்போது மாத்திரம்  இனரீதியாக – பெரும்பான்மையினருக்கு மாத்திரம் சலுகைகள் கிடைத்துவருகிறது.

இந்த இனமுரண்பாடு,  தொடர்ந்தமையால்தான் இலங்கையில்


தமிழின விடுதலைப்போராட்டம் 1980 இற்குப்பின்னர் எழுச்சிகொண்டது.

அதற்கான அறிகுறி 1972 இல் உருவான புதிய அரசியல் அமைப்புவிதிகள் காரணமாகியிருந்தன.  அதற்கு முன்னர் 1971 இல்  தென்னிலங்கை சிங்கள இளைஞர்கள், ஆயுதப்போராட்டம் மூலம் எழுச்சிகொண்டனர்.  எனினும் இந்தப்போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன்,  நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் குற்றவியல்  நீதி ஆணைக்குழுவின் முன்னால் நிறுத்தப்பட்டு அரசியல் கைதிகளாக சிறையில் தள்ளப்பட்டனர்.

இக்காலப் பகுதியில்  சிறைகளிலிருந்த சிங்கள – தமிழ் இளைஞர்கள் தங்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர். அவர்களினால் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை.

வேறு வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் விடுதலையாகி வந்தபின்னரும் நேருக்கு நேர்  சந்தித்த பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை.

எனினும்,  வேலுப்பிள்ளை பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் இணைந்திருந்த  ஆரம்பகால இயக்கத்தின் பிரசுரமாக வெளியான ஒரு புத்தகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோண விஜேவீரா குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வழங்கிய சாட்சியத்தின் ஒரு பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

அதனை சிறையிலிருந்து விடுதலையானதன்பின்னர் ரோகண விஜேவீராவும் பார்த்தார்.  அவரும் தமிழ் படிக்க முயன்றார்.  1978 ஆம் ஆண்டு  நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது போட்டியிட்டு மூன்றாம் இடத்திற்கு வந்த விஜேவீரா,  குறிப்பிட்ட தேர்தல்காலத்தில் தொலைக்காட்சியில் தோன்றி தமிழிலும் பேசினார்.

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 12 – கிணறு வெட்டப் பூதம்

 தொழிற்சாலைக்கு புதியவர்களை காலத்துக்குக் காலம் வேலைக்கு


எடுப்பது வழமை. அப்படி வருபவர்களை ஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, பின்னர் நன்றாக பணி புரிபவர்களை நிரந்தரமாக்குவார்கள். சிலரை மேலும் ஆறுமாதங்கள் வைத்திருந்து பார்ப்பார்கள். நன்றாகச் செய்தால் அவர்களையும் நிரந்தரமாக்குவார்கள். ஒன்றுக்கும் உதவாதவர்களை கலைத்து விடுவார்கள்.

 அதே நேரத்தில் தொழிற்சாலையில் பல வருடங்கள் வேலை செய்பவர்களை, அவர்கள் விரும்பினால் ஒரு தொகையைக் கொடுத்து (package) தொழிற்சாலையில் இருந்து விலகும்படி கேட்பார்கள். குழறுபடி செய்பவர்கள், சோம்பேறிகள், பிரைச்சனைக்குரியவர்களைத் தேடிப் பிடித்துக் கலைத்தார்கள்.

 ஒருநாள் - தெளிந்த நீரோடைக்குள் பாறாங்கல் விழுந்தது போல தொழிற்சாலையில் ஒரு சலசலப்பு. அதை பலரும் கூட்டமாக ஒளித்திருந்து விவாதித்தார்கள். ஒருவருக்கும் சரியான தகவல் தெரியவில்லை. புதிதாக வந்த பெண்கள் பற்றியதாக அந்தப் பேச்சு இருந்தது.

 ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டுமாயின், தன்னுடன் படுத்து எழும்ப வேண்டும் என மக்காறியோ ஒரு பெண்ணிடம் கேட்டதாகத் தகவல்.

 “அந்தப் பெண் கிறஜ்” என்றான் மாய். Grudge என்னும் பேய் படத்தில் வரும் பெண் போல தோற்றம் கொண்டதால் அந்தப் பெண்ணிற்கு ‘கிறஜ்’ என்று பெயர். கிறஜ் - வயது பதினெட்டு. ஒல்லி உருவம், கட்டை, ஆளை மூடித்தலைமயிரை விரித்திருப்பாள். சிகரெட் குடித்து உடம்பு பூரா சிகரெட் பூவாசம். தலையைச் சரித்துத்தான் ஆக்களையே அவள் பார்ப்பாள். அப்படிப் பார்த்தால் எல்லோரும் தலை தெறிக்க ஓடுவார்கள். அசல் கிறஜ் ஆகிவிடுவாள்.

 “இதுஎன்ன புதிதா? முன்பும் நடந்ததுதானே! ஆலினுக்கு வயித்திலை பூச்சியைக் குடுத்தவன் தானே உந்த மக்காறியோ. ஆலினுக்கும் பூச்சி விரும்பம் எண்டதாலை அப்ப விஷயம் பெரிசாகேல்லை. இப்ப பூதம் கிழம்பியிருக்கு!” என்றான் மாய். குரங்கின் கையில் பூமாலையும் மக்காறியோவின் கையில் பெண்களும் ஒன்றுதான்.

இலங்கைச் செய்திகள்

 தமிழ் அரசியல் கைதி சதீஸ் பொதுமன்னிப்பில் விடுதலை

மைத்திரியின் மனு மீது ஜூலை 31 இல் விசாரணை

சர்வதேச வர்த்தக அமைப்பின் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

யாழ் - கொழும்பு விமான சேவைகள் விரைவில்

இலங்கைக்கு ஜப்பான் 1.8 மில்.டொலர் உதவி


தமிழ் அரசியல் கைதி சதீஸ் பொதுமன்னிப்பில் விடுதலை

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

உலகச் செய்திகள்

பூகம்பத்தில் தப்பியோர் கடும் வெள்ளத்தில் பலி

பல பில்லியன் டொலர் ஆதரவு: வங்கிகளின் நெருக்கடி தளர்வு

உக்ரைனுக்கு போலந்து போர் விமானங்களை வழங்க முடிவு

நீண்ட தூர ஏவுகணையை பாய்ச்சியது வட கொரியா

 பிரெட்டி சூறாவளி: மாலாவியில் உயிரிழப்பு 326 ஆக அதிகரிப்பு


பூகம்பத்தில் தப்பியோர் கடும் வெள்ளத்தில் பலி

தென் கிழக்கு துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட இரு நகரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 14 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.