தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு விடுக்கும் செய்தி

.

சிட்னி பெருநகரத்தில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களே

ஆசிரியர்களே நிர்வாக நண்பர்களே

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்



இவ்வாண்டின் முதல் தவணையைப் பூர்த்தி செய்து இரண்டாவது தவணையை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் முக்கியமானதும் அவசியமானதுமான இரண்டு விடயங்களைத் தெரிவிக்க,  தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணைய இதழூடாக உங்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி

     1.     மொழிக்கல்வி மாநாட்டில் Professor David Nunan

சென்ற ஆண்டின் இறுதியில் மாநில அரசு சமூகமொழிக் கல்வி அபிவிருத்திக்கெனெ 11 மில்லியன் டொலர்களை அடுத்த மூன்று வருடங்களில் செலவிடவுள்ளதாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள்.  இத்தொகையில் ஆறரை மில்லியனுக்கும் சற்று அதிகமான தொகை சமூக மொழிப்பாடசாலை ஆசிரியர்களின் தராதரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  பொறுப்புக் கூறலில் உயர்ந்த தரத்தைப் பேணுவதோடு கற்பித்தல் துறை சார்ந்த தகுதியினை வளர்க்க விரும்பும் பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  மேலும் பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மொழிகல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு எட்டு இலட்சம் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதி ஒதுக்கீடு மூலம் சமூகமொழிப் பாடசாலைகளில் மொழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தரமானதும் பொருத்தமானதுமான மொழிக் கல்வியை வழங்கும் அரசின் எண்ணமும் இத்துறை சார்ந்த சமூக ஆர்வலர்களின் எண்ணமும் வெளிப்படுகிறது.

ஒரு பழைய பாடலுக்கு நான் செய்த காணொளி - ..... தேமொழி

.



வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
மலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு

ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ...ஆ...
மலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு
அது மண்ணில் வந்து தவழும் போது ஆறு என்று பேரு
கொடிகளிலே பிறப்பதற்கு மலர்கள் என்று பேரு
முத்துராமன்: மனித இனத்தில் பிறப்பதற்கு?
மனித இனத்தில் பிறப்பதற்கு குழந்தை என்று பேரு
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு

அகற்றிவிடல் அவசியமே ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


          அசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே 
             அசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே
         பிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள் 
              கொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை !

       படித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார் 
            நினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்
       தமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்
              நிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் ! 

        படித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும் 
                அடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார் 
        எடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே 
                எடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ ! 

        காமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்
image2.JPG                காணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்
        மாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ
               காமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை ! 

சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 09 எழுத்துலகில் புகுந்துவிடும் சனிபகவானிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள்!!!??? கருத்தையே மாற்றிவிடும் அச்சுப்பிசாசுகளினால் நேர்ந்துவிடும் அலங்கோலம்!!! - முருகபூபதி


