‘உயிரோடிருந்த போது புகழ்மொழியைச் சொல்ல முடியவில்லை’ – வைரமுத்து இரங்கல்!


Image result for jayalalitha

.


சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.”
“அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் ‘அம்மு’ என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர் வேட்பாளர்’ என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை.”
“போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப்பெருமையைக் கரைத்துக்கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.”

செல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திருமதி மாலதி சிவசீலன்

.


அண்மையில் இலங்கையிலிருந்து வருகைதந்த செல்வி வைஷாலி யோகராஜா அவர்கள் சிட்னியில் இரண்டு கர்நாடக இசை கச்சேரிகளை வழங்கினார்.
செல்வி வைஷாலி சிறுவயதிலிருந்தே கர்நாடக இசையை பயின்று வருகிறார். இவர் இலங்கையில் பல விருதுகளையும், பாரட்டுக்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக 2014ம் ஆண்டுககான 'ஜீனியா சுப்பர் ஸ்டார்' விருதினையும், 2015ம், 2016ம் ஆண்டுக்கான 'Best Solo Singer' என்ற ஜனாதிபதி விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (4/12/2016) அன்று திரு திருமதி கேதீஸ்வரனின் யோகராஜனின் இல்லத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட செல்வி வைஷாலி யோகராஜனின்  கர்நாடக இசைக் கச்சேரிக்கு சங்கீத ஆசிரியையான என்னையும் அழைத்திருந்ததின் பேரில் அங்கு சென்றிருந்தேன். அங்கு சங்கீத ஆர்வலர்களும், பிரியர்களும், ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியின் இசைக் கச்சேரியா? என்ற கேள்வுடன் தான் நான் அங்கு சென்றிருந்தேன். இரண்டு வீணைகளும், ஒரு தம்புராவும் அலங்கரித்த ஒரு மேடை ஒழுங்கில் பக்கவாத்தியக் கலைஞர்களான திரு கிராந்தி கிரன் முடிகொண்டா அவர்கள் வயலினுடனும், திரு  சந்தானக்கிருஷ்ணன் சிவசங்கரி அவர்கள் மிருதங்கத்துடனும் அமர்திருக்க, பாவாடை சட்டையுடன் அவைக்கு வணக்கம் சொல்லி வைஷாலி அவர்கள் 'ஹம் கணபதே' என்ற ஹரிகேச நல்லூர் முத்தையா கிருதியை அந்தச் சிறுமி அவைக்காற்றிய முறையில் இது இந்த வயதுக்குரிய ஆற்றல் அல்ல என்பதையும், அதற்கு மேலாக தெய்வத்தின் ஆசி பெற்ற ஒரு 'ஞானக்குழந்தை' இவர் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பின் 'கற்பக மனோகரா' என்ற பாபநாசம் சிவனின் மலையமாருத கிருதியைப் பாடி முழு சபையையும் தன் இனிய குரலினால் கட்டிப் போட்டார்.


அம்மாவிற்கு கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா ?

.

இலங்கைச் செய்திகள்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி யாழ்நகரில் கடையடைப்பு

அம்மாவின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி...! 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி வடமாகாண சபைக் கொடிஅரைக்கம்பத்தில் ; முதல்வர் சீ.வி. இரங்கல்

தமிழக முதல்வரின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி

ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு வாபஸ்

த.தே.கூ. வின் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு மரணத் தண்டனை

உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

கருணா அம்மானுக்கு பிணை.!

யாழ்.பல்கலை மாணவர்கள் மோதல் ; வழக்கு விசாரணை முடிவு

வவுனியா தினச்சந்தையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு.!

