புத்தரின் படுகொலை - கவிஞர் எம்.ஏ.நுஃமான்

 


நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

கமுக்கமான அமுக்கம் - இதய நோய் பற்றி ஆழமான வரிகள் -DR-- சிவாணி பத்மராஜா


 இதயம் எனும் பம்பி  வைத்து  இடை விடாது எம்ப வைத்து  

அதையும் இதையும் அனுப்பி வைக்க  அங்கோர் வலைப் பின்னல் வைத்து  

குருதிப் புனல் ஊற்றி வைத்து  குறிப்பறிந்து ஓட விட்டு,   

கலனில் புனல் ஓடும் போது  கணக்கீடாய் அமுக்கம் வைத்து,  

அதிகரிக்கும் பொழுதுகளில்  அதில் எம்மை அமுக்க வைக்கும்  

அந்தரத் தந்திரமே - குருதி  அமுக்கம் எனும் மந்திரமே.     

மேலொரு இலக்கம்  கீழொரு இலக்கம்  மேதினியிலே இது   மருத்துவர் வழக்கம்,  

மாறுதல் தொடக்கம் - பல   மாற்றங்கள் தொடரும்.  

புரியாத நிலையில்  போரொன்று தொடங்கும்.  

அறியாத வகையில்  அழிவு கதை எழுதும்.    

ஆரவாரமில்லா அமுக்க வெடியில்  அத்திவாரங்கள் ஆடும் - 

நாடித்  துவாரங்கள் மூடும்  - நெஞ்சில்  பாரங்கள் தோன்றும்  

பலமாகும் போது - குருதிப்  பாதைகள் மூடும் - வாழ்வு  பாடையைத் தேடும்.     

விசை என்னும் கசை பட்டு - இதயத்  தசைகள் தடிக்கும்.   

இடிப்புகள் தொடர  இதயம் களைக்கும்,   உனக்கும் களைக்கும்.  

எண்ணமதை உரமாக்கி எம்சிறகை விரித்திடுவோம் ! கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


   காமமெனும் பெருநெருப்பு
            காலமதை பொசுக்கிறது 
   காசுவெனும் போதையது
          கருணையினை ஒதுக்கிறது 
   வீதிதோறும் மதுவெண்ணம்
           விரிவாகிப் பெருகிறது
   நீதிசொல வந்தாலும்
           நெருக்குவாரம் பெருகிறது   !


    மலர்வனங்கள் நிலையிழந்து
             வரட்சிவரப் பாக்கிறது 
    வண்டெல்லாம் தேனெடுக்க 
             வகையறியா திகைக்கிறது
    உளமதினில் நல்லுணர்வு
             ஊற்றெடுக்க மறுக்கிறது
    வளமிழந்து வாழ்ந்திடவா
             மாநிலத்தில் பிறந்திட்டோம்  !           
 

ஈழத்தின் தனித்துவ ஓவியர் ஆசை இராசையா மறைந்தார் - கானா பிரபா

பெரு மதிப்புக்குரிய எங்கள் ஈழத்து ஓவியர் ஆசை இராசையா அவர்கள் இன்று நம்மை விட்டு மறைந்து விட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்டுக் கவலையுறுகிறேன்.

அன்னாருக்கு அஞ்சலிகளும் அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் சக நண்பர்களுக்கு ஆறுதல்களும்.

ஆசை இராசையா அவர்கள் குறித்து முன்னர் நான் எழுதிய இடுகை

ஈழத்தின் ஓவிய மரபில் நீண்டதொரு தடம் பதித்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள்