ஒரு காலத்தில் கல்லிலே பொழியப்பட்ட தமிழ் இன்று கணினியில் பதிவாகிறது. பனையோலை ஏட்டுச்சுவடிகளில் எழுதிய முன்னோர்கள் தங்கள் வசம் ஒப்புநோக்காளர்களை (Proof Readers)  வைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை!
வெள்ளீய அச்சுக்கள் அறிமுகமானதன் பின்னர் அச்சகங்களிலும் பத்திரிகை, இதழ்கள் வெளியிடும் நிறுவனங்களிலும் ஒப்புநோக்காளர் பணியும் அறிமுகமானது.
எனது தொழிலும் ஒப்புநோக்காளராகவே ஆரம்பமானது. எனக்கு மட்டுமல்ல, "சிலம்புச்செல்வர் "மா.பொ.சி., மற்றும் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,  விந்தன்,  எனது நண்பர்கள், தினக்குரல் , வீரகேசரி ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த வீரகத்தி தனபாலசிங்கம், பிரணதார்த்தி ஹரன், சிவராஜா, அற்புதானந்தன், மறைந்த "கோபு" கோபாலரத்தினம் உட்பட நான் அறியாத பலரும் ஒப்புநோக்காளர்களாகவே தமது எழுத்துலகத்திற்கு வந்திருக்கிறார்கள்.
1976  இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளர் தேவை என்ற விளம்பரத்தை  பார்த்துவிட்டு விண்ணப்பித்தேன். ஏற்கனவே எங்கள் ஊரில் எனது மாமா முறையான மயில்வாகனன் அவர்கள் நடத்திய சாந்தி அச்சகத்திலும் ( இங்கிருந்து அண்ணி என்ற மாத இதழும் வெளியானது) கொழும்பில் கலா அச்சகத்திலும் சில மாதங்கள் நூல்கள், இதழ்கள், துண்டுப்பிரசுரங்கள் ஒப்புநோக்கிய அனுபவத்துடன், வீரகேசரிக்காக எங்கள் பிரதேச நிருபராக 1972 முதல் இயங்கியிருந்தமையாலும் அந்தவேலைக்கு விண்ணப்பித்தேன்.
நேர்முகத்தேர்வுக்கு முப்பது பேருக்கு மேல் வந்திருந்தார்கள். அந்தக்கூட்டத்தை பார்த்ததும், எனக்கு இந்த வேலை கிடைக்கப்போவதில்லை என்ற அவநம்பிக்கையும் வந்தது.
நேர்முகத்தேர்வில்  எழுத்துப்பரீட்சையும் வைத்தார்கள். ஒப்புநோக்காளரின் கடமை பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும். எழுதினேன். எழுத்துப்பிழைகள் காணப்பட்ட  ஒரு பிரசுரத்தை தந்து அதனைத் திருத்திக்காண்பிக்குமாறும் கேட்டிருந்தார்கள். அதனையும் செய்தேன்.
அதன்பின்னர் வீரகேசரி பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரனும், பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசமும் ஒரு அறையில் நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். அவர்கள் இருவரும் தற்போது மேல் உலகத்தில் இருக்கிறார்கள்.
நான் இந்த உலகத்திலிருந்து அவர்களையும் நினைவுகூர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். ஏனென்றால் எனது வாழ்வின் விதியை மாற்றியவர்கள். அவர்கள் அன்று நடத்திய  நேர்முகத்தேர்வில் நானும் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கமும் தெரிவாகவில்லையென்றால், இன்று நாம் வேறு வேறு திசைகளில் பயணமாகியிருப்போம்.
எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடும் ஆபத்து பயங்கரமானது. அறிஞர் அண்ணா காலத்தில் அவர் நடத்திய பத்திரிகையில் கூட பாரதூரமான எழுத்துப்பிழை நேர்ந்து அவர் மன்னிப்புக்கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.
                                 "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய கொள்கைகளை பற்றியிருப்போம்." என்ற தலைப்பில் " ள்" வரவேண்டிய இடத்தில் " ங்"வந்துவிட்டது!?
மற்றும் ஒரு தமிழக பத்திரிகையில் ராஜா - ஜிக்கி என்ற பிரபல பின்னணி பாடகர்கள் காதலித்து மணம் முடித்தவேளையில் வந்த செய்தியில் ராஜாஜிக்கு  திருமணம் என்று வந்துவிட்டது. மூதறிஞராகவும் தமிழக முதல்வராகவும் ஆளுநராகவும் வாழ்ந்த ராஜாஜி திருமணம் முடிக்காத கட்டைப்பிரம்மச்சாரி!
இந்தச்செய்திகளையெல்லாம் கேள்வி ஞானத்தில் தெரிந்துவைத்திருந்தமையால்,  அன்று நடந்த எழுத்துப்பரீட்சையில் எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடும் ஆபத்தும் தோன்றும், எனவே பத்திரிகைகளில் ஒப்புநோக்காளரின் பணி மிகவும் முக்கியமானது. பொறுப்புவாய்ந்தது என்றும் எனது கட்டுரையில் எழுதியிருந்தேன். இதனையே இன்றும்  ஊடகங்களில் பணியாற்றும் ஒப்புநோக்காளரிடம் வலியுறுத்திக்கொண்டு, நான் சொல்லத்தவறிய கதைக்கு வருகின்றேன்.
வீரகேசரி வெள்ளீய அச்சுக்கள் கோர்த்து அச்சிடப்பட்ட காலத்தில் அச்சுக்கோப்பாளர் பிரிவில் சிறிய சிறிய மரத்தால் செய்யப்பட்ட ராக்கைகளில் இருக்கும் எழுத்துக்கள் தேய்ந்திருந்தால், நாம் ஒப்புநோக்கும் பிரதிகளும் அவற்றை கண்டுபிடித்துவிடும். அந்தப்பிரிவின் Forman  செல்வரத்தினத்திடம்  சொல்லி எழுத்துக்களை மாற்றச்சொல்வோம்.

