சிட்னியில் தரிசனம் 2022 - ஆர்.ஜெ. யாழவன்

.

இலங்கையில் கல்வித்தேவை நாடி நிற்கும் பாடசாலைகளுக்கு உதவி செய்யும் நோக்கோடு நிதி சேகரிக்கும் " இளைய நிலா பொழிகிறதே" என்கின்ற இசை நிகழ்ச்சியை தரிசனம் நிறுவனம் 24. 9. 2022 சனிக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தனர்.

 

இரண்டாவது தடவையாக இளையநிலா பொழிகிறதே  நிகழ்ச்சியை அவினாஷுடன்  இணைந்து  தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. நிகழ்ச்சிக்கான முன் ஆயத்தங்கள்  , ஒழுங்கமைப்புகள் , திட்டமிடல்,பயிற்ச்சிகள், திட்டமிடட விடையங்களை மேடையிலும் மண்டபத்திலும் நடைமுறைப்படுத்திய விதம், நிகழ்ச்சி , நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களின் பாராட்டுக்கள் அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தவன் என்ற வகையில் இளையோர்களின் பெரும் பங்களிப்போடு நடந்தேறிய இந்த இசை நிகழ்ச்சியைப்பற்றி எழுதாமல் இருப்பது மாபெரும் குற்றமாக கருதுகிறேன்.

 

கேஷிகா அமிர்தலிங்கம் 15 வயது சிறுமியாக இலங்கை தொலைக்காட்சி ஒன்றின் இசைபோட்டிக்கு பங்குபெற்ற அவுஸ்திரேலியாவில் இருந்து சென்றபோது அவரது பெற்றோர்கள் மலையகதில் பின்தங்கிய பிரதிதேசங்களுக்கு கூட்டிச்சென்று காட்டிய போது கேஷிகாவின் மனதில் தோன்றிய எண்ணக்கருதான் தரிசனம் . தரிசனத்தினுடைய நோக்கத்தை மிக சிறப்பாக கடடமைத்திருந்தார் கேஷிகா . தரிசனத்தின் நோக்கமானது  இலங்கையில் கல்வித்தேவை நாடி நிற்கும் பாடசாலைகளுக்கு உதவி செய்வதோடு அவுஸ்ரேலிய இளம் கலைஞர்களுக்கு மேடைஅமைத்துக்கொடுத்து அவர்களின் திறமைகளை மக்கள் முன்  கொண்டு சென்று அதில்  இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு உதவி செய்வது . இதன் அடிப்படையில் கடந்த ஆறு வருடங்களாக வெற்றிகரமாக பல இளம் மற்றும் சின்னஞ்சிறு குழந்தை கலைஞர்களை  ஒன்றிணைத்து அவர்களுடைய அற்பணிப்பையும்  திறமையும் மக்கள் முன் கொண்டுசென்று அதனூடாக கிடைத்த பணத்தை வைத்து பல செயல் திட்டங்களை செய்திருந்தனர்.

 

அவனிதனில் வாழ்வெமக்கு அற்புதமாய் மலர்ந்திடுமே !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா


வெண்ணிலவு தேய்கிறது மீண்டுமது ஒளிர்கிறது

எண்ணியது பார்ப்பதில்லை ஏக்கமதும் கொள்வதில்லை
இவ்வுலகில் வாழ்க்கையது ஏறியேறி சரிகிறது
இதையெண்ணி ஏக்கமுறல் ஏற்றதுவா எண்ணிடுவீர் 

மண்முளைக்கும் வித்துக்கள் எத்தனையோ குவிந்திருக்கு
வித்துக்கள் அத்தனையும் விருட்சங்கள் ஆவதுண்டா 
விருட்சங்கள் ஆவதுவே விருப்பமெனக் கொண்டுவிடின்
எத்தனையோ வித்துக்கள் ஏக்கமே கொண்டுவிடும் 

மலருகின்ற மலரனைத்தும் வாசமதைத் தருவதுண்டா

வாசமதை வழங்காமல் மலர்களுமே மலர்கிறதே 
மலருகின்ற நினைப்பினிலே மலரனைத்தும் திகழ்கிறது
வாசமில்லா மலர்கூட வண்ணமாய் ஜொலிக்கிறதே 

