அன்பாலயத்தின் இளம் தென்றல் நிகள்வு எனது பார்வையில். - மதுரா மஹாதேவ்


சனிக்கிழமை 09/07/2022 இரண்டு நேர நிகழ்ச்சியாக  மதியம் 2 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் நிகழ்ச்சி Bankstown Bryan Brown அரங்கில்   நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி வழமைபோல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக  மதியம் இரண்டு மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் ஆரம்பமானது இங்கு குறிப்பிடத்தக்கது.

 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், எமது சிம்மக்குரலோன் திரு


மகேஸ்வரன் பிரபாகரன். இந்த நிகழ்ச்சியினால் திரட்டப்படும் அனைத்து நிதியும் இலங்கையில் பல வழிகளில் அல்லல் உறும் எமது சமூகத்தினருக்கு சென்றடைகின்றதென்பதினால், அங்கு தமது உயிரினை நீத்த அனைவரையும் நினைவு கூர்ந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தி இகழ்ச்சியை துடக்கி வைத்தார் பிரபா.

 அதனைத்தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்துப் பாடலையும் ஆஸ்திரேலியன் நேஷனல் அந்தத்தையும் ஈஸ்ட்வுட் தமிழ் கல்வி மாணவ மாணவிகள் மிகவும் இனிமையாக பாடினார்கள்.

சக்தி  இசை குழுவின் நிகழ்ச்சி ஆரம்பமானது. திரு செல்வன் டேவிட்டின் நெறியாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அன்பாலயம் ஆரம்பமான காலத்தில் அதாவது 15 வருடங்களுக்கு முன் ரஞ்சன் (ஸ்ரீ தக்ஷணா உரிமையாளர்) அவர்களின் ஆதரவுடன் கறியோக்கி இசையில் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்து, பின் ஒருசில இசை கருவிகளுடன் ரஞ்சன் அடுத்த கட்டத்துக்கு நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தினார். அப்போது சிறுமிகளாக பாடல்களை பாடிய கேஷிகா அமீர் மற்றும் அபிசாயினி பத்மசிறி அவர்கள் இப்போதும் அன்பாலயம் இசை நிகழ்வில் மிகவும் தலை சிறந்த பாடகிகளாக பாடிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து தனி இசைநிகழ்ச்சியாக இல்லாமல் ஆஸ்திரேலியா Got Talent என்னும் பாணியை பின் பற்றி எமது சமூகத்தில் பலதரப்பட்ட திறமை உடையவர்களை அவர்களது வயதின் அடிப்படையில் வெளிக் கொண்டுவர Talent Show என்னும் ஒரு போட்டி பகுதியை அறிமுகம் செய்தது அன்பாலயம். 2013 இல் இந்த இசை நிகழ்ச்சியை மேலும் ஒரு படி மேல் கொண்டு செல்ல இளைய தலைமுறையின் இசைக்கலைஞர்களை ஒன்று சேர்த்து ரவியின் நெறியாழ்க்கையில் திறம்பட நல்ல ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கியவர் ஸ்ரீராம் ஜெயராமன்.

குடமுழுக்குக் காணும் ஈழத்துத் திருகேதீச்சரம்

 


கானா பிரபா


வடக்கே யாழ்ப்பாணத்தின் கீரிமலையில் நகுலேஸ்வரம், வட மேற்கே மன்னாரில் திருக்கேதீச்சரம், கிழக்கில் திருகோணமலையில் திருக்கோணேச்சரம், மேற்கே சிலாபத்தில் முன்னேஸ்வரம், தெற்கே காலியில் தொண்டீச்சரம் என்று 

ஈழத்தின் ஐந்து முனையங்களிலும சிவாலயங்கள் தொன்ம காலத்தில் நிறுவப்பட்டு விளங்கி வருகின்றன. இவற்றில் திருக்கோணேச்சரமும், திருக்கேதீச்சரமும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு மிகுந்தவை.

