அனுமான் வால் தீ - - எச். ஏ. அஸீஸ்

.

நேற்று  எங்கோ  கிளர்ந்த  தீப்பிழம்பு 
மிக  நெடு  தூரம்
நெருங்கி  வந்து
நம்மை  எரிக்கும்  நேரம்  இதுவோ
நின்று  நிதானிக்க  நிம்மதி  மூச்சுவிட
கொஞ்சம்  இடம்  எங்கே
நேற்று   நடந்ததென  மறந்துவிட்டு
நிகழ்ந்த   துயரங்களை   புறம்தள்ளி
மெல்ல  முன்செல்ல  நினைத்தாலும்
என்ன  கெதி  நாளை யென
எண்ணுவது  நியதி  அன்றோ
இன்று  எரிவது  எதிர்காலம்  இல்லையென
எங்கு  எவர்  தருவர்  உறுதி  நண்பா
அனுமான்  வால்  தீ
அகன்ற   பிழம்பாகி
நடந்த  இதிகாசம்   நிகழ்கிறதா   மீண்டும்
நிஜத்தில்  தீ  யாகம்  நின்று  குளித்தாடும்
நிமிடம்   வருகிறதா  நெருங்கி
எல்லோர்  உயிரும்  நாளை
மெல்லக்  கொள்ளும்  காவு
எரிந்து  தீவதுவா   தீவு 
எவர்  பொறுப்பு  இதற்கெல்லாம்  கூறு
நெருப்பென்றால்  இந்நெருப்பே
அழகானது  என  வியந்து 
வாழ்த்துவரோ  மெய் உணர்ந்தோர்  யாரும்
கரங்களிலே  இரத்தக்கறை
படியாத   இலங்கையரை 
காண  முடியாத காலம் வருகிறதா
விடியாத  இரவுகளைத் தேடும்
முடியாத முற்றுகையா இது
எதிர்காலம்  இருப்பு  எல்லாம்
எரிந்து  போக  அப்பொழுது
பெரும்பான்மை   சிறுபான்மை
இல்லை  இங்கு  எனச் சொல்லி
வியப்பாரோ   மானுடர்கள்  வெளியே
என்ன  விதி ஆள்கிறது  இன்று
எரிமலையின்  உச்சியிலே  நின்று
-----0-------







மரண அறிவித்தல்

.                          
                                                   திருமதி சேதுநாயகம் சிவசிதம்பரம் அவர்கள் 

                                                                                       மறைவு  06.05.2015

ஏழாலை தெற்கை பிறப்பிடமாகவும், Sydney Toongabbie இல் வசித்துவந்தவருமான திருமதி சேதுநாயகம் சிவசிதம்பரம் அவர்கள் 6/5/15 புதன் கிழமை இரவு இறைபதம் அடைந்தார். 

இவர், உரும்பிராயை சேர்ந்தவரும், யாழ்பாணம் கச்சேரியில் கமத்தொழில் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவருமான, காலம் சென்ற திரு. அழகரத்தினம் சிவசிதம்பரத்தின் அன்பு மனைவியாரும், திவ்யகாந்தன் Sydney, மனோமகள் USA, Dr இமயகாந்தன் UK, சுகாசினி Tasmania, ஜெயகாந்தன் Sydney,  நிராகாந்தன் Sydney ஆகியோரின் அன்பு தாயாரும், Carol Sydney, Dr நவபாலச்சந்திரன் USA, Gill UK, Dr ரத்தினகோபால் Tasmania, ரமணி Sydney, சுகந்தினி Sydney ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் பூத உடல் 15/5/15 வெள்ளிக்கிழமை மாலை ஆறிலிருந்து எட்டு மணிவரை Pinegrove, Minchinbury Guardian Funeral Parlour இல் பார்வைக்காக
வைக்கப்படும். ஈமைக்கிரிகைகள் 18/5/15 திங்கட்கிழமை காலை 11:30 இலிருந்து 1:30 வரை அதே இடத்தில நடைபெற்று பின்பு 2:00 மணியளவில் North Chapel இல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மகன் நிராகாந்தன்
தொலைபேசி இலக்கம் 0404 887 782.

மரண அறிவித்தல்

.
             அமரர் டாக்டர் நடேசு கதிர்காமநாதன் (சிட்னி ஆஸ்திரேலியா )


                        தோற்றம் :01.04.1951                       மறைவு : 04.05.2015

தண்ணீயூற்றை  பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த டாக்டர் நடேசு கதிர்காமநாதன் கடந்த 04.05.2015 திங்கட்கிழமை மாலை இறைவன் அடி சேர்ந்தார். அன்னார் அமரர்களான சின்னர் நடேசு , சுந்தரம்மா (நவம்) வினாசிதம்பி தம்பதிகளின் அன்பு புதல்வனும் , ஆஸ்திரேலியாவில்  வசிக்கும் சகுந்தலா கதிர்காமநாதனின் அன்பு கணவரும், தீபன், மித்திரன், நவிதா ஆகியோரின்  அன்பு தந்தையும், சில்பி தீபனின் அன்பு மாமனாரும், அமரர் சிவநாதன்,புவனேஸ்வரி சிவநாதன் தம்பதிகளின் மூத்த மருமகனும், சிவநாதன், கைலைநாதன், இராமநாதன், மகாலட்சுமி சிவபாலன் ஆகியோரின் அன்பு சகோதரும். ஜெயதேவ சிவநாதன், சந்திரிகா ஸ்ரீபத்மஸ்ரீ ஆகியோரின்  மைத்துனருமவர் அன்னாரின் பூதவுடல் இறுதிகிரியைக்காக, அவரது இல்லத்தில் இருந்து 11.05.2015 திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு Macquire park Crematorium திக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும் என்பதை மிகவும் ஆழ்ந்த அனுதாபத்துடன் அறியத்தருகிறோம். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: மனைவி , பிள்ளைகள் ,சகோதரி , சகோதர்கள்