எத்தனையோ கனிகொடுத்தும் எம்மரமும் சலித்ததில்லை
தித்திக்க கனிகொடுத்து திருப்தியதே அடைந்திருக்கு 
மற்றவர்க்குச் சுவைகொடுக்க மரம்விரும்பி நிற்கிற்கிறது
மனிதமனம் உணர்விழந்து மரம்வெட்டி மகிழ்கிறது 

மரமெங்கள் துணையாகும் மரமெங்கள் வாழ்வாகும்

எழுத்தாளர் பொன்.குலேந்திரன் காலமானார் - கானா பிரபா

 


எழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்கள் காலமானர் என்பதை அறிந்து ஆழ்ந்த துயருறுகிறேன்.


அவரின் “யாழ்ப்பாணத்தான்” நூலுக்கு முன்னர் நான் வழங்கிய அணிந்துரையில் அவருக்கும் எனக்குமான பந்தத்தைப் பகிர்ந்திருந்தேன். இப்படி

யாழ்ப்பாணத்தான் - சிறுகதைத் தொகுப்பு 
அணிந்துரை
 
பெருமதிப்புக்குரிய பொன்.குலேந்திரன் அவர்களது எழுத்துகளுக்கும் எனக்குமான பந்தம் ஒரு தசாப்தம்கடந்தது. கனடாவை மையப்படுத்தி வெளி வந்த குவியம் இணைய மாத சஞ்சிகையின் தீவிர வாசகனாகஅப்போது இருந்தேன். இணைய எழுத்துகள் என்றால் நுனிப் புல் மேய்தல், பிறர் ஆக்கங்கங்களைப் பிரதிபண்ணுதல் போன்ற மோசமான இலக்கணங்கள் பதிந்திருந்த சூழலில் குவியம் இணையப் பத்திரிகையின்அறிவியல் தளமும், அதன் சுயமும் அப்போது என்னுள் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அதன் வழியாகஅறிமுகமானவர் தான் திரு பொன்.குலேந்திரன் அவர்கள். அறிவியல், ஆன்மிகம், அரசியல் என்று பல்துறைநோக்கில் கட்டுரைகள் தொட்டு கதைகள் வரை எழுதும் பன்முகப் படைப்பாளி. 

எழுத்தும் வாழ்க்கையும் - ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 35 குழந்தைகளிடமிருந்து நாம் கற்பதும் பெறுவதும் ! முருகபூபதி


ஒரு காலகட்டத்தில், எனக்கு நெருக்கமான சிநேகிதனாக இருந்தவன்  எனது மகன் முகுந்தன். அது அவனது இளமைப்பருவ காலம்.

இரவில் என்னோடுதான் உறங்குவான். அவ்வேளைகளில் அவனுக்கு


கதைகள் சொல்லவேண்டும்.  ( Bed time stories ) எனது பாட்டி தையலம்மா என்னை உறங்கவைத்த காலத்தில் எனக்குச்சொன்ன கதைகளைத்தான், காலப்போக்கில் நான் எழுத்தாளனாக வந்த பின்னர் பாட்டி சொன்ன கதைகள் தொடராக லண்டனிலிருந்து வெளியான தமிழன் இதழில் வெளியானது.

அந்தத் தொடர் புத்தகமாக்கப்பட்டபோது அதன் ஆசிரியர் எஸ்.கே. காசிலிங்கம் அணிந்துரை எழுதினார். மல்லிகைப் பந்தல் வெளியீடாக நண்பர் செ. கணேசலிங்கனின் ஏற்பாட்டில்  சென்னை குமரன் பதிப்பகத்தால் அச்சாகியது.  மல்லிகை ஜீவா அதற்கு பதிப்புரை எழுதியிருந்தார்.


இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு 1997 இல் மெல்பனில் நடந்த பின்னர், எங்கள் நீர்கொழும்பில் மல்லிகை ஜீவா பாராட்டு விழாவுடன் பாட்டி சொன்ன கதைகள் நூலும் அங்கே அறிமுகப்படுத்தப்பட்டது என்ற செய்தியையும் வாசகர்களுக்கு கடந்த அங்கத்தில் சொல்லியிருந்தேன்.

