தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

பித்தர்களின் வசமாகி பெருநெருப்பு விழுங்கியதே !

 







































மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா   

 

     ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து

     நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்

     ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே

     வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்


     எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்

     எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே

     நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை

     எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்

வாழ்த்துவதால் தெய்வீகம் மலரும் அன்றோ?

 



இயற்றியவர்:  சிவஞானச் சுடர் பாரதி இளமுருகனார்          வாழ்நாட் சாதனையாளர்.





 நீர்க்குமிழி போன்றவெங்கள் நிலையிலா வாழ்வில்

        நேரத்தை விரயஞ்செயா நிலைப்பாட் டுடனே

வார்த்தைதனில் இன்சொற்கள்  மெருகு கூட்ட

        வாஞ்சையொடு பேசிநீவிர் அன்பை வளர்ப்பீர்!

நேர்த்தியாய் அமைதிவிஞ்சப் பொறுமை காத்து

        நிறைவினிலே இன்பமதை நித்தந் துய்த்துச்

சீர்த்தியுங்கள் வாழ்வினிலே திருவாய் இலங்கச்

        திண்மைமிக வாழ்வாங்கு வாழ்தல் நன்றே!   


வாழ்த்துவதால் வாழ்த்தினொலி அலைகள் மூலம்

        வாழ்த்தப்பெறும் மனதைமிக மகிழச் செய்யும்!

தாழ்வுநிலை அகற்றிவிடும்! தவறு செய்வோர்

        தாமாகத் திருந்தவழி வகுத்து நிற்கும்!

காழ்ப்புணர்ச்சி நீக்கியன்பைக் கமழ வைக்கும்!

        காதலொடு வாழ்த்தும்மனம் சாந்தி பெறும்!

வாழ்த்திடுவீர்! வளத்துடனே வாழ்க வென்று

        வாழ்த்துவதால்  தெய்வீகம் மலரும் அன்றோ?










பெருமை பொருளில் இல்லை – அன்பு ஜெயா, பா வகை: குறளடி வஞ்சிப் பா.


அருச்செயல்களே ஆற்றிடாமல்

பெருமைதனைநீ பெற்றாளுமோர்

பெருவிருப்பினால் பெருங்காலமும்

தெருவெங்குமே தேடினாலும்

ஒருபயனுமே உனக்கில்லையே!

பெருமையுடனே பெரியோர்களும்

ஒருமித்துதான் உரைத்தார்களே

 

உணர்வீர்,

 

இன்றுநம் உலகில் யாவரும் தேடிடும்

அன்பெனும் உள்ளமே ஆளும்,

என்றும் எங்கும் ஏற்பீர் இதையே!

---------------------

அழுகை வாழ்வில் தொடர்கிறதே !

 





  







காதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா   



பிறக்கும் போதும் அழு கின்றான் 
வளரும் போதும் அழு கின்றான்
வாழும் போதும் அழு கின்றான்
வீழும் போதும் அழு கின்றான்

ஆனந்தம் வந்தால் அழு கின்றான்
அவலம் வந்தாலும் அழு கின்றான்
அழுதால் அவலம் போகு மென்று
அழுதே மனிதன் இருக் கின்றான்

சொத்தை எண்ணி அழு கின்றான்
சுகத்தை எண்ணி அழு கின்றான்
மெத்தை வீட்டான் அழு கின்றான்
வீதி கிடப்பான் அழு கின்றான்

புகலிடத் தமிழ்க் கல்வி 📚 திருமதி. நிவேதா உதயராஜன் பேசுகிறார்

 

ஜேர்மன் கல்விக் கழகத்தின் பிதாமகராகக் கொள்ளப்படும் அமரர் நாகலிங்கம் & ஆயிலியம் தம்பதிகளின் மகள்.

