ஆடியும் அருமையாய் அமைந்த நல்மாதமே !
காரைக்கால் அம்மையார் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்
சைவ சமய நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர் என்ற பேறு
பெற்றவர் காரைக்கால் அம்மையார். பெண் நாயன்மார்கள் மூவருள் ஒருவரான இவரை சிவனே அம்மையார் என்று போற்றி அழைத்துள்ளார். அவருடைய சரித்திரத்தை இ வி ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் 1973ம் ஆண்டு கலரில் படமாகத் தயாரித்தது. படத் தயாரிப்பாளர் இ வி ராஜன் , இயக்குனர் ராமண்ணாவின் மைத்துனராக இருந்த போதும் படத்தை இயக்கம் பொறுப்பை ராமண்ணாவிடம் தராமல், ஏ பி நகரராஜனிடம் ஒப்படைத்தார். பக்திப் படங்களை உருவாக்குவதில் புகழ் பெற்ற நாகராஜனும் அவ்வாறெ படத்தை இயக்கினார்.
இருந்த மாங்கனியையும் அவனுக்கு கொடுக்கிறாள் புனிதவதி. அதை உண்ட பரமதத்தன் மற்றைய கனியையும் கொண்டுவரும் படி கேட்கவே பூஜை அறைக்கு சென்று சிவனை வணங்க மற்றுமொரு மாங்கனி அவள் கரங்களில் விழுகிறது. அதனை கணவனுக்கு கொடுக்கவே இரண்டு மாங்கனிகளுக்கும் சுவையில் வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டி காரணம் கேட்கிறான் அவன். நடந்த உண்மையை அவனிடம் கூற , தன்னை இறை நம்பிக்கை உள்ளவனாக்க அவள் நாடகமாடுவதாக அவன் சந்தேகப் படுகிறான். மீண்டும் புனிதவதி சிவனை வணங்க மற்றுமொரு மாங்கனி அவள் கரங்களில் விழுகிறது. இதைக் கண்டு திகைக்கிறான் பரமதத்தன். கடவுள் எங்கே, அவனை காண முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தவன் இப்போது தன் மனைவியையே தெய்வம் என்று போற்றி வணங்குகிறான். அவளுடன் இல்லறம் நடத்த முடியாது என்று கூறி அவளை பிரிந்து சென்று விடுகிறான். அதன் பின் தன்னுடைய இளமையை எடுத்துக் கொண்டு முதுமையை தரும் படி புனிதவதி சிவனை வேண்ட இறைவன் அவளை மூதாட்டியாக்குகிறான். காரைக்கால் அம்மையாராக உருமாறும் புனிதவதியின் ஆன்மீகப் பயணமே மீதி படம்.
திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர் ❤️✍🏻 கானா பிரபா
“நடிகர் ஜெய்சங்கரிடம், இவ்வளவு சீக்கிரமாக இந்த உலகத்தை
விட்டுப் போக அப்படியென்ன உங்களுக்கு அவசரம்?”
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 72 “ புத்தகம் காவி “ பட்டத்தையும் சுமந்து வாழும் வாழ்க்கை ! இயற்கையை மக்களுக்குப் பயன்படுத்தும் கட்டார் தேசம் ! முருகபூபதி
பயணங்களின்போது, கிடைக்கப்பெறும் புத்தகங்களை முடிந்தவரையில் சுமந்துகொண்டு திரும்புவது எனது வழக்கம். அதனால், எனது குடும்பத்தில் எனக்கு புத்தகம் காவி என்றும் ஒரு பட்டப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
நான் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபோது,
எங்கள் ஊரில் எமது உறவினர்கள் சிலர், “ இந்தியாவுக்கு போனார் புத்தகங்களுடன் திரும்பினார். அதன் பிறகு ருஷ்யாவுக்குப்போனார், புத்தகங்களுடன் வந்தார், இப்போது அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டிருக்கிறார், என்ன கொண்டுவருகிறார் பார்ப்போம்? “ என்று என்னை எள்ளி நகையாடினார்கள் என்று அம்மா சொன்னார்கள்.
“ அம்மா,
திரும்பி வரும்போது புத்தகங்களுடன்தான் நான் வருவேன் “ என்று சொன்னதுடன் நில்லாமல், எனது புதிய புத்தகத்துடனும்தான் ( பாட்டி சொன்ன
கதைகள் ) 1997 இல்
தாயகத்திற்கு திரும்பி வந்தேன்.
