இருள் - சேரன் கவிதை

.

பாட்டற்றவர்கள் இருளைத் தேடியலைந்தபோது
வழி தவறி நான் இருந்த கடலோரம் வந்த மூன்று நூறு
குழந்தைகளின் உலர்ந்த கண்ணீரில் தாயைத் தேடிக்
களைத்த சுமைதாங்கிப் பாரம் முடிவிலியாய் தொடருமென
எல்லோர்க்கும் தெரிந்தாலும் ஒருவருமே இதனை எதிர்
பார்க்கவில்லை என்ற போலி அறிக்கைகளின் காயாத மையையும்
கயமையின் நிழலையும் நீங்கள் அறியாவிட்டாலும்
கவிஞன் அறிவான் கதை.
நந்திக்கடல்
எல்லாத் திசைகளிலும்
காலாட்படை முன்னேறுகிறபோது
அங்குலம் அங்குலமாக
நிலம் மறைந்தது
நிலக்காட்சி கருகியது
மௌனத் திரைப்படத்தில் ஓலம் எழுப்புகிறது
மக்கள் பெருந்திரள்
செல்லும் இடம் எங்கே?
கடல்மடியும் கடற்கரையும்
துணை நிற்கும் எனச் சென்றோரின்
கண்முன்னே
குறுகித் தெறித்து மறைந்தது

சிட்னி முருகன் ஆலய மானம்பூ திருவிழா

.




'கம்பவாரிதி' இ. ஜெயராஜ் அவர்களுடைய தொடர் சொற்பொழிவு - ஒக்ரோபர் 22,23,24)



இனிய தமிழ் முரசு வாசகர்களுக்கு,  எம் அன்பார்ந்த வணக்கங்கள்.
இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் கொழும்பு-வெள்ளவத்தைப் பகுதியில்,ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலயம் அமைக்கப்பட்டு வருகின்றது. அழகான முறையில், ஒரு தத்துவத் திருக்கோயிலாக அமைந்துவரும் இவ்வாலயத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் சில மாதங்களில், செவ்வனே நிறைவு பெற்றுத் திருக்குடமுழுக்கிற்கான ஆயத்த வேலைகளும் இடம்பெறவுள்ளன.
இவ்வுகந்த வேளையில் சிட்னி வாழ் அடியவர்களாக, இவ்வரிய பணிக்கு நிதிதிரட்டி உதவும் முகமாக மூன்று நாள் தொடர் சொற்பொழிவொன்றை, நாம் ஒழுங்கு செய்துள்ளோம் (22, 23, 24 ஒக்ரோபர் மாலை 7-9மணி). இலங்கையிலிருந்து புகழ்பூத்த பேச்சாளர் 'கம்பவாரிதி' இ. ஜெயராஜ் அவர்கள் வருகைதந்து, இச் சொற்பொழிவுகளை ஆற்றவுள்ளார்.
ஜெயராஜ்
அவர்களின் பேச்சைப் பலரும் இரசித்து அனுபவித்திருக்கின்றனர்.
இம்முறையும் கம்பராமயணம் - பெரியபுராணம் - திருக்குறள் என, அவரது மூன்று நாள் பேச்சுக்கள் அமையவுள்ளது

திரும்பிப்பார்க்கின்றேன் --- 11 -முருகபூபதி

.