வவுனியாவில் நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் அதிரடியாக கைது

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்கள்  ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சங்கிலி பேரணி

பெண்கள் மற்றும் சிறுவர் உரிமையை பாதுகாப்போம் ; ஹட்டனில் கவனயீர்ப்பு பேரணி

 கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கவனயீர்ப்புக்கு போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்து வேட்டை


புரிதலும் பகிர்தலும் --அருண். விஜயராணி நேர்காணல் -

.
 " ஒரு  பெண்  குழந்தையைப்  படிப்பித்தலே  ஒரு நாடு  செய்யக்கூடிய   சிறந்த  மூலதனம்"
" நம் மரபு பற்றி  நமக்கே  ஒரு  பெருமை  இருக்க  வேண்டும் "


( இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் நேர்காணல் தொகுப்பில் வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை  இலக்கியவாதியானதன்  பின்னர், அருணகிரி அவர்களை மணந்து  அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.
அவரது ஓராண்டு நினைவு அஞ்சலி காலத்தில் இந்த நேர்காணலும் பதிவாகிறது. )

கேள்வி:   இலங்கையிலும்  இங்கிலாந்திலும்  வாழ்ந்து  தற்போது அவுஸ்திரேலியாவில்  குடியேறியிருக்கிறீர்கள்.  இம்மூன்று நாடுகளிலும்  தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில்  எவ்வாறு அமைந்துள்ளன ?
பதில்:   "  இலங்கை  விஜயராணியே  நான்  ரசிக்கும்  எழுத்தாளர்.  கன்னிப் பெண்ணாக  இருந்து  படைத்த  படைப்புகள்  தைரியமானவை.  போலித்தனம்   இல்லாதவை.   யாருக்கும்  பயப்படாமல்  எழுதிய  எழுத்துக்கள்.    திரும்பிய  பக்கம்  எல்லாம்  இலக்கியம்  பேச  மனிதர்கள் இருந்தார்கள்.   கருத்துச்  சுதந்திரம்  இருந்தது.   (சில  அரசாங்கக் கட்டுப்பாடுகளைத்   தவிர)   மாற்றுக்  கருத்துக்கள்  பலவற்றை  பகிர்ந்து கொள்ளக்கூடிய   சந்தர்ப்பங்களும்,    அவற்றை  முன்வைக்க  மாறுபட்ட கருத்துடைய   பல  பத்திரிகைகள்,  சஞ்சிகைகள்,  வானொலி, தொலைக்காட்சி   என்று  அங்கு  ஓர்  இலக்கிய  உலகமே  இருந்தது.   எனவே நாம்   சுழல  விரும்பாத  உலகத்தை  ஒதுக்கி  விட்டு  இலக்கிய  உலகில் மூழ்கித்   திளைக்க   அது   வசதியாக   அமைந்தது.


மறைந்த நடிகர் சோவைப் பற்றி சிவகுமார்

.

கவி விதை - 20 - அன்பின் நிறம் வெள்ளை --- விழி மைந்தன் --

.


அமைதியான  அந்த  ஊரிலே அமைதியான மனிதர்களுக்குள்ளும் அமைதியானவளாக அவள்  இருந்தாள்.

அவளுடைய பிறப்பு உலகத்தில் என்ன, அந்த ஊரிலேயே, ஏன்  அவள் வீட்டிலேயே  ஒரு சம்பவமாகக் கருதப் படவில்லை.  ஆறு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்  சகோதரர்களில் நட்ட நடுவில் பிறந்தவள் அவள். அவளுடைய பிறந்த  நாளை யாரும் கொண்டாடவில்லை. அவளுடைய ஆத்தையோ அப்புவோ அவளுக்குச் செல்வத்தையோ கல்வியையோ இம்மியளவும்  வைத்து விட்டுப் போகவில்லை.


அந்த நாட்டை வெளியிலிருந்து தாக்கிய வியாதிகளுக்கோ, அல்லது உள்ளிருந்து அரித்த புற்று நோய்களுக்கோ அந்த ஊரும் விதிவிலக்கல்ல. அந்த ஊருக்குத்  தலைவரென  இருந்த சிதம்பரம்பிள்ளை வாத்தியார் வெட்டுக்கொத்துகளுக்குப்  போகாதவர். நல்ல மனிதர் என்று கூடச் சொல்லலாம்.  ஆனால் அவர் பழைமை வாதி. தனிப்பட்ட ரீதியில் யாருக்கும்  துன்பம் செய்யாதவர் ஆனாலும்,  பாட்டன்  முப்பாட்டன் காலத்தில் இருந்து  வருகின்ற வழக்கங்கள் யாருக்கும் துன்பம் தருகின்றனவா என்று யோசிப்பதற்கும்  அவர் போகவில்லை.

