சிட்னியில் 5 நூல்களின் அறிமுகம் - செ .பாஸ்கரன்

 .

நேற்றையமாலைப்பொழுது என்றும் இல்லாதவாறு ரம்மியமாக இருந்தது. நீண்ட இடைவெளிகளுப்பின்பு இலக்கிய வாதிகள் எழுத்தாளர்கள் என பலர் ஒன்றுகூடி இருந்ததுதான் அதன் சிறப்பு. 

22 வருடங்களாக தமிழையும் இலக்கியத்தையும் இரண்டு கண்களாகக் கொண்டு இயங்கிக் கொண்டு வருகின்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில் ஐந்து நூல்களின் அறிமுக விழா தூங்காபி கொமினிற்றி மண்டபத்தில் இடம்பெற்றது. மெல்பேணில் இருந்து எழுத்துக்களையும் இலக்கியத்தையும் முன்னெடுத்துக் கொண்டும் எழுத்தாளர்களை ஊக்குவித்து கொண்டிருக்கும் எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்களின் முயச்சியால் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியை சட்டத்தரணி கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் மிக அழகாக தலைமை தாங்கியிருந்தார். நிகழ்ச்சி திருமதி கனகா கணேஷ் அவர்களுடைய வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது. ஒரு இலக்கிய விழாவிற்கு அல்லது ஒரு நூல் அறிமுக விழாவிற்கு இத்தனை பெரிய கூட்டம் வருகை தந்து இருந்தது என்பது ஒரு மிகப்பெரிய விடயம் என்று கூறலாம். இலக்கியம் பேசுகின்றபோது அல்லது இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடுவது என்பது குறைவாகவே இருந்து கொண்டு இருக்கின்ற நிலையிலே இந்தவிழா சிறப்பாக இருந்தது.

தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வரலாற்று சுவடுகள் ஒளிப்படத் தொகுப்பு திரையில் காண்பிக்கப்பட்டது. 22 வருடங்களாக இலக்கியத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் எப்படி எல்லாம் இந்த சமூகம் சேவை செய்து கொண்டிருக்கின்றது என்பதை மிக அழகாகவும் பாரதியாருடைய பாடல்கள் பின்னணியில் ஒலிக்கவும் கொடுத்திருந்தார்கள்.




அதைத்தொடர்ந்து கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் தலைமைஉரையை மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் ஆற்றியிருந்தார். அவருடைய உரை அவருடைய இலக்கிய அறிவையும் ஆளுமையும் வெளிக்காட்டியது. முதலிலேயே ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சன்முகம் சபேசன் அவர்களின் காற்றில் தவழ்ந்தத சிந்தனைகள் என்ற கட்டுரை நூல் பற்றி எழுத்தாளர் விக்னேஸ்வரனின் உரை அமைந்தது. மிக அழகாக தொட்டு சென்றார். காற்றில் தவழ்ந்த இந்த உரை பல பத்திரிகைகளிலே வந்திருக்கின்றது, இப்போது சிட்னியில் வெளியிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

தீதோதாதே தாதி - தகர வருக்கப் பாடல் - மெல்போர்ன் அறவேந்தன்

 


பால்வண்ணம் சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பு அனுபவம் - குரு அரவிந்தன்

 .

எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் பால்வண்ணம் சிறுகதைத் தொகுப்பை வாசிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் இலக்கியத்திற்குத் தரமான சிறந்த ஆக்கங்களைத் தந்து கொண்டிருக்கும் அவரைக் கனடா வந்த போது நேரடியாகச் சந்தித்திருக்கின்றேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் மட்டுமல்ல, வெளிப்படையாக அவர் பேசுவதால் நல்ல நட்புகளைத் தேடி வைத்திருப்பவர்.

சென்னை எழுத்துப் பிரசுரத்தின் வெளியீடாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இந்த நூலுக்கான அட்டைப்படத்தை கலாநிதி எம்.கே. எஸ். சிவகுமாரன் சிறப்பாக வரைந்திருக்கின்றார். ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி வண்ண இதழின் ஆசிரியர் மட்டுமல்ல, மகாஜனாவின் ஓவியக்கலை ஆசிரியராகவும் இருந்தவர்.

இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழின் ஆசிரியரான திரு. தி. ஞானசேகரன் இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கின்றார். அவர் தனது முன்னுரையில்தெளிந்த நீரோட்டம் போன்று அநாயாசமாக கதைகளை நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் திறனும், அவரது சிறந்த மொழிநடையும் பாராட்டத் தக்கவகையில் அமைந்திருப்பதும், பல்வேறுபட்ட கருவும் உருவும் கொண்ட கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதும் வாசகரது இரசனைக்கு நல்விருந்தாக அமையும்என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஒவ்வொரு வாசகனின் இரசனையும் வித்தியாசமாக இருந்தாலும், இலக்கியத்தரம் வாய்ந்த நீண்ட காலமாக வெளிவரும் ஞானம் இதழ் ஆசிரியரின் இந்த முன்னுரையில் இருந்து இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் தரத்தை வாசகர்கள் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 38 கர்மவீரர்கள் இணைந்திருந்த சங்கம் மாயமானது ! நினைவுகள் மாத்திரம் மாயமாகாது ! ! முருகபூபதி


அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வந்த பின்னர், மீண்டும் 1997 ஆம் ஆண்டுதான் இலங்கைக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது என முன்னைய அங்கங்களில் தெரிவித்திருந்தேன்.

அப்போது, வடக்கு – கிழக்கிற்குத்தான் என்னால் செல்ல முடியாது போய்விட்டது.  அங்கிருந்த பல இலக்கியவாதிகள் குறிப்பாக வடக்கிலிருந்தவர்கள், மேற்கிலங்கைப்பக்கம் வந்திருந்தார்கள்.

வடக்கில் போர் மேகங்கள் பரவியிருந்த சூழலில்  அவர்களுக்கு அப்போது கொழும்பு பாதுகாப்பானதாக இருந்தது.

இறுதியாக 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எமது இலங்கை


முற்போக்கு எழுத்தாளர் சங்கம் யாழ். நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடத்திய முழுநாள் கருத்தரங்கில் கலந்துகொண்டேன்.

அதன்பின்னர் நான் கலந்து கொண்ட சங்கத்தின் நிகழ்ச்சி, 1997 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 06 ஆம் 07 ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண சிறிய மண்டபத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவ்வேளையில் இலங்கையில் நின்றமையால்,  குறிப்பிட்ட இரண்டு நாள் கருத்தரங்கிலும் என்னால் கலந்துகொள்ள முடிந்தது.

அந்தக்கருத்தரங்கை முன்னிட்டு சங்கத்தின் அமைப்புச் செயலாளர் என். சோமகாந்தன்,  கலை - இலக்கிய ஆய்வு மலர் ஒன்றை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்.

அதில் எனது கட்டுரையும் இடம்பெறல்வேண்டும், என்று அவர் சொன்னார். கருத்தரங்கு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கேட்டார்.

     இன்னும்    இரண்டு   நாட்களில்   நடக்கவிருக்கும்                                   ஆய்வரங்கில் வெளியிடப்படவுள்ள   மலருக்கு   கட்டுரை   கேட்கிறீர்களே?                  எப்படி சாத்தியம்?   என்றேன்.


   “உமது   கட்டுரை  இடம்பெறவேண்டும்.            உடனே  எழுதித்தாரும். “   என்றார்.


புலப்பெயர்வும்   ஒட்டுறவும்   என்ற   சிறிய   கட்டுரையை            அவர்  முன்னிலையிலேயே  உடனே எழுதிக்கொடுத்துவிட்டு  நீர்கொழும்புக்கு  வந்துவிட்டேன்.

 எனக்குச்    சந்தேகம்.      குறுகிய   கால   அவகாசத்தில்    எனது கட்டுரையையும்  பதிப்பித்து   மலரையும்  அச்சிட்டுவிடுவாரா?


 என்ன    ஆச்சரியம்.?!

முதல் நாள் கருத்தரங்கிற்காக அந்த சனிக்கிழமை காலையிலேயே வெள்ளவத்தைக்கு வந்துவிட்டேன். மண்டப வாயிலில் என்னை வரவேற்ற சோமகாந்தன், என்னிடம் அந்த ஆய்வு மலரை நீட்டினார்.

இத்தகைய கர்மவீரர்கள் இருந்த எமது சங்கம் தற்போது இயங்காமல் முடங்கிவிட்டது .

சங்கத்தின் தூண்களாக விளங்கிய பலர் இன்றில்லை.  அந்தத் தூண்களை நினைவுகளாக சுமந்து சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றேன்.