தொலைபேசி: 61-2-96742854

படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
சிட்னி  கானா  பிரபா  எழுதிய  பாலித்தீவுஇந்துத்தொன்மங்களை  நோக்கி  
பயணித்த யாத்ரீகரின் பார்வையில்  பாலித்தீவு
பயணிக்கவிரும்பும்   தமிழ்ப்பயணிகளுக்கு துணையாகும்  வழிகாட்டி  நூல்
பாலித்தீவுக்கு  சென்றிருக்கிறீர்களா..  தென்கிழக்கு  ஆசிய  நாடுகளின்  மத்தியில்    உல்லாசப்பயணிகளை வெகுவாகக்கவர்ந்திருக்கும்   எழில்  கொஞ்சும்  அழகிய சுற்றுலாத்தீவு.   அவுஸ்திரேலியாவுக்கும்  இந்தோனேஷியாவுக்கும்   அடிக்கடி  உரசல் வந்துகொண்டிருக்கும்.   கிழக்குத்தீமோர் உருவான காலத்திலிருந்தே   இந்த  ஊடலும்  உரசலும்  தொடர்கிறது.  அதன் உச்சத்தையும்  அண்மையில்  பார்த்தோம்.
எனினும்  இந்தோனேஷியாவின்  எல்லைக்குள்    அதன்  ஒரு  பகுதியாக  இருக்கும்  இந்தத்தீவு,  அவுஸ்திரேலியர்களை தொடர்ந்தும்  கவர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை

.
             --பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி          
   
 சென்ற ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 .30 மணிக்கு தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 அருள்மிகு துர்க்கை அம்மன் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் அவை நிறைந்த தமிழ் அன்பர்களுடன் கோலாகலமாகவும் வெற்றி விழாவாகவும்;  நடைபெற்றது.

திருவள்ளுவரைக் கௌரவித்தமை --
சான்றோர் விழா ஆரம்பமாவதற்குப் 15 நிமிடங்கள் முன்பதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலை அணியப்பட்டது.
இவ்வருடம் உலக சைவப் பேரவை புதிதாகவும் ஒரு முன்மாதிரியுமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதாவது உலகத் தமிழ் மறை நூலெனப் போற்றப்படும் திருக்குறளை யாத்த பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தபின் குறளில் இருந்து  சில குறட்பாக்களைப் பேராசிரியர் பரமேஸ்வரன் அவர்கள் இசைத்தார்கள். இதைத் தொடர்ந்து திருமதி  பரமேஸ்வரனும்   மிகவும் அழகாகப்      பாடினார்கள்.(அம்மன் வளாகத்தில் தமிழர் மண்டபத்திற்கு முன்பாகத் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவர்) இந்த நிகழ்ச்சி எல்லோரையும் பரவசப்படுத்தியது.

கோடை கால பண்பாட்டு பயிற்சி 15/05 - 21/05 2015

.











குற்றமும் தண்டனையும்! - உமாஜீ

.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் எமக்கான ஓர் சேதி இருக்கலாம் என்பது என் நம்பிக்கை. நாம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள ஓர் வாழ்க்கை! நமக்கான சேதியைக் கொண்டுவருபவர்கள் இறைதூதர்களாகவோ, மகான்களாகவோ மட்டும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் கொலைத் தண்டனைக் குற்றவாளிகளாகக் கூட இருக்கலாம்.
கடந்த வாரம் பலர் மனதை உலுக்கிய நிகழ்வு Bali 9 எனக்குறிப்பிடப்படும் இந்தோனேஷியப் போதைப்பொருள் கடத்தல் வழக்கின் தீர்ப்பான மரணதண்டனை. அதிலும் நம்மை அதிகம் பாதித்தது மயூரன், அன்ட்ரூ சானின் இறுதிநாட்கள். இவர்கள் இருவரும் அறியாமல் தவறு செய்த அப்பாவிகளோ, தாம் செய்யும் குற்றத்தின் தீவிரத்தன்மையும் தெரியாதவர்களோ அல்ல. மாட்டிக் கொண்டால் என்னவாகும் என்பதும் தெரிந்தே நன்கு திட்டமிட்டு கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள். சமூக விரோதிகள். ஆனாலும் இவர்களின் இறுதிநாட்கள் பலரின் மனத்தைக் கலங்கச் செய்திருந்தது. இந்த அனுதாபத்துக்கும் ஒருவிதமான அபிமானத்துக்கும் காரணம் ஊடக வெளிச்சத்துக்கு வந்த அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை.   

