தமிழ்முரசு நேயர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் 2017

.


கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!

.

தோ..
இப்போதுதான்
நீ இங்கிருந்துச் செல்கிறாய்,
வேறென்ன செய்ய
நான்வந்த கால்தடத்தையும்
உனக்கென விட்டுச்செல்கிறேன்,
நாளை இங்கு மழை வரலாம்
காற்று வீசலாம்
காலங்களும் மாறிப்போகலாம்,
நமக்கு மட்டும்
நீ அங்கு இருந்ததாகவும்
நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை
நம் மனதிரண்டும் –
சுமந்துக்கொண்டே திரியும்...
மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்
மோகினி என்பார்கள்
நம் பேச்சைக் கேட்டு -
அசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,
அந்தக் கால்தடங்களிலிருக்கும் நம்
மனதை மட்டும் யாருக்குமே தெரியாது..
--------------------------------------------------------------------

படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு' விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள் முருகபூபதி



இலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார்.
இலங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது.
அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன.
இந்தப்பதற்றம்,  நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும்,  பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை.
ஆனால், அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்த படைப்பாளிகளுக்கு வந்தது. அந்த பதற்றம்தான்  நாம் படித்த துன்பக்கேணியும், தூரத்துப்பச்சையும், மலைக்கொழுந்தும், நாட்டற்றவனும், வீடற்றவனும், ஒரு கூடைக்கொழுந்தும், ஒப்பாரிக்கோச்சியும், உழைக்கப்பிறந்தவர்களும், பாலாயியும் இன்னும் பல கதைகளும் நாவல்களும்.
அம்மக்களின் பதற்றம், எத்தனை படைப்பாளிகள் எழுதிக்குவித்தும் இன்னமும் ஓயவில்லை.
நடேசய்யரிலிருந்து, சி.வி.வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா, மல்லிகை சி. குமார், மலரன்பன், மு. சிவலிங்கம், மாத்தளை வடிவேலன்  உட்பட சில தலைமுறைகளின் வரிசையில், இலங்கை மலையக இலக்கியத்தின் நான்காவது தலைமுறைப்படைப்பாளியாக அறிமுகமாகி எழுதிக்கொண்டிருப்பவர்தான் சிவனு மனோஹரன். இவரது எழுத்திலும் அம்மக்களின் ஆன்மா பேசுகிறது. பதற்றம் தொனிக்கிறது.
ஈழத்து இலக்கிய உலகில்  சிவனு மனோஹரன்,  1990 களில் மலையகப்பக்கமிருந்து அறிமுகமானவர். ஏற்கனவே ' ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்' - 'கோடங்கி' ஆகிய தொகுப்புகளை வரவாக்கியிருப்பவர்.
" மலையகத் தமிழ் இலக்கியம், பாட்டாளி வர்க்கச் சிந்தனை மிகுந்த இலக்கியமாகும். அந்தச் சிந்தனையில் அனைவருமே நிலைப்பாடு கொண்டிருந்தபோது, சிவனு மனோஹரன் சற்று விலகி, அனைவருமே எழுத மறந்த... எழுதுவதற்கு அக்கறைப்படாத... சமூகவிழுமியங்களைப் பற்றி எழுத முன்வந்தவராகின்றார்." என்று மு. சிவலிங்கமும் -
" அண்மைக்காலமாக மலையக சிறுகதை போக்கில் காணப்படும் வரட்சிக்கு செழுமை சேர்க்கும் விதமாக இத்தொகுப்பின் வருகை மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. ஒரு வட்டத்தில் சுழன்று திரியும் மலையக இலக்கியத்தின் எல்லை தாண்டும் கட்டுடைப்புக்கும், அதன் செழுமைக்கும் சிவனு மனோஹரனின் இப்பயணம் தொடர வாழ்த்துவதோடு, ஒரு வாசகனாய் மிகுந்த நம்பிக்கையோடு இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று சுதர்ம மகாராஜனும்-
" சமூகம் பற்றிய பிரக்ஞையும் மானுடம் மேன்மையுறவேண்டும் என்ற உணர்வும் கொண்ட படைப்புக்களாக இவரது எழுத்துக்கள் மிளிர்கின்றன. இவை சமுதாய மாற்றத்துக்கு வேண்டிய வலிமையான இயக்க உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துகின்றன." என்று 'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரனும் இந்த நூல் பற்றிய தமது எண்ணப்பதிவுகளை  முன்வைக்கின்றனர்.
" ஒரு படைப்பாளன் சமூக அக்கறையும், அவதானமும் கொண்டு இயங்கும்போதுதான் மக்கள் இலக்கியங்களை படைக்க முடியும் என நம்புபவன் நான். ஏனெனில் தன் நமூகத்தை அக்கறையோடு, கூர்மையாக அவதானிக்கும் போதுதான் யதார்த்த பூர்வமான படைப்புகளை வெளிக்கொணர முடிகிறது என்பது உறுதி. இத்தொகுப்பில் வரும் கதை  மாந்தர்கள் அதியற்புதங்களை நிகழ்த்தும் சாகசக்காரர்களாய் இல்லை. சமூக யதார்த்தங்களை மீறிக்கொண்டு, புரட்சி நெருப்பை தன் தலையில் சுமப்பவர்களாகவும் இல்லை. மாயக்கண்ணாடியும், அரிதாரமும் பூசிக்கொண்டு சமூகத்தில் உலவித்திரியும் வேடதாரிகளும் இல்லை. தன் அரசியல் உரிமைகளை புரிந்துகொள்ளும் திராணியற்றவர்களாயும், வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகளை இதுவரையும் கண்டடையாதவர்களாயும் நெறி பிரழ்வின் காரணமாக தன் வன்மங்களை அத்துமீறி பிறர்மீது திணிப்பவர்களாயும் உள்ளனர். இத்தகைய தனிமனித உளநெருக்கீடுகளையும், அதன் சமூக விளைவுகளையுமே பேசுபொருளாக்கியிருக்கிறது இத்தொகுப்பு" என்று சிவனு மனோஹரன்  தன்னிலை விளக்கமும் தருகிறார்.

