யாழ்.நகரம்


ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி:யாழ் நகரம்.
01
எனது சைக்கிள்
சந்தியில்
குருதி வழிய வழிய
உடைந்து கிடக்கிறது
நாட்குறிப்புக்களை
காற்று வலிமையாக
கிழித்து போகின்றன
எனது பேனா
சிவப்பாகி கரைகிறது.
மதிய உணவிற்கு
வாங்கப்பட்ட
அரை ராத்தல் பாணை
நாய்கள் அடிபட்டு
பிய்த்து தின்னுகின்றன
வாழைப்பழங்களை
காகங்கள்
கொத்தி தின்னுகின்றன.
எனது பிணம்
உரிமை கோரப்படாமல்
குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.
வீட்டின் கூரை
உக்கியிருக்கிறது
சுவர்கள் கரைந்து
சரிந்திருக்கின்றன
அம்மா.அக்கா.தம்பி.தங்கைகள்
அழுகையில்
கூடியிருக்கிறார்கள்.
வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூன்கள்
உயிரை குடிக்கின்றன.
யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.
02

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார்

.

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய செங்கையாழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார். இவர் மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். 

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க.குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். 

மெல்பனில் நடந்த தென்னாசிய நாடுகளின் கவிஞர்கள்; ஒன்றுகூடல்

.



தென்னாசிய நாடுகளின் விவகாரங்களுக்கான அமைப்பினால் SAPAC (South Asian Public Affairs)  கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கவிஞர்களின் ஒன்றுகூடலில் இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் நோபாளம் ஆப்கானிஸ்தான் பூட்டான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.
மெல்பன், Mulgrave Stirling theological college   மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை ஒழுங்குசெய்த தென்னாசிய நாடுகளின் விவகாரங்களுக்கான அமைப்பின் சார்பில் கலாநிதி கௌசல் ஸ்ரீவத்ஸா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தார். மெல்பனில் வதியும் கவிஞர்கள் தெய்வீகன் - ஜே.கே. ஜெயக்குமாரன் - கேதாரசர்மா - பாலநாதன் ஆகியோர் கவிதைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் சமர்ப்பித்தனர். எழுத்தாளர் லெ. முருகபூபதி ஈழத்து மற்றும் அவுஸ்திரேலிய கவிஞர்கள் பற்றிய விபரங்களை தெரிவித்து உரையாற்றினார். அவுஸ்திரேலியாவில்  புகலிடம்பெற்றுள்ள மேற்படி நாடுகளைச்சேர்ந்தவர்களின் நூல்களின் கண்காட்சியும் கலை நிகழ்ச்சியும்  இடம்பெற்றது

முருகன் ஆலயத்தில் மாசி மகம்

.


யுக சந்தி 2016 05 03 2016



சிவபூமி மனவிருத்திப் பாடசாலைக் குழந்தைகளின் நிதி உதவிக்காக இளைஞர் இலக்கிய மன்றம் சிட்னி பெருமையுடன் வழங்கும் யுக சந்தி 2016 ! இலக்கிய இளவல்களின் சங்கமம் முத்தமிழ் அரங்கத்தில் பிரகாசிக்கிறது. மண்வாசனையுடன் அன்பும் இலக்கியமும் இணைகிறது.  தமிழ் பாடசாலை மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்வுகள் ,  இளவல்களின் பட்டிமன்றம், நகைச்சுவை நாடகம், மற்றும் இலக்கிய மன்ற இளைஞர்களின் நடனம் என பலவைகையான நிகழ்வுகளுடன் புதிய பரிணாமத்தில் யுக சந்தி 2016 இதோ ! 


Ilaignar Ilakkiya Mandram proudly presents Yuga Santhi 2016 in aid of Sivapoomi, Kondavil. A confluence of Tamil literature and humanity with dance , music and a variety of entertainment. 
A night of Love and Literatute !  

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

 ஊடறு  - பெண் படைப்பாளிகளின்  தொகுப்பில் இணைந்திருந்த   தேவா

சிலப்பதிகார  இந்திர  விழாவின்  மகிமையை எழுதியவர் -  ஜெர்மனியின்  கோடை விழாவையும் பதிவுசெய்தார்
 (கடந்த வாரத்தொடர்ச்சி)

                                         