சைவ மன்றம் நடாத்தும் சைவசமய அறிவுத்திறன் தேர்வு 2015 12 05 15

.













உலகச் செய்திகள்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கற்களை எறிந்து மரண தண்டனை

சோமாலியாவுக்கு ஜோன் கெரி திடீர் விஜயம்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கற்களை எறிந்து மரண தண்டனை



04/05/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், ஓரினச் சேர்க்கையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டிற்கு உள்­ளான நபர் ஒரு­வ­ருக்கு உய­ர­மான கட்­ட­ட­மொன்றின் கூரை­யி­லி­ருந்து கீழே தள்­ளிய பின் கற்­களால் எறிந்து தம்மால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.
இந்தத் தண்­டனை நிறை­வேற்­றத்தின் போது கூரையின் மீது 11 தீவி­ர­வா­திகள் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களில் ஒருவர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கொடியை ஏந்­தி­யி­ருக்­கிறார்.

சல்மான் கானுக்கு தண்டனை வாங்கி தந்த போலிஸ்காரருக்கு நடந்த கொடூரம்!

.


12 வருடம் முன்பு இரவொன்றில்..மும்பை பாந்த்ராவில்..சல்மான் கான் தன் வண்டியை...பேக்கரி வாசலில் படுத்திருந்த ஏழைகள் 5 பேர் மீது ஏற்றியதில், ஒருவர் இறக்க, மீதி நான்கு பேருக்கு மரண அடி.

சல்மானின் போதாத வேளை, இதை கண்ணால் பார்த்தது ரவீந்திர பாடில் என்ற மும்பையின் கடை நிலை காவலர்.. இவருக்குமே இது போதாத வேளையாய் அமைந்தது..

ரவீந்திர பாடில் கோர்ட்டில் சல்மான் தான் வண்டியை ஓட்டினார் அவர் தான் இடித்தார் என்று ஆணித்தரமாய் சாட்சி சொல்லி எப் ஐ ரும் கைப்பட போட.... சல்மானால் இதில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை. இதற்கு நடுவில், பாடில் இப்படி சொன்னது, காவல் துறை மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கவே இல்லை. தினம் தினம் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்து, உன்னுடைய சாட்சியை வாபஸ் வாங்கு என்று கெஞ்சி, மிரட்டி இன்னும் குடும்பத்துக்கும் தொல்லை கொடுத்தனர்.

கார்மென்ட்ஸில் வேலை செய்த “தல” அஜீத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

.

“தல” என்றாலே தமிழகமே தெறிக்கும். தனது நடிப்பினால் மட்டும் இல்லாது பண்பினாலும் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் அஜித். என்ன தான் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் வரிசையில் நின்று ஓட்டு போடுவது. அனைவருக்கும் உதவுவது, உதவியதை வெளிகாட்டிக் கொள்ளாமல் இருப்பது என்று அஜித் திரையுலகில் தனித்தன்மையோடு திகழ்கிறார்.

அனைவருக்கும் அஜித்தைப் போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அவர்களுக்கு அஜித் கூறுவது,” வேண்டாம், நான் கடந்து வந்த பாதை, மற்றும் வலிகள் எல்லாம் என்னவென்று இந்த அஜித்திற்கு மட்டும் தான் தெரியும். உங்களுக்கும் அந்த சிரமங்கள் வேண்டாம்” என்று கூறுவார்.

எந்த பின்புலமும் இன்றி வந்து, சொந்த திறமையின் காரணமாக உழைத்து முன்னேறிய “தல”, நடிகராக இருந்தார், ரேசராக இருந்தார் என்று தெரியும். வேறு எந்தெந்த துறையில் எல்லாம் அவர் வேலை செய்தார் என்று உங்களுக்கு தெரியுமா…

இலங்கைச் செய்திகள்


இலங்கையில் இன்னும் கடினமான விவகாரங்கள் நிலுவையில் உள்ளன : ஜோன் கெரி

 பஷில் ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்

மஹிந்தவை சந்தித்த மைத்திரி வெளியேறினார்..!

இணக்கமின்றி முடிவடைந்த மைத்திரி–மஹிந்த சந்திப்பு


இலங்கையில் இன்னும் கடினமான விவகாரங்கள் நிலுவையில் உள்ளன : ஜோன் கெரி

05/05/2015  இலங்கையில் இன்னும் சில கடினமான விவகாரங்கள்   சவாலான முறையில் நிலுவையில் உள்ளதாக   இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். 

