நாட்டமுடன் தமிழ்பரப்பும் வானமுதே வாழ்த்துகிறேன் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா


மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா



வானலைகள் ஊடாக வண்ணத் தமிழ்பரப்பும் 
தேனான வானமுதே தித்திக்க ஒலிக்கின்றாய்

ஈரெட்டைக் கடந்து காலெடுத்துவைக்கும் பதினேழில்
எல்லாமே சிறப்புப்பெற இதயத்தால் வாழ்த்துகிறேன் !

தரமுடைய குரலுடையோர் உனையுயர்த்தி நிற்கின்றார்
தமிழுணர்வால் அவரெழுந்து தருகின்றார் பலநிகழ்ச்சி 
கேட்டுவிடத் தவமிருப்பார் பெருகியே வருகின்றார் 
நாட்டமுடன் தமிழ்பரப்பும் வானமுதே வாழ்த்துகிறேன் !

உள்நாடு வெளிநாடு அத்தனையும் உள்ளடங்கும் 
நல்லவல்ல செய்திகளை நாளுமே வழங்குகிறாய்
முதியவரைக் கவருகிறாய் இளையவரை இணைக்கின்றாய்
அனைவருக்கும் நல்லிசையை  வழங்குமுன்னை வாழ்த்துகிறேன் !

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 17 மெல்பனுக்கு வந்த முதலாவது ஏயார் லங்கா ! தமிழ் அகதிகள் கழகத்தின் முன்கதைச்சுருக்கம் !! முருகபூபதி


கவலை இல்லாத மனிதர்கள் இந்த உலகில் எவருமில்லை.  ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வின் அனுபவங்கள்தான் புத்திக்கொள்முதல். முற்றிலும் வேறுபட்ட சமூகச் சூழலில் வாழ முற்படும்போது, அதற்கேற்ப எம்மை வசப்படுத்திக்கொள்ளத் தவறினால் தோற்றுப்போவோம்.

மெல்பனுக்கு நான் வந்த காலப்பகுதியில் இங்கே எனக்கு உறவினர்கள் எனச்சொல்லிக்கொள்வதற்கு எவருமில்லை.  இங்கு அறிமுகமான நண்பர்களும் அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும்தான்  உறவினர்களானார்.

வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம் அதிகாலை 4-00


மணியாகவிருக்கும். பத்து மணிநேர வேலை.  அதன்பின்னர் உறங்கி மதியம் எழும்போது,  ஊர் யோசனை வந்துவிடும்.  கட்டிலை விட்டு எழாமலேயே குடும்பத்தை , குழந்தைகளை நினைத்துக்கொண்டிருப்பேன்.  எனக்கு 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி மகன் முகுந்தன் பிறந்தான்.  அது கவியரசு கண்ணதாசனின் பிறந்த தினம்.  அவனது அழுகுரலை ஊரிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த கோமஸ் அன்ரியின் வீட்டு தொலைபேசியில்தான் கேட்பேன்.

அக்காலப்பகுதியில் கமல் – ராதிகா நடிப்பில் வெளியானது  சிப்பிக்குள்முத்து திரைப்படம்.  இதனை இயக்கிய                             கே. விஸ்வநாத், முதலில் சுவாதி முத்யம் என்ற பெயரில் தெலுங்கில் எடுத்தார். அதன் வெற்றியையடுத்து, தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியானது. கன்னடம் – இந்தி மொழிகளிலும் வெளியான சிறந்த படம்.

சிப்பிக்குள் முத்து படப்பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

லாலி லாலி லாலி லாலி 

லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

பொன் விழாக் காணும் ஈழத்து நாடகர் & ஊடகர் திரு. G.P.வேதநாயகம் பேசுகிறார் - கானா பிரபா

 


இலங்கை வானொலி யுகத்தில் வானொலி நாடகங்கள் தனித்துவம் மிகுந்தவை. ஆற்றல் மிகு பங்காளிகளாக ஈழத்தின் எழுத்தாளர் சமூகம் கூட இந்த வானொலி நாடகங்களில் தம் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இவர்களோடு வானொலி நாடகப் படைப்பாளியாக மட்டுமன்றி, நாடகக் கலைஞராகவும், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொடந்து சாதனை படைத்திருக்கின்றார் திரு. G.P.வேதநாயகம். அவரின் படைப்புகளில் ஈழத்தின் முன்னணி வானொலிக் கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றியதும் இலங்கை வானொலி வரலாற்றில் தனித்துவமாகச் சொல்லி வைக்க வேண்டியது.