இவரின் தாயார் ஆயிலியம் ஆசிரியை தந்து 80 வயது வரை புலம் பெயர் சூழலில் தமிழ்க் கல்வி புகட்டியவர்.
நிவேதாவும் தம் பெற்றோர் வழியில் ஜேர்மனியிலும், இங்கிலாந்திலும் தமிழாசிரியையாக விளங்குவதோடு தமிழ்ப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மூன்றாவது தலைமுறையாக இவரது மகளும் தமிழ் கற்பித்தல் செயற்பாட்டில் இயங்கி வருகிறார்.

நிவேதாவின் இலக்கியப் பக்கத்தில்,
கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று இயங்கி வருபவர்.

புகலிடச் சூழலில் தமிழ்க் கல்வி அமைப்பு குறித்து அவரோடு நான் நிகழ்த்திய நேர்காணலைக் கேட்போம் வாருங்கள்.



கானா பிரபா

எல்லோருக்கும் AI “எல்லோருக்கும் அவசியமான கையேடு"

“தற்போது மனிதன் பேசும் மொழியே நிரலாக்க மொழியும் ஆகும். உலகில் உள்ள அனைவரும் இப்போது ஒரு நிரலாளர். இது AI

ஆல் ஏற்பட்ட ஒரு அதியசம்" – ஜென்சன் ஹூவாங்

 அன்புச் சகோதரன் ப.முகுந்தன் படைப்பாக வெளிவந்திருக்கும் எல்லோருக்கும் AI என்ற நூலைப் படித்துப் பிரமித்துப் போனேன்.

மாணவருக்கான ஒரு வழிகாட்டல் நூலாக இதைக் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், AI சார்ந்த கற்கை நெறிகளைக் கற்ற என் போன்றவருக்கும் கூட மேலதிகமான செய்திகளையும், வரலாற்றுப் பின்புலன்களையும் தாங்கிய அற்புதமானதோர் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

 ஒரு பாட நூலுக்குரிய நேர்த்தியான கட்டமைப்பு, செயன்முறை விளக்கங்கள், பயிற்சி போன்ற அம்சங்களைக் கச்சிதமாக ஒவ்வொரு அலகிலும் கொடுத்தவாறே பரந்து விரிகின்றது இந்தத் தொழில் நுட்பம் குறித்த கையேடு.

 ஒரு அறிவியல் நூலில் அ ந்நியமில்லாமல் தெளிந்த நீரோடை போலப் பயணிக்கும் எழுத்து, மிகச் சிறந்த வழிகாட்டியாகக் கருத்தூன்றி நிற்க உதவுகின்றது.

 பக்கங்கள் தோறும் கொடுக்கப்பட்ட AI செயலிகளை நாமும் பரிசோதித்து அந்தந்தக் களங்களை அனுபவ ரீதியாகப் பயிலக் கூடிய வகையில் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

 நமது இதிகாச புராணங்கள் மட்டுமன்றி மற்றைய மேலைத்தேய நாகரீகங்களில் பழங்காலத்தில் சொல்லப்பட்ட கற்பனைக்கும் எட்டாத விடயங்களை இப்போது இந்த எவ்வளவு தூரம் கண் முன் கொடுக்கின்றது என்பதை ஒப்பீட்டு உதாரங்ணங்கள் வழி பகிர்கின்றார்.

 AI குறித்துச் சமூகத்தில் பேசப்படும் நிலைப்பாடுகளைக் காட்டி அவற்றின் மெய்த்தன்மை குறித்துப் பேசுகின்றார்.

 Artificial Intelligence (AI) எனும் செயற்கை நுண்ணறிவின் (நடைமுறை நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குக் குறுகியகாலத்துக்குள் பரந்து விரிந்து விட்டது.

 மேலை நாடுகளில் இதற்கென ஒரு தனிப் பிரிவே உருவாக்கப்பட்டு அதில் நுட்பமும், ஆற்றலும் மிக்கோர் உள்வாங்கப்படுகின்றனர்.

 நுகர்வோர் சமூகத்தில் நம் அன்றாட வாழ்வில் மறைமுகமாகச் செயற்பட்ட தொழில் நுட்பத்தை இன்று நம் உள்ளங் கைக்குள் வைத்து நாமே பல செயன்முறைகளைச் செய்யக் கூடிய அளவுக்கு ஏகலைவர்களாகி விட்டோம்.

