ஆன்ம தாகம் - -க. கணேசலிங்கம்

.

நீண்டு  பரந்த  கடலினை – நான்
நீந்திக்  கடக்க  விழைகிறேன்
ஆண்டுகள்  போயின  ஆயினும் - பெரும்
ஆழியை  நீந்த  முயல்கிறேன்!
பொங்கும்  உணர்வுகள்  மோதிடும் - எழில்
பூத்த  கனவுகள்  ஆடிடும்
நுங்கு  நுரைக்கடல்  மீதிலே - எனை
நோக்கி  அலைகளும்  சாடிடும்!
வெள்ளை  மணற்கரை  தன்னிலே - கடல்
வெண்ணுரை  சிந்திநின்  றாடிடும்
கொள்ளை  அழகு  குலவிடும் - அந்தக்
கோலம்  கலைந்துபின்  னேகிடும்!
வானத்து  வெண்மதி  தண்ணொளிக் - கதிர்
வண்ணக்  கரங்களை  நீட்டிடும்
கானம்  இசைத்துக்  கடலலை - நிலாக்
காதலில்  வீழ்ந்து  புரண்டிடும்!
காதல்  வெறிகொண்ட  பேரலை - இரு
கண்கள்  மறைத்தெனைச்  சாடிடும்
ஏதும்  வழியின்றி  வீழுவேன் - இடர்
எய்திடும், பின்னரும்  நீந்துவேன்!
சிந்தும்  நுரைகளில்  மேல்விழுந்(து) – ஒளி
சேரும்  பொழுதினில்  தென்படும்
விந்தை  நிறங்களின்  ஓவியம் - எழில்
விஞ்சு  வடிவங்கள்  காட்டிடும்!
காணும்  வடிவங்கள்  எத்தனை? – முன்பு
கண்ட  வடிவங்கள்  எத்தனை?
ஆணெனப்   பெண்ணெனக்  கூடியே - இங்கு
ஆடிய  ஆட்டங்கள்  எத்தனை?
எத்தனை  நாடகம்  கண்டனன்? - இங்கு
எத்தனை  மேடைகள்;  கண்டனன்?
நித்தமும்  ஆடிடும்  நாடகம் - இந்த
நீணில  மீதென்று  நிற்குமோ?
உள்ளக்  கடலலை  மோதிடும் - அதில்
உள்ளவை  வெண்ணுரை  யாகிடும்
நள்ளிரு  ளாகிய  வேளையில் - உயிர்
நல்லொளி  காணத்  துடித்திடும்!
நீண்டு  பரந்த  கடலினை – நான்
நீந்திக்  களைத்தின்று  செல்கிறேன்!
ஆண்டுகள்  எத்தனை  போயினும் - இந்த
ஆழியை  வென்றிட  நீந்துவேன்!



கெலன்ஸ்பேக் வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம்

.
.

பத்ம விருதுகள் – நடிகர் கமலஹாசன் - கவிஞர் வைரமுத்துவுக்கு

.
வெங்கடபதி என்ற விவசாயி பத்மசிறீ விருதைப் பெற்றார்.
இந்தியாவின் பத்ம விருதுகள் – நடிகர் கமலஹாசன் - கவிஞர் வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருதுகள்
இந்திய அரசின் பத்மா விருதுகள் இன்று சனிக்கிழமை (25.01.14) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி எச் விநாயக்ராம் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களைத் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், டாக்டர். அஜய் குமார் பரிடா, மல்லிகா சிறினிவாசன், தீபக் ரெபேக்கா பள்ளிக்கள், பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா மற்றும் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் ஆகியோருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது.வெங்கடபதி என்ற விவசாயி பத்மசிறீ விருதைப் பெற்றார். இந்தி நடிகை வித்யா பாலனுக்கும் பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது.

திரை இசை நிகழ்ச்சி - G.V.பிரகாஸ் 01.02.2014

.

இலங்கைச் செய்திகள்


மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்

பால்மா வாங்கச் சென்ற தம்­மு­டைய தந்தை எங்கே? , 3 குழந்தைகளுக்கும் என்ன பதில் கூறுவேன்!