மன்னாரில் மாதோட்டத்தில் விளங்கும் திருக்கேதீச்சரம் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

ஆலயத்தின் மீது பாடப்பட்ட திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தைக் கேட்க

https://www.youtube.com/watch?v=_rYeie9DvzI

ஆலயத்தின் மீது பாடப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பதிகத்தைக் கேட்க

https://www.youtube.com/watch?v=dzq75sQcMME

தங்கம்மா எங்களம்மா சமயவழி நின்ற அம்மா !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... அவுஸ்திரேலியா 




தங்கம்மா எங்களம்மா சமயவழி நின்றவம்மா
பொங்கிவரும் ஆசைகளை பொசுக்கிட்டார் எங்களம்மா

திங்களணி எம்பிரானைத் தினமெண்னும் தங்கம்மா
மங்கலமாம் சுடராக வலம்வந்தார் மாநிலத்தில் 

இல்லறத்தில் இணையாமல் நல்லறத்தில் இணைந்தாரே
உள்ளமதில் உறுபொருளை ஊன்றியே விதைத்தாரே
ஊர்சிறக்க வாழ்நாளை உவந்தளித்தார் அம்மாவும்
பார்முழுக்க அவர்நாமம் பரவியே நிற்கிறதே 

ஆசானாய் கால்பதித்து ஆன்மீகம் தேர்ந்தெடுத்தார் 
ஆசையுடன் அரனடியை அவரகமும் பற்றியதே
மாசுமறு வணுகாமல் வழிகண்டார் அம்மாவும் 
காசினியில் யாவருமே கைகூப்ப வாழ்ந்தாரே 

சைவத்தைத் தத்துவுத்தை தான்சொத்தாய் ஆக்கினரே 

மெய்யான பரம்பொருளை விலகிவிடா திருந்தனரே 
அரனடியார் பாதையிலே அவர்செல்ல விரும்பினரே
அதனாலே அவர்பாதை அனைவரகம் அமர்ந்ததுவே

நாயன்மார் சிந்தனையில் நல்லதமிழ் தேர்ந்தெடுத்து
சங்கத் தமிழோடு சந்தத் தமிழுரைத்தார் 
பக்தியொடு பக்குவத்தைப் பாங்காக எடுத்துரைக்க
எங்களம்மா தங்கம்மா ஏகிநின்றார் பலவிடங்கள் 

நல்லைநகர் நாவலரை நாம்மறக்க மாட்டோமே
அவ்வழியில் செல்லவல்லார் யார்வருவார் எனநினைத்தோம்
எங்களம்மா தங்கம்மா வந்தமைந்தார் அந்நிலையில்
அந்தத் திருமகளை அகமிருத்திப் போற்றுவமே 

சைவத்தைத் தமிழைக் காக்கவந்த காவலனாய் 
நல்லைநகர் பெருமானும் நம்நாட்டில் பிறந்தனரே 
அவர்பிறந்து பலகாலம் ஆனததன் பின்னாலே
அவர்பணியைத் தொடர்வதற்கு பிறந்திட்டார் அம்மாவும் 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 21 எஸ்.பொ. எனக்கு எழுதிய முதல் கடிதம் ! எழுத்தாளர் பார்வையில் எத்தனை கோணங்கள் !! முருகபூபதி


எதற்கும் பெயர் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆதிகால மனிதர்களும் ஒருவரை ஒருவர் ஏதேனும் பெயர் சொல்லித்தான் அழைத்திருக்கவேண்டும்.

எனது பெற்றோர் எனக்கு வைத்த பெயரில் அழைப்பவர்களும், பூபதி என்று சுருக்கமாக அழைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எனது வாழ்நாளில் என்னை  “ முருகு “  என்று அழைத்தவர் ஒரே ஒருவர்தான்.