மௌனித்துவிட்ட கலகக்குரல் கவிஞர் ஏ. இக்பால் ( 1938 - 2017 ) நினைவுகள் கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி முருகபூபதி


           
நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள்,  பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த  கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
அதனால் இத்தகைய  படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள்.
அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள் சிலரை படைப்பாளியாக்கியிருக்கிறார்.
இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பரும் பத்திரிகையாளருமான தெய்வீகன் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார்.
அதனை பொருத்தம் கருதி இங்கு குறிப்பிடுகின்றேன்.
" As we look ahead into the 21st century, leaders will be those who empower others. "

 – Bill Gates, co-founder of Microsoft
 
21 ஆவது நூற்றாண்டை எதிர்நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில், சிறந்த ஆளுமை பண்பெனப்படுவது சிறந்த ஆளுமைகளை உருவாக்கும் வெற்றியிலேயே தங்கியிருக்கிறது

Bill Gates, co-founder of Microsoft

"  Before you are a leader, success is all about growing yourself. When you become a leader, success is all about growing others. "  – Jack Welch, former GE chairman and CEO.

" நீங்கள் சிறந்த ஆளுமை மிக்கவராக உருவாகுவதற்கு முன்னர் உங்களது வெற்றியெனப்படுவது உங்களை ஆளுமையை வளர்த்துக்கொள்வதிலேயே தங்கியிருக்கிறது. நீங்கள் சிறந்த ஆளுமை மிக்கவராக உருவான பின்னர், உங்கள் வெற்றியெனப்படுவது நீங்கள் எத்தனை ஆளுமை உள்ளவர்களை உருவாக்குகிறீர்கள் என்பதிலேயே தங்கியிருக்கிறது"  Jack Welch, former GE chairman and CEO
கிழக்கிலங்கையில்  அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில்  இக்பால் கல்வி கற்ற காலத்தில்,  அங்கு கடமையாற்றிய  ஆசிரியர்களான படைப்பாளிகள்  எம்.வை.எம். முஸ்லிம், மற்றும்  ..அப்துஸ்ஸம்மது ஆகியோரால் நன்கு இனங்காணப்பட்டு எழுத்துலகிற்கு அறிமுகப்படத்தப்பட்டவர்.  அங்கு "கலாவல்லி" என்ற கையெழுத்து இதழின் ஆசிரியராக இயங்கியிருக்கும் இக்பால், பிற்காலத்தில்  தென்னிலங்கையில் தர்கா நகர்  சாஹிராக்கல்லூரியில் ஆசிரியப்பணி ஏற்றதும் அங்கு படிப்பு வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி சில மாணவர்களை இனங்கண்டு எழுத்துலகத்திற்காக வளர்த்திருக்கிறார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், திக்குவல்லை கமால், தர்காநகர் ஸபா ஆகியோர்.
இந்தத்தகவல்களிலிருந்து  எம்மவர் மத்தியில் நடந்திருக்கும் இலக்கியத் தொடர் அஞ்சல் ஓட்டத்தை  அவதானிக்க முடியும்.
கிழக்கிலங்கை அக்கரைப்பற்றில் 1938 இல் பிறந்து தென்னிலங்கையில் தர்கா நகரில்  2017 இல் இறுதி மூச்சை விட்டவர்தான் கவிஞர் ஏ. இக்பால்.
