மரண அறிவித்தல்

 

        தெய்வத்திரு நவரட்ணம் சுப்பிரமணியம்

                                             

 


யாழ்,  அனலை தீவை பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா மெல்பனை  வதிவிடமாகவும் கொண்டிருந்த  

 

         தெய்வத்திரு. நவரட்ணம் சுப்பிரமணியம்

            (Founder NAVA Electronics & Nartchi Enterprise)

அவர்கள்  19-04-2023  அன்று  இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் -  சிவகாமி தம்பதியரின் அன்பு மகனும்,

 காலம் சென்ற  திரு,  திருமதி  கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும், மகாலட்சுமியின் பாசமிகு கணவரும்,  காலம் சென்ற செல்வரட்ணம்,  பராசக்தி , மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின்  அன்புச் சகோதரனும் ஆவார்.

 

நவநீதன் , நவசீலன் ,தட்சினி , தருமினி, சங்கீதா ,நவதீபன் நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் மதிவதனா, பூமகள்,  ரவிகணேஷ் ,முகுந்தன் , அருணன், மது , சசிக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அனுஜன், அஜித்தன், அபிஷன், வைஷ்ணவி, கிருஷ்ணவி, விஷாலி, சஹானா,  அபிநயா,  அரன், சனுக், ஆயுஷ்மான், ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

                               அன்னாரின்  இறுதி நிகழ்வுகள் 25/04/2023 செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மெல்பனில்   Fawkner Memorial Park, Hadfield VIC 3046 இல் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், ,உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

                               தகவல் -  தொடர்புகளுக்கு

நீதன் +61412588375    ----                             சங்கீதா +61403498329

 

ரமணா பகீரதனின் மிருதங்க அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 . 

உயர்ந்த இசையே எம்மை எல்லாம் தெய்வீகத்தை உணர வைப்பது. நாதம் நம்மை கட்டிப்போட்ட ஒரு இசையின் உன்னதத்தில் எம்மை இழந்தோம். சென்ற சனிக்கிழமை 15.04.2022 அன்று Sydney Reverside theater ல் இடம்பெற்ற அரங்கேற்றம் தான் அது.

இது என்ன ஒரு அரங்கேற்றமா. மிருதங்கத்தை இசைத்த இளம் கலைஞன் ஒரு தேர்ந்த வித்துவானாக அங்கு விளங்கினான். மிருதங்க சக்கரவர்த்தியாக திகழ்ந்த பாலக்காட்டு மணி அவர்கள் பாரம்பரியத்திலே "கலைமாமணி" ரி ஆர் சுந்தரேசனை குருவாகப் பெற்றான். பல சாதனைகளை படைத்த குருவின் பூரண ஆசியை பெற்று கலையை கற்றான் இளைஞன். அவர் ஆசியுரை வழங்கும் போது மன நிறைவுடன் "அவன் திறமையை அவனது வாசிப்பு பேசியது" என்று கூறி மகிழ்ந்தார்.

அரங்கேற்றத்திற்கு இசை கலைஞராக வந்தவரோ நம்மையெல்லாம் தன் நாதத்தால் மகிழ்வித்த ரி எம் கிருஷ்ணாவின் சிஷ்யர். இன்று உயர்ந்த இளம் கலைஞராக மிளிரும் விக்னேஷ் ஈஸ்வர். எடுத்த எடுப்பிலேயே கச்சேரி களை கட்டியது. வயலின் இசை வழங்கியவர் மதன் மோகன். இளைஞரான இவர் பல உயர்ந்த இசை கலைஞர் பலருக்கு அணிசெய் கலைஞராக விளங்கி வருபவர். கஞ்சிரா கலைஞர் அனிருத் ஆதி ஹேயா மிகப்பெரிய பாரம்பரியத்தில் தோன்றிய இளவல். பாரம்பரியம் பற்றி பேச தேவையில்லை. இந்த சின்ன வயதிலேயே நான் ஒரு பெரும் கலைஞன், அதை என் விரல்கள் பேசும் என, தன் வாசிப்பால் பல சாதனைகள் படைத்தவர். ரமணாவின் சகோதரி மதுவந்தி மிக அழகாக தம்புரா மீட்டினார்.