நீர்கொழும்பு  இந்து  இளைஞர்  மன்றத்தின்  மாதாந்த  பௌர்ணமி விழாக்களுக்கு  தேவா   நாடகங்களும்  எழுதித்தந்தார்.  அதில்  ஒன்று அரிச்சந்திரன் - மயான  காண்டம்.    சந்திரமதி  பாத்திரமேற்று நடிப்பதற்கு   எவரும்  முன்வராதமையினால்  நான்  சந்திரமதியானேன்.
தேவாவும்  எனது  தங்கை  ஜெயந்தியும்  எனக்கு  ஒப்பனை  செய்து, எனது  கோலத்தைப்பார்த்து  விழுந்து  விழுந்து  சிரித்தனர்.  ஆனால் நாடகத்தில்  மயானகாண்ட  காட்சியில்  சந்திரமதி,  லோகிதாசனின் உடல்மீது  விழுந்து  கதறிக்கதறி  அழுதபோது  அவர்கள்  இருவரும் திரைக்குப்பின்னால்  நின்று  கண்கலங்கியதாக  அறிந்தேன்.   சில நாட்கள்  அவர்கள்  என்னை   சந்திரமதி  என்றே   அழைத்தனர்.
சந்திரமதியின்  கழுத்தில்  விழுந்த  அட்டைக்கத்தி,  வீசிய வேகத்தில் மடங்கியதனைப்பார்த்து  சபையில்  சிரித்தனர்.
இதனால்   சிறிதுகாலம்  அந்த  அட்டைக்கத்தி  பற்றியும்  நினைத்து நினைத்து   சிரித்தனர்.
அரிச்சந்திரன்  நாடகத்தின்   சந்திரமதி  உங்களை  அழவும்  சிரிக்கவும் வைத்துவிட்டாள்  என்று  நான்  சமாளித்தேன்.
திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர்  சந்திக்கும்  காட்சியையும்  தேவா நாடகமாக   எழுதித்தந்தார்அதில்  வயதில்  குறைந்த  பிள்ளைகள் நடித்தனர்.
தேவாவுக்கும்  நாடகமேடைப் பரிச்சயம்  இருந்தது.   பாடசாலையில் படித்த   காலத்தில்  மாணவர்  இலக்கிய  மன்றத்தில்  அவர் அவ்வையார்  சுட்டபழம்  சாப்பிட்ட  காட்சியில்  அவ்வையாராக நடித்தவர்.
எனது  தொடக்க  கால  சிறுகதைகளை   முதலில்  அவரிடம்  காண்பித்த  பின்னரே  இதழ்களுக்கு  அனுப்புவேன்.   இவ்வாறு  கலை, இலக்கியப்பயணத்தில்   இணைந்திருந்தவர்,  திருமணமாகி ஜெர்மனுக்கு   சென்றதனால்  பெரிய  வெற்றிடம்  தோன்றிய  தாக்கம் நீடித்திருந்தது.
குறுகிய  இரண்டு  ஆண்டு (1972 - 1974 )  காலத்துள்  மல்லிகை, பூரணி,   புதுயுகம்  முதலானவற்றில்  தேவி   என்னும்  புனைபெயரில்  எழுதி  கவனத்தை  பெற்றிருந்தமையால், "  அவர்  எங்கே---? "  என்று மல்லிகை  ஜீவாவும்  பூரணி  மகாலிங்கமும்,   புதுயுகம்  கனகராஜனும்  கேட்டபொழுது  அவருடைய  திடீர்  பயணம் பற்றிச்சொன்னேன்.
" இனி  அவர்  எழுதப்போவதில்லை " - என்று  மல்லிகை  ஜீவா  மிகுந்த  ஏமாற்றத்துடன்  சொன்னார்.   பெண்  எழுத்தாளர்கள்  பலர் திருமணத்தின்  பின்னர்  இலக்கியத்திற்கு  ஓய்வுகொடுக்கின்றனர் என்ற   பொதுவான  கருத்து  அப்போது  நிலவியது.

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தின் திருக்குறள் போட்டியும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவசமய அறிவுத் திறன் போட்டியும் – 06.03.2016


நான் உங்கள் ரசிகன் - செங்கைஆழியான் பற்றி காண பிரபா

.
கானா பிரபா 2006ம்  ஆண்டு மடத்துவாசல் இல் எழுதிய கட்டுரை  இது 


முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் என்ர பழைய நினைவுகள் வேற வந்து, மனசை அலைக்கழிச்சுக்கொண்டிருந்தது. மனசக்கட்டுப்படுத்தினால் தானே நித்திரைச் சனியனும் வரும் என்று எனக்கு நானே அலுத்துக்கொண்டேன்.
அண்டைக்கு வந்து போன நினைவுகளையே ஒரு பதிவாகப் போடலாம் எண்டு படுக்கையிலிருந்தே
என் ஞாபகங்களைக் கோர்த்தேன், இப்படி.....

