தீபாவளி நல்வாழ்த்துக்கள்

.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்


எமது அன்பார்ந்த வாசகர்களுக்கு தமிழ்முரசு ஆசிரியர் குழுவின் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. உங்களது ஆதரவுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.  

ஓபனில் நடைபெற்ற தீபத் திருநாள்

ஓபனில் நடைபெற்ற தீபத் திருநாள்  நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்.


வவுனியாவுக்குப் போயிருந்தேன்

.

வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வவுனியா செல்லும் 87ம் எண் பேருந்து புறப்பட்டு கொழும்பு வீதிகளைக் கடந்தது. எப்படியும் ஏழு மணி நேரப் பயணத்தை, நெரிசலோடு அனுபவிக்க வேண்டும் என மனதை பதப்படுத்திக்கொண்டேன். கொழும்பு வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ் எழுத்துகள் அழகாய் இருந்து கொண்டிருக்கின்றன. நிமிடங்கள் கரையக்கரைய பேருந்தில் மனிதர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது, சிலாபம், புத்தளம் என நேரமும், பேருந்தின் வேகமும் சாலைகளைத் தின்று, ஊர்களை குடித்துக்கடந்து கொண்டிருந்தது. புத்தளத்தில் பேருந்து கொள்ளாத கூட்டம் பிதுங்கி வழியத் தொடங்கியது. புத்தளத்திலிருந்து அனுராதபுரம் வரை பெரும் தொகையிலான இடங்கள் காடுகளாகவே, பசுமை நிறைந்த பகுதியாகவே இருந்தது. அனுராதபுரம் கடக்கும் போது இருள் கவ்வத் தொடங்கியது. அனுராதபுரத்தை விட்டு வவுனியா நோக்கி பேருந்து வேகம் கொள்ளத் துவங்கிய போது, இருள் துகள்களாய் படியத் தொடங்கியது.

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

.
திருமுறை முற்றோதல்


07.11.2010 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07.11.2010 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திருவடித் திருத்தாண்டகத்தில் திருஅதிகை பதிகத்திற்கு (ஆறாம் திருமுறை ஆறாம் பதிகம்) திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்களால் விளக்கம் கூறப்பட்டு பின்னர் ஆறாம் திருமுறையில் பத்தாம் பதிகம் தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(Cnr Burlington Rd & Rochester St), Homebush)

நேரம்: 07.11.10 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

திருஅதிகை பதிக விளக்கம்

(திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள்)

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல் மேலதிக விபரங்களுக்கு:

திரு க சபாநாதன் Tel: 96427767
திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406
திரு மா அருச்சுனமணி Tel: 87460635

சங்க இலக்கிய இலங்கை திருநாட்டை ஈழம் என்று குறித்தமைக்கு சான்றுகள் உண்டு

.
மனனாரில் நடைபெற்ற மன்னார் தமிழ்ச் செம்மொழி விழாவின் 2ஆம் நாள் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை கலைப்பீடப் பேராசிரியர் கலாநிதி கி. விசாகரூபன் சமர்ப்பதித்த ஆய்வுக்கட்டுரை


கவிதை - வாழ்க்கைப் பயணம்

.

நம்பிக்கையோடு வாழ்கிறவர்கள்
நம்பிக்கையின்மையை விதைக்கிறார்கள்
நிலையான வாழ்வு பெற்றவர்கள்
நிலையாமையை உபதேசிக்கிறார்கள்
வசதி படைத்தவர்கள்
வசதியின்மையைப் பேசி
வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்று
வார்த்தைகளால் நோகடிக்கிறார்கள்
புத்திசாலிகளென்று போற்றப்படுபவரோ
இதெல்லாம் இயல்பென்ற மடமையை
வியாக்கியானம் செய்து தங்கள்
வரட்சியை வாரி வழங்குகிறார்கள்
வேஷமான வாழ்க்கையே
விவேகமாகி இருக்கிறது
வானத்துக் கீழிருக்கும் எதுவொன்றிலும்
தனக்குப் போட்டியாய் இன்னொருவர்
தப்பியும் வந்துவிடலாகாது என்பதில்
தனிக்கவனம் செலுத்துகிறார்கள்
இத்தனைக்கும் நடுவே தட்டுத்தடுமாறி
எழுந்து வந்தவர்களும்
இருப்புக்கு இதுவே வழியென்று
இப்படியே ஆகிப்போகிறார்கள்
பாறை இடுக்குக்கு இடையேயும்
புஷ்பம் பூப்பது நம்பிக்கையாய்
ஜோதி ஸ்தம்பமாய் நெஞ்சில்
சுடர் ஏற்றிக் கொள்கிறது
இதுவும் கடந்து போகுமென்ற
நம்பிக்கை ஒன்றே நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கையின் வெற்றிகளை
வளம் பெற மலரச் செய்கிறது
எல்லோரும் சேர்ந்து எல்லோரின் கைபற்றி
ஓரடியாவது முன்வைப்பதே
எல்லோருக்குமான மகிழ்ச்சியை
முன்வைத்து நிரந்தரப்படுத்துகிறது

nantri Jeevee

உலகச் செய்திகள்

.
1    5 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யும் பிரிட்டிஷ் அரசு!
2.   இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் பலி: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்
3    மேற்கு இந்தோனேசியாவில் பூமியதிர்வு : 300 பேர்  பலி
4. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : 25 பேர் பலி


வித்துவான் வேந்தனாரின் நூல்கள் வெளியீடு

.
 