அஞ்சலிக்குறிப்பு : அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அயராமல் எழுதிய ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் மறைந்தார் முருகபூபதி

கடந்த 12  ஆம் திகதி  முற்பகல் நடைப்பயிற்சிக்கு


சென்றுகொண்டிருந்தபோது, கனடாவில் வதியும் எழுத்தாளர், இலக்கிய நண்பர் ஜெகதீசனிடமிருந்து,  எமது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் முதல் நாள்  நள்ளிரவு வவுனியாவில் மறைந்து விட்டார் என்ற  துயரமான செய்தி எனது மின்னஞ்சலுக்கு வந்தது.

அதனைப்படித்ததும்    அதிர்ச்சியில் மனம் நிலைகுத்தியது. தாமதிக்காமல்  “ என்ன நடந்தது..? “ எனக்கேட்டு எழுதினேன். சில நிமிடங்களில் பின்வரும் குறிப்பு வந்தது:

ஊடகவியலாளர் பாரதி ராஜநாயகத்தின் முகநூல் பதிவு

  “ நீண்ட காலமாக காலனுடன் போராடிக்கொண்டிருந்தவா். அவரது


மனத்துணிவுதான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.

மருத்துவமனையில் இருக்கும் போதும் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டுதான் இருப்பாா்.

மூன்று தினங்களுக்கு முன்னா் - ஞாயிற்றுக்கிழமை அவரைப் பாா்ப்பதற்காக ராமும் நானும் சென்றிருந்தோம்.

அவரால் பேச முடியவில்லை. ஆனால், நாம் புறப்படும் போது “இருங்கோ இருங்கோ கதைப்பம்” என்றாா். அவரது உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தது. ஆனால், இவ்வளவு விரைவாக விடைபெறுவாா் என்பது எதிா்பாா்க்காதது.

தன்னுடைய வாழ்நாள் சாதனையாக பல நுால்களையும் எழுதியிருக்கின்றாா். இன்னும் ஒரு நுால் தயாரிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனையும் முடித்து வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது.

கொஞ்சம் சுகமாக இருந்தாலும் கணினியைக் கொண்டுவரச் சொல்லி வேலையைத் தொடங்கிவிடுவாா் என்று அவரது மனைவி சொன்னா். வேலை மீதிருந்த பேராா்வமும் மனத்துணிவும்தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.  

 நண்பர் இராஜநாயகம் பாரதியின் மேற்கண்ட பதிவுடன் எனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

 வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் மாணிக்கவாசகம், வவுனியா பிரதேச நிருபராக இருந்தார்.  அவரது  கையெழுத்துக்களை,  முதலில் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தபோதும், அதன்பின்னர் 1984 தொடக்கம் 1987 தொடக்கம் வரையிலும் ஆசிரிய பீடத்திலிருந்தும்  பார்த்து வந்திருக்கின்றேன்.

 நான் ஆசிரிய பீடத்திலிருந்த சுமார் மூன்று ஆண்டுகள்  எனது கடமை நாட்களில்  தினம் தினம் தொலைபேசியில் பேசும் ஒருவராகவும் நண்பர் மாணிக்கவாசகம் திகழ்ந்தார்.

 அக்காலப்பகுதி வட, கிழக்கு பிரதேசங்கள் போர் மேகங்களினால் சூழப்பட்டிருந்தது. அத்துடன் ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் முப்படைகளுக்கும் பொலிஸாருக்குமிடையில்  அடிக்கடி  மோதல்கள் நடந்தன.

 ஆயுதப்படையினரின் தேடுதல் வேட்டை, சுற்றிவளைப்பு முதலான சொற்களே எங்கள் வீரகேசரியின் பெரும்பாலான செய்திகளின் தலைப்பாக அமைந்திருக்கும்.

