போராட்டம் ! - ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


                   நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம் 
                         சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம்
                  போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம்  
                           போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே ! 

                  கோவில்சிலை போகுதென்று போராட்டம் ஒருபக்கம்
                         கோவிலையே  தகர்ப்போமென்று போராட்டம் மறுபக்கம் 
                  சாமியில்லை சாமியில்லை என்றுசொல்லிப் போராட்டம் 
                          சன்மார்க்கம் காத்திடுவார் தம்பாட்டில் போராட்டம்  ! 

                மருத்துவர்கள் வசதிக்காய்  வகைவகையாய் போராட்டம்
                      மருந்திலே கலப்படத்தை தடுத்துவிடப் போராட்டம் 
               நோயாளி சுகம்பெற்று வருவதற்கும் போராட்டம் 
                       போராட்டம் மருத்துவத்தைப் பொறிவைத்தே  நிற்கிறது ! 

              கற்றறிந்தார் காசுக்காய் போராட்டம் நடத்துகிறார்
                   கல்விகற்கும் மாணவரும் போராட்டம் நடத்துகிறார்
             அற்பத்தனம் கொண்டுநிற்கும்  அனைத்துக் கல்விமுதலைகளும் 
                    ஆதாயம் தேடுதற்கும் போராட்டம் நடத்துகிறார் ! 

             ஊழலென்னும் பேயதனை ஒழித்துவிடப் போராட்டம்
                  உணர்வதனை இழக்கவைக்கும் மதுவொழிக்கப் போராட்டம் 
             வாழ்வதற்குத் தொழில்தேடும் மக்களது போராட்டம் 
                    மாற்றுத் திறனாளிகளும் போராட்டம் நடத்துகிறார் ! 

           

மருத்துவர் பத்மறஞ்சனி கிருஷ்ணாவுடன் நேர்காணல் - நேர்காணலை கண்டவர்: உஷா ஜவாகர்



மருத்துவர் பத்மறஞ்சனி கிருஷ்ணா ஐயா மெடிக்கல் சென்டரை 2 - 4 ஸ்டேசன் வீதி, ஹோம்புஷ், சிட்னி, அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஐயா மெடிக்கல் சென்டருக்கு வரும் அனைத்து நோயாளிகளையும் தன் குடும்பத்தினர் போல் எண்ணி அவர் சிகிச்சை அளிக்கும் பாங்கே தனி!

இனி அவருடன் ஒர் நேர்காணல். 

1 உங்களது பெற்றோரின் பெயர் என்ன?
தாய்: முத்தம்மா தம்பு
தந்தை: ஐயாத்துரை குமாரவேல்

2 உங்களது ஊர் எது?
வவுனியா  - இலங்கை


3 உங்களது ஆரம்ப கல்வி, உயர் கல்வி, போன்றவற்றை எங்கு கற்றீர்கள்?
எனது ஆரம்ப கல்வியை அதாவது பாலர் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை வவுனியாவில் மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் படித்தேன். அதன்பின் எனது தந்தையார் என்னையும் எனது அக்காவையும் உடுவில் மகளிர் பாடசாலை விடுதியில் இருந்து படிக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார். எனது உயர் படிப்பை சுண்டிக்குளி பாடசாலை விடுதியில் இருந்து படித்து விட்டு 1976ஆம் ஆண்டு பல்கலைகழகத்துகுச் சென்றேன். 

வேறு யாருமில்லை லெனின் மொறயஸ் - பகுதி 3 - ச சுந்தரதாஸ்


1960ம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு இலங்கைத் திரையுலகில் புதிய கோஷம் ஒன்று உருவாகத் தொடங்கியது. அதுவரை காலமும் இந்தியாவில் இருந்தே படத்தின் டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர், பாடகிகள், ஒளிப்பதிவாளர் என்று பலர் இலங்கை வந்து சிங்களப் படங்களின் உருவாகத்தில் பணிபுரிந்து வந்தார்கள். இவர்களிடமே பல இலங்கைக் கலைஞர்கள் தொழில் பயின்றார்கள். ஆனால் இந்த நிலைக்கு எதிராக உள்ளுர்க் கலைஞர்களின் குரல்கள் மெல்ல் மெல்ல ஒலிக்கத் தொடங்கின. 

