புதிய விடியலுக்கான நம்பிக்கையுடன் புத்தாண்டுக்குள் பிரவேசிப்போம்!

புதிய ஆண்டுக்குள் பிரவேசி த்துள்ளோம். நெருக்கமான மற்றும் முகம் தெரியாத மனிதர்களுக்கெல்லாம் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று நேரிலும், தொலைபேசி ஊடாகவும் வாழ்த்து சொல்கிறோம். புதுவருட வாழ்த்தை விதம் விதமாக எல்லோருக்கும் கூறுகின்றோம்.

புத்தாண்டு என்பது நாட்காட்டி போன்றது. அதில் நேற்றைய நாள் என்பது பயனற்ற நாள். ஆகவே, அது கிழித்து எறியப்படுகிறது. அது போல நேற்றைய வாழ்வில் நம்மில் படிந்திருந்த தீயபழக்கங்களைத் தூக்கியெறிந்து, இன்றைய வாழ்வினைப் புதுவிடியலாய்த் தொடங்கும் நாள்தான் புத்தாண்டு.

'மாதவந்தான் செய்தோமோ இயற்கை தந்த வளந்தன்னை எடுத்தியம்ப வார்த்தை யேதோ?.

 


..........பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்










இயற்கை - 1


இயற்கையதன் அழகைநீங்கள் ரசித்தது முண்டோ?  

  இறைவனவன் அளித்தபெருங் கொடையது அன்றோ?  

வியக்கவைத்தே எம்மனதைக் கிறங்க வைக்கும்   

  வித்தையெலாம் காட்டியபின் பித்தன் ஆக்கும்  

மயக்கிநின்;று மெய்யதனைச் சிலிர்க்க வைக்கும்  

  மனதினிலே கிளர்ச்சிதனை உண்டு பண்ணும்  

செயற்கையெலாம் இயற்கைக்கு ஈடு செய்யுமோ?  

  தினமதனைக் காப்பதெங்கள் கடமை அல்லவோ?

2020 தமிழ் உலகம் இழந்த கலை, இலக்கிய, பொருண்மிய, அரசியல் ஆளுமைகள்


இதில் ஈழம், இந்திய உள்ளிட்ட 38 இழப்புகளைப் பதிவு செய்திருக்கிறேன்.
காணொளி அளவு 2.37 நிமிடங்கள் என்றாலும் இந்தத் திரட்டுக்காக 5 மணி நேர உழைப்புத் தேவையாய் இருந்தது.



புத்தாண்டே நீ வருக புதுத்தென்பை நீ தருக !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா



புத்தாண்டே  நீ  வருக
புதுத்தென்பை நீ தருக
சுற்றி நிற்கும் தொல்லையெலாம்
துரத்தவே நீ வருக

நோய் என்னும் பெயராலே
பேய் ஒன்று வந்ததனால்
காய்தல் உவத்த லின்றி
கலங்கி நின்றார் மக்களெலாம்

வெள்ளம் ஒரு பக்கம்
வெந்தணலோ மறு பக்கம்
உள்ளம் பதை பதைக்க
உழன்று நின்றார் மக்களெலாம்

மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




இருபதே சென்றுவா
இருபதொன்றே நன்றுவா
வந்திடும் கொரனாவை 
வராதுமே செய்துவா  !

நல்லன அளிக்கவா
வல்லன கொடுக்கவா
வெல்லுவோம் என்றிடும்
வீரத்தை உணர்த்தவா  !

மதுவினை ஒழிக்கவா
மங்கையர் காக்கவா
சதிகளை தடுக்கவா
சன்மார்க்கம் நிலைக்கவா !

எழுத்தும் வாழ்க்கையும் -- அங்கம் 22 சனிபகவான் அச்சில் வந்து ஆட்கொண்ட அதிபர் ! போரும் சமாதானமும் பேசப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ! ! முருகபூபதி


வீரகேசரியில் ஒப்புநோக்காளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டு,  பதிலுக்கு காத்திருந்தேன்.