இந்த நிகழ்விலெல்லாம் கலந்துகொண்ட எனது மகன் முகுந்தன், அவற்றில் பேசிய பேச்சாளர்களின்  உரைகளையும் மனதில் உள்வாங்கியிருந்தான்.

ஏற்கனவே நான் அவனுக்கு சொன்ன கதைகளாகவும் அவை இருந்தமையால், தனது ஆரம்ப பாடசாலையில்  ( Melbourne – Craigieburn Primary School ) மூன்றாம் வகுப்பில்  கதை எழுதும் பாடத்தில், எனக்கு பாட்டி சொல்லித்தந்து, நான் அவனுக்கு சொல்லிக்கொடுத்த மூளை என்ற கதையை ஆங்கிலத்தில் Brain  என்ற தலைப்பில் எழுதி, அதற்குப்பொருத்தமான படங்களையும் வரைந்து வகுப்பில்  காண்பித்து. ஆசிரியரின் ஊக்கமூட்டும் பதிவையும் அதற்கான வண்ண முத்திரையையும் பெற்றுவந்து எனக்கு காண்பித்தான்.

தொடர்ந்து வேறும் சில கதைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருந்தான்.

பாட்டியின் முன்னோர்களிகளினால், பாட்டிக்கு கடத்தப்பட்டு, பின்னர் பாட்டியிடமிருந்து எனக்கு கடத்தப்பட்டு, அதன்பிறகு என்னிடமிருந்து எனது மகனுக்கு கடத்தப்பட்ட கதைகள் அவை.

அதனால், தலைமுறை தாண்டியும் வாழும் கதைகளாகிவிட்டன.

தமிழ்நாட்டில் பாட்டி சொன்ன கதைகளை அச்சிட்ட நண்பர் செ. கணேசலிங்கன் ஒரு பிரதியை  அங்கிருந்த  நூலக சேவைகளுக்கு அனுப்பியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் அதனைப்படித்துவிட்டு  மேலும் 700 பிரதிகளை கேட்டு வாங்கி ஆரம்ப பாடசாலைகளுக்கு சிறுவர் இலக்கிய வரிசையில் பரிந்துரைத்துள்ளனர். பின்னரும் 1500 பிரதிகளை கேட்டுப்பெற்றுள்ளனர்.

நண்பர் கணேசலிங்கனும்  அவர்கள் கேட்டவாறு மேலும் பிரதிகள் அச்சிட்டு கொடுத்துவிட்டு, எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து சிலாகித்து எழுதியிருந்தார்.

எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சி பொன்விழா காணுகிறது! - ச .சுந்தரதாஸ்

.

தமிழ்நாட்டின் தனிப் பெரும் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் தொடங்கிய அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இவ்வாரம் பொன்விழா காணுகிறது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 72ம் ஆண்டு அக்டோபர் 17ம் திகதி எம் ஜி ஆர் என்ற தனி மனிதனால் தொடங்கப் பட்ட இக் இக்கட்சி பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இன்றும் தொடர்ந்து இயங்குகிறது.


1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய போது அறிஞர் அண்ணா உட்பட ஐந்து தலைவர்களின் வழி நடத்தலுடனேயே அது ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் 23வருடங்கள் கழித்து தி மு க விலிருந்து எம் ஜி ஆர் விலக்கப் பட்டு அ தி மு காவை அவர் தொடங்கிய போத ,தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கை மட்டும் நம்பி தனி மனிதனாகவே அதனை உருவாக்கினார்.அரசியல் களத்தை பொறுத்த வரை இது ஒரு சாதனையாகும்.ஒரு சினிமா நடிகனால் கட்சி தொடங்கி என்ன சாத்தியது விட முடியும் என்று விமர்சனங்களும்,தாக்குதல்களும் முன்வைக்கப் பட்ட போதும் நடக்காததை நடத்திக் காட்டுபவனே விந்தைகளின் தந்தை என்பது போல் கட்சியைத் தொடங்கி அதனை ஆட்சிக்கு கட்டிலிலும் அமர்த்திக் காட்டியவர் எம் ஜி ஆர்.