இலங்கையில் உருவாகும் சிங்களப் படங்களை இலங்கைக் கலைஞர்களே உருவாக்க வேண்டும் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வரத் தேவையில்லை என்ற கோஷம் வலுப்பெறவே அவர்களின் வருகை படிப்படியாக குறையத்தொடங்கியது. உள்ளுர் கலைஞர்களே படங்களின் உருவாக்கத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்த எம். மஸ்தான் மட்டும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து சில ஆண்டுகள் தங்கியிருந்து சினிமாஸ் குணரத்தினம் தயாரித்த படங்களை டைரக்ட் செய்யலானார். 

இவருடைய உதவியாளராகவும் இவரிடம் ஒளிப்பதிவு நுணுக்கங்களை பயின்ற வாமதேவன் சினிமாஸ் தயாரித்த படங்களுக்கு ஒளிப்பதிவாளராக, மஸ்தானை தனது குருவாக ஏற்று பணியாற்றலானார். ஆனால் லெனின், வாசகம், ஆனந்தன் ஆகியோர் சிலோன் ஸ்டுடியோஸ் சம்பந்தப் படங்களிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். 

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 04 இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்...? - ரஸஞானி



"இலங்கைக்கு வந்த முதலாவது சமாதானத் தூதுவர் யார்...?" என்ற கேள்வியுடன் இந்த அங்கத்தை தொடங்குவோம்.
எமது தாயகத்தின் வரலாற்றை ஆராயும்போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின்றன.  25 ஆயிரத்து 330 சதுரமீட்டர்  பரப்பளவு கொண்ட  இந்த சின்னஞ்சிறிய தீவில், தமிழ் - சிங்கள - முஸ்லிம் இன நல்லுறவுக்கு காலத்திற்குகாலம் சோதனைகள் வந்திருப்பது இன்று நேற்று அல்ல என்பதை வரலாற்றின் ஏடுகளிலிருந்து பார்க்கின்றோம்.
முரண்பாடுகள் இராமன் - இராவணன் காலத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. இலங்கையில் 1983 இல் இனநெருக்கடி உச்சத்திற்கு வந்து கலவரமாக வெடித்தபோது பாரதப்பிரதமர் இந்திராகாந்தி,  தனது தரப்பிலிருந்து ஒரு நல்லெண்ணத் தூதுவரை அனுப்பியிருந்தார். அவர் பெயர் ஜி. பார்த்தசாரதி. அவர் வந்தும் சரியான சமாதானத்தீர்வு கிடைக்கவில்லை. எதிர்பாராதவிதமாக இந்திராகந்தி கொல்லப்பட்டதும்,  ராஜிவ் காந்தியின் பதவிக்காலத்தில் ரொமேஷ் பண்டாரி என்பவர் வந்தார். அவராலும் உரிய தீர்வைக்கண்டுபிடிக்க முடியவில்லை.
1987 இல் வடமராட்சியில் லிபரேஷன் ஒப்பரேஷன் தாக்குதலை அன்றைய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கியதும், இந்திய விமானங்கள் வந்து பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி உணவு மற்றும் உதவிப்பொருட்களை வீசியதும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா உஷாரடைந்தார். சண்டைக்காரனுடன் சமாதானம் பேசுவதைவிட சாட்சிக்கு வருபவனுடன் பேசுவதற்கு அவர் தயாரானர்.
ஒரு சமாதானத் தூதுவராக  ராஜிவ் காந்தியும் வந்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு தீர்வை முன்வைத்தார். முதலில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அதனை ஏற்று மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் மக்களிடம் தோன்றி ஆயுதங்களை ஒப்படைப்பதாகச்சொல்லி சமாதானத்திற்கு சமிக்ஞையும் காண்பித்தார்.


பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்ற தீர்க்கதரிசியாக அயராமல் உழைத்துவரும் சமூகப்பணியாளர் கடந்த வாரம் தனது 70 வயது பிறந்த தினத்தை கொண்டாடிய மெல்பன் 'சுந்தர்' சுந்தரமூர்த்தியின் வாழ்வும் பணிகளும் - முருகபூபதி


சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு மூலதனமாக இருப்பது: பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை, நெகிழ்ச்சியான இயல்புகள், அர்ப்பணிப்பு, இரக்க சிந்தனை.
இந்தப்பண்புகளை கொண்டிருப்பவர்கள் நண்பர்களாக கிடைப்பதும் பெரிய கொடுப்பினை. அவ்வாறு மெல்பனில் எனக்குக் கிடைத்த நண்பர்தான் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள்.
இவரை நாம் சுந்தர் எனச்செல்லமாக அழைப்பது வழக்கம். இலங்கையில் காரைநகர் களபூமியில் 31-05-1948 ஆம் திகதி பிறந்திருக்கும் சுந்தர், நேற்றைய தினம் தனது 70 வயதை அடைந்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொண்டே,  அவர் பற்றிய இந்தப்பதிவை தொடங்குகின்றேன்.
தனது ஆரம்ப - இடைநிலைக்கல்வியை கொழும்பில் பம்பலப்பிட்டி, இரத்மலானை இந்துக்கல்லூரிகளில் நிறைவுசெய்துகொண்டு, Times Of Ceylon நிறுவனத்தில் தொழில் ரீதியாக  இணைந்துகொண்டிருக்கும் சுந்தர், தனது 23 வயதிலேயே சாம்பியா நாட்டிற்கு அச்சக நிறுவனம் ஒன்றில் தனக்குப்பிடித்தமான பயிற்சியை மேற்கொண்டு தேர்ச்சிபெற்று தாயகம் திரும்பினார்.
1974 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து, சொந்தமாகவே ஒரு அச்சுக்கூடத்தை தொடங்கியவர். இவ்வாறு அந்நிய நாட்டில் தனக்குத்தெரிந்த தொழிலை முதல்கட்டத்திலேயே தொடங்குவதற்கு சற்று துணிவும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
குறிப்பிட்ட தொழில் துறையில் தாயகத்தில் ஈடுபட்டவர்களுக்கு புகலிடத்தில் தொடக்கத்தில் அதே துறையில் வேலை வாய்ப்புகள் கிடைப்பது அரிது. இலங்கையில் இவர் வாழ்ந்த காலத்தில் தலைநகரில் மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசத்தில் பெற்ற அனுபவங்களும் புகலிட நாட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள மூலதனமாக இருந்திருக்கவேண்டும்.

சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !



.
asifa
காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் சிறுமி ஆஷிஃபாவைக் கும்பல் வல்லுறவு செய்து கொன்றிருப்பது ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தி வரும் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலின் ஒரு பகுதியே.
ம்மு மாநிலம் கதுவாவிலும், உ.பி. மாநிலம் உன்னாவிலும் சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய குற்றவாளிகளைப் பாதுகாத்தும் ஆதரித்தும் வரும் பா.ஜ.க., சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது.
இச்சட்டத் திருத்தம் அக்கட்சியின் இரட்டை வேடத்தை, கபடத்தனத்தை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. குற்றவாளிகளே நீதிபதிகளாக அதிகாரம் செலுத்தும் இழிவான, அபாயகரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இந்திய மக்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் அம்பலப்படுத்துகிறது.
ஜம்மு மாநிலம் கதுவா மாவட்டம் – ரஸானா கிராமத்தில் வசித்துவந்த ஆஷிஃபா என்ற எட்டே வயதான பால்மணம் மாறாத சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்திவரும் முசுலிம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை இச்சம்பவம் தொடர்பான புலன் விசாரணையும் குற்றப் பத்திரிகையும் அம்பலப்படுத்துகின்றன.

தூத்துக்குடியில் குண்டடிபட்ட 90 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை..! அதிர்ச்சி அறிக்கை

நடக்கநேர்ந்தாலும்
தீமையானதற்கு அஞ்சேன்!'
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காவு வாங்கிய ஸ்னோலின் உடலின் முன் படிக்கப்பட்ட சங்கீத வசனங்கள் இவை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்தினம் தமிழரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திடாத பெருந்துயரச் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. உயிர் நீத்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டும் புதைக்கப்பட்டும் வருகின்றன. உறவினர்களின் கண்ணீர் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மக்கள் இன்னும் அந்தத் துயரத்திலிருந்து மீளவில்லை என்பதைத்தான் தூத்துக்குடியிலிருந்து வரும் புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவுசெய்கின்றன. ஆனால் அரசின் தரப்பிலோ, `தூத்துக்குடி இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது' என்கின்றனர். 

இலங்கைச் செய்திகள்


தியாகி பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள்

கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி

இந்திய நிதி உதவியில் 300 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்

காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது

நுண்நிதிக்கடனால் வடக்கில் 59 தற்கொலைகள்

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு : அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி



தியாகி பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள்

05/06/2018 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன். சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக நேற்று இடம்பெற்றது. 


உலகச் செய்திகள்


திட்டமிட்டபடி வடகொரிய அதிபரை சந்திப்பேன் என்கிறார் டொனால்டு ட்ரம்ப்

பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக  உயர்வு

கர்ப்பமான பிரித்தானிய இளவரசி மேகனிற்கு இரட்டை குழந்தைகளா?

