வழிதவறிப் போன மக்களை தேவன் மீட்டெடுத்தார்,மானிடர் நமக்காக இயேசு பாலகன் பிறந்தார்

நத்தாரின் சிறப்பு செய்தி

பெத்தலேகம் எனும் சிற்றூரில் ஏழ்மையையும் எளிமையையும் தேர்ந்தெடுத்து நம் இயேசு கிறிஸ்து மனிதம் மாண்பு பெற இறைமனிதனானார். மானிட விடுதலையையும், மானுடம் காக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் போதித்தும் வாழ்ந்தும் காட்டினார்.

அந்த மெய்யான தெய்வமாம் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமே 'கிறிஸ்மஸ்' தினமாக மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகின்றது. உலகின் பெரும்பாலான மக்களால் நினைவு கூரப்படுகிற ஒரே பண்டிகையாகவும் 'கிறிஸ்மஸ்' திகழ்கின்றது.

விவசாயி மனத்தில் மகிழ்ச்சிவந்தால் விவசாய தினமே வெளிச்சமாகும் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

     

        ஏர்முனை என்பது கூர்முனையாகும் 
        இயங்கிடும் உலகின் அருந்துணையாகும் 

        வாழ்வினை இயக்கும் வரமாயிருந்து 
        மலர்ந்திடும் துறையே ஏர்முனையாகும்
 
        சேற்றிலே காலை வைத்திடாவிட்டால்
        சோற்றிலே கையை வைத்திடமாட்டோம்
        நாட்டினை வளமாய் ஆக்கிடவைக்கும் 
        ஏர்முனை யென்றும் கூர்முனையாகும் 

        விளைநிலம் என்பது வரமதுவாகும்
        விளைபொருள் அதனனின் விளைவதுவாகும் 
        தளர்விலா உலகு தானதுவிருக்க 
        விளைநிலம் என்பது வரமதுவாகும் 

       விவசாயி என்றும் முதுகெலும்பாவான்
       முதுகெலும் புடைந்தால் மூச்சுமேநிற்கும் 
       முதுகெலும் புடைய செய்திடுபாங்கில்
       அதிகார மெழுதல் அறமுடையல்ல 

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 73 ஈழத்து இலக்கிய ஆளுமைகளுடன் இறுதிச்சந்திப்பு ! பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் !! முருகபூபதி


தாயகத்திலிருந்து விடைபெறும் தருணம் வந்தபோது,  குடும்பத்தை விட்டு பிரிகின்ற வருத்தம் ஒரு புறம்,  நான் பல வருடங்களாக அங்கம் வகித்து இயங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அதன் துணை உறுப்பான எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் மற்றும் எங்கள் ஊர் இந்து இளைஞர் மன்றம், இலக்கிய வட்டம்,  விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம் ஆகியனவற்றின் பணிகளிலிருந்தும் விடைபெறப்போகின்றேன் என்ற கவலை மறுபுறம் என்னை வாட்டிக்கொண்டிருந்தன.

இவை தவிர, கொழும்பை தளமாகக் கொண்டியங்கிய இலங்கை


ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், அதன் தலைவர் எச். என். பெர்ணான்டோ ( இவரது சகோதரியைத்தான் தோழர் ரோகண விஜேவீரா மணமுடித்தார் ) சங்கத்தின் செயலாளர் சித்ரால்,  மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அறப்போராட்டத்தினை முன்னெடுத்த தோழர் லீனஸ், தலைமறைவாகிவிட்ட இதர தோழர்கள்,  நான் மிகவும் நேசித்த இலக்கியவாதிகளையெல்லாம் விட்டுவிட்டு விடைபெற்று தொலைதூரம் செல்லப்போகின்றேனே..! ? என்ற வேதனையுடனும்   சோர்வுற்றிருந்தேன்.

அவர்கள் எவருக்குமே நான் கடல் கடந்து செல்லவிருக்கும் செய்தி தெரியவே  தெரியாது.  ஆனால், எனது உடன்பிறவா சகோதரனாக விளங்கிய எழுத்தாளர் ராஜஶ்ரீகாந்தனுக்கு மாத்திரம் சொன்னேன்.

