அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2015

தமிழ்  அமைப்புகளின்  அத்திவாரம்  பலமாக  இருந்தால்  பணிகளும்  பலமாக  இருக்கும் "
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் தமிழ்  எழுத்தாளர்  விழா 2015
கலை  இலக்கிய  சமூகக்  கருத்துக்களின்  சங்கமாகத் திகழ்ந்த  எழுத்தாளர்  ஒன்றுகூடல்
                                      ரஸஞானி


" இலங்கை,   இந்தியா,  சிங்கப்பூர், மலேசியா  உட்பட  தமிழர் புலம்பெயர்ந்து  வாழும்  நாடுகளிலிருந்து  வருகைதந்து புகலிடம்பெற்ற  அவுஸ்திரேலியா  ஒரு  குடியேற்ற நாடாகவும் பல்லின  கலாசார  நாடாகவும்  உலக அரங்கில்  மதிக்கப்படுகிறது. அத்தகைய  இந்நாட்டில்  வதியும்  தமிழ்  கலை, இலக்கியவாதிகளையும்  ஊடகவியலாளர்களையும்  தமிழ் ஆசிரியர்கள்   மற்றும்  மூத்த  இளம் - தலைமுறையினரையும் ஒன்றிணைக்கும்   இயக்கமாக  தோன்றிய  அவுஸ்திரேலியா  தமிழ்   இலக்கிய  கலைச்சங்கத்தின்  15  ஆவது எழுத்தாளர் விழாவில்  இதற்கு  பலமான  அத்திவாரம்  இட்டவர்களையும்  நாம்   நினைவில் கொள்ளவேண்டும்."   இவ்வாறு  கடந்த  14  ஆம் சனிக்கிழமை  மெல்பனில்  ஸ்ரீசிவா  விஷ்ணு  ஆலயத்தின்  பீக்கொக் மண்டபத்தில்   நடந்த  வருடாந்த  தமிழ்  எழுத்தாளர்  விழாவில் தலைமையுரை   நிகழ்த்திய  சங்கத்தின்  முன்னாள்  தலைவர்     திரு. . ஜெயராம சர்மா   தெரிவித்தார்.

"உயிர்ச் சூறை" கடல் கவ்விய காவு தந்த நினைவில் - கானா பிரபா

.

ஈழத்தின் போரியல் வாழ்வில் உள்ளக இடப்பெயர்விலும், புலம் பெயர்விலும் கடலைக் கடந்து இன்னொரு திக்கு நோக்கிய புகலிடப் பயணத்தின் நிகழ்ந்த அநர்த்தம் சொல்லும் கதைகள் அதிகம் படைப்பு வழியாகப் பேசப்படாத பொருளாக இருந்து வருகின்றன. 

என்னுடைய 90 களின் வாழ்வியலில் யாழ் குடா நாட்டில் இருந்து கொழும்பு நோக்கிய நீண்ட நாட்கள் கொண்ட பயணத்தில் ஊரியான், கொம்படி, கிளாலி என்று பங்கு போட்ட கடல் நீரேரிகளில் பயணித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. இடுப்பளவு ஆழம் வரை நீரில் நடந்தே கடந்த அந்தக் கணங்களில் மேலே வல்லூறாய் வட்டமிட்டுச் சன்னங்களைத் துப்பும் ஹெலி கொப்டர்கள், அவ்ரோ, சகடை விமானங்கள் வெருட்டிக் கொண்டே வேகப் பாய்ச்சல் போடும் அந்தக் களமே தம்முடைய பயணத்தை முடிவிடமாக அமைத்துக் கொண்டோர் பலர்.
இன்னொரு புறம் தாம் பயணித்த வள்ளங்கள் மழைப் புயலில் திசை தெரியாது சிறீலங்கன் நேவிக்காறன் கையில் அகப்பட்ட கதைகளும் ஏராளம்.

சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் மன்னாரில் இருந்து தமிழகம் போன கதையைச் சொன்ன போது,  தங்கள் படகு இலங்கைக் கடற்படை கையில் அகப்பட்ட வேளை, கைது செய்யப்பட்டு தமது வள்ளமோட்டியை புலிகளின் ஆள் என்று சொல்லிக் கொண்டே தம் கண் முன்னால் நேவிக்காறர் சுட்டு விட்டுத் தன் தம்பியையும் தன்னையும் அந்தக் கடலோர மணலைக் கிண்டி உடலைப் புதைக்க வைத்து விட்டு, நாள் பூராகத் தன்னையும் தன் தம்பியையும் இடுப்பளவு ஆழத்தில் மண்ணில் புதைத்து விட்டுப் போன கதையைச் சொன்னதைக் கேட்கும் போதே ஈரக் குலை நடுங்கியது. அதைப் பின்னணியாக வைத்து ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.


அரசியல்கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்....? முருகபூபதி

.
இலங்கை   அரசியல் கைதிகள்  விவகாரம் அவுஸ்திரேலியா  செனட்  சபையிலும்  ஒலித்ததுபாராளுமன்றம்  சென்ற  அரசியல்வாதிகளுக்கு  சர்வதேச  அரசியல்  பாடம்  நடத்தவேண்டும்
                                        
     
தர்மிஷ்டர்  ஜே.ஆர். 1977  இல்  பதவிக்கு  வந்தவுடன்  முதலில் பிரதமரானார்.  அதன்  பின்னர்தான்  அவர்  நிறைவேற்று  அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக  பதவிப்பிரமாணம்  செய்துகொண்டு   ரணசிங்க பிரேமதாசவை   பிரதமராக்கினார்.
ஆனால்எந்த நிறைவேற்று  அதிகாரமும்  இல்லாத  சூழ்நிலையில் ஜே.ஆர். 1977 பொதுத்தேர்தல்காலத்தில்  தாம்  பதவிக்கு  வந்தவுடன் சிறைகளில்   வாடும்  அரசியல்கைதிகள்  அனைவருக்கும் நிபந்தனையற்ற  விடுதலை  தருவதாக  வாக்குறுதி  அளித்தார்.

அந்த  வாக்குறுதி  குறித்து  அன்று  ஸ்ரீமாவோ  மற்றும் இடதுசாரித்தலைவர்கள்  என்.எம்,கொல்வின்,   பீட்டர்,  விக்கிரமசிங்கா முதலானோர்  கருத்து   எதனையும்  கூறவில்லை.

ஜே.ஆரின்  வாக்குறுதிக்கு  தேர்தல் மேடைகளில் எதிர்வினையாற்றினால்  சிறைகளில்  இருந்த  அரசியல்கைதிகளான மக்கள்  விடுதலை   முன்னணியிலிருந்த  தென்னிலங்கையைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான  சிங்கள  இளைஞர்கள்  மற்றும்  அப்பாவி இளைஞர்களின்  பெற்றோர்களின்  வாக்குகளை பெற்றுவிடமுடியாதுபோகும்  என்ற  தயக்கம் அவர்களிடமிருந்தது.

" கலைச்செல்வி " சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி - முருகபூபதி

.
" கலைச்செல்வி "  சிற்பி  சரவணபவனுக்கு  அஞ்சலி
அதிபர் -  இதழாசிரியர் - இலக்கியப்படைப்பாளி "யாழ்வாசி " விடைபெற்றார்

                          தீபாவளி  வாழ்த்து  அழைப்புகள்  வந்தவண்ணம்  துயில் எழுப்பியபொழுது  மீண்டும்  ஒரு  அழைப்பு.   ஆனால்,  துயரமான செய்தியுடன் ...!!  நண்பரும்  வீரகேசரியில்  முன்னர் பணியாற்றியவரும்   எழுத்தாளர்  அருண். விஜயராணியின் மருமகனுமான  ஊடகவியலாளர்  தெய்வீகன்  மறுமுனையில். சிற்பியின்  மறைவுச்செய்தி  சொல்லி  துயரம்  பகிர்ந்துகொண்டார்.

இந்தப்பதிவிற்காக  சிற்பியின்  ஒளிப்படம்  தேடியபொழுது   அவரும் இலக்கிய   நண்பர்  கே.எஸ்.சுதாகரனும்  உதவினர்.
ஒருவரின்  மறைவின்பொழுதுதான்  மறைந்தவர்  பற்றி  ஆழமாக யோசிப்பது  இயல்பாகிவிட்டது.   அந்த  யோசனையில்  அவர்தம் நினைவுகள்தான்   மனதில்  அலைமோதும்.