  தபால்சேவகர் வரும் மதிய வேளையில் வழிமேல் விழிவைத்து அவருக்காக காத்திருந்தேன். அதற்கு முன்பு நான் அவ்வாறு காத்திருக்காமலேயே இன்ப அதிர்ச்சியூட்டிய கடிதங்களை பெற்றிருக்கின்றேன். அதில் ஒன்று எனக்கு பத்து வயதாக இருக்கும்போது,  எமது பாட்டி தையலம்மா கதிர்காமத்திலிருந்து எனக்கு எழுதிய கடிதம்.

இதுபற்றி எனது பாட்டி சொன்ன கதைகள் நூலின் முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளேன்.

அந்தப்பருவத்தில் பாட்டியின் கடிதத்திற்கு பதில் எழுதியதுதான் எனது முதலாவது படைப்பிலக்கியம். அதன் பின்னர் பன்னிரண்டு வருடங்கள் கடந்து,  1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதியன்று


எனது முதல் சிறுகதை            ( கனவுகள் ஆயிரம் ) வெளியான மல்லிகை இதழ் தபாலில் வந்து இன்ப அதிர்ச்சியூட்டியிருக்கிறது.

வீரகேசரியிலிருந்து  ஒப்புநோக்காளர் பணிக்காக நடத்தப்படவிருக்கும் நேர்முகத்தேர்வுக்கு வருமாறு கடிதம் வந்ததும், மனதில் கலக்கமும் தோன்றியது.

இந்தவேலையாவது எனக்கு நிரந்தரமாகக் கிடைக்கவேண்டும்.  அக்காலப்பகுதியில் எனது தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

தங்கையின் திருமணத்திற்கான செலவுகளுக்கு பெற்றோர் என்னைத்தான் நம்பியிருந்தார்கள்.

எனக்கு வீரகேசரியில் வேலை கிடைக்கவேண்டும் என்று எனது தங்கையும் வேண்டாத தெய்வமில்லை.

1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எமது விஜயரத்தினம் வித்தியாலயத்தின் அபிவிருத்திச்சங்கம்  ரிதம் 76 என்ற கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.  சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஜெயமோகன் கொழும்பில் பணியாற்றிய காலத்தில்  திரைப்பட வானொலி கலைஞர்களின்  அமைப்பொன்றின் காப்பாளராகவும் இருந்தவர்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 47 –சாரங்கி – சரவண பிரபு ராமமூர்த்தி


சாரங்கி: நரம்புக்கருவி


சாரங்கி என்கிற நரம்பிசைக் கருவி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ளது. பயன்பாட்டில் இல்லை. ”தல விருட்சம் மூங்கில், ஆகமம் காமிக ஆகமம், இசைக்கருவி சாரங்கி ” என்பது இக்கோவில் பற்றியக் குறிப்பு. வயலின் போன்ற தோற்றமுடையது சாரங்கி இசைக்கருவி. 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கருவி மாலைப் பூசையின் போது நெல்லையப்பரின் உற்சவர் மண்டபத்தில் வாசிக்கப்பட்டது. தென் தமிழ்நாட்டில் உள்ள ஓதுவார்கள் இக்கருவியை தேவாரம் பாடும் பொழுதும் இசைத்ததாகத் தெரிகிறது. ”ஓதுவார் மரபு” என்கிற நூல் இந்த செய்தியைத் தெரிவிக்கின்றது. தற்பொழுது சுவடே தெரியாமல் மறைந்து விட்டது. 19ஆம் நூற்றாண்டின் மதுரகவி பாஸ்கர ராஜா நாட்குறிப்புகளின்படி மதுரையில் பல சாரங்கி கலைஞர்கள் இருந்துள்ளதாகத் தெரிகின்றது. தஞ்சையில் சாரங்கித் தெரு என்று ஒரு தெருவே உள்ளது.  ராஜஸ்தானில் இருந்து மராத்தியர் வழியே இக்கருவி  தஞ்சைக்கும் பிறகு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவி இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.  வேறு சிலர் இல்லை

இது தமிழரின் இசைக்கருவி தான் என்று சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும்
சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன் வடபகுதியில் இசைக்கப்பட்டு தற்போது வழக்கொழிந்து போன ஒரு நரம்பு இசைக்கருவியாக சாரங்கி விளங்கியதாத் தெரிகின்றது. இத்தகைய பழமை வாய்ந்த சாரங்கி ஒன்று அராலி பகுதியில் பழமையை பாதுகாக்கும் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அதை மாதிரியாக வைத்து ஆச்சாரியார் அமரசிங்கம் நர்த்தனன் என்பவர் சாரங்கியை மீளுருவாக்கம் செய்துள்ளார்.  