அருந்தமிழ் மூலனார் செப்பிய மந்திரம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 


   சிவனருளைப் பெற்றுமே திருமூலர் வந்தார் 

    தவநிலையி லிருந்தவரும் தத்துவத்தை மொழிந்தார்
    புவியுள்ளார் அகத்தினிலே  புதுக்கருத்தை விதைத்தார்
    அவனியிலே திருமூலர் வாழுகிறார் என்றும்  

    ஒருகுலமே என்றவரும்  உரத்துமே சொன்னார் 
    ஒருதேவன் உலகதனைக்  காப்பதுவாய் உரைத்தார் 
    அலங்காரம் விரும்பாது  அருட்சக்தி என்றார்
    அன்புதான் இறையென்று அவருறைக்கச் சொன்னார் 

   உயர்பதவி வகித்தாலும் உயர்செல்வம் இருந்தாலும்
   உயிரிருக்கும் உடலுக்கே  உரித்தென்றார் மூலர்
   உயிர்பிரிந்த பின்னாலே பிணமென்று சொல்லி
   அதையெரித்து நீர்மூழ்கி  மறந்திடுவார் என்றார் 

   உடம்பினை இழுக்கென்று எண்ணி நின்றார்
   உடம்புக்குள் உயர்பொருள் உறையு தென்றார்
   இழுக்கென எண்ணிய உடம்பை இப்போ
   விழிப்புடன் காத்திடல் வேண்டும் என்றார் 

   படைத்தவன் மகிழ்ந்திடப் பச்சிலை போதும்
   பால்தரும் பசுவுக்கும் பசும்புல் போதும்
   பசித்தவர் புசித்திட கொடுத்திடு உணவை 
   உளத்தினால் நல்லுரை பகருதல் உயர்வே 

   நால்வகை அறங்களை நயமுடன் சொன்னார்
   நாநில முள்ளோர் ஆற்றிடல் சிறப்பே
   இலகுவாய் அறத்தைத் தேர்ந்துமே சொன்னார்
   இவ்வுல குள்ளோர் இலகுவாய்ச் செய்யலாம் 

நீதி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1972ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏழு படங்களில்


நடித்திருந்தார்.இவற்றுள் இரண்டு படங்களில் குடிகாரனாகவும்,பெண் மோகம் கொண்டவராகவும் அவர் பாத்திரம் ஏற்றிருந்தார்.ஒரு படத்தில் ஏழை குடிகாரனாகவும்,இன்னொரு படத்தில் பணக்கார குடிகாரனாகவும் அவர் நடித்தார்.இதில் ஏழை குடிகாரனாக அவர் நடித்த படம் தான் நீதி.

ஹிந்தியில் ராஜேஸ்கண்ணா,மும்தாஜ் நடித்த துஷ்மன் என்ற படம்

71ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது.அதனை சூட்டோடு சூடாக தமிழில் படமாக்கினார் பாலாஜி.எவ்வளவு வேகம் என்றால் வருடத்திற்கு ஒரு படத்தை மட்டும் சிவாஜியின் நடிப்பில் தயாரிக்கும் பாலாஜி 72ன் ஆண்டு நீதி,ராஜா என்று இரண்டு படங்களை சிவாஜி நடிப்பில் தயாரித்து அசத்தினார்.வருட ஆரம்பத்தில் ராஜாவும்,இறுதியில் நீதியும் வெளிவந்து வெற்றி படங்களாகின.

ராஜாவின் வித விதமான ஆடை அணிந்து ஸ்டைல் காட்டிய சிவாஜி நீதியில் ஒரே விதமான நீலநிற ஆடை அணிந்து படம் முழுதும் தோன்றினார்.ஆடை தான் ஒரே மாதிரியே தவிர நடிப்பில் பலவித குணாம்சங்களை காட்ட அவர் தவறவில்லை.மது அருந்தி விட்டு லாரி ஒட்டுவதாகட்டும்,சகுந்தலாவுடன் கூத்தாடுவதாகட்டும்,தன்னால் பாதிக்க்கப் பட்ட குடும்பத்துக்கு உதவப் போய் ஒவ்வொரு தடவையும் அவமானப்படுவதாகட்டும்,குழந்தையிடம் அன்பு காட்டுவதாகட்டும் சிவாஜியின் நடிப்பு பல உணர்ச்சிகளை காட்டியது.

