நிலவின்பாடம் நிற்கட்டும் மனமெலாம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா


image1.jpeg              வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே - உன்
              வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே 
              நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே  - இங்கு 
              பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !
             உண்ணமறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக்காட்டியே - இங்கு
             உணவையூட்டி உளம்மகிழ்வார் உலகில்பலருமே 
             விண்ணில்நீயும் ஓடியோடி விந்தை காட்டுவாய் - அதை
             வியந்துவியந்து பிள்ளைபார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !
             பூரணையாய் வந்துநீயும் பொலிந்து விளங்குவாய் - அதை
             பூரிப்போடு பலரும்பார்த்து உளம் மகிழுவார் 
             காதலர்க்கு களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் - அதை
             கவிதையிலே பலகவிஞர் கண்டு வாழ்த்துவார் !
             உன்வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் - இங்கு
             உன்வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
             மின்மினிகள் வானில்சூழ விரைந்து ஓடுவாய் - நாளும்
             உன்னொளியால் உலகைநாளும் உவகை யூட்டுவாய் !
             இறைவனது தலையின் மீது இருக்கிறாயென - இங்கு
             இந்துமதம் சொல்லியுன்னை உயர்த்தி நிற்குது 
             குறையுடைய நிலவேயுன்னை நிறைவு படுத்தவே - நாளும்
             இறைவன் உனனை தன்னிடத்து ஏற்றுக்கொண்டனன் !

அமரர் எஸ்.பொ. - அங்கம் - 02 சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆக்க இலக்கியத்தில் பரீட்சார்த்தமான முயற்சிகளின் மூலவர்


பொன்னுத்துரை  இலங்கையிலிருந்து   நைஜீரியாவுக்கு  தொழில் வாய்ப்பு  பெற்றுச் சென்ற  காலகட்டத்தில்   அங்கு  ஆபிரிக்க இலக்கியங்களை   ஆழ்ந்து   கற்றார்பின்னாளில்  பல  ஆபிரிக்க இலக்கியங்களையும்  அதேசமயம்  அரபு  இலக்கியங்களையும் மொழிபெயர்த்து  நூலுருவாக்கினார்.
ஆபிரிக்காவில்  ஒரு  தவம்  என்ற   விரிவான  கட்டுரையின்  முதல் அத்தியாயத்தை  வீரகேசரி  வாரவெளியீட்டுக்கு  அனுப்பினார்.  இதர அத்தியாயங்களும்   அவரிடமிருந்து  கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு   வீரகேசரி  வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர்  பொன். ராஜகோபால்  தீர்மானித்திருந்தார்.
எனினும்   பொன்னுத்துரை   அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால்  அந்தத் தொடர்  வெளியாவது சாத்தியப்படவில்லை.   முதலாவது  அத்தியாயத்தின்  மூலப்பிரதி  பொன்னுத்துரையிடமும்   இருக்கவில்லை.    வீரகேசரிக்கு   அனுப்பிய பிரதியும்   காணாமல்போனது.   காலம்  கடந்து  பின்னாளில்  பல ஆபிரிக்க   இலக்கியங்களையும்   அதேசமயம்  அரபு இலக்கியங்களையும்  மொழிபெயர்த்து   நூலுருவாக்கினார். இவற்றுக்காக   அவர்   செலவிட்ட   நேரம்   மிகப்பெறுமதியானது.
மேலைத்தேய   மதங்கள்   பற்றியும்   கிழைத்தேய    மதங்கள்  குறித்தும்  அவரிடம்  ஆழமான  பார்வை  இருந்தமையினால் கிறிஸ்தவ - இஸ்லாமிய - இந்து - பௌத்த - சமண இலக்கியங்களையும்   ஆழ்ந்து   கற்றார்.    அதனால்தான்  அவரால் கீதையின்   நிழலில் (கல்கியில் தொடராக வந்தது)  மகாவம்ச -   மாயினி -  இஸ்லாமும்   தமிழும் -   பெருங்காப்பியப்பத்து-  காந்தி தரிசனம்   முதலான   நூல்களையும்   எழுத  முடிந்திருக்கிறது.
கவிதையில்   ஆரம்பித்து ,  சிறுகதை,   நாவல்  எழுதிய  பொன்னுத்துரை நூற்றுக்கணக்கான    விமர்சனங்களும்  நூல்  மதிப்புரைகளும் எழுதியிருப்பவர்.   பொதுவாக  எவரும்  தமது  நூலுக்கு  முன்னுரை எழுதிக்கொண்டிருந்தபொழுது   இவர்  அதற்கு  முன்னீடு எனப்பெயரிட்டுத்தான்  எழுதியவர்.   எதிலும்  மாற்றம்  புதுமை நிகழவேண்டும்  என்ற  அவா   அவரைப்பற்றியிருந்தது.
தமது   விமர்சன  முறைமையை   -  " My literary criticism is more in defence of established  creative writing institution "   என்றே குறிப்பிட்டு  வந்திருக்கிறார்.
ஆக்க   இலக்கியத்தில்  எப்பொழுதும்  பரீட்சார்த்தமான  முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்,  தமது  படைப்புகளின்  தலைப்புகளையும்  ஒரு எழுத்தில்   அல்லது  மிகவும்  குறைந்த  எழுத்துக்களில்தான்   தெரிவு செய்வார்.