சாரங்கியை ஒத்த ஒரு மிகவும் தொன்மையான இசைக்கருவி கேரளத்தில் புழக்கத்தில் உள்ளது. சாரங்கியை விட அமைப்பில் மிகவும் எளியது இக்கருவி. புள்ளுவன் வீணை என்று பெயர். புள்ளுவன் பாட்டு மற்றும் சர்ப்பம் துள்ளல் ஆகிய சடங்கியல் கலை வடிவத்தில் புள்ளுவன் வீணையும் புள்ளுவன் குடம் என்கிற மண் இசைக்கருவியும் இசைக்கப்படும். வயலின் போன்று இது வில் போன்ற பகுதியால் மீட்டி இசைக்கப்படும்.

 

காணொளி:

https://www.youtube.com/watch?v=JJY4yeC9_8I

 

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

இலங்கைச் செய்திகள்

தினகரன் முன்னாள் உதவி ஆசிரியர் சிவஜோதி காலமானார் 

காணாமலாக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி போராட்டம்

முஸ்லிம்களின் அதிகளவான மரணத்தில் அஸாத் சந்தேகம்

மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவரும் பௌத்த மதகுரு

புத்தளம் பகுதியில் திடீரென உட்புகுந்த கடல் நீர்

மாகாண சபை முறையை நானும் எதிர்க்கிறேன்



தினகரன் முன்னாள் உதவி ஆசிரியர் சிவஜோதி காலமானார் 
 Wednesday, December 30, 2020 - 7:52pm 


 தினகரன் முன்னாள் உதவி ஆசிரியர் சிவஜோதி காலமானார் தினகரன் பத்திரிகையில் கடமை புரிந்த, முன்னாள் உதவி ஆசிரியரான வைத்தீஸ்வரன் சிவஜோதி (49) காலமானார். சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். நன்றி தினகரன் 

கிரேக்கரும் நாமும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

இங்கு நாம் பல் இன; பல் கலாசாரங்களைக் கொண்ட மக்களுடன் வாழ்கிறோம். அதாவது Multicultural Country யில் வாழ்கிறோம். அதனால் மற்றவர்களினுடய நாகரிகத்தையும் நாம் அறிந்திருப்பது நல்லது.


பண்டைய கிரேக்கர்கள் காவிரிப்பூம் பட்டிணத்தில் வியாபாரம் செய்ததற்குச் சான்றுகள் உண்டு.  இவர்கள் தங்கள் பண்டங்களை விற்று முத்து, மிளகு போன்றவற்றை வாங்கிச் சென்றார்கள்.

இவர்கள் தமிழ் மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் வாழ்வதற்கெனத் தனிக் குடியிருப்புகள் காவிரிப்பூம் பட்டிணத்தில் இருந்திருக்கிறது. இவர்களின் வருகையால் தமிழ் நாடகங்களும் நல்ல பயனைப் பெற்றன. ’திரிசீலை’ எனப்படும் ’எழினி’ என்ற சொல் ’யவனிக்கா’ என்னும் கிரேக்க சொல்லின் மருவலே!

Alexander The Great பஞ்சாப் வரை படையுடன் வந்தான். அதன் வழியாக இவர்களின் செல்வாக்கு இங்கு ஓங்கி இருக்க வேண்டும். பஞ்சாப் பிரதேசத்தில் இவர்கள் பெளத்த சமயக் கருத்துக்களை வைத்து நாடகம் போட்டதற்கும் சான்றுகள் உண்டு.

