மரண அறிவித்தல்

.
கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன்
                  மலர்வு; 12-01-1941                     உதிர்வு; 18-12-2017

திருக்கோணமலையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வதிவிடமாகவும், திருமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், சர்வோதய நிறுவனம் ஆகியவற்றின்  முன்னைநாள் கணக்காளருமான ,கெளரிமனோகரி பஞ்சாட்சரநாதன் அவர்கள் சிட்னியில் 18/12/17 திங்கட்கிழமையன்று இறைபதம் அடைந்தார்..
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், இராசமாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகளும்பஞ்சாட்சரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சடாட்சரன் (செல்வன் - சிட்னி), சிவகடாட்சரன் (பவன்கனடா), சோமாட்சரன் (லவன்கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷ்யந்தி, சுபந்தினி, பராசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவி மனோரதியின் (இலங்கைஅன்புச் சகோதரியும்,
சோவிகா, பவிநாஸ் ஆகியோரின்  அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 20/12/17ம் திகதி புதன் கிழமையன்று முற்பகல் 9:30 மணியிலிருந்து 12:30  மணி வரை  South Chapel ,Memorial Avenue,Rookwood.ல் பார்வைக்கு வைக்கப்பட்டு  இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்களுக்கு;
சடாட்சரன் _ அவுஸ்திரேலியா:  +61 402 040 415
சிவகடாட்சரன் (பவன்) – கனடா: +1 416 827 1636

சோமாட்சரன் (லவன்) – கனடா;  +1 416 930 9091     

பார்வை ! ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )



     அம்மாவின் பார்வை அப்பாவுக் கிருக்காது
          அக்காவின் பார்வை அண்ணாவுக் கிருக்காது
     ஆசிரியர் பார்வை மாணவர்க் கிருக்காது
          ஆனாலும் பார்வைகள் அர்த்தத்தை அளித்துவிடும் !

    கற்றறிந்தார் பார்வை கருத்தாக அமைந்துவிடும்
        கசடர்களின் பார்வை கண்ணியத்தைக் குலைத்துவிடும்
   நற்றவத்தார் பார்வை நானிலத்தைக் காத்துவிடும்
           நம்பார்வை ஒன்றே நமையறியச் செய்துவிடும் !

   ஆணவத்தார் பார்வை அனைத்தையுமே அழித்துவிடும்
           அலைபாயும் பார்வை நிலைகுலைய வைத்துவிடும்
    ஞானமுள்ளார் பார்வை நற்கருணை ஆகிவிடும்
            ஈனமுடை பார்வை எல்லோர்க்கும் இடைஞ்சலன்றோ !

      காளையரின் பார்வை காதல்கதை பேசிநிற்கும்
             கன்னியரின் பார்வை நாணமதைக் காட்டிநிற்கும்
      கணவர்களின் பார்வை மனைவிமீது பதிந்திருக்கும்
            மனைவியரின் பார்வை மாங்கல்யம் தனைநோக்கும் ! 

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் இரபோசன விருந்து நிகழ்வு

.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நத்தார் இராபோசன விருந்து  சென்ற சனிக்கிழமை (09.12.2017) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11 மணிவரை கோலாகலமாக இடம்பெற்றது . அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நூற்றுக்கு மேற்பட்ட  குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும்  ஒன்று கூடி விருந்தை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்ச்சியை திரு சிவசம்பு பிரபாகரன் வரவேற்று ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திரு .விஜய்விஜயரட்ணம் பாடல் இசையை ஒழுங்கு படுத்தி காதுக்கினிய பழைய புதிய பாடல்கள் பாடப்பட்டது.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்  அங்கத்தவர்கள் , ஆதரவாளர்கள் என பலரும் மிக இனிமையாக பாடினார்கள். தொடர்ந்து மெல்பேர்னில் இருந்து வருகை தந்திருந்த அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நிஷாம் அவர்கள் பல  குரலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பல  அறிவிப்பாளர்கள் போல்   அவர் செய்து காட்டியும் நடித்துக் காட்டியும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.