அடிநிலை மக்களின் கல்விக்காக......... அமெரிக்கா கார்லோனியாவிலும் வடமராட்சி கரவெட்டியிலும் தோன்றிய விடிவெள்ளிகள் - முருகபூபதி


இமைகள் கண்களுக்கு பாதுகாப்பானது. ஆனால், கண்களுக்குத்தெரிவதில்லை. இமைகளைப்பார்க்க கண்ணாடிதான் தேவை.
அதுபோன்று நாமறியாத பல  அரிய பக்கங்களை தெரிந்துகொள்வதற்கு யாராவது எழுதிவைத்துச்சென்ற பதிவுகள்தான் உதவுகின்றன. அதனால் அந்தப்பதிவாளர்கள் காலத்தின் கண்ணாடியாகத்திகழுகிறார்கள்.
நான் வசிக்கும் மெல்பனில் ஒரு வாசகர் வட்டம் இயங்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வாசகர் வட்டத்தின் சந்திப்பு கலை, இலக்கிய சுவைஞர்களின்  இல்லத்தில் நடக்கும். இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்பவர் திருமதி சாந்தி சிவக்குமார். இவர் தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா மெல்பன் வந்து, தனது குடும்பத்தினருடன்  இருபது வருடங்களுக்கும் மேலாக வசிக்கிறார். கலை, இலக்கிய ஆர்வலர்.
குறிப்பிட்ட மெல்பன் வாசகர் வட்டத்தில் ஒருநாள், ஜெயகாந்தன் மறுவாசிப்பு அரங்கு நடந்தது. அந்த  நிகழ்ச்சி முடியும்வேளையில், சாந்தி, வருகை தந்திருந்தவர்களிடம்  "உனக்குப்படிக்கத்தெரியாது"  என்ற தமிழகத்தின் வாசல் பதிப்பகம் வெளியிட்ட கமலாலயன் எழுதிய நூலைத்தந்து, "இதனைத்தான்  அடுத்த வாசகர் வட்டத்தில் கலந்துரையாடவிருக்கிறோம்." என்றார்.
ரயிலில் திரும்பும்போதே படித்துக்கொண்டுவந்தேன். அதன் பக்கங்களும் வழியில் தென்படும்  ரயில்நிலையங்களைப்போன்று  கடந்து கொண்டிருக்கையில்,  எனது நினைவில் வந்துகொண்டிருந்தவர்கள் வடமராட்சி கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர் ( அமரர் ) கா. சூரன் அவர்களும் அவரது சுயசரிதையை பதிப்பித்த  எனது இனிய நண்பர் (அமரர்) ராஜஶ்ரீகாந்தனும்தான்.

பூசா- சிறுகதை - கன்பரா யோகானந்தன்

  .
                                                   
நான் ஆலடிச் சந்தியில் காரை நிறுத்திவிட்டு  பிரதான வீதியிலிருந்து கெவர் போலப் பிரிந்து செல்லும் ஒழுங்கை வழியே நடந்தேன்.   
பாசி பிடித்துக் கறுத்து கிடந்த மதில் வீடொன்றைத் தாண்டியபொது உள்ளிருந்து பெரிய நாயொன்று எட்டிக் குரைத்தது. மதில் வீடுகளைக் கடந்ததும் ஒழுங்கை மடங்கித் திரும்பி குருமணல் பாதையாக மாறி ஒடுங்கி சிறுத்துக் கொண்டே போய் இடப்புறம் திரும்பி சரிவில் இறங்கிக் கொண்டே சென்றது. 

முப்பது வருசத்துக்கு முன்னால் அவ்விடத்தில் அனேகமாக வேலிகள் பூவரசு கதியால்களில் கிடுகு அல்லது பனை ஓலையால் வேய்ந்திருந்தன.  அவையும் உக்கி விழுந்து கொட்டில் வீடுகள் பின்னால் தெரியும்.  இப்போது அவ்வேலிகளில் பல மதில்களாக மாறி பின்னால் ஓட்டுக் கூரைகள் தெரிந்தன.  அப்போதிருந்த அவன் கொட்டில்  வீட்டை கண்டு பிடிப்பது இலகுவாகத் தெரியவில்லை.
எதிரே கம்பியில் சைக்கிள் ஓடும் சேர்க்கஸ் வித்தைக்காரன் போல மணலில் சைக்கிள் ஓடி வந்த வந்த ஒருவனை நிற்பாட்டி பூசாவின் வீடு எங்கே என்று கேட்டென். அவன் தெரியாது என்று சொல்ல வாயெடுக்குமுன்
'வேல் மரக்காலை தவகுமார். இப்ப உயிரோடே இல்லை’ என்று திருத்தினேன்.  