கிரேக்கருக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே இருந்த கலாசார உறவைக் காட்டும் சாசனம் ஒன்று 1899ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. ‘பாப்பிரஸ் சுருள்’ எனப்படும் நாணற்புல் தாளில் இது எழுதப்பட்டுள்ளது. இதில், கி.பி.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறு மொழி உரையாடல் ஒன்று எகிப்து மொழி நாடகமாகிய இதில் காணப்பட்டது. அண்மையில் எகிப்திற்கு ஆராய்ச்சிப் படிப்பிற்காகச் சென்ற தமிழ் இளைஞர் ஒருவரின் கண்ணில் இது பட்டது. அந்த 2ம் நூற்றாண்டுக் கையெழுத்துப் பிரதியில் ’வேற்று மொழி’ எனக் கருதப்பட்ட மொழி ’தமிழ்’ எனக் கண்டறிந்தார் அந்த இளைஞர். இதன் வழியாக எகிப்தியர் / கிரேக்கர்  தாம் சென்று வியாபாரம் செய்த நாட்டின் மொழியையும் தமது நாடகத்தில் எழுதத் தவறவில்லை.

கிரேக்கர்களின் பழக்கவழக்கங்களில் பல நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை ஒத்ததே. அவை எப்படிப்பட்டது என்று பார்ப்போம். அவர்களின் கோயிலின் முன் ஒரு தொட்டியில் நல்ல நீர் வைக்கப்பட்டிருக்கும். கோயிலுக்குச் செல்வோர் இந் நீரினால் கை, கால்களைக் கழுவிச் சுத்தம் செய்த பின்பே கோயிலுக்குள் போவார்கள். நாம் செய்வது போலவே தெய்வத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நிவேதனங்கள் யாவும் ஒழுங்காக நடைபெறும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு புராணக்கதைகளும் உண்டு. உற்சவ காலங்களில் தெய்வங்களின் திரு உலாவோடு இன்னிசைக் கச்சேரிகள் மற்றும் நாடகங்களும் நடைபெறுமாம்.

என்ன? தெய்வ வழிபாட்டில் இவர்களுக்கும் நமக்கும் எந்த ஒரு வித்தியாசமும் காண முடியவில்லை அல்லவா? கோயில்களில் கடவுளின் பிரசாதம் எனக்கூறி ஏழை எளியவர்களுக்கு உணவும் வழங்கப்படுமாம். நம் ஊர் அன்னதானம் போலவே...

உலகச் செய்திகள்

கட்டுக்கடங்காத கொரோனா பரவல்: பிரிட்டன் மருத்துவமனைகள் திணறல் 

யெமன் விமான நிலைய குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலி

ரொஹிங்கியர்களை ஆபத்தான தீவுக்கு அனுப்பிய பங்களாதேஷ்

சவூதி பெண் செயற்பாட்டாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை

உலகெங்கும் வேகமாகப் பரவும் புதிய கொரோனா வைரஸ் திரிபு

 பிரிட்டன்-ஐ.ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் அமுல்

பிரான்ஸ் குடியுரிமை கோரும் பிரிட்டன் பிரதமரின் தந்தை

பாக். இந்து கோவிலில் குண்டர்கள் தாக்குதல்

டொனால்ட் ட்ரம்ப் மீது ஐ.நா சபை குற்றச்சாட்டு


கட்டுக்கடங்காத கொரோனா பரவல்: பிரிட்டன் மருத்துவமனைகள் திணறல் 

பிரிட்டனில் கொவிட்–19 நோயாளிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உயர்ந்து வருவதால் மருத்துவமனைகள் கடுமையாகப் போராடுகின்றன.

தலைநகர் லண்டனிலும், நாட்டின் தெற்குப் பகுதியிலும் உள்ள சில வட்டாரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சில மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. மருத்துவ உதவி வாகனங்களில் வரும் நோயாளிகளை அங்கு சேர்க்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை, ஊழியர்களில் பலரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர் அல்லது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இடப் பற்றாக்குறையால் மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம்

 Monday, December 28, 2020 - 10:21am

மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.