விமானத்தில் வெடிகுண்டு புரளி- இலங்கையரிற்கு 12 வருட சிறை

யேமன் கடற்பகுதியில் படகு நீரில் மூழ்கியது- 46 பேர் பலி



திட்டமிட்டபடி வடகொரிய அதிபரை சந்திப்பேன் என்கிறார் டொனால்டு ட்ரம்ப்

05/06/2018 சிங்கப்பூரில் திட்டமிட்டபடி எதிர்வரும் 12ஆம் திகதி, வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநிறுத்த தென் கொரியா கடும் முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேச முடிவானது. 


ஆனால் கடந்த மாதம் தொடக்கத்தில் தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன. மேலும், பேச்சுவார்த்தைக்கு முன்னர் எல்லா அணுஆயுதங்களையும் அழித்துவிட வேண்டும் என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார்.

Sydney Music Festival 9, 10 & 11 /06/2018



தமிழ் சினிமா - காலா திரை விமர்சனம்


காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு.
அப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார்.
அதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை நம்பியிருக்கும் மக்களுக்கு எதிராகவும் பல சதி திட்டங்களை நானா பட்னேக்கர் தீட்ட அதை காலா எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சூப்பர்ஸ்டார் இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும், 67 வயதிலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு. மனைவியிடம் குறும்பு, ரொமான்ஸ், முன்னாள் காதலியிடம் ஏக்கம், கியாரே செட்டிங்கா என்று அதிர விட்டு மழையில் அடுத்த காட்சியில் இறங்கி அடிப்பது என என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் என நிரூபித்துவிட்டார்.
ரஜினி படம் என்றால் அவரை சுற்றி மட்டும் கதை இல்லாமல் தாராவி அதை சுற்றி இருக்கும் மக்கள், காலாவின் குடும்பம் என அனைவருக்குமே படத்தில்.முக்கிய பங்கு உள்ளது.
படத்தின் அடிப்படையே நிலம் தான், அதை சுற்றி கதை நகர்கின்றது. அந்த விதத்தில் ரஞ்சித் நிலத்தின் முக்கியதுவத்தை வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.
ஒரு சிறு குழந்தை காலில் விழ வர, யார் காலிலும் விழக்கூடாது என ரஜினி அட்வைஸ் சொல்வது. காலில் விழுவது சமத்துவம் இல்லை, கைக்கொடுத்து வரவேற்க வேண்டும், அதுதான் ஈகுவாலிட்டி என பாடமே எடுத்துள்ளார்.
அதிலும் முதன் முறையாக இராவணன் ஜெயிக்கிறான், அதை கதை சொல்லி கிளைமேக்ஸாக கொண்டு போன விதம் சூப்பர்.
அதேநேரத்தில் காலா தாராவியையே ஆள்கின்றார் என்பது கார்ட்டூனாக கதை சொல்கின்றனர், அதில் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். மேலும் ஆளும் கட்சியை ரஜினியை வைத்தே ரஞ்சித் ஆட்டிவைத்தது சாமர்த்தியம் என்றாலும், ரஜினி போராடுவோம் என்று சொல்லும் போது கொஞ்சம் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.
ரஜினி சொன்னது போல் ரகுவரனுக்கு பிறகு சரியான வில்லனாக டப் கொடுத்துள்ளார் நானா பட்னேக்கர்.
படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு, இசை தான். அதிலும் பின்னணியில் கபாலியில் விட்டதை சந்தோஷ் பிடித்துவிட்டார்.

க்ளாப்ஸ்

ரஞ்சித்தின் திரைக்கதை
படத்தின் வசனம் மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள்.
அதிலும் சவுண்ட் இன்ஜினியரிங் அத்தனை யதார்த்தம்.
இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ்.
நானா பட்னேக்கர்-ரஜினி காட்சி

பல்ப்ஸ்

காலா ஹுமா குரேஷி காதல் கொஞ்சம் கபாலியை நியாபக்கப்படுத்துகின்றது.
இரண்டாம் பாதி முழுவதுமே வன்முறை தான் எங்கும் எதிலும், ஆனால் கதைக்கு தேவையே.
மொத்தத்தில் கபாலியில் விட்டதை ரஞ்சித் காலாவில் பிடித்து சூப்பர் ஸ்டாரை கால் மேல் கால் போட வைக்கின்றார் ஸ்டைலாக கெத்தாக.
நன்றி  CineUlagam