இருண்ட அறைக்குள் கறுத்தப் பூனைகளைத் தேடும் அரசியல் ! அவதானி

இலங்கையில் தொடர்ந்தும் மின்வெட்டு நடைமுறையிலிருக்கிறது.


  எந்த நேரத்தில்  மின்வெட்டு வரும் என்பது தெரியாமல்,  மக்கள் தங்களது அன்றாட நிகழ்ச்சி நிரலை அமைக்க வேண்டியிருக்கிறது.

மின்வெட்டினால்,  மாணவர்களின் கல்வி மட்டுமல்ல,  மருத்துவம், உற்பத்தி,  கணினி தொழில் நுட்பம், பொருளாதாரம், உட்பட பல  அத்தியாவசிய தேவைகளும் - சேவைகளும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.


இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில்தான், மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சில அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வாசஸ்தலத்தின் மின்கட்டணங்கள் முறையாக இதுவரை செலுத்தப்படவில்லை என்ற செய்திகளும் கசிகின்றன.

இதுபற்றி பாராளுமன்றத்திலும் குரல்கள் எழுந்தபோது,  ஆளையாள் குற்றம் சுமத்தும் நாடகங்கள்தான் அரங்கேறிவருகின்றன.

எதிர்தரப்பைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவர் தங்கியிருக்கும் அரச வாசஸ்தலத்தில் மின்கட்டண நிலுவை   இருப்பதாக அரச தரப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினால்,  “ அது தான் செலுத்தவேண்டிய கட்டணம் அல்ல, தனக்கு முன்னர் அங்கு குடியிருந்த அரசியல்வாதி செலுத்தாமல் விட்ட கட்டணம்  “  என்கிறார் அவர்.

அத்துடன், இதுவரையில் மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர்களையும்  பாராளுமன்ற உறுப்பினர்களையும் சுட்டிக்காண்பிக்கிறார்.

இவ்வாறு ஆளையாள் குற்றம் சுமத்திக்கொண்டு காலத்தை கடத்தி வருகின்றனர்.

வடக்கிலே புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒரு பொது நூலகம் மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக மின்சார சபை அதன் மின் இணைப்பினை துண்டித்துவிட்ட செய்தி பற்றி கடந்த வாரம் சுட்டிக்காண்பித்திருந்தோம்.

மக்கள்,  குறிப்பாக வாசகர்கள், மாணவர்கள் பயன்படுத்திவந்திருக்கும் ஒரு நூலகத்திற்கு மின்சார சபை காண்பித்திருக்கும் நீதி, இந்த அரசியல்வாதிகள் தங்கியிருக்கும் அரசுக்கு சொந்தமான வாசஸ்தலங்களின் மின்கட்டண நிலுவைக்கு என்ன செய்தது? எனக்கேட்கத் தோன்றுகிறது.

இதய வீணை - - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1972ம் வருடம் எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த படங்களுள்


திருப்புமுனையாக அமைந்த படம் இதய வீணை.இந்த படத்தின் துவக்கவிழாவில் கலந்து கொண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தவர் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆவர்.அவர் தலைமை தாங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தில் எம் ஜி ஆர் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தார்.ஆனால் இதய வீணை படம் 72ன் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி வெளிவந்த போது எம் ஜி ஆர் தி மு காவில் இருந்து விலக்கப்பட்டு , அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார்.


இவ்வாறான அரசியல் சூறாவளிக்கு மத்தியிலேயே இதய வீணை

படம் வெளியானது . படத்தை தயாரித்தவர்களுள் ஒருவர் ஆனந்த விகடன் வார இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய எழுத்தாளர் மணியன்.இவர் விகடனில் எழுதிய பல தொடர் கதைகள் வாசகர்களின் வரவேற்பை பெற்றது.அதே போல் இவர் எழுதிய வெளிநாட்டு பயணக் கதைகளும் வாசகர்களின் ஆதரவை ஈட்டியது . எம் ஜி ஆர் தனது சொந்த படமான உலகம் சுற்றும் வாலிபனை ஜப்பானில் படமாக்கிய போது அங்கு படப்பிடிப்புக்கான பல வசதிகளை செய்து உதவியவர் மணியன்.இதனால் எம் ஜி ஆருக்கு நெருக்கமானவர் ஆனார்.அதே போல் வசனகர்த்தாவாகவும்,கவிஞராகவும்,ஜோசியராகவும் விளங்கிய விளங்கியவர் வித்துவான் வே லட்சுமணன்.இவரும் எம் ஜி ஆருக்கு மிக நெருக்கமானவர்.இவர்கள் இருவருக்கும் உதவ வேண்டும் என்ற நல் எண்ணத்தில் எம் ஜி ஆர் அவர்களை படத் தயாரிப்பாளர் ஆக்கி,அவர்களின் படத்தில் நடிக்கவும் செய்தார்.மணியன் விகடனில் எழுதிய நாவலே இதய வீணை என்ற பேரில் படமானது.