“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

Soul (2020 film) திரைப் பார்வை "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்"

 


ROOBHA; திரை அழகியலின் உச்சத்தில் எரியும் திருநங்கை வாழ்வின் பயணவெளி

 Thursday, December 31, 2020 - 4:16pm

A GUN & A RING, 1999 என கவனத்திற்குரிய திரைப்படங்களைத் தந்த லெனின் M சிவத்தின் மற்றொரு படம் ROOBHA. அவருடைய வழமையைப்போல, சவால் மிக்க மேலும் கடினமான, கவனத்திற்குரியதொரு பரப்பைத் தேர்ந்திருக்கிறார் M சிவம். 

A GUN & A RING போல இதுவும் ஒருவகையில் கனேடியத் தமிழ்ச் சினிமாவே. கனேடியத் தமிழ்ச்சினிமா என்று ஏன் விசேடமாக குறிப்படுகிறதென்றால், கனடாவில் வாழ்கின்ற தமிழ்ச் சமூகப்பரப்பின் உள்ளடக்குகளைப் பெரும்பாலும் இந்தப்படமும் திறக்க முற்படுகிறது என்பதால். ஆனால், தனியே கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குள் இது மட்டுப்படுவதில்லை. அப்படி மட்டுப்படுத்தப்படுவதுமில்லை. பதிலாக கனடியச் சூழலின் (Multicultural social environment) யதார்த்தத்தோடு தமிழ் வாழ்வின் உள்ளடக்குகள் காண்பிக்கப்படுகின்றன. 

M சிவத்தின் பார்வையே அதுதான். தன்னுள் குறுகிக் கொள்ளாமல், விரிந்து நோக்குவது. அப்படி விரிந்து நோக்கும்போது அவருடைய படங்களில் கனேடிய அடையாளம் உருவாகிறது. A GUN & A RING, ROOBHA உள்ளிட்ட M சிவத்தின் படங்களின் பொதுக்குணம் இதுவே. இதனால் தமிழ்ப் பரப்பிற்கு வெளியே அல்லது அப்பால் அவருடைய படங்கள் (சினிமா) எழுந்து நிற்கின்றன. இதனால்தான் M சிவம் முக்கியமான கலை ஆளுமையாகவும் கவனத்திற்குரிய இயக்குநராகவும் கணிக்கப்படுகிறார். அவர் வெற்றி பெற்றுச் செல்லும் அடிப்படைகளில் இதுவும் ஒன்று. 

ROOBHA வில் M சிவத்துடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார் எழுத்தாளர் ஷோபசக்தி. ஷோபாசக்தியின் பங்களிப்புகள் கதை, திரைக்கதை உருவாக்கத்திலும் மையப்பாத்திரமொன்றுக்கான நடிப்பிலுமாக உள்ளன. அதோடு இந்தப்படத்தின் தமிழ்ப்பாடலையும் ஷோபாசக்தியே எழுதியிருக்கிறார். 

புனைவெழுத்துகளின் வழியாகச் சாதனைப் பரப்புகளில் உலவிக் கொண்டிருக்கும் முதன்மை எழுத்தாளர் ஷோபாசக்தி. சமகால ஈழத் தமிழ் வாழ்வின், அதனுடைய போராட்டத்தின் அல்லாடல்களின் உட்பரப்பையும் அது சந்திக்கும் நெருக்கடிகளையும் துணிச்சலோடும் அமர்க்களமான கேலிப்படுத்தலோடும் எழுதும் கலைஞர். அதேவேளை M சிவத்தைப்போல அவரும் தமிழ்ப்பரப்பிற்கு வெளியேயும் தன்னுடைய புனைவெல்லையை விரித்துச் செயற்படும் ஆளுமை. 

இதனால் தன்னடையாளத்தைப் புனைவுகளின் வழியாக வெளியுலகில் ஏற்றியிருப்பவர். கூடவே புனைவுகளோடு அண்மைய ஆண்டுகளில் சினிமாவிலும் ஷோபாசக்தியின் பங்கேற்பு வியப்பூட்டும் வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. THEEPAN ஐத் தொடர்ந்து ROOBHA இவற்றுக்கு இன்னொரு அடையாளம், ஆதாரம். 