துக்ளக் சோ சகாப்தம் நிறைவடைந்தது -முருகபூபதி

.
அரசியல்  தலைவர்களினால்  ஏற்கவும்  இழக்கவும் முடியாத  தனித்துவம்  மிக்க  துக்ளக் சோ
நாடகத்தில் -   திரைப்படத்தில் -   இதழியலில்  அங்கதச்சுவையை   இயல்பாக  இழையவிட்டவரின் சகாப்தம்  நிறைவடைந்தது

                                                                           

" நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்."  என்று  35 வயதுள்ள  அவர்,  நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம்  கேட்கிறார்.
நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர்,  சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும்  விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்   விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும்  இருந்தும்,  எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக  நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின்  அடிப்படையிலேயே சிவாஜி  அவருக்கு  புத்திமதி  சொன்னார்.
" உனக்கு நடிப்பைத்தவிர வேறும்  ஒரு  நல்ல  தொழில் தெரியும்.  நீ பத்திரிகை  நடத்தினால் அது எப்படி இருக்கும் தெரியுமா...? கள் அருந்திய குரங்கை  தேனீக்கள் கொட்டினால் அது என்ன பாடுபடுமோ அப்படித்தான்  இருக்கும்  உனது பத்திரிகையும்" என்றார் சிவாஜி.
ஆனால்,  இதனைக்கேட்ட  அவர்  தனது  யோசனையை கைவிடவில்லை. 1970 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார். நாற்பத்தாறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் வெளியாகிறது அந்த இதழ்.
அதன் பெயர் துக்ளக்.


தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?



.

சிதம்பரம் பக்கத்திலுள்ள கொடியம்பாளையம் ஒரு தீவு கிராமம். அரசுசார் எந்தத் தேவைக்கும் கொள்ளிடம் ஆற்றைக் கடக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் நானும் நண்பர் முருகேசனும் அங்கு சென்றிருந்தோம். நல்ல பசி. “டீ குடிக்கலாமா?” என்றார் முருகேசன். போனோம். ஒரு மூதாட்டி நடத்தும் டீக்கடை அது. அவருடைய தோழிகள்போல மேலும் ஐந்தாறு மூதாட்டிகள் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வயது எண்பது, தொண்ணூறு இருக்கும். அரசாங்கத்தின் செயல்பாடு, அதிமுக ஆட்சியைப் பற்றி முருகேசன் மெல்ல அவர்கள் வாயைக் கிளறினார். கடும் அதிருப்தியான வார்த்தைகள் வெளிவந்தன.
“சரி, இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்?” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க?” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல?” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க?” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க!”
ஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்திற்குக் கணினியை இயக்க ஆரம்பித்த வெளிச்சத்தில் விழித்த என் மகள், “என்னப்பா?” என்றாள். செய்தியைச் சொன்னேன். அடுத்த கணம் ஓவென்று அழ ஆரம்பித்தாள். பள்ளிச் சிறுமி. இதுவரை ஜெயலலிதாவைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.

கடற் கள்ளன் - எச்.ஏ. அஸீஸ்

.

உற்றுப் பார்த்திருப்பாய்
உன் கூர் விழிப் பார்வை
வியாபிக்கும்
எல்லாப் பரப்பினையும்
ஒரு மரத்தின் உச்சியிலிருந்து
கடற்கரையின்
புதர்களில் மறைந்து
ஒரு பாறை விளிம்பில்
தரித்து நின்று
எல்லாப் பரப்பினையும்
உற்றுப் பார்த்திருப்பாய்
ஒரு பறவை
கால் கடுக்கக் காத்திருந்து
நோட்டமிட்டு
வட்டமிட்டு
பறந்து களைத்து
கண்டெடுக்கும் இரையொன்றை
கொத்தி அது கிளம்புகையில்
என்ன எதிர்பார்ப்பு
காத்திருக்கும் குஞ்சுகளுக்கு
கறி கொண்டு விரைகிறதோ
அவ்வேளை நீ பார்த்து
அப்படியே ஒரு உந்தில்
மின்னலெனப் பறந்து
மிரட்டி வழி மறிக்க
என்ன செய்யும் அப்பறவை
ஏவுகணை வேகத்தில்
எகிறி நீ விரட்டுவதை
எங்கணம் அது பொறுக்கும்
உயரத்தில் காற்றிடையே
பயந்து குடல் நடுங்கி
பரிதவிக்கும் பறவை அதன்
வாய்  நழுவி  விழும் இரையை
பற்றி நீ பிடிப்பாய்
பட்டென மறைந்திடுவாய்
வானத்தில் வழிப்பறியா
ஒரு வகையான பகற்கொள்ளை
கடற் கள்ளனே
நீ வாழும் விதம் புதிதல்ல
சில மனிதருக்கு