ஈழத்தில் புகழ் பூத்த ஓவிய ஆளுமைகளில் ஒருவரான மாற்கு மாஸ்டர் எமது கல்லூரியில் சித்திர வகுப்பு ஆசிரியர். பள்ளிக் கூடத்தில் அவருடைய சித்திரக் கூடம் முழுதும் ஓவியங்கள் பொதிந்த அட்டைகளும், மேசை பரவி பாதி வேலையில் இருக்கும் களிமண் சிற்பங்களுமாக நிறைந்திருக்கும். அந்த நேரத்தில்
சிங்களக் கலையுலகம் வரை போற்றப்பட்ட ஆளுமையாக விளங்கிய மாற்கு மாஸ்டரின் அருமை பெருமையைப் பள்ளி மாணவர் நமக்கோ புரிந்து கொள்ளக் கூடிய வல்லமை இல்லாதிருந்தது. பின்னாளில் திரு பத்மநாப ஐயர்  “தேடலும் படைப்புலகமும்” என்று ஈழத்தின் அனைத்து ஓவியர்களின் வாழ்வனுபவங்களையும் திரட்டி வெளிவந்த “தேடலும் படைப்புலகமும்” என்ற நூலை எமது கொக்குவில் இந்துக் கல்லூரியில் பெரும் விழா எடுத்துக் கொண்டாடிய போது சிறப்புப் பிரதி வாங்கிய மாணவர்களில் ஒருவன் நான். அந்த வகையில் அந்தக் காலத்தில் எப்படி அம்புலிமாமா காலத்தில் இருந்து மெல்ல மெல்ல ஈழத்து எழுத்தாளர்கள் பக்கம் திசை திரும்பி அவர்களின் எழுத்துகளை அள்ளியெடுத்துப் படித்தேனோ அது போலவே ஈழத்து ஓவியர்களின் படைப்புகளையும் விரும்பி ரசித்துப் பார்க்கும் வழக்கம் உண்டாயிற்று. ஓவியர் ரமணி, பயஸ் போன்றோர் ஈழத்துப் பத்திரிகைகளில் அடிக்கடி ஓவியம் போடுவார்கள். தவிர ரமணியின் ஓவியம் தாங்கிய ஈழத்து நாவல்கள், சிறுகதைகள் என்று வந்து கொண்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க எங்களையறியாமலேயே இன்னாரென்று தெரியாமல் அவருடைய ஓவியங்கள் நம் பாடப் புத்தகங்களில் இருந்ததை ரசித்துப் பார்த்து வாழ்ந்திருக்கிறோம். அவர் தான் ஓவியர் ஆசை இராசையா.

ஈழத்து எழுத்தாளர் முல்லை அமுதனுடன் சிறப்புச் சந்திப்பு - கானா பிரபா


எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்கள் ஈழத்தில் இருந்த காலம் தொட்டு கவிஞராகவும், பல்வேறுபடைப்புகளின் வழியாகவும் இலக்கியம் சமைத்துக் கொண்டிருப்பவர். தீவிர இலக்கிய வாசகராக ஈழத்துநூற்  கண்காட்சிகளை இதுவரை 12 தடவைகள் அரங்கேற்றியிருக்கிறார். காற்று வெளி என்றசஞ்சிகையை இருபதாண்டுகள் கடந்து இன்னும் தொடர்ந்து அச்சஞ்சிகையின் ஆசிரியப் பணியோடுகொண்டு நடத்திக் கொண்டிருப்பவர்.


இன்று  முல்லை அமுதன் பிறந்த தினத்தில் அவரைச் சந்தித்து இலக்கியப் பயணம் குறித்துஅளவளாவினோம். அதனைக் கேட்கவும், பார்க்கவும்



https://m.youtube.com/watch?feature=youtu.be&v=icAmHsa5jDE




இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு 2023இல்...? பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

 



ல்வி மறுசீரமைப்புக்கான பணிகள் முனைப்புடன் வேகமெடுத்துள்ளன. அடுத்த 2023இல் புதிய கல்வி யுகத்தில் நுழைவதற்கான செயற்பாடுகளில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு செயலணியினர் வேகவேகமாக இறங்கியுள்ளனர்.

இன்றைய அரசால் அச்செயலணி ஆற்றுப்படுத்தப்படுகின்றது. எனவே, அது நிச்சயமாக நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம். காரணம் அவர்களிடம் மூன்றில் இரண்டு இருக்கிறது. 

எனவே, எதையும் நினைத்துவிட்டால், அதை நிறைவேற்றிவிடக்கூடிய பலம் அவர்களிடம் உண்டு. மற்றது யார் சொல்லியும் கேட்கப்போகிற குணம் அவர்களுக்கு இல்லை. எனவே, புதிதாக வர இருக்கிற கல்வி மறுசீரமைப்புக் குறித்து (அது இன்னமும்) பிரசவம் ஆகாவிட்டாலும் கொஞ்சம் அதைப் பற்றி அறிவது நல்லதல்லவா? அப்போதுதானே எம்மைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கலாம்.