 மன்னார் மனித புதைகுழி இன்றும் தோண்டப்பட்டது: சில எலும்புத்துண்டுகள் மீட்பு

மூன்று மனித எலும்புக்கூடுகள் இன்று மீட்பு

===================================================================

மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்

22/01/2014     இலங்­கையில் வழி­பாட்டுத் தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்­றமை நிறுத்­தப்­பட வேண்­டு­மென கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் கோரி­யுள்­ளது. அமெ­ரிக்க தூதுவர் மிக்சேல் சிசன், நேற்று இலங்கைத் தேசிய இவஞ்­ச­லிக்கல் கூட்­ட­மைப்­பி­னரைச் (National Evangelical Alliance of Sri Lanka) சந்­தித்­துள்ளார். (மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இலங்­கையில் வழி­பாட்டுத் தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்­றமை நிறுத்­தப்­பட வேண்­டு­மென கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் கோரி­யுள்­ளது. அமெ­ரிக்க தூதுவர் மிக்சேல் சிசன், நேற்று இலங்கைத் தேசிய இவஞ்­ச­லிக்கல் கூட்­ட­மைப்­பி­னரைச் (National Evangelical Alliance of Sri Lanka) சந்­தித்­துள்ளார். இச்­சந்­திப்­பின்­போது காலி, ஹிக்­க­டுவைப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள இரண்டு தேவா­ல­யங்கள் மீது பௌத்த பிக்­கு­களைக் கொண்ட குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­யமை குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.
கொழும்பில் இப்­பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­ற­தாக குறிப்­பிட்­டுள்ள தூத­ரகப் பேச்­சாளர் ஜூலி­யானா ஸ்பவென், மதத்­த­லங்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். நன்றி வீரகேசரி



திரும்பிப்பார்க்கின்றேன் -25 - முருகபூபதி

.


இலங்கையில்     அயராமல்     இயங்கிய       இலக்கிய    கலாசார     தூதுவர்   சோமகாந்தன்                                    