அவரோடு மோதும் வேடம் சௌகார் ஜானகிக்கு.படம் முழுவதும் வெறுப்பை உமிழ்ந்து தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் அவர்.அது என்னவோ தெரியவில்லை சௌகார் ஜானகி,ஜெயலலிதா சேர்ந்து நடிக்கும் படம் என்றால் நடிப்பில் சௌகார் ஸ்கோர் பண்ணிவிடுகிறார்.இந்தப் படத்திலும் அதேதான்.ஆனாலும் சீரியஸான கதையில் ஒரே ஆறுதல் ஜெயலலிதாதான்! நீதிபதியாக வரும் சுந்தரராஜன்,தந்தையாக வரும் எஸ் வி சுப்பையா,தாயாக வரும் காந்திமதி,பெண் மோகம்,மண் மோகம் இரண்டோடும் வளம் வரும் ஆர் எஸ் மனோகர் எல்லோரும் ஓகே என்றால் மனோகரின் கையாளாக வரும் எம் ஆர் ஆர் வாசு டு மச்!அவர் பேசும் பேசும் இரட்டை அர்த்த வசனங்களும் விரசம்.சிவாஜிக்கே தொழில் கொடுப்பவராக வரும் மனோரமாவின் ஒரு தலை காதலும்,அவர் விடும் ஏக்கப் பெருமூச்சும் கிரேட் ! சில காட்சிகளில் தோன்றி பழைய உற்சாகம் இல்லாமல் காட்சியளித்தார் ஜே பி சந்திரபாபு!இவர்களுடன் ஜெய கௌசல்யா,டீ கே பாலச்சந்திரன்,பாலாஜி,நாகையா ஆகியோரும் நடித்தனர்.

திரும்பிப் பார்க்க வைத்தார் திருமூலர் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 

   உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அவற்றுள்


எங்கள் தமிழ்மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பினை எங்கள் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதாவது பக்தியை இலக்கியமாக்கிய தனித்துவம் எனலாம். ஏனைய மொழிகள் பக்தியைத் தனியாகவே பார்த்தன. ஆனால் எங்கள் தமிழ் மொழி அதனை வாழ்வுடன் இணைத்து இலக்கியமாகக் கண்டது.இதன் காரணமாகப் பக்தியின் வழியில் சென்ற அடியார்களின் மனத்தினின்று உதித்த சிந்தனைகள் அத்தனையும் திருப்பாட ல்களாய் தமிழை வளம்படுத்தி வழிகாட்டியாய் அமைகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது எனலாம். அந்த வகையில் பன்னிரு திருமுறைகள் வந்து அமைகின்றன.

  பன்னிரு திருமுறைகளைத் தந்தவர்கள் பல இடங்களைச்


சேர்ந்தவர்கள். பல அனுபவங்களைப் பெற்றவர்கள். அவர்களின் அனுபங்கள் ஆண்டவனின் பாற்பட்டதாகவும் அதேவேளை உலகியல் நிலைப்பட்டதாகவும் அமைந்தே இருந்தது. ஒன்பதாம் திருமுறைவரை அமைந்த திருப்பாடல்கள் ஒரே வகையினவாய் இருப்பதைக் காணமுடிகிறது. பத்தாம் திருமுறையாக  அமைகின்ற திருமுறையானது  ஒன்பது திருமுறைகளையும் விட வித்தியாசமானதாக அமைவதனைக் காணக் கூடியதாக இருக்கிறது. தேவாரம் திருவாசகம்திருப்பல்லாண்டு என்று திருமுறைகள் வருகின்ற நிலையில் பத்தாவதாய் வருகின்ற திருமுறை திருமந்திரம் "   என்னும் சிறப்புப் பெயரினைத் தாங்கி வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகும். சிறப்புப் பெயரினைத் தாங்கி வருகின்ற திருமந்திரத்தைப் பற்றி அறிவது அனைவருக்கும் அவசியம் அல்லவா !

