ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி சீதாபதி ஐயர் அவர்கள் கடந்த
10 7 14 வியாழக்கிழமை அன்று இரவு 10.45 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த
அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவர் காலம் சென்ற சீதாபதி ஐயர் அவர்களின் அன்பு
மனைவியும், காலம் சென்ற நவிண்டிலைச் சேர்ந்த சதாசிவ சர்மா- ராஜம்மாள் அவர்களின் அன்பு
புதல்வியும் காலம் சென்ற மானிப்பாய் மருதடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர இரத்தினசாமி குருக்கள்-சீதாலக்ஷ்மி
அவர்களின் அன்பு மருமகளும், வெங்கடேசன் (அனுஷன்), சீதாலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி ஆகியோரின்
அன்புத் தாயாரும், சசிகேரன், கிருஷ்ணமூர்த்தி, மீனாக்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதிக்ஷ்ணன், தீக்ஷிதா, ஷோபனா, சுரேஷ், விஷ்ணு, நிகேதனா, ஜனார்த்தனன், ஸ்ரீநிவாசன்
ஆகியோரின் அன்புப் பாட்டியாரும், ஓவியாவின் அன்பு பூட்டியாரும், காலம் சென்றவர்களான
சுப்ரமணியம், மோகனாம்பாள், ஜெயராமன், தெண்டு, கௌரி, அஞ்சுமணி, உஷா, மற்றும் வெங்கிட்டு,
காஞ்சனா, குணன், ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.