கரையாத நினைவு - - Nilaa Nilavan -



.

1987 இல்
நரபலி வேட்கையில்
இரணகணமானது படுவான்கரை.

துப்பாக்கி கத்தி ஓய்ந்த
சில நிமிடங்களில்
கொக்கட்டி மரத்தில்
குருதி வடிந்த அதே மண்ணில்
மீண்டும் குருதி கொப்பளித்தது.
சூரியன் நிறத்தது.
நிலவு நிர்வாணமாய் நின்று அழுதது.
மனிதம்; மகிழடித்தீவுச் சந்தியில்
கேவலமாய் மடிந்தது.
அன்று பல்லிகளைக்கொன்று
பசி தீர்த்த
அரக்கர்களின் உரையாடலில்
சிதறிய சிரிப்பொலிகளால்
அரசனின் மரக்கீழிருந்த புனித சிலை கல்லாகியது.
அதிலிருந்த உபதேச ஞான நூல்கள் மூத்திரத்தால் மாசுபட்டன.
பாவம்!!!
புனருஸ்தானம் செய்து
புனிதமூட்ட ஒருவர்கூட இல்லாமல்
புனிதர்கள் யாவரும் தற்கொலை செய்துகொண்டனர் அன்று.
அப்படியாகி இன்றுடன்
கண்ணீரால் இருபத்தாறாண்டுகள் கரைந்தன
கொக்கட்டிச்சோலைப்படுகொலை.

Nantri:seithy.com

சிந்தனைகளும் செயல்களும் - தவமணி தவராஜா.

.


மனிதர்களாய்ப் பிறந்த நம் ஒவ்வொருவருக்குள்ளும்,  நம் சிந்தையில் தொலைக்காட்சிச் செய்தியில் ஓடிக்கொண்டிருக்கும் செய்திச்சரம் போல்,  எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும். நாம் ஆழ்ந்து உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களெல்லாம் சிந்தனைச் சூழலில் சிக்தித் தவித்துக் கொண்டுதானிருக்கிறோம். நம் சிந்தனைகளும் பல்வேறுபட்ட தரங்களைக் கொண்டதாகவே இருக்கும்.

அவைகளில் பிறர் நலம்பேணும் நல்ல ஆன்மீகச் சிந்தனையாளர்களின் ஆன்மீகச் சிந்தனைகளும்,  பிறர் நலனுக்காகவே உழைக்கும் அறிவியலாளர்களின் அறிவியல் சிந்தனைகளும் மிக உயரிய சிந்தனைகள் என்பது என் எண்ணம். பக்திபபரவசம் என்பதை பார்க்க வேண்டுமானால் “ஸ்ரீராமகிருஷ்ண பரமவறம்சரைப்” பார்க்க வேண்டும் என்று ஒரு வெள்ளைக்காரரே எழுதியுள்ளார். புறப் பூசைகளும் போலித்தனமான சம்பிரதாயங்களையும் விடுத்து அகத்தில் ஆழமான பக்தியினால் இறைவனைத் தரிசிக்க முயலவேண்டுமென்பது அவர் கொள்கை.  நாமும் சிறிதாவது முயலலாமே!

விஸ்வருபம் தரும் புதிய திரை அனுபவம்

.