  இந்தத் திருமந்திரம் தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகும். இதனைத் தத்துவ நூல் என்பதா,  சமய நூல் என்பதாமருத்துவ நூல் , என்பதா அறிவியல் நூல் என்பதா அல்லது புதுமைக் கருத்துக்களை உரத்துச் சொல்லும் புரட்சி நூல் என்பதா ! இப்படிப் பல நிலையில் பன்முகங் கொண்டதாக இத் திருநூல் அமைந்தி ருக்கிறது என்றுதான் எண்ணிட வைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ்ப் பக்தி உலகில் திருமந்திரம் தனித்து வமான ஒரு நூலாக மிளிர்ந்து நிற்கிறது என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

  இப்படிப் பல புதுமைகளைக் கொண்ட திருமந்திரத்தைத் தந்தவரின் வரலாறும் கூட புதுமையாகவே காணப்படுகிறது. இவரின் தொடக்கமே எம்பெருமான் உறைகின்ற கயிலாயமாகிறது. அங்கிருந்து ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவரின் வருகை பிறப்பாய் அமைகிறது. வந்தவருக்கு அவர் வந்த உடலே வாய்க்காது விட வேறொரு உடலிற் புகுந்து அந்த உடலுக்கு உரியயவனின் பெயருடன் இம்மண்ணில் நிற்கும் ஒரு புதுமை நிகழ்கிறது. அப்பொழுதுதான் அவருக்குத் தான் தாங்கிய உடலுக்கு உரித்தானவனின் பெயரான மூலன் என்னும் பெயர் வாய்க்கிறது. திருவருட்சக்தி அவரிடம் நிறைந்த காரணத்தால் மூலன் - திருமூலன் ஆகும் நிலை ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. அதுவும் நிரந்தர மாகவில்லை என்பதையும் அவர்பற்றிய கதை எடுத்து இயம்புகிறது.

சிறைப் பறவைகளின் எழுத்துக்கு கிடைக்கும் அங்கீகாரம் ! அவதானி


நாமறிந்தவரையில் சிறையிலிருந்தவாறு  இலக்கியம் படைத்தவர்கள், அரசியல் வரலாறு எழுதியவர்கள் உலகத் தலைவர்களாகவும்  அறிமுகமானார்கள்.

அறிஞர் சோக்ரட்டீஸ் சிறைவைக்கப்பட்டு, மரணதண்டனைக் கைதியாக இருந்து நஞ்சு தரப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக பலர் சிறைவாசம் அனுபவித்தனர்.  மகாத்மா காந்தியும் எழுத்தாளர்தான். பண்டிதர் நேருவும்  சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்தான் உலக சரித்திரம் என்ற நூலாகியது.  “ அதனைப்படித்த பின்னரே தான் கம்யூனிஸ்டாக மாறினேன்.   என்று ஒரு தடவை சொன்னவர் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தோழர் எம். கல்யாணசுந்தரம்.

ஆபிரிக்க மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன்


மண்டேலாவும் எழுத்தாளர்தான். இவரது Long Walk to freedom நூல் உலகப்பிரசித்தி பெற்றது.

தமிழ்நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட சுப. வீரபாண்டியனும்  அதே பெயரில் ஒரு நூலை எழுதினார்.

இவ்வாறு சிறையிலிருந்துகொண்டு எழுதிய பலரை பட்டியலிடமுடியும்.

இலங்கையில் சமகாலத்தில் ஒரு தமிழ் அரசியல் கைதி சிறையிலிருந்தவாறே நாவல் எழுதி தேசிய சாகித்திய விருது பெற்றுள்ளார்.

அவர்தான் சிவ ஆரூரன் என்ற பெயரில் எழுதிவரும் சிவலிங்கம் ஆரூரன்.  பல வருடங்களாக சிறையிலிருக்கும் அவர் ஒரு பொறியியல் பட்டதாரி.  வடமராட்சியைச் சேர்ந்த அவர் சிறந்த கல்விப்பின்புலம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்.  எதிர்காலக் கனவுகளுடன் படித்தவர். காலம் அவரை சந்தேகத்தின் பேரில் சிறையில் தள்ளியிருக்கிறது.

அரசியல் கைதியாக நீண்ட காலம் சிறைக்கூண்டுக்குள் வாழ்ந்திருக்கும் சிவ ஆரூரன்,  தனது சிறை  வாழ்வையே சவாலாக்கிக்கொண்டு தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.

ஏற்கனவே யாழிசை, யாவரும் கேளீர், வலசைப்பறவைகள் , ஊமை மேகம், முதலான நாவல்களையும் எழுதி விருதுகளும் பராட்டுச்  சான்றிதழ்களும் பெற்றவர். The innocent victims என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ஒரு நூலை வரவாக்கியவர். அத்துடன் பூமாஞ்சோலை என்ற கதைத் தொகுதியையும் வெளியிட்டிருப்பவர்.