உலகச் செய்திகள்


இதற்காக பெண் கவி­ஞ­ருக்கு 3 வருட சிறை

புஷ்ஷின் மனைவி மரணம்!!!

வடகொரிய ஜனாதிபதியை சந்தித்த சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே ?

ஜெயலலிதா விவகாரம் : புதிய தகவலை வெளியிட்டார் பன்னீர்செல்வம்




இதற்காக பெண் கவி­ஞ­ருக்கு 3 வருட சிறை

சுய­மாக சுதந்­தி­ரத்தை பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள சோமா­லி­லாந்து பிராந்­தி­யத்தை மீளவும் சோமா­லி­யா­வுடன் இணைப்­ப­தற்கு பரிந்­துரை செய்யும் கவி­தை­யொன்றை எழு­தி­ய­மைக்­காக இளம் பெண்  கவிஞர் ஒரு­வ­ருக்கு 3 வருட சிறைத்­தண்­டனை விதித்து சோமா­லி­லாந்து நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.  
நசிமா குவோரேன் என்ற பெண் கவி­ஞ­ருக்கே இவ்­வாறு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த நீதி­மன்றத் தீர்ப்பின் மூலம் நசி­மாவின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக மனித உரிமைக் குழுக்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளன.
 சோமா­லி­லாந்­தா­னது 1991 ஆம் ஆண்டு சோமா­லி­யா­வி­லி­ருந்து  சுதந்­தி­ரத்தை சுய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள போதும், அந்த சுதந்திரத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

சைவமன்றம் பண்ணிசை விழா 25/04/2018








தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018!


இலங்கைச் செய்திகள்


இலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா

தமிழர் விடுதலைக் கூட்டணி வசமாகியது வவுனியா நகரசபை 

விசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர்




இலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா

17/04/2018 இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

தமிழ் சினிமா - டெத் விஷ் – திரை விமர்சனம்




கடந்த 1974-ஆம் ஆண்டு சார்லஸ் புரோன்சன் நடிப்பில் வெளியாகிய டெத் விஷ் படத்தின் கதையை தழுவியே இந்த டெத் விஷ் படமும் உருவாகி இருக்கிறது. பழைய பதிப்பில் சார்லஸ் புரோன்சன் கட்டட வடிவமைப்பாளராக வருவார். தற்போது உருவாகி இருக்கும் டெத் விஷ் படத்தில் புரூஸ் வில்லிஸ் மருத்துவராக வருகிறார்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் புரூஸ் வில்லிஸின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு பிரச்சனை வருகிறது. புரூஸ் வில்லிஸின் மனைவி எலிசபெத்தையும், அவர்களது மகள் கேமிலா மோரோனையும் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறது.
இதில் எலிசபெத் இறந்துவிட, புரூஸின் மகள் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க துடிக்கிறார் புரூஸ் வில்லிஸ்.
ஒரு கட்டத்திற்கு மேல் தவறு எங்கு நடந்தாலும், அதற்கு காரணமானவர்களை கொல்ல ஆரம்பிக்கிறார். கடைசியில் தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை புரூஸ் பழிவாங்கினாரா? கோமா நிலையில் இருக்கும் அவரது மகள் உயிர் பிழைத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
புரூஸ் வில்லிஸ், எலிசபெத் ஷீ, கேமிலா மோரோன் என மூவரும் அவர்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் புரூஸ் வில்லிஸின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தாலும், போதும் என்று சொல்லும்படியாகவே இருக்கிறது.
வின்சென்ட் டி ஆனோப்ரியோ, ஆண்ட்ரியஸ் அபர்ஜிஸ், பியூ நாப், டீன் நாரீஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.
மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு துக்க சம்பவம், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குதல் என வழக்கமான பழிவாங்குதல் கதையை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எலி ரோத்.
குற்றவாளிகளை பழிவாங்க செல்லும் நாயகன் ஒரு கட்டத்திற்கு மேல் குற்றம் செய்யும் அனைவரையுமே கொல்லுவது, எல்லா பிரச்சனைக்கும் துப்பாக்கியை பயன்படுத்துவது என முகம் சுளிக்க வைக்கிறார்.
லுத்விக் கோரன்சன் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ரோஜியன் ஸ்டோப்பர்ஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `டெத் விஷ்’ பார்ப்பவர்களுக்கு தான்.
நன்றி tamilcinema.news