படித்தோம் சொல்கின்றோம்:


17 ஆம் நூற்றாண்டில்  நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை  சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம்
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)
                                                                                      முருகபூபதி

சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன்.
எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்துப்பேசுவதும் எனது இயல்பு. அந்தவகையில் எஸ்.ரா. அவர்களை இரண்டு தடவைகள் சென்னையில் அவர் வசிக்கும் சாலிக்கிராமத்திற்கே சென்று பார்த்திருக்கின்றேன். அவரது அன்பான உபசரிப்பில் திளைத்திருக்கின்றேன்.
அவ்வப்போது அவரது படைப்புகள் குறித்தும் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன். எஸ்.ரா. படைப்பிலக்கியவாதி மாத்திரமில்லை. அவர் திரைக்கதை ஆசிரியர். வசனகர்த்தா. சூப்பர்ஸ்டாரின் பாபா படம் உட்பட சில படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர்.
அவுஸ்திரேலியா மெல்பனுக்கும் அவர் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புவேளையில் வந்து சுமார் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார் என்பதும் பின்னர்தான் தெரியவந்தது.
அவ்வேளையில் எங்களையெல்லாம் சந்திக்கமுடியாமல் போனமை குறித்தும் அவர் வருந்தியிருக்கிறார்.
இடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர்  ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம்.
இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் இந்தியாவில் தென்னாட்டில் ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய காலம் பதிவுசெய்யப்படவில்லை. வடக்கே பல மொகாலய சக்கரவர்த்திகள் பற்றிய வரலாறுகளுக்கு சான்றுகள் இருப்பதனால் அவற்றை உசாத்துணையாகக்கொண்டு எஸ்.ரா.வும் இந்த நாவலை எழுதியிருக்கிறார்.
எஸ்.ரா. எழுத்தாளர் மட்டுமல்ல  ஒரு யாத்ரீகனும்தான். நாடோடியாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதும் அவரது படைப்புகளின் வரிசையில் இந்த இடக்கை எமது கரத்திற்கு வந்துள்ளது.
இதனைப்படித்துக்கொண்டே மதன் எழுதியிருக்கும் வந்தார்கள் வென்றார்கள் என்ற அரிய தொகுப்பு நூலையும் சமகாலத்தில் படித்தேன்.
வந்தார்கள் வென்றார்கள் விகடனில் தொடர்ந்து வெளியாகி வாசகரின் அமோக ஆதரவினால் தனிநூலாகவும் பதிப்பிக்கப்பட்டு ஒரு இலட்சத்திற்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.
அதனை விகடன்குழுமம், தமது  விற்பனையில் ஏறு முகம் எனச்சொல்லியிருக்கிறது.
ஆனால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆனந்தவிகடன் மதன், அங்கிருந்து வெளியேறும் துர்ப்பாக்கியமான சூழல் தோன்றியது. அதுபோன்று சமூக நாவல்களும் சரித்திர நாவல்களும் ஏராளமான கதைகள், கட்டுரைகளும் எழுதியிருக்கும் எஸ்.ரா.வும் இதுவரைகாலமும் எந்த பதிப்பகத்தின் ஊடாக தமது நூல்களை வெளிக்கொணர்ந்தாரோ அந்த உயிர்மைப்பதிப்பகத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது.