இருபது20 கிரிக்கெட் போட்டிகள்

.

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 20 -20 கிரிக்கெட் ஆட்டம் 31 .10 .2010 அன்று perth  நகரில்  நடை பெற்றது.  முதலில் துடுப்பெடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணிவிக்கெட்டுகளை  இழந்து 133  ஓட்டங்களைப் பெற்றது. பின்பு ஆடிய இலங்கை அணிவிக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டது. பெரேரா ஒரே ஓவரில் ஒருஇரண்டுஅடித்து தனது அணிக்கு வெற்றியை சேர்த்துக் கொடுத்தார்.
-----------------------------------------------------------------------------------------------------
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி மழை காரணமாக இலங்கைக் குழுவிற்கும் நியூ சவுத் வேல்ஸ்சிற்கும் நடைபெறவிருந்த இருபது20 கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை.

சென்ற புதன்கிழமை ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி பிளாக்ரவுணில் (சிட்னி) நடைபெற்ற இப்போட்டியில் இலங்கைக்குழு 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய பயணம்

.

இந்திய சுற்றுப்பயணத்தின்போது, நாட்டின் நிதித்தலைநகரமான மும்பைக்கும் செல்லவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெக்க அதிபராக ஒபாமா, கடந்த ஆண்டு ஜனவ 20 ஆம் திகதி பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நெருக்கமான நல்லுறவு வைத்திருப்பதால், அவரது இந்திய பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீகம்

.

வணக்கம்! இந்த வாரம் சற்று மாறுதலாக கார்த்திகை மாதத்தின் மஹத்துவத்தை பற்றி பார்ப்போம். பிறகு அடுத்த வாரத்தில் இருந்து ஆழ்வார்களின் மஹத்துவத்தை பற்றி தொடரலாம்.

சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 30 பேர் விடுதலை

.
எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தவர்களில் 30 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எம். வி. சன் சீ கப்பலின் மூலம் கடந்த ஒகஸ்ட் மாதம் 13ஆம் திகதி 492 இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று கனடாவை அண்மித்திருந்தது.

தமிழ் சினிமா

1. தொட்டுப்பார் - விமர்சனம்


2. ஒச்சாயி - விமர்சனம்




சோழர்கலை

.
இந்தியாவிற்கு விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணம் செல்ல இருகின்ற எமது வாசகர்களுக்கு இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் 1000௦௦௦ ஆவது ஆண்டு நிறைவை தஞ்சை பெரிய கோவில் கொண்டாடியது நாம் அறிவோம்.

மஞ்சுவின் பதக்கம் பறிமுதல்


குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சின் தங்கப் பதக்கம் இலங்கை விளையாட்டு துறை தலைவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே வேளை அவர் விளக்கம் அளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இரண்டு வார காலத்தி பின் பதக்கத்தை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அதுவரை பதக்கம் எமது பாதுகாப்பில் இருக்கும் என ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான இலங்கையின் செயற்குழு தெரிவித்துள்ளது.

தாலாட்டி பாராட்டி சீராட்டி - பிள்ளை வளர்ப்பு

.

பிள்ளை வளர்ப்பிற்கு தற்போது நிறைய புத்தகங்கள், அகராதிகள், அட்டவணைகள். தியரிக்கு சரி ப்ராக்டிகல் நாமதானே செய்யணும். கையில் கைக்குழந்தையுடன் குனிந்து நிமிர்ந்து மணிக்கணக்காக சிரமப்பட்டு அலசி ஆராய்ந்து புக் தேடும் நவீன அம்மாக்கள் பலரை பார்த்திருக்கிறேன். தோளில் ஒரு தூளி கட்டி மாட்டிவிட்டு அமர்க்கள சென்ட் வாசனையுடன் ஒவ்வொரு புத்தகங்களாக பார்த்துக் கொண்டே வந்தது அந்த புதிய அம்மா. பிள்ளைக்கு நல்ல மார்க்கட்டு சளி. "கர்.கர்.." என்று மூக்கால் உருமிக்கொண்டிருந்தது. இது பிள்ளை வளர்ப்பு புத்தகங்களாக பிரித்து பிரித்து பார்த்தவண்ணம் இருந்தது. அங்கேயே படித்துவிட்டு போகலாம் என்ற என்னமா என்று தெரியவில்லை. ஒரு முறையாவது அந்தப் பிள்ளைக்கு மூக்கு துடைத்து விட்டிருக்கலாம். ரொம்ப எழுதினால் "நீ லான்ட்மார்க்குக்கு புக் வாங்க போனாயா அல்லது புக் வாங்க வரும் அம்மாக்களை பார்க்க போனாயா. இது தான் நீ புக் வாங்கும் லட்சணமா" என்று சகட்டு மேனிக்கு என் நண்பர் வட்டாரம் கமென்ட் "அடித்து" என்னை கண்டதுண்டமாக்கி கசாப்பு கடைக்கு வீசுவார்கள் என்று பயந்து, தொடங்கிய மேட்டருக்கு வருவோம். கொஞ்ச நாள் முன்பு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வடநாட்டில் பல வல்லிய வைத்தியர்களை பேட்டி கண்டு பிள்ளை வளர்ப்பது எப்படி என்று ஒரு கட்டுரை போட்டிருந்தார்கள். மைய சரக்கு அவர்களது அதிகப்படி சரக்கு என்னுது. பாரா பாராவா பார்ப்போம்.