தமிழக் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் பத்தாவது வருட நிறைவு விழாவிலே அளிக்கப்பெற்ற வாழ்த்துப்பா

 


பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தமையைக்; கொண்டாடும் முகமாகச் சென்ற 9 -  10 2022 ஞாயிற்றுக் கிழமை  ஒரு இரவு உணவு நிகழ்வுடன் கூடிய பெரு விழா ஒன்றினைப் பெருமையுடன்  தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் அரங்கேற்றியது.  பெருந் திரளாக வருகை தந்து சிறப்பித்த அந்த விழாவிலே வழங்கப்பெற்ற வாழ்த்துப் பாவை தமிழ்முரசு நேயர்களுடன் பகிர்வதிலே மகிழ்ச்சி அடைகிறேன்.

 



கலைமற்றும் தமிழோடு பண்பாடு வளர்த்துக்

                காலத்தின் தேவைதனைப் பூர்த்தி செய்து

விலையறியாத் தனிப்பெருமை கொண்டு பணியில்

                மிகவுயர்ந்து பலர்வாழ்த்த மிளிரும் கழகம்!

தலையாய கழகமெனத் தரணி போற்றத்

                தகைமைசால்  செயற்குழுவும் திறமையோடியக்க

நிலையாக என்றென்றும் கற்பக தருப்போல்

                நின்றுயர்ந்து பலனியற்றி வாழி! வாழி!!


துறைபோன தமிழறிஞர் பலரை அழைத்தவர்

                சொல்;வன்மை விஞ்சவெழும் இலக்கிய விருந்தால்

நிறைவாகத் தமிழின்தேன் மதுரச் சுவையை

                நெஞ்சமெலாம் நிரப்பிடுதே! தமிழரைத் தன்னுட்

சிறைவைத்துத்  தினம்மகிழும் சீர்மிகு  கழகஞ்

                சிறந்துயர ஆணிவேராய்த் திகழுஞ் செம்மல்

மறைபோற்றும் மதுரைப்பதி மண்ணின் மைந்தன்

                மாமனிதன் அனகன்பாபு வளர்த்திட  வாழி!


சிந்தனைசொல் செயல்களிலே திறமை மிக்க

                செயற்குழுவின் கைவண்ணம்செம்மை கூட்ட

விந்தைமிகு கலைஞரையும் சேர்த்த ழைத்தோர்

                வெற்றிவிழா வெனச்சித்திரைத் திருவி ழாவும்

செந்தமிழர் கொண்டாடும் புத்தாண்டை ஒட்டிச்

                சீராய்முத்திரைபதித்தெமைக் கிறங்க வைத்துச்

சுந்தரஞ்சேர் கந்தகுகன் அருளால் இன்றும்

                சோபித்துப் பெருவிழாவாய்த் தொடரு தையா!


பாராளு மன்றங்கள் இரண்டிலுந் தொடர்ந்து

                பாரம்பரி யப்பொங்கல் விழாக்களை நடாத்திச்

சீராகச் செயலாற்றிச் சரித்திரம் படைத்துச்

                சிம்மநடை போடுதேபண் பாட்டுக் கழகம்

சோராது கழகத்தோர் சுயநல மின்றித்

                தூயதமி ழோடுகலை வளர்த்து வாழி!

காரானை முகத்தானின் அருட்செயல் தானோ?

                காலத்தை வென்றென்றும் நிலைத்து வாழி!.