திரு. G.P.வேதநாயகம் அவர்களுக்கு இந்த ஆண்டு பொன் விழா ஆண்டு. கடந்த ஏப்ரல் மாதம் தாயகத்துக்குக் குறுகிய ஐந்து நாள் பயணம் போது ஊடகரும், எம் உறவினருமான திரு. கணபதி சர்வானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் திரு. G.P.வேதநாயகம் அவர்களது நூல்கள் வெளியீடு கண்ட பொன் விழா நிகழ்விலும் கலந்து கொண்டேன்.

நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக திரு. G.P.வேதநாயகம் அவர்களின் நாடக & ஊடகப் பயண அனுபவங்களை பெற்றிருந்தேன். அதனை உங்களுக்குப் பகிர்கின்றேன்.

நூல் அறிமுகம்: அத்தி பூத்தாற் போன்று அவதரிக்கும் மெல்பன் கிருஷ்ணமூர்த்தியின் இரண்டு நூல்கள் ! முருகபூபதி


அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் வதியும் எஸ். கிருஷ்ணமூர்த்தி,  சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம், பத்தி எழுத்துக்கள் என அவ்வப்போது எழுதிவருபவர்.

ஆனால், தொடர்ச்சியாக எழுதமாட்டார். அவ்வாறு எழுதாத காலங்களில் நிறைய வாசிப்பார். அல்லது திரைப்படங்களை தேர்வுசெய்து பார்த்து ரசிப்பார்.

படித்த நூல்களை,  பார்த்த சினிமாவைப்பற்றி எழுதவேண்டும் என நினைப்பார். ஆனால், அந்த நினைப்பு, நினைப்பாகவே கடந்துவிடும்.

திடீரென எழுதவேண்டும் என்ற யோசனை பிறந்தால், எழுதிவிடுவார்.

மெல்பனில் நடேசன் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டு வந்த


உதயம் ( ஆங்கில – தமிழ் ) இருமொழிப்பத்திரிகையில் கிருஷ்ணமூர்த்தி தான் பார்த்த சினிமாக்கள் பற்றிய விமர்சனங்களை எழுதிவந்தவர்.  உதயம் நின்றதும், அத்தகைய எழுத்துக்களையும் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியாமலிருந்தது.

எப்போதாவது சிறுகதையும் எழுதுவார்.  அவுஸ்திரேலியா தேசிய வானொலியான S B S தமிழ் ஒலிபரப்பிலும் இவரது கதை ஒலிபரப்பானது.  கதையும் கதையாளரும் என்ற அந்த நிகழ்ச்சியை S B S ஊடகவியலாளர் ரெய்செல் சிறிது காலம் திறம்பட நடத்தினார்.

அவ்வாறு ஒலிபரப்பப்பட்ட பசி என்ற கதையும் இடம்பெற்றுள்ள தொகுப்பினை நோபோல் என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி தற்போது வரவாக்கியிருக்கிறார்.

குறிப்பிட்ட பசி சிறுகதை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட உயிர்ப்பு தொகுப்பிலும் இடம்பெற்றது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2011 ஆம் ஆண்டு  கொழும்பில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கில் வெளியிடப்பட்ட Being alive நூலிலும் இடம்பெற்றது.

கிருஷ்ணமூர்த்தி அத்திபூத்தாற்போன்று எப்போதாவதுதான் எழுதுவார்.  2013 இல் மறுவளம் என்ற கட்டுரைத் தொகுப்பினை வரவாக்கியவர்.  தற்போது நோபோல் (NO BALL ) என்ற 56 பக்கங்களில்  எட்டுச் சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பினையும், 76 பக்கத்தில் திரைக்கண் ( சில படங்கள் சில  பார்வைகள் ) என்ற சினிமா விமர்சன நூலையும் வரவாக்கியுள்ளார்.

இந்நூல்களை கிளிநொச்சி மகிழ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

கிருஷ்ணமூர்த்தி குறைவாக எழுதினாலும்,  கவனத்திற்குரிய எழுத்தாளர்.

இத்தொகுப்பின் அனைத்துச்  சிறுகதைகளும்  எமது தமிழர்களின் புகலிட வாழ்வுக்கோலங்களை சித்திரித்திருந்தாலும், உயிர் என்ற கதை மாத்திரம் தாயகத்தில் யாழ்ப்பாணத்தையும், புகலிடத்தில் அவுஸ்திரேலியா மெல்பனையும்  இணைக்கின்றது. அத்துடன் அதிர்வையும் ஏற்படுத்தும் கதை.