அவ்வாறு அதற்கு முன்பும், பின்பும் அந்த ஒருவரைத் தவிர வேறு எவரும் அழைக்கவில்லை.  அப்படி அன்பொழுக அழைத்தவர், தனது அந்திம காலத்தில் ஏன் எனக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டு, அவதூறும் பரப்பினார் என்பதற்கான விளக்கமும் என்னிடம் இருந்தது. இந்தத் தொடரில்,  நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிய பகுதிகள் வரும்போது தெரிவிப்பேன்.

பொறுக்க முடியாத கட்டத்தில் நானும் அவருடன் மோதநேர்ந்தது. 


அந்த மோதல்கள் யாவும் எழுத்துவடிவில் வந்தன. இன்றும் இணையத்தில் அவை பரவிக்கிடக்கின்றன.

எனினும் அவரது மேதா விலாசத்தை என்றைக்கும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.

1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி எனது Brunswick குடியிருப்புக்கு ஒரு கடிதம் வந்தது. அது அண்டை மாநிலமான நியுசவுத்வேல்ஸிலிருந்து வந்திருந்தது. எழுதியவர் ஈழத்து மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை.

எஸ்.பொ. என எமது  இலக்கிய உலகத்தினரால் அழைக்கப்பட்ட அவரிடமிருந்து வந்திருந்த அக்கடிதம் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

யாரோ சிட்னிக்கு வந்தவர்களிடம் அவர் கொழும்பிலிருந்து கொடுத்தனுப்பிய கடிதமாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டு திறந்து பார்த்தேன்.

8/43, Russell Street, N.S.W. 2135 என்ற முகவரியிலிருந்து எஸ்.பொ. எழுதியிருந்த அக்கடிதம் அன்புள்ள முருகுவுக்கு எனத் தொடங்கியிருந்தது.

இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட அக்கடிதம் இன்றளவும் என்னிடம் பொக்கிஷமாக பேணப்படுகிறது.

அதனால் எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் தேவை கருதி,  வாசகர்களுடன் அக்கடிதத்தை பகிர்ந்துகொள்கின்றேன்.  பின்னாளில் வெளிவந்த பனியும் பனையும் ( புகலிட எழுத்தாளர்களின் கதைக்கோவை ) நூலின் ரிஷிமூலத்திற்கு அவர் அன்று எழுதிய அக்கடிதமும் காரணமாக அமையலாம்.

படித்தோம் சொல்கின்றோம் சர்வதேசப் பார்வையுடன் தேவகி கருணாகரனின் கதைகள் அவள் ஒரு பூங்கொத்து கதைத் தொகுதி கூறும் செய்திகள் முருகபூபதி


புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளாகி மூன்று தசாப்த காலமாகிவிட்டது. இக்காலப்பகுதியில், கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த படைப்பிலக்கியவாதிகளின்  ஆக்க இலக்கியப் படைப்புகள் சிறுகதைகளாக, நாவலாக, கவிதையாக ஏராளமான பிரதிகள் வெளிவந்துவிட்டன.

தொடக்கத்தில், தங்கள் தாயக நினைவுகளை சித்திரித்து  எழுதிவந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், படிப்படியாக தாம் வாழும் புகலிட தேசத்தின் வாழ்வுக் கோலங்களையும் தமது படைப்புகளில் பதிவேற்றத் தொடங்கினர்.

தனது பதின்மவயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்


 தமிழ்ச் சேவையில் இசையும் கதையும் எழுதிக்கொண்டிருந்த தேவகி கருணாகரன், பின்னாளில் தனது கணவருடன், அவரது  தொழில் நிமித்தம் ஆபிரிக்க நாட்டுக்கு புலம்பெயர்கிறார்.

அதன்பிறகு அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார். இவர் தனது பதின்மவயதில் விட்டுவிட்ட எழுத்துப்பணியை மீண்டும் 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தவர்.