கன்பராவில் பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் கூத்து

.
  கன்பராவில்  கலை,  இலக்கிய  சந்திப்பு
பேராசிரியர்  மௌனகுருவின் இராவணேசன்  கூத்து
                     

 அவுஸ்திரேலியா  கன்பரா  மாநிலத்தில்  எதிர்வரும் 16  ஆம் திகதி சனிக்கிழமை   நடைபெறவுள்ள   கலை,  இலக்கிய  சந்திப்பில்  நூல்களின் அறிமுகம்,   கூத்து ஒளிப்படக்காட்சி  நிகழ்ச்சிகளுடன்  கலந்துரையாடலும்    இடம்பெறும்.
     மெல்பன்,   சிட்னி,   கன்பரா  ஆகிய  நகரங்களிலிருந்து  எழுத்தாளர்களும் கலைஞர்களும்  கலந்துகொள்ளவிருக்கும்  இச்சந்திப்பு  எதிர்வரும்  மே 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கன்பரா மூத்த பிரஜைகள் சங்கத்தின் ( Tamil  seniors  citizens  Hall,  Bromby  Street,  Isaacs,  Canberra,  ACT)  மண்டபத்தில் நடைபெறவுள்ளது   இச்சந்திப்பில் ஈழத்தின்   தகைமைசார்  பேராசிரியர்  மௌனகுருவின்  நெறியாள்கையில் இலங்கையில்  அரங்கேறிய  இராவணேசன்  கூத்து  ஒளிப்படக்காட்சியும் காண்பிக்கப்படும்.


 1965  இல்  பல்கலைக்கழக  மாணவராகவிருந்த  மௌனகுரு, இராவணேசன்  பாத்திரம்  ஏற்று  நடித்தார்.  -  மீண்டும் அவர்  தமது 70  வயதில்  இராவணேசன்  பாத்திரம்  ஏற்று  நடித்த  கூத்து  என்பதும் குறிப்பிடத்தகுந்தது.    பேராசிரியர்  சு. வித்தியானந்தனின்  நெறியாள்கையில் முன்னர்  அரங்கேற்றம்  கண்ட  இக்கூத்து  கடந்த  பல  வருடங்களாக பேராசிரியர்  மௌனகுருவின்  நெறியாள்கையில்  நவீனமயப்படுத்தப்பட்டு அரங்கேறிவருகிறது.
அவுஸ்திரேலியா  கன்பராவாழ்  தமிழ்  மக்களுக்காக  ஒளிப்படக்காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது.


மே 9, 1945 சோவியத்தில் வெற்றி தினம் கொண்டாடப்பட்ட நாள்

.
மே 9, 1945 சோவியத்தில் வெற்றி தினம் கொண்டாடப்பட்ட நாள்
1945ஆம் ஆண்டு இதே நாளில்தான் இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவிடம், ஜெர்மனி தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டதற்கான ஒப்பந்தம் நிறைவேறியது. 1941ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மீது ஹிட்லர் போர் தொடுத்தார். தொடக்கத்தில் ஜெர்மனி படைகள் வெற்றிகளைக் குவித்து தலைநகர் மாஸ்கோ நோக்கி வேகமாக முன்னேறின.

எனினும் ரஷ்யாவின் கடுங்குளிர், செம்படைகளின் கடும் தாக்குதல் போன்றவற்றால் ஜெர்மனி படைகளுக்குப் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. இதைப்பயன்படுத்தி செம்படையினர் ஜெர்மனி படைகள் கைப்பற்றிய பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு முன்னேறத் தொடங்கினர்.

1945ஆம் ஆண்டு செம்படைகள் பெர்லினை நெருங்கியதை அறிந்த ஹிட்லர் ஏப்ரல் 30ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஜெர்மனி ராணுவம் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடையும் ஒப்பந்தம் 1945ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு பெர்லின் நகரில் கையெழுத்தானது.

அப்போது ரஷ்யாவில் மே 9ஆம் தேதியாக இருந்ததால் அன்றைய தினம் வெற்றி தினமாகக் கொண்டாடப்பட்டது. 1955ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கு ஜெர்மனி நேட்டோ எனப்படும் வடஅட்லாண்டிக் ராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவில் சோவியத் கைப்பற்றிய ஜெர்மனி நாட்டின் பகுதிகள் கிழக்கு ஜெர்மனி என்றும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கைப்பற்றிய பகுதிகள் மேற்கு ஜெர்மனி என்றும் அழைக்கப்பட்டன. உலகப் போர் நிறைவடைந்து

விழுதல் என்பது எழுகையே....... தொடரின் 45

.
பகுதி 45 இதை எழுதியவர்  யேர்மனியில் இருந்து மாலினி மாலா அவர்கள்.
விழுதல்  என்பது  எழுகையே.......  தொடரின்  45  
எழுதியவர் மாலினி மாலா - யேர்மனி