பயணியின் பார்வையில் - அங்கம் 26



-->

 " வாழ்ந்துதான் வாழ்வின் சுவையைச் சுவைக்கலாம். நடந்துதான் நமது பயணத்தை முடிக்கலாம்"
பேராசிரியர் மெளனகுருவின்  ஆளுமைப்பண்புகளுக்கு மகுடம் சூட்டியிருக்கும் மட்டக்களப்பு 'மகுடம்'  சிறப்பிதழ்
                                                                              முருகபூபதி
கல்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர் நண்பர் மௌனகுருவிடம் செல்லத்தயாரானோம். அன்று முற்பகல் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்பும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
மெளனகுரு அவர்களின் இல்லத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ணனின் கார் தரித்தது.  இல்லத்தின் முற்றத்திலிருந்து கணீரென்ற குரலில் ஒரு கூத்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்த இல்லம் வாவிக்கரையில் இருந்தமையால் ரம்மியமாக காட்சியளித்தது. முன்பொரு (2010 இறுதியில்) தடவை நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், அஷ்ரப் சிஹாப்தீன், கோபலகிருஷ்ணன் ஆகியோருடன் அங்கு வந்திருக்கின்றேன்.
சுநாமியின்போது மௌனகுரு - சித்திரலேகா தம்பதியர் அந்த இல்லத்தின் மேல்தளத்தில் நின்று தப்பித்த திகில்  கதையை சொல்லியிருக்கின்றனர். மெளனகுரு அந்தத்திகிலையும் சுவாரஸ்யமாகவே சித்திரித்திருந்தார். அந்த நினைவுகளுடன் அங்கு பிரவேசித்தபோது முற்றத்தில் அமர்ந்து ஒருவர் பாடிக்கொண்டிருந்தார்.
எம்மைக்கண்டதும் அவர் தமது குரலைத்தாழ்த்தினார். "வேண்டாம். தொடருங்கள்"  எனச்சைகையால் சொன்னதும் தொடர்ந்தார். பாடல் நின்றதும் அந்தக்கலைஞரை எமக்கு மெளனகுரு அறிமுகப்படுத்தினார்.
அவரது பெயர் கந்தப்பு மயில்வாகனம். வயது 76. இவரது கண்டி அரசன் என்னும் நாடகம் மட்டக்களப்பில் 1965 இல்  மேடையேறியபோது மெளனகுருவும் பேராசிரியர் வித்தியானந்தனும் சென்று பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
அக்காலப்பகுதியில் வித்தியானந்தன் நாடகக்குழுவின் தலைவராகவும் மௌனகுரு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்கள். கந்தப்பு மயில்வாகனத்தின் குரல்வளத்தில் ஈர்ப்புற்ற மௌனகுரு 1968 இல் தாம்  தயாரித்து அரங்காற்றுகை செய்த சங்காரம் நாடகத்தில் கதையை நகர்த்திச்செல்லும் பிரதான எடுத்துரைஞராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.       

"சுழல்கின்ற சூரியனின் துண்டு பறந்ததுவே"  என்ற கந்தப்பு மயில்வாகனத்தின் கணீர் குரலுடன் திரை திறக்குமாம்.  சங்காரம் தீண்டாமை  ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மாநாடு கொழும்பில் லும்பினி அரங்கில் நடந்தவேளையில் அரங்கேறியிருக்கிறது.  தலைமை வகித்தவர் கி. இலக்‌ஷ்மண அய்யர். இடதுசாரித்தோழர் என். சண்முகதாசன்,  பேராசிரியர் கைலாசபதி ஆகியோரும் இந்நாடகத்தை பார்வையிட்டுள்ளனர்.
அன்று நடந்த கவியரங்கில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், நுஃமான், முருகையன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். சங்காரம் நாடகத்தின் ஒளியமைப்பு ந. சுந்தரலிங்கம்.  அன்று நாடகத்தில் ஒலித்த கலைஞர் கந்தப்பு மயில்வாகனத்தின் அசாதாரணமான குரல் அனைவரையும் வெகுவாகக்கவர்ந்துவிட்டதாக மெளனகுரு அவரை எமக்கு அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்டு நனவிடைதோய்ந்தார்.
பரந்த கடற்பரப்பில் கத்திக்கத்திப்பாடி தனது குரல்வளத்தை வளர்த்துக்கொண்டவர்தான் கந்தப்பு மயில்வாகனம் என்று தெரிவித்தார் மெளனகுரு. அன்றைய உரையாடலில் அரைநூற்றாண்டுக்கு முன்னர் அவருடன் தனக்கிருந்த உறவை மெளனகுரு சொன்னபோது, அந்தக்கம்பீரம் சற்றும் குலையாமல் மீண்டும் அந்த முற்றத்திலிருந்து அவர் பாடியதைக்கேட்டு சிலிர்த்தோம்.
மௌனகுருவுக்கு கலைஞர் கந்தப்பு மயில்வாகனம் அறிமுகமானது 1965 இல். எனக்கு மெளனகுருவும் சித்திரலேகாவும் அறிமுகமானது 1972 இல். அக்காலப்பகுதி முதல் கடந்த 45 வருடகாலமாக இவர்கள் இருவரதும் கலை, இலக்கிய  மற்றும் கல்வி, சமூகப்பணிகளை அவதானித்துவருகின்றமையால் அவர்களின் கடின உழைப்பு குறித்து எனக்கு மரியாதையிருக்கிறது.
எனது கலை, இலக்கிய நட்புவட்டத்தில் இவர்களுக்குரிய இடம் முக்கியமானது. அதனால் இலங்கைப்பயணங்களில் இவர்களையும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்வது எனது இயல்பு.

இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும்; சொல்லாத செய்திகளும்!!

.
இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்.