யாழ்ப்பாணம்  நல்லூரில்  1822  ஆம்     ஆண்டு    பிறந்த   ஆறுமுகநாவலரின் 150  ஆவது   ஜனன  விழா   நிகழ்வுகள்   இலங்கையில்    பல  பாகங்களிலும்   1972    காலப்பகுதியில்    நடந்தது.      முற்போக்குச்சிந்தனையுடன்    வெளியான    மல்லிகை    இதழும்    ஆறுமுகநாவலரின்   படத்தை   அட்டையில் பதிவுசெய்து    சிறப்பிதழ்   வெளியிட்டது.
நாவலரையும்    இலங்கை    தமிழரசுக்கட்சியினரும்    இடதுசாரிகளும்    விட்டு வைக்கவில்லை.    அவர்    இரண்டு   தரப்பினரதும்    வாதப்பிரதிவாதங்களுக்கு ஆளானார்.
இந்நிலையில்     தமிழ்நாட்டிலிருந்து    இலங்கை   வந்த    பயண   இலக்கியவாதியும்     அந்த   பயணத்தொடருக்காகவே    சூட்டிய    இதயம் பேசுகிறது    என்ற    பெயரில் - ஆனந்தவிகடன்    ஆசிரியப்பொறுப்பிலிருந்து வெளியே வந்ததும்     இதழ்    நடத்திய  மணியனிடம்     நாவலரைத்தெரியுமா?     எனக்கேட்டபொழுது    தனக்கு    நாவலர் நெடுஞ்செழியனைத்தான்    தெரியும்     என்றார்.     இந்த    இலட்சணத்தில் அன்று    தமிழகத்தின்   வணிக   இதழியல் துறை    இருந்தது.
நாவலரை    தேசிய விழிப்பின்    சின்னம்     என    முற்போக்கு    எழுத்தாளர் சங்கம்    கொண்டாடியது.
அதே    வேளையில்    சமஷ்டி    பேசியவர்கள்    நாவலரின்    சைவ சமய நம்பிக்கைகளுக்கு    முக்கியத்துவம்   கொடுத்து    அவரை குருபூசைச்சிமிழுக்குள்     அடைத்துவிட்டிருந்தனர்.
எமது    நீர்கொழும்பில்   இந்து   இளைஞர்   மன்றம்   நடத்திய    நாவலர் விழாவுக்கு    உரையாற்ற    வந்த    ஆலாலசுந்தரம்    எம்.பி.   நாவலருக்கு சிறப்பிதழ்    வெளியிட்ட     மல்லிகையையும்   அதன்    ஆசிரியர்     டொமினிக் ஜீவாவையும்     கடுமையாகச்சாடினார்..
சமஷ்டிக்கட்சியின்    தலைவர்   செல்வநாயகம்     கிறிஸ்தவர்.    அந்தக்கட்சி  நாவலருக்குரிய     முக்கியத்துவத்தை    வழங்கவில்லை    என்ற     தொனியில் மல்லிகை    ஆசிரியத்தலையங்கம்    அமைந்திருப்பதாக     அவர்    விஷம் கக்கினார்.
ஆனால்   ஜீவா   அந்தத்தொனியில்   எழுதவில்லை.
தமிழ்   தமிழ்   என்று   உணர்ச்சியுடன் பேசுபவர்கள்     நாவலரின்  150 ஆவது ஜனன விழாவை    கொண்டாட     முன்வராமல்     பின்னடிக்கிறார்கள்     என்றும்  ஜீவா    எழுதிவிட்டார்.
இக்கூற்று     ஆலாலசுந்தரத்தை    உசுப்பிவிட்டது.    இத்தனைக்கும்    அவர் மல்லிகையை   விலை    கொடுத்து    வாங்கிப்படிக்கவும்   இல்லை. மன்றத்தின்   நூலகத்திற்கு   நான்   வழங்கியிருந்த   குறிப்பிட்ட    மல்லிகை நாவலர்    சிறப்பிதழை   படித்துவிட்டே     சத்தம்போட்டார்.
(தந்தை   செல்வா   மறைந்தவேளையில்   மல்லிகை   அவரது    படத்தையும் முகப்பில்   பதிவுசெய்து    ஆசிரியத்தலையங்கம்    எழுதியது.)
அதென்ன     பின்னடிப்பு?     சட்டைக்கு    குத்தும்    பின்னையா     மல்லிகை ஆசிரியர்     சொல்கிறார்     எனக்கிண்டலாக     வேறு    கேள்வி    எழுப்பினார்  ஆலாலசுந்தரம்.


இ-மெயில் தமிழன் சிவா அய்யாதுரை பேட்டி-- பாரதி தம்பி

.
Shiva-Ayyadurai-Photo-Shot
னித குலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர். வசிப்பது அமெரிக்காவில்.
டைம் பத்திரிகை இவரை ‘டாக்டர் இ-மெயில்’ என்று அழைக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் என அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ‘இ-மெயிலை கண்டுபித்தவர்’ என இவரை கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும், பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, ‘டாக்டர் சிவாதான் இமெயிலை கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். உலகின் மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (smithsonian museum), “மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இ-மெயிலையும் மதிப்பிட வேண்டும்” என்று வர்ணிக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology)  பல்கலைக்கழகத்தில் Systems Visualization   மற்றும் Comparative Media Studies  ஆகிய இரு துறைகளில் பேராசியராக இருக்கும் சிவா அய்யாதுரை, அதே பல்கலைக்கழகத்தில் நான்கு பட்டங்களும் ஒரு பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றவர். நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வு செய்தவர். நஷ்டத்தில் இயங்கி மூட வேண்டிய நிலையில் இருந்த அமெரிக்க தபால் துறையை லாபகரமாக மாற்றிக்காட்டியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ‘வெள்ளை மாளிகை’யும் உண்டு).
ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய நீண்ட ‘ஸ்கைப்’ உரையாடலில் இருந்து…

தைப்பூசத் திருநாளிலே.....பால் காவடி புஷ்பக்காவடி.....துளசி கோபால்

.

சரியாச் சொன்னால் போன வெள்ளிக்கிழமை இதே நேரம்..... அரைத் தூக்கத்தில் இருந்தவளுக்கு பால்கனி கதவு திறக்கும் சத்தமும், முணுமுணுவென்று யாரோகூட்டமாக என்னமோ சொல்லும் மெல்லிய ஓசையும் காதில் விழுந்துச்சு. கண்ணைத் திறந்தால்.... பால்கனியில் நின்னுக்கிட்டு இருந்த கோபால், இங்கெ வந்து பாரு' என்றார்.

