அப்பாக்கள் வாழ்வினிலே ஆண்டவனே ஆவார் !


மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா



 பெற்றிடுவாள் அன்னை பெருதுவப்பார் அப்பா

 உற்ற துணையாகி உழைத்திடுவார் அப்பா 
 கற்பனைகள் நிறைத்து கனவுகாண்பார் அப்பா
 காலமெலாம் எம்மைச் சுமந்திடுவார் அப்பா 

கைபிடுத்து எம்மைக் குருசேர்ப்பார் அப்பா
கற்பவற்றை கற்க கையணைப்பார் அப்பா
கல்வியென்னும் பயிரில் களையெடுப்பார் அப்பா
கற்றவரின் அவையில் அமருவென்பார் அப்பா

வளர்ச்சியினைக் கண்டு மனமகிழ்வார் அப்பா
தளர்ச்சியினைக் கண்டால் தாங்கிடுவார் அப்பா 
விளைச்சலினை நோக்கி அழைத்திடுவார் அப்பா
விகற்பநிலை வந்தால் விலக்கிடுவார் அப்பா

பொய்யென்னும் கருவைப் பொசிக்கிடுவார் அப்பா
பொறாமையெனும் நினைப்பைப் போக்கிடுவார் அப்பா
மெய்யென்னும் கருவை விதைத்திடுவார் அப்பா
மேதினியில் வாழ்வின் விளக்காவார் அப்பா  

நல்லநட்பை நாளும் நாடச்செய்வார் அப்பா
நல்லறிஞர் பெருமை நயந்துரைப்பார் அப்பா 
எல்லையில்லா அன்பை ஈந்துநிற்பார் அப்பா
இனிமையிலா நட்பை எடுத்தெறிவார் அப்பா

மூத்த முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி நினைவுகள் அஞ்சலிக் குறிப்புக்குள் வரும் இதர அஞ்சலிகள் ! முருகபூபதி


தமிழ்நாட்டில் நாமக்கல் என்றவுடன் முன்பு எனது நினைவுக்கு வருபவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். ஆனால் சமகாலத்தில் நினைவுகளில் தங்கியிருப்பவர் படைப்பிலக்கியவாதி கு. சின்னப்பபாரதி.

இம்மாதம் 13 ஆம் திகதி அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தபோது, அவர் குறித்த நினைவுகள் மனதில் எழுந்தன.  இறுதியாக 2013 ஆம் ஆண்டு அவரை அவரது ஊரில்தான் சந்தித்தேன்.  அதற்கு முன்னரும் அங்கு சென்று திரும்பி அவர்பற்றி எழுதியிருக்கின்றேன்.

அவர் வாழும்போதே அவர் பற்றி எழுதி, அதனையும் அவர்


படித்திருந்தார் என்ற மனநிறைவுடன்தான் இந்த அஞ்சலிக்குறிப்பிற்குள் வருகின்றேன்.

ஒருவர் மறைந்தவுடன் எழுதுவதற்கும் , உயிருடன் இருக்கும்போது எழுதுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

நமக்கல்லில் அவரைத்தேடிச்செல்லும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அவரது அந்த செல்லம்மாள் இல்லத்தின் வாசலில் ஒரு புதிய அனுபவத்தை எதிர்கொள்வார்கள்.

அவரைப் பார்ப்பதற்காக சொந்த வாகனத்தில் செல்லும் எவருக்கும் கிட்டாத அனுபவம் அது.   நான் முதல் தடவை நாமக்கல் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கே நின்ற ஒரு ஓட்டோ சாரதியிடம், அவரது பெயரைச்சொன்னதும்,  “ ஏறுங்க சார்…. “  என்று மாத்திரம்தான் சொன்னார்.

அந்த இல்லத்தை நெருங்கும்போது, அந்த ஓட்டோவின் ஒலி கேட்டு விரைந்து வாசலுக்கு வந்தார் சின்னப்ப பாரதி.  ஓட்டோ சாரதிக்கு நான் பணம் கொடுப்பதற்கு முன்பே அவர் கொடுத்து அனுப்பிவிட்டார்.

மற்றும் ஒரு தடவை யுகமாயினி  ஆசிரியர் சித்தனுடன் நான் சென்றபோதும் இதுதான் நடந்தது.

இறுதியாக கரூரில் வசிக்கும் எனது உறவினரான ஆசிரியர் பொற்செல்வனுடன்  அவரது காரில் சென்றிருந்தேன். அதனால், அந்தக் காட்சி இடம்பெறவில்லை.

தன்னைத்தேடி ஓட்டோவில் வரும் எவருக்கும் சின்னப்ப பாரதியே சாரதிக்குரிய பணத்தை கொடுத்துவிடுவார்.  அங்கு பேரம் பேசுதல் நடக்காது.