பகுதி 1


25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் “லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி”  ஆவணப்படம், இசைத்தொகுப்புää “தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்” நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும், கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும், சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ் பரிஸ் ஆகிய இடங்களிலும், யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.
ஒரு படைப்பு வெளிவரும் போது அதன் வளர்ச்சி கருதி அதன் குறை நிறைகளை ஆய்வு செய்வதும் மிகவும் அவசியமாகின்றது. இந்தவகையில் தமிழ் உலகும்ää இசை உலகும் வியந்து போற்றிய  இந்த அற்புதக் கலைஞனை அவர் வித்துவத் திறமையினை உலகம் முழுவதிற்கும் இளம் சந்ததியினருக்கும்  நாற்பது வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தி அவர் கச்சேரியை நேரிலே பார்ப்பதற்கு எமக்குக் கொடுத்து வைக்கவில்லையே! என்று ஏங்கவைத்த  இசைத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்த ஒவ்வொருவரும் சந்தேகத்திற்கு இடமின்றிப் பாராட்டுக்கு உரியவர்கள். அவை மிக மிக அற்புதமாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆயினும்


அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

.
20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா கௌர் எனப் பிறந்தவர். அப்பா பள்ளிஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் வாழ்க்கை நடத்தினார். கொஞ்சம் கவிதையும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் அப்பாவை விட்டுவிட்டு மகளைப் பிடித்துக்கொண்டுவிட்டாளோ கவிதாதேவி? தன் 11-ஆவது வயதில் அம்மாவை இழந்தார் அம்ரிதா. அப்பா தன் மகளைக் கூட்டிக்கொண்டு லாகூருக்கு இடம் மாறினார். சிறுவயதிலிருந்தே வீட்டுவேலையே அம்ரிதாவுக்கு சரியாக இருந்தது. தோழியரில்லை; போக்கிடம் தெரியவில்லை. தனிமையின் நிழல் எப்போதும் அவர்மீது படிந்திருந்தது. ஏகாந்தச் சிந்தனைகள் அவரிடம் எழுத்துவடிவம் பெற்றன. கவிதை புனைய ஆரம்பித்தார் அம்ரிதா. 16-ஆவது வயதில் அவரது முதல் கவிதைத்தொகுப்பு ‘அமிர்த அலைகள்’ வெளியானது. தன் 17-ஆவது வயதிலே, ப்ரீத்தம் சிங் என்பவரை திருமணம் செய்ய நேரிட்டது. அம்ரிதா ப்ரீத்தம் என்கிற பெயரில் எழுதுவதைத் தொடர்ந்தார். முதல் ஏழெட்டு வருடங்களுக்குள் சில கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.
இரண்டு குழந்தைகள் தந்த மணவாழ்வு இனிக்கவில்லை அம்ரிதாவுக்கு.

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்




பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.

தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது. 

நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல். 

ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர். 

Rama Setu (Adam's Bridge) Scientific explanation with proof

.

நாடுகடத்தப்பட்ட 29 பேர் இலங்கையில்


14/12/2017 சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்களை அந்நாட்டு அரசு இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களும் விசேட விமானம் மூலம் இன்று காலை நாடு திரும்பினர்.
இவர்கள் அனைவரும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.   நன்றி வீரகேசரி




அனுஷ்காவின் திருமண மோதிரம் மட்டும் எவ்வளவு விலை தெரியுமா?



 .
நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.
அனுஷ்காவிற்கு கோலி அணிவித்த வைர மோதிரத்தின் விலை மட்டும் 1 கோடி ரூபாய்க்கும் மேல் என கூறப்படுகிறது. ஆஸ்திரியாவில் உள்ள ஒரு டிசைனர் இந்த வைர மோதிரத்தை செய்துள்ளார்.
இத்தாலியில் திருமணம் நடைபெற்ற இடத்தின் ஒரு நாள் வாடகை மட்டும் 14 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்திகள்


சங்கர் கொலைக்கு சரியான தீர்ப்பு (காணொளி)

 "லிங்க்ட் இன்" மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி

வட கொரி­யாவின் முன்னாள் உயர்­மட்ட இரா­ணுவ அதி­கா­ரிக்கு மர­ண­தண்­டனை

 இளவரசர் வீட்டில் இருந்து இனிய செய்தி!