எனது இனிய நண்பரும் ஆசிரியரும் கவிஞரும் ஆய்வாளரும் சமூகச்செயற்பாட்டாளரும் பன்முக ஆளுமைகள் கொண்டவருமான ஏ. இக்பால் அவர்கள் மறைந்தவுடன் கனடாவில் வதியும் நண்பர் கிரிதரன் நடத்தும் பதிவுகள் இணையத்தில் தரப்பட்டிருந்த தகவலில் அவரது பிறந்த ஆண்டு தவறாக பதிவாகியிருந்ததை கண்டவுடன் தாமதமின்றி  தொடர்புகொண்டு அதனை திருத்துமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதனைத்திருத்தினார்.
நாட்கள் கடந்த நிலையில் ஏ. இக்பால் அவர்களின் பிறந்த திகதி 11-02-1938 என்பதை நண்பர் மேமன்கவி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் (109 ஆவது இதழ்- ஐப்பசி 2017) பதிவுசெய்துள்ள அஞ்சலிக்குறிப்பில் காணமுடிகிறது. எனினும் ஏ. இக்பால் . 1953.12.11 ஆம் திகதிதான் பிறந்தவர் என்ற தவறான தகவல்தான்  நூலகம் இணையத்தில் தற்போதும் இருக்கிறது.

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! பகுதி 2


 .
   இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்.

 

பகுதி 2




தட்சணாமூர்த்தி அவர்களின் இளமைக்காலமும் தவில் உலகப் பிரவேசமும்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரைää  இசை வேளாளர்கள்ää அண்ணாவிமார், நடிகர்கள், பிற கலைஞர்கள் ஆகியோரையும்ää இணுவை மக்களையும் நெறிப்படுத்தியவர்களான,
சின்னத்தம்பிப்புலவர் - இவரது புலமை பற்றி அறிஞர் மு. வரதராசனார் தனது இலக்கிய வரலாற்றிற் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ நடராசஐயர்- இவர் ஆறுமுகநாவலரின் பிரதம சீடர். காசிவாசி செந்திநாதையர் உட்படப் பலர் இவரிடம் பாடம் கேட்டுள்ளனர்.
அம்பிகைபாகப்புலவர்- இவருக்கும் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கும் மிகுந்த நட்புண்டு, “இவரிடத்து யாம் தணிகைப் புராணத்துக்குப் பொருள் கேட்டு அறிந்துள்ளோம்” எனப் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் ஈழநாட்டுத் தமிழப் புலவர் சரித்திரத்திற் குறிப்பிடுகின்றார்.


வைகுண்ட ஏகாதசி - 29/12/2017






உலகச் செய்திகள்


அமெரிக்க ரயில் விபத்து ; மூவர் பலி, பலர் காயம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கனிமொழி விடுதலை!!!

ஜெருசலேமை தலைநகராக்கும் அமெரிக்காவின் தீர்மானம் தோல்வி

பிலிப்பைன்ஸில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் பலி

ஐ.நா. விசா­ரணை அதி­காரி மியன்­ம­ாருக்குள் நுழையத் தடை


அமெரிக்க ரயில் விபத்து ; மூவர் பலி, பலர் காயம்

19/12/2017 அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.



இலங்கைச் செய்திகள்


மலேசியா - இலங்கைக்கிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இணக்கம்

விசேட அதிரடிப் படையினரால் சக்திவாய்ந்த 18 கைக்குண்டுகள் மீட்பு

பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை மீட்பு.!