 அவற்றை எழுதியவர்களில் ஒருவராக பி. மாணிக்கவாசகம் இருப்பார்.

 பிரசேத நிருபர்களுக்கு மாதச் சம்பளம் என்றில்லை.  அவர்கள் எழுதும் செய்திகள் வீரகேசரியில் வெளியானால் மாத்திரமே அதற்குரிய வேதனம் கிடைக்கும்.  அவர்களின் செய்திகள் அச்சில் வெளிவரும் பட்சத்தில், ஆசிரிய பீடத்தின் ஒரு மூலையில்,  பிரதம ஆசிரியர் – செய்தி ஆசிரியர் அமர்ந்திருக்கும் பகுதியில் செல்வி நிர்மலா மேனன் என்ற சகோதரி காலை, முதல் மாலை வரையில் அடிமட்டம்             (Foot Rule ) வைத்து செய்திகளை அளந்து,  அதற்குரிய வேதனத்தை  ஒரு பேரேட்டில் குறித்துக்கொண்டிருப்பார்.

 ஒரு பிரதேச நிருபரிடமிருந்து வரும்  செய்திகள் எத்தனை அடி நீளத்தில் எத்தனை அங்குலத்தில் அச்சில் வருகின்றதோ, அதற்கேற்பவே வேதனம் கிடைக்கும்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 60 பிலிப்பைன்ஸ் - சிபு தீவில் தந்தைக்கு இறுதி அஞ்சலி ! மகளுக்கு பிறந்த தினம் ! எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமமே வாழ்க்கை !! முருகபூபதி


ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் சொன்னால், அல்லது எழுதினால்,  அது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் !

வாழ்க்கையில் எதிர்பாராமல் நாம் சந்திக்கும் தருணங்களில் கிட்டும் அனுபவங்களை மறந்துவிட முடிவதில்லை.

நினைக்கத்  தெரிந்த மனதால், மறக்கவும் முடியாதிருப்பதுதான்


வாழ்வில் விந்தையானது.

2005 ஆம் ஆண்டு,  அடுத்தடுத்து இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து திரும்பியிருந்தேன்.  அந்த ஆண்டு மீண்டும் அங்கிருந்து  மெல்பனுக்கு திரும்பியபோது,  இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு விமானம் ஏறமாட்டேன் என்றுதான் நண்பர்களிடமும் உறவினர்களிடத்திலும் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

   “ எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை  என்று நான் அடிக்கடி சொல்வதற்கு, எதிர்பாராதவகையில்  எனது தனிப்பட்ட வாழ்விலும்,  எழுத்துலகிலும்  மற்றும் பொது வாழ்விலும் நிகழ்ந்த சம்பவங்கள்தான் பிரதான காரணம்.

வாழ்வு அனுபவங்கள்தானே பல உண்மைகளை மனதில் பதியவைத்து புத்திக்கொள்முதலைத்தருகின்றன.

புலம்பெயர் வாழ்க்கை என்பது சொர்க்கம் அல்ல. நானறிந்த சிலர் வெளிநாடுகளிலிருக்கும்  தமது பிள்ளைகளிடம் சென்று, அங்கே வாழப்பிடிக்காமல் திரும்பிச்சென்ற கதைகள் பலவற்றை அறிவேன்.

தாய் ஓரிடம், தந்தை ஓரிடம், மகன் ஒரு தேசம், மகள் மற்றும் ஒரு தேசம்.  சொந்த பந்தங்கள் எங்கெங்கோ வெவ்வேறு திசையில்.  நண்பர்கள் எங்கோ ?!   என்ற கவலை மறுபுறம்.