எழுத்தாளர்கள் இவ்வாறு
புத்தகங்களை காவிக்கொண்டிருப்பது பாரதியார் காலத்திலிருந்து நடப்பது. பாரதியாரும் ஒரு
சமயம் வெளியூர் பயணம் சென்றுவிட்டு திரும்புகையில் புத்தகங்களை பொட்டலமாக கட்டிக்கொண்டுதான்
வந்தார்.
அவரது மனைவி செல்லம்மா,
கணவர் தனக்கு ஏதும் புடவை கொண்டு வந்திருப்பார் என்ற நம்பிக்கையில் அந்தப்பொட்டலங்களை
ஆராய்ந்து ஏமாற்றமடைவார். இந்தக்காட்சியை நாம் பாரதி திரைப்படத்திலும் பார்த்திருக்கின்றோம்.
நான் புத்தகங்கள் சுமப்பதற்காக
குறைசொல்லாத எனது மனைவி, அவற்றை சுமந்துகொண்டுவரும்
பிரயாண பைகள் குறித்தே பெரிதும் கவலை கொள்வதுண்டு.
நான் பல பிரயாணப்பைகளை
புத்தகச் சுமையினால் சேதமடையச்செய்திருக்கின்றேன்.
நானும் இலக்கியப்பயணங்களின்போது எனது புத்தகங்களை
இலக்கிவாதிகளுக்கும் வாசகர்களுக்கும் வழங்குவதுண்டு. அவர்கள் அவற்றை படிக்கிறார்களா? அல்லது தங்கள் புத்தக
ஷெல்ஃபில் அழகாக அடுக்கி வைக்கிறார்களா..?
என்பது தெரியாது!
எனக்கு இந்தப் பயணங்களில் கிடைக்கும் புத்தகங்களை முடிந்தவரையில் படித்து எனது வாசிப்பு அனுபவத்தையும் எழுதிவிடுவேன். அதனால், எமது எழுத்தாளர் நண்பர்கள் என்னைக் காணும்போது தங்கள் புத்தகங்களை தருவதுண்டு.
இலங்கைச் செய்திகள்
வடக்கின் போக்குவரத்து துறையின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
நாட்டை கட்டியெழுப்ப நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம்
இந்திய உதவியில் வழங்கிய பஸ்கள் இன்று யாழில் கையளிப்பு
ஜனாதிபதி ரணிலை சந்தித்துரையாடிய இந்திய வெளிவிவகார செயலாளர்
ராஜீவ் கொலை வழக்கு: இலங்கை வர அனுமதிக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாந்தன் கடிதம்
ஜனவரியில் மூடப்பட்ட கொழும்பு – யாழ் ரயில் சேவை சனிக்கிழமை ஆரம்பம்
வடக்கின் போக்குவரத்து துறையின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
வடக்கு மாகாணத்துக்கு தேவையான போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
உலகச் செய்திகள்
பனிப்போர் திட்டத்திற்கு திரும்பும் நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
நீண்ட தூர ஏவுகணையை சோதித்தது வட கொரியா
செனகல் தஞ்ச படகு 200 பேருடன் மாயம்
புகலிடக் கொள்கையில் முரண்பாடு: நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது
சூடானில் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் பலி
பனிப்போர் திட்டத்திற்கு திரும்பும் நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
நடந்து முடிந்த நேட்டோ மாநாடு மேற்கத்திய இராணுவ கூட்டணி பனிப் போர் திட்டங்களுக்கு திரும்புவதை காண்பிப்பதாக உள்ளது என்றும் அனைத்து அச்சுறுத்தலுக்கும் தேவையான ‘எல்லா வழிகளிலும்’ பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோவில்-சண்டி ஹோமம் 16 ஜூலை 2023
மங்களகரமான சண்டி ஹோமம் 16 ஜூலை 2023 அன்று நடைபெறும்; திருவிழாவின் போது மகா யாகம் நடத்துவது ஒரு புனிதமான மற்றும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். தாங்களும் கலந்து கொண்டு அன்னை துர்காவின் அருளைப் பெற உங்களை அழைக்கிறோம்.