ஆகவே லெனின் M சிவம், ஷோபாசக்தி என்ற இரு ஆளுமைகளின் கூட்டு விளைவே ROOBHA. கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்க் குடும்பமொன்றைச் சேர்ந்த இளம்பருவத் தமிழ்த் திருநங்கை ஒருவரின் வாழ்க்கைச் சவால்களையும் சிக்கல்களையும் திரையில் வடிவமைத்து நம்மிடையே பரப்பி விடுகின்றனர் இருவரும். 

தமிழ்க் குடும்பங்களிலும் அதனுடைய சமூக வெளியிலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வாழும்போது எதிர்கொள்கிற சிக்கல்களும் சவால்களும் ஏராளமானவை. இதில் வளரிளம் பருவத்துச் சவால்களும் நெருக்கடிகளும் இன்னும் அழுத்தமானவை. இதற்கப்பால் Transgender (திருநங்கை) ஆக இருப்பதென்பதும் வாழ முற்படுதலென்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.

அந்தளவுக்கு கொடுமையும் ஆய்க்கினையும் நிரம்பிய துயர்குழி அது. இது ஈழத்திலோ இந்தியாவிலோ என்றில்லை, தமிழ் மனதோடு புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழ்ந்தாலும் எந்த வேறுபாட்டையும் கொள்வதில்லை. இதையே பேசுகிறது ROOBHA. 

கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்க்குடும்பத்தின் மூத்த மகன் கோகுல். (அப்படித்தான் ROOBHA வின் அறிமுகம் நிகழ்கிறது). ஆனால், கோகுல் அப்படியிருக்கவில்லை. அப்படியிருக்க முடியாமல் தத்தளிக்கிறார். அவரோ தன்னியல் பின்படி ROOBHA வாக, Transgender என்றாக விரும்புகிறார். அதற்கு வீட்டில் (குடும்பத்தில்) இடமில்லை. முக்கியமாக அவருடைய தந்தையால் இது வலிமையாக மறுக்கப்படுகிறது. தந்தையை மீறி வேறு யாரும் குடும்பத்தில் எதையும் தீர்மானிக்க முடியாது. சராசரித் தமிழ்க்குடும்பங்களின் மனநிலையும் வழமைகளும் இப்படித்தான் மரபு அல்லது பாரம்பரியம் என்ற சூத்தரத்தில் கட்டுண்டு இறுகிக் கிடப்பது என்பதால், ரூபா என்ற புதிய முளைக்கு அங்கே இடமில்லாமல் போகிறது. பிள்ளையின் விருப்பத்தையும் அதன் நிலைமையையும் விட ‘வெளியுலகம்’ என்ற தம்மைச் சுற்றிய “சமூக மனநிலை“யே குடும்பத்தினருக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது. 

இதனால் வீட்டுக்கு அப்பாலான வெளியே கோகுலின் - ROOBHA வின் தெரிவாகிறது. ஆனால், வீட்டின், குடும்பத்தின் இறுக்கமில்லையே தவிர, வீட்டை விட்டு வெளியே வந்தாலும் வெளிச் சூழலும் அத்தனை எளிதாகவும் உவப்பாகவும் இருப்பதில்லை Transgender களுக்கு. ஆகவே இந்த வெளிப்பரப்பில் ROOBHA எதிர்கொள்கின்ற நெருக்கடிகள், வாய்ப்புகள், சவால்கள் எப்படியாக இருக்கின்றன? என்று காணவும் காண்பிக்கவும் முயற்சிக்கிறது ROOBHA. 

வெளிப்பரப்பில் சந்திக்கும் பல்வேறு ஆண்களில் அன்ரனியுடன் நெருக்கம் ஏற்படுகிறது. அன்ரனியும் ஒரு ஈழத்தமிழ்க் குடும்பத்தவரே. இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை. காதலித்து திருமணம் முடித்த மனைவி. அவருடைய குடும்பம் இறுக்கமான மரபுச் சிக்கல்களுக்குள் அலைக்கழிந்து கொண்டிருப்பதில்லை என்றாலும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை அது நெகிழ்வுத் தன்மையுடன் அனுசரிப்பது. 