இலங்கைச் செய்திகள்

குளக்கோட்ட மன்னன் நிர்மாணித்த ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை

 கோட்லோஜ் தோட்டத்தில் 25 அடி உயரமான முருகன் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் விழா

காணாமல் போனோரது உறவுகளிடம் விசாரணை

இலங்கை விஞ்ஞானி கண்டுபிடித்த செயலியை வாங்கியது 'ஃபைஸர்'

ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம்

எதிர்கால சந்ததியினருக்காகவே திருமலை அபிவிருத்தி முன்னெடுப்பு


குளக்கோட்ட மன்னன் நிர்மாணித்த ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எல்லை கிராமமான தோணிதாட்டமடு கிராமத்தை காக்கும் குளக்கோட்ட மன்னன் காலத்தில் நிறுவிய ஆதிசிவன் ஆலயத்தில் மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ப சிவலிங்கமும் விநாயகர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  

உலகச் செய்திகள்

 இந்தியா – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் இடையே சந்திப்பு

ஆங் சான் சூகிக்கு 26 ஆண்டுகள் சிறை

மே 06 முடிசூடுகிறார் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ்

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்

ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நாவில் அதிக வாக்கு

சவூதி - அமெரிக்கா இடையே வெளிப்படை மோதல்


 இந்தியா – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் இடையே சந்திப்பு

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டும் அவுஸ்திரேலியாவின் திட்டம் தொடர்பில் இந்தியாவுக்கு எதிர்ப்பு இல்லை என்றும் இது பற்றி சர்வதேச அணு கண்காணிப்பகத்தில் ஆதரவை அளிக்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

அவுஸ்திரேலியா Sidney Focus Thamil இணைய வானொலியின் "அறிவோம் பகிர்வோம் " நிகழ்ச்சியில் எழுத்தாளர் - ஊடகவியலாளர் முருகபூபதியுடன் இலக்கிய ஆர்வலர்கள் திருமதி கலாதேவி பாலசண்முகன் - திருமதி சாந்தி சிவக்குமார் ஆகியோர் நடத்திய கருத்தாடல் அரங்கம்

 


https://youtu.be/4VfZyXB7jCc


பூமி காட்டும் புதினம் (பயணக் குறிப்புகள்) (கன்பரா யோகன்)


நாங்கள் நோர்வேயில் தரையிறங்கத் தீர்மானித்திருந்தது பேர்கன் நகரிலுள்ள விமான நிலையத்தில்தான்.  

துபாயிலிருந்து நேரடியாக பேர்கன் செல்ல முடியாததால் டென்மார்க்கின் கோபன்ஹேகன் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஸ்கண்டிநேவியன் எயர் லைன்ஸ் மூலம் பேர்கனுக்குப் பயணித்தோம். விமானம் பறக்கத் தொடங்கியபோது மதியம் ஒரு மணி. நல்ல வெயில் வெளிச்சத்தில் கீழே டென்மார்க்கின் இரு தீவுகளையும் இணைக்கும் பாலமும் விரிந்து கிடந்த நீலக் கடலும் மனதை உற்சாகத்தில் நனைத்தது.

அரைவாசி தூரத்தைக் கடந்திருப்போம். வெளியே பார்த்தேன்.


விமானம் அசையாமல் நடுக்கடலில் மேல் நின்றது தெரிந்தது.  மனம் துணுக்குற்றது. சில வினாடிகளில் விமான பைலட்டின் அறிவிப்பு டேனிஷ் மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் தெளிவில்லாமல் வந்தது. ஒரு பணிப்பெண்ணும், ஆணும் அவசரமாக கடந்து சென்றனர். கூர்ந்து கவனித்ததில் அந்த அறிவிப்பு விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு என்றும் மீண்டும் உடனடியாக கோபன்ஹேகன் திரும்புவதாகவும் சொல்லப்பட்டிருந்தது தெரிந்தது.

மனைவி கைகளை  கும்பிட்டபடி பிரார்த்தனையைத் தொடங்கி விட்டார்.  நானும் மனதுக்குள் பிரார்த்திக் கொண்டு உடனே பேர்கன் விமான நிலையத்தில் அழைத்துச் செல்லுவதற்காக வரவிருக்கும் செல்வம் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

மீண்டும் கோபன்ஹேகன் விமான நிலையத்துக்கு வந்து மேலும் இரண்டு மணி நேரம் காத்திருந்து அங்கு அவர்கள் தந்த உணவு வவுச்சரைக் கொடுத்து வயிற்றுக்கு எதையோ போட்டு நிரப்பி மீண்டும் அடுத்த விமானமேறினோம். 