இலங்கை  மணித்திரு  நாடெங்கள்   நாடே  பாடிய       புலவர்மணி  பெரியதம்பிப்பிள்ளை


இலங்கையின்  தேசிய இனப்பிரச்சினை  இடியப்பச்சிக்கலைப்போன்றது.  1972 இல் அந்த இடியப்பத்தை  பிழிந்தவர்  சட்டமேதை  கலாநிதி  கொல்வின்  ஆர் டி சில்வா. அறுதிப்பெரும்பான்மையுடன்  1970 இல்  ஸ்ரீமாவின்  தலைமையில்  பதவிக்குவந்த  கூட்டரசாங்கம் 1972 இல்  உருவாக்கிய  ஜனநாயக  சோஷலிஸ  குடியரசு அரசியலமைப்புத்தான்  அந்த  சிக்கலான  இடியப்பம்.
இன்றுவரையில்  எத்தனையோ  உயிர்களை  காவுகொண்டபின்னரும்   சிக்கல்  தீரவில்லை.
எதிர்காலத்தில்  வரக்கூடிய  பாரிய  நெருக்கடிகள்  இழப்புகளை  கருத்தில்கொண்டு  தீர்க்கதரிசனமான  ஒரு  முடிவுக்கு  வந்தது   எமது  இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்  சங்கம்.
1954 ஆம்  ஆண்டு  தொடங்கப்பட்ட  இச்சங்கம்   இலங்கையில்  பல  மாநாடுகளையும் இலக்கிய  ஆய்வரங்குகளையும்  நடத்தியிருக்கிறது. இலங்கையின்  தேசிய  அரசியலில்  தீவிரமாக  ஈடுபட்ட  பல  படைப்பாளிகளும்  இச்சங்கத்தில்  இணைந்திருந்தமையினால்  1972 இல்  உருவான  புதிய  அரசியல் அமைப்பு  எதிர்காலத்தில் தோற்றுவிக்கவுள்ள  பாரிய  நெருக்கடிகள்  தொடர்பாக  ஆராய்ந்துää   தேசிய  இனப்பிரச்சினைகளுக்கு  நிரந்தரத்தீர்வாக  12  அம்ச  திட்டங்  தயாரித்து  இரண்டு நாள்  மாநாட்டை  கொழும்பில்  பண்டாரநாயக்கா  சர்வதேச  மாநாட்டு  மண்டபத்தில்  நடத்தியது.

அரங்காடல் 2013 - 26.10.2013

.

இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை : அன்ரனி ஜெயநாதன்

பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வது உறுதி

தமிழர்களின் உணர்வை மதித்தே இறுதி முடிவு எடுக்கப்படும்: மன்மோகன்சிங்

பட்டினியில் 43 ஆவது இடத்தில் இலங்கை

முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை : அன்ரனி ஜெயநாதன்

14/10/2013   முல்லைத்தீவு, கொக்குளாய் பிரதேசத்தில் அத்துமீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண துணை அவைத் தலைவரும் பொறுப்பு நிலை அமைச்சருமான அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதிக்குச் சென்ற வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து,கைத்தொழில், வர்த்தகம், வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபையின் துணை அவைத் தலைவரும் புனர்வாழ்வு, இன நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பு நிலை அமைச்சருமான அன்ரனி ஜெயநாதன் ஆகியோர் இது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக 1984 ஆண்டுக்கு முன்னர் 32 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 350 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அத்துடன் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடல்வளம் அழியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையைக் கருத்திற்கொண்டு இனிவரும் காலத்தில் இவ்வாறான தொழில் முறைகளைப் பயன்படுத்தல், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை வெளியேற்றுதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.




நன்றி நவிலல் - வைஷ்ணவி ஜனகன்

.
அன்புடையீர்

 எமது புதல்வி வைஷ்ணவி, குடும்பத்தின் தீபம்
அணைந்த செய்தி கேட்டு உடன் வந்து ஆறாத் துயரில் பங்கேற்று பல விதங்களில் உதவி புரிந்து எமக்கு ஆறுதல் அளித்த உங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
காலமான வைஷ்ணவியின் அந்தியட்டிக் கிரியைகள்;  2013 மார்கழி மாதம் 24ம் திகதி இராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது.

அதன் பின்னர் 2014ம் ஆண்டு தை மாத இறுதியில் வைஷ்ணவியின் வாழ்க்கையை நினைவு கூருமுகமாக பிரார்த்தனையும் மதிய போசனமும் நடாத்தப்படும்.
இதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

நன்றி

இப்படிக்கு
ஜனகன்இ நளாயினி. யஷ்வினி.

நீயும் என் தோழனே! - சே குவேரா 14.05. 1928 - 09-10-1967

.
- பூ. கொ. சரவணன்

che-guevaraசே குவேரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது;இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்துக்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி அவர்.

எங்கெல்லாம் அடக்குமுறையும்,ஏகாதிபத்தியமும் கட்டவிழ்த்து விடபட்டதோ அங்கெல்லாம் சே இருப்பார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், க்யூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சே நின்று இருந்தார்.

அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியும் கூட; ஆனால் உடல் மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது. அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியது தான்;அதோடு கார்ல் மார்க்சையும்,லெனினையும் உள்வாங்கிப் படித்த அவர் ஏழைகளும்,பாட்டாளிகளும் படும் துன்பங்களையும்,சோகம் ததும்பும் அவர்களின் உண்மை நிலையை அறிந்த பொழுது போராளியானார்.

அர்ஜென்டினாவை விட்டு வெளியேறிய சே, க்யூபாவில் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்த ஆட்சியை காஸ்ட்ரோவுடன் இணைந்து கவிழ்க்க முதல் முறை முயன்று தோற்று, பின் வெற்றியும் பெற்றார். அவரின் அமைச்சரவையில் வங்கி மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் திடீர் என்று காணாமல் போனார்; அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு பொலிவியாவின் காடுகளில் போராடக்கிளம்பிய நாயகன் அவர். அங்கே அவர் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று.

எங்கள் நாட்டின் தேர்தல் - சொல்ல வேண்டிய கதைகள்

.

                                                                                       முருகபூபதி

தேர்தல் என்றவுடன் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றித்தான் ஏதோ சொல்லப்போகின்றேன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.
அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றவுடனேயே எனது தாயகம் எனக்கு இரவல் தாய் நாடாகிவிட்டது. அதனால் இலங்கையில் நடக்கும் தேர்தல்கள் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையில்லை.
ஆனால் அங்கு வாழ்ந்த காலத்தில் தேர்தல்களும் பார்த்து வாக்கும் அளித்து இடதுசாரிகளுக்காக மேடையேறிப்பேசியும் ஒய்ந்து ஓடிவந்துவிட்டாலும், தாயகம்மீதான பற்றுதல் எள்ளளவும் குறையவில்லை.
அங்குவந்தால் நிற்பதற்கு ஒரு மாதகாலம்தான் விசா. மேலும் தரித்து நிற்பதாயின் தினமொன்றுக்கு குறைந்தது 75 ரூபாயாதல் வாடகை செலுத்தவேண்டும். அதனால்தான் இலங்கை எனக்கு வாடகை செலுத்தும் இரவல் தாய்நாடாகிவிட்டது. எனக்கு மட்டுமல்ல, என்னைப்போன்று புகலிட நாடுகளில் வதிவிட உரிமை பெற்ற அனைத்து இலங்கையர் நிலையும் இதுதான்.
இலங்கையில் பலவருடங்களாக தாமதித்துக்கொண்டிருந்த வடமாகாண சபைத்தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே அதாவது செப்டெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தேர்தல் நடந்து முடிந்து லிபரல் கட்சியின் ரோனி அப்பட் 28 ஆவது பிரதமராக தெரிவாகிவிட்டார்.

கலை இலக்கியம் 2013’ 27.10.2013

.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827  HIGH STREET, EPPING, VIC 3076 - Melway :182 B10 )  இல் நடைபெறும். விழாவில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு ‘வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன் அவர்களின் ’ஒன்லைன் புத்தகங்கள் ரூ ஒலிவடிவப்புத்தகங்கள்’ பற்றிய ஒரு கலந்துரையாடல்இ ‘பாரதம் தந்த பரிசு’  ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’இ ’ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ நூல்கள் அறிமுகம். ’பாலகாத்தான்’ (காத்தவராயன்)கூத்து மற்றும் கானமழை (இன்னிசை நிகழ்ச்சி) என்பவை இடம்பெறும்.
அன்று நடைபெறும் ’அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியில்’ உங்கள் புத்தகங்களும் இடம்பெறவேண்டுமாயின் – நீங்கள் புலம்பெயர்ந்த்தன் பிற்பாடு எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் பிரதி ஒன்றை அனுப்பி வைக்கலாம். இந்தப்புத்தகங்கள் மீள உங்களுக்கு கையளிக்கப்படமாட்டாது. அவ்வப்போது நடைபெறும் புத்தகக்கண்காட்சிகளில் அவை காட்சிப்படுத்தப்படும். தொடர்புகளுக்கு
தலைவர் - சு.ஸ்ரீகந்தராஜா (03)94651319 ஃ 0478060366
செயலாளர் - கே.எஸ்.சுதாகர் (03)83618265 ஃ 0431038728
மின்னஞ்சல் முகவரி -  atlas2001@live.com.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மானம்பூ உற்சவம் 2013

.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 2013ம் வருடத்தின் மானம்பூ உற்சவம் (வாழை வெட்டு) 14.10.2013 அன்று காலை இடம்பெற்றது அது தொடர்பான புகைப்படங்கள். புதிய குபேரவாசல் கோபுரத்தின் கட்டுமானத் திருப்பணிகள் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவுறுகிறது.