அன்ரனிக்கும் ROOBHA வுக்கும் இடையில் நிகழ்கின்ற அறிமுகம் ஈர்ப்பாகி, பால் வேட்கையாக பரிணமிக்கிறது. ஆனால், எதிர்பார்த்தமாதிரி ROOBHA பெண்ணாக இல்லை என்ற ஏமாற்றம், அன்ரனியைத் தடுமாற வைக்கிறது. ROOBHA வைத் தாக்கி விட்டு அந்த உறவை மறுத்து வெளியேறுகிறார். ஆனாலும் பின்னர் அது வேறுவிதமாகித் தொடர்கிறது. 

இதில் அன்ரனியின் குடும்பம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், ROOBHA க்கும் அன்ரனிக்கும் இடையிலான நெருக்கம், இருவருக்குமிடையிலான பாலுறவின் ஈடுபாடுகள், அன்பு, அதன் வழியாக உருப்பெறும் மாறாத காதல், அன்ரனியின் மனைவிக்கும் ROOBHA இடையில் நிகழும் நிலைமைகள் என படம் பலவிதமான கோலங்களாலும் இழைகளாலும் நிறைந்துள்ளது. 

இரண்டு தமிழ்க்குடும்பங்களின் பிரதிநிதிகளே படத்தின் (கதையின்) மையப்பாத்திரங்கள். ஆனால் ROOBHA வே பிரதான மையம். ஏனைய பாத்திரங்கள் கனடிய பல்லினச் சூழலின் ஊடாட்டமாக நிகழ்வன. 

படத்தில் பெண்களே முதற் கவனத்தை ஈர்க்கின்றனர். கோகுலின் (ROOBHA வின்) தங்கை, அவருடைய அம்மா, அன்ரனியின் மனைவி, ROOBHA வைச் சந்திக்கும் ஏனைய பெண்கள் மற்றும் அவருடைய சக Transgender கள் எல்லோரும் யதார்த்த நிலைகளைப் புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பும் புரிந்துணர்வும் இரக்கமும் நேசிப்பும் இவர்களிடமே மேலோங்கித் தொழிற்படுகிறது. கோகுலை Transgender ஆக, ROOBHA வாக அனுசரிப்பதற்கு அவருடைய தாய் புரிந்துணர்வுடனிருக்கிறார். “ROOBHA வாக மாற முடியாது. அப்படி மாறுவதாக இருந்தால் இந்த வீட்டில் இருக்க முடியாது” என்று தந்தை கூறும்போது “அப்பிடியென்றால், அவன்(?) எங்க போறது?” என்று தாய் கேட்குமிடம் தனியே தாய் என்பதற்கும் அப்பால், பெண்ணின் இயல்பான வெளிப்பாடே. ஏனென்றால் இந்த மாதிரி (Transgender) நிலைமையில் உள்ளேயே (வீட்டிலேயே) இடமில்லாமல் போகும்போது வெளியே என்ன நடக்கும், எப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடம் என்பதை அவர் அறிவார் என்பதன் வெளிப்பாடிது. அப்படித்தான் தங்கையும். கோகுலுக்குப் பிரியமான சட்டையை கொடுப்பதும் நேசமுடன் அணுக்கமாக ஆறுதலாக இருப்பதும். இதே மாதிரியே தன்னுடைய கணவரை காதல் வயப்படுத்தியிருக்கிறார் ROOBHA என்று தெரிந்த பிறகும் – கணவர் அன்பையும் காதலையும் செக்ஸையும் வேறோரிடத்தில் பெறுகிறார் என்ற நிலையிலும் ஒரு கட்டத்தில் ROOBHA வைப் புரிந்து கொண்டு இடமளிக்கிற – அதை மதிக்கிற அன்ரனியின் மனைவி. 

ஆனால், குடும்பத்தில் ஆண்களின் தீர்மானமும் சமூகத்தில் ஆண்மையச் சிந்தனையும் இவற்றுக்கு நேர்மாறாக உள்ளன. இதையே கோகுலின் தந்தையும் அன்ரனியின் நண்பர்களும் மைத்துனரும் காண்பிக்கின்றனர். ஏன் தொடக்க நிலையில் அன்ரனியிடமும் இதுவே மேலோங்கியிருக்கிறது. அதனால்தான் அவர் தன்னுடைய ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ROOBHA வை அடித்து விடுகிறார். 