எமது தமிழ் சமூகத்தில் மரண அறிவித்தல்களை பார்த்தால், இறந்தவரின் மனைவி அல்லது   கணவர்   – மக்கள் – மருமக்கள் – பேரப்பிள்ளைகள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இற்றைக்கு 17 வருடங்களுக்கு ( 2006 ) முன்னர், இதே ஏப்ரில் மாதம் 10 ஆம் திகதி,  திங்கட் கிழமை எனக்கு ஒருநாள் ஓய்வு கிடைத்தது. அன்றைய நாளை எனது மருத்துவ பரிசோதனைக்காக ஒதுக்கியிருந்தேன். காலையில் ஒரு மருத்துவ ஆலோசனை நிலையத்திலும் மாலையில் ஒரு மருத்துவ நிலையத்திலும் நான் பிரசன்னமாகவேண்டியிருந்தது.

மனைவி மாலதியும் உடன்வருவதாக இருந்தது. காலையில் இரத்த பரிசோதனை இருந்தமையால், எதனையும் உட்கொள்ளாமல் வரச்சொல்லியிருந்தார்கள்.

வெறும் வயிற்றுடன் புறப்பட்டதனால், பரிசோதனைக்குப் பிறகு உண்பதற்காக உணவும் தயார் செய்துகொண்டு வீட்டைப்பூட்டியவாறு காரில் ஏறினேன்.

அப்போது வீட்டினுள்ளே  தொலைபேசி அழைப்பு வந்தது.  இந்த நேரத்தில் யார்…? வெளியே சென்ற பிள்ளைகள் அவசரமாக தொடர்புகொள்ளக்கூடும் என்ற எண்ணத்தில்,  காரை விட்டு இறங்கி வந்து கதவைத்திறந்துகொண்டு தொலைபேசி அருகே செல்கிறேன். அது தொடர்ந்து ஒலிக்கிறது.

மறுமுனையில் மனைவியின் தம்பி விக்னேஸ்வரன் சொன்ன செய்தியால் அதிர்ந்துபோனேன்.     “ அப்பா இறந்துவிட்டார்.  “ என்றார் அவர்.

 “ எங்கே..?  

“ பிலிப்பைன்ஸில். 

  நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்..? 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான இயல்விருது பெறும் எழுத்தாளர் லெ. முருகபூபதி ! செங்கதிரோன்


கனடா  ‘ தமிழ் இலக்கியத்தோட்டம் ’ (TAMIL LITERARY GARDEN) 2001 இலிருந்து ஆரம்பிக்கப்பட்டு,  வருடா வருடம் வழங்கிவரும் வாழ்நாள் சாதனையாளர் இயல்விருது (2022ஆம் ஆண்டிற்கானது) இம்முறை அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களுக்கு வழங்கத்                               தீர்மானிக்கப் பெற்றுள்ளது.

உலகெங்கும் பரந்துபட வாழ்கின்ற தமிழ் இலக்கிய                        நெஞ்சங்களிலெல்லாம் மகிழ்ச்சிப் பிரவாகம்                   பொங்கியெழச்செய்கின்ற செய்தி இது. 

காரணம் முருகபூபதி அவர்கள் ஒரு சர்வதேச தமிழ் இலக்கிய சமூகச்


செயற்பாட்டாளர். சர்வதேசமும் அறிந்ததோர் ஆளுமை.                   மிகமிகப்பொருத்தமானவருக்கே இவ்விருது வழங்கப் பெறுதலால் முருகபூபதி மட்டுமல்ல முருகபூபதியுடன் இணைந்து இவ்விருதும் பெருமை பெறுகிறது என்பது மிகைப்பட்ட கூற்றல்ல.

அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எழுத்தூழியத்தில்        இயங்கிக் கொண்டிருப்பவர். ஊடகவியலாளராக – பத்திரிகை எழுத்தாளராக – படைப்பிலக்கியவாதியாக என்று பல தளங்களில் தடம் பதித்தவர். கலை, இலக்கிய, ஊடகச் செயற்பாடுகளுக்கும் அப்பால் சமூகசேவையிலும் நாட்டம் கொண்டு செயற்படுவர். 

அரசியலைப் பொறுத்தவரை தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலிலும் ஈடுபடாமலே,  இடதுசாரிச்   சித்தாந்தங்களின்பால் ஈர்ப்புக்கொண்டு இயங்கிய ஓர்             அரசியல் போராளி.