உலகில் கல்வித் தரத்தில் உயர் நிலையில் உள்ள நாடான பின்லாந்தின் கல்விக் கொள்கையை எமது தேசத்துக்குரிய கலை, கலாசார, விழுமியங்களுடன் கலந்து பூசி மெழுகி, வர இருக்கிறது இப்புதிய சீரமைப்பு.

மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன்; இரண்டே நாளில் தானும் இறந்த சோகம்!



 

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன் இன்று அதிகாலை, திருச்சி தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். கரோனா தொற்றுக்கு ஆளாகிச் சிகிச்சையில் இருந்த இவரது மனைவி மீனாட்சி ஆச்சி, கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த இழப்பைத் தாங்க முடியாத காரணத்தாலேயே மாரடைப்பு ஏற்பட்டு ஏ.ஆர்.லெட்சுமணனின் உயிர் பிரிந்ததாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டையில் பாரம்பரியமான குடும்பம் ஏ.ஆர்.லெட்சுமணனின் குடும்பம். மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்குச் சான்றாக நிற்கும் இந்தக் குடும்பத்துக்கு செட்டிநாட்டுப் பகுதியில் தனிப்பெரும் மரியாதை உண்டு. சட்டம் படித்து உச்ச நீதிமன்ற நீதிபதி வரைத் தன்னை உயர்த்திக் கொண்ட ஏ.ஆர்.லெட்சுமணன், கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது அங்கே பல சாதனைகளை நிகழ்த்தியவர்.

ஸ்மார்ட் சிட்டி -மதுரைக் காஞ்சி தரும் கலைச் சொற்கள்


மதுரைக்காஞ்சி நூலை எடுத்து படித்தபோது அதிலுள்ள சில தகவல்கள் அறிந்து பிரமித்துப் போனேன். ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழில் கலைச் சொற்கள் கண்டுபிடிப்பதற்கு 3 பவுண்டு எடையுள்ள மூளையைப் போட்டு ரொம்பவே நாம் கசக்குகிறோம். துறைசார் பெயர்கள், தொழில்நுட்ப பெயர்கள் புதிது புதிதாக உண்டாக்குவதற்கு கலைச்சொல்லியியல் ஏற்படுத்தி நிறைய செலவுகள் அரசாங்கம் செய்கிறது.
அதற்குத் தேவையே இல்லை என்றுதான் நான் சொல்வேன். வெறும் மதுரைக் காஞ்சியை புரட்டினாலே போதும். அதில் ஏராளமான கலைச்சொற்கள் காணப்படுகின்றன. ஏனங்குடி தாடிவாலா, பொதக்குடி அஹ்மத் என்பதைப்போல இதை எழுதியவர் பெயர் மாங்குடி மருதனார். மாங்குடி மைனர் என்ற பெயரில்கூட நம்ம வனிதா மேடத்தோட தோப்பனார் நடித்த ஒரு திரைப்படம் வெளிவந்தது.
வேலையாட்கள் தேவை என்ற விளம்பரம் பத்திரிக்கைகளில் வரும்போதெல்லாம் மற்ற விவரங்களை யாவும் தமிழில் எழுதி விட்டு REQUIRED: MECHANIC, DRILLER, WORKER, SKILLED WORKER, CROP CUTTER, TURNER என்று ஆங்கிலத்திலேயே எழுதுவார்கள்.
இதற்கான கலைச்சொற்கள் மதுரைக்காஞ்சியிலேயே நான் படித்து அசந்துப் போனேன். இவை அனைத்திற்கும் முறையே கம்மியர், குயினர், வினைஞர், வன்கை வினைஞர், அரிநர், கடைநர் போன்ற இணையானச் கலைச்சொற்களை அதில் காண முடிகிறது.

உரியவர் உண்மையைச் சொல்லா நிலையில் உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே பரமபுத்திரன்