NSW IWA இன் தீபாவளி 27.10.2013

.

உலகச் செய்திகள்

அமெ­ரிக்­காவின் நிதி நெருக்­கடி முழு உல­கிற்­குமே பெரும் அச்­சு­றுத்தல்: உலக வங்கித் தலைவர் எச்­ச­ரிக்கை

மத்திய பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 109 பக்தர்கள் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற நாமத்தை பயன்படுத்த முடியாது - மலேசிய நீதிமன்றம்


நைஜீரியாவில் தடுப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் பலி: மன்னிப்புச் சபை



---------------------------------------------------------------------------------------------------------


அமெ­ரிக்­காவின் நிதி நெருக்­கடி முழு உல­கிற்­குமே பெரும் அச்­சு­றுத்தல்: உலக வங்கித் தலைவர் எச்­ச­ரிக்கை

14/10/2013     அமெ­ரிக்­காவின் கடன் பெறு­வது தொடர்­பான நெருக்­கடி கார­ண­மாக அந்­நாட்டு அர­சாங்கம் ஒரு சில தினங்­களில் மிகவும் அபா­ய­க­ர­மான தரு­ண­மொன்றை எதிர்­கொண்­டுள்­ள­தாக உலக வங்கித் தலைவர் ஜிம் யொங் கிம் எச்­ச­ரித்­துள்ளார்.

எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை காலக்­கெடு முடி­வ­டை­வ­தற்கு முன் அர­சாங்க கடன் ­வ­ரை­ய­றையை உயர்த்­து­வ­தற்கு அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உடன்­ப­டிக்­கை­யொன்றை எட்ட வேண்டும் என அவர் வலி­யு­றுத்­தினார்.

கலை இலக்கியம் 2013 - 27.10.2013



அம்மா, நீ வென்றுவிட்டாய். - அ.முத்துலிங்கம்



.
ஓர் எழுத்தாளரைப் பற்றி நினைக்கும்போது மனதில் என்ன தோன்றுகிறது? அதுதான் முக்கியம். அலிஸ் மன்றோ பற்றி நினைத்துப் பார்த்தபோது அவருடைய கலகல சிரிப்பொலிதான் ஞாபகத்துக்கு வந்தது. பேசிவிட்டு சிரிப்பார் அல்லது சிரித்துவிட்டு பேசுவார். நான் சந்தித்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. குழந்தைப் பிள்ளைபோல சிரிப்பு. இன்று, 82 வது வயதில், 2013ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னர் ஓரு காலை நேரம் அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். கனடாவில் சந்தைக்காரர்கள் அதிகாலையிலேயே தங்கள் வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். தொலைபேசியில் ’நீங்கள் இதை வாங்குங்கள். உங்களுக்கு மட்டும் 50 வீதம் கழிவு கிடைக்கும்’ என்று தொந்திரவு கொடுப்பார்கள். நான் அசட்டையாக டெலிபோனை எடுத்து ’என்ன வேண்டும்?’ என்று கேட்டேன். அப்பொழுது அவர் ’நான் அலிஸ் மன்றோ பேசுகிறேன்’ என்றார். அவர் வெளிநாடு போவதால் திரும்பி வந்ததும் எனக்கு ஒரு செவ்வி தருவதாக ஒப்புக்கொண்டார். அவருடைய தொலைபேசி எண்ணை தந்தபோது கிட்டத்தட்ட நேர்காணல் முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்தேன்.