இலங்கையின் வடமேல் மாகாணத்தின் கடலும் கடல்சார்ந்த  பிரதேசமுமான நீர்கொழும்பில் 13.07.1951 இல் பிறந்து – நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில்   (தற்போதுவிஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) ஆரம்பக்           கல்வி பெற்று – யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் (தற்போது கனகரத்தினம் மத்திய கல்லூரி) மற்றும் நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வியைத் தொடர்ந்தார்.

‘வீரகேசரி’ப் பத்திரிகையில் 1977இல் ஒப்புநோக்குனராக இணைந்த இவர்,  தனது உழைப்பினாலும், எழுத்துத் திறமையினாலும் அப்பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் அமர்ந்தார்.

இலக்கிய உலகிற்குத் தன்னை அறிமுகப்படுத்தியதோடு          தொடர்ந்தும் இவரது ஆக்கங்களுக்கும் களம் கொடுத்த ‘மல்லிகை’ சஞ்சிகையையும் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் இன்றளவும் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூருபவர்.

1972 ஆம் ஆண்டு ‘மல்லிகை’ யின் நீர்கொழும்புப் பிரதேச சிறப்பிதழிலேயே இவரது முதலாவது ஆக்கம்                வெளிவந்தது.

நான்கு ஆண்டுகளும் – ஓராண்டும் ! நீதியில்லா நாட்டில் நாதியற்றவர்களின் ஓலம் !! அவதானி


இம்மாதம் சித்திரைப் புத்தாண்டுடன், இலங்கை வரலாற்றில் இரண்டு விடயங்கள் கவனத்திற்குள்ளாகின்றன.

2019 ஆம் ஆண்டு இதே  ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று,  இலங்கையில்  மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும்  மூன்று நட்சத்திர விடுதிகளிலும்   சில தற்கொலைக் குண்டுதாரிகளினால்   நடத்தப்பட்ட  தாக்குதலில் 277 பேர்  கொல்லப்பட்டனர்.

 

நானூறுக்கும் அதிகமானோர்  படுகாயமடைந்தந்தனர்.

40 வெளிநாட்டவர்களுடன்  45 பிள்ளைகளும் இந்த பயங்கரவாதத்


தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

 

ஆயினும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.  கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர்,  அச்சம்பவம் நடந்த காலத்தில் அந்தப்பதவியில் இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. பிரதமராக இருந்தவர் இன்றைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கா.

 

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன. குறிப்பிட்ட பதவிகளில் இருந்தவர்கள் தேர்தல்களின் மூலம் மாறினர்.

 

எம்.பி. பதவியே இல்லாமல் இருந்த கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானர்.  அவர் வெளியேறியபோது,  எம். பி. பதவியே இல்லாதிருந்த ரணில் விக்கிரமசிங்கா, சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் தற்போது ஜனாதிபதியாகியிருக்கிறார்.

 

ஈஸ்டர் தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இவ்வேளையில்  சற்று திரும்பிப் பார்த்தால்,  என்ன நடந்திருக்கிறது..?  என்பது நினைவுக்கு வரும்.

 

அச் சம்பவங்கள்  நடந்தபின்னர், அன்றைய ஜனாதிபதி மைத்திரியால் நியமிக்கப்பட்ட  விசேட ஆணைக்குழுவின் அறிக்கை, புதிதாக  ஜனாதிபதி பதவிக்கு வந்த கோத்தபாய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

 

அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதில் நீடித்த தாமதங்களினால்,  ஆண்டகை மல்கம் ரஞ்சித் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஜனாதிபதி பதவிக்கு வந்த  கோத்தாவும், அந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார்.

 

இக்குழுவின் தலைவராக அப்போதிருந்த  இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அக்குழுவின்

உறுப்பினர்களாக  அன்றிருந்த  அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அன்னை இல்லம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தன்னுடைய தந்தை, தாய், சகோதரர்கள் எல்லோருடனும் கூட்டு


குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த சிவாஜி கணேசன் அந்த வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பேர் சூட்டி மகிழ்ந்திருந்தார். அதே சமயம் தன்னுடைய நண்பர்களை படத் தயாரிப்பாளர்களாக மாற்றி அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கி படங்களை தயாரிக்க செய்து அவற்றில் நடித்தும் வந்தார்.


