தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

காத்திடுவோம் வாருங்கள் !


































மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா



பண்பாடு கலாசாரம் காத்திடுதல் முக்கியமே
பண்பாடு கலாசாரம் கண்போன் றிருக்கிறது
கண்ணின்றி வாழ்தல் எண்ணவே முடியாது
கண்ணான கலாசாரம் காத்திடுவோம் வாருங்கள்

காட்டிலே திரிந்தோம் நாட்டை உருவாக்கினோம்
கடவுளை உணர்ந்தோம் கருணையை அறிந்தோம்
மனிதனாய் வாழ வழிகளும் கண்டோம் 
இலக்கியத்தை  இலக்கணத்தை எம்முடமை ஆக்கினோம்

பண்பாடு கலாசாரம் பலவாறு காத்தோம்
பாருலகில் பக்குவமாய் வாழவும் செய்தோம்
நாகரிக எல்லைக்குள் நச்சுக்குள் புகுந்திடவே
பண்பாடு கலாசாரம் பதறியே துடிக்கிறது

உத்தமமாம் நிராதார யோகம் இயற்றி உய்யும்வழி தனைத்தேர்ந்து சிவனடி சேர்வாம்! xx




இயற்றியவர் சிவஞானச் சுடர்பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார் 





 ‘ஊனுடம்பு ஆலயமாம் ஒப்புயர் விலாச்சிவன்

        உவந்துறையும் உள்ளம்பெருங் கோயில்’என்று

மானுடர்க்கு உணர்த்தியதே தமிழ்த்திரு மந்திரம்!

    ‘  மகத்தான பிறப்பான மனிதப் பிறப்பை’

 ‘வானுறையும் தேவருக்கும் கிட்டா தொன்றை ’

        வையகத்து மனிதனவன் பெற்றி ருந்தும்

தானுணர்ந்து பிறப்பினது இலக்கை எய்தத்

        தவறியவன் இறந்துபிறந் துழல்கின் றானே!   




         

      

                 

     






அழிவற்றவெம் உயிருக்குத்  தந்த உடலுடன்

        அறவாழ்வில் வாழ்வாங்கு  வாழ்ந்து வினைகள்

அழிவுற்ற நிலைகாண அகவழி பாட்டை

        ஆற்றியிறை பணியியற்றித் தியான வழியால்          

அழிவில்லாப் பேரின்பந் தன்னை வேண்ட

         அனைத்துப்பா சங்களெல்லாம் அகற்றி ஈற்றில்          

அழிவோபிறப் பிறப்போவிலாப் பேற்றை ஈய்ந்து

         அந்திவண்ணன் அடைக்கலந்தந் தணைப்பா னன்றோ?   

  

திருவெம்பாவையை எம் சிந்தையில் இருத்துவோம் !

 





 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 

மெல்பேண்…. அவுஸ்திரேலியா 



உலகில் பல மொழிகள் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பினை உடை யதாய் விளங்குகின்றன என்பதுதான் பொதுமையான கருத்தாகும். இவற்றுள் எங்கள் தாய் மொழியான தமிழ் ஒன்றேதான் பக்தியைப் பாடிக் கொண் டாடிய மொழி என்பதும் மிக மிகச் சிறப்புடையதாகும். தமிழ் என்றால் பக்தியின் மொழி என்று துணிந்து கூற லாம். அந்தளவுக்கு பக்தியை இலக்கியம் ஆக்கிய பெருமை எங்கள் தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான தாகும் என்று உரத்தே உரைக்கலாம். பக்தியை இலக்கியம் ஆக்கியமையால் பண்கசிந்த தமி ழும் பக்குவத் தமிழும் பாடிப் பரவிடும் தமிழும் இன்னிசைத் தமிழும் இயைய வைக்கும் இங்கிதத் தமிழும் எமக்கு பெரும் பொக்கிஷமாகக் கிடைத்தன என்பதை மனமிருத்துவது மிகவும் முக்கியமாகும்.சைவமும் வைணவமும் பக்தி இலக்கியத்திக்கு வழங்கிய பெருங்கொடைகள் -தமிழை யாவரும் வியந்தே பார்த்திட வைத்திருக்கிறது . அந்த வகையில் மார்கழியில் மனம் அமரும் வகையில் - வாசகர் மணித் தமிழும் , கோதையின் கொஞ்சு தமிழும் கொண்டாடிப் போற்றும் வகையில் மலர்ந்திருக்கிறது என்பது மனக்கொள்ளத்தக்கது. 