தென்னைமரங்கள் - ருத்ரா


கஜாப்புயல் கொன்று குவித்த
சடலங்கள் லட்சக்கணக்கில்
நீட்டிக்கிடந்தன.

விவசாயிகள் அழுதார்கள்.
எங்களுக்கு
சோறு தண்ணீர் எல்லாம் வேண்டாம்.
இவைகளுக்கு கொஞ்சமாவது
உயிர் இருக்காதா?
108க்கு சொல்லி
எடுத்துக்கொண்டு போங்கள்.
காணச்சகிக்கவில்லை.

"தென்னையைப்பெத்தா  இளநீரு
பிள்ளையப்பெத்தா கண்ணீரு "
மவராசன் நல்லாப்பாடினாரு.

புயலின்
இந்த குருட்சேத்திரத்திலே
தர்மம் அதர்மம்
லேபிள்கள் ஒட்டுவதெல்லாம்
ஏமாத்து வேலை.

புள்ளினங்காள் ஓ...... புள்ளினங்காள் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்


கடந்த வருடம் புது வீட்டுக்கு மாறியதில் இருந்து தான் அவதானித்தேன் எங்கள் வீட்டு உறுப்பினர்களை விடப் புதிதாகவும் சிலர் சேர்ந்திருப்பதை. ஆம் அவர்கள் யாருமல்ல இந்தியன் மைனா அல்லது common myna என்று சொல்லக் கூடிய நம்மூர் மைனாக்கள் தான். ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 23 வருட அவுஸ்திரேலிய வாசத்தில் மைனாவின் வாசனையே இல்லாதிருந்த எமக்கு ஏதோ நம்மூர்க்காரரைக் கண்ட மகிழ்ச்சி.

என்னுடைய இசைக்கூடத்தின் மேற் சாளரத்தின் கண்ணாடிகளின் மறு அந்தத்தின் ஓர இருக்கையில் இரண்டு மைனாக்கள் தவறாது வந்து குந்தியிருக்கும். அவற்றைப் படம் பிடிக்கக் கமராவைத் தூக்கினால் ஊர்மிளா தடுத்து விடுவார், நம் சலனம் கேட்டு அவை ஓடி விடுமென்று. முன் விறாந்தையில் கடித்துத் துப்பிய ஊதா நிறப் பழங்களும் அவற்றின் சாயமும் படர்ந்திருக்கும். புது வீட்டின் முகப்பில் இப்படிச் செய்யலாமா என்ற கரிசனை இந்தப் பறவைகளுக்கு இருக்குமா என்ன என்று ஊர்மிளாவிடம் விசனித்தால் “பரவாயில்லை விடுங்கோ அதுகள் ஆசையில் வந்து ஒதுங்கிப் போற இடம்” என்று சமாதானப்படுத்துவார்.

பின் வளவிலும் இதே கதை தான். கடித்துத் துப்பிய பழங்கள் ஆங்காங்கே சிதறியிருக்கும். அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் நிறை மாதக் கர்ப்பிணி போலத் தம் உடம்பை ஆட்டி ஆட்டி அந்தப் புல்லுப் பாதைகளில் மைனாக் கூட்டம் நடை போட்டுக் கொண்டிருப்பினம். அட வீட்டுக்காரன் வாறான் என்ற பயபக்தி இருக்குதா இவற்றுக்கு என்று ஈகோ என்ற வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும்.
இருந்தாலும் நெருக்கமான உறவுகள் இல்லாத இந்த அந்நிய தேசத்தில் வாய் பேசாது வலிய இந்தப் பறவைகள் மேல் பச்சாதாபம் பிறக்கும். கலைத்து விடாமல் தன் பாட்டில் நிற்கட்டும் என்று சந்தடி காட்டாது ஒதுங்கிப் போய் விடுவேன்.
ஆனால் என் ஆசையில் மண் அள்ளிப் போட்டார் பிராண்டன் என்ற வெள்ளைக்காரர், நம் பூந்தோட்டத்தை விரிவு படுத்த வந்தவர் இந்த மைனாக் கூட்டத்தைக் கண்டு இரத்த அழுத்தம் ஏறிய தமிழ்ப் பட வில்லன் போல எகிறினார்.