தமிழ் சினிமா

மூடர்கூடம்

தமிழ் சினிமாவின் அரைச்ச மாவை அரைக்காமல் புதுமுக இயக்குனரின் சுவாரஸ்யமான திரைக்கதையில் வெளிவந்திருக்கும் படம் மூடர்கூடம்.
சுயமாக சிந்திக்கத் தெரியாத ராஜாஜ், சென்றாயன், குபேரன் என்ற 3 பேரும், அரசு சீர்திருத்தப்பள்ளியில் படித்ததால் வேலை கிடைக்காமல் அலையும் நவீனும் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் சந்திக்கிறார்கள்.
வயிற்று பிழைப்பிற்கு என்ன செய்வதென்றே தெரியாத இவர்கள், கூட்டணியில் ஒருவரான ராஜாஜின் உறவினர் ஜெயபிரகாஷ் வீட்டுக்கு கொள்ளை அடிக்க செல்கிறார்கள்.
அங்கு அவரோ சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் செல்ல தயாராக இருக்கிறார்.
அங்கு செல்லும் இந்த கூட்டணி ஜெயபிரகாஷ் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.
தங்களது திட்டத்தில் இவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா என்பது மீதிக்கதை.
படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருக்கும் நவீன் ரொம்பவே துணிச்சல்காரர்தான்.
தமிழ் ‌சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது மாதிரி கதையை தைரியமாக இயக்கி, தரமாக தந்திருப்பதற்கு அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு காட்சியிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்குனரின் தேவையறிந்து ராஜாஜ், ஓவியா, குபேரன், சென்றாயன், சிந்துரெட்டி, ஜெயப்பிரகாஷ், அனுபமாகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது.
“தமிழ் தெரியாத வெள்ளைக்காரங்கிட்ட தமிழ்ல பேசக்கூடாதுன்னு தெரிஞ்ச உனக்கு இங்கிலிஷ் தெரியாத தமிழன்கிட்ட இங்கிலிஷ்ல பேசக்கூடாதுன்னு ஏன்டா தெரியல”.
இது போன்று படம் முழுக்க வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வசனங்களும் ரசிக்கும் படியாக உள்ளன.
ஆபத்தான சூழலில் ஜெயப்பிரகாஷ் போன்பண்ணும் போது குழந்தை போனை எடுத்து அம்மா, அப்பா 2 பேரும் பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க, தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லி இருக்காங்க என்பது வெடிச்சிரிப்பு.
இயக்குனர் நவீனும் நான்கு திருடர்களில் ஒருவராக மனம் கவர்கிறார்.
படத்தின் கதையைவிட படத்தின் பாத்திரங்களுக்கு அதிலும் அந்த விளையாட்டு பொம்மை உள்ளிட்ட பாத்திரங்களுக்கு ‌சொல்லப்படும் முன்கதைகளும் முழு கதைகளும்தான் ரசிக்கத்தக்கவை.
நடராஜன் சங்கரனின் மிரட்டலான பின்னணி இசையும், டோனிசேனின் பிரம்மாண்ட ஒளிப்பதிவும் நவீனின் ‘நச்-டச்’ வசனங்களும் படத்திற்கு பெரும் பலம்.
கண்ணோடு கண்கள் மோத பாடலும், நீயும் பொம்மை பாடலும் நம்மை முணுமுணுக்க வைக்கிறது.
மனிதர்கள் நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முட்டாள்களாக நடந்துகொள்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் ‘மூடர்கூடம்’ தமிழ் சினிமாவில் ‘புதிய பாடம்!’.
நடிகர்கள்: ராஜாஜ், நவீன், குபேரன், சென்றாயன், ஜெயபிரகாஷ், ஓவியா, சிந்து ரெட்டி
இயக்குனர்: நவீன்
இசை: நடராஜன் சங்கரன்
ஓளிப்பதிவு: டோனி சான்
தயாரிப்பு: பாண்டிராஜ்
நன்றி விடுப்பு