அணுங்கி  ஒருகுரல்  மீண்டும் சிணுங்குது

தன்னையும் வெளிக் காட்டிட  நினைக்குது

இன்னமும் நம்பிட இருக்குது தமிழ்ச்சனம்

இதனால் தெறிக்குது அவர்களின் உரைகள்

ஏனென்றால் தமிழர் உளவியல் அடிமைகள்

தன்னினம் பிறனால் இழிக்கப் படினும்

மகிழ்ந்து சிரித்துக்  கருத்தினை உவந்து 

எங்களைப்  பிழையென்று எப்போதும் ஏற்கும்  

சங்கடக் குழுவென்று  உலகமே நம்புது

இந்த எண்ணத்தை வலுவாய்ப் பற்றி

எடுத்துத் தொடங்குகிறார் திரும்பவும் பழங்கதை

இவரின் செய்தியை  கேட்கநாம்   தயார்தான்

காரணம் இன்னமும் புலிகளில் வெறுப்புண்டு

இராசிவ் காந்தியைக்  கொன்றது புலிகளாம்

அன்ரன்பாலா தன்  காதில் சொன்னாராம் 

அவர்போன பின்தான்  அறிக்கை போடுறார் 

உயிருடன் இருக்கையில் உரைக்காது விட்டதேன்

உரியவர் உண்மையைச்  சொல்லா நிலையில்

பிறந்த தினம் - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்.

.


இன்று Australiaவில் வாழும் நாம், மாதத்தில் பல வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளை எமது உறவுகளின் அல்லது நண்பர்களின் பிறந்ததின கொண்டாட்டமாக கழிக்கிறோம். இது என்ன இவர்களது பிறந்த தினங்கள் சனி ஞாயிற்று கிழமைகளில் தான் வருமா? இல்லை. அவர்கள் பிறந்ததினம் வார நாட்கள் எதிலாவது வந்திருக்கும், ஆனால் யாவருக்கும் வசதியான சனி ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடப்படும். வெள்ளைகாரன் எம்மை ஆண்டதால் நல்லதும் கெட்டதுமாக பல விஷயங்களை நாம் அவர்களிடம் கற்றுள்ளோம். அதில் இந்த பிறந்த நாளும் ஒன்றே.

1969இல் நான் லண்டன் போய் இருந்தேன். இரண்டாவது மகாராணியாரது வாசஸ்தலமான “பாக்கிங்காம் அரண்மனை வாயிலில் பெரிய கூட்டம். என்ன விசேஷம் என விசாரித்தேன், மகாராணியாரது பிறந்ததின கொண்டாட்டம் என்றார்கள். அவர் பரிவாரம் சூள பவனி வருவார், அதை பார்க்க கூடி நிற்கும் ஜன திரள் என்றார் பொலிஸ்காரர். நானோ வண்டிக்கு புதிது. Almost Banda Coms to town மாதிரியே அதாவது பட்டிக்காட்டரின் பட்டணம் பார்க்க வந்த மாதிரியே பொலீஸ்காரரிடம் மகாராணியாரது எத்தனையாவது பிறந்த தினம் என்று விசாரத்தில் இறங்கினேன். அவரோ என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு கூறினார். மகாராணியார் பிறந்த தினம் அன்று அல்ல, லண்டனில் நல்ல வெய்யில் எறிக்கும் நாளாக பார்த்து அவரது பிறந்த தினத்தை கொண்டாடவார்கள். காரணம் அவர் பரிவாரம் சூள பவனி வருவது லண்டன் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு கவர்ச்சிக்கான விழாவே.


இலங்கைச் செய்திகள்

தலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில்

சிங்கராஜ வனப்பகுதியில் யோஷிதவுக்கு ஹோட்டல்?

பலாலி விமான நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை

சர்ச்சைக்குள்ளான விக்கியின் உரை ஹன்சார்ட்டில் சேர்ப்பு

மைத்திரியின் இல்லத்தில் ஏப். 21 ஆணைக்குழு பொலிஸ் பிரிவு

வட மாகாண மக்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

யாழ். பல்கலை துணைவேந்தராக சிறிசற்குணராசா ஜனாதிபதியால் தெரிவு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மாத்தளை மேயர் தற்காலிக பதவிநீக்கம்

அரசுடன் இணைந்து பயணிக்க முன்வருமாறு சகல எம்.பிக்களுக்கும் பிரதமர் அழைப்பு

புதிதாக களமிறங்கிய எனக்கு கிடைத்த வாக்குகளை வெற்றியாகவே கருதுகிறேன்


தலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில்

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவும், முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரளவும் இன்று (24) முற்பகல் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

உலகச் செய்திகள்

காந்தியின் மூக்குக்கண்ணாடி 340,000 டொலர்களுக்கு ஏலம் 

தடுப்பு மருந்தை சோதிக்க ஒப்புதல்

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலையால் புதிய போராட்டம்

துருக்கி–கிரேக்கம் பரஸ்பரம் ‘போர் ஒத்திகை’ அறிவிப்பு

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இரண்டு ஏவுகணைகளை செலுத்தி அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பலஸ்தீனர் கத்திக்குத்து: இஸ்ரேலிய மதகுரு பலி

