கைலாசநாத
ஸர்மா பாலசுப்பிரமணியன்
(பாலா)
மலர்வு: 31. 10. 1956
– உதிர்வு: 08.06.2021
சுதுமலை – யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மற்றும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, பாலசுப்பிரமணியன் அவர்கள்[Former Biomedical Engineer] , செவ்வாய்க்கிழமை 08.06.2021 அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கைலாசநாத ஸர்மா - அலமேலு அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூர்ணாநந்தக் குருக்கள் - கங்கா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஹேமலதா அவர்களின் அருமைக் கணவரும், சுகன்யா, நிஷேவிதா மற்றும் ப்ரணிதா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
துவேய்ன், அஷ்வின், ஆகியோரின் அன்பு மாமனாரும், தாஜ், தியா ஆகியோரின் பாசமிகு பெயரனாரும், தியாகநாதன், மகேஸ்வரன், ஜானகி, நந்தினி, திரிலோஜனன், கோவர்த்தனன், மற்றும் எழில்ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் மறைவுச் செய்தியினை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் நிறைவுக் கிரியைகள் சார்ந்த விபரங்கள்
அன்னாரின் பூதவுடல், பார்வைக்காகப் புதன்கிழமை, 09.06.2021 மாலை 3:30 மணி முதல் - மாலை 4:15 மணிவரை South Chapel, Rookwood Crematorium (Memorial Avenue, Rookwood) இல் வைக்கப்படும் என்பதனையும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்: அஷ்வின்: | 0421 618 866