“பிரபா! உங்களுக்குத் தெரியுமா
இந்த மைனாக்கள் ஆபத்தானவை ஆஸி நாட்டின் மரபு சார் பறவைகளுக்கு இவைகள் எதிரிகள். உணவுச் சுழற்சி முறையில் தம் உணவைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் இல்லாத இந்த இந்தியன் மைனாக்கள் இந்த நாட்டுக்குக் கேடு. இவற்றை ஒழித்துக் கட்ட அரசாங்கம் முயற்சி எடுக்கிறது” என்று பெரிய விரிவுரையை அடித்து முடித்தார் பிராண்டன். எனக்கோ பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஊர்மிளாவுக்கோ அந்தக் கருத்து அதிர்ச்சியாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் கதையை ஓரம் கட்டினோம்.
இந்த இந்திய மைனாக்கள் குறித்த எச்சரிக்கையை ஆஸி நாட்டின் விலங்கு, பறவைகள் நல அமைப்பும் இங்கே பகிர்ந்திருக்கிறது.


மெல்பனில் நடந்த "நிழல்வெளி" நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும் - தெய்வீகன்


இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி  நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும்  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளியும் அரங்கச்செயற்பாட்டாளருமான தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது குடும்ப சமேதராக கலந்துகொண்டார்.

மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  உலகெங்கும் நிகழ்ந்த போர் அநர்த்தங்களினாலும் இயற்கை பேரிடர்களினாலும் இன்னுயிர்களை இழந்த மக்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 சங்கத்தின் துணைத்தலைவர் மருத்துவர் திருமதி வஜ்னா ரஃபீக்,  தமிழச்சி சுமதி தங்கபாண்டியனை  மலர்க்கொத்து வழங்கி வரவேற்று உரையாற்றினார். மெல்பனில் வதியும் கலை இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்துகொண்ட  இந்நிகழ்வில் தொடக்கவுரை நிகழ்த்திய சங்கத்தலைவர், தொடர்ச்சியாக சங்கம் அவுஸ்திரேலியாவில் மேற்கொண்டுவரும் கலை, இலக்கியப்பணிகளையும் விக்ரோரியா உட்பட ஏனைய மாநிலங்களில் நடத்திய தமிழ் எழுத்தாளர் விழாக்கள் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.

நிழல்வெளி

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களின் வரலாற்றுப்பின்னணியில் அவர்களது சமூக - அரசியல் - வர்க்க வேறுபாடுகளையும் புலம்பெயர்தலில் அவர்கள் எதிர்கொண்டிருந்த சவால்களையும் பல்வேறு பரிணாமங்களின் வாயிலாக ஆய்வு செய்து எழுதிய நூல் நிழல் வெளி. 
இந்த நூல் , தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்  தனது முனைவர் பட்டத்துக்காக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து பத்து வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வுப்பிரதியின் தமிழ் வடிவமாகும். இந்த ஆய்வு நூலை அவர் "புவிக்கோளத்தின் மூலை முடுக்கெல்லாம் புலம்பெயர்ந்திருக்கின்ற ஈழத்தமிழர்களுக்கும் 2009 முள்ளிவாய்க்கால் நினைவுக்கும்" சமர்ப்பித்திருக்கிறார்.

ஆறுமுகநாவலர்


போற்றுதலுக்கு உரிய ஆறுமுகநாவலர்ரை இன்று சைவசமயிகள் போற்றுவது அரிதாகிவிட்டது. - போற்றகூடாத போலிகளை போற்றுவது எளிதாகியது இக்காலத்தில் !. இது வேதனைக்கு உரிய விடயமாம் இது சைவ உலகுக்கு கேடு அல்ல சைவசமயிகளுக்கே கேடு.

இன்று சைவசமயிகள்அனைவரும் போற்றி வணங்கவேண்டிய

ஓர் மகத்தான சைவசமய ஆச்சாரியாரின் குருபூஜை தினமாகும்
அவரே ஸ்ரீலஸ்ரீ நல்லை ஆறுமுக நாவலர்.

இலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்


கடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் அரசியல் நிலவரம் மீண்டும் ஒரு பேசுபொருளாகிவிட்டது. இதன் அர்த்தம் இலங்கை ஏதோ அமைதியான சுபீட்சம் நிறைந்த நாடாக இருந்தது. ஆனால் சடுதியாக நிகழ்ந்த அரசியல் சூறாவளியால் எல்லாம் தலைகீழாகி விட்டது என்றாகிவிடாது. இலங்கையைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற சூழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றன என்பதையே இன்றைய நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

ஏறத்தாள 30 ஆண்டுகாலம் உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்த காலத்தில் இலங்கையின்பால் இருந்த கவனம், 2009 ஆம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியிருந்தது என்றே பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் உண்மை அப்படியானதல்ல. ஏனெனில் இலங்கையில் பயங்கரவாதத்தை விதைத்தவர்கள்பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஓய்ந்திருக்கமாட்டார்கள் என்பதையே இலங்கையில் தொடர்ச்சியாக நடந்தேறும் நிகழ்வுகள் காட்டி வந்துள்ளனகாட்டி வருகின்றன.

மழைநேரத்து நன்றி (ஒரு பக்க கட்டுரை) வித்யாசாகர், குவைத்!



கண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் தமிழர்கள்) 


கூடுகளைத் தேடாமல் சிறகுகளுக்குள் அடங்கிக்கொண்டவர்கள் நாங்கள். கதகதப்பிற்கு மாறாக நெருக்கத்தின் வெப்பத்தால் தகித்தாலும் ஒற்றுமையெனும் வலிமைக்காய் கைகால் முடங்கிக்கொண்டு லட்சிய முழக்கத்தை நிறுத்திக்கொள்ளாத நெறியுள்ள வானம்பாடிகள் நாங்கள். எங்களுக்கு கனவு பறப்பதாக இல்லை வாழ்வதாக இருக்கிறது, ஆம் அது எல்லோருக்குமான வாழ்வு. 



சிக்கி தவித்து துடித்து பசியில் வாடி, ஏழ்மையில் நலிந்து, எதற்கும் விலைபோனவர்களாய் வாழும் இலவச விரும்பிகளான எம் சமுதாயத்திற்கு ஓர் விடிவு வேண்டும். நாங்கள் சிறகடித்து பறக்கும் வானத்தைப் பற்றி பேசுவதேயில்லை, பசியை எல்லோருக்கும் போக்கிடாத கனவுதனை தீதென்று எண்ணி அஞ்சுகிறோம். 



ஆதி மனிதர்களான நம்மிடம் எல்லையற்ற பலமும் அறிவும் இருக்கிறது, மரபூரிய மாண்பும் மறமும் விஞ்சியிருக்கிறது, ஆயினும் ஏன் எங்குக் காணினும் இரண்டாம் பட்சமாய் எட்டித் தள்ளப்படுகிறோம்? எட்டித் தள்ளியப்பின்னும் எதற்கு அஞ்சி நிற்கிறோம்? யார் எம் சிறகுகளை உடைப்பவர்? கனவுக்கு துயிலும் தூக்கத்தை எம் விடுதலையோடுச் சேர்த்து, கொண்டுபோனவர் எவர்? எமக்குத் தெரியும்’ யாருமில. 


நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம் - சாரு நிவேதிதா


Image result for saru nivetha

.

மறைக்க முடியாத உண்மை. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பதை மாற்றி மதமும் திரைப்படமும் கண்ணெனத்தகும் என்றாலும் ஆச்சரியப் படவேண்டியதில்லை. அடிப்படை வசதிகூட இல்லாது திண்டாடும் நாட்டில் ஒருபக்கம் கோடியில் சம்பளம் மற்றொரு பக்கம் கோடியில் வைரக்கிரீடம். அங்கும் பாலை ஊற்றுகிறார்கள் இங்கும் பாலை ஊற்றுகிறார்கள். இரண்டு பக்கமும் தூக்கிச் சுமக்கிறார்கள். ஒருபக்கம் இறைவா இறைவா என்ற பஜனை என்றால் மறுபக்கம் தலைவா தலைவா என்ற கூச்சல். புரையோடிவிட்ட சமூகத்தை புரட்சி ஒன்றே மாற்றும். அதற்கு இருபக்கமும் விடுவார்களா? காலம்தான் பதில்சொல்லும்.

நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்:
அன்புத் தம்பி சூர்யாவுக்கு…
சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலையத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார். உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம். இது பற்றி உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் இல்லை. தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய். ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? வெறும் 6000 ரூ. அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?