விஸ்வரூபம் திரைபடம் பார்த்து முடிந்தவுடன் முடிவு சப்பென்று இருந்தது .ஏதும் பெரிய திருப்பமின்றி  தொடரும் என்று சின்னதிரை சீரியலில் முடிவில் இருந்த மாதிரிஇருந்தது . இதையும் மீறி இந்த திரைபடத்தை தமிழகத்தில் உண்மையில் தடை செய்வதற்க்கு இதில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லேயே என்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு வெளியில் வந்த பொழுது  அவர் சொன்னார் ..உதிலை பெரிய அரசியல்  இருக்கு உங்களுக்கு விளங்கவில்லை ...விளங்கிறதுக்கு கொஞ்சம் ஞானம் வேண்டுமென்றார். ஞானத்துக்கு நான் எங்கை போறது  எனக்கு உந்த ஞானம் அடைந்தவர்கள் பலரை தெரியும் அவர்களின் இன்றைய நிலைப்பாடும் தெரியும் என்று  சொல்ல வாய் உதறியது ,தேவையில்லாமால் உவருடன்  மல்லு கட்டுவான் என்று என் பாட்டில் என் பாதையில் நடந்தேன்
நேரம் கிட்ட தட்ட முன்னிரவில் ஒரு மணியாகி இருந்தது .லண்டன் தூக்கத்துக்கு போயிருந்தது ..இன்னும் கொஞ்சம் நேரத்தில் எழும்பி பழைய மாதிரி வீறு கொண்டு எழுந்து விடும் .தெரு வெறிச்சோடி கிடந்தது.இந்த நேரத்தில் உலாவிறது கவனம் என்று ஒரு நண்பன் சொன்னது ஞாபகம் வர ...இந்த படத்தில் கமலகாசன் திருக்குர்ஆன் ஓதி விட்டு சண்டையிடும் முதல் சண்டைக் காட்சி நினைவில் வர .திரைக்குள் எங்களை பார்த்து திரைக்குள் வெளிய அதை வெளியில் கொண்டு வர அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை முயற்சி செய்த நாங்கள் இதற்கு எல்லாம் பயப்படலாமா அதே மாதிரி அடிபட வேண்டியதானே என்று  என்னோடையே நான் நகைத்து கொண்டேன்
.அந்த சண்டை காட்சி எடுத்த விதம் அற்புதமாக இருந்தது .தியேட்டரே ஒருமித்து கூவி ஆர்பர்த்தரித்த்து.எத்தனை திரைபடத்தில் எத்தனை சண்டை காட்சிகள் பார்த்திருப்போம். ஆனால் ஏதோ  வித்தியாசமாக இருந்த்து தொழில் நுட்பத்தின் புதிய பரிமாணத்தை கண்டு வியக்க வைத்தது.தமிழில் அறிமுகபடுத்துகின்ற கமலுக்கு நன்றியாக சொல்லியாக வேண்டும் .இப்படி நான் பிரமிக்கும்  பொழுது சிலர் சொல்ல வருவார்கள் ..பேமாரி ...ஹாலிவூட் படங்களிலும் இதை மாதிரி எத்தனையோ படங்களில் நாம் எல்லாம் பார்த்து இருக்கிறோம் இது எல்லாம் பெரிய விசயமில்லை என்று .நாகேஸ் ஒரு படத்தில் கெளவரமாக  இங்கிலீஸ் படம் ஒன்லி தான் பார்ப்போம் என்று சொல்லுற மாதிரி .நாங்கள் தமிழ் படம் ஒன்லி  தான் பார்ப்போம் .அதாலை இது வரை  வந்த தமிழ் படங்களில் விஸ்வரூபம் அதி சிறந்த தொழில் நுட்பத்துடன்  காட்சிகளை அமைந்து இருக்குது என்றால் நான் சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன்

விம்ரெக் வழங்கும் சந்தானம் நைற் மதுரகீதம் 2013

.



இலங்கைச் செய்திகள்

.
பயங்கரவாதி என்ற சொல்லுக்கு புதிய வரவிலக்கணம் வரைந்தது ஸ்ரீலங்கா அரசு! 

சர்வதேச சட்டங்களை மீறும் செயல் : ஐக்கிய நாடுகள் சபை

இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்கு வீட்டுத்திட்டம்

குடாநாட்டில் குரலை அடக்கும் முயற்சி

மதக் காழ்ப்புணர்வை போஷிக்கக்கூடாது


பயங்கரவாதி என்ற சொல்லுக்கு புதிய வரவிலக்கணம் வரைந்தது ஸ்ரீலங்கா அரசு!

News Service
பயங்கரவாதி என்ற சொல்லுக்கு புதிய வரைவிலக்கணம் ஒன்றை அரசாங்கம் அளித்துள்ளது. பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்த போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த புதிய விளக்கத்தை அளித்துள்ளார். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடல், பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்குபெறல், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், வழிநாடாத்தல், பொதுவான பயங்கரவாத நோக்கங்களுக்காக குழுவாக இணைந்து செயற்படல், தெரிந்தே பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்களைப் பேணுதல் போன்றன பயங்கரவாதமாகக் கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல் விடுத்தல், மதக் கடும் போக்கு, அரசாங்கத்திற்கு எதிராக மக்களை திசை திருப்பல், அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதத்தை தூண்டுதல், மத, அரசியல் லாபங்களுக்காக மக்களை திசை திருப்பல் போன்ற செயற்பாடுகளை பயங்கரவாதச் சட்டமாக கருதப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதச் சட்டத்தில் சில விளக்கங்கள் பொருத்தமற்றவை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. சில விளக்கங்களின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட 