அவர் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்.  இரகசியத்தை வெளியே கசிய விடமாட்டார். 

1986 ஆம் ஆண்டு இறுதியில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில்  நடத்திய   பின்னர்,  நண்பர் சோமகாந்தனின் ஆகுதி கதைத் தொகுதி வெளியீட்டுவிழா நல்லூரில் ஒரு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சக்கரங்கள் நிற்பதில்லை! மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு ! ஒரு பார்வை கிறிஸ்டி நல்லரெத்தினம்

வாழ்க தமிழ்மொழி! 

வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழியே!

வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!........ 

 


மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா  மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய்  அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.

 இம் மாதம்  19 ஆம் திகதி ஞாயிறு மாலை சரியாக  நான்கு மணி.  மெல்பனில் பேர்விக்   மூத்த பிரஜைகள் மண்டபத்தில்  அந்தக்குரல் ஒலிக்கிறது.

மண்டபத்தில் திரண்டிருந்து மக்கள் எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அமைதியாக செவிமடுக்கின்றனர்.  

 நான் எனது கண்களை மெதுவாக  நிமிர்த்திப் பார்க்கிறேன். 


 மேடையின் வலது பக்கத்தில் முறுக்கிய மீசைக்கூடாக மந்திரப் புன்னகையுடன்  என்னை  நோக்குகிறது மகாகவி பாரதியின் நேர்கொண்ட  அந்தப்  பார்வை. 

 அப்போது நேரம் நான்கு மணி கடந்து ஒரு சில நிமிடங்கள்தான். விழா உரிய நேரத்தில் ஆரம்பமாகியிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்.  அழைப்பிதழ் சொன்ன நேரம். சொன்னவாறு தொடங்கப்பட்டிருக்கிறது.

 வரவேற்புரை நிகழ்த்திய திருமதி மேகானந்தா சிவராசா சொல்லச்சொல்ல சில மூத்த பிரஜைகள் மகாகவியின் உருவப்படத்திற்கு மங்கல விளக்கேற்றுகின்றனர்.

 அவர்கள் ஏற்றி வைத்த குத்து விளக்கின் பஞ்ச முக தீபங்கள் உயிர்த்துடிப்புடன் ஒளியூட்டி  நினைவு நூற்றாண்டு கொண்டாடும் மகாகவியை ஆராதிக்கின்றன.

 மேடையின் இடது பக்கத்தில் இந்த விழாவில் நினைவுகூரப்படும்  நாயகன் ஈழத்து இலக்கிய பிதாமகன் மல்லிகை ஜீவாவின் உருவப்படம்.   முருகபூபதி என்ற மேற்கிலங்கை கடற்கரையோரத்து மனிதனை எழுத்தாளனாக்கிய இலக்கியவாதியாக்கிய  மல்லிகை ஜீவா தனது  கன்னத்தில் கையூன்றியவாறு எம்மையெல்லாம்  பார்த்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்க்கட்சிகளிடையே தோன்றும் ஒற்றுமையும் வேற்றுமையும் ஊடுருவி

“ ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த

ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும். 


இது மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு காலம்.  அவரது மேற்குறித்த வைரவரிகளை இங்கு நினைவூட்டவேண்டிய தேவை வந்தமைக்கு அண்மையில் இலங்கைத் தலைநகரில் கூடிப்பேசியிருக்கும் தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின்  சந்திப்புத்தான் பிரதான காரணம்.

இந்தக்  கட்சிகளைச்சேர்ந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு கால கட்டங்களில் ஒன்றாக இருந்தவர்கள்தான். 

பல்லாண்டுகளுக்கு முன்னர்,  சமகாலத்தில்  நாடாளுமன்ற


உறுப்பினராக விளங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தாத்தா,  புகழ்பெற்ற வழக்கறிஞர் ஜீ. ஜீ. பொன்னம்பலமும்  சம்பந்தனின் தந்தையார் இராஜவரோதயமும்  தமிழ்க்காங்கிரஸ் கட்சியில்தான் அங்கம் வகித்திருந்தனர்.