அறிமுகம்
பெயர் - மாலினி மாலா
ஈழத்து  சகல  பத்திரிகைகள்இ  மூலம்  சிறுகதை  தொடர்கதை கட்டுரைகள்  பேட்டிகள்  விமர்சனங்கள்......
இலங்கை வானொலி  நாடகங்கள்  சிறுகதைகள்  இசையும்  கதையும்  கட்டுரைகள்  வேறு  ஜனரஞ்சக   நிகழ்ச்சிகள்
இருபத்திரண்டே   வயதுக்குள்  மிகவேகமாக  இலக்கியத்துறையில்  ஓரளவு  உயரம்   தொட்டு  நின்ற  போது   அறிமுகமாகி  இருந்த  பெயர்.   அரியாலையூர்   மாலினி  சுப்பிரமணியம்.
புலப்பெயர்வின்  பின்  ஈழமுரசு  உட்பட   சில  பத்திரிகைகளில்  சில  கதைகள்இ  வானொலி  நாடகங்கள்  நிகழ்ச்சிகள்  சில  என்பதுடன்  அந்தத்  துறையை  விட்டே  நீண்ட  கால  ஒதுக்கம்.   இடையில்  இருமுறை   ஐரோப்பிய  மற்றும்  இலங்கை  இணைந்த  சிறுகதைப்  போட்டிகளில்  இருமுறை   முதலிடம்  தன்ன்கப்பதக்கமாய்  வென்றும்  விலத்திப்  போன  ஆர்வம்  பின்  அந்தத்  துறை  விட்டே  ஒதுங்க  வைத்தது.   
     நீண்ட  வருடங்களின்  பின்  வீரகேசரியில்  முன்பு  தொடராக  வெளியாகி  பலரது  பாராட்டைப்  பெற்ற  நாவலை   மணிமேகலைப்பிரசுரம்  வெளியிடஇ   குடும்பப்  பாசமும்  நட்பின்  நேசமும்  முன்னே  இருந்த   பாதை  நோக்கி வற்புறுத்தி  நகர்த்தஇ   எழுத்தின்  மௌனத்தை  உடைத்து  வெளிவந்த  இரண்டாவது  நாவல்  அர்த்தமுள்ள  மௌனங்கள்.   அதன்  பின்னான  பயணம்  கவிதையாக இ  கட்டுரையாக இ சிறுகதையாகஇ   நாவலாக   மீண்டும்  அதே  பாதையில்  நிறுத்திவிடா   தீர்மானத்துடன். ....  முன்னைய பெயர்  அடையாளம்  தவிர்த்த  வெறும்  மாலினியாய்    உங்கள்   அறிமுகத்துடன்  

தொடரும்  பேனாவின்  பயணம்......


“அன்சாக்”தினம் தமிழர் கூட்டமைப்பினாலே விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

.

சிட்னியிலே முதன்முதலாக “அன்சாக்தினம் தமிழர் கூட்டமைப்பினாலே விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி அங்கு ஒலித்த தமிழ் வாழ்த்துச் செய்தயை நேயர்களுடன் பகிர்கிறோம்---




 “அன்சாக்” விழாச்சிறக்க ஒற்றுமையாய் வாழ்த்துவமே!

                    --------------  பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி

       ஆண்டாண்டாய் ஏப்ரல்இரு பத்தைந்தாம் நாளதனில்
             “அன்சாக்”என அரசாங்கம் நினைவுநாளாய்ப் பெயரிட்டு
       கூண்டோடு வீரசுவர்க் கமடைந்த தியாகிகளைக்
              கோலாகலக்  கொண்டாட்ட மாகநினைவு கூருதம்மா!
       மாண்டவீரர் தியாகந்தனை மதித்தேயவர் சமாதிகட்கு
             மலர்வளையஞ் சாத்திமௌன அஞ்சலிசெய் (து)உரையாற்றி
       வேண்டுமட்டும் அன்னாரின் நாட்டுப்பற்றை மெச்சிநிற்கும்
             விழாச்சிறக்க ஒற்றுமையாய்ப் பங்கேற்று வாழ்த்துவமே!
     
       கோரப்போர் செய்து“கலப் பொலி” தன்னைக் கைப்பற்றக்

சிவஞானபோத ஞான யோகப்பயிற்சி

.












சென்னை பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் மெல்பன் எழுத்தாளர் திரு. மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா அவர்கள் திருக்குறளில் பன்முகம் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவுள்ளார்.
Jeyarama Sarmaமதுரை யில் இயங்கும் உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் இணைந்து இம்மாதம் 18 , 19 ஆம் திகதிகளில், ( இரண்டு நாட்கள்) நடத்தவுள்ள பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் உலக அளவில் புகழ் பெற்ற திருக்குறள் அறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ளுகின்றார்கள்.
திரு. ஜெயராம சர்மா அவர்களுக்கு இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக அரசினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி அடிப்படை இலக்கணம் – தமிழ்ப்பாட வழிகாட்டி – வள்ளுவர் பேசுகிறார் – ஆசிரியரும் அகமும் – திருப்பம் – நெஞ்சே நீ நினை – வட்டுவில் முருகன் திருவூஞ்சல் – என் கடன் – தமிழும் கிறீஸ்த்தவமும் – கோவிலும் நாமும் ஆகிய நூல்களை எழுதியிருக்கும் திரு. ஜெயராம சர்மா அவர்கள், இலங்கை, தமிழகம், அவுஸ்திரேலியா மற்றும் தமிழர் புகலிடம் பெற்ற நாடுகளிலிருந்து வெளியாகும் இதழ்கள், இணைய இதழ்களில் தொடர்ந்து இலக்கியப்படைப்புகளையும் எழுதிவருகிறார். பட்டிமன்றம், கவியரங்குகளிலும் பங்குபற்றிவரும் அவர், நான்காவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு (மதுரை – 2008) மொழிவளர்ச்சி ஆளுமை மாநாடு (இலங்கை – 2009) அகில உலகச் சைவநெறி மாநாடு (சிட்னி -அவுஸ்திரேலியா 2014) ஆகியனவற்றிலும் பங்கேற்று சில அரங்குகளுக்கு தலைமையேற்றுள்ளார்.