உச்சாணிக் 
கொம்பில் இருந்து பார்க்கிறேன். சின்னச்சின்ன மஞ்சள் உருண்டைகள் நகர்ந்து போகுது. கவனிச்சுக்கேட்டால் அந்த ஓசை  'அரோகரா!' 

கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு

.

இன்றைய காலைப்பொழுதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கு இடையில் எனக்கு கிடைத்த நேரம் வழக்கம் போல காரில் இசையை இயக்கிவிட்டுக் கேட்டுக் கொண்டே போகிறேன்.

"புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு" சாதாரணமாக தான் ஆரம்பிக்கிறது, ஆனால் பல்லவி முடிந்து சரணத்துக்குப் பாயும் நேரம் கண்களில் முட்டி திடீர்க் குளம் ஒன்று, ஸ்டியரிங் பிடித்திருக்கும் இரண்டு கைகளிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. இந்த மாதிரி அனுபவமெல்லாம் எனக்குப் புதிதல்ல, அதிலும் குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் குறிப்பாக ஸ்வர்ணலதாவின் "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" எல்லாம் இந்தமாதிரி என்னைக் கோழையாக்கி அழ வைக்கவே படைக்கப்பட்டது. ஆனால் ஒரு புதிய பாடல் இம்மாதிரியானதொரு சாகசத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டதுதான் எனக்கே புரிபடாத ஆச்சரியம்.

வெளியே வாகனங்களின் போட்டா போட்டியோடு அந்தப் பெருஞ்சாலையில் இறுக மூடிய கார்க்கண்ணாடிக்குள் என் இசை உலகத்தில் கார் தன் வழி பயணிக்க, நானோ இரட்டைச் சவாரி.என்னைக் கயிற்றால் இறுகக் கட்டிவிட்டு கார் சீட்டில் பயணிக்க வைத்தது போன்றதொரு பிரமையை உண்டு பண்ணுகிறது.

எனக்கு நினைவு தெரிந்து சமீப ஆண்டுகளில் கேட்டதும் உடனேயே என் வசமிழந்த புதிய பாடல்களில்  மொழி திரைப்படத்தில் வந்த "காற்றின் மொழி இசையா" பாடல் தான் இதே மாதிரியான அனுபவத்தை விளைவித்திருந்தது. அதை அப்போது நான் பதிவாக்கியும் இருந்தேன்.

காற்றின் மொழி.....! http://www.madathuvaasal.com/2007/02/blog-post_13.html

 "புதிய உலகை புதிய உலகைத் தேடிப்போகிறேன் என்னை விடு" இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருப்பவரின் திடீர் சுகப்பிரசவம் ஆகியிருக்காது. இசையமைப்பாளர்

உலகச் செய்திகள்


நியூ­ஸி­லாந்தை உலுக்­கிய பூமி­ய­திர்ச்சி

 ஈராக்கில் பொலிஸாரை இலக்குவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்

சிரி­யாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை

மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக முதல் தட­வை­யாக பெண் தெரிவு





======================================================================

நியூ­ஸி­லாந்தை உலுக்­கிய பூமி­ய­திர்ச்சி


21/01/2014    நியூ­ஸி­லாந்தின் வட­தீவுப் பிராந்­தி­யத்தை 6.3 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது. இந்த பூமி­ய­திர்ச்­சியால் கட்­ட­டங்கள் நடுங்­கி­யதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.
மக்கள் வீடு­க­ளையும் கட்­ட­டங்­க­ளையும் விட்டு அல­றி­ய­டித்­துக்­கொண்டு வெளி­யேறி திறந்த வெளி­க­ளிலும் வீதியிலும் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.
மாஸ்­டரொன் நகரின் வடக்கே 38 கிலோ­மீற்றர் தூரத்தில் சுமார் 27 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமி­ய­திர்ச்சி தாக்­கி­யுள்­ளது.
மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் வெலிங்டன் விமான நிலையத்தியிலிருந்த இாட்சத கழுகு உருவ கட்டமைப்பு கூரையிலிருந்து சரிந்து தரையில் விழுந்­துள்­ளது.
ஆனால், அதனால் எவ­ருக்கும் காயம் எதுவும் ஏற்­ப­ட­வில்லை.
இந்த பூமியதிர்ச்சியையடுத்து பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.