இதன் காரணமாக சிவாஜியின் தாயின் பேரில் ராஜாமணி பிச்சர்ஸ் ,

பிள்ளைகள் பேரில் பிரபுராம் பிச்சர்ஸ், மகளின் பேரில் சாந்தி பிலிம்ஸ் , என்று திடீர் திடீர் என்று பட நிறுவனங்கள் தலை தூக்கின. அவ்வாறு 63ம் ஆண்டு உருவான பட நிறுவனத்துக்கு சிவாஜியின் மனைவி கமலாவின் பேர் வைக்கப்பட்டது. கமலா பிலிம்ஸ் தயாரித்த படத்துக்கு சிவாஜியின் வீட்டின் பேரான அன்னை இல்லம் என்று பேர் வைக்கப்பட்டது. இதில் இருந்து இது ஒரு குடும்பப் படம் என்பதும் உறுதியானது!

வசதி இருந்த காலத்தில் ஊருக்கு வாரி கொடுத்த தனவந்தர் பரமசிவம் அதன் காரணத்தால் ஓட்டாண்டி ஆகிறார். போதாக குறைக்கு கொலைக் குற்றமும் அவர் மீது சுமத்தப் பட்டு தலை மறைவாக வாழ்கிறார். அவருடைய மூத்த மகன் குமார் அவருடனும், இளைய மகன் சண்முகம் தாய் கௌரியுடனும் வாழ்கிறார்கள். பரமசிவத்தின் இயலாமையை நயவஞ்சகனான ரத்னம் பயன்படுத்தி அவரை அடக்கி ஆள்கிறான். குமாருக்கும் வக்கீல் ராமநாதனின் மகள் கீதாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. அதே சமயம் பரமசிவம் மீது ரத்னத்தின் சதியால் கொலைப் பழி விழுகிறது. தூக்கு மேடை ஏற அவர் காத்திருக்க அவரை காப்பாற்ற குமார் பாடுபடுகிறான். குடும்பம் மீண்டும் அன்னை இல்லத்தில் மகிழ்வுடன் இணைந்ததா என்பதே மீதிக் கதை.

படத்தின் கதையை தாதாமிராசி எழுத , திரைக் கதையை ஜி பாலசுப்ரமணியம் உருவாக்க ஆரூர்தாஸ் வசனங்களை தீட்டினார். அவரின் வசனங்கள் அர்த்தபுஷ்டியுடன் அமைந்தன. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் இயற்ற திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் சூப்பராக இசையமைத்திருந்தார். மடி மீது தலை வைத்து விடியும் வரை பேசுவோம் பாடல் சுசிலா டி எம் எஸ் குரலில் சுகமாக ஒலித்தது. எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் காதல் சுவையுடன் அமைந்தது.

இந்தப் படத்தில் அமைத்த நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது பாடல் தான் தமிழில் வந்த ஈவ் டீசிங் , கல்லூரி பெண்களை கேலி செய்யும் முதல் பாடல் எனலாம்!

படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு நல்ல வாய்ப்பு . எல்லா வித உணர்ச்சிகளையும் காட்டும் சந்தர்ப்பம். ரங்காராவுடன் ஆவேசமாக வாதாடும் காட்சி அருமை. ரங்காராவும் ஈடு கொடுத்து நடிக்கிறார். உங்கள் வாக்குக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்று சிவாஜி வெடிக்கும் காட்சி அருமை. பணக்கார வீட்டு செல்லப்பிள்ளையாக , பொறுப்பில்லாமல் வளரும் ஒருவன் அநாதரவாக நிற்கும் போது படும் துன்பங்களை சிவாஜி நன்கு வெளிப்படுத்தியிருந்தார். 63ம் ஆண்டு வந்த பெரும்பாலான படங்களில் எம் வி ராஜம்மா தான் அம்மா. இதிலும் அவரே அன்னை. அதே நடிப்பு.