கைகூப்பிக் கேட்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் )

.

அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம்
     அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம்
     இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை
     இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை

    அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள்
    பழுதுவெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள்
    கொழுகொம்பு போலவள் கோலாமாய்க் கொண்டிடுவாள்
    முழுவுலகில் அன்னையைப்போல் முன்னிற்பார் யாருமிலர்

    அன்னையவள் அடிதொழுதால் அனைவருக்கும் ஆனந்தம்
    அன்னையினை ஆலயமாய் அனைவருமே எண்ணிடுவோம்
    ஆருமற்று நிற்கின்ற அவலம்தனை காணாமல்
    அன்னையினைப் போற்றுதலே அவர்க்காற்றும் அருந்தொண்டே

    காப்பாற்றி நின்றவளை காப்பகத்தில் விட்டுவிட்டு
    கண்துடைக்கக் கொண்டாட்டம் கனவானே செய்யாதீர்
    கண்ணுக்குள் மணியாகக் காத்துகாத்து வளர்த்தவளை
    கண்கலங்கச் செய்யாதீர் கைகூப்பிக் கேட்கின்றேன் !

எங்கோ ஒளிந்திருக்கும் வாழ்க்கை



.

பால்ய காலத்தில் பரமன் என்றொரு நண்பன் இருந்தான். முரட்டுத்தனமான தோற்றமுடையவன். அவனது அம்மாவும் அப்பாவும் விவசாயக் கூலிகள். மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார்கள். அவர்களாகவெல்லாம் நிறுத்தவில்லை. இவன்தான் படிக்க முடியாது என்று சொல்லிவிட்டான். அதன் பிறகு எப்பொழுதாவது பெற்றவர்களுடன் சித்தாள் வேலைக்குச் செல்வான். ஆனால் பெரும்பாலான நாட்களில் தன்னந்தனியாகச் சுற்றிக் கொண்டிருப்பான். நாங்கள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது உண்டிவில்லைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவான். அவனைப் பார்ப்பதற்கு பொறாமையாக இருக்கும். வயல்வெளிகள், வாய்க்கால் வரப்பு, மேட்டாங்காடு என்று ஓர் இடம் பாக்கியில்லாமல் அலைந்து அணிலோ, முயலோ, காடையோ வேட்டையாடுவதுதான் வேலை. அத்தனை இடங்களிலும் வெறும் கால்களுடன் சுற்றுவான். செருப்பு அணியாமல் நடந்து நடந்து அந்த வயதிலேயே காய்ப்பு ஏறிய பாதங்கள் அவனுக்கு. சொரசொரவென்று இருக்கும். இவனால் மட்டும் எப்படி வெறியெடுத்தவனைப் போலத் திரிய முடிந்தது என்ற ஆச்சரியம் இன்னமும் இருக்கிறது.


பரமனின் நினைவுகளை ஒரு படம் கிளறிவிட்டுவிட்டது. The Good Lie. பரமனின் தோற்றமுடைய ஒரு பையன் நடித்திருக்கிறான். சூடான் தேசத்து பையன் அவன். படமே சூடான் பற்றியதுதான். உலகில் கடைசியாக உதித்த நாடான தெற்கு சூடான்தான் கதைக்களம். 1983 ஆம் ஆண்டு சூடானில் உள்நாட்டுக்கலவரம் வெடித்தது. வடக்கு சூடானிடமிருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென போராடிக் கொண்டிருந்த தெற்கு சூடான்காரர்களை வடக்கத்திக்காரர்கள் ராணுவ வீர்ர்களை விட்டு அடிக்கத் துவங்கினார்கள். அதற்கு காரணமிருக்கிறது- சூடானுக்கு வருமானம் தரக் கூடிய எண்ணெய் வளத்தில் 75% தெற்கு சூடானில்தான் இருக்கிறது. தனி நாடு ஆகிவிட்டால் தங்கள் வருமானம் போய்விடும் என்று சூடான் அரசும் இராணுவமும் பயப்பட்டது. அமெரிக்கா விடுமா? அதுவும் எண்ணெய் வளமிகுந்த பகுதி. தெற்கு சூடான் உருவாவதற்கு முழு ஆதரவையும் தந்தது. தனி நாடு ஆகிவிட்டால் தனது அகோர எண்ணெய் பசிக்கு இரண்டு ஸ்பூனாவது தெற்கு சூடானிலிருந்து கிடைக்கும் என்கிற நப்பாசைதான்.

தமிழர் சந்ததியினர் புகலிடத்தில் எவ்வாறு தமிழை தக்கவைப்பார்கள்....?