முன்னர், வானொலிக்காக இசையும் கதையும் எழுதிக்கொண்டிருந்தவர், திருமணமாகி, பிள்ளைகளுக்கும் தாயாகி, அதன்பின்னர் அவர்களின் பிள்ளைகளை அரவணைத்து கொஞ்சி மகிழும் காலகட்டத்தில், ஊடகங்களில் சிறுகதைகள் எழுதத் தொடங்குகிறார்.

தேவகி கருணாகரனின் முதல் கதைத் தொகுதி அன்பின் ஆழம், சென்னையில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களின் ஏற்பாட்டில் அவரது மித்ர பதிப்பகத்தினால் வெளியாகின்றது.

தேவகி கருணாகரன், அத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்தும் எழுதுகிறார். இவரது பெரும்பாலான இலக்கியப் பிரதிகள் சிறுகதைகளாகவே அமைந்துவிடுகின்றன.

இலக்கிய இதழ்கள் நடத்தும் சிறுகதைப் போட்டிகளுக்கும் எழுதி பரிசுகள் பெறுகிறார்.

அவ்வாறு தொடர்ந்து எழுதிய பதினைந்து  சிறுகதைகளைத் தொகுத்து தற்போது அவள் ஒரு பூங்கொத்து என்ற பெயரில் வரவாக்கியிருக்கிறார்.

இந்நூலை தமிழ் நாடு சித்தன் புக்ஸ் பதிப்பித்திருக்கிறது.

இலங்கையில் வீரகேசரி, தினக்குரல் வார இதழ்களிலும் ஞானம், ஜீவநதி முதலான மாத இதழ்களிலும் தமிழ்நாட்டில் கல்கி, கணையாழி, கலைமகள், குமுதம் முதலான இதழ்களிலும் தேவகி கருணாகரன் எழுதிய கதைகளே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

தேவகியின் வாழ்க்கை, அவரது தாயகமான இலங்கையிலும் அதன்பின்னர் ஆபிரிக்க நாடான நைஜீரியா என்ற இருண்ட தேசத்திலும், அதன்பிறகு உலகில் முதலில் விழிக்கும் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியா கண்டத்திலும் படர்ந்திருக்கிறது.

எல்லோருக்கும் வாழ்க்கையானது தரிசனங்களை தந்துகொண்டேயிருக்கும். ஆனால்,  இலக்கியப் படைப்பாளிகள் மாத்திரம்தான் தமது வாழ்வின் தரிசனங்களை உண்மையையும் கற்பனையையும் கலந்து இலக்கியப்பிரதிகளாக படைக்கின்றார்கள்.

தவப்புதல்வன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 ஆரம்பத்தில் ஜெமினி,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் போன்ற


நடிகர்களை வைத்து படம் எடுத்து வந்த முக்தா பிலிம்ஸார் சிவாஜியின் நட்பினைத் தொடர்ந்து அவர் நடிப்பில் தொடர்ந்து படம் எடுக்க ஆரம்பித்தனர்.அந்த வகையில் முதலில் நிறை குடம்,தொடர்ந்து அருணோதயம், ஆகிய படங்களை தயாரித்தவர்கள் மூன்றாவதாக தவப்புதல்வன் படத்தை 1972ல் தயாரித்தார்கள்.தேவர் பிலிம்ஸைப் போலவே அண்ணன் ராமசாமி தயாரிக்க தம்பி சீனிவாசன் படத்தை டைரக்ட் செய்தார்.