கிரைஸ்ட்சேர்ச் ஆயுததாரிக்கு பரோலில் வராத வகையில் ஆயுள் தண்டனை

துப்பாக்கிதாரிக்கு பிணையில்லா முழு ஆயுள் தண்டனை விதிப்பு

அமெரிக்க – ரஷ்ய இராணுவ வாகனங்கள் சிரியாவில் ஒன்றோடொன்று மோதி விபத்து


காந்தியின் மூக்குக்கண்ணாடி 340,000 டொலர்களுக்கு ஏலம் 

இந்தியாவின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி அணிந்த தங்கமுலாம் பூசப்பட்ட மூக்குக்கண்ணாடி 340,000 டொலருக்கு ஏலம் போயுள்ளது.

அந்தக் கண்ணாடியை மகாத்மா காந்தி தமது உறவினருக்கு அளித்ததாக, குறிப்பு ஒன்றுடன் நான்கு வாரங்களுக்கு முன்பு ஒருவர் பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டோல் ஏலக் கடையின் கடிதப் பெட்டியில் விட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை ஏல நிறுவனம் தனது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டது.

1920 அல்லது 1930களில் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்த தம் உறவினருக்கு அந்தக் கண்ணாடியை மகாத்மா காந்தி வழங்கியதாக அந்த நபர் குறிப்பிட்டிருந்தார்.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 15 - வீட்டுக்கு வீடு - சுந்தரதாஸ்

.


தமிழ் சினிமாவில் அவ்வப்போது நகைச்சுவை படங்கள் உருவாவது உண்டு அவ்வாறு உருவான படங்களில் ஒன்றுதான் வீட்டுக்கு வீடு. பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக பணியாற்றிய சித்ராலயா கோபு, இயக்குனர் சி வி ராஜேந்திரன் இருவரும் இணைந்து இந்த படத்தை உருவாக்கினார்கள்.


திக்குத் தெரியாத வீட்டில் என்ற பெயரில் எழுதி பலதடவைகள் மேடையேற்றிய நாடகமே வீட்டுக்கு வீடு என்ற பெயரில் படமானது. படத்தில் மூன்று கதாநாயகர்கள் .ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ் மூவரும் படத்தை தன்வசப்படுத்தி கொண்டார்கள் .


வழக்கமாக துடிப்புடனும் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடிக்கும் ஜெய்சங்கருக்கு இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடம். அப்பாவியாகவும் மனைவிக்கு அடங்கி நடக்கும் கணவனாகவும் இதில் நடித்திருந்தார். தன்னால் வித்தியாசமாகவும் நடிக்க முடியும் என்பதையும் நிரூபித்தார் ஜெய்சங்கர். முத்துராமனுக்கு மனைவியை அதிகாரம் செய்யும் வழக்கமான பாத்திரம், தனது பாணியில் அதனை செய்திருந்தார். படத்தின் விறுவிறுப்புக்கு குறையில்லாமல் பார்த்துக் கொண்டவர் நாகேஷ். அவரும் விகே ராமசாமியும் சேரும் காட்சிகள் எல்லாம் சிரிப்புத்தான்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 29 – கொட்டுத் தவில் மற்றும் வங்கப்பறை – சரவண பிரபு ராமமூர்த்தி


