முருகன் ஆலய 2ம் திருவிழா பார்வை - செ. பாஸ்கரன்


சிட்னி முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் இரண்டாம் திருவிழா கோம்புஸ் வாழ்மக்களின் உபயத்தில் இடம் பெற்றது.வாரநாள் என்பதால் அதிக மக்களை காணமுடியவில்லை.யானை வாகனத்தில் முருகப்பெருமானை அமரவைத்து மண்டபம் போன்ற அமைப்பினுள் அந்த யானை வாகனத்தை வைத்து வீதிஉலா எடுத்துவந்தது அருமையான காட்சியாக அமைந்திருந்தது. இம்முறை நாதஸ்வர தவில் வித்துவான்களில் திரு நாகேந்திரம் அவர்களை காணமுடியவில்லை. நெருக்கமான உறவு ஒன்றின் மறைவினால் வரமுடியவில்லை என்பதை அறிந்தேன். நேற்றய கச்சேரியில் தனித்தவில் கச்சேரி என்னை மிகவும் கவர்ந்திருந்தது. தவில் கலைஞர்களான சின்ராஜா சுதாகரனும் புதியவரான ராமு சீலன் அவர்களும் இணைந்து ஒரு அருமையான தனித்தவில் கச்சேரியை தந்தார்கள். இளைஞர்களான அவ்இருவருக்கும் பாராட்டுக்கள்.
நேற்றைய பிரசாதம் வழங்கலில் தாராளத்தன்மை காணப்பட்டது. அப்படி வழங்கியும் பிரசாதம் எஞ்சியருந்ததாக கூறப்பட்டது.முருகன் வீதிஉலா வந்தபோது பலரும் இலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட குருக்கள் கொடியேற்றாதது பற்றி பாதக சாதகமான பக்கங்களில் உரையாடிக்கொண்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது. அது பற்றி விரிவாக இன்னுமொரு பத்தியில் தரலாமென்று எண்ணுகின்றேன்.
சுவாமி வடமேற்கு வீதியில் தரித்து நின்றபோது பக்தர்கள் பலரும் துர்நாற்றமொன்றை உணர்ந்தார்கள். அது பற்றி பேசியவர்கள் வடமேற்கு வீதியில் அமைந்திருக்கும் மழை நீர் செல்லும் குளாயின் திறவு வாசலினால்தான் அந்த துர்நாற்றம் பரவுவதாக குறிப்பிட்டார்கள். அழுக்கு நீர் தேங்கியிருப்பதால் இது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. நிர்வாகம் இதை துப்பரவு செய்யும் பணியை உடனடியாக மேற்கொள்வார்கள் புனித வீதி புனிதமாக இருக்கும் என நம்புகின்றோம்.

மனுஷி! குறும்படம்.

.



இவை ஆண்களால் புரியப்பட வேண்டிய பெண்ணின் பாடுகள்!!
இந்தப் பெண்ணின் மொழி ஒரு மனிதாபிமானம் உள்ள; வாழ்வைச் சமனாகப் பங்கு பெற வந்த, சக மனிதனுக்கு புரியப்பட முடியாத மொழியா?
யாராவது பேசுங்களேன்! ஏதாவது சொல்லுங்களேன்!!
மணிமேகலா.

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் வெள்ளி விழாவை கொண்டாடியது

கு கருணாசலதேவா  

சிட்னி ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 24ம் திகதி சிட்னி பாகாய் சென்றரில் தனது வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாடியது.  இக்கல்வி நிலையத்தை 1987ம் ஆண்டு 30 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பித்து வைத்த பெருமை திரு நா கணபதிப்பிள்ளை, திரு சி பாலேந்திரா, திரு சுந்தர் ஈஸ்வரன், திருமதி ஜெயந்தி பாலேந்திரா, திருமதி சத்தியா கருணாகரன் ஆகியோரையும் ஆசிரியர்களாக கடமையாற்றிய திருமதி பத்மாவதி அருமைநாயகம், திருமதி திலகவதி மயில்வாகனம் ஆகியோரையும் சாரும்.

இந்த விழாவில் பிரதம விருந்தினர் திரு திருமதி சிவானந்தா அவர்களும் சிறப்பு விருந்தினர்கள்  ஆஸ்திரேலியா அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இவர்கள் சொற்பொழிவு ஆற்றி வெள்ளிவிழாவை சிறப்பித்தார்கள்.  இக்கல்வி நிலையத்தின் வளர்ச்சியில் சேவையாற்றிய ஸ்தாபகர்கள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் தொண்டர்கள் யாவரும் கௌரவிக்கப்பட்டார்கள்.