சங்கர் கொலைக்கு சரியான தீர்ப்பு

 
12/12/2017 கௌரவக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கு சென்னை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 
பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு தலித் மாணவர் சங்கர். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா. இருவரும் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். 
திருப்பூரில் வாழ்ந்து வந்த இவர்கள் மீது, கடந்த வருடம் மார்ச் மாதம் பட்டப் பகலில், மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில் கத்தி மற்றும் வாள்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கர் உயிரிழக்க, நீண்டகால சிகிச்சையின் பின் கௌசல்யா உயிர் பிழைத்தார்.
இதில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட கௌசல்யாவின் தந்தை உட்பட கூலிப்படையினர் ஐந்து பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள கௌசல்யாவின் தாய் மற்றும் தாய்மாமன் இருவர் மீதுமான தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்றுவருகின்றன.
திருமணமாகி எட்டே மாதத்தில் கணவனைப் பறிகொடுத்த கௌசல்யா தற்போது தனது கணவரின் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கௌசல்யா, தனது தந்தைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். எனினும் தலைமறைவாகியுள்ள தனது தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோரால் தனக்கோ, கொல்லப்பட்ட தன் கணவரின் பெற்றோருக்கோ ஆபத்து ஏற்படலாம் என்று அச்சப்படுவதாகவும் அவர்கள் கைதாகும்வரை தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 


இலங்கைச் செய்திகள்


அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!

கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்

வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி

நத்தார் தினத்திலிருந்து அனைத்து சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெறும்

கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை : மோடி அறிவிப்பு

இலங்கையை வந்தடைந்தார் மலே­சிய பிர­த­மர்




அமெரிக்காவில் சாதனை புரியும் யாழ் மாணவன்.!

14/12/2017 அமெ­ரிக்­காவில் நியூ­ஜெர்சி மாநி­லத்தில் தற்­பொ­ழுது வசித்­து­வரும் யாழ்ப்­பாணம் அள­வெட்­டியைச் சேர்ந்த ஈழத் தமி­ழர்கள் நிர்­மலா, செல்­லையா ஞான­ சே­கரனின்   மகன்   மகிஷன் ஞான­சே­கரன்   சமூ­க­நல  செயற்­பா­டு­களில் மிக ஆர்வம் கொண்­டவர். இலங்­கையில் பிறந்து அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும்   மகிஷன் ஞான­சே­கரன்  தமிழ் மொழியில் சர­ள­மாகப் பேசக்­கூ­டியவர். ஸ்பானிஷ் மொழி­யையும் ஆர்­வ­மாக கற்று வரு­கின்றார்.
2016 ஆகஸ்ட் மாதம்  அமெ­ரிக்க மாநி­ல­மான நியூ­ஜெர்­சியின் உயர்­நிலைக்  கல்விப் பிரிவில் பயிலும் மாண­வர்­களில் கல்வி, சமூ­க­சேவை, மாணவ தலை­மைத்­துவம் ஆகிய துறை­களில் முதல் நிலை  மாண­வ­ராக  விசேட  தேர்வு  மூலம் தெரிவு  செய்­யப்­பட்டு அம்­மா­நி­லத்தின் பிர­தி­நி­தி­யாக அமெ­ரிக்க தலை­நகர்  வாஷிங்டன்   D.C  யில் அமைந்­துள்ள வெள்ளை மாளி­கைக்கு அழைக்­கப்­பட்டு அங்கு ஒரு­வார காலம் தங்­கி­யி­ருந்த மகிஷன் முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி   பராக் ஒபாமா, உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள், சட்ட சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோரை நேர­டி­யாக சந்­தித்து மாணவ தலை­மைத்­துவம், சமூ­க­நல செயற்­பா­டு­களில் மாண­வர்­களின் பங்­க­ளிப்பு போன்ற பல முக்­கிய விட­யங்­க­ளைப்­பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.  சமூ­கப்­பணி  தொடர்­பான செயல்­முறைப் பயிற்சி  மற்றும் பொது­வாழ்வில் ஈடு­பட்டு சமூ­கப்­ப­ணி­யாற்ற விரும்பும் இளை­ஞர்கள் இந்த வாய்ப்­பினைப் பெறு­வது மிகவும் பெரு­மைக்­கு­ரிய சாத­னை­யாகும். அமெ­ரிக்க நாட்டின் எதிர்­காலத் தலை­வர்கள் என்ற அளவில் இந்த இளை­ஞர்கள் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.  இந் நிகழ்­வுக்கு தமிழ் மாணவன் ஒருவர் தெரிவு செய்­யப்­பட்­டது இதுவே முதல் தட­வை­யாகும். இந்­நி­கழ்­வா­னது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த பெரு­மையும்  அங்­கீ­கா­ரமும்  ஆகும். 
இத்­த­கு­தியை மகிஷன் அடை­வ­தற்குக் காரணம்  நடு­நிலை கல்வி நாட்­களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்­டிய சமூ­க­நல அக்­கறை கொண்ட பல செயல்­களும் பணி­க­ளு­மாகும். இவை­யாவும் படிப்­ப­டி­யாக  இவரை உயர்த்தி வந்­துள்­ளது. பத்து வயதில் வானியல் வல்­லு­ந­ராகப் பணி­யாற்­று­வதில் ஆர்வம் கொண்ட மகி­ஷனின் நோக்கம் பிற்­கா­லத்தில் ஒரு கோளையோ, விண்­கற்­க­ளையோ கண்­டு­பி­டிக்க வேண்டும் என்று துவங்­கி­யது.  நூலகம் ஒன்று நடத்­திய வாசிப்பு போட்­டியில் பங்­கு­பற்றி,   மூன்று மாத காலத்­தினுள் நூல­கத்தின் 1,000 புத்­த­கங்­களைப்  படித்­த­மைக்­காக நகர ஆட்­சி­யா­ள­ரிடம் இருந்து பரிசும், சிறந்த கவிதை  ஒப்­பு­வித்­த­மைக்­காக தங்­கப்­ப­தக்­கமும்   மற்றும்   மூன்று “உச்­ச­ரிப்புத் தேனீ” (Spelling Bee) போட்­டி­களில் பரி­சுகள் என்று கல்­விக்­கான தகு­தி­களை வளர்த்துக் கொண்டு பல போட்­டி­களில் வெற்­றி­களை தன­தாக்கிக் கொண்டார்.
சிறு வய­தி­லி­ருந்து தனக்கு  உத­விய  பொது  நூலகம் பொரு­ளா­தாரப் பற்­றாக்­கு­றையால் நிதி­யின்றி மூடப்­பட்ட பொழுது அது ‘மனி­த ­கு­லத்­திற்கு எதி­ரான குற்றம்’ என மிகவும் இள­வ­ய­தி­லேயே தனது கருத்தைத் தயக்­க­மின்றிப் பதிவு செய்­தவர் மகிஷன்.  நன்றி வீரகேசரி