கொட்டுத் தவில் – தோற்கருவி


கொட்டுத் தவிலை மங்கல இசைக்கருவியான தவிலின் முன்னோடி என்கிறார்கள் இசை ஆராய்ச்சியாளர்கள். தற்கால தவிலை விட சிறியதாக இருக்கின்றது கொட்டுத் தவில். பலா மரம் அல்லது பூவரசு மரத்தைக் குடைந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. குமலா மரம், கல்நுருஞ்சி ஆகிய மரங்களும் முன்பு பயன்பட்டது. கனு இல்லாத மரப்பாகமே இதைச் செய்ய ஏற்றது என்கிறார் நெருப்பெரிச்சலை சேர்ந்த கொட்டுத் தவில் கலைஞர் திரு அண்ணாதுரை அவர்கள். தவிலை போல் நட்-போல்ட் இல்லாமல் பழைய முறையிலேயே வார்களைக் கொண்டு இத்தவில் கட்டப்படுகிறது. சில காலங்களாக நட்-போல்ட் பொருத்திய கொட்டுத் தவிலும் சிலரால் செய்யப்படுகிறது. பெரும்பாலும் எருமைக் கன்றின் தோலும் மறுபுறம் ஆட்டின் தோலும், சிலர் மாட்டுத் தோலும் பயன்படுத்தி தட்டும் முகங்களை செய்துகொள்கிறார்கள். இந்த வட்டவடிவமான தோல்களில் 11 ஓட்டைகள் இடப்படுகிறது எருமை மாட்டின் தோல் வாரைக் கொண்டு உடல் குதியுடன் சேர்த்துக் கட்டப்படுகிறது. ஒரு ஜான் அளவு இடப்பக்கம் அதைவிட  1-2 இன்ச் அளவு கூடுதல் அளவில் மறுபுறம் உள்ளது. தவிலின் நீளம் 45 சென்டிமீட்டர். குச்சியைக் கொண்டு ஒருமுகமும் கைகளால் ஒரு முகமும் இசைக்கப்படுகிறது. கைகளால் தட்டும் முகத்தை தேவைப்பட்டால் நெருப்பில் வாட்டிக் கொள்கிறார்கள்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 28 வாத்தியார் தொடக்கம் Professor வரையில்


எமது வடமாகாணத்தில்  ஒரு  காலத்தில்  திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன.  அங்கு வரும் பிள்ளைகளுக்கு கற்பித்தவர்கள் குருவாகவும், மாணவர்கள் சீடர்களாகவும் அழைக்கப்பட்டனர்.

காலப்போக்கில் ஊருக்கு ஊர் பாடசாலைகள் தொடங்கியதும் குருவானவர்கள்  உபாத்தியாயர் என்றும் வாத்தியார் என்றும் அழைக்கப்படலாயினர்.  கிராமங்களில் பெண் ஆசிரியைகளை வாத்திச்சி என்றும் கூப்பிட்டார்கள். நான் ஆரம்ப பாடசாலையில் படித்த காலத்தில் சில ஊர்களில்  ஆசிரியை, அக்கா எனவும் அழைக்கப்படலானார்.

அமெரிக்க மிஷனரிமார் வரத்தொடங்கி, ஆங்கில பாடம் பிரதான இடத்தைப்பெற்றதும் சேர்,  மாஸ்டர், ரீச்சர், மிஸ் என்று மாணவர்கள் அழைக்கத்தொடங்கினர்.

பிள்ளைகள்,  வீட்டில் பெற்றோருக்கு அடுத்து, வெளியே அதிகநேரம் இருப்பது இந்த ஆசிரிய சமூகத்துடன்தான்.

பல்கலைக்கழகங்கள் அறிமுகமானதும்  அங்கு கற்பித்தவர்கள்  பட்டம் பெற்றவர்களாக கலாநிதிகளாவும்  பேராசிரியர்களாகவும்  மாறினார்கள்.   இலங்கையில் நாம் கலாநிதிகள் என்று அழைத்துக்கொண்டிருந்தோம். அயலில் தமிழ்நாட்டில் அவர்களை  டாக்டர்கள் என அழைத்தார்கள்.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் -06 வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ! தினக்கூலி ஏழு ரூபா ஐம்பது சதம் தந்த வெளிநாட்டு குதிரைகள் !! முருகபூபதி


 “ ஓடுவது எப்படி எனச்சொல்பவர்கள்தான்  விமர்சகர்கள்!  “ என்று  இலக்கிய உலகில் பலரும் பேசத்தொடங்கிய கால கட்டத்தில்,  நானும்  சிறுகதைகள், செய்திக்கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருந்தேன்.

எதனையும் தாங்களாகவே ஆக்கபூர்வமாகச்செய்யாமல், மற்றவர்களின் உருப்படியான செயல்களில் குறைகண்டுபிடித்து தங்களை மேதைகளாக்கிக்கொள்பவர்கள்,  அன்றும் இருந்தார்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள்.

            

முகநூல் கலாசாரம் வந்தபின்னர் இந்த விமர்சகர்களின் தொல்லை அதிகரித்துவிட்டமையும் கண்கூடு.