Nantri:seithy.com

மண்டலின் வாத்திய இன் இசைக் கச்சேரி - செல்வன் கிஷா ன் ஜெயேந்திரன் - 17/02/2012 4.30pm





சார்ல்ஸ் டார்வின் நினைவு தினம் 12.02.2013

.
டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள்இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி  எனுமிடத்தில் பிறந்தார் 
இயற்கைத் தேர்வு மூலம் கூர்ப்புக் கொள்கையை வெளியிட்டு மனிதனுக்கு உணர்த்தப்பட்ட உயிரிகளின் அடிச்சுவடுகளுக்கு காரணம் கற்பித்த அறிஞர் சார்ல்ஸ் றொபேட் டார்வின்அவர்கள் பிறந்த இந்நாளை சார்ல்ஸ் டார்வின் தினம் அல்லது டார்வின் தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது.
அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒருமருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார்.சிறு வயது முதற் கொண்டே விலங்குகள்  புழுபூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
இவர் கடல் வழியேஇ எச்எம்எஸ் பீகிள்  என்னும் கப்பலில்  உலகில் பல இடங்களுக்கும் சென்றுஇ குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள்  அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும்இ இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை
இவரே மனிதன்இ குரங்கிலிருந்து பரிணமித்தவன்  உலகில் விலங்குகள் மற்றும்உயிரினங்களில் வளர்ச்சி என்பது  'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது அதாவது வலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு -53 தேனும் தினைமாவும்


ஞானா:        அப்பா இந்த யாழ்ப்பாணத்து சைவமக்கள் கந்தபுராணக் கலாசாரம் உடையவை எண்டு                ஏன் அப்பா சொல்லிறவை?   
                  
அப்பா:        என்ன ஞானா நீ இப்ப திருக்குறள் படிக்கிறதை விட்டிட்டுக் கந்ததபுராணம் படிக்கப் போறியே?

ஞானா:        இல்லை அப்பா….என்ரை சிநேகிதியின்ரை அம்மா முருகன் கோயிலிலை மாவிளக்குப் போடத்            தினைமா எங்கை வாங்கலாம் எண்டு தேடிறாவாம். எனக்குத் தினைமா வாங்கக்கூடிய இடம்             தெரியுமோ எண்டு கேட்டாள். நான் சொன்னன்,  நான் தினையைக் கண்டதும் இல்லை,                மாவிளக்கைப் பற்றிக் கேள்விப்பட்டதும் இல்லை எண்டு……

அப்பா:        உடனை உன்ரை சிநேகிதி….இது தெரியாதோ உனக்கு,  இது கந்புராணக் கலாசாரம். எங்கடை            ஆக்கள் யாழ்ப்பாணத்திலை முருகன் கேயில்களிலை,  தினை மாவிலை சிட்டி பிடிச்சு அதிலை             நெய்விட்டு விளக்கேற்றிறவை எண்டு செல்லி உன்னை மட்டந்தட்டியிருப்பாள்.


ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 1 - மதி

.
photos by Raj
ஆழ்வார்கள் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் எமது ஆச்சாரியார் ஸ்ரீசச்சிதானந்த சாயி அவர்கள் பக்திப் பரவசத்தில் ஊறித்திளைத்த ஆழ்வார்களின் பாசுரங்களை விளக்கியும் பாடியும் 2013 ம் ஆண்டுத் தொடக்கமே ஜனவரி  5ம் 6ந் திகதிகளில் ஏர்மிங்ரன் சமூக மண்டபத்தில் (Ermington Communtiy Hall) தொடக்கி வைத்தார். ஆழ்வார்கள் என்றாலே ஆழ்ந்து உணர்ந்து பரவசப்பட்டவர்கள் என்பது பொருள். இறைவனுடன் உள்ள தொடர்பு தெவிட்டாத ஆனந்தமாய் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும். ‘ஆராவமுதே’ இப்பதம் பலருக்கும் பழக்கப்பட்டது. “ஆராவமுதே அளவிலாப் பெம்மானே, ஓராதருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே”. “அன்பினில் வினைந்த ஆரமுதே”, இறைவனை பக்தி பரவசத்தில் பாடியவை இவை. உலகில் எந்த பொருளாயினும் முதலில் இன்பம் தருவது போலிருந்தாலும் நேரஞ் செல்ல செல்ல, காலம் போகப்போக துன்பம் விளைவிப்பவையாக முடியும். “ஆரவமுதே...” எனத் தொடங்கும் திருவாய் மொழி பாசுரத்தை பாடக்கேட்டார் ஆயிரத்துள் பத்தும் என்று பாடக்கேட்ட ஆராஅமுதில் திளைத்த நாதமுனிகள் ‘அப்படியானால் மிகுதிப் பாடல்களும் உங்கட்குத் தெரியுமா’ என்று அதன் தன்மை, பெருமைகளால் கவரப்பட்டு ஆவலோடு கேட்டார். தமக்கு அப்பத்தும்தான் தெரியும் மிகுதி 990ம் தெரியவில்லை என்றனர். உடனே நாதமுனிகள் ஆயிரம் பாசுரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தில் கும்பகோணம் சென்றார். அங்குள்ளவர்களுக்கும் தெரியவில்லை. அங்கிருந்து திருக்குரு கூருக்கு சென்ற பொழுது மதுரகவியாழ்வாரின் வம்சத்து ஒருவரான பராங்குசதாசரைக் கேட்ட பொழுது தனக்கும் அப்பத்தும்தான் தெரியுமென்றார். ஆனால் இந்தப் பத்துப் பாசுரங்களையும் பன்னீராயிரம் தடவை சொன்னால் உடனே நம்மாழ்வார் காட்சியளிப்பார் என்று முன்னோர்கள் சொல்வார்கள் என்றார்.

புதிய தலைமுறை...(சிறுகதை)


.
நான் குடியிருக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த நண்பர்கள் கதைத்தது கட்டிலில் படுத்திருந்த எனது காதில் விழுந்தது. ஜயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு எப்பொழுதும் ஜோசப்பினதும் சுமதியினதும் நினைவுதான் வரும்.ஜோசப்பினது திருமணத்தின்போது என்னைச் சோகமாகப் பார்த்த அவனது பார்வை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.சுமதியைப் பற்றிய கவலை இன்றுவரைக்கும் என் மனதில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.எங்கு போகப் போகிறார்கள் பக்கத்து வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக சந்திக்கும்போது விசாரிப்போம் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.அடுத்த நாள் மாலை நான் வேலை முடித்து வந்துகொண்டிருந்தேன்.எங்களது வீடு மூன்றாவது தளத்தில் உள்ளது. லிப்ற் இருந்தாலும் உடம்ப்பிற்க்கு நல்லதென்று நான் படியால் ஏறிச்செல்வதுதான் வழக்கம்.அன்று சற்றுக் களைப்பாக இருந்ததால் லிப்ற்றில் ஏறினேன்.மூன்றாவது தளத்திற்க்கு வந்து லிப்ற் கதவு திறந்து கொண்டபோது என் கண்களையே நம்ப முடியாதபடி வெளியே சுமதி நின்று கொண்டிருந்தாள்.என்னைக்கண்டதும் அவளும் தடுமாறிப்போனால்.கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள்.ஆனாலும் அதே இளமைக்கால அழகின் கோடுகள் அப்படியே இருந்தன அவள் முகத்தில்.படிக்கும் காலம் வரைக்கும் எதுவுமே மாறாததுபோல் அப்படியே இருப்பதாகத் தோன்றும் உலகமும் உறவுகளும் நண்பர்களும் அதன் பின்னர் ஏற்படும் பிரிவுகளின் பின் சந்திக்கும்போதுதான் அவை எல்லாவற்றையும் ஒரு கனவுபோல் இழந்துவிட்டிருப்பதை நினைவுபடுத்துகின்றன.மனிதர்களையும் இழுத்துக்கொண்டுசெல்லும் தன் பயணத்தில் காலம் எவ்வளவு மாற்றங்களை மனித உடம்பிலும் உள்ளத்திலும் நிகழ்த்திவிடுகிறது.சுமதியைக் கண்டவுடன் பல நினைவுகள் மனதில் எழுந்து என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன.எவ்வளவு காலத்திற்க்குப் பின்னர் சந்திக்கிறோம்.எங்கள் மூவராலும் மறக்கக்கூடிய நினைவுகளா அவை.