இவை யாவும் இலங்கையில்தான் வெளிவந்திருக்கின்றன. தன்னை சிறைக்குப் பார்க்க வரும் தந்தையாரிடமிருந்தே ஆங்கில – தமிழ் அகராதியும் தருவித்து படித்து தனது ஆங்கில அறிவையும் விருத்தி செய்துகொண்டவர்.

இந்தத்  தகவல்களை நாம் இணைய ஊடகங்களிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.

ஆனால், இலங்கை இலக்கிய விமர்சகர்களில் எத்தனைபேரின் கண்களுக்கு இவரது படைப்புகள் தென்பட்டுள்ளன!?

இலங்கை அரசுடன்,  அடிக்கடி போரில் காணாமல் போனவர்கள் பற்றியும் அரசியல் கைதிகள் பற்றியும் பேசுவதாக பாவனை காட்டுகின்ற தமிழ் அரசியல் தலைவர்களின் கண்களில் கூடவா சிவ ஆரூரனின் படைப்புகள் தென்படவில்லை எனக் கேட்கத்தோன்றுகிறது.

பெண் விடுதலை - நூல் அறிமுகம் - வா.மு.யாழ்மொழி

“பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர்


கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரியவாதிகளும், பொதுமக்களும் அறிந்திடாத பெரியாரின் கருத்துக்களை மட்டும் நூல் அறிமுகமாக எழுதலாம் என்ற எண்ணம் எழுந்தது.         

கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், சடங்கு, கலாச்சாரம், பண்பாடு, பழக்கம், வழக்கம் என்ற எந்த கட்டிற்குள்ளும் அடங்காத சுதந்திர சிந்தனையாளர்பெரியார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் தான் தன்னைப் பற்றிக் கூறும் போது கூட “எனக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்ற எந்தப் பற்றும் இல்லை; மனிதப் பற்று மட்டுமே உண்டு” என்று கூறியதோடு, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்ற மற்றப் பற்றுடையவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்க முடியாது என்றும் கூறினார்.     

பெண் கல்வி, பெண்களுக்குப் பணிகளில் 50% இட ஒதுக்கீடு, விதவைத் தன்மை ஒழிப்பு, உடன்கட்டை ஏற்றுதல் எதிர்ப்பு, மறுமண உரிமை, சொத்துரிமை, குழந்தைப் பெறாமல் இருக்க உரிமை என பல பெண் உரிமைக் கருத்துக்களைப் பேசியதோடு நிற்காமல், பெண்கள் முழு விடுதலை பெற்று ஆண்களைப் போல மனிதர்களாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையுமே சிந்தித்துள்ளார் பெரியார் என்பது தான் பெரியாரியப் பெண்ணியத்தின் தனித்துவம்.

வியட்நாமின், சம்பா இந்து அரசு-2 - நோயல் நடேசன்

 .

பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள  அங்கோவாட் போயிருந்தபோது,  கமர் (Khmer) இராஜதானிக்கும்  வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற  இந்து அரசுக்கும்  தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு  எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால  சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய பகுதியே  என்று சொல்லப்பட்டது.  அக்காலத்தில் இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இஸ்லாமியராக இப்பொழுது மாறிவிட்டார்கள் என்றார் எனது வழிகாட்டி .

அதன்பின் சில தடவை வியட்நாம் சென்றபோது எதோ காரணத்தால் அந்தப்பகுதி எங்கள் பிரயாண பிரதேசமாக வரவில்லை. இம்முறை போவதற்கு முன்பாக எனது நண்பன்-  தொல்பொருள்ஆய்வாளர்  ,   “ அந்தப்பகுதி மை சன் (My Son) என்றும் , ஆனால் அவர்கள்  அதை மீ சன் என்கிறார்கள். அதையும்  பார்த்துவிட்டு வா  “ என்றபோது எனது மனதில் பார்க்கவேண்டும் என்ற உணர்வு  கிணற்றாமையாக தொடர்ந்து வாழ்ந்தது.