புத்தாண்டுகள் பல விதம்

.
பாரதி காவலர் கே. ராமமூர்த்தி

ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் கொண்டதாக, கி.மு.4241லிருந்து, வழக்கமாக இருந்தது தெரியவருகிறது. முதலாவதான கலண்டர் ( அல்மனாக் ) அதாவது பஞ்சாங்கம், வைவஸ்வத மனு சக்கரவர்த்தியின் காலத்தில், ஸப்த ரிஷிகளினால் உருவாக்கப்பட்டது.


 இந்துக்களின் பஞ்சாங்கம் என்பது யுகங்களின் அடிப்படையிலானது. விண்மீன் ஆண்டுகள், கோள்களின் ஆண்டு, சூரியமான (சௌரமான) ஆண்டு, சந்திரமான ஆண்டு என்பனவாகவும் கணக்கிடப்பட்டுள்ளன.


ஸப்த ரிஷிகளின் காலத்திற்குப் பிறகு, இந்த ஆண்டுக் கணக்குகளில் சிறிது மாற்றங்கள் கண்டறியப்பட்டன. மகாபாரத காலத்தில் வேதவியாசர் இதில் கவனம் செலுத்தியுள்ளார். மகரிஷி விஸ்வாமித்திரர் ஆண்டுக் கணக்குகளை ஆய்ந்து தனி மகாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதில் ஆண்டின் தொடக்கம் தை மாதம் என்பதாக, முடிவெடுக்கப்பட்டது. சில காலம் சென்றது.


மகரிஷி பராசரர் ஆய்வு செய்து மார்கழியை ஆண்டின் முதல் மாதம் என்று அறிவித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்று திருவாய் மலர்தருளினார். பின்னர் மகரிஷி கார்க என்பவர் கார்த்திகைதான் ஆண்டின் தொடக்க மாதம் என்பதாக ஆய்ந்து தெளிவுடன் கூறினார். இறுதியாக வராகமிஹிரர் மேலும் பலப்பல ஆய்வுகள் செய்து சித்திரை மாதமே புத்தாண்டு என்பதாக அறிவித்தார்.
ரிக்வேத காலத்து சூர்யமான, சந்திரமான ஆண்டுகள் 360 நாட்கள் கொண்டவையாக இருந்தன. பிறகு 365 நாட்கள் என்பது கோள்களின் சுழற்சி வேகத்தினால் கண்டறியப்பட்டது.


ரோமானிய கலண்டர்கள், சீன, எகிப்திய கலண்டர்கள் கூட வேதகால பஞ்சாங்கங்களின் அடிப்படையை பெரிதும் ஆதாரமாகக் கொண்டே அமைந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஜூலியஸ் ஸீஸர் (கி.மு.10244) உருவாக்கிய கலண்டர் கி.மு.45இல் தயாரானது. 365 நாட்கள் கொண்ட அது ஜூலியன் கலண்டர் என்றழைக்கப்பட்டது.
பின்னர் கிரேகோரியன் கலண்டர் வழக்கிற்கு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லீப் இயர் என்பதாக அது அமைந்தது. கிரேகோரி தி கிரேட் காலம் கி.பி.540604.
காலப்போக்கில் பன்னிரண்டாவது கிரேகோரி காலத்தில்தான் (15021585) கிரேகோரியன் கலண்டர் உருவாயிற்று.