***

உலக புகைப்பட போட்டியில் மட்டக்களப்பு மாணவனது புகைப்படம் தெரிவு



News Service
உலக வங்கியினால் நடத்தப்பட்ட உலக புகைப்பட போட்டியில் தென்னாசிய பிரிவில் மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அனுப்பி வைத்த புகைப்படம் தென்னாசிய பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரு படங்களில் ஒன்றாகும். உலக அளவில் 6பிரிவுகளா இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் தென்னாசிய பிரிவிலேயே இம்மாணவன் அனுப்பி வைத்த புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக வீதி ஓரத்தில் தேங்காய் விற்கும் சிறுவன் ஒருவனை படம் பிடித்து அனுப்பிவைக்கப்பட்டபோது அப்படம் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் முதன் முறையாக ஊடகத்துக்கு பேட்டியளித்த மலாலா!

ரஷ்யாவில் கடும் பனிப் பொழிவு!

மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த சவுதி நாட்டு மதபோதகர்: குருதிப் பணம் செலுத்தி விடுதலை!


துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் முதன் முறையாக ஊடகத்துக்கு பேட்டியளித்த மலாலா!

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு பின்னர்  லண்டனில் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று  குணமாகிவரும் மலாலா முதன் முறையாக ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
பெண் கல்வியை ஊக்குவித்த மலாலாவை தலிபான்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
மலாலாவுக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க பிரிட்டன் அரசு முன்வந்ததையடுத்து லண்டனில் உள்ள ராணி எலிசபத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி உத்தரவிட்டார்.
தற்போது, லண்டனில் உள்ள 'வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்' என்ற இடத்தில் வசித்து வரும் 15 வயதான மலாலாவின் பெயர் உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

காவி நிறக்காதல் கொடிமர வேர்களில் --வைரமுத்து


.

மீண்டும் காதல் என்ற சங்கீதத்தில் சில சுருதிகளை மீட்டுப்பார்க்க வேண்டும் என்ற உணர்வு. வாழ்க்கையை வாசித்த யாசித்த பண்பாட்டு மாற்றங்களை தன்பாட்டுக்குள் கொண்டுவந்த அந்த சாமி. காதலை மறப்பதற்காக ஒரு கோழைத்தனமாய் தன் காதலி பிரிகிறாள் என்ற எண்ணத்தில் காவியுடுத்திய காதலன் அந்த சாமி.
தன் கண்முன்னமே தன் காதலி யாருக்கோ மனைவியாகிவிடுவாள் என்று எண்ணி தாங்கொணா துயரம்தலையில் அழுத்த சாமி தேடி சாமியாகிறான். ஆனால் அங்கே யாரை மறக்கவேண்டும் மனதில் பதிந்த அந்த முகத்தை அழிக்க அழிக்கவேண்டும் என்று எண்ணி காவியுடை தரித்தானோ அதே அவளைத் தவிர அவள் முகத்தைத் தவிர அவன் பிரார்த்தனையும் மறக்க முடியாத தன்மையும் நின்று அவனை உலுக்கி எடுத்தது. முடியாமல் மீண்டும் மலையிலிருந்து காட்டிலிருந்து அந்த காவி இறங்குகிறது. கொடுமை என்னவென்றால் அதே உடையில் சில சில்லிடும் சிலிர்ப்புக்கு அந்த பழைய நினைவுகள் மட்டும் நிலைத்து நிற்க அந்த பழைய இடமும் புளிக்காத காதல் என்ற உணர்வும் மட்டும் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் 18 வருசங்கள் கடந்த பின்னும் இன்னும்.......

பாவம் காதல் காதலிக்கவிடவில்லை இல்லை காதலித்த காதல் வாழவைக்கவில்லை அந்த சாமியை. பச்சைக் காடுகளில் பச்சையானவர் இங்கு பழைய இச்சைக்கான காதலை கச்சையில்(காவியில்) தேக்கிக்கொண்டு அலையலையாய் புதிய மாற்றங்களையும் ஒவ்வொரு நிகழ்கால நிகழ்வுகளையும் கடந்தகால அவரது நிஜங்களையும் ஒப்பிட்டு காதலிக்கிறார் இப்போதும் அந்த பழங்காதலை.