அவள் சிறந்தவள் தான்! - க.ஷியா

 .

யாரையோ ஒருவரைப் பற்றிவிமர்சித்து விட்டுஅந்த வகையில் நீ சிறந்தவள் என்று விட்டுப் போகும் பக்கத்து வீட்டுப்

பாட்டிக்கு என்ன தெரியும்
அவள் மனப் புழுக்கள் பற்றி....
முக்கியத்துவம் தருவதாகச்
சொல்லி கூடவே நின்று கணங்களாய்
போனவர்களுக்கு
என்ன தெரியும் அவள் வெதும்புவது பற்றி...
அனுவசைவுக்கும் அழைப்பு
விடுத்தவர்கள் எல்லாம்
அவள் தனிக்கையின் குருடராய் போன
பின் என்ன தெரியும் அவளிடம்
கொண்ட குணங்கள் பற்றி....
நலமா என்ற வாசகங்கள்
கூட நல்லடக்கம் செய்யப்பட்ட
பொழுதுகளைத் தான் அவள் கடக்கிறாள்
அந்த வகையில் அவள்
சிறந்தவள் தான்
அவளைத் திமிரென்றும்
அடங்காப்பிடாரி என்றும்
மதிக்கத் தெரியாதவள் என்றும்
கணிக்கத் தெரிந்த அவர்களுக்கு
அவளுக்குள்ளும் ஒரு மனமிருக்கிறது
என்பதை உணர மறந்த உங்களை விடவும்
அவள் சிறந்தவள் தான்....
இன்னமும் உங்களிடம்
யாசகம் கேட்காத வரை...
இன்னமும் அவளது நெருப்பு இருக்கையை
புலனப்படுத்தாத வரை...
இன்னமும் அவளது பட்டினிச் சுருக்கங்களை உங்கள் முன் விரிக்காதவரை....
இன்னமும் உங்கள் கைப்பாவையாகாதவரை...
அவள் சிறந்தவள் தான்!
இன்னமும் நீங்கள் அவள் பற்றி
சிந்தித்திடாதவரை....
இன்னமும் நீங்கள் அவளுக்கு கருணை
வீசாதவரை ....
இன்னமும் உங்களிடம் அகப்படாதவரை
இன்னமும் உங்களுக்கு வெட்கம்
வெளிப்படாதவரை உங்கள் புத்திக்குத் திமிரானவள்
அவள் சிறந்தவள் தான்!

Srilankan Australians ( Inc ) Presents மெல்பனில் புத்தகம், ஓவியம், ஒளிப்படம் கண்காட்சி



அவுஸ்திரேலியாவில் வதியும் மூவினங்களையும் சேர்ந்த இலங்கை எழுத்தாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக் கலைஞர்களின்  படைப்புகளை ஓரிடத்தில் கண்டு களிக்கவும் கலந்துரையாடுவதற்குமான அரங்கம் .

இம்மாதம் 30 ஆம் திகதி ( 30-04- 2023 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணி முதல் மாலை 5-00 மணி வரையில்.

 CLAYTON HALL – 264, Clayton Road, Clayton , Victoria – 3168.

                                     அனுமதி இலவசம்

  கலை, இலக்கிய ஆர்வலர்கள்,  ஊடகவியலாளர்கள், ஓவியர்கள்,  ஒளிப்படக்கலைஞர்கள்,   ஆசிரியர்கள், மாணவர்கள் அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு :  முருகபூபதி – 0416 625 766                letchumananm@gmail.com

 


https://www.facebook.com/100064901346167/posts/pfbid02TwvkbfcAVet73L9HUqxZK9oHBcj6xobWwwaN2wZfsptwMqE8AeSL4AgfM7dfrNN7l/?sfnsn=mo&mibextid=6aamW6

இலங்கைச் செய்திகள்

ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இப்புத்தாண்டு மலரட்டும் 

தமிழ், சிங்கள புத்தாண்டு தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும்

