தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
பித்தர்களின் வசமாகி பெருநெருப்பு விழுங்கியதே !
ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்
எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்
வாழ்த்துவதால் தெய்வீகம் மலரும் அன்றோ?
இயற்றியவர்: சிவஞானச் சுடர் பாரதி இளமுருகனார் வாழ்நாட் சாதனையாளர்.
நீர்க்குமிழி போன்றவெங்கள் நிலையிலா வாழ்வில்
நேரத்தை விரயஞ்செயா நிலைப்பாட் டுடனே
வார்த்தைதனில் இன்சொற்கள் மெருகு கூட்ட
வாஞ்சையொடு பேசிநீவிர் அன்பை வளர்ப்பீர்!
நேர்த்தியாய் அமைதிவிஞ்சப் பொறுமை காத்து
நிறைவினிலே இன்பமதை நித்தந் துய்த்துச்
சீர்த்தியுங்கள் வாழ்வினிலே திருவாய் இலங்கச்
திண்மைமிக வாழ்வாங்கு வாழ்தல் நன்றே!
வாழ்த்துவதால் வாழ்த்தினொலி அலைகள் மூலம்
வாழ்த்தப்பெறும் மனதைமிக மகிழச் செய்யும்!
தாழ்வுநிலை அகற்றிவிடும்! தவறு செய்வோர்
தாமாகத் திருந்தவழி வகுத்து நிற்கும்!
காழ்ப்புணர்ச்சி நீக்கியன்பைக் கமழ வைக்கும்!
காதலொடு வாழ்த்தும்மனம் சாந்தி பெறும்!
வாழ்த்திடுவீர்! வளத்துடனே வாழ்க வென்று
வாழ்த்துவதால் தெய்வீகம் மலரும் அன்றோ?
பெருமை பொருளில் இல்லை – அன்பு ஜெயா, பா வகை: குறளடி வஞ்சிப் பா.
அருச்செயல்களே ஆற்றிடாமல்
பெருமைதனைநீ பெற்றாளுமோர்
பெருவிருப்பினால் பெருங்காலமும்
தெருவெங்குமே தேடினாலும்
ஒருபயனுமே உனக்கில்லையே!
பெருமையுடனே பெரியோர்களும்
ஒருமித்துதான் உரைத்தார்களே
உணர்வீர்,
இன்றுநம் உலகில் யாவரும் தேடிடும்
அன்பெனும் உள்ளமே ஆளும்,
என்றும் எங்கும் ஏற்பீர் இதையே!
---------------------
அழுகை வாழ்வில் தொடர்கிறதே !
புகலிடத் தமிழ்க் கல்வி 📚 திருமதி. நிவேதா உதயராஜன் பேசுகிறார்
ஜேர்மன் கல்விக் கழகத்தின் பிதாமகராகக் கொள்ளப்படும் அமரர் நாகலிங்கம் & ஆயிலியம் தம்பதிகளின் மகள்.
எல்லோருக்கும் AI “எல்லோருக்கும் அவசியமான கையேடு"
“தற்போது மனிதன் பேசும் மொழியே நிரலாக்க மொழியும் ஆகும். உலகில் உள்ள அனைவரும் இப்போது ஒரு நிரலாளர். இது AI
ஆல் ஏற்பட்ட ஒரு அதியசம்" – ஜென்சன் ஹூவாங்மாணவருக்கான ஒரு வழிகாட்டல் நூலாக இதைக் கோடிட்டுக்
காட்டியிருந்தாலும், AI சார்ந்த
கற்கை நெறிகளைக் கற்ற என் போன்றவருக்கும் கூட மேலதிகமான செய்திகளையும், வரலாற்றுப் பின்புலன்களையும் தாங்கிய
அற்புதமானதோர் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.
உறவுகளே அற்றுப் போகும்போது…!
-சங்கர சுப்பிரமணியன்.
பத்திரிகை துறையில் கதம்பமாக மணம் வீசும் மோகன்! - ச . சுந்தரதாஸ்
இற்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சஞ்சிகைத் துறையில் ஓர் இளைஞர் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தார். தனது பத்தொன்பதாவது வயதிலேயே ஒரு மாத சஞ்சிகைக்கு ஆசிரியராகி விட்ட அவர் தான் கே. வி. எஸ். மோகன். அவர் ஆரம்பித்து ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள் வெற்றி கரமாக நடத்திய சஞ்சிகையின் பேர் கதம்பம். அந்த மோகன் மே 30ம் திகதி தனது எண்பத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்!
வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய கே. வி. எஸ். வாஸ் என்ற எழுத்துலக ஜாம்பவானின் வாரிசுதான் மோகன். ரஜனி என்ற பெயரில் அவர் எழுதிய நாவல்கள் மிகவும் பிரபலம். அந்த வாஸின் வழித் தோன்றலாக கதம்பம் மாத இதழை 1959ம் வருடம் தொடங்கினார் மோகன். எழுத்துலகில் நுழையத் துடித்துக் கொண்டிருந்த ஏராளமான இளம் எழுத்தாளர்களுக்கு கதம்பம் ஒரு வடி காலாக விளங்கியது. பிரபல எழுத்தார் தெளிவத்தை ஜோசப் எழுதிய முதல் கதை, காரைக்குடி நாராயணன், ஜோதிர்லதா கிரிஜா என்று பலருக்கு கதம்பம் எழுத்துலக வாசலைத் திறந்து விட்டது.
ஆயிரத்தில் ஒருவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
ஒரு நட்சத்திர நடிகர், ஒரு தயரிப்பாளர் இயக்குனருக்கு இடையிலான பிரிவு, இரு இசையமைப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரிவு, ஒரு சூப்பர் ஸ்டார் , ஒரு முன்னணி நடிகை இடையில் தோன்றிய மனஸ்தாபம் இவற்றுக்கு எல்லாம் வடிகாலாய் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.
இலங்கைச் செய்திகள்
முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை !
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை !
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவுக்கு AMO சான்றிதழ்
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு
வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது தென்பகுதி அரசியல்வாதிகள் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகிறது - வடக்கு ஆளுநர் நோர்வே பிரதித் தூதுவரிடம் சுட்டிக்காட்டு
தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை !
29 May, 2025 | 12:08 PM
ச.தொ.ச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நிறுவனம் ஒன்றின் மூலம் 14000 கரம்போர்ட் மற்றும் 11000 டாம்போட் ஆகியவற்றை வாங்கி விளையாட்டு கழகங்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக நளின் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
உலகச் செய்திகள்
காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்
ஒபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக இந்திய முப்படை தலைமை தளபதி தகவல்
60 நாள் யுத்தநிறுத்த திட்டத்தை முன்வைத்தது அமெரிக்கா- இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது - ஹமாஸ் ஆராய்கின்றது.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்
தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்- நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு
காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்
01 Jun, 2025 | 12:50 PM
காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியை நோக்கிவந்த இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலை மேற்கொண்டன என உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநாக்ஷத்திரம் 09/06/2025
நம்மாழ்வார் திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) பிறந்தார். தனது வாழ்நாள் முழுவதும் (இந்த சம்சாரத்தில் 32 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது), புளியமரத்தடியில் (திருப்புலி ஆழ்வார்) தங்கியிருந்து, ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியே எப்போதும் யோகத்தில் (தியானத்தில்) இருந்தார்.
நம்மாழ்வார் 4 திவ்ய பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
· திருவிருத்தம் (ரிக் வேத சாரம்)
· திருவாசிரியம் (யஜுர் வேத சாரம்)
· பெரிய திருவந்தாதி (அதர்வண வேத சாரம்)
· திருவாய்மொழி (சாம வேத சாரம்)
நம்மாழ்வாரின் பிரபந்தங்கள் 4 வேதங்களுக்கு இணையாக இணைக்கப்பட்டுள்ளன. அவர் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றும் அழைக்கப்படுகிறார் - தனது தமிழ் பிரபந்தங்கள் மூலம் சமஸ்கிருத வேதங்களின் சாரத்தை வழங்கியவர்.
இதன் முன்னோட்டமாக, ஜூன் 7ஆம் தேதி தொடங்கி, ஜூன் 9ஆம் தேதி காலை வரை தினமும் மாலையில் திவ்யப் பிரபந்தம் (திருவோய்மொழி -1102 பாசுரங்கள்) ஓதப்படும்.
நிரல்
காலை 09.00 மணி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சன்னதியில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி தாயார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதை மற்றும் ஸ்ரீ லட்சுமணர் மற்றும் பிற தெய்வங்களுக்கு அபிஷேகம்.
காலை 10.30 மணி: சுவாமி நம்மாழ்வாருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்).
தொடர்ந்து அலங்காரம், மகா தீபாராதனை, சதுர்முறை நடைபெறும்.
ஆஷாதன நவராத்திரி மற்றும் மஹா சண்டி ஹோமம் 26/06/2025
சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஜூன் 26, 2025வியாழக்கிழமை முதல் ஜூலை 04, 2025 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாள் ஆஷாதன நவராத்திரி விழாவிற்கு துர்கா தேவியின் ஆசிகளையும் அருளையும் பெற பக்தர்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஜூன் 29, 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.
மஹா சண்டி யாகத்தில் கலந்து கொண்டு துர்கா அன்னையின் அருளைப் பெற ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானம் உங்களை அன்புடன் அழைக்கிறது.