முக்தா பிலிம்ஸ் படங்களின் கதாநாயகன் பொதுவாக

பவீனமானவனாகவும்,பிறருக்கு உதவப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்பவனாகவும் சித்திரிக்கப்படுவான்.இந்தப் படத்திலும் அது தொடர்ந்தது.பணக்கார பிள்ளையான நிர்மல் ஓர் இசைக் கலைஞன்.கிளப் ஒன்றின் மானேஜராக இருக்கும் தன் நண்பன் ஜேம்ஸின் வற்புறுத்தலுக்கு இணங்கி அவனுக்கு உதவி செய்வதாக கிளப்பில் இடம் பெறும் நடன நிகழ்ச்சியில் வாத்தியம் இசைக்க உடன்படுகிறான்.நடனமாடும் பெண்ணான விமலா,நிர்மல் பணக்காரன் என்பதை அறிந்து அவன் சொத்துக்களை அபகரிக்க அவனை திருமணம் செய்ய தன் அண்ணன் ஜம்புவுடன் சேர்ந்து திட்டம் இடுகிறாள்.இவர்களின் சதியால் நிர்மலுக்கும் அவன் காதலி வசந்திக்கு நடக்கவிருக்கும் திருமணமும் நின்று விடுகிறது. இப்படி அமைந்த படத்தின் கதையின் கதாநாயகனிடம் காணப்படும் ஒரு குறையே விமலாவின் கை ஓங்க காரணமாகிறது.

எந்த பாத்திரத்தைக் கொடுத்தாலும் தயங்காமல் நடிக்கக் கூடிய சிவாஜி இதில் மாலைக் கண் நோய்க்கு உள்ளானவராக நடித்திருந்தார்.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது உணர்ச்சி மிக்க நடிப்பின் மூலம் அந்த நோயின் தாக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் .குறிப்பாக தாயிடமும்,காதலி இடமும் தன் நோயை மறைத்து அதனால் வீண் பழிக்கு ஆளாகும் போது பரிதாபம் ஏற்படுகிறது.அவருக்கு இணையாக கே ஆர் விஜயாவும் தன் திறமையை காட்டியிருந்தார்.அதே போல் பல காட்சிகளில் அவருடைய உருவமே பாதி திரையை ஆக்கிரமித்தது.மகனை நினைத்து துடி துடிக்கும் தாயாக பண்டரிபாய்.குறை இன்றி அந்த பாத்திரத்தை நிறைவேற்றி இருந்தார்.

பாதுகாப்பு - காவல் துறை மக்களின் நண்பரா….? எதிரியா….? அவதானி


எரிபொருள், எரியும் பிரச்சினையாக மாறினால் அதன் விளைவு எவ்வாறிருக்கும் என்பதை இலங்கையின் சமகால நிகழ்வுகள் துல்லியமாக காண்பிக்கின்றன.

ஒரு நாட்டில் பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படைகள் பதவிக்கு வரும் அரசுகளை பாதுகாப்பதற்கு மாத்திரம் அல்ல.

நெருக்கடி நிலைமை உருவாகும்போது முப்படையினரும்


பொலிஸும் களத்தில் இறக்கப்படுவார்கள்.  குறிப்பாக இயற்கை அநர்த்தம் வரும் பட்சத்தில் மக்களின் நலன் – தேவைகள் கருதியும் இவர்கள் உஷார் நிலையில் நிறுத்தப்படுவர். இவர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்படும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி இயற்கையினால் நேர்ந்தது அல்ல. கோத்தபாய சகோதரர்களின் முறைகேடான அரசினால் உருவானதே இந்த சிக்கல்.  அதனால்தான்  பாதிக்கப்பட்ட மக்கள் எழுச்சிகொண்டு வீதிக்கு இறங்கினார்கள்.

எந்தவொரு அயல் நாடும் இந்த எழுச்சியை தூண்டிவிடவில்லை.  எனினும் பல நாடுகள் இலங்கை அரசின் ஊடாக மக்களுக்கு உதவ முன்வந்துள்ளன.

தீர்க்கதரிசனமற்ற பொருளாதார கொள்கைகளினாலும்,  விவேகமற்ற அரசியல் தீர்மானங்களினாலும் நாட்டை இந்த சீரழிவுப் பாதைக்கு இட்டுச்சென்ற பெருமையை பெற்றவர்களாக ராஜபக்‌ஷ குடும்பத்தினர் திகழ்ந்திருக்கின்றமையால்தான், சந்தர்ப்பவசமாக அவர்களின் தலைவராகவும்  தேசத்தின் அதிபராகவும் விளங்கும் கோத்தபாய ராஜபக்‌ஷவை வெளியேறிச்செல்லுமாறு கோத்தா கோ இயக்கம் எழுச்சி பெற்றது.