அப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை. 
"கிடுகு வேலி" எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது. அந்த நேரத்திற்கு எனக்கு எதைக் கிடைத்தாலும் வாசிக்கவேணும் எண்ட வீறாப்பு இருந்ததால மூச்சுவிடாம முதல் அத்தியாயத்தைப் படிச்சுமுடிச்சன். அட .. இவ்வளவு நாளும் நான் வாசிக்காத ஒரு நடையில போகுதே என்று மனசுக்குள்ள நினைச்சன். 
ஈழநாட்டில வந்த "கிடுகுவேலி" வாரந்தத்தொடர்ப்பக்கத்தைக் கத்தரித்து ஒரு சித்திரக்கொப்பி வாங்கி (பெரிய சைஸ் பேப்பரில இருக்கும்) கோதுமை மாப் பசை போட்டு ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒட்டிக்கொள்வேன்.

கனவுத்துளியின் கண்ணீர் கவிதை - தெய்வீகன்

.
(கடந்த 27 ஆம் திகதி மெல்பனில் நடந்த எட்டுநாடுகளின் கவிஞர்கள் பங்கேற்ற தென்னாசியக்கவிஞர்களின் கவிதா நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட கவிதை)

ஈழத்தமிழர்களின்  தாயகத்தில்  2009  ஆம்  ஆண்டு  இடம்பெற்ற கொடூரப்போர்  காலத்தின்போது  பிறந்த  குழந்தை  ஒன்று  தன்  தாயின் அரவணைப்பில்  ஒருவாறு  தப்பித்துக்கொள்கிறது.  அப்பிஞ்சுக்குழந்தையை சுமந்துகொண்டு  கடல்வழியாக  ஆஸ்திரேலியா  வந்து  தஞ்சம் புகுந்துகொண்ட  அந்த  அபலை  தாயிற்கு  இங்கு  வந்த  பின்னர்தான் பிரச்சினை   ஆரம்பிக்கிறது.
அதுவரையும்  தொடர்ச்சியான  குண்டு  சத்தங்களையும்  துப்பாக்கி வெடிகளையும்   வரும்போது  கடல்  இரைச்சலையும்  கேட்டு  பழகிவிட்ட குழந்தைபுதிய  தேசத்தில்  எந்த  சத்தமும்  இல்லாத  சூழ்நிலையை அசாதரணமாக  உணர்ந்து  அலறுகிறது.   தனக்கு  சம்பந்தமே  இல்லாத இடத்துக்கு  வந்துவிட்டதாக  நினைத்து  தொடர்ந்து  அழுகிறது.
தனது  பிள்ளையின்  இந்த  நிலைமையை  புரிந்துகொண்டபோதும்  எதுவுமே  செய்ய  முடியாத  அந்த  ஏழைத்தாயின்  கண்ணீர்  தாலாட்டுத்தான்  இந்த  கவிதை -


அனைத்துலகப் பெண்கள் தின விழா 2016 06.03.2016

.
   அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
              
     
        
      அவுஸ்திரேலியத்தமிழ்  இலக்கியக் கலைச்சங்கம்
                  
       அனைத்துலகப் பெண்கள் தின விழா
                     அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை  மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன்  நகர  மண்டபத்தில்  (Preston City Hall - Gower Street, Preston, Vic - 3072) விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கருத்தரங்கு - கவியரங்கு - விவாத அரங்கு - நினைவரங்கு  மற்றும் கலை அரங்கு ஆகியன  இடம்பெறவுள்ள இவ்விழாவில், எழுத்தாளர்கள் - கலைஞர்கள் பெண்ணியச் சிந்தனையாளர்கள் மற்றும்  அன்பர்களின்  வரவை  ஆவலுடன்  எதிர்பார்க்கிறோம்.
அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண் விஜயராணி - தமிழினி சிவகாமி  ஆகியோரின் ஞாபகார்த்த நினைவுரையும்  இடம்பெறும்.
எமது சங்கம் முதல் முறையாக நடத்தவிருக்கும்  அனைத்துலகப் பெண்கள் தின விழாவுக்கான மேலதிக விபரங்களுக்கு:
விழா ஒருங்கிணைப்பாளர் - சாந்தினி புவனேந்திரராஜா - 0404 703 769
பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா (தலைவர்)     -                                  (02) 9838 4378
Dr. நடேசன்    (செயலாளர்)              -                                         0452 631 954
லெ. முருகபூபதி (துணைத்தலைவர்)        -       0416 625 766