அந்தத் தமிழ்க்காங்கிரஸ்தான் பின்னர் பிளவுண்டு தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக்கட்சி உருவானது. பொன்னம்பலத்திற்கு தேர்தலில் சின்னம் சைக்கிள். செல்வநாயகத்தாருக்கு சின்னம் வீடு.

பிற்காலத்தில்  காலத்தின் தேவை கருதி,  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில்  2010 ஆம் ஆண்டின் பின்னர் – அதாவது நீடித்த முப்பது ஆண்டுகாலப்போர் முடிவுக்கு வந்தபின்னர், உள்வாங்கப்பட்டவர்தான், அதுவரையில் ஆன்மீகம் பேசிக்கொண்டிருந்தவரும் கம்பன் கழக மேடைகளில்  சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தவருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் அழைத்துவரப்பட்டவர்கள்தான் மதியாபரணம் சுமந்திரனும் விக்னேஸ்வரனும்.

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்திரண்டு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 

 

    பலவித பயன்களை நல்கும் பனையின் நுங்கில் அதிஷ்டமும்


இருக்கிறது என்றால் ஆச்சரிப்படுவீர்கள். அப்படி என்னதான் அதி ஷ்டம் இருக்கிறது என்று அறிந்திட ஆவல் மேலிடுகிறதல்லவா ! நுங்கினைக் கத்தி யினால் சீவும் பொழுது சாதாரணமாக மூன்று கண்களே காணப்படும். இதுதான் எல்லா நுங்கிலும் அமை ந்திருக்கும் பாங்காகும். ஆனால் சில நுங்குகளைச் சீவும் பொழுது மட்டுமே நான்கு கண்கள் அங்கு அமைந் திருக்கும்.நான்கு கண்களைக் கொண் ட நுங்குகள் கிடைத்தால் நல்ல அதிஷ்டம் என்று சொல்லுவது வழக்க மாய் இருக்கிறது. இதனை " நுங்கு அதிஷ்டம் " என்றுதானே அழைத்திடல் வேண்டும். அதிஷ்டம் உள்ள நுங் கினைத் தேடுவதுவதும் ஒரு அதிஷ்டம்தான். நான்கு கண்களே அதிஷ்டம் என்றால் அதிலும் அதிகமான கண்களை உடைய நுங்குகள் வாய்த்தால் இன்னும் அதிகளவு அதிஷ்டமும் வந்து அமையும் அல்லவா ! அப்படி அதிஷ்டம் தரும் வகையில் வந்து அமைவதுதான்
 ஏழு கண்ணுள்ள நுங்காகும். இப்படியான நுங்கு வாய்த்தால் அதுமிகவும் சிறப்பு என்று கருதப்பப்படுகிறது.

  இலங்கையில் - பனைகள் நிறைந்த செல்வமாக இருக்கின்ற பொழுதும் விற்கும் பொருளாக வரவில்லை என்பதை முன்னர்


பார்த்தோம். ஆனால் இந்தியாவில் நுங்கு , விற்பனைக்கு உரியதாக இருக்கிறது என்ப தையும் பார்த்தோம். பனையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் எப்படியாவது அதற்குச் சமனாக நின்று விட வேண்டும் என்னும் எண்ணத்தை மட்டும் தென்னையானது மறவாமல் இருக்கிறது என்பதை அதன் ஒவ் வொரு நிலையிலும் காணக்கூடியதாகவே இருக்கிறது. வெய்யிலினால் அவதிப்படுவோருக்கு கை கொடு க்க நுங்கு வரும் வேளை  ,  அங்கு தென்னையின் இளநீரும் வந்து நின்று விடுகிறது. வருபவர்கள் இளநீரை வாங்குவதா நுங்கினை வாங்குவதா என்னும் நிலையினை - இளநீரின்  வருகை ஏற்படுத்தியே விடுகிறது. என்றாலும் நுங்கின் சிறப்பு சிறப்புத்தான்.
காரணம் இளநீர் எந்தநாளும் கிடைக்கக் கூடியது. ஆனால் நுங்கு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியது ஆகும். அதனால் இளநீர் அருகில் இருந்தா லும் நுங்கினையே பலர் நாடுகிறார்கள். அந்தவகையில் தென்னை சற்று பின் வாங்கியே நிற்கும் நிலை ஏற் படுவதைத் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது. இதனைத் தென்னையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக் கிறது.

மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கு; 'அக்கினிக்குஞ்சு' யாழ். பாஸ்கருக்கு விருது

 Tuesday, December 21, 2021 - 3:04pm

எழுத்தாளர் முருகபூபதியின் மூன்று நூல்களும் வெளியீடு 

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத் தலைநகர் மெல்பனில், மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை, மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் மல்லிகை ஜீவா நினைவரங்கு நடைபெற்றது.  

பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு, பாரதியாரின் உருவப்படத்திற்கு மங்கல விளக்கேற்றி விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் பெருந்தொற்றால் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் 'மல்லிகை' இதழின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா அவர்களின் உருவப்படத்திற்கும் கலை, இலக்கியவாதிகள் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தினர். 

மக்கள் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா



     ஈழத்தில் பிறந்தார். இன்னல் பல கண்டார். எதற்குமே


இளைக்காமல் ஏற்றம் பல பெற்றார்.இரக்கமே அவருள் எங்கும் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம்கொண்டார். இதயக் கனியானார்.

வாழவைத்த தெய்வமானார்.கலங்கரை விளக்கமானார்.எங்க வீட்டுப்  பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்குகிறார்.

      அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளும் நிரம்பியதாகும்.அவர் தென்றலைத் தீண்டியதி ல்லை.தேன் தொட்டு நின்றதும் இல்லை.பஞ்சணையில் படுத்ததும் இல்லை.பசியாற உண்டதும் இல்லை.

அரைவயிறு,கால் வயிறுதான், அவருக்கும் அவரது குடும்பத்துக்குமே கிடைத்தது.

    நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால் நாட்டை விட்டு நாடுவரும் நிலையங்கு தோன்றியது.தந்தையை இளம் வயதில் பறி கொடுத்துவிட்டு தாயுடனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார்.

      பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது.பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியை விட்டு நாடகத் துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது.வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது.

துலக்கம்

கன்பரா யோகன்

மாலை வெயில் திண்ணையில் விழுந்திருந்தது. சின்னப்பா திண்ணையில் ஏற்றி வைத்திருந்த சைக்கிளை படியால் இறக்கி முற்றத்தில் நிற்பாட்டி விட்டு பெடலுக்கு மேலே V வடிவில் சந்திக்கும் உலோகத் தண்டுகளுக்கிடையில் அமுக்கி வைத்திருந்த அழுக்குத் துணியை எடுத்து துடைக்கத் தொடங்கினான். வாயில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது.  

அது திண்ணையில் ஏற்றி வைக்குமளவுக்கு அப்படி ஒரு புது சைக்கிள் இல்லை. ஆனால் முற்றத்தில் நின்றால் அயலிலுள்ள நாய்கள் வந்து சில்லில் மூத்திரம் பெய்து விட்டுப் போகின்றன. அதனால் றிம்மில் பொருத்தியுள்ள கம்பிகள் கறல் பிடித்துப் போகின்றன.

தகர பேணிக்குள்ளிருந்த கொஞ்சத் தேங்காயெண்ணெய்க்குள் போத்தலிலிருந்த மண்ணெணெயில் கொஞ்சம் கலந்தான். மண்ணெணெயின் நாற்றம் மூக்கிலடித்தது. வெள்ளைத்துணியைப் பேணிக்குள் ஒற்றி மட்காட்  வளைவுகளைத் துடைக்கத்  தொடங்கியபோது பொக்கற்றுக்குள் இருந்த கைத்தொலைபேசி அழைப்பு நெஞ்சில் கிறு கிறு என்று கீச்சம் காட்டியது.