எமக்கு மொழி தெரியாதபோது முகவர்கள் மூலம் ஒழுங்குபடுத்திய  பாதைகளிலே  பயணிப்போம். இம்முறை   கேட்டபோது பயண முகவர்  ஏற்கனவே  பணம் கொடுத்த பின்பு அதை மாற்றுவது கடினமானது என்ற போதும், எப்படியும் அதைச் செய்யவேண்டுமென உறுதி கொண்டேன்.

எங்களது வழிகாட்டியாக  மத்திய வியட்நாம் நகரான ஹு (Hoe) என்ற இடத்தில்  எமக்கு அறிமுகமான பெண்ணிடம்,   நாங்கள் மீ சன் போகவேண்டும்  “ என்றபோது,    “ அது நாங்கள் போகும் வழியில் இல்லை.  ஆனால்,  40 கிலோமீட்டர் மேற்கே உள்ள மலைப்பிரதேசம்தான் அது.அங்கு செல்ல  செலவு அதிகமாகும்    என்றபோது அதைத் தருவதாகப் பேசினோம் .

கடற்கரைகள் கடந்து அழகிய மலைப்பிரதேசங்களுடாக எமது வாகனம் சென்று, இறுதியில் பள்ளத்தாக்கான மீ சன் பிரதேசத்தை அடைந்தது. மீ சன் அக்காலத்துச் சம்பா இராச்சியத்தின் புனிதப் பிரதேசம்.  காசி அல்லது மக்கா போன்றது.

சாகித்தியரத்னா விருது பெற்றுள்ளார் ஞானம் ஞானசேகரன்

 .



08 நவம்பர் 2022 அன்று சிட்னி துர்க்கா தேவஸ்தானத்தில் அன்னாபிஷேகம்


சைவமகன் தனாசிவம்....
சிட்னி துர்க்கா தேவஸ்தானம்,
அவுஸ்திரேலியா.


`அன்னம் பர பிரம்மம்’ என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி `அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. `எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்' என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினமான நவம்பர் 08 ம் திகதி அன்று  அனைத்து சிவாலயங்களிலும் `அன்னாபிஷேகம்' கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.


#அன்னாபிஷேகம்:

ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு! நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. 

இலங்கைச் செய்திகள்

யாழில் பாணின் விலை குறையாது

இலங்கையில் இறுதிப்பகுதியை மாத்திரமே பார்வையிடமுடியும்

அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தலைமையில் நீதியமைச்சின் நடமாடும் சேவை நேற்று யாழ்ப்பாணத்தில்

கொழும்பில் பாரிய பேரணி; புறக்கோட்டை நோக்கிய வீதிகள் பொலிஸாரால் மூடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் நடைமுறையில்


யாழில் பாணின் விலை குறையாது

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை குறைக்கமாட்டோம் என யாழ். மாவட்ட வெதுப்பாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

உலகச் செய்திகள்

பேரணி ஒன்றில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; உயிராபத்து இல்லை 

இந்திய, பிரான்ஸ் விமானப்படை ஜோத்பூரில் கூட்டு போர்ப் பயிற்சி

வட கொரியா கண்டம் பாயும் ஏவுகணை வீச்சு

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம்: புலம்பெயர்தல் தொடர்பில் பேச்சு

வட, தென் கொரியாக்கள் பரஸ்பரம் ஏவுகணை வீச்சு


பேரணி ஒன்றில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; உயிராபத்து இல்லை 

துப்பாக்கிச் சூட்டை அடுத்து இம்ரான் கான் மக்களை நோக்கி கையசைப்பதையும், காயமடைந்த அவரது கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஒருவரையும் படத்தில் காணலாம்...

- துப்பாக்கிதாரி கைது; இதுவரை எவரும் பொறுப்பு கூறவில்லை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆனைக்கோட்டை வன்னி ஹோப் (Vanni Hope) முன்பள்ளி பாடசாலை

 *சாவல்கட்டு முன்பள்ளி பாடசாலை*


*மாகாணம்* : வட மாகாணம்


*பிரதேச செயலகம்* : சன்டிலிப்பாய்

*பிரதேசம்* : ஆணைக்கோட்டை

*கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை* : 30 மாணவர்கள் 

*தேவையான உதவிகள்* : மாணவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்துவதற்கு காலை உணவு வழங்கல் மற்றும் விளையாட்டு உபகரணங்களை புணரமைத்தல்.

https://youtu.be/ligP9CkAwSc


பேர்த் பாலமுருகன் கோவில் - அன்ன அபிஷேகம் - 07/11/2022