சிங்­கப்பூர் பிர­தமர் இலங்கை விஜயம்

விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய நீதிமன்றம் அனுமதி




மலேசியா - இலங்கைக்கிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இணக்கம்

18/12/2017 மலேசியா - இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், இலங்கையில் முதலீட்டை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை அமைக்கவும் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா

அருவி

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பணம், பிஸினஸ் தாண்டி கலைக்காக படம் எடுப்பவர்கள். அப்படி தொடர்ந்து ஜோக்கர், தீரன் என தரமான படத்தை கொடுத்து வரும் Dream Warriors நிறுவனத்தின் அடுத்த படைப்பு தான் இந்த அருவி, அருவியும் தரமான படமாக வந்துள்ளதா? பார்ப்போம்.

அருவி திரை விமர்சனம்கதைக்களம்

அருவி முதல் காட்சியிலேயே தீவிரவாதி என்று விசாரணை நடத்தப்படுகின்றாள். அதை தொடர்ந்து ஒவ்வொருத்தரும் அருவி யார் என்று சொல்ல ஆரம்பிக்க அப்படியே கதை தொடங்குகின்றது.
அருவி சிறு வயதிலிருந்தே சுதந்திரமாக வளரும் ஒரு பெண், அப்பா கொடுத்த முழு சுதந்திரத்தோடு வளரும் அவளுக்கு மிகப்பெரும் ஒரு துன்பம் வர, வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகின்றது.
அதன் பிறகு இந்த சமூகத்தின் மீதுள்ள கோபம், தான் வாழ்க்கையில் சந்தித்த சோகம் என்று அனைத்தையும் சொல்ல ஒரு தொலைக்காட்சிக்கு வர அங்கு பல அதிர்ச்சிகரமான தகவலை அருவி சொல்ல, அதை தொடர்ந்து நடக்கும் பரபரப்பான சுவாரஸ்யமான, உணர்வுப்பூர்வமான காட்சிகளே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அருவி யாருடா இந்த பெண்? என்று ஒவ்வொருவரையும் புருவம் உயர்த்த வைக்கின்றார். முதல் படம் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள், அதிதி பாலன் தமிழ் சினிமாவிற்கு ரெட் கார்பெட் போட்டு வரவேற்கலாம். அதிலும் இந்த உலகத்தில் வாழ பணம் மட்டும் தான் தேவை என்று பேசும் காட்சிகள் விஜய், அஜித் படத்திற்கு சமமாக கைத்தட்டல் பறக்கின்றது. தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்தே படம் சுற்றி வருகின்றது. நம் கண்களுக்கு தெரியாத பல உண்மைகளை இயக்குனர் அருண் பிரபு உடைத்து வெளியே கொண்டு வந்துள்ளார். அதிலும், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோரை பற்றி காட்டியுள்ளார்கள் பாருங்கள், திரையரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்கின்றது. அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ எந்த நிகழ்ச்சி என்பதை நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.
படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் என்றாலும் வெறுமென புரட்சி மட்டும் பேசாமல் அதை காட்சிகளாக அருண் எடுத்த விதம் சபாஷ். அதிலும் இரண்டாம் பாதியில் அனைத்து ஆண்களையும் அழ வைத்து அருவி சிரிக்கும் காட்சி செம்ம கிளாஸ்.
படத்தின் வசனம் குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும், படம் முழுவதும் அருவிக்கு உதவியாக ஒரு திருநங்கை வருகின்றார். அவரும் மிகவும் யதார்த்தமான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் ‘உலக அழகி போனால் கூட பார்க்காதவர்கள், ஏன் அரவாணி சென்றால் இப்படி பார்க்கின்றார்கள்’ என கேட்கும் காட்சி இன்றைய சமுதாயத்திற்கு சவுக்கடி.
இசை ஆரம்பத்தில் பாடல்களாகவே தான் பல காட்சிகள் வருகின்றது, ஆனால், எந்த இடத்திலும் அலுப்பு தட்டவில்லை, Shelley Calist ஒளிப்பதிவு ஏதோ நாமே அந்த இடத்தில் இருப்பது போல் அத்தனை லைவ்வாக படம் பிடித்துள்ளார்.

க்ளாப்ஸ்

படத்தின் கதை மற்றும் அதை அழகாக கொண்டு சென்ற திரைக்கதை.
அருவி மற்றும் படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் ரசிக்க வைக்கின்றது.
படத்தின் பல காட்சிகள் அதிலும் ஒரு பணியார கிழவி கதை சொல்வார், அதை சொல்லும் விதம் என மிக உணர்ச்சிகரமாக உள்ளது.

பல்ப்ஸ்

சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.
மொத்தத்தில் அருவி தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்.

நன்றி  CineUlagam