.
நீண்டு  பரந்த  கடலினை
– நான்
நீந்திக்  கடக்க  விழைகிறேன்
ஆண்டுகள்  போயின  ஆயினும்
- பெரும்
ஆழியை  நீந்த  முயல்கிறேன்!
பொங்கும்  உணர்வுகள் 
மோதிடும் - எழில்
பூத்த  கனவுகள் 
ஆடிடும்
நுங்கு  நுரைக்கடல் 
மீதிலே - எனை
நோக்கி  அலைகளும் 
சாடிடும்!
வெள்ளை  மணற்கரை 
தன்னிலே - கடல்
வெண்ணுரை  சிந்திநின் 
றாடிடும்
கொள்ளை  அழகு  குலவிடும்
- அந்தக்
கோலம்  கலைந்துபின் 
னேகிடும்!
வானத்து  வெண்மதி 
தண்ணொளிக் - கதிர்
வண்ணக்  கரங்களை 
நீட்டிடும்
கானம்  இசைத்துக் 
கடலலை - நிலாக்
காதலில்  வீழ்ந்து 
புரண்டிடும்!
காதல்  வெறிகொண்ட 
பேரலை - இரு
கண்கள்  மறைத்தெனைச் 
சாடிடும்
ஏதும்  வழியின்றி 
வீழுவேன் - இடர்
எய்திடும், பின்னரும்  நீந்துவேன்!
சிந்தும்  நுரைகளில் 
மேல்விழுந்(து) – ஒளி
சேரும்  பொழுதினில் 
தென்படும்
விந்தை  நிறங்களின் 
ஓவியம் - எழில்
விஞ்சு  வடிவங்கள் 
காட்டிடும்!
காணும்  வடிவங்கள் 
எத்தனை? – முன்பு
கண்ட  வடிவங்கள் 
எத்தனை?
ஆணெனப்   பெண்ணெனக் 
கூடியே - இங்கு
ஆடிய  ஆட்டங்கள் 
எத்தனை?
எத்தனை  நாடகம் 
கண்டனன்? - இங்கு
எத்தனை  மேடைகள்; 
கண்டனன்? 
நித்தமும்  ஆடிடும் 
நாடகம் - இந்த
நீணில  மீதென்று 
நிற்குமோ?
உள்ளக்  கடலலை  மோதிடும்
- அதில்
உள்ளவை  வெண்ணுரை 
யாகிடும்
நள்ளிரு  ளாகிய  வேளையில்
- உயிர்
நல்லொளி  காணத்  துடித்திடும்!
நீண்டு  பரந்த  கடலினை
– நான்
நீந்திக்  களைத்தின்று 
செல்கிறேன்!
ஆண்டுகள்  எத்தனை 
போயினும் - இந்த
ஆழியை  வென்றிட 
நீந்துவேன்!




 இலங்கையில்
 வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை 
நிறுத்தப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 
கோரியுள்ளது. அமெரிக்க தூதுவர் மிக்சேல் சிசன், நேற்று இலங்கைத் தேசிய 
இவஞ்சலிக்கல் கூட்டமைப்பினரைச் (National Evangelical Alliance of 
Sri Lanka) சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது காலி, ஹிக்கடுவைப்
 பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது பௌத்த 
பிக்குகளைக் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியமை குறித்து 
கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில்
 வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை 
நிறுத்தப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 
கோரியுள்ளது. அமெரிக்க தூதுவர் மிக்சேல் சிசன், நேற்று இலங்கைத் தேசிய 
இவஞ்சலிக்கல் கூட்டமைப்பினரைச் (National Evangelical Alliance of 
Sri Lanka) சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது காலி, ஹிக்கடுவைப்
 பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது பௌத்த 
பிக்குகளைக் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியமை குறித்து 
கலந்துரையாடியுள்ளார்.

 21/01/2014    நியூஸிலாந்தின்
 வடதீவுப் பிராந்தியத்தை 6.3 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி 
திங்கட்கிழமை தாக்கியுள்ளது. இந்த பூமியதிர்ச்சியால் கட்டடங்கள்
 நடுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21/01/2014    நியூஸிலாந்தின்
 வடதீவுப் பிராந்தியத்தை 6.3 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி 
திங்கட்கிழமை தாக்கியுள்ளது. இந்த பூமியதிர்ச்சியால் கட்டடங்கள்
 நடுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
 
 
 
 
 