இந்திய உயர் ஸ்தானிகரால் இப்தார் வைபவம்

வேகமாக பரவும் காய்ச்சல் இதுவரை 15 பேர் மரணம்

அரசின் நிலைப்பாடுகள் குறித்து சர்வதேசத்துக்கு அமைச்சர் விளக்கம்


ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இப்புத்தாண்டு மலரட்டும் 

Friday, April 14, 2023 - 6:00am

- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுவருட வாழ்த்து

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

தாய்வானை சுற்றி சீனா போர் ஒத்திகை

உலகின் இரண்டாவது பெரிய கையடக்க தொலைபேசி உற்பத்தியாளராக இந்தியா

மியன்மார் இராணுவத்தின் வான் தாக்குதலில் 100 பேர் வரை பலி 

சவூதி தூதுக்குழு யெமன் ஹூத்திக்களுடன் பேச்சு

சீனாவை அடுத்து பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா பாரிய போர் ஒத்திகை


தாய்வானை சுற்றி சீனா போர் ஒத்திகை 

தாய்வானுக்கு அருகில் போர் ஒத்திகை மேற்கொண்டு வரும் சீனா அதன் மூன்றாவது நாளான நேற்று (10) தாய்வானை முற்றுகையிடுவதை உருவகப்படுத்தும் வகையில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் தமிழின் அழகை ஆய்வு செய்து அறிந்து கொண்ட மாணவர்கள்



‘தமிழை
நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்ற முழக்க வரியோடு வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு தொடங்கப்பட்ட தமிழ்மொழி விழா 2023 தன்னுடைய பதினேழாவது ஆண்டு விழாவை இவ்வாண்டு சிங்கப்பூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த விழாவின் ஓர் அங்கமாக

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (சிங்கப்பூர்) பத்தாவது ஆண்டு நிகழ்வு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி மாலை மிகச் சிறப்பாக நடந்தேறியது. இவ்வாண்டு தமிழ் மொழி விழாவின் கருப்பொருள் ‘அழகு’ என்பதால் அதனை ஒட்டி ‘தமிழின் அழகே அழகு’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி அரங்கேற்றம் கண்டது.

நிகழ்ச்சியின் முதல் அங்கமாக ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை மிக அழகாகப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் செல்வி. கிருத்திகா பாலாஜி. அடுத்ததாக, நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார் சங்கத்தின் தலைவர் திரு. கருணாநிதி அவர்கள். தமிழ்ப் பணி, நூலகப் பணி, கலைப் பணி என்று பல்வேறு பணிகளை 24 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆற்றி வரும் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றியும், தமிழை வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தொடர்ந்து முயன்று வருவதையும் எடுத்துரைத்ததோடு முடிந்த அளவில் பிறமொழிகலவாமல் தமிழைப் பேச வேண்டும் என்ற சிந்தனையையும் அவர் பகிர்ந்துக்கொண்டார். இதனையடுத்து, தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் பல்வேறு செயல்களை முன்னெடுத்து முனைப்புடன் தொடர்ந்து பங்காற்றி வரும் சங்கத்தின் நெடிய பயணத்தின் காணொளித் தொகுப்பு கண்டவரின்கண்களுக்குக் காட்சி விருந்தாக அமைந்தது.

சிங்கப்பூரில் தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலைப் பெற செய்வதோடு மாணவர்களிடையே தமிழ்ப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதே தமிழ் மொழி விழாவின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், தமிழில் உள்ள இலக்கியங்களின் சுவையை அறிந்து கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளில் மாணவர்களுக்கான போட்டிகளை மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் ‘தமிழின் அழகே அழகு’ என்ற தலைப்பில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் உள்ள அழகியல் கூறுகளை ஆய்வு செய்து கட்டுரை படைக்க உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களிடையே போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பன்னிரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள்கலந்துக்கொண்டு தங்களது பங்களிப்பினைவழங்கினர்.