இலங்கை, இந்தியா போன்ற பின்னிலை எண்ணப் பண்பாட்டுளச் சூழலில் மட்டுமல்ல, வெவ்வேறு கலவைகளைக் கொண்ட (Multicultural social environment) கனேடியச் சூழலிலும் ROOBHA போன்ற Transgender களின் வாழ்க்கை இலகுவானதாக இல்லை. அங்கும் பாலியல் சுரண்டலும் பாலியல் சார்ந்துமே இருப்பதாகச் சொல்கிறது ROOBHA. லெனின் M சிவத்தின் அல்லது ROOBHA வின் இத்தகைய வாசிப்புக் குறித்து எதிர்வாசிப்புகள் இருக்கக் கூடும். ஆனாலும் தன் பார்வையில் செறிவையும் அழுத்தத்தையும் அதற்குரிய கலை நேர்த்தியையும் சிவம் கொடுத்திருக்கிறார். 

இந்தப்படம் தமிழ்ச் சூழலில் உண்டாக்கும் விளைவுகளைக் குறித்து ஒரு பார்வையையும் தமிழல்லாத பிற மொழிப் பண்பாட்டுச் சூழலில் இன்னொரு பார்வையையும் பெறும். அப்படி அது கொள்ளும் என்றே நினைக்கிறேன். இரண்டு சூழல்களும் இதை வெவ்வேறு விதமாகவே உணர்ந்து கொள்ளும். தமிழ்ச் சூழலிலும் திருநங்கைகளைக் குறித்த புரிதல்களோடிருப்போரின் பார்வைக்கும் ROOBHA மறுக்கும் தந்தை போன்றோரின் பார்வைக்குமிடையில் வேறுபாடுகளுண்டு. 
படத்தின் ஒளிப்பதிவு, அதன் தரத்தை மேலும் உயர்த்துகிறது. மென்னிருளும் மங்கிய ஒளியும் மென்னிலையிலான கலப்பு வண்ணங்களுமாக திரை அழகொளிர் பரப்பாக விரிக்கப்படுகிறது. ROOBHA க்குக் கொடுக்கும் முத்தத்தில் பாதி ஒளிப்பதிவாளர் Arsenij Gusev க்கும். இதற்கிணையாக கலை இயக்குநரின் உணர்வும் பங்களிப்புமுள்ளது. இசையும் எடிற்றிங்கும் கூட அப்படித்தான், ஒன்றில் ஒன்று பொருந்திக் கலந்திணையும்போதே சிறப்பான சினிமாவொன்று உருவாகும் என்றவாறாக. ஆனால், எடிற்றிங்கில் இன்னும் சற்றுக் கவனமெடுத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அல்லது சில காட்சிகளில் வேறு தன்மைகளை உருவாக்கியிருக்கலாம். படத்தின் தொடக்கமும் முடிவும் வேறு விதமாக அமைந்திருக்கலாமோ என்றும் படுகிறது. 

பாத்திரங்களில் Amrit Sandhu, ஷோபாசக்தி, தேனுகா கந்தராஜா மற்றும் வைரமுத்து சொர்ணலிங்கம் ஆகியோர் கவனத்தில் நிற்கின்றனர். இருந்தாலும் அம்ரித் சந்து கூடுதல் அழுத்தம் பெறுகிறார். எல்லா விதமான ரூபங்களிலும் அவர் தாவிச் செல்லும் அழகு வியப்பூட்டுவது. அவருடைய தோற்றமும் விரியும் ஆற்றலும் சிறப்பு. இணையாகச் சென்று கொண்டிருக்கிறார் ஷோபாசக்தியும். 

காமத்தில் தொடங்கிக் காதலில் முடியும் வாழ்வு என்று ROOBHA வைச் சாராம்சப்படுத்திச் சொல்லலாம். வழமைகளை மீறிய Transgender லின் அழகும் அம்சமும் அச்சம் தவிர்க்கக் கோருவன. 

ROOBHA நம் பிரியங்களிலும் நேசிப்புகளிலுமான ஒருத்தி.  

கருணாகரன்    - நன்றி தினகரன்