நீயா நானா கோபிநாத் தாக்கப்பட்டார்

.
தமிழக முதல்வர் செலவே ஜெயலலிதாவின் மரண நிகழ்வில் மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட தடியடி பிரயோகத்தில்  விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் அவர்களும் அகப்பட்டுக் கொண்டு தாக்கப்படும் காட்ச்சியை  கீழே காணலாம் . இவருக்கே இந்த நிலை என்றால் அப்பாவி ஜனங்கள் எப்பாடு பட்டிருப்பார்கள் ?




மு.சடாட்சரனின் படைப்புகள், யதார்த்த உலகின் அநுபவ சுவடுகள்

.


திரு.திருமதி முருகேசு கனகம்மா தம்பதியினரின் புதல்வரான சடாட்சரன்(1940.05.06) கல்முனையை பிறப்பிடமாகக் கொண்டவர்.1959 இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான பாரதி யார் எனும் கவிதையுடன் தனது கவிதைப் பயணத்தை ஆரம்பித்து 1960 களில் கவிஞர் நீலாவணன்,மருதூர்க்கொத்தன்,நூஃமான் ஆகியோரோடு கைகோர்த்து கல்முனைப் பிரதேச தழிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்

ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள் முக்கியமானவரும் தம்மைத் தொடர்ந்து வந்த கவிஞர் குழாத்தினை இனங்கண்டு ஊக்கப்படுத்திய கவிஞர் நீலாவணனின் பண்ணையிலே உருவானவரே கவிஞர் மு.சாடாட்சரன் ஆவார்.கிழக்கிலங்கை தமிழ் மக்கள் மத்தியில் 1960 களில் இருந்து எழுத்தாளராகவும்,கவிஞராகவும்,சிறுகதையாசிரியராகவும் அறியப்படுகிறார்.பாதை புதிது எனும் கவிதைத் தொகுதியையும் மேட்டுநிலம் எனும் சிறுகதைத் தொகுதியையும் நூலுருவாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.

உலகச் செய்திகள்


முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் : அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது : தமிழகத்தில் பெரும் பதற்றம்

ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி

ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு மோடி அஞ்சலி

பச்சைப் பட்டு சேலையணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை ஜெயலலிதா : 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - மொளனித்தது ஒரு சகாப்தத்தின் குரல்

நியூஸிலாந்து பிரதமர் திடீரென பதவி விலகல்

இத்தாலியின் பிரதமர் பதவி விலகினார்

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 25 பேர் பலி

 47 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது

மறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம் : தொடரும் மர்மம்

48 பேர் பலியான பாகிஸ்தான் விமானம் விபத்திற்கான காரணம் வெளியானது

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்

கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி

சென்னை முழுதும் திடீர் மாற்றம் : காரணம் என்ன.?


இலங்கையில் பாரதி (அங்கம் 02) - முருகபூபதி

.
பாரதியின்  ஈழத்து  ஞானகுரு !  -  யார்  இந்த  யாழ்ப்பாணத்துச்சாமி ...?
அருளம்பலம்  சாமியா...? ஆறுமுகம் சாமியா...?



பிரிட்டிஷாரின்  அடக்கு முறையினால்         புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்த பாரதிக்கு,  இங்கும்   பல நண்பர்கள் கிடைத்தார்கள்.
அவர்களில் கிருஷ்ணமாச்சாரியார்  என்னும்   இயற்பெயர்கொண்ட குவளைக்கண்ணன்  முக்கியமானவர்.  இவர்தான் பின்னாளில் 1921 செப்டெம்பர்  மாதம்  பாரதியை  திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி கோயிலில்  இருந்த  மதம்  பிடித்த  யானையிடமிருந்து காப்பாற்றியவர்.
மனைவி  செல்லம்மா  அயல்வீட்டிலிருந்து  கடனாக  வாங்கிவந்த அரிசியையும் " காக்கை  குருவி  எங்கள் ஜாதி "  என்று  பாடி காகங்களுக்கு  அள்ளித்தூவிய  இரக்கமுள்ள  பாரதி,  கோயில் யானைக்கு  வாழைப்பழமும் தேங்காயும் கொடுத்தது  ஆச்சரியமில்லை.
காகம்  குருவிகளுக்கு  மதம்  பிடிக்காது.  பாரதியை  அவை கொத்தவில்லை.  அந்தக்கோயில்  யானைக்கு  மதம் பிடித்திருந்தது பாரதிக்குத்  தெரிய நியாயம்  இல்லை.
குவளைக்கண்ணன்  கண்ணிமைக்கும்  நேரத்தில்  அங்கு  குதித்து அவரை  காப்பாற்றினாலும், அதன்  பின்னர்  அந்த  அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே வயிற்றுவலி  கண்டு  அதே  செப்டம்பர்  மாதம்  பாரதி  மறைந்தார்.
 இறுதியாத்திரையில்  சென்ற  விரல் விட்டு எண்ணத்தக்க மனிதர்களில்  தேம்பித் தேம்பி  அழுதுகொண்டு  வந்த  குவளைக்கண்ணன்,  புதுவையிலிருந்து   சென்னை வரையில் பாரதியின்  நெருக்கமான  நண்பராகவிருந்தார்.


கிழக்கிலங்கையின் மூத்த மகா கலைஞன் நீலாவணன் - பாக்கியராஜா மோகனதாஸ்

.


கிழக்கிலங்கையின் கல்முனையின் அருகேயுள்ள பெரியநீலாவணை எனும் பழம்பதியில் 1931.06.31 அன்று கேசகப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்த கே.சின்னத்துரை தனது நாற்பத்தைந்து வருட காலத்திற்குள் தமிழ் இலக்கியவுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை அவரது படைப்புகளுக்கூடாகவும் இலக்கிய ஆர்வலர்களுக்கூடாகவும்,நண்பர்களுக்கூடாகவும் அறியமுடியும்.கவிஞர் இ.முருகையனுக்கு(1935.04.23)முற்பட்டவராகவும்,து.உருத்திரமூர்த்திக்கு(1927) காலத்தால் பிற்பட்டவராகவும் விளங்குகின்றார். 
இருபது வருட கால இலக்கிய வாழ்வில் நூற்றுக்கணக்கான கவிதைகளும் பல கட்டுரைகளும் புனைகதைகளும் மூன்று பா நாடகங்களும் வேளாண்மை எனும் குறுங் காவியமும் நீலாவணனின் இலக்கியஇ கவித்துவ ஆளுமையை வெளிப்படுத்துவதாகவுள்ளது.நீலாவணன் தான் வாழ்ந்த காலத்திற்குள் ஒரு நூலையேனும் வெளிக்கொணர்வதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கவில்லை என்பதை உறவினர்களாலும் இலக்கிய ஆர்வலர்களாலும்  அறியக்கூடியதாகவுள்ளது.எனினும் நீலாவணனின் இலக்கிய ஆர்வல நண்பர்களான கவிஞர் எம்.ஏ.நுஃமான் அவர்களாலும் பிரபல சிறுகதை எழுத்தாளர் வ.அ.இரசரெத்தினத்தின் முயற்சியாலும் நூலுருப்பெற்றன.

ஓலமிட்டு அழுகின்றோம் ! எம். ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

      ஜெயமென்னும் பெயர்கொண்டு 
       ஜெயித்துவந்த ஜெயாவம்மா
       ஜெயாமுதல்வர் பதவியுடன்
       ஜீவனையே கொடுத்துவிட்டார்
       ஜெகமதனில் ஜெயிப்பதற்கு
       ஜெயலலிதா ஆகிநின்றார்
       ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம்
       ஜெயாவம்மா வாழுகிறார் !
        துணிவுகொண்ட பெண்ணானார்
        துயர்பலவும் தான்கண்டார்
        தனிமையிலே தவித்தாலும்
        தமிழ்நாட்டை நினைத்துநின்றார் 
        அமுதான தமிழோடு
        ஆங்கிலமும் பேசிநின்றார்
        அதிமுகாவினது ஆணிவேராய்
        அவர் இருந்தார் !
        அஞ்சாமல் ஆட்சிசெய்த
        அம்மாவைக் காண்பதெப்போ
        அவருடைய துணிவான
        அழகுதமிழ் கேட்பதெப்போ 
         புன்சிரிப்பு பூத்துநிற்கும்
         பூமுகத்தைக காண்பதெப்போ 
         புகழ்பூத்த பெண்மணியே
         உனைக்காணா அழுகின்றோம் !
         ஆளுமைமிக்க அரசியல் தலைவியே
         ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை
          போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை 
          காலனைவென்றிடும்  வல்லமை இழந்ததேன் !
           உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா
           உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே
           என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்
           உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு ழுகின்றோம் ! 

தமிழ் சினிமா

சைத்தான்



எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் மீண்டும் சைத்தான் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்த முறையும் ரசிகர்களை கவர்ந்தாரா பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்.
அப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது.
மேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது.
இதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் பின் என்ன ஆனது, ஜெயலட்சுமி யார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஆண்டனி பாய் வேஷம் போட்டாலும் சரி, ஐயர் வேஷம் கட்டினாலும் சரி அப்படியே பொருந்தி போகிறார். அப்பாவி லுக்கிற்காகவே அளவெடுத்து செய்தவர் போல, தனக்கு அடிக்கடி கேட்கும் குரலை கண்டு அவர் பயப்படும் போது நம்மையும் பயத்தில் ஆழ்த்துகிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் வாத்தியார் கதாபாத்திரம், விஜய் ஆண்டனி நடிப்பில் எத்தனை முதிர்ச்சி பெற்றுள்ளார் என்பதை காட்டுகின்றது.
அருந்ததி நாயர் தான் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம், அதை உணர்ந்து அவரும் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன் என பலரும் சில நேரம் வந்தாலும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.
படத்தின் முதல் பாதி கதை எதை நோக்கி செல்கின்றது, யார் இந்த ஜெயலட்சுமி? என்பதிலேயே ஆடியன்ஸை திரையில் ஒன்ற வைக்கின்றது. அதிலும் இடைவேளை டுவிஸ்ட் அடுத்து என்ன என எதிர்ப்பார்த்து உட்கார வைக்கின்றது.
படத்தின் இரண்டாம் பாதி சைக்கோ த்ரில்லரிலிருந்து வேறு ஒரு களத்தில் பயணிக்கின்றது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேகமாக சென்றிருக்கலாமோ என நினைக்க வைக்கின்றது.
கிளைமேக்ஸில் விஜய் ஆண்டனிக்குள் ஏற்படும் மாற்றம் அதன்பின் அவர் செய்யும் வேலை என அனைத்தும் கமர்ஷியல் ஆடியன்ஸை கவரும் வகை. இசையும் அவரே என்பதால் மிரட்டியுள்ளார். அறிமுக இயக்குனராக ப்ரதீப் இரண்டு மணி நேரத்தில் இத்தனை விஷயங்களையும் தெளிவாக சொல்லி முடித்ததிலேயே அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

க்ளாப்ஸ்

விஜய் ஆண்டனியின் யதார்த்தமான நடிப்பு, சொல்ல வந்த விஷயத்தை மிகவும் தெளிவாக கூறியவிதம்.
படத்தின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

விஜய் ஆண்டனி மாற்றத்திற்கு இரண்டாம் பாதியில் சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கான காட்சி அமைப்புகளில் கொஞ்சம் அழுத்தம் இல்லை. குறிப்பாக வில்லன் கதாபாத்திரம்.
மொத்தத்தில் விஜய் ஆண்டனி மட்டுமில்லை, நம்மையும் ஜெயலட்சுமி யார் என்று தேட வைத்துவிடுகிறார்கள்.




நன்றி  Cine Ulagam