இக்கதையில் வரும்  யாழ்ப்பாணம் டொக்டர் கந்தசாமியும் போர்க்காலத்தில் இயக்கத்தின் ஏரியா பொறுப்பாளர் தமிழ் அழகனும் புகலிடத்தில் சந்தர்ப்பவசமாக சந்திக்கும் புள்ளியே அந்த அதிர்வு.  இதனை இத்தொகுப்பின் மகுடக்கதை எனவும் எனது பார்வையில் சொல்லலாம்.

புகலிடத்தில் இரண்டக வாழ்வுடன் போராடிக்கொண்டிருப்பவர்கள் பலரை கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகளில் அவதானிக்க முடிகிறது.

 நோபோல் என்ற சிறுகதை சுழல் பந்து வீச்சு சாதனையாளர் முத்தையா முரளீதரனைப்பற்றியும் பேசுகிறது. அவர் நாம் வாழும் நாட்டில் முன்னைய பிரதமரால் கூட எள்ளி நகையாடப்பட்டவர்தான். அவர் வீசும் ஒவ்வொரு பந்தும் விமர்சிக்கப்பட்டது. இக்கதையின் தொடக்கத்தில் வரும் மேற்கோள் குறிப்பு இது :   “ நீங்கள் எங்கு நிராகரிக்கப்பட்டீர்களோ, எங்கு அவமானம் செய்யப்பட்டீர்களோ, அதே இடத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பதுதான் உண்மையான வெற்றி. 

சாப்பாட்டு ராமன் என்று பெரெடுத்து, பல்தேசிய கலாசார உணவு வகைளையெல்லாம் தயாரிக்கத் தெரிந்த ஒருவருக்கு மனைவி தரும் உணவு நீரிழிவு, கொலஸ்ரோல்,  பிறஷர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு. 

இவ்வாறு நகைமுரண்கொண்ட கதைகளை நறுக்குத் தெறித்தாற்போல் சொல்கிறார் இந்த கதை சொல்லி.

நடனக் கலைஞர் சிதம்பரம் சுரேஷ் சிறப்பு நூல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்

 



'108 ஜதிகள்'என்ற நடனத்துறைக்கான சிறப்பு நூல் ஒன்றினை சிட்னி வாழ் நடனக் கலைஞர் சிதம்பரம் சுரேஷ் , தன் சமர்ப்பணா நடனப் பள்ளி மூலம் வெளியிட்டு இருக்கிறார்.

இது நடனக் கலைஞர்கள், மாணவர், ஆசிரியர் ஆகியோருக்கு பயன் தரும் வகையில் படைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு திரு திருநந்தகுமார் சிறப்புரையாற்றினார், நூலை திருமதி செயலட்சுமி கந்தையா வெளியிட திருமதி வெங்கட்ராமன் பெற்றுக் கொண்டார்,
கால் இடம்பெற்ற ஜதிகளை தனது மாணவர் மூலம் அரங்கில் நிகழ்த்திக் காட்டினார் சுரேஷ்.


ஸ்வீட் சிக்ஸ்டி 17 - அன்னை - ச சுந்தரதாஸ்


.

தமிழ்ப் படங்கள் பெரும்பாலும் கதாநாயகனையோ,கதாநாயகியையோ,அல்லது வில்லன்,வில்லியை பிரதானப்படுத்தியேதான் உருவாகியுள்ளன.அந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களே படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுமும் உள்ளனர். ஆனால் 1962ல் வெளிவந்த அன்னை படம் பி பானுமதி என்ற அஷ்டாவதானியை மட்டுமே முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்தது எனலாம்.காரணம் இப் படத்தின் கதாநாயகி,கதாநாயகன்,ஏன் வில்லி கூட இவர்தான்.

பானுமதியின் நடிப்பாற்றலை நன்கு உணர்ந்த ஏவி எம் ப்ரொடக்ஷன்ஸ் அதிபர் ஏவி வி மெய்யப்பன் செட்டியார் அன்னை படத்தை பானுமதியின் நடிப்பில் தயாரித்திருந்தார்.படத்தின் முழுக்க கதையும் பானுமதியை சுற்றியே அமைந்திருந்தது.இதனால் மற்றைய நடிகர்கள் எல்லோரும் அடக்கியே வாசித்தார்கள் எனலாம்.