டென்மார்க்கில் மொழி டானிஷ் என்பதும் நோர்வேஜியன் மொழியை நோஸ்க் (Norsk) என்பதும், இரண்டு நாடுகளும் டானிஷ் க்ரோனர், நோர்வே க்ரோனர் என்ற இரு வேறு கரன்சிகளைப் பாவிக்கின்றனர் என்பதும் அறிந்திருந்தேன். நோஸ்க்கிலுள்ள எழுத்துமுறை  ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துக்களுடன் மேலும் மூன்று எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது. அந்த மூன்று எழுத்துக்களில் ஒன்று சைபர் ஒன்றைக் குறுக்கறுத்தது போன்றது. மற்றையது A ஐயும் E ஐயும் சேர்த்த எழுத்து, மூன்றாவது A எழுத்துக்கு மேலே சுழியொன்றைக் கொண்டது.

என்றும் பதினாறு – ஐந்து நிமிடக் குறும்திரைப்படப் பிரதி - கே.எஸ்.சுதாகர்

நான்கு பாத்திரங்கள் :        ரவிச்சந்திரன், மோகன், இளம் பெண்,

முதியவர் (இளம்பெண்ணின் தந்தை)

 

காட்சி 1

வெளி

மெல்பேர்ண், அவுஸ்திரேலியா

இரவு

மெல்பேர்ண் நகரின் ஒரு புறநகரப் பகுதி. மழை தூறிக் கொண்டிருக்கின்றது. ஒரு சில வாகனங்கள் வீதியில் போய்க் கொண்டிருக்கின்றன. மோகன், ரவிச்சந்திரன் என்ற இரண்டு இளைஞர்கள் / நண்பர்கள் ஒரு காரில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். ரவிச்சந்திரன் காரை ஓட்டுகின்றான். மெல்லிய இசையில் சினிமாப்பாடல் ஒலிக்கின்றது. கார், பஸ் ஸ்ராண்ட் ஒன்றைக் கடக்கின்றது. யாரோ ஒரு இளம் பெண்(வெள்ளை இனத்துப் பெண்) பஸ் ஸ்ராண்டிற்குள்ளிருந்து வெளியே வந்து காருக்குக் கை காட்டுகின்றாள். `ஸ்றீற் லாம்பின்’ வெளிச்சத்தில் அவள் ஒரு பள்ளி மாணவி போலத் தெரிகின்றாள்.

ரவிச்சந்திரன் : ஏய் மோகன்… பள்ளிக்கூடப் பிள்ளை போலக் கிடக்கு. பஸ் இனி இந்தப் பக்கம் வருமோ தெரியாது. நேரமும் இருட்டிப் போச்சு. பாவம். என்னெண்டு கேட்டுக் கூட்டிக் கொண்டு போய் விடுவோமா?

காரின் வேகம் குறைகின்றது. மோகன் சற்றுத் தயங்கியபடியே தலையை ஆட்டுகின்றான். கார் றிவேர்ஷில் திரும்புகின்றது. அந்தப்பெண் – அழகான பெண் காரிற்குக் கிட்ட வருகின்றாள்.

            மோகன்                   :           Where to go? (எங்கே போக வேண்டும்?)

            பெண்                       :           மில்பாங்க் றைவ்

ரவிச்சந்திரன்   :           எங்கடை இடத்திலையிருந்து ஒரு ஃபைவ்  

                         மினிற்ஸ் றைவ் தான். கூட்டிக்கொண்டு போவம்.

மோகன்                        :           Ok. Come… (சரி… ஏறுங்கோ)

அந்தப் பெண், காரின் பின் புறக் கதவைத் தானே திறந்து ஏறிக்கொள்கின்றாள். (கார்க் கதவு மூடும் சத்தம்) / (அவளது முகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகின்றது. இளம் பெண். பதினாறு வயது இருக்கும்.)