.
மகாகவி பாரதியின் பேத்தி  தமிழைப்பேசுவதற்கு மறந்த சூழல்......?
                                          முருகபூபதி



சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சிட்னிக்கு மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி செல்வி மீரா சுந்தரராஜன் வருகை தந்திருக்கும் தகவல் அறிந்து மெல்பனிலிருந்து அவருடன் தொலைபேசியில் தமிழில் உரையாடினேன்.
உடனே அவர் தம்மால் தமிழில் உரையாட முடியவில்லை என்று கவலையுடன் சொன்னார். அவர் பாரதியின் ஆங்கிலப்படைப்புகள் தொடர்பாக ஆய்வுசெய்வதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் தற்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் மீரா,  பேராசிரியர் சுந்தரராஜன் - விஜயபாரதி தம்பதியரின் மகளாவார். நீண்டகாலமாக அவர் அமெரிக்காவில் ஆங்கிலச்சூழலில் வசிக்கின்றமையினால் அவருக்கு தமிழ் மீதான பரிச்சயம் குறைந்துவிட்டதை அறியமுடிந்தது.
மீராவின் தாயார் திருமதி விஜயபாரதி,  மகாகவி பாரதியின் ஒரு மகளின் புதல்வியாவார்.  பேராசிரியர் சுந்தரராஜன் - விஜயபாரதி தம்பதியர்   இலங்கைக்கு  சில தடவைகள் பாரதி விழாக்களுக்கு வருகை தந்துள்ளனர்.   திருமதி விஜயபாரதிக்கு இசைஞானமும் இருந்தமையினால் பாரதியின் பாடல்களை இனிய ராகத்துடன் பாடுவார்.
பெற்றோர்கள் தமிழில்  பாரதி இயல் ஆய்வாளர்கள். ஆனால் - அவர்களின் மகள் மீரா பாரதியின் ஆங்கிலப்படைப்புகளை ஆங்கிலத்திலேயே ஆய்வுசெய்பவர்.
இந்தப்பின்னணியில் மெல்பனில் கடந்த 21 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் -  அண்மையில் பெருவிழா கொண்டாடிய மெல்பன் பாரதி பள்ளியின் சிறப்பு மலருக்காக இந்தப்பள்ளியின் முன்னாள் - இந்நாள் பெற்றோர்களுடன் உரையாடி ஒரு கட்டுரை எழுதினேன்.

நீ வாழ நினைத்தால் வாழலாம்! - (தன்னம்பிக்கைத் தொடர்) -

.
காவிரிமைந்தன்

வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களின் சங்கிலித் தொடர்தான்!  இங்கே வலி இல்லாமல் வழி இல்லை!  சில வழிகளை நாம் சந்தித்திருக்கிறோம்!  அவை நம்மை கடந்து போயிருக்கின்றன!  சில வழிகளை நாம் சந்திக்கப் போகிறோம்! ஒவ்வொரு வலியிளிரிந்தும் விடுபட ஏதோ ஒரு வழி கிடைக்கத்தான் செய்கிறது! வெறும் வலியோடு வாழ்வது வாழ்க்கையில்லை!  அதில் மீண்டு வாழத்துவங்குகிற திறனும் அறிவும் நம்மைச் சார்ந்ததே!  எத்தனை முறை நாம் விழுகின்றோம் என்பது முக்கியமல்ல.. அப்போதெல்லாம் எத்தனை முறை எழுந்து விடுகிறோம் என்பதே முக்கியமானது! எண்ணியதெல்லாம் கிடைத்து விட்டால் பிறகு ரசிப்பதற்கு ஒன்றுமிருக்காது!  அதாவது.. வாழ்வில் ரசமிருக்காது! ஏதோ ஒன்றை நோக்கிய நகர்வு இருந்து கொண்டே இருக்க வேண்டும்!  இன்று அல்லது நாளை அது நடந்துவிடும் அல்லது கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கைதான் வாழும் வாழ்க்கைக்கு ஆதாரம்!  சில நேரங்களில் நமது முயற்சிகள் பலன்அளிக்காமல் போகலாம்! ஆனாலும் முயற்சிப்பதை நாம் நிறுத்திவிடக் கூடாது! உயிருள்ளவரை.. 'மூச்சும்பேச்சும்நிற்பதில்லையே.. எனவே இயக்கம் என்று வந்து விட்டால் இயங்கும் நிலையிலிருந்து மாறுபடக் கூடாது!

