தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
ஸ்ரீசத்திய சாய் பாபா அவதாரஞ் செய்து நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் ஞான்று மலரும் நினைவுகள்!
உ
சிவமயம்
மும்மைமா மலப்பற்றின்
தளைய கற்றி
மூவுயிரும் ஈடேறத் தோன்றாத் துணையாய்
இம்மையிலும்
தொடர்ந்துவரும் எழுமையி லுமடியர்
எடுத்திடுமெப் பிறப்பினிலும் அருள்பா லித்தே
செம்மைவாழ்
வளித்தெமக்குப் பதஞ்சே விக்கும்
சிவனவனின்; தேவதூதனாய்ப் புட்ட
பதியில்
தம்மையுமிப்
புவியிலுள்ளோர் தரிசித்தே உய்யத்
தவப்பேற்றால் உதித்தவரே சத்யசாய் பாபா!
பத்தர்கள் நினைவுகூர்ந்து
விழா வெடுத்துப்
பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாளை
எத்திக்குங்
கொண்டாடி மகிழும் வேளை
இறைதூதன் எமக்கருளிப் போந்த நல்ல
தித்திக்கும்
அருளுரையைச் சிந்தைக் கெடுத்துச்
சீராக அறுகுணசீ ரமைப்பைச் செய்து
அத்தனருள் கூர்ந்தெம்மை
வழிந டத்தி
அருள்வரென நம்பியவர் அடிகள் தொழுவாம் !
மனமகிழும் வகையினிலே மற்றவரை வைத்துவிடு !
கிளிக் கண்ணிகள் (சென்றவாரத்தொடர்ச்சி)
இயற்றியவர்
பல்மருத்துவ கலாநிதி
பாரதி இளமுருகனார்
பழந்தமிழ்ப்
பெருமையைப் பறைசாற்றி வருவோர்தம்
வழக்கத்தில்; ஓம்பாரடி - கிளியே
வாய்ச்சொல்லில்
தீரரடீ!
நடைமுறையில்
ஓம்பிடாத நனிசிறந்த விழுமியங்கள்
நாளடைவில் நலியுமன்றோ? – கிளியே
நாளும்புழங்
கச்சொல்லுவாய்!
வாய்பேசாச்
சீவன்களை வேள்வியென்ற பாவனையில்
கோயிலில் உயிர்ப்பலியா? - கிளியே
கொடுமையிற்
கொடுமையடீ!
மனதைச் சலவைசெய்தே
சைவர்களை மதம்மாற்றத்
தினமும் முயலுகிறார்
– கிளியே
சிறுநெறி ஈனரடீ!
அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !
சிந்திக்கத் தூண்டும் சிறுகதை!
இரத்த அழுத்தத்துக்கு போடவேண்டிய மாத்திரையை போட்டு படுக்கையில் படுத்திருந்த பரமசிவனைத் தட்டி எழுப்பினான் பேரன் சிவா. பேரன்மேல் மிகுந்த பாசம் அவருக்கு. அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்கு கதை சொல்வார்.
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்-3…..சங்கர சுப்பிரமணியன்.
அங்கிருந்து மறுபடியும் கீழ்தளம் சென்று வாடகை வாகனத்தைப் பிடிக்க வேண்டும்.
மனிதனும் தெய்வமாகலாம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் நீண்ட காலமாக
சமுதாயத்தில் பேசும் பொருளாக காணப்படுகிறது. அதிலும் தமிழ் நாட்டில் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த கேள்வியும் , அதற்கான பதிலும் சர்ச்சைக்குரிய விவாதமாக உலா வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி இருந்தாலும் எவரும் இதை பற்றி அலட்டிக் கொள்வதில்லை . இஸ்லாமிய நாடுகளில் இந்த கேள்விக்கே இடமில்லை. ஆனால் தமிழ் நாட்டில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த விவகாரம் விவாதிக்கப் பட்டு வருகிறது. இந்த பிரச்னையை அடிப்படையாக வைத்து 1975ல் வெளி வந்த படம் மனிதனும் தெய்வமாகலாம்.
மானசீகமாக உரையாடுபவர். தம்பியோ பட்டதாரி ஆனால் இறை மறுப்பாளன். பூசகரோ கோவில் கைங்கரியம், பூசை, அபிஷேகம் போன்ற நித்திய கர்மங்கள் சீராக நடக்க வேண்டும் என்பதில் தீவிரமானவர். தம்பியோ ஊரில் மக்கள் பசி தீர வேண்டும், கல்வியறிவு விருத்தி அடைய வேண்டும், ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் தீவிரமானவன். இவர்கள் இருவருடைய மோதலை தூண்டி விட்டு குளிர் காய்கிறான் ஊர் நாட்டாண்மை. கணவனுக்கும் , கொழுந்தனுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறாள் அண்ணன் தாரம். தம்பியின் காதலியோ காதலனை பற்றி தப்பபிப்பிராயம் கொண்டு அவனை விட்டு ஒதுங்கி கண்ணீர் சிந்துகிறாள். இறுதியில் ஆஸ்திகமா ,நாஸ்திகமா ஜெயித்தது என்பதை விட , ஊருக்கு நன்மை ஏற்பட்டதா என்பதே படத்தின் ஜீவன்!