கொற்கை'க்கு சாகித்திய அக்காதெமி விருது 2013

.
ஜோ டி குரூஸ் எழுதிக் காலச்சுவடு வெளியீடாக வந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்த கொற்கை நாவல் 2013ஆம் ஆண்டுக்கான சாகித்திய அக்காதெமி விருதைப் பெற்றிருக்கிறது. விருது பெறும் ஜோ டி குரூஸுக்குக் காலச்சுவடு இதழின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

புதிய நூற்றாண்டில் தமிழில் வெளியான குறிப்பிடத்தகுந்த நாவல்களில் கொற்கை முக்கியமான படைப்பு. ஆழி சூழ் உலகு என்ற தனது முதல் நாவல் மூலம் இலக்கிய உலகில் சலனத்தை ஏற்படுத்திய ஜோ டி குரூஸ் தனது இரண்டாவது நாவலான கொற்கையில் தன்னை நம்பிக்கைக்குரிய நாவலாசிரியராக நிலைநிறுத்திக் கொண்டார்.

''நான் கண்டு கேட்டு அறிந்து வாழ்ந்த பரதவர் சமூகத்தை அடையாளப்படுத்த விரும்பினேன். அந்தச் சமூகத்தின் அடையாளத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டவும் அந்தச் சமூகத்தின் மீது எனக்குள்ள அக்கறையையும் அன்பையும் பதிவு செய்யவே இந்த நாவலை எழுதினேன்'' என்று கொற்கை நாவலை முன்வைத்து நடந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் (நெய்தல் அமைப்பு ஏற்பாடு செய்த கொற்கை நாவல் விமர்சனக் கூட்டம் . 07.08.2010 ) குறிப்பிட்டார் ஜோ டி குரூஸ்.

நடிகர் நாகேஷ் நினைவு தினம் -ஜனவரி 31

.
 
(முற்குறிப்பு:    தமது   75  ஆவது    வயதில்   2009   ஜனவரி  31  ஆம் திகதி மறைந்த   நடிகர்     நாகேஷ்      பற்றிய     இந்தப்பதிவு    2009   பெப்ரவரி    மெல்பன்      வானமுதம்    வானொலியிலும்      இலங்கை     தினக்குரலிலும்  வெளியானது.     மேலும்    சில   தகவல்களுடன்      நகேஷின்   5  ஆவது  நினைவு   தினத்தில்      இந்தப்பதிவு)
இயக்குநர்களின்     ஆளுகைக்கு     உட்படாமல்     தனது    சுயஆற்றலை வெளிப்படுத்திய    கலைஞர்      நாகேஷ்

                                                                   
                           

  ‘தன்   வாழ்க்கையில்     என்ன   அவலங்கள்   இருந்தாலும்     தன்    மனத்தில்     எத்தனை     சோகச்சுமையிருந்தாலும்     அதையெல்லாம்   மறைத்து     தன்   நகைச்சுவையால்    மக்களை   விலாநோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே    மிகச்சிறந்த       நகைச்சுவை நடிகர்’ -என்று     நடிகர் சிவகுமாரால்    1986   இல்    விதந்து    எழுதப்பட்டவர்தான்   நடிகர்  நாகேஷ்.
 சுமார்     ஆயிரத்துக்கும்      மேற்பட்ட       திரைப்படங்களில்    நடித்து இலட்சக்கணக்கான      ரஸிகர்களை    தனது    அபாரமான    நடிப்பினால் கவர்ந்தவர்    நாகேஷ்.
 ஆங்கில      திரைப்பட      உலகில்    புகழ்பெற்ற    ஜெர்லூயிஸைப்போன்று தமிழ்த்திரையுலகில்    தனது      ஒடிசலான    தேகத்தையும் அம்மைத்தழும்புகள்      ஆக்கிரமித்த     முகத்தையும்      வைத்துக்கொண்டு அஷ்டகோணலாக      உடலை     வளைத்தும்      நெளித்தும்     கருத்தாழமிக்க வசனங்களை      உதிர்த்தும்     தமிழ்த்திரையுலகில்     புகழ்பெற்ற நட்சத்திரமாகத்     திகழ்ந்த    நாகேஷ்இ      கமலஹாஸன்     தயாரித்த   ‘மகளிர் மட்டும்’ படத்தில்       பிரேதமாகவும்     நடித்தவர்.     2009 ஜனவரி 31 ஆம் திகதி      உண்மையாகவே      பிரேதமாகிவிட்டார்.