அவ்வாறு சாதாரண ஓட்டோ சாரதிகளுடனும் தோழமையை பேணியவர்தான் சின்னப்ப பாரதி.

இலங்கையில் நாம் 2011 ஜனவரியில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக தமிழகத்திலிருந்து குரல் ஓங்காரமாகவும் அகங்காரமாகவும் ஒலித்தவேளையில்,  அதனை அசட்டைசெய்துவிட்டு மனசாட்சியின் குரலை ஒலித்தவாறு வந்து கலந்துகொண்டவர்தான் சின்னப்ப பாரதி.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 18 மாறுபட்ட கருத்தியலும் மனிதர்களின் அடிப்படை இயல்பும் சங்கமிக்கும் புள்ளி ! அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்களின் வருகை ! முருகபூபதி

 இயல்புதான் மனிதர்களின் அடிப்படை அழகு.  காலம், நட்பு,


சுற்றுச்சூழல், அனுபவம் என்பன  ஒரு மனிதரின் அடிப்படை இயல்புகளை மாற்றினாலும்,  மாற்றவே முடியாத குறிப்பிட்ட  சில இயல்புகளையும் கொண்டிருப்பவர்கள்தான் மனிதர்கள்.

அதனைப் புரிந்துகொண்டால் பொதுவாழ்வில்  வரும் சிக்கல்கள், பிரச்சினைகளை எளிதாக  தீர்த்துக்கொள்ள முடியும்.  ஏன் இவ்வாறு எழுதுகின்றேன் என்பதை இந்த அங்கத்தை படிக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.

1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஒரு நாள் (அன்று சனிக்கிழமை ) இரவு எட்டு மணியளவில் சோமா சோமசுந்தரம் அண்ணர் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.  அக்காலப்பகுதியில் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழும்,  புதிய நிருவாகிகள் தெரிவிற்கான பரிந்துரை படிவங்களும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தபாலில் வந்திருந்தன.

மக்கள் குரல் ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த சிலரை சங்கத்தின் புதிய


நிருவாகக்குழுவில் சேர்ப்பதற்கு தயாரானோம்.

துணைத்தலைவர் பதவிக்கு தருமகுலராஜா,  இதழ் ஆசிரியர் பதவிக்கு இராஜரட்ணம்  சிவநாதன், துணைப் பொருளாளர் பதவிக்கு எஸ். பாலச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கொர்னேலியஸ்,  பல் மருத்துவர் ரவீந்திரராஜா. 

என்னையும் விண்ணப்பிக்கச்சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். எனக்கு அப்போது இங்கே வதிவிட உரிமை கிடைக்கவில்லை. ஏனைய ஐவரும் வதிவிட உரிமையும் குடியுரிமையும் பெற்றவர்கள்.

நண்பர் திவ்வியநாதன், அந்தப்போட்டியில் பங்கேற்கவில்லை.

சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணன் தலைவர் பதவிக்கு தனது விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார். அதனை முன்மொழிந்து வழிமொழிந்தவர்கள்: சட்டத்தரணி விமலேஸ்வரன் ( இவர் சங்கத்தின் செயலாளராகவிருந்த  Doncaster  மகேஸ்வரனின் தம்பி ) , கணகேஸ்வரன் ( இவர் லண்டனில் வாகனவிபத்தில் கொல்லப்பட்ட எழுத்தாளர் க. நவசோதியின் தம்பி )

ரவீந்திரன் அண்ணரின் விண்ணப்பத்திற்கும் எமது மக்கள் குரலுக்கும் எதுவித தொடர்பும் இல்லை.

இந்நிலையில் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம் அண்ணர்,  “எமது மக்கள் குரல் நிருவாகிகளை சந்திக்கவேண்டும்.  அதற்கு எனது வீட்டில் ஏற்பாடு செய்ய முடியுமா..?  “ எனக்கேட்டார்.

“ எதற்கும் நண்பர்கள் சிவநாதன், தருமகுலராஜா ஆகியோருடன் இதுபற்றி பேசுங்கள்.  “ என்றேன். அதன்பிரகாரம் அவர்களுடனும் சோமா அண்ணர் பேசினார்.  மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பத்து மணிக்கு எனது குடியிருப்பில் நால்வரும் சந்திப்பது என முடிவாகியது.

ஸ்வீட் சிக்ஸ்டி 18 - குடும்பத்தலைவன் - ச சுந்தரதாஸ்

.