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
29-11- 2025 Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை
30-11-2025 Sun: மாத்தளைசோமுவின் 100 சிறுகதைகள் நூல் வெளியீடு ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.
14-12-2025 Sun: தமிழ் இலக்கிய கலை மன்றம் - திருக்குறள் போட்டிகள் -பரிசளிப்பு நிகழ்ச்சி- 5 PM ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மண்டபம்
14-12-2025 Sun: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டிக்கான பரிசளிப்பு - 5:30 PM ஸ்ரீ துர்க்கை அம்மன்ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மண்டபம்
இலங்கைச் செய்திகள்
நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்
திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா
நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்
Published By: Vishnu
22 Nov, 2025 | 05:04 AM
தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை (21) மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
பொது ஈகைச்சுடரினை , மாவீரரின் தந்தையான தம்பிராசா ஏற்றி வைத்ததை தொடர்ந்து , கல்லறை உருவகத்திற்கு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை நினைவாலயத்தில் மாவீரர்களின் உருவ படங்கள் சிலவும் பெற்றோரினால் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
உலகச் செய்திகள்
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு
உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழப்பு
டுபாய் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி பலி
வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ; 43 பேர் உயிரிழப்பு
லெபனான் எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவர் - அகற்றுமாறு ஐ.நா. வலியுறுத்து
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு
17 Nov, 2025 | 04:42 PM
இன்று (17) டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதி, ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய தன் நாட்டு மக்களையே, அவர் கொலை செய்ய உத்தரவிட்டமை உறுதியாகியிருப்பதாக தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார்.
பவித்ர உற்சவம் 2025
பவித்ர உற்சவம் என்பது “பவித்ர” (புனிதம்) மற்றும் “உற்சவம்” (திருவிழா) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையிலிருந்து உருவானது.
ஆண்டின் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளில் ஆகம விதிகளின் படி செய்ய வேண்டியவற்றில் ஏதேனும் தவறுகள், தவறுதல்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்வதற்காக பவித்ரோத்த்ஸவம் கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம், நியமிக்கப்பட்ட விதிகளை பின்பற்றுவதில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து மீள்வதற்காக நடத்தப்படுகிறது.
உற்சவ மூர்த்திகளின் கருடன் வாகனத்தில் வீதி உலா, புன்யாஹ வாசனம், தெய்வத்தின் புனித நீராடல் (தீர்த்தவாரி) மற்றும் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் இதில் அடங்கும்.
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 54 “நூல்களைப் பேசுவோம்”
நாள்: சனிக்கிழமை 29-11-2025
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
நூல்களைப் பேசுவோம்:
அனாமிகாவின் – “ததா கதா”, “உறுமி” – (கவிதைத்தொகுப்புக்கள்)
உரை: சி.ரமேஷ்
ந. இரத்தினக்குமார் தொகுத்த “காடன் கண்டது” – (குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்)


.jpeg)





.jpeg)
.jpeg)

.png)
.png)