தமிழ் சினிமா

மாயவன்

மாயவன் திரைவிமர்சனம்புதிய நடிகர்களின் படங்களுக்கு எதிர்பார்ப்பு சூழ்வது என்பது சினிமா இப்போதிருக்கும் நிலையில் அரிதான செயல். அப்படியாக நீண்ட நாளாக எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் மாயவன். சி.வி.குமார் அட்டகத்தி முதல் அதே கண்கள் என சில நல்ல படங்களை தயாரித்தவர். இப்போது மாயவன் மூலம் இயக்குனராகியிருக்கிறார். மாயவன் அவரின் பேர் சொல்லுமா? கதைக்குள் போகலாம்.

கதைக்களம்

இன்ஸ்பெக்டர் குமரனாக சந்தீப் கிஷன் மீண்டும் இறங்கியுள்ளார். ஆரம்பத்திலே ஒரு பிக்பாக்கெட் குற்றவாளியை மடக்கி பிடிக்க போகும் போது எதிர்பாராத விதமாக சாய் தீனாவால் கொடூர கொலை சம்பவம் அரங்கேறுகிறது.
அதை நோக்கி கவனம் திரும்ப பெரும் ஆபத்து இவருக்கு வந்து மரண வாசல் வரை சென்று மீண்டும் வருகிறார். அதன் பின் வழக்கமாக தன் பணிகளை தொடங்க செல்லும் போது மனநல டெஸ்ட்க்கு போகிறார்.
அங்கே ஹீரோயினான மருத்துவர் ரம்யாவுடன் சிறு வாக்குவாதம் நிகழ்கிறது. பின் சந்தீப் எப்படியோ வேலைக்குள் மீண்டும் செல்ல ஒருநாள் மீண்டும் நடிகை ஒருவரின் கொலை சம்பவம் நடக்கிறது.
சோதனையில் இருக்கும்போது சந்தீப் உடலில் திடீர் மாற்றம். தன்னிலை அறியாமல் அவருக்குள் என்னவோ நடக்கிறது. பின் அதிலிருந்து மீண்டு பின் அதே குற்றவழக்கை கையில் எடுக்கிறார்.
இதற்கிடையில் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தீடீரென மரண மடைகிறார். வழக்கு துப்பு துலங்காமல் இருக்கிறது. மிகவும் கைதேர்ந்து அறிவுள்ள ஒருவன் செய்தது போல் இருப்பதால் காவல் துறை தீவிரமாய் இறங்க ஏதோதோ புதியதொரு அறிவியல் அதிர்ச்சி தகவல் சிக்கிறது.
சந்தீப் குற்றவாளியை பிடித்தாரா, அவர் மனநிலை திடீரென மாறிப்போக காரணம் என்ன, அப்படி என்ன அதிர்ச்சி தகவல் சொல்லும் மர்மம், கொலையின் பின்னணி என்பது தான் மாயவன்.