தமிழ் சினிமா


உத்தமவில்லன்



நாயகன் படத்தில் கமலை பார்த்து நீங்கள் நல்லவரா? இல்லை கெட்டவரா? என்று ஒரு குழந்தை கேட்கும், அதையே கொஞ்சம் தன் ஸ்டைலில் உத்தம வில்லன் என்ற தலைப்புடன், தன் நண்பர்களான ரமேஷ் அரவிந்த், ஜெயராம் ஆகியோருடன் களம் இறங்கியுள்ளார்.
இது மட்டுமின்றி இதுவரை சிறிய பட்ஜெட் படங்களாக தந்து வந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் முதன் முதலாக உலக நாயகன் என்ற சிங்கத்துடன் கை கோர்த்து பலமான கர்ஜிக்க முடிவு செய்து உருவாகியது தான் இந்த உத்தம வில்லன்.
களம்
கமல்ஹாசன் இந்தியாவே பிரம்மித்து பார்க்கும் சூப்பர் ஸ்டார், இவரின் மனைவி ஊர்வசி, இவருக்கு ஒரு ஆண் பிள்ளை, கமலின் மாமனார் விஸ்வநாத் என ஒரு குடும்பமாக வாழ, கமலுக்கு தன் குடும்ப மருத்துவரான ஆண்ட்ரியாவுடன் தொடர்பு இருந்து வருகிறது.
இதனால் குடும்பத்தில் அவ்வபோது சலசலப்பு எழ, ஜெயராம் ஒரு கட்டத்தில் கமலை சந்தித்து உங்களுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறார் என குண்டை போடுகிறார். இதைகேட்ட பிறகு எப்படி தூக்கம் வரும், அவர் யார் என்று தேட பார்வதி மேனன் அறிமுகமாகிறார்.
கமலுக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது, அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கமலின் மாமனார் அவர் கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார், ஆனால், அவர் அதை செய்யாமல் குழந்தை பெற்று கொள்கிறார்.
பார்வதி மேனன் கமலை ஒரு வில்லனாகவே பார்க்கிறார், இதற்கிடையில் கமலுக்கு உடல் நிலை சரியில்லாமல் இன்னும் சில நாட்களில் இறக்கப்போவதாக மருத்துவர்கள் கூற, அதற்குள் தன் ரசிகர்களுக்கு நல்ல ஒரு நகைச்சுவை படத்தை கொடுக்க வேண்டும் என தன் உண்மையான ஆசான் கே.பியிடம் கேட்கிறார். ஆனால், கே.பிக்கும் கமலுக்கு சற்று உரசல் முன்பே இருக்க, இதற்கு அவர் சம்மதித்தாரா? கமல் குணமானாரா? தன் பெண் பிள்ளையிடம் நற்பெயர் வாங்கினாரா? என்பதை மிகவும் உணர்ச்சி முடிச்சுகளாக கூறியுள்ளனர்.
படம் பற்றிய அலசல்
கமல்ஹாசன் இந்த ஒரு வார்த்தை போதும், இப்படி ஒரு மகா கலைஞர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது நம் பாக்கியம், இந்த கலைஞனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் அவர்களை இந்த தமிழ் சினிமாவே பாதம் தொட்டு வணங்க வேண்டும். கே.பி இயக்கத்தில் மட்டும் இல்லை, நடிப்பிலும் சிக்ஸர் அடிக்க, ஆனால், அவர் வரும் காட்சிகளில் ஏதோ கண்ணீர் நம்மை அறியாமல் வெளியே வருகிறது.
கமலின் மேனேஜராக வரும் M S பாஸ்கரின் திறமைக்கு இக்கதாப்பாத்திரம் தான் சரியான தீனி. நகைச்சுவை வசனங்கள் பேசும் போதும் சரி உணர்ச்சிப்பூர்வமான வசனங்கள் பேசும் போதும் சரி, இவரின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும்
கமலின் மகனாக வரும் சிறுவன் தன் பங்கிற்க்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கே. பாலசந்தர் கமலை இயக்கும் நாடககாட்சிகள் அனைத்தும் அரங்கத்தை சிரிப்பொலியில் மூழ்கடிக்கிறது, அந்நாடகத்தில் முத்தரசனாக வரும் நாசர் நடிப்பு பேஷ் பேஷ்
ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், ஜெயராம், விஸ்வநாத் என அனைவரும் கமலுடன் வாழ்ந்திருக்கிறார். ஜிப்ரான் இசைப்புயலும், இசைஞானியும் சேர்ந்து செய்த கலவை போல் மனதை வருடி செல்கிறார். படத்தின் ஒளிப்பதிவு இரண்டு விதமான கலர் டோன்களில் நம்மை கவர்ந்து இழுக்கிறது.
க்ளாப்ஸ்
கமல், கமல், கமல் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம், அந்த அளவிற்கு தன் அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ரமேஷ் அரவிந்த் இயக்கிய முதல் தமிழ் படம் இது என்று துளியும் எங்கும் தெரியவில்லை.
கே.பியின் யதார்த்த நடிப்பை இதில் பார்த்தால், இவரை நாம் ஒரு நடிகனாக ஏன் இத்தனை நாட்கள் பார்க்கவில்லை என்ற ஏக்கத்தை தரும். ஜிப்ரான் அவர் எடுத்து வைத்த முதல் அடியிலேயே, 100 அடி பாய்ந்து விட்டார். வசனம் கமலுக்கே உண்டான பாணியில் சிந்திக்க வைத்து சிரிக்க வைக்கின்றது. படத்தில் குறிப்பாக கமல் மற்றும் பார்வதி மேனன் பேசும் காட்சி மனதை கொள்ளை கொள்கிறது.
படத்திற்கேற்ப க்ளைமேக்ஸ் அமைக்கப்பட்டதற்க்கு பாராட்டுக்கள்.
பல்ப்ஸ்
கமல் படத்தில் என்ன குறை சொல்ல வேண்டியிருக்கிறது, கொஞ்சம் பல்ப்ஸ் இருந்தாலும் இப்படி ஒரு மனித உணர்வுகளை தமிழ் சினிமா பார்த்து நீண்ட நாளாகி விட்டது, அதன் காரணமாகவே ஏதும் கூற மனம் வரவில்லை.
மொத்தத்தில் கமல் என்றுமே சினிமா ரசிகனுக்கு உத்தமர் தான் என்று மீண்டும் இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

ரேட்டிங்-3.75/5  நன்றி cineulagam