எவரும் எவரையும் விமர்சிக்கலாம் எனச்சொல்லி,  அதற்கும் ஜனநாயக மரபைச் சூட்டிவிடுவார்கள்.

மல்லிகை, பூரணி , புதுயுகம் ஆகிய இதழ்களில் எனது ஆரம்பகால சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தபோது, வீரகேசரியிலும் மித்திரனிலும் எனது செய்திகளும் செய்திக்கட்டுரைகளும் பிரசுரமாகிக்கொண்டிருந்தன.

நிருபர் பணியிலிருந்து சொற்ப வருமானம்தான் வந்தது.  வாழ்க்கை படகை செலுத்துவதற்கு அந்த வேதனம் போதாது. நிருபராக இயங்கியவாறு வேலை தேடும் படலத்திலும் ஈடுபட்டேன்.

எங்கள் ஊர் முஸ்லிம் நண்பர் ஒருவரின் உறவினரான பிரபல கொழும்பு வர்த்தகர் முக்தார் பெரிய கோடீஸ்வரர்.  அவர் குதிரைப்பந்தயத்திற்கு பணம் செலுத்துபவர்களினால் செல்வந்தரானவர்.

படித்தோம் சொல்கின்றோம்: காற்றுவெளி – மொழிபெயர்ப்புச்சிறப்பிதழ் வாசிப்பு அனுபவத்திற்கு புதிய வாசல்களை திறந்திருக்கும் சிற்றிதழ் ! முருகபூபதி



இங்கிலாந்திலிருந்து  எழுத்தாளர் முல்லைஅமுதன் நீண்டகாலமாக வெளியிட்டுவரும் காற்றுவெளி  இம்மாதம்                ( 2020  ஆவணி )  மொழிபெயர்ப்பு சிறப்பிதழாக வெளியாகியுள்ளது.      

இவ்விதழில்  ( அமரர்கள்  ) பெரி.சண்முகநாதன்,  எம்.எச்.எம்.ஷம்ஸ் ஆகியோர் மொழி பெயர்த்த துருக்கிய கவிதை  (நஸீம் ஹிக்மத்/துருக்கி), சிங்கள கவிதை (பராக்கிரம கொடிதுவக்கு ) என்பனவற்றுடன்,

அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..) முனைவர்.ர.ரமேஷ் (சந்திரா மனோகரன்), வ.ந.கிரிதரன் (பிஷ் ஷெல்லி, கவிஞர்.பைரன்), லதா ராமகிருஷ்ணன்(அன்னா அக்மதோவா), ராஜி வாஞ்சி(பிரான்ஸிஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்பர்),  பேராசிரியர். மலர்விழி. கே (மூட்னகூடு.சின்னச்சாமி/பா.தென்றல்),தமிழ்க்கிழவி(அஜித்.சீ.ஹேரத்/டீ.பிரீத்தி,எம்.கல்பனா,கூம்பியா,பேராசிரியர்.கிளார்க்),கோகிலவாணி தேவராஜா (லாரா ஃபெர்ஹஸ்/ அனிருத்தன் வாசுதேவன்),சுகிர்தா சண்முகநாதன்(ரேசா சைய்ச்சி/பேர்சிஸ்),  முருகபூபதி ஆகியோரும் எழுதியுள்ளனர்.

மு.தயாளன் ( மாக்சிம்.கார்க்கி),  மதுரா  (Nichanor parra/ Miller Williams  ), சாந்தா தத் (எம்.எஸ்.சூர்யநாராயணா),க.நவம்(’Things you didn’t do!’), ஆகியோரின் படைப்புக்களும்  வெளிவந்துள்ளன.

பிறமொழி கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளும்  இடம்பெற்றிருப்பதனால், முடிந்தவரையில்  இதனை முழுமையான சிறப்பிதழாக்க  முயன்றிருக்கும்  ஆசிரியர் கவிஞர் சோபா அவர்கள் பாராட்டுக்குரியவர்.

படித்ததில் பிடித்தது ! பணம் சேர்ப்பது போல நண்பர்களையும் உறவுகளையும் சேர்க்க வேண்டும் !! தமிழ்நாடு மல்லிகை மகள் பத்திரிகையில் வெளியான டாக்டர் Sarav Urs அவர்களின் 'உறவுத்திரைகள்' கட்டுரை..! அனுப்பியவர்: கோபாலன் பத்மநாபன். கேளம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு

'எனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கு, எனக்கு யாருமே தேவை இல்லை'...