‘’இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது!” – அருந்ததி ராய் பேட்டி

.
Arundhati Roy
த்திய இந்தியாவின் தண்டகாரன்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்பதை எதிர்த்து பழங்குடி மக்கள் வில், அம்புடன் வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்க, அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். ‘ஆபரேஷன் பசுமை வேட்டை’ என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய் தண்டகாரன்யா காடுகளுக்குள் நேரடியாக சென்றுவந்தார்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் ‘இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சக்தி’ என மாவோயிஸ்ட்டுகளை வர்ணித்துக் கொண்டிருக்க, அருந்தி ராயோ அந்த அச்சுறுத்தம் சக்திகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை நேரடியாக சென்று பார்த்து வந்திருக்கிறார். ஆபரேஷன் பசுமை வேட்டையைக் கண்டித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்திருந்த அருந்ததி ராயை சந்தித்துப் பேசியதில் இருந்து…
தண்டகாரன்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம் போல் காட்சி அளிக்கிறது. அங்கு நேரடியாக போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரன்யாவில் என்னதான் நடக்கிறது என்பது பற்றி சொல்ல முடியுமா?
“மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளை இணைப்பதாக இருக்கும் தண்டகாரன்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா,கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியா என்றொரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் தண்டகாரன்யா காடுகளுக்குள் வாழ்கின்றனர். காட்டின் வளங்களை அவர்கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு என்பது அவர்களின் கடவுள். ஆனால் அவர்களின் கடவுளை அவர்களுக்குத் தெரியாமலேயே பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்றுவிட்டது இந்திய அரசு. நல்லவிலை கிடைக்கிறது என்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது ‘நல்ல விலை’யும் இல்லை என்பது வேறு விஷயம்).