தனக்கு குழந்தை பிறக்காது என்பதை மருத்துவர் மூலம் அறிந்த சாவித்ரி தன்னுடைய தங்கை சீதாவின் ஒரே குழந்தையை சுவீகாரம் எடுத்துக் கொள்கிறாள்.சீதா தன் கணவனுடன் பிழைப்புக்காக பர்மா போகிறாள்.சாவித்ரி மகன் மீது பாசத்தைக் கொட்டி வளர்கிறாள். அவனுக்காக தன் உயிரையும் விட சித்தமாகிறாள்.ஆனால் தத்து கொடுத்த சீதா மீண்டும் சாவித்ரியைத் தேடி பல ஆண்டுகள் கழித்து வந்ததும்,எங்கே அவள் மகனை கேட்டு விடுவாளோ என்று எண்ணி சித்தம் தடுமாறுகிறாள்.தாயையும் மகனையும் சேர விடாமல் தடுக்கிறாள்.சீதாவோ மகனின் அரவணைப்புக்காக ஏங்கி தவிக்கிறாள்.

வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா… ! அவதானி


இலங்கை வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத காலத்திற்கு மக்கள் வந்திருக்கின்றார்கள்.  எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு,  விலைவாசியேற்றம், மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு, அனைத்தும் ஒன்றாக வந்து பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது என்ற அபாயச்சங்கு ஊதப்படுகிறது.

காலிமுகத்திடலில் அரசுக்கும் அதிபருக்கும் எதிரான ஆர்ப்பாட்டப் போராட்டம் இரண்டு மாதங்களை நெருங்கிவிட்டது.

எனினும் அரசதரப்பில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் வந்தபோதிலும் அதிபரோ,  தனது பதவிக்காலம் வரையில் அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

போராட்டக்காரர்களோ, பிரதமர் மாறினால் மாத்திரம் போதாது,


அதிபரும் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்தும்  குரல் எழுப்பிவருகின்றனர்.

மீண்டும் ஒரு அதிபர் தேர்தல் நடக்கும்போது இன்றைய அதிபருக்கு போட்டியிடுவதற்கு மற்றும்  ஒரு சந்தர்ப்பம் கிட்டும்.  அவரை கடந்த தேர்தலில் பதவியில் அமர்த்திய 69 இலட்சம் வாக்காளர்களும் மீண்டும் அவரை ஆதரிப்பார்கள் என்று  அவர் கனவிலும் இனி நினைக்கமாட்டார்.

அதனால்தான், அந்த வாக்காளர்கள் தனக்கு தந்த ஆணையை இறுதிவரையில் ஏற்று, தோல்வி கண்ட ஜனாதிபதியாகச்செல்ல மாட்டேன்.  தனது பதவிக்காலம் வரையில் இருந்துவிட்டுத்தான் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரது பதவிக்காலத்தில் இவருடைய குடும்பத்தினர் வாரிச்சுருட்டிய கோடிக்கணக்கான டொலர்கள் பற்றிய செய்திகள் சமகால எண்ணிம ஊடகங்களில் விரைந்து பரவியிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளுடன் நின்றுவிடாமல்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரச ஆதரவாளர்களது சொத்துக்களை சேதமிட்டு தகனமாக்கியிருக்கின்றர்.

அமைதியாக தங்கள் எதிர்ப்பினை  காண்பித்து வந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்க்ஷவின் தீவிர ஆதரவாளர்கள் வன்முறையை ஏவிவிட்டதன் விளைவுதான் அவை.

மக்கள் எழுச்சி தெடர்ந்தும் சுவாலை விட்டு எரிந்திருந்தால்,  அமைச்சர்கள் எவரும் வெளியே சுதந்திரமாக நடமாட முடியாத நிலைதான் தோன்றியிருக்கும். 

தங்களுக்கு  உரிய பாதுகாப்பினை தருமாறு அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதையடுத்து,  இராணுவத்தினர் அவர்களுக்கு மட்டுமன்றி எதிரணி உறுப்பினர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அளித்துவருகின்றர்.

இந்தப்பின்னணியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர்  எம். ஏ. சுமந்திரன் வீட்டுக்கு அருகாமையில் பாதுகாவல் கடமையில் ஈடுபட்ட ஒரு இராணுவ சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கு முன்னர் அலரி மாளிகையின் முன்பாக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட மற்றும் ஒரு இராணுவ சிப்பாயும் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்.

கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை நாற்பது ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
 

 

 

 

  "  கரும்பு தின்னக் கூலியா " என்று கேட்பதை நாமனைவரும்


அறி ந்திருப்போம்.கரும்பில் காணப்படும் இனிப்பு ச்சுவைதான் இப்படிக் கேட்டிட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மையெனலாம். இனி ப்பினை உண்டிட யாரா வது கூலியைக் கேட்பார்களா என்னும் அடி ப்படையில்த்தான் இவ்வாறு சொல்லுவது என்பது சமூகத்தில் இன் றுவரை ஓட்டிக் கொண்டிருக்கிறது.இனிப்புச் சுவையென்றால் கரும் பைத்தான் கைகாட்டி நிற்போம். அந்தக் கரும்புதான் இனிப்பாய் மலர்ந்த சீனியின் பிறப்பிடமாகும். ஆரம்ப காலத்தில் சீனியானது எங்கு செய்யபட்டது அதற்குச் சீனி என்ற பெயர் எப்படி அமைந்தது என் றெல்லாம் பார்க்கின்ற வேளையிலே சீனதேசம் வந்து நிற்கிறது. சீனாவில் செய்யப்பட்ட படியால்த்தான் சீனி என்னும் பெயர் வந்திருக்கிறது  என்று அறிய முடி கிறது. இதற்கு சரியான ஆதாரங்கள் உண்டா என்பது ஐயந்தான். ஆனாலும் சீனி என்ற பெயருக்கும் சீனா என்ற பெயருக்கும் இடையே உள்ள பொருத்த மொன்றே பெயருக் கான காரணம் என்று எடுத்துக் கொண்டால் சிக்கலுக்கு இடமே இல்லாமல் ஆகிவிடுகிறதல்லவா.

சைகை மொழியும் முக மொழியும் (கன்பரா யோகன்)

அண்மையில் சிங்கப்பூரில் அவுஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சரும், சீன பாதுகாப்பு அமைச்சரும் சந்திக்க நேர்ந்த போது அது ஒரு கைகுலுக்கல் சந்திப்பு மட்டுமே என்று அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்திருந்தார். 2020 இல் கோவிட் பரவியபோது சீனாவில் ஒரு விசாரணை நடத்தப்படவேண்டுமென்று அவுஸ்திரேலியா வலியுறுத்தியத்திலிருந்து முறுகல் நிலை இரு நாடுகளுக்குமிடையில் தொடர்வது பலரும் அறிந்ததே. அந்த வகையில் இது ஒரு புதிய ஆரம்பமாகவிருக்கக் கூடும்.  

கோவிட் தொற்று காலத்தில் அரசுத் தலைவர்கள் கைகுலுக்குவதற்குப் பதில் முழங்கையால் இடித்து சந்திப்பை ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பேசுவதற்குப் பதிலாக காட்டும் சைகை மொழி, முக மொழிகள் தவிர இப்போது எழுதுவதற்குப் பதிலாக அவற்றைக் காட்டுவதற்கும் வழிகள் வந்தன.

இமோஜி(emoji) என்ற பெயரில் முக பாவங்களில் காட்டும் சமிக்ஞைகள், ஜாடைகள், சைகை மொழிக் குறியீடுகள் என்று எல்லாவற்றுக்கும் கைத்தொலைபேசிக் குறுஞ் செய்தியில் இடமுண்டு.

இலங்கைச் செய்திகள்

இந்தியாவிடமிருந்து 65,000 மெ.தொன் யூரியா; 5.5 கோடி டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இரட்டை குடியுரிமை பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே பதவி விலகல்

அறிவார்ந்த தலைமுறையினர் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தினமும் குவியும் மக்கள்



இந்தியாவிடமிருந்து 65,000 மெ.தொன் யூரியா; 5.5 கோடி டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இன்று (10) இந்திய EXIM வங்கியிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

உலகச் செய்திகள்

 உக்ரைனுக்காக போர் புரிந்த 3 வெளிநாட்டினருக்கு தூக்கு

குரங்கம்மை அச்சுறுத்தல் பற்றி சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இங்கிலாந்தில் 4 நாள் வேலை வாரம் அமுல்

 பாகிஸ்தான் நீர் பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை

ஆப்கானியத் துருப்புகளை இந்தியா அனுப்ப விருப்பம்


உக்ரைனுக்காக போர் புரிந்த 3 வெளிநாட்டினருக்கு தூக்கு

உக்ரேனுக்காகப் போரில் சண்டையிட்டுப் பிடிபட்ட வெளிநாட்டவர் மூவருக்கு கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா சார்பான நீதிமன்றம் ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர நிதி திரட்டும் இரவு உணவு: சனிக்கிழமை, 18 ஜூன் 2022