 

- இப்படித்தான் அந்த 65 வயது பெரியவர் ஆரம்பித்தார். கொஞ்சமா ஆல்கஹால் எடுத்திருந்தார் போல. நிலையில்லாமல் இருந்தார். ஒரு 15 நிமிடம் அவரோட 65 ஆண்டு கால வாழ்க்கையை பெருமிதத்தோட சொல்லி முடித்தார். சின்னவன் ஆஸ்திரேலியால இருக்கான். பொண்ணுங்க 2 பேர், ஒருத்தர் சென்னைல குடுத்திருக்கேன். இன்னொருத்தி பூனேல இருக்கா. மாப்பிள்ளை மிலிட்டரில இருக்கார். பெரியவன் என் கூட இருக்கான். நிறைவான வாழ்க்கை, என்றார்.

  


இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய்விட்டு வந்திருப்பார்கள் போல. நிறைய நகைகளும் பட்டுபுடவை, வேஷ்டியுமாக ஒரு செழிப்பு அவர்கள் உடையில் இருந்தது. மிகுந்த கனிவுடன் பேசினார்கள், தங்கள் உடல் உபாதைகளை சொன்னவர்கள், பின் தாங்கள் ஒரு ஆசிரியர் குடும்பம் என்றார்கள். மகன்கள், மகள், மனைவி, பெரியவர் என அனைவரும் ஆசிரியர்கள்.

 

சர்க்கரை நோய்க்கு மருந்தெடுப்பதால் அவரை தொடர்ச்சியாக பார்த்து வந்தேன். ஊரில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்க தொடங்கிய காலம் அது. அவர் முன்னாளில் எப்பொழுதோ வாங்கிய நிலம் நல்ல மதிப்பு மிக்கதானது. தன்னை வெல்ல யாரும் இல்லை என்றும் மற்றொரு நாள் சொல்லி சென்றார், பெருமிதமாகவே இருந்தார்.

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 50 முருகபூபதி

தமயந்தியும், உதயசங்கரும்  சென்றபின்னர்,  அபிதாவின் பொழுதுகள்  அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்வதிலேயே கழிந்துவிட்டது.

 “ அபிதா அறுசுவை… எப்படி இருக்கிறீங்க…? ஒரு கலியாண வீட்டுக்கு சாப்பாட்டு ஓடர் இருக்கிறது.  தலைக்கு எவ்வளவு என்ற கணிப்பா,   எத்தனை கறி ,  என்ன மாதிரியான கறி,  சைவமா… மச்சமா…  என்ன  அடிப்படையில்   சார்ஜ்  சொல்வீர்கள்…?  “ மறுமுனையிலிருந்து  சுபாஷினி கிண்டலடித்தாள்.

 “ இப்போதுதான் மஞ்சு நக்கலடித்தா…. அடுத்து நீங்களா…?  போனவிடயம் சரியா… யாருக்கு கலியாணம்…?  யாருக்கு முதலில்...? உங்களுக்கா…? மஞ்சுவுக்காக…?  “ எனத் திருப்பிக்கேட்டாள்  அபிதா.

 “ பேச்சுவார்த்தை தொடருது.  முதலில் என்னுடையதை முடிப்போம் என்று அம்மாவும் தம்பியும் சொல்றாங்க அபிதா.  அம்மாவுக்குத் தெரியும்தானே… இன்னமும் ஆஸ்த்மா தொல்லையினால் அவதிப்படுறாங்க.  கெதியா போய்விடுவோமோ என்ற பயம் அம்மாவுக்கு வந்துவிட்டது.  இந்த நோய்… நித்திய கண்டம் பூரண ஆயுசு மாதிரித்தானாம். என்ர அம்மாவின் கதை கிடக்கட்டும் அபிதா,  நீங்கள் காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் நல்ல வடிவாக இருந்தீங்க…?  மஞ்சு  ரீவி பார்த்திட்டு சொன்ன பிறகுதான் நானும் அந்த செனலை போட்டுப்பார்த்தேன்.  ஜீவிகாவும் ஜெயசீலனும் உங்களுக்கு ஒரு புதிய வழியை காண்பித்திருக்கிறாங்க.  இனி நீங்களும் கொழும்போடு போய்விடலாம்… இல்லையா…?  “