உறவுகளே அற்றுப் போகும்போது…!

 


-சங்கர சுப்பிரமணியன்.






பகல் பன்னிரெண்டு மணி இருக்கும். வானத்தில் சூரியன் மறைந்தும் வெளி வந்தும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க ஜூலை மாதக் குளிர் வாட்டிக்கொண்டிருந்தது. மெல்பனில் நடுத்தரத்துக்கும் மேலுள்ள
மக்கள் வாழக்கூடிய பகுதியில் வாழும் நடுத்தர வயது தம்பதியர் குளிர்தாங்க முடியாமல் வீட்டில் சாளரங்களை எல்லாம் திரைகளால் மூடி சீடேற்றும் சாதனத்தை ஓடவிட்டபடி அமர்ந்திருந்தனர். 

திடீரென அவர்கள் வீட்டின்முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் திரைச்சீலையை விலக்கிப்பார்த்த ஜான் மனைவி மேரியிடம்,

“ஹனி, நம் வீட்டு ட்ரைவையில் ஒரு கார் வந்து நிற்கிறது” என்றார்.

“யாராவது திரும்புவதற்காக நம் பாதையை பயன்படுத்துவார்கள், டியர்” என்றாள் மேரி.

“இல்லையில்லை யாரோ காரிலிருந்து இறங்குகிறார்கள்”

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அவர்களது மகன் ஸ்டீவ் காரிலிருந்து இறங்கி வந்து அழைப்பு மணியை அழுத்த கதவைத் திறந்தார் ஜான். ஸ்டீவ் கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு பீட்ஷா கடையில் டெலிவரி பாயாகவும் வேலை செய்கிறான்.

கதவைத்திறந்த ஜான், “என்ன ஸ்டீவ் இன்னும் உனக்கு வேலை நேரம் முடியவில்லையே? 
அதற்குள் வந்து விட்டாய்? அதுவும் விலையுயர்ந்த காரிலிருந்து இறங்குகிறாய்?”

என்று அப்பா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமுன்னே அம்மா தன் பங்குக்கு,
“என்ன விலையுயர்ந்த காரிலேயே வந்திருக்கிறாய்? யாராவது நண்பனுடைய காரை ஆசைக்கு ஓட்டிப்பார்க்க எடுத்து வந்தாயா?” என்று கேட்டாள்.

பத்திரிகை துறையில் கதம்பமாக மணம் வீசும் மோகன்! - ச . சுந்தரதாஸ்


இற்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சஞ்சிகைத் துறையில் ஓர் இளைஞர் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தார். தனது பத்தொன்பதாவது வயதிலேயே ஒரு மாத சஞ்சிகைக்கு ஆசிரியராகி விட்ட அவர் தான் கே. வி. எஸ். மோகன். அவர் ஆரம்பித்து ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள் வெற்றி கரமாக நடத்திய சஞ்சிகையின் பேர் கதம்பம். அந்த மோகன் மே 30ம் திகதி தனது எண்பத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்!


அன்றைய கால கட்டத்தில் எல்லோரும் வார சஞ்சிகைகளை ஆரம்பித்து நடத்திய போது நீங்கள் ஏன் மாதப் பத்திரிகை ஆரம்பித்தீர்கள் என்று கேட்ட போது , கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் தான் அவ்வாறு ஆலோசனை சொன்னார் , பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்களை விளக்கிய அவர் மாதப் பத்திரிகை என்றால் நடத்துவது சுலபம் , விளம்பரம் சேகரிப்பதும் சுலபம் என்று ஆலோசனை சொன்னார் என்கிறார் மோகன்.

பத்திரிகை உலகிற்கு திடீரென்று வந்து குதித்தவர் அல்ல மோகன்.

வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய கே. வி. எஸ். வாஸ் என்ற எழுத்துலக ஜாம்பவானின் வாரிசுதான் மோகன். ரஜனி என்ற பெயரில் அவர் எழுதிய நாவல்கள் மிகவும் பிரபலம். அந்த வாஸின் வழித் தோன்றலாக கதம்பம் மாத இதழை 1959ம் வருடம் தொடங்கினார் மோகன். எழுத்துலகில் நுழையத் துடித்துக் கொண்டிருந்த ஏராளமான இளம் எழுத்தாளர்களுக்கு கதம்பம் ஒரு வடி காலாக விளங்கியது. பிரபல எழுத்தார் தெளிவத்தை ஜோசப் எழுதிய முதல் கதை, காரைக்குடி நாராயணன், ஜோதிர்லதா கிரிஜா என்று பலருக்கு கதம்பம் எழுத்துலக வாசலைத் திறந்து விட்டது.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வார , மாத சஞ்சிகைகள் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு போன ஒரே தமிழ் மத இதழ் கதம்பம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. அந்த வகையில் இலங்கை, இந்தியாவுக்கு இடையே இலக்கிய பாலம் அமைத்த பெருமை மோகனுக்கும், கதம்பத்துக்கும் உண்டு.

அறுபதாம், எழுபதாம் ஆண்டு கால கட்டத்தில் மோகன் முழு வீச்சில் பத்திரிகைத் துறையில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். மூதறிஞர் ராஜாஜி, ஜவர்ஹலால் நேரு, இந்திரா காந்தி , சிறிமாவோ பண்டாரநாயக்க , அறிஞர் அண்ணா, எம் . ஜி. ஆர், சிவாஜி, என்று அவர் சந்தித்த பிரபலங்களும், அவர்களுடனான அனுபவங்களும் நீண்ட பதிவுகளாகும். அன்றைய கதம்பம் வாசகர்களுக்கு அவை சுவையாக படைக்கப் பட்டன.

ஆயிரத்தில் ஒருவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


ஒரு நட்சத்திர நடிகர், ஒரு தயரிப்பாளர் இயக்குனருக்கு இடையிலான பிரிவு, இரு இசையமைப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரிவு, ஒரு சூப்பர் ஸ்டார் , ஒரு முன்னணி நடிகை இடையில் தோன்றிய மனஸ்தாபம் இவற்றுக்கு எல்லாம் வடிகாலாய் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

 

சிவாஜியின் படத் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் விளங்கிய பி ஆர் பந்துலு தான் எடுத்த முரடன் முத்து படத்துடன் சிவாஜியின் நட்பை உதறி விட்டு எம் ஜி ஆரின் கரத்தை பற்றிப் பிடித்துக் கொண்டார். மெல்லிசை மன்னர்களாக வலம் வந்த விஸ்வநாதன் , ராமமூர்த்தி இருவரும் இறுதியாக இணைந்து இசையமைத்து விட்டு இப் படத்தோடு பிரிந்தார்கள் . தொடர்ந்து இணைந்து நடித்த எம் ஜி ஆர் , சரோஜாதேவி இருவருக்கு இடையே மனதளவில் விரிசல் தோன்றியதை வெளிப்படுத்திய படம் என்று சொல்லும் வண்ணம் 1965ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் உருவானது.
 

பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்ணைக் கவரும் வெளிப்புற படப்பிடிப்பு, வண்ணத்திரை காவியம், அழகான ஆடை அணிகலன்கள் என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்களே அவை எல்லாம் ஒருங்கே அமைந்த படமாக ஆயிரத்தில் ஒருவன் அமைந்தது. அது மட்டுமன்றி எம் ஜி ஆர் அது வரை காலமும் ஏற்று நடிக்காத கடற் கொள்ளைக்காரன் வேடம் ஏற்று நடித்து ரசிகர் மனதை கொள்ளை கொண்ட படமாகவும் இப் படம் அமைந்தது.

எழுத்தாளர் குகப்பிரியை - முனைவர் இரா. பிரேமா

 


இலங்கைச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை !

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை !

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பொறியியல் பிரிவுக்கு AMO சான்றிதழ்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 6 மாத கால புனர்வாழ்வு

 வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது தென்பகுதி அரசியல்வாதிகள் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகிறது - வடக்கு ஆளுநர் நோர்வே பிரதித் தூதுவரிடம் சுட்டிக்காட்டு

தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை


முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை !

29 May, 2025 | 12:08 PM

ச.தொ.ச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்துள்ளார்.  

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நிறுவனம் ஒன்றின் மூலம் 14000 கரம்போர்ட் மற்றும் 11000 டாம்போட்  ஆகியவற்றை வாங்கி விளையாட்டு கழகங்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக நளின் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

உலகச் செய்திகள்

காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்

ஒபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக இந்திய முப்படை தலைமை தளபதி தகவல்

60 நாள் யுத்தநிறுத்த திட்டத்தை முன்வைத்தது அமெரிக்கா- இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது - ஹமாஸ் ஆராய்கின்றது.

 பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்- நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு 


காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்

01 Jun, 2025 | 12:50 PM

காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியை நோக்கிவந்த இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலை மேற்கொண்டன என உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

சிட்னி இசை விழா 2025

 












வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநாக்ஷத்திரம் 09/06/2025

 

நம்மாழ்வார் திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) பிறந்தார். தனது வாழ்நாள் முழுவதும் (இந்த சம்சாரத்தில் 32 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது), புளியமரத்தடியில் (திருப்புலி ஆழ்வார்) தங்கியிருந்து, ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியே எப்போதும் யோகத்தில் (தியானத்தில்) இருந்தார்.

நம்மாழ்வார் 4 திவ்ய பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

· திருவிருத்தம் (ரிக் வேத சாரம்)

· திருவாசிரியம் (யஜுர் வேத சாரம்)

· பெரிய திருவந்தாதி (அதர்வண வேத சாரம்)

· திருவாய்மொழி (சாம வேத சாரம்)

நம்மாழ்வாரின் பிரபந்தங்கள் 4 வேதங்களுக்கு இணையாக இணைக்கப்பட்டுள்ளன. அவர் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றும் அழைக்கப்படுகிறார் - தனது தமிழ் பிரபந்தங்கள் மூலம் சமஸ்கிருத வேதங்களின் சாரத்தை வழங்கியவர்.

இதன் முன்னோட்டமாக, ஜூன் 7ஆம் தேதி தொடங்கி, ஜூன் 9ஆம் தேதி காலை வரை தினமும் மாலையில் திவ்யப் பிரபந்தம் (திருவோய்மொழி -1102 பாசுரங்கள்) ஓதப்படும்.

நிரல்

காலை 09.00 மணி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சன்னதியில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி தாயார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதை மற்றும் ஸ்ரீ லட்சுமணர் மற்றும் பிற தெய்வங்களுக்கு அபிஷேகம்.

காலை 10.30 மணி: சுவாமி நம்மாழ்வாருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்).

தொடர்ந்து அலங்காரம், மகா தீபாராதனை, சதுர்முறை நடைபெறும்.

சைவ மன்றம் பெருமையுடன் வழங்கும் கலை அரங்கம் 15/06/2025

 


ஆஷாதன நவராத்திரி மற்றும் மஹா சண்டி ஹோமம் 26/06/2025

 


சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஜூன் 26, 2025
வியாழக்கிழமை முதல் ஜூலை 04, 2025 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாள் ஆஷாதன நவராத்திரி விழாவிற்கு துர்கா தேவியின் ஆசிகளையும் அருளையும் பெற பக்தர்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஜூன் 29, 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.

மஹா சண்டி யாகத்தில் கலந்து கொண்டு துர்கா அன்னையின் அருளைப் பெற ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானம் உங்களை அன்புடன் அழைக்கிறது.


வராஹி அம்மன் கும்பாபிஷேகம் 22/06/2025

 


(ஈதக) தொண்டு இரவு விருந்து நடனம் 28/06/2025

 


சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025