1962ம் வருடம் படத்தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவருக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமைந்தது.ஆண்டின் ஆரம்பத்தில் புரட்சி நடிகர் எம் ஜி ராமசந்திரன் நடிப்பில் தயைக் காத்த தனயன் படத்தை தயாரித்து வெற்றி கண்டவர், சரியாக நான்கு மாத இடைவெளியில் அதே எம் ஜி ஆரின் நடிப்பில் குடும்பத்தலைவன் படத்தை தயாரித்து வெளியிட்டு அந்தப் படமும் ஓடி வெற்றி கண்டது.இதனால் தேவருக்கு அந்த ஆண்டு பண மழையாக கொட்டியது!


குடும்பத்தலைவனில் அதே எம் ஜீ ஆர்,சரோஜாதேவி ஜோடி இணைந்தது .வழக்கம் போல எம் ஆர் ராதா,அசோகன்,இருவரும் இடம் பெற்றார்கள்.நகைச்சுவைக்கு வி கே ராமசாமி.வழக்கமாக தாயார் வேடத்தில் கண்ணாம்பா நடிப்பார்.இம் முறை அவருக்கு பதில் எம் வி ராஜம்மா அம்மா வேடத்தில் தோன்றினார்.தேவர் படம் என்றால் வில்லனாக அசோகன் நம்பியார் என்று யாராவது நடிப்பார்கள்.ஆனால் இந்தப் படத்தில் துணை நடிகரான ஜெமினி பாலு வில்லனாக நடித்தார்.அவரின் பார்ட்னராக தேவர் வந்தார்.வில்லியாக வருபவர் லக்ஷ்மிராஜ்யம்.

குடும்பத்தலைவனான வேலாயுதம் பிள்ளை வசதியானவர்.ஆனால் சீட்டாட்டத்தில் மோகம் கொண்டவர்.தனது நிலன் புலன்களை பராமரிக்கும் பொறுப்பை மூத்த மகன் சோமுவிடம் ஒப்படைத்து விட்டு சீட்டாட்டத்தில் காலம் கடத்துகிறார்.இளைய மகன் வாசுவோ விளையாட்டு வீரன்.சாதனை செய்வதில் ஆர்வமுள்ளவன்.தன்னுடைய உயிரை காப்பாற்றிய பொன்னுசாமியின் மகள் சீதாவுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் வேலாயுதம்.வாசுவை சந்திக்கும் சீதா அவன் மீது காதல் கொள்கிறாள்.எஸ்டேட்டில் இருந்து வீடு வரும் சோமுவுக்கும் சீதா மேல் காதல் பிறக்கிறது.

இப்படி அமைந்த படத்தின் கதை,வசனம் இரண்டையும் ஆரூர்தாஸ் எழுதினார்.வசனத்தில் செலுத்திய கவனத்தை கதையில் அவர் செலுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.குறுகிய காலத்தில் தேவரின் அவசரத்திற்கு எழுதிய கதை!ஆனாலும் வசனங்கள் மூலம் அதனை சமாளித்து விட்டார் ஆரூர்தாஸ்.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு மெய்நிகரில்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசளிக்கும் திட்டத்தினை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இலங்கைச் செய்திகள்

 இலங்கைக்கான தனது ஆதரவை வெளியிட்ட சீன ஜனாதிபதி

தமிழகத்தில் மேலும் ஏழு பேர் தஞ்சம்

எரிபொருளை முறையாக விநியோகிக்க ஏற்பாடு செய்க

இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா வைரஸ்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 50,000 மெ. தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்


இலங்கைக்கான தனது ஆதரவை வெளியிட்ட சீன ஜனாதிபதி

ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு

சீனா இலங்கைக்கு எப்போதும் உதவ தயார் எனவும் ஜி குறிப்பிட்டார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளிற்கான (ஜூலை 20) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர் இறப்பர், அரிசி உடன்படிக்கை தன்னிறைவு, ஐக்கியம், பரஸ்பர உதவி ஆகியவற்றினை சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகச் செய்திகள்

 உக்ரைன்–ரஷ்யாவின் மோதலுக்கு இடையே மக்கள் சிக்கித் தவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் சரமாரி சூடு: பலஸ்தீனர்கள் மூவர் பலி

 ‘குரங்கம்மை’ நோயின் பெயரை மாற்ற திட்டம்

அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்த பிரிட்டன் ஒப்புதல்

தாய்வானை சீர்குலைக்கும் செயலை கைவிட வேண்டும்



 உக்ரைன்–ரஷ்யாவின் மோதலுக்கு இடையே மக்கள் சிக்கித் தவிப்பு

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரிலிருந்து ஆற்றைத் தாண்டி இன்னொரு நகருக்குச் செல்ல வழிவகுக்கும் பாலத்தை ரஷ்யப் படையினர் வெடிவைத்துத் தகர்த்துள்ளனர்.

அதனால் மக்கள் தப்பிச் செல்வதற்கான வழி முடக்கப்பட்டுள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறினர்.