இந்த இயக்கத்தில் இணைந்துள்ள பெளத்த பிக்குகளும் கடும் தொனியில் அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒரு பெளத்த பிக்கு விஷ்ணு தெய்வம் மீண்டும்  நரசிம்ம அவதாரம் எடுத்துவந்து,  இந்த கொடுங்கோலர்களை அழிக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, மக்களையும் அழைத்து தேங்காய் உடைத்து சாபமிடுகிறார்.

ஆடி பிறந்ததும்……..



 

 







பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்.

 

நாளை விடிந்ததும் ஆடி பிறந்திடும்

நாமெலாம் கூடி மகிழ்ந்திடுவோம்

ஏழையோ செல்வனோ என்றபே தமில்லை

இன்பமாய் எல்லோரும் கொண்டாடுவோம்!

 


 

 

 

 



 

நூல் அறிமுகம் – மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம் -- முனைவர் ஜொஸப்பின் பாபா ( புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை )


இலங்கையைச் சேர்ந்த  கால்நடை மருத்துவர் நடேசன் அவர்கள்  தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில்   சென்னக்கு  அடுத்திருந்த காஞ்சிபுரம் பகுதியில்  ஒரு கிராமத்தில் அமைந்திருந்த பண்ணையில் வேலை செய்தபோது பெற்ற அனுபவங்களை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான்  பண்ணையில் ஒரு மிருகம் .

தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இதன் முன்னுரையில் நடேசன் எழுதியிருக்கும் குறிப்புகளிலிருந்தே இந்த செய்தியையும் அறிய முடிகிறது.

அந்தப் பண்ணையில் மேற்பார்வையாளராக  அவர் வேலைக்கு வந்து


சேர்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. ஒரு மிருக மருத்துவராக இருந்தும் இலங்கையைச்  சேர்ந்தவர் என்பதால்  அங்கு  அதே  மருத்துவராக  வேலை செய்ய சட்டச் சிக்கல்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.  

நடேசன்  இதற்கு முன்னரும்  நாவல்கள், சிறுகதைகள் எழுதியவர்.  இந்த எழுத்தாளாருக்கு முன்பு ,  தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு மருத்துவர்,  அங்கு வேலை பார்த்து வந்ததும் கற்பகம் என்ற பெண்ணின் தற்கொலைக்கு காரணமாகியதனால் அவர் அந்த  வேலையை விட்டு விரட்டப்பட்டதையும் அறிகிறார்.

புதிய டாக்டராக வரும்  இந்தக் கதைசொல்லியின்   மனம் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பிக்கிறது. பிற்பாடு அங்கு வேலை செய்யும் மேஸ்திரி, ராமசாமி, ராணி, அன்பரசி, கிருஷ்ணன் போன்ற கதா பாத்திரங்கள் வழியாக பண்ணையில் நடக்கும் சம்பவங்களை படிப்படியாகத் தெரிந்து வருகிறார்.

 இத்துடன் பண்ணையில் தற்கொலை செய்து கொண்ட மூக்குத்தி அணிந்த வெங்காய நிற சேலைக்காரி கற்பகம் மருத்துவரிடம் தன் கதையை சொல்ல ஆரம்பிப்பதுடன் கதை சுவாரசியமாக நகர்கிறது. கனவா நனவா என்ற பேய்க் கதையுடன் வாசகர்களும் டாக்டருடன் திகிலுடன் பண்ணையில் பயணிக்கிறோம். 

இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஆர்ப்பாட்டம்; இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

அசாதாரண நிலைமைக்கு சில நாட்களில் சுமுக தீர்வு

மருத்துவர்கள் 1500 பேர் கடந்த 06 மாதங்களில் வெளிநாடுகளுக்கு

திருகோணமலையில் 1,000 ஏக்கரில் பயறு பயிரிட தீர்மானம்

விமான நிலைய வண்டிகளின் கட்டணங்களில் அதிகரிப்பு


ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

- ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய
- கட்சித் தலைவர்களுக்கு ரணில் அவசர அழைப்பு
- அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் பி.ப. 4 மணிக்கு
- ஜனாதிபதியை விலகுமாறு ஆளும் கட்சி எம்.பிக்கள் கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு தெரிவித்து தற்போது (09) கொழும்பில் இடம்பெற்று வரும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது.

 

உலகச் செய்திகள்

 ஜப்பானிய முன்னாள் பிரதமர் சின்சோ அபே சுட்டுக்கொலை

பிரிட்டனின் புதிய பிரதமர் பதவிக்கு போட்டி வலுக்கிறது

இந்திய ட்ரோன் விமான பரிசோதனை வெற்றி என அறிவிப்பு

உக்ரைன் போர்: உலகில் எரிவாயு பயன்பாடு வீழ்ச்சி

பாகிஸ்தான் பிரதமருக்கு நீதிமன்றம் உத்தரவு

விமான தாங்கிக் கப்பலுக்கு விமானம் வாங்கும் இந்தியா


ஜப்பானிய முன்னாள் பிரதமர் சின்சோ அபே சுட்டுக்கொலை

ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

தெற்கு நகரான நாராவில் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அபே மீது இரு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இசைத்துறைக்கு கிடைத்த பொக்கிஷம் இளையராஜா

 Friday, July 8, 2022 - 5:10pm

- ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதை கொண்டாடும் இரசிகர்கள்

தமிழக இசையமைப்பாளர்களில் மிகப்பெரும் கௌரவம் பெற்றவர்களில் முதன்மையானவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் இன்று ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதை இரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

பண்ணைபுரம் ராசய்யா ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டது தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் விடயம் ஆகும். தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் கடைக்கோடி கிராமமான பண்ணைபுரத்தில் நான்கு சகோதரர்களில் இரண்டாவது சகோதரனாக இளையராஜா பிறந்தார். இளையராஜாவிற்கு பெற்றோர் வைத்த பெயர் 'ராசய்யா' ஆகும். அண்ணன் பாவலர் வரதராஜன், தம்பிகள் பாஸ்கர், கங்கை அமரன் ஆகிய மூவரும் இவரது உடன்பிறப்புகள் ஆவார்கள். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இளையராஜாவின் மகன்கள் கார்த்திக், யுவன் ஷங்கர். அவர்கள் இருவரும் இசையமைப்பாளர்கள். மகள் பவதாரிணி பாடகி ஆவார்.

ஸ்ரீ மஹா சுதர்சன யாகம் ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2022


 

Sri Maha Sudarshana Yagna

Sunday, the 17th July 2022


இறைவன் சுதர்சன மூர்த்தி தனது குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றவர். எனவே ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்வதன் மூலம் அறியப்படாத உடல்நலக் கஷ்டங்கள், கண் தோஷங்கள், எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஜூலை 17, 2022 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சுதர்சன மகா யக்ஞம் நடைபெறும் - காலை 8 மணிக்கு விஸ்வக்சேன  (Viswaksena) பூஜை, புண்யாவசனம், கலச பிரதிஷ்டையுடன் பூஜா விதானம் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்சன மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, ஸ்ரீ சுதர்சன மூர்த்தி மற்றும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்… . ஷோடசோபசார தீபாராதனையைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்சன உற்சவமூர்த்தி கோயில் வளாகத்தைச் சுற்றி ஊர்வலம் நடக்கும்.

அருணகிரிநாதர் குருபூசை - செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா நேரலையில் சிறப்புச் சொற்பொழிவு 12/07/2022


 

செந்தமிழரசு திரு கி சிவகுமார் M.E., ஐயா நேரலையில்   https://youtu.be/a5ce7O4cr2U