அழைப்பிதழ் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா கனடாவில் 21.11.2015

.


 யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின்;
போர்க்கால நாவல் வன்னி and A MILITANT'S SILENCE
முதல் அமர்வு                          
 காலம்:    2015 நவம்பர் 21 சனிக்கிழமை பி.ப. 4.30 – 6.30
இடம;:                     கனடா ஐயப்பன் ஆலயம். 635 Middlefield Rd. Scarborough M1V 5B8
தலைமையுரை   பேராசிரியர்  நா. சுப்பிரமணிய ஐயர்



ஆய்வுரை  திருமதி ராஜ்மீரா இராசையா எம்.ஏ. தமிழில்
Review    திரு. புனிதவேல்  (பொறியியலாளர்) --- ஆங்கிலத்தில்                
வெளியீட்டுரை    கவிஞர் வி.கந்தவனம்
   

மலரும் முகம் பார்க்கும் காலம் 20 - தொடர் கவிதை

.
„மலரும் முகம் பார்க்கும் காலம்“கவிதையின் இருபதாவது (20) கவிதையை எழுதியவர் அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவரும் தமிழ்முரசு இணையத்தள ஆசிரியரும் படைப்பாளியுமான  திரு.செல்லையா பாஸ்கரன் அவர்கள்.


வளர்பிறையாய் வாழ்ந்திடவே
வரவேண்டும் பொற்காலம்
மனம் ஏங்கித் தவிக்கிறது
மஞ்சள் வெய்யிலும்
மாலைநேரக் குளிர்காற்றும்கூட
மனதிற்கு மகிழ்வைத் தரவில்லை
நீ "வருவாய்" என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது
சுவாசிக்கும் காற்றில்கூட
உன் வாசத்தின் வருடல்கள்
விடுமுறையை எண்ணிப்பார்க்கும்
பள்ளிச் சிறுவனைப்போல்
உன் வருகைக்கான நாளை
சுவரெங்கும் கிறுக்கி வைக்கிறேன்
கிறுக்கலில் ஜனித்த ஓவியமாய்
நிஜத்தின் விம்பமாய் தெரிகிறது
மலரும் முகம்பார்க்கும் காலம்
பிரிவுத் துயரின் வலிகூட – இப்போ
மனதில் மழையாய் பொழிகிறது.

இருக்கின்றார் உள்ளமெல்லாம் ! ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

  

    காரைநகர் ஈன்றெடுத்த
    கலைமகளின் தவப்புதல்வா
    காதலுடன் கலைச்செல்வி
    கைப்பிடித்த தமிழ்மகனே

     சாதனைகள் பலசெய்தாய்
     சோதனையும் பலகண்டாய்
     வேதனையில் எமைவிட்டு
     வித்தகனே சென்றதேனோ

     தமிழ்நாட்டில் கல்விகற்று
     தங்கம்வென்ற நாயகனே
     தமிழோடு உனையிணைத்து
     தளராமல் பணிசெய்தாய்

     துணிவாகப் பலபேரும்
     எழுதிநிற்கத் துணையானாய்
     கனிவான உன்முகத்தை
     காண்பதினி எப்போது

    இலக்கியப் பாலமாய்
    இருந்தவெங்கள் சிற்பியையா
    இல்லையெனும் சேதிகேட்க
    இதயமெல்லாம் அழுகிறதே

   தமிழுலகில் உங்கள்பெயர்
   தலைநிமிர்ந்தே நிற்குமையா
   எமதருமை சிற்பியையா
   இருக்கின்றார் உள்ளமெல்லாம் !

கவிவிதை - 3 இக்கரையும் அக்கரையும் -விழி மைந்தன் --



ஒரு தெருவில் இரு வீடுகள்ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு நின்றன.
ஒன்று மாளிகைஇன்னொன்று குடிசை.
இரண்டு வீட்டுக் கார 'எஜமானர்'களும் நண்பர்கள் தான்.  அல்லதுஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள்.
ஒரே வருடத்தில் பிறந்துஒரே தெருப் புழுதியில் உருண்டுஒரே கிராமப் பள்ளியில் படித்துஒரே கோபக்கார வாத்தியாரிடம் குட்டுகள் வாங்கிஒரே ஆற்றில் குளித்துஒரே கடலை ஆச்சியிடம் ஒரே ஒரு சுருள் கடலை வாங்கி அடித்துப் பிடித்து உண்டு வளர்ந்தவர்கள்.
ஒருவன் படித்தான் கொஞ்சம் நன்றாக;  பல்கலைக் கழகம் போய்  விட்டான். மற்றவனுக்குக் கடைசி நாள் பரீட்சை அன்று வயிற்றாலடி வந்த காரணத்தால் ஒரு சில புள்ளிகள் குறைவு.
பல்கலைக் கழகம் படிக்கப் போனவன் பணக்கார வீட்டு டாக்டர் பெண்ணைப்  'பிடித்துக்கொண்டான்.
வயிற்றாலடி வந்தவன் ஊரிலேயே  வறுமைப் பட்ட அத்தை பெண்ணை வரித்துக்  கொண்டான்.
பணக்காரர் மருமகன் மாமனார் யோசனைப் படி மென்பொருள் கம்பனி ஆரம்பித்தான். 'விஜிதா சிஸ்டம்ஸ் டிசைன்என்று தன்  மனையாட்டி பெயரை மங்கலமாய்  இட்டான்!
அத்தை பெண்ணை மணந்தவன் ஆறேழு வருடம் வேலை இன்றி அலைந்த பிறகு ரயில்வே  துறையில் காவலன் ஆனான்.
அவனைக்  கண்டால் புன்னகை செய்ய இவனுக்குத் தயக்கம்!  இவனைக் கண்டால் தலை அசைப்பதா என்று அவனுக்குக் குழப்பம்!
இரண்டு பேருக்கும் ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் குழந்தைகள் பிறந்தன.

படித்தோம் சொல்கின்றோம் கலைவளன் சிசு. நாகேந்திரனின் பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி தாத்தாமார் மேற்கொண்ட தமிழ்ப்பணியை பேரர்களும் தொடரவேண்டும் முருகபூபதி


அவுஸ்திரேலியாவில்  வதியும்  95  வயது  தமிழ்த்தாத்தா  கலைவளன்  சிசு.நாகேந்திரன்  அவர்களைப்  பார்க்கும்தோறும்  எனக்கு .வே. சாமிநாத அய்யர்  தாத்தாவும்,  வீரமாமுனிவர்  என்ற  பாதிரி தாத்தாவும்  நினைவுக்கு  வருகிறார்கள்.
சாமிநாத அய்யரும்  வீரமாமுனிவரும்  வாழ்ந்த   காலத்தில் கம்பியூட்டர்  இல்லை.   அவர்களுக்குப்பின்னர்  வந்த  பேரர்கள் காலத்தில்  அந்த  வரப்பிரசாதம்  கிட்டியிருக்கிறது.
பழகும்  தமிழ்ச்சொற்களின்  மொழிமாற்று  அகராதி  என்ற 577 பக்கங்கள் கொண்ட  இந்த  அரியநூலை  தமது  நீண்டநாள் தேடுதலிலும்  கடும்  உழைப்பிலும்  வெளியிட்டுள்ள  சிசு. நாகேந்திரன்   தமது  95  வயதிற்குப்பின்னரும்,  இந்த  அகராதியின் இரண்டாம்  பாகத்தை  தற்பொழுது  தயாரித்துக்கொண்டிருக்கிறார் என்பது   அதிசயம்தான்.  ஆனால்,  அதுதான்   உண்மை.
அவருக்கு  ஒரு  கண்பார்வை  குறைந்துவிட்டது.  செவிப்புலனும் குறைந்துவருகிறது.    உடல்  ஆரோக்கியம்  குன்றியிருந்தாலும் அவருடைய   ஆத்மபலம்தான்  அவரை  தொடர்ந்தும்  தமிழ்  சார்ந்து ஆய்வுடன்    இயங்கச்செய்கிறது.
பலவழிகளில்   சிசு. நாகேந்திரன்  அய்யா,  எமது  சமூகத்துக்காகவே அர்ப்பணிப்புணர்வுடன்   வாழ்கின்றவர்  என்பதற்கு  நிறைய ஆதாரங்கள்  இருக்கின்றன.