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா


.

பக்தி மொழியெனத் தமிழை இனங்காட்டிய தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை உலகம் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அடிகளாரின் பிறந்த மண்ணில் இவ்விழாவை யாழ். மறை மாவட்டமும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் இணைந்து முன்னெடுப்பதெனத்“ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' எனப் பாரதி கண்ட கனவை நனவாக்கியவர் தனிநாயகம் அடிகள். தமிழியல் சார்ந்த பற்றுணர்வை நம்மவர் மத்தியில் விதைப்பதற்கு இவ் விழா வகைசெய்யும் என நம்பப்படுகின்றது. இதற்கேற்ற வகையில் திருமூலர் திருமந்திர வாக்கில் இருந்து உள்வாங்கப்பட்ட "நன்றாகத் தமிழ் செய்வோம்' என்ற தொனிப் பொருளில் நூற்றாண்டு விழாவை முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை அடிகளாருக்கு கல்வி வழங்கிய புனித பத்திரிசியார் கல்லூரியில் தமிழ்ச் சங்கத் தலைவரும் விழாக்குழுவின் தலைவருமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தித் தொடக்கிவைப்பார். இதனைத் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளைப் பாடசாலைச் சமூகத்தினரும் தமிழார்வலர்களும் முன்னெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய முன்னெடுப்புக்களுக்கு நூற்றாண்டு விழாக் குழுவினர்உறுதுணை வழங்குவர்.

கார்த்திகை முன்னிரவு -2012 - - நிலாந்தன்-


.

கார்த்திகை முன்னிரவு -2012 - நிலாந்தன்
மழைக் குருவியின்
குளிர்ந்த பாரமற்ற குரல்
வீரர்களைப் புதைத்த காட்டில்
சலித்தலைகிறது.

ஈமத்தாழியுட்   
கார்த்திகை நிலவு       
ஒளியூறிக்கிடக்கிறது.

வழிபாடில்லை
வணக்கப்பாடலும் இல்லை

நாயகர் இல்லை
பேருரை இல்லை

நனைந்த காற்றில்
உருகிக் கரையும்     
தீச்சுடர் வாசமும் இல்லை.

பெயர்க்கப்பட்டது நடுகல்
துயிலாதலைகிறது
பெருங்கனவு.

இரும்பு வணிகர்
உலவும் காட்டில்       
பூத்திருக்கிறது
கார்த்திகைப்பூ.