இடக்கையால் அதை எடுக்க தொலைபேசியில்  கோமதி

" சின்னா ஒருக்கா ஆஸ்பத்திரிக்குப் போய் வாடா"  அவள் இப்படிக் கெஞ்சுவதற்கு ஒரு ராகம் இழுத்தாள்.

ஏன் உன்ரை புருஷன் எங்கை?"

கொழும்புக்கு அவர் வான் கொண்டு போய் ஒரு கிழமையா இன்னும் வரேல்லை. அங்கயிருந்து வேற ஒரு ஹயர் வந்ததால கதிர்காம பக்கம் போக வேண்டி வந்திட்டுதாம்”.

“சரி விடு. ஏன் இப்ப ஆஸ்பத்திரிக்கு?

இலங்கைச் செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திருப்பதியில் வழிபாடு

பிரதமர் மஹிந்த திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம்

இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

திருக்கோவில் சூடு; சார்ஜென்டிற்கு ஜனவரி 06 வரை விளக்கமறியல்


பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திருப்பதியில் வழிபாடு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திருப்பதியில் வழிபாடு-PM Mahinda Rajapaksa Tirupati Visit

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) காலை திருப்பதி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பிரதமர் உள்ளிட்டோருக்காக திருப்பதி ஆலயத்தில் இன்று விசேட ஆசீர்வாத பூஜையும் இடம்பெற்றது.

உலகச் செய்திகள்

 டுபாய் ஆட்சியாளரின் மனைவிக்கு 734 மில். டொலர்கள் ஜீவனாம்சம்

பங்களாதேஷில் படகு தீப்பிடித்து 32 பேர் பலி 

மலேசிய வெள்ள அனர்த்தம்; உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு

சீனா மற்றும் பூட்டன் இடையே தொடரும் எல்லைப் பிரச்சினை

தியானன்மென் படுகொலை நினைவுச் சிலை அகற்றம்


டுபாய் ஆட்சியாளரின் மனைவிக்கு 734 மில். டொலர்கள் ஜீவனாம்சம்

இங்கிலாந்து குடும்ப நீதிமன்றம் ஒன்றால் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஜீவனாம்சத் தொகையாக டுபாய் ஆட்சியாளர் பிரிந்து சென்ற தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 554 மில்லியன் பெளண்ட்கள் (734 மில்லியன் டொலர்கள்) வழங்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரியான இளவரசி ஹயா பிந்த் அல் ஹுஸைனுக்கு 251.5 மில்லியன் பெளண்ட்கள் மற்றும் சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு 290 மில்லியன் பெளண்ட் வங்கி உத்தரவாதம் ஒன்றையும் வழங்கும்படி செய்க் முஹமது பின் ரஷீத் பின் ரஷீத் அல்–மக்தூமுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி ஞாயிறு 2ஜனவரி 2022

SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia

ஸ்ரீ ராமரின் தீவிர பக்தரான ஸ்ரீ ஹனுமான், கடவுளின் மீது அசைக்க முடியாத பக்திக்காக வணங்கப்படுகிறார்.ஹனுமான் ஜெயந்தி அல்லது ஹனுமத் ஜெயந்தி ஸ்ரீ ஹனுமான் பிறந்ததை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது     வனரா கடவுளான ஸ்ரீ ஹனுமான், இந்து கலாச்சாரத்தில் பரவலாக வணங்கப்பட்டார்.


 பக்தி, மந்திர சக்திகள், பலம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக ஹனுமான் வணங்கப்படுகிறார்.தீய ஆவிகளை வென்று, மனதிற்கு அமைதியை அளிக்கும் திறன் இருப்பதால், ஹனுமான் சாலிசா உச்சரிக்கிறோம்.
 02.01.2022 – ஞாயிறு – காலை 10.00 மணி: ஸ்ரீ ஹனுமான், லங்காராம் மற்றும் மகா தீபராதனை க்கு சிறப்பு அபிஷேகம்.


வசதிகுறைந்த குழந்தைக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசு

 ஒரு $20 ( ரூபா 3,000) நன்கொடை அளிப்பதன் மூலம், ஒரு குழந்தைக்கு ஒரு பை மற்றும் பொருட்களைக் கொண்டு பள்ளிக்குத் தயாராக இருப்பதை உணர உதவும் முக்கியமான கருவிகளை வழங்க நீங்கள் உதவ லாம்.


வன்னி ஹோப் வங்கிக் கணக்கு விவரங்கள் பின்வருமாறு:

வசூலை அள்ளிக் குவிக்கும் புஷ்பா

 Thursday, December 23, 2021 - 1:40pm

- உலகளவில் ரூ.100 கோடியைத் தாண்டியது

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் புஷ்பா: தி ரைஸ் - பார்ட் I' (Pushpa: The Rise part 1).

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம்  இம்மாதம் 17ஆம் திகதி  உலகமெங்கும் வெளியானது. இதில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் முதல் நாள் வசூலில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. இந்நிலையில்  ‘புஷ்பா’ திரைப்படம், ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்தைப் பின்னுக்குத் தள்ளி ரூ.45 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் ‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’, ‘வக்கீல் சாப்’ உள்ளிட்ட படங்களையும் ‘புஷ்பா’ பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.  நன்றி தினகரன் 

எல்லோரும் இறையெண்ணி இதையோதி இருந்திடுவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



மங்கையர்கள் கூடுகிறார் மனமுருகப் பாடுகிறார்
பொங்கிவரும் பக்தியினால் புலருமுன்னே எழும்புகிறார்


எழும்பாத மங்கையரை எழுந்துவர வேண்டுகிறார்
எம்பிரான் திறமுரைத்து எல்லோரும் பாடுகிறார்

ஆதியொடு அந்தமும் ஆண்டவனே என்கின்றார்
மாலறியா நான்முகனும் மலைக்கநிற்பா னென்கின்றார்
பரஞ்சோதி என்கின்றார் பருங்கருணை யென்கின்றார்
எழுந்திருந்து வந்திடுவீர் ஈசன்புகழ் பாடிடுவோம்

முத்தன்ன வெண்ணகையீர் முகமகமலர்ந்து வந்திடுவீர்
அத்தன் ஆனந்தன் அவன்புகழைப் பாடிடுவோம்
சித்தம் அழகுடையீர் சிவனடியைப் பரவிடுவோம்
முத்தத்தில் நிற்கின்றோம் முகமலர்ந்து வாருங்கள்

விண்ணாகி நிற்கின்றான் மண்ணாகி நிற்கின்றான்


வேதாமாய் நாதமாய் வியாபித்தும் விரிந்துள்ளான்
கண்ணார் அமுதமுமாய் காணுகிறான் கண்ணுதலான்
காலையிலே நீராடிக் கழல்பணிவோம் எழுந்திடுவீர்

சிவன்புகழைப் பாடுகிறோம் செவியதனைக் கேட்கலையோ
அவன்புகழைக் கேட்காத அச்செவியும் நற்செவியோ
வன்செவியை வைத்திருக்கும் மாதரசே எழுந்திடுவாய்
மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்

"வாகீச கலாநிதி" பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைவு

 ஈழத்தின் தலைசிறந்த தமிழ்ப் புலமையும், ஆன்மிக வளமும்


கொண்ட "வாகீச கலாநிதி" பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் கவலையும் கொள்கின்றேன்.


தொண்ணூறுகளில் கோயில் திருவிழா மேடைகளில் இவரின் ஆன்மிக உரைகளைக் கேட்டு வளர்ந்த பரம்பரை நாம்.
களையான சிரித்த முகமும், பண்பாகப் பேசும் ஆற்றலும் கொண்ட பெருந்தகை இழப்பில் அன்னார் இறைவன் திருவடியில் சங்கமிக்கப் பிரார்த்திக்கின்றேன்.

பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் குறித்த பகிர்வும், ஆக்கியவை சிலதும்

பன்முக ஆளுமை மிக்க பேராசான்