HSC இல் தமிழ் பாடத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இடைவேளைக்குப் பின்னர் வெள்ளிவிழா கீதத்தோடு ஆரம்பித்து பல நாடகங்களும் நடன நிகழ்ச்சியும் நடைபெற்று இரவு 12 மணிக்கு முடிவடைந்தது.


படங்கள் கீழே

படப்பிடிப்பு சோதி

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கிய இசை வேள்வி 2012 ……. இளமுருகனார் பாரதி.

.


இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பிலே தமிழர் அதிகமாக வாழும் வெள்ளவத்தை நகராட்சிப் பிரிவில் சைவமக்களுக்கென ஒரு அம்மன்கோயில் இல்லை என்ற குறையை நிவர்த்திசெய்ய நான்கு அடுக்குகளைக் கொண்ட ஒரு முன்மாதிரியான “ஸ்ரீ ஐஸ்வர்ய இலக்குமி ஆலயம்”, தத்துவத் திருக்கோயில் அமைப்பில் கட்டப்படுகின்றது. இந்தக் கோயில் திருப்பணிக்காக நிதி திரட்டும்வண்ணம் சிட்னியில் ‘கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்த்து அளப்பரிய தமிழ்ப்பணி ஆற்றிவரும் அவுஸ்திரேலியக் கம்;பன் கழகம்’ ஒரு அற்புதமான இசை வேள்வியை அரங்கேற்றி வெற்றி கண்டுள்ளது. இந்த மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.15மணிக்கு ஹேம்புஸ் ஆண்கள் உயர்பள்ளியில் ஆரம்பித்த இந்த இசை வேள்வியின் கதாநாயகன் 21 வயது நிரம்பாத இசை மேதை செல்வன் ர.காசியப்மகேஸ் ஆவார். காசியப்மகேஸ் அவர்கள் தனது நான்கு வயதிலிருந்து புகழ் பூத்த இசைக் கலைஞர்களான பத்மபூசன் கோபாலகிருஸ்ணன், காரைக்குடி மணி ஆகியோரின் முறையான வழிகாட்டுதலில் தனத இசைப்பயணத்தைத் தொடர்ந்தவர். தனது 9ஆவது வயதிலே இசை இயக்குநர் எம். எஸ் விஸ்வநாதன் அவர்களின் நெறியாள்கையில் கலாநிதி எஸ் பி. பாலசுப்ரமணியம் அவர்களுடன் இணைந்து பாடிய பாடற்றொகுதியை (Album) வெளியிட்டவர். இது வெற்றிப் படைப்பாக அமைந்து இவரை இசைவானிலே இளஞ் சுடர்நட்சத்திரமாக ஒளிவீசத் தளம் அமைத்தது.

படங்கள்: ப. இராஜேந்திரன்

ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் : சுருக்கமான வரலாறு
அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முன்வரைவு, 2012 மார்ச் 7 ஆம் திகதி, ஐநா மனித உரிமைச் சபையின் 47 உறுப்புநாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது.
அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் முன்வரைபு இவ்வாறு அமைந்திருந்தது ---

இலங்கையில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் குறித்து

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாகவும்,

கயிறுகள்

.

உறவா? உணர்வா? எவையும் தரியா!
என்றோ ஒருநாள் விடைபெறுமே!
உறவா?பிரிவா? தேர்வும் வாழ்வில்
திரும்பத் திரும்ப நடைபெறுமே!
உறவில் தங்கி காலிற்கெஞ்சி
உதிர்ந்த கண்ணீர் உலர்ந்திடுமே!
உறவும் உந்தன் உணர்வை உதறி
இன்னோர் உறவிற் கலந்திடுமே!

அவுஸ்திரேலிய செனட் சபையில் 2012 மார்ச் 21 இல் தீர்மானமான மனு பற்றிய செய்தி

.
Australaian Senate Motion News
Melbourne Tamil Media (மெல்.த.ஊ.பிரிவு)

MOTION PASSED ON 21 March 2012 at Australian SENATE

செனட் சபையில் 2012 மார்ச் 21 தீர்மானமான மனு

ஏலம் (சிறுகதை) - முருகபூபதி

.
வாகனத்திற்கும் வாழ்க்கைக்கும் நிறைய பொருத்தம் இருப்பதாக குகனேஸ்வரன் புரிந்துகொள்ளத்தொடங்கியது மகள் சபீனாவுக்கு கார் வாங்க அலைந்தபோதுதான்.

பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் சிறந்த சித்திபெற்றுவிட்டால் நிச்சயமாக கார் வாங்கித்தருவதாக ஏதோ பேச்சுவாக்கில் மகளுக்குச்சொல்லிவிட்டார். சொன்ன சொல்லை காப்பாற்றவேண்டும். அதற்காக கார்விற்பனைக்காட்சிக்கூடங்களுக்கும் அலைந்தார். இணையத்தளங்களிலும் தேடினார். இலவசமாக வீட்டு தபால் பெட்டியில் சேரும் பத்திரிகை கார் விளம்பரங்களில் கண்களை மேயவிட்டார். குடும்ப நண்பர்களிடமும் ‘வரன்’ விசாரிப்பதுபோன்று சொல்லிவைத்தார்.

சிட்னி முருகன் கோவிலில் வருடாந்த திருவிழா 2012

.
 மார்ச் மாதம் 27ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7ம் வரை 12 நாட்கள் தினமும் அபிஷேக ஆராதனையும் திருவிழாவும் நடைபெற சிட்னி முருகன் திருவருள் பாலித்துள்ளது.


உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

.
திருமுறை முற்றோதல்   (70வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)

 01.04.2012 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 01.04.2012 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை சைவசித்தாந்த கலாநிதி க கணேசலிங்கம் அவர்கள்; சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் “நூறாவது பதிகம் - திருக்கயிலாயம் (நொடித்தான்மலை);” நந்தமர் ஊரன் தலைப்பில் உரையாற்றவுள்ளார். தொடர்ந்து ஏழாம் திருமுறையில் என்பத்திமூன்றாம் (திரு ஆரூர்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

குறளில் குறும்பு- சோம்பலோ! சோம்பல்! -

.


வானொலி மாமா நா மகேசன்

எழுதிய குட்டி நாடகம்





இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐ.நா. பேரவையில் வெற்றி : ஆதரவாக 24 நாடுகள்; எதிராக 15 நாடுகள்!

.
22/3/2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை வெற்றியளித்துள்ளது.

இந்த வாக்களிப்பின் போது அமெரிக்காவுக்கு ஆதரவாக 24 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்திருந்தன.

இலங்கைச் செய்திகள்


 கொழும்பு யாழ். பேருந்துகளில் பயணப் பொதிகளை விசமிகள் அபகரிப்பதாக பயணிகள் முறையீடு

பிக்குகள் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட நால்வர் கைது



யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு கணவனும் மனைவியும் படுகாயம்

யாழ்.ஆஸ்பத்திரிக்கு அருகிலே கருக்கலைப்பு நிலையம் முற்றுகை டாக்டர் தப்பினார்

பேசிப்பேசியே......!


யாழ்.மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் பொதுமக்களின் பாவனைக்கு அனுமதி

பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறையை கண்டித்து யாழ் நகரில் மௌனப் பேரணி


கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி தேவை








மெல்பனில் தமிழக அறிஞருடன் சந்திப்பு


.
தமிழக ‘மானுட வசந்தம்’ தொலைக்காட்சித்தொடர் நாயகனும் நல்லிணக்க நாவலரும் பன்னூலாசிரியருமான

மருத்துவ கலாநிதி கே.வி.எஸ் ஹபீப் முஹம்மத் அவர்களின் விசேட சொற்பொழிவு

“ பல்லின கலாசார வாழ்வில் தமிழ்பேசும் மக்கள்”

காலம்:- 31-03-2012 சனிக்கிழமை மாலை 5.00 மணி.

உலகச் செய்திகள்

ஈராக்கில் தொடர் குண்டுத் தாக்குதல்கள்: 28 பேர் பலி, 140 பேர் காயம்


நோர்வேயில் பனிப்பாறை சரிவு : 5 சுற்றுலாப் பயணிகள் பலி

மெக்ஸிக்கோவில் புவிநடுக்கம்

மெக்ஸிகோவில் 7.4 மக்னிரியூட் பூகம்பம் ஒபாமாவின் மகள் உயிர் தப்பினார்

அமைச்சர் சொல்ஹெய்ம் பதவி நீக்கம்







தமிழ் சினிமா


சேவற்கொடி

 திருச்செந்தூர் பகுதியில் இரண்டு சூரசம்ஹாரங்களுக்கு இடையே நடக்கும் நாயகனுக்கும், வில்லனுக்குமிடையேயான நவீன சூரசம்ஹாரம் தான் "சேவற்கொடி" மொத்தபடமும்.