தமிழ் சினிமா

வீரம்


அண்ணன், தம்பி கதையை பாசமலர்களாக ரசிகர்களுக்கு சூட்டியிருப்பதே வீரம். மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜித். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜித்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். அதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் வில்லன் பிரதாப் ராவத் மார்கெட்டில் இருக்கும் வியாபாரிகளை ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறார். அவர்களுக்கு நன்மை செய்யும் விதமாக மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான டெண்டர்களை அஜீத்தே வளைத்துப் போகிறார். இதனால், அஜித் மீது வில்லனுக்கு பகை உண்டாகிறது. அவரை பலி வாங்க வில்லன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். அஜித்துக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவருடைய குடும்ப வக்கீலான சந்தானமும் இவருக்காக தன் காதலையும் துறக்கிறார். இந்நிலையில், அஜித்தின் தம்பிகள் தன்னுடைய அண்ணனுக்கு தெரியாமலேயே காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் சந்தானத்துக்கு தெரிய வருகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சந்தானத்திடம் கூறும்போது, அவர்களுடைய காதலை சேர்த்து வைப்பதாக சந்தானம் உறுதி கூறுகிறார். தனது அண்ணன் அஜித்தை காதலிக்க வைத்துவிட்டால் நம்முடைய காதலுக்கு அவர் பச்சைக்கொடி காட்டி விடுவார் என்ற எண்ணத்தில் அவரை எப்படி காதல் செய்ய வைக்கலாம் என யோசிக்கிறார்கள். அதற்கு அஜித்தின் பால்ய நண்பரான ரமேஷ் கண்ணாவிடம் சென்று யோசனை கேட்கிறார்கள். ரமேஷ் கண்ணா அதே ஊரில் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். அவர், அஜித் சிறு வயதில் காதல் செய்ததாகவும், தன்னுடைய குடும்ப ஒற்றுமைக்காக அந்த காதலை உதறி தள்ளிவிட்டதாகவும், மேலும் அந்த பெண் இப்பொழுது வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார். என்றாலும், அஜித்துக்கு அந்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி ரொம்பவே பிடிக்கும். அந்த பெயருடைய பெண்ணை அஜித்துக்கு அறிமுகம் செய்து வைத்தால் காதல் வர வாய்ப்புள்ளது என யோசனை கூறுகிறார். இதற்காக ஒரு தொல்பொருள் துறையில் வேலை செய்யும் தமன்னாவை கோயிலில் சந்தானம் மற்றும் அவனது தம்பிகள் பார்க்கிறார்கள். அவளது பெயர் கோப்பெருந்தேவி என்பதை அறியும் அவர்கள், அவளை எப்படியாவது தங்களது வீட்டுக்கு அருகில் தங்க வைத்தால் அண்ணனை காதல் செய்ய வைத்துவிட்டலாம் என எண்ணுகின்றனர். இதனால் ரமேஷ் கண்ணாவின் உதவியுடன் அவளை இவர்களுடைய ஊருக்கு மாற்றம் செய்கின்றனர். அவளும், அஜித்தின் வீட்டுக்கு அருகிலேயே தங்குகிறார். அடிக்கடி சந்திக்கும் அஜித்-தமன்னா இருவருக்குள்ளும் நாளடைவில் காதல் வர ஆரம்பிக்கிறது. இந்நிலையில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி அஜித்தை திருமணம் செய்துகொள்வதற்காக தமன்னா, அஜித் மற்றும் அவரது தம்பிகளை அழைத்துக் கொண்டு அவரது ஊருக்கு ரெயிலில் பயணமாகிறார். அப்போது, அங்கு வரும் ஒரு ரவுடிக்கும்பல் அஜித்தை மற்றும் அவரது தம்பிகளை தாக்குகிறது. அந்த ரவுடிக்கும்பலை அவர் தனியொரு ஆளாக நின்று அடித்து துவம்சம் செய்கிறார். அதுவரை சாதுவாக இருந்த அஜித், திடீரென விஸ்வரூபம் எடுத்தது அவரது தம்பிகள், தமன்னா உள்ளிட்ட எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இறுதியில் அஜித்தை தாக்க வரும் அடியாள் தவறுதலாக தமன்னாவை தாக்கிவிட, தமன்னா மயக்கமடைகிறார். அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறார். மருத்துவமனையில் நினைவு திரும்பும் தமன்னா அஜித்திடம் சொல்லிக்கொள்ளாமல் தனது ஊருக்கு பயணமாகிறாள். இறுதியில் அஜித் தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் யார் என்பதை கண்டறிந்தாரா? பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை. அஜித் நரைத்த தலைமுடி, சற்றே வளர்ந்த தாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒரு கிராமத்து ஆளாக அப்படியே இருக்கிறார். ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடிக்கும் அஜித்தின் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி நடிப்பில் மிளிர்கிறார். இவர் கெட்டப்புக்கு கிடைக்கும் வரவேற்பைவிட, இவருடைய வசனங்கள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது. குறிப்பாக ‘என்ன நான் சொல்றது’, ‘சந்தோஷம்னா மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும், துக்கம்னா நம்மகிட்டவே வச்சிக்கணும்’ என்று இவர் பேசும் வசனங்கள் நான் ஸ்டாப் கைதட்டல்களை வாங்கிச் செல்கிறது. சண்டைக் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார். தமன்னாவுக்கும், அஜித்துக்கு நிகரான கதாபாத்திரம்தான். இவரை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறது என்பதால் வலுவான கதாபாத்திரம் இவருடையது. நடிப்பிலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தானம் முதல் பாதிவரை கொமடியுடன் கதையை நகர்த்திச் செல்ல துணை புரிந்திருக்கிறார். பிற்பாதியில், இவருடன் தம்பி ராமையா இணைந்துவிடுகிறார். இவர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தை விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது. விதார்த், பாலா, சுகைல், முனீஷ் ஆகியோர் அஜித்தின் தம்பிகளாக வருகிறார்கள். அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகளாக எல்லோருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். அமைதியை விரும்பும் அப்பாவாக வரும் நாசரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிற்பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் அதுல் குல்கர்னியும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். படம் முழுவதும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிவா. தேவி ஸ்ரீபிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. அஜித்தின் அறிமுகப் பாடல் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் என்பது மட்டும் நிச்சயம். மொத்தத்தில் ‘வீரம்’பாசத்துடன் கூடிய மாவீரம். நடிகர்: அஜீத் நடிகை: தமன்னா இயக்குனர்: சிவா இசை: தேவிஸ்ரீபிரசாத் ஓளிப்பதிவு: வெற்றி தயாரிப்பு: பாரதி ரெட்டி
நன்றி விடுப்பு