படத்தை பற்றிய அலசல்

மாநகரம் படத்திற்கு பிறகு சந்தீப் கிஷனுக்கு இப்படம் சொல்லும் படியாக இருக்கும். நெஞ்சில் துணிவிருந்தால் அவருக்கு வைத்த குறையை இப்படம் போக்கும் என நம்பலாம்.
குமரன் இன்ஸ்பெக்டராக அவர் கதைக்குள் போராடுகிறார். ஆனால் போலிஸ்க்கான அந்த ஒரு மிரட்டல் தொனி வரவில்லையோ என கேள்வி எழுகிறது. ஆனாலும் ஓகே தான்.
மனநல டாக்டராக லாவண்யா அமைதியாக வந்து சந்தீப்க்கு வழக்கு விசயத்தில் பெரும் உதவியாக இருக்கிறார். ஒரு மாடர்ன் பெண் போல இருந்தாலு பொறுமையான அணுகுமுறையால் ஸ்கோர் செய்கிறார்.
முதல் கொலை, இரண்டாம் கொலை, மூன்றாம் கொலை என அடுத்தடுத்து வித்தியாசமாக சம்பவங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொன்றையும் கதையுடன் பொருந்தும் விதமாக அமைத்திருக்கிறார்கள்.
சாய்தீனா, மைம் கோபி, டேனியல் பாலாஜி என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விசயத்தில் ஒன்றுபடுகிறார்கள். இவர்களின் பின்னணி சிறியதாய் இருக்க இவர்களுக்கே தெரியாமல் ஏதோ ஒரு சம்பவம் நடக்கிறது.
நவீன அறிவியல் ஆராய்ச்சியின் தாக்கங்களும், மனநலம் சார்ந்த விசயங்களும் இந்த வளர்ந்த மருத்துவ உலகில் எப்படி மனித வாழ்க்கையில் பின்னப்படுகிறது என மெதுவாய் கதை நகர்த்துகிறார் இயக்குனர்.
ஒரு காட்சி நடக்கும் போது அடுத்து இதுதான் நடக்கும் என பட பிரியர்களால் ஊகிக்க முடியும். ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் அது மிஸ் ஆகலாம். நமக்குமே ட்விஸ்ட் தான்.

கிளாப்ஸ்

இயக்குனராக முதல் படத்தை முறையாக வடிவமைத்ததில் தயாரிப்பு அனுபவமும் வெளிப்படுகிறது.
முன்பாதி பின்பாதி கதையோடு பொருந்துகிறது. சொல்ல வந்த விசயத்தில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.
சந்தீப் கதையை அணுகுவதில் எதார்த்தம். கதை அவருக்கு கைகொடுக்கும்.
அறம், தீரன் படத்தை தொடர்ந்து ஜிப்ரான் இப்படத்திலும் பின்னணி இசை, பாடல் என நிறைவாக்கியிருக்கிறார்.

பல்ப்ஸ்

ஆரம்பத்திலிருந்து ஒரே மாதிரியான வேகம் தான் நகர்வது போல தோன்றும்.
சின்ன சின்ன லாஜிக் இருப்பது உற்று பார்க்கும் போது உடனே கண்ணில் சிக்குகிறது.
ஹீரோ ஹீரோயின் லவ், ரொமான்ஸ் எல்லாம் டேக் டைவர்சன் போல ஆகிவிட்டது.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட் முழுமையாக எல்லோருக்கும் புரியும் என்றால் கேள்விக்குறி தான்.
மொத்தத்தில் மாயவன் வித்தியாசமாக மனம் ஈர்க்கிறான். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி CineUlagam