/நிலாந்தன்     கார்த்திகை -2012 

தமிழ் சினிமா

பட விமர்சனம் டேவிட்

Davidவிக்ரம், ஜீவா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் "டேவிட்" திரைப்படமும் "நீர்ப்பறவை", "கடல்" படங்களைப்போன்று கிறிஸ்தவ பிரச்சார படமாகவே காட்சியளிக்கிறது. என்ன முன் இரண்டு படங்களும் கடற்கரையோர கிறிஸ்தவ கிராமத்து கதையை உள்ளடக்கி வெளிவந்தன. இது (டேவிட்) நகரத்து கிறிஸ்தவம் பேசும்படமாக வெளிவந்திருக்கிறது!
2010ம் ஆண்டில் கோவா கடற்கரையில் சதா சர்வகாலமும் குடியும் கும்மாளமுமாக வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின் காதல் கலாட்‌டாக்களும், 1999ம் ஆண்டில் மும்பையில் கிறிஸ்தவ பாதிரியார் நாசரின் மகனாக கிடாரிஸ்ட்டாக டேவிட் ‌எனும் ஜீவா பண்ணும் சேட்டைகளும், படும்வேதனைகளும் தான் "டேவிட்" படம் மொத்தமும்! அந்த டேவிட்டுக்கும், இந்த டேவிட்டுக்கும் க்ளைமாக்ஸில் ஏற்படும் ரிலேஷன்ஷிப் தான் டேவிட் படத்தின் டுவிஸ்ட், ஹைலைட், இத்யாதி, இத்யாதி... ‌என எண்ணிக்கொண்டு மொத்தப்படத்தையும் இயக்கி இருக்கிறார் படத்தின் திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான பிஜேய் நம்பியார். இருவேறு டேவிட்டுகளின் வாழ்க்கையை இருவேறு கோணத்திலிருந்தும் ஒரு நாவல் மாதிரி சொல்ல வேண்டிய இயக்குனர், பல இடங்களில் அதை நழுவலாக சொல்லி ரசிகர்களை போரடித்திருப்பது தான் "டேவிட்" படத்தின் பலவீனம்!
படத்தின் ஒரு டேவிட் விக்ரம், என்னதான் கோவாவின் சீதோஷண நிலைக்கு மது சரிபட்டு வருமென்றாலும், விதவிதமான பாட்டில்களில் ரகம் ரகமான மது வகைகளை ராவா சாப்பிடுவது, அதுவும் உடம்பில் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒளித்து வைத்து சாப்பிடுவது கொஞ்சம் அல்ல நிறையவே ஓவராகத் தெரிகிறது! "காசி, "தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களின் கதைகளை ஓப்புக் கொண்டு நடித்த விக்ரமா இந்த டேவிட் கதையையும், அதுவும் நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை டாவடிக்கும் கேரக்டரை கேட்டு நடித்தார்...?! என கேட்கத் தோன்றுகிறது. முந்தைய படங்களை காட்டிலும் இளமையாகத் தெரியும் விக்ரம் ‌ஒரே ஆறுத‌ல்!
மற்றொரு டேவிட்டாக மும்பை இளைஞராக கையில் கிட்டாரும், தலையில் வித்தியாசமான சடை பின்னலுமாக வரும் ஜீவா, பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். பாதிரியார் அப்பா நாசருடன் மல்லுக்கு நிற்பதிலும் சரி, அவரை மதவாதி என மானபங்கபடுத்திய அரசியல் பிரமுகர்களுடன் மல்லுகட்டுவதிலும் சரி ஜீவா வித்தியாசமாக நடித்து படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். தன் லட்சியங்கள், கனவுகள் முரட்டுதனம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு க்ளைமாக்ஸில் ஜீவா தன் அப்பா நாசர் மாதிரியே பாதிரியார் ஆகிவிடுவது செம ட்விஸ்ட், அதேநேரம் என்னதான் மும்பை இளைஞர் என்றாலும் ‌ஏர்ஹோஸ்டஸ் சிஸ்டருடன் சேர்ந்து திருட்டு தம் அடிப்பது, அந்த சிஸ்டரும், ஜீவாவுக்கு அக்காவா..? சொக்காவா...? என்பது புரியாமல் தெரியாமல் ஒருவித போதை பர்ஸ்னாலிட்டியுடனேயே சுற்றி வருவது உள்ளிட்டவைகளை இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
ஜீவாவின் அப்பாவாக பாதிரியராக வரும் நாசர், விக்ரமின் நண்பர் பீட்டர், விக்ரமின் வித்தியாசமான தோழி தபு, விக்ரமின் ஒருதலைக்காதலி ரொமாவாக வரும் இஷா சர்வானி, பெண் அரசியல் தலைவராக வரும் ரோகிணி உள்ளிட்டவர்களும் விக்ரம், ஜீவா மாதிரியே படத்திற்காக பெரிதும் உழைத்திருக்கின்றனர். ஒன்றாகவே நடித்திருக்கின்றனர்.
அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என அரை டஜன் இசையமைப்பாளர்கள் தனித்தனி ட்யூனில் இசையமைத்திருப்பது டேவிட் படத்தை ஏதோ துண்டு துண்டு விளம்பர படங்களை சேர்த்து பார்த்த திருப்தியையே தருகிறது. ரத்னவேலு, பி.எஸ்.வினோத் இருவரது ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்.!
விக்ரம், ஜீவா என இரண்டு பெரும் ஹீரோக்கள் கிடைத்தும், இயக்குநர் பிஜாய் நம்பியார் தரமான தமிழ்படம் எடுக்க முன்வராதது வருத்தம்!
ஆகமொத்தத்தில், "டேவிட்" திரைப்படத்தை அந்த இருபெரும் நடிகர்களின் ரசிகர்களும் டூவிட்டு விடாமல் பார்த்தால் சரி! "டேவிட்  டவுட்!!"
 நன்றி தினக்குரல்