 
யா யா

தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கின்ற கொமடி படங்களின் வரிசையில் வெளிவந்துள்ள படம்தான் ‘யா யா’.
சொன்னா புரியாது படத்திற்கு பிறகு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் யா யா.
நாயகன் சிவா எந்தவொரு வேலை வெட்டியும் இல்லாமல், அரசாங்க வேலை கிடைத்தால்தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நோக்குடன் ஊர் சுற்றி வருகிறார்.
இவருடைய நண்பனாக கூடவே சுற்றித் திரிகிறார் சந்தானம். ஒருநாள் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தன்ஷிகாவைப் பார்க்கும் சிவா, அவர் மீது காதல் கொள்கிறார்.
அவரைத் தொடர்ந்து பலமுறை தன் காதலைச் சொல்ல பல்வேறு முயற்சிகள் செய்கிறார். ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இந்நிலையில் தன் மீதான காதலைத் தெரிந்துகொள்வதற்காக மொடலான பவர் ஸ்டாரை கேடயமாக பயன்படுத்துகிறார் சிவா.
அதில் சிவாவுக்கு வெற்றி கிடைக்கிறது. மறுமுனையில் சந்தானமும், சந்தியாவும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.
இந்நிலையில் ஒருநாள் பெண் கவுன்சிலரான தேவதர்ஷினி மீது சிவா தவறுதலாக மோதி விடுகிறார். இந்த மோதல் தேவதர்ஷினிக்குள் சிவா மீது காதலை வரவழைக்கிறது.
சிவாவை எப்படியாவது அடையவேண்டும் என்று நினைக்கிறார் தேவதர்ஷினி. இதற்காக சிவாவின் நண்பனான சந்தானத்தை அணுகுகிறார்.
சந்தானம், சிவா ஏற்கெனவே தன்ஷிகாவை காதலிப்பதை அவரிடம் கூறுகிறார். எனவே தேவதர்ஷினி இவர்களின் காதலை முறிக்க முடிவெடுக்கிறார்.
இதற்காக சந்தானத்திடம் பணத்தைக் கொடுத்து அவர்களின் காதலை பிரிக்கச் சொல்கிறார்.
இறுதியில், சந்தானம் சிவாவுக்கு துரோகம் செய்தாரா? சிவா, தன்ஷிகா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.
சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்படம், தில்லுமுல்லு ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்ததோ, அதே அளவுக்கு இந்த படத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
இவருடன் சந்தானமும் சேர்ந்தால் கொமடிக்கு சொல்லவா? வேண்டும். படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழைதான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்துக்கு இந்த படத்தில்தான் தனியாக ஒரு ஜோடி கொடுத்திருக்கிறார்கள்.
காதல் சந்தியா இவருடைய காதலியாக வருகிறார். சிறிது இடைவெளிக்கு பிறகு திரையில் பளிச்சிட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும்.
சிவாவுக்கு ஜோடியாய் தன்ஷிகா, பரதேசி படத்தில் பார்த்த தன்ஷிகாவை இப்படத்தில் மொடர்னாக பார்க்கும்போது வியக்க வைக்கிறார்.
சிவா தன்னைக் காதலிக்கிறார் என்று தெரிந்திருந்தும், அதை கண்டுகொள்ளாமல் அசால்டாக திரியும் இவருடைய நடிப்பு பாராட்ட வைக்கிறது.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெளிவந்த பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட படம் என்பதால், இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் வருகிறார்.
இவர் ஒருசில காட்சிகளே என்றாலும், இவர் செய்யும் கொமடி ரசிக்க வைக்கிறது.
மேலும் சிவாவின் அப்பா-அம்மாவாக வரும் இளவரசு-ரேகா, கவுன்சிலராக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை நிறைவுபடுத்தியுள்ளார்கள்.
இயக்குனர் ராஜசேகரன் முழுக்க முழுக்க கொமடியை மட்டுமே பிரதானமாக வைத்து எடுத்திருப்பதால் படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார்.
விஜய் எபினேஷர் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், திரையில் பார்க்கும்போது காலை ஆட்ட வைத்திருக்கிறது.
பின்னணி இசையிலும் முன்னேற்றம் தேவை. வெற்றி ஒளிப்பதிவில் பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.
மொத்தத்தில் யா யா கொமடியின் உச்சகட்டம்.
நடிகர் : சிவா, சந்தானம்
நடிகை : தன்ஷிகா, சந்தியா,
இயக்குனர் : ஐ. ராஜசேகரன்
இசை : விஜய் எபினேசர
ஓளிப்பதிவு : வெற்றி
 நன்றி விடுப்பு