மணிவாசகப் பெருமான் தமிழ் மனத்தை உருக்கிட வைக்கும் தமிழ் .சினத்தை அகற்றிட வைக்கும் தமிழ். சிந் தனையைத் தூண்டுந் தமிழ். சிவனை நினைந்து நெக்குருக வைக்குந் தமிழ். தாழ்வாய் உரைத்து தலை வணங் குந் தமிழ். இத்தகு தமிழால் எட்டா நிலையில் இருக்கும் எம்பொருமானை இயம்பிடும் வகை யில் எட்டாந் திரு முறையாய் அமைந்து ஏற்றிப் போற்றப்பட்டுக் கொண்டிருக்குந் தமிழ். திருவாசகம் என்னும் தேன்தான் அந்தத் திருமுறைத் தமிழ்.அந்தத் திருவாசகத்தில் ஒன்றாய் அமைந்திருப்பதுதான் மார்கழியில் மனமமரும் வாசகரின் திருவெம்பாவை என்னும் திவ்விய தமிழாகும். திருவண்ணாமலையில் மணிவாசகரால் மனமுருகிப் பக்திப் பெருவெளியில் உற்ற துணையாக வந்தமைந்த தமிழ்தான் திருவெம்பாவை என்னும் சிறப்புடைத் தமிழ் என லாம்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி " - என்றுதான் மணிவாசகர் திருவெம்பாவையினைத் தொட ங்குகிறார்.  " போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே " என்று நிறைவு செய்கின்றார். இருபது பாடல்கள் இறையினைப் பற்றியும் அவரின் இயல்பினைப் பற்றியும் இறையினைத் தொழுதிடும் அடியவர் மனநிலை பற்றியும் இறையடியார்கள் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பற்றியும் பக்குவ மாய் காட்டுகின்றார். அதற்காக அவர் பாவைப்பாட்டு என்னும் சங்கத்தமிழ் வழியில் பயணப்படுவதையும் காண்கின்றோம். 

கவிதை..."குறுங்கவிதை(ஹைகூ)!"... மெல்போர்ன் அறவேந்தன்


 








தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 8…..சங்கர சுப்பிரமணியன்.

வாகன ஓட்டியின் தவறால் குறித்த நேரத்துக்குள் போய்விடுவோமா என்ற சந்தேகம் வலுத்தது. நான் கடவுளையும் வேண்டமுடியாது. இவ்வளவு நாளாக கடவுள் இல்லையென்று சொல்லிவிட்டு காரியம் ஆக கடவளை வேண்டினால் வச்சு செஞ்சுடுவார். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களையே செல்வந்தர்களை ஒருமாதிரியும் ஏழைகளை ஒருமாதிரியும் தானே கடவுள் பார்க்கிறார்.


என் நண்பர் ஒருவர், ஒரு பங்கு கொடுத்தால் பத்து பங்கு கொடுப்பாராம் ஒரு கடவுள் என்றார். இல்லாதவன் ஒரு ரூபாய் கொடுத்தால் பத்து ரூபாய்தான் கொடுப்பார். அதுவே இருப்பவன் ஒரு லட்சம் கொடுத்தால் பத்து லட்சம் கிடைக்குமாம். உண்மை இல்லாமலா தங்கம், வைரம், வெள்ளி பணம் என்று எல்லாவற்றையும் கொட்டுகிறார்கள். இல்லாதவர்களுக்கு கொடுப்பதே நியாயம். நம்மைக் காப்பவருக்கு நாம் கொடுப்பது என்ன நியாயமோ?

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்?

ஒருத்தருக்கா கொடுத்தான்?  இல்லை ஊருக்காக கொடுத்தான் என்ற பாடலை எல்லாம் கேட்டுவிட்டு தேவைப்படாத ஒருத்தருக்கு கொடுப்பதில் என்ன நியாயம்? இது யார் குற்றம்? படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன் மேல் பாவமில்லை. கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார். உழைத்தவர்கள் தெருவில் நின்றார் என்று படகோட்டி படத்தில் எம். ஜி. ஆர் பாடிய
பாடல் வரிகள் சரியாகத்தான் உள்ளன.

என்ன கொண்டு வந்தாய் எதை எடுத்துக் கொண்டு போவாய் என்று கடவுளே சொல்லியிருக்கிறாரே என்று கொடுப்பவர்களிடம் சென்று சொல்லமுடியுமா? கடவுள் இவற்றையெல்லாம் எங்கு எடுத்துக்கொண்டு போவார்?

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில்  திருவிழா ஆரம்பம்

21 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்

28 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா

01 - 03 - 2026 Sunசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா

02 - 03 - 2026 Monசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா

07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா

                                at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200

`நிர்மலன் VS அக்சரா’ சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

 

நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை உலுப்புவது போல உலுப்பிவிட்டுச் சிரித்தார் தவராசா.

 புளியம்பழங்கள் ஒன்றும் உதிர்ந்து விழவில்லை. மாறாக வெறித்த பார்வையுடன் தவராசாவை உற்று நோக்கினான் நிர்மலன்.

 “நிர்மலன்… குளிச்சுப்போட்டு சாப்பிட வாரும். வெளிக்கிட்ட நேரத்திலையிருந்து நல்ல சாப்பாடும் சாப்பிட்டிருக்கமாட்டீர்” என்றார் தவராசாவின் மனைவி ஈஸ்வரி.

 நிர்மலன் இலங்கையிலிருந்து ஒன்பது மணி நேரம் வான் பறப்பை மேற்கொண்டு, தனது திருமணத்திற்காக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையில் நிர்மலனிற்கு அம்மாவும் அக்காவும் இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் உறவினர் என்று சொல்லிக் கொள்வதற்கு தவராசாவையும் ஈஸ்வரியையும் தவிர வேறு ஒருவரும் அவனுக்கு இல்லை. ஈஸ்வரி நிர்மலனின் அம்மா வழி உறவு. அவர்கள் இருவரும் தான் நிர்மலனின் திருமணத்திற்கான பெற்றோர்கள். இந்தக் கலியாணத்தை சரிவரப் பொருத்தியவர்கள்.

 சாப்பாடு பரிமாறும் போது பொரித்த கோழிக்காலையும், அவித்த முட்டையையும் எடுத்து நிர்மலினின் சாப்பாட்டிற்குள் புதைத்து வைத்துவிட்டு, “உம்… இனிச் சொல்லு” என்றார் ஈஸ்வரி.

 நிர்மலன் சாப்பாட்டைப் பார்த்தான். தீக்கோழி தலையை மணலிற்குள் புதைத்து உடம்பை வெளியே நீட்டுவது போல, கோழிக்காலின் ஒருபகுதி வெளியே நீண்டிருந்தது.

முன்னே எதிராகவிருந்த ஆசனங்களில் ஆணும் பெண்ணுமாக, ஈஸ்வரியின் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். வயதில் மிகவும் சிறியவர்களான அவர்கள் நிர்மலனின் முகத்தையும் கோழிக்காலையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார்கள்.

 “இரண்டுபேரும் சாப்பிட்டியள்தானே. ஓடுங்கோ… ஓடிப்போய் படியுங்கோ” ஈஸ்வரி இரண்டு பிள்ளைகளையும் துரத்திவிட்டார்.

 நிர்மலன் இன்னமும் விமானநிலையக் காட்சியிலிருந்து மீளவில்லை. சந்திரமண்டலத்திற்குப் பயணிப்பவர்களின் தோற்றத்தில் வந்திறங்கிய நிர்மலனுக்கு விமானநிலையத்தில் இருந்த வரவேற்பு பிரபலங்களுக்குச் சமானமாக இருந்திருந்தது. மணப்பெண் அக்சராவின் தரப்பில் இருந்து பலர் வந்திருந்தார்கள். தவராசா குடும்பத்திலிருந்து நால்வர். கோலாகல வரவேற்பு. பூச்செண்டுடன் சின்னதாக ஒரு `ஹக்’கும் குடுத்து, நிர்மலனை திக்குமுக்காடச் செய்திருந்தாள் அக்சரா. அவள் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள், அவளிடமிருந்து பிரிந்துவந்த வாசனை எல்லாமே நிர்மலனை கிறங்கடித்திருந்தது. என்ன நவ நாகரீகமான பெண் அவள்! வியப்புற்றான் நிர்மலன்.

 “ஈஸ்வரி அக்கா….” சொல்ல முடியாமல் திண்டாடினான் நிர்மலன்.

 “சொல்லன்ரா…!”

தகுதியறிந்து…!



-சங்கர சுப்பிரமணியன்.



தன் வீட்டிலிருந்து சில கல் தொலைவில் இருந்த நெடுஞ்சாலையில் உதவலாமா வேண்டாமா என்று நினைப்பவர் போல நிழல் கொடுக்கலாமா வேண்டாமா என்ற நிலையிலுள்ள ஒரு மரத்தடியில் அந்த மூதாட்டி அமர்ந்திருந்தாள். அவள் அங்கு அமர்ந்து நெடுஞ்சாலையில் பயணிப்போரை எதிர்பார்த்து முட்டை வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.


அவளுக்கு அந்த முட்டைகளை விற்றுக் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் வயிற்றுக்கு உணவளித்துக் கொண்டிருந்தது.
எதிர்பார்த்தபடியே ஒரு விலையுயர்ந்த ஆடம்பரமான கார் ஒன்று வந்த நின்றது. காரைப்பார்த்த மூதாட்டி இன்று நல்ல வியாபாரம்தான் என்று எண்ணியபடி மனதுக்குள் மகிழ்ந்திருந்தாள்.

காரிலிருந்து இறங்கிய இளம்வயதுப் பெண் மூதாட்டியைப் பார்த்து,

“பாட்டி, முட்டை என்ன விலை?” என்றாள்.

“ஐந்து டாலருக்கு ஆறு முட்டை”

“என்ன பாட்டி, அநியாயமா விலை சொல்றீங்க. எட்டு முட்டை ஐந்து டாலருக்கு கொடுங்க”

“இல்லம்மா, கட்டுபடியாகாது. இதில் கிடைக்கும் குறைந்ந வருமானத்தை வைத்தே நான் சாப்பிடுகிறேன்” என்றாள் மூதாட்டி.

ஆனால் இளம் பெண் விடாமல் பேரம்பேசினாள். பாட்டிக்கு காலையிலிருந்து நன்பகல்வரை எதுவுமே வியாபாரம் ஆகவில்லை. வேறு வழியின்று வந்த வியாபாரத்தை விடமுடியாமல் அந்த பெண் கடைசியாக கேட்டபடி ஐந்து டாலருக்கு ஏழு முட்டையைக் கொடுத்தாள்.

இலங்கைச் செய்திகள்

 புதிய அரசியலமைப்பு உருவாக்க தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வாய்ப்பு ; அதுவரை 13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்க வேண்டும் - சர்வதேச சிறுபான்மையினக்குழு வலியுறுத்தல்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் தேவராசா - மட்டக்களப்பில் நினைவேந்தல்!

 இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்; பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவிப்பு

பதுளையின் 68% நிலம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது - தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!

மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்த அழுத்தம் வழங்குங்கள் ; இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் 



புதிய அரசியலமைப்பு உருவாக்க தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வாய்ப்பு ; அதுவரை 13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்க வேண்டும் - சர்வதேச சிறுபான்மையினக்குழு வலியுறுத்தல்

Published By: Vishnu

25 Dec, 2025 | 06:46 PM

(நா.தனுஜா)

தேசிய மக்கள் சக்திக்கான சிறுபான்மையினத்தவரின் ஆதரவு என்பது இதுவரை சிறுபான்மையின அரசியலை வடிவமைத்த அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளான மனித உரிமைகள், நீதி மற்றும் அரசியல் சுயாட்சி என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு சமமானதா? என 'சர்வதேச சிறுபான்மையினக்குழு' எனும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அதேவேளை இலங்கையின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் கூடிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பு தேசிய மக்கள் சக்தி வசமிருப்பதாகவும், அதனை உருவாக்கும் வரை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உலகச் செய்திகள்

வெனிசுவெலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா

பங்களாதேஷில் வெடிக்கும் வன்முறை - பிஎன்பி கட்சித் தலைவரின் வீடு தீக்கிரை : ஏழு வயது மகள் படுகொலை

அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்



வெனிசுவெலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா


Published By: Digital Desk 2

22 Dec, 2025 | 01:47 PM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுவெலாவில் மற்றொரு எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் அமெரிக்க கடலோரக் காவல் படையினர் குறித்த கப்பல்  சிறைபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவெலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

திருவெம்பாவை திருவிழா & ஆருத்ரா தரிசனம் வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025 முதல் சனிக்கிழமை, 3 ஜனவரி 2026 வரை

 






திருவெம்பாவை :

மாணிக்கவாசகரின் படைப்பான ‘திருவெம்பாவை’ என்பது இருபது பாடல்களின் தொகுப்பாகும். இதில், ‘பாவை நோன்பு’ அனுஷ்டிக்கின்ற ஒரு பெண்ணாக தம்மை கற்பனை செய்து, சிவபெருமானை போற்றிப் பாடியுள்ளார்.

திருவெம்பாவை பாடல்கள், திருமணமாகாத இளம் பெண்கள் மார்கழி மாதத்தின் அதிகாலை நேரங்களில் விளக்கேற்றி, சிவபெருமானை போற்றிப் பாடும் ஒரு பண்டைய மரபின் பகுதியாகும். திருவெம்பாவையின் 20 செய்யுள்களும் தினமும் பாராயணம் செய்யப்படுகின்றன. இவ்விதமான வழிபாடுகள் பெண்களுக்கு செழிப்பு, நல்வாழ்வு மற்றும் நல்ல கணவரை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

2025 வைகுண்ட ஏகாதசி

 

வைகுண்ட ஏகாதசி என்பது இந்துக்களுக்குப் பெரிதும் முக்கியத்துவமும் புனிதத்தன்மையும் கொண்ட நாளாகும். இது விஷ்ணுபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நாள் இந்து நாட்காட்டியின்படி மார்கழி மாதத்தில் (டிசம்பர்–ஜனவரி இடைப்பட்ட காலத்தில்) வருகிறது. இந்த நாளில் வழிபாடு மேற்கொள்ளப்படும்போது, பிறப்பு–மறுபிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது.

பத்ம புராணத்தின் படி, விஷ்ணுவின் பெண் சக்தி “முரன்” என்ற அரக்கனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தாள். இது சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்யும் காலத்தில், சந்திர மாதத்தின் பதினொன்றாம் நாளான ஏகாதசி திதியில் நிகழ்ந்தது. இந்த வீரச்செயலால் மகிழ்ந்த விஷ்ணு, அந்த சக்திக்கு “ஏகாதசி” என்று பெயரிட்டு, முரனை வென்ற அந்த நாளில் ஏகாதசியை வழிபடும் அனைவரும் அவரது இருப்பிடமான “வைகுண்டம்” அடைவார்கள் என்ற வரத்தை அளித்தார்.

ஆங்கில புத்தாண்டு 2026

 





சம்ஹிதா 07/02/2025

 





சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா 2026


 









அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா