தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம் !

 











மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்   

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா



புரட்சிக்கும் பாரதி புதுமைக்கும் பாரதி 

அயர்ச்சியை நாளும் அகற்றினான் பாரதி 

துணிவுக்கும் பாரதி துடிப்புக் பாரதி 

பணிவுக்கும் பாடினான் பக்திக்கும் பாடினான்


தமிழன்னை ஈன்ற தவப்புதல்வன் பாரதி 

தமிழதனை அமுதமாய் கண்டவன் பாரதி 

தமிழொன்றே பெருமை எனவுரைத்தான் பாரதி 

தலைநிமிர வாழப் பலவுரைத்தான் பாரதி


பன்மொழிகள் கற்றான் பற்றினான் தமிழை 

பக்தியை மனத்தில் இருத்தினான் பாரதி 

கடவுளை நம்பினான் கண்ணியம் காத்தான் 

கடமையைச் செய்யென கட்டளை இட்டான்

மீண்டும் தொடங்கும் மிடுக்கு!


 





……………பல்வைத்திய கலாநிதி பாரதி. இளமுருகனார்








ண்டமிழ் அறிஞர் வாழ்ந்த நவாலியில்

வரதன் என்னுமோர் வாலிபன் வாழ்ந்தான்

கண்டவர் மதித்திடக் கடமை உணர்வுடன்

கமம்செய விரும்பியோர் காணியும் தேடினான்

வறட்சி  கொண்ட தரிசு நிலத்தை

வாங்க முடிந்ததே பெரிதென நினைத்தான்

முயற்சி என்றும் திருவினை யாக்கும்

முதுமொழி நினைந்து செயற்பட விழைந்தான்




















கவிதை..."நண்பன்..."... மெல்போர்ன் அறவேந்தன்

 



உணர்வுடனே செயற்பட்டு உதவிடுவோம் யாவர்க்கும் !

 


 













மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் …. அவுஸ்த்திரேலியா



கொடுப்பதும் மழை கெடுப்பதும் மழை
அடுத்தடுத்து பெய்து அழிவைக் கொடுப்பதா
நீரின்றி வாடினார் நீருக்காய் ஓடினார்
நீராலே மக்கள் நிலம்விட்டோ ஓடுகிறார்

தயையின்றி மழை நிலமதை விழுங்கிறது
நிலையிழந்து மக்கள் நிர்க்கதியாய் நிற்கின்றார்
உயிருடமை மண்ணுக்குள் புதையுண்டு போகிறது
ஓலிமிடும் பேரொலியே உலுக்கியே நிற்கிறது

பாலகரும் பறிபோனார் வாலிபரும் மண்புதைந்தார்
ஓலமிடும் உறவெல்லாம் உணர்விழந்து நிற்கின்றார்
காலனுக்கு கண்ணிலையா கதியற்று கதறுகிறார்
காலநிலை யமனாகி காவுகொண்டு போகிறதே

கவிதை - மெட்டு பழையது பாடல் புதியது!


-சங்கர சுப்பிரமணியன்.


 

“வழிநெடுக காட்டுமல்லி

யாரும் அத பாக்கலியே”

என்று விடுதலை படத்துக்காக இளையராஜா அவர்கள் எழுதிய பாடலின் மெட்டில் நான் எல்லோரும் அறிந்த எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவருக்காக வடித்து வழங்கிய கவிமாலை!


பூபாளம் அதிகாலை ராகம்
பூபதி எழுத்துல ஒருவேகம்இலக்கியமதிலே தனி மோகம்இலக்கது ஒன்றே இவர் தாகம்இலக்கியம் மலருது எழுதயிலஇலக்கு தெரியுது படிக்கயிலேபூபாளம் அதிகாலை ராகம்பூபாளம் அதிகாலை ராகம்பூபதி எழுத்தும் சிறப்பாகும்எழுத்தே இங்கு கதசொல்லும்எழுதுவதெல்லாம் மெய்யாகும்பொய்யென எதுவும் அதிலில்லபுரிந்தேன் நான் அத உண்மயிலபூபாளம் அதிகாலை ராகம்

ஒத்தூதலை ஏற்பதும் நம் கடனே(னோ)?


-சங்கர சுப்பிரமணியன்




இசையில் திளைப்பவர் இணைந்திருப்பாரே

இணைந்து ஊதினால் இசையது சிறப்பாகும்
நாதசுவரத்தை ஒருவர் முதன்மையாய் ஊதிட
ஒத்து ஊதற்கு ஒருவர் துணையாய் இருப்பார்

ஒத்தூதுவார் தனியாய் ஊதினால் நயமிராது
ஒத்தூதுவார் இல்லையெனிலும் சிறக்காது
ஒத்தூதலின் சிறப்பென்ன என்று கேட்டால்
ஒத்தூதல் கறியில் கறிவேப்பிலை போலாம்

துணையின் மதிப்பு துணையில் விளங்கிடும்
ஒத்தொலி மிகுந்தால் மொத்தமும் பழுதாகும்
பதமாய் ஒலிக்க இசையிலும் துள்ளல் மிகும்
ஒத்தை தனியாய் ஊதிட சிறப்பு சேர்ந்திடா

நட்புக்கு ஒரு ஏவி எம் சரவணன் - ச . சுந்தரதாஸ்

தமிழ்த்  திரையுலகில் நட்சத்திர நடிகர்களை பார்த்திருக்கிறோம் , நட்சத்திர நடிகைகளை பார்த்திருக்கிறோம் ஆனால் நட்சத்திர படத் தயாரிப்பாளர் என்று ஒருவரை குறிப்பிடுவதென்றால் அவர் ஏவி  எம் சரவணன் தான்.

இது வெறும் புகழ்ச்சிக்கான வர்ணனை அல்ல , உண்மையான கருத்தாகும் . தனது 18வது வயதில் படவுலகில் அடியெடுத்து வைத்த சரவணன் மிக குறுகிய காலத்திலேயே திரையுலகின் நெளிவு சுளிவுகளை கற்று தேர்ந்து விட்டார் . தன்னுடைய தந்தையான ஏவி மெய்யப்பனின் தொழில் நுணுக்கங்களை அருகில் இருந்து பார்த்து தேர்ந்த அவர் சகோதரர்களுடன் இணைந்து 1961ல் வீரத் திருமகன் படத்தை தயாரித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை தராத போதும் அடுத்து எடுத்த நானும் ஒரு பெண் வெற்றி படமானது. அதன் பின் அவர் சம்பந்தப் பட்ட பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாகவே திகழ்ந்தன.

சரவணனின் நட்பு வட்டாரம் மிகவும் பெரிது. இன்னார் இவர் என்று

இல்லாமல் எல்லாத் துறையிலும் அவருக்கு நண்பர்கள் பரந்து இருந்தார்கள்.

அவர்களுள் சினிமாவுலகில் சரவணனின் நெருங்கிய நண்பர்கள் எஸ் .ஏ .அசோகன், எஸ் .வி . சுப்பையா ஆவர் . அசோகன் மூலம் ஏசி  திருலோகசந்தரின் அறிமுகம் கிடைத்து அதன் பின் திருலோக்கின் இறுதிக்கு காலம் வரை அந்த நட்பு நீடித்தது. திருலோக்க்குடன் மட்டும் தினசரி பேசுவதற்கு என்று ஒரு மொபைல் போனை வைத்திருந்தார் சரவணன். தினமும் அதில் அவருடன் பேசி விட்டு எடுத்து வைத்து விடுவார். அதே போல் திருலோக் ஏவி எம் ஸ்டுடியோவுக்கு சரவணனை பார்க்க வந்ததும் அலுவலக அறையில் சரவணனுக்கு அருகில் திருலோக்குக்கு ஒர் ஆசனம் போடப் படும். இருவரும் அருகருகில் இருந்து தான் பேசுவார்கள். திருலோக்கின் இறுதி காலத்தில் தினமும் அவரை சென்று மருத்துவமனையில் பார்ப்பதை வழக்கப் படுத்தியிருந்தார் அவர்.

சுப்பையா காவல் தெய்வம் படம் எடுத்த போது சிவாஜியின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் இருந்த போது தங்களின் உயர்ந்த மனிதனுக்கு சிவாஜி கொடுத்த சில நாட்களை சுப்பையாவுக்கு விட்டுக் கொடுத்து உதவினார் சரவணன் .

அதே போல் பாலாஜி சிவாஜி நடிப்பில் படம் எடுக்க முனைந்த போது அவருக்கு திருலோக்கை அறிமுகம் செய்து , அதன் விளைவாக தங்கை உருவாகி , பாலாஜியின் நிரந்தர இயக்குனரானார் திருலோக் !

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா

                                at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 5…..சங்கர சுப்பிரமணியன்.

அன்று பாதிநாள் சிம்கார்டு வாங்குவதிலேயே போய்விட்டதால் ஹுட்டால் போவதில் தடை ஏற்பட்டது. அதுசரி, என்ன அது ஹுட்டாங் அப்படி இப்படின்னு உடான்ஸ் விட்டுட்டிருக்க என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அதனால் புதிர் போடாமல் விளக்கி விடுகிறேன். என்னதான் தொழில் நுட்பத்திலும் கட்டுமானத்திலும் அசுரவளர்ச்சி பெற்றிருந்தாலும் பழைய நிலையை மறக்கவில்லை.


சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நாகேஷ் ஒரு உணவகத்தில் சர்வராக வேலைபார்த்து மிகவும் கடினமாக உழைத்து முன்னேறினான். முன்னேறியதும் பழசை மறக்காமல் இருக்கவும் அவனுக்கு கர்வம் ஏற்படாமல் இருக்கவும் தன் பார்வையில் படும்படி சர்வர் உடையை தொங்கவிட்டிருப்பான். அதைப்போல பழசை மறக்காமல் இருக்கத்தான் சீனாவில் இந்த ஹுட்டாங்கை ஞாபகார்த்தமாக விட்டு வைத்திருக்கிறார்கள்.

இன்னும் மோடிமஸ்தான்போல் கடைசி வரையில் கீரிக்கும்

பாம்புக்கும் சண்டை விடாதமாதிரி ஹுட்டாங்கைப் பற்றி சொல்லமாட்டேங்கிறியே கண்ணா என்று லட்சுமிப் பாட்டி மனதுக்குள் சொல்வது எனக்கு புரிகிறது. பாட்டி நான் ஒவ்வொன்றாக வரிசையாக சொல்லி வருகிறேன். ஆதலால் ஹுட்டாங் வருகின்ற சமயத்தில் அதைப் பற்றிச் சொல்கிறேன்.

ஆதலால் அன்று ஹுட்டாங் செல்ல முடியாமல் போனது. அடுத்ததாக செல்ல வேண்டிய டெம்பிள் ஆப் ஹெவன் சென்றோம். அதாவது சொர்க்க கோவில் சென்றோம். நாம் சொர்க்கம் செல்ல வேண்டுமானால் ஆண்டுக்கு ஒருமுறைதான் சொர்க்கவாசல் திறக்கும். அதுவும் வாசல்தான். தற்காலிகமாக ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும். அன்று தவறவிட்டால் அடுத்த ஒரு ஆண்டு கழித்துத்தான் போகமுடியும்.

அதுவும் நம் தலையில் எழுதியிருந்தால்தான் போகமுடியும். ஆனால் ஒரு ஆண்டு சொர்க்கவாசலில் நுழைந்து சொர்க்கம் சொன்றவர்கள் அடுத்த ஆண்டும் செல்வது ஏன்? அதற்கு ஒரு ஆண்டுதான் மதிப்பா? மறு ஆண்டும் சென்று புதுப்பிக்க வேண்டுமா? பூமியில் இருக்கும்போதே சொர்க்கத்தில் இவ்வளவு குழப்பம் இருக்கிறதே. அந்த வம்பு நமக்கெதற்கு? அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.

இதயக்கனி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 சினிமாவிலும் , அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த


எம் ஜி ஆர் தனது விசுவாசியான ஆர் . எம் . வீரப்பனுக்கு கடைசியாக நடித்துக் கொடுத்த படம் இதயக்கனி. பல தயாரிப்பாளர்கள் எம் ஜி ஆரின் கால்ஷீட்டுக்கு தவமாய் தவம் கிடக்க குறுகிய காலத்துக்குள் இந்தப் படத்தை வீரப்பனுக்கு நடித்துக் கொடுத்து விட்டார் எம் . ஜி. ஆர். 


 எஸ்டேட் உரிமையாளரான மோகன் ஏழைப் பங்காளன். தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனில் தீவிர அக்கறை கொண்டவன். அவனிடம் எதிர்பாராத விதத்தில் அடைக்கலம் புகும் லக்ஷ்மியை திருமணம் செய்து வாழ்வு கொடுக்கிறான். இவர்கள் இல்லறம் தொடங்கும் முன்பே மோகனுக்கு உத்தியோகத்துக்கு திரும்பும் படி அழைப்பு வருகிறது. அப்போதுதான் அவன் மனைவி உட்பட , நமக்கும்தான், அவன் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்று தெரிய வருகிறது. 

 வேலைக்கு திரும்பும் மோகனிடம் அதிகாரி ஒரு பைலை நீட்டுகிறார்.

அதில் அவன் மனைவி லஷ்மி படமும் கொலைக்கு குற்றவாளி என்று சேர்க்கப்பட்டுள்ளது. கட்டிய மனைவியையே சந்தேகிக்கும் நிலை. ஆனால் மோகன் தன் கடமையை நிறைவேற்ற துணிகிறான். அதில் அவன் எதிர் நோக்கும் சவால்கள்தான் மீதி படம். எம் ஜி ஆரின் சினிமா, அரசியல் இமேஜ் அறிந்து அதனை வலுப்படுத்தும் விதத்தில் படத்தின் திரை கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இரட்டை வேடம் இல்லா விட்டாலும் கூட இரு வேறு கெட் அப்பில் தோன்றி கலக்குகிறார் எம் ஜி ஆர். இரண்டிலும் மேக்கப்பும் பிரமாதம். அதே போல் சண்டைக் காட்சிகளிலும் பின்னி எடுக்கிறார் வாத்தியார். அது மட்டுமன்றி கற்பழிப்பு காட்சியிலும் எம் ஜி ஆர் இதில் நடித்திருக்கிறார். 

 படத்தின் ஹீரோயின் தோரஹா புகழ் ராதா சலுஜா . அப்பாவி லஷ்மியாக வந்து அனுதாபத்தை பெறுபவர் பிறகு பார்த்தால் கவர்ச்சியாகவும் வருகிறார். அதிலும் இதழே இதழே தேன் வேண்டும் பாடல் ஐயையோ! படத்தில் ஆர் .எஸ் . மனோகர் வில்லன் என்றால் அவருக்கு மேலாக இன்னொரு வில்லியும் உண்டு. அந்த வேடம் ராஜசுலோச்சனாவுக்கு. அவரும் தன் பங்குக்கு மது அருந்துகிறார் , சிகரெட் புகைக்கிறார் , நாயகனை மண்ணோடு மண்ணாக புதைக்கப் பார்க்கிறார் . நடக்குமா. 

உலகச் செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியாவுக்கு வருகை – டெல்லியில் கடும் பாதுகாப்பு

இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை 900ஐ கடந்தது ; நூற்றுக்கணக்கானோர் மாயம்!

கோவா தீ விபத்தில் 23 பேர் பலி : கடற்கரை விடுதி முழுவதும் எரிந்து நாசம்

எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.4,140 கோடி அபராதம் 



ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியாவுக்கு வருகை – டெல்லியில் கடும் பாதுகாப்பு 

Published By: Vishnu

04 Dec, 2025 | 08:59 PM

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (04) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

புது டில்லியில் அமைந்துள்ள பாலம் விமானப்படை தளத்தில் அவரது விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் அவரை உத்தியோகபூர்வமாக வரவேற்றனர். ரஷ்ய தலைவருக்கு இந்திய ஆயுதப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

புட்டின் – மோடி இடையிலான இந்த சந்திப்பில் :  இருநாடுகளுக்கிடையேயான மூலோபாய கூட்டுறவு,

இலங்கைச் செய்திகள்

அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக உயர்வு ; 214 மாயம்!

டித்வா புயல் பாதிப்பு : இலங்கைக்கான உதவியை £1 மில்லியனாக உயர்த்திய ஐக்கிய இராச்சியம்

மலையக மார்க்கத்தில் 12 ரயில்கள் நிறுத்தி வைப்பு

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர் !  


அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக உயர்வு ; 214 மாயம்!  

05 Dec, 2025 | 07:02 PM

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரத்தில், நாடு முழுவதும் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த  2,082,195 பேர் வெள்ளப் பாதிப்பு, இடம்பெயர்வு மற்றும் சொத்து சேதங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா