இலங்கையின் சிறுசஞ்சிகைகளின் எழுச்சியும்,வீழ்ச்சியும்.

.



   
       இலங்கையிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களின் ஆயுள் மிகக் குறைவு என்பது கசப்பானஉண்மையே.திட்டமிடப்படாமையினாலும், நிறுவனமயப்படுத்தாமையினாலும் இலங்கையில்சிற்றிதழ்களினால் நீண்ட தூரம் பயணிக்கமுடியவில்லை.பிரபல்யமான சில நிறுவனங்கள்அவ்வவ்போது சில சிற்றிதழ்களை வெளியிட்டன.தகுதியான ஆசிரியரும்,ஆசிரியபீடமும்,இல்லாமையால் அவையும் கால ஓட்டத்தில் மறைந்து போயின.இதே வேளை பிரபல எழுத்தாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டசிற்றிதழ்களும் கால ஓட்டத்தில் மூழ்கிவிட்டன.

         உதயதாரகையுடன் 1841ஆம் ஆண்டு இலங்கையின் பத்திரிகைத் துறை ஆரம்பமானது.கலை,இலக்கியம்,சமூகம்,மருத்துவம்,விஞ்ஞானம்,அரசியல், நகைச்சுவை,இசை, விவசாயம்,சிறுவர்,வானொலி ஆகிய துறைகளை முன்னிலைப்படுத்தி பல சஞ்சிகைகள் வெளிவந்தன.இன்றும் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவருகின்றன.48 வருட காலம் தனி நபர் சாதனையாக வெளிவந்த மல்லிகை தடுமாறிக் கொண்டிருக்கிறது.தாயகம், ஞானம்,ஜீவநதி ஆகியன இன்று வெளிவருகின்றன.யாத்ரா, நீங்களும் எழுதலாம் ஆகிய சஞ்சிகைகள் கவிஞர்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்கின்றன.

இலங்கைச் செய்திகள்



உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக எடுக்கப்பட்ட வீடுகளும் மற்றும் காணிகளும் இராணுவத்தினால் சுற்றுலா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமித்தது யாழ் மாவட்ட நீதிமன்றம்

விரக்தியின் விளிம்பில் இலங்கைத் தமிழர்கள்

கட்டம் இடப்பட்ட செய்தி:

ஒரு தலைமுறையே படிப்பறிவை இழந்து விட்டது

சீதைக்கு இலங்கையில் கோயில் : ம.பி அரசின் திட்டம்

வடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது: கபே

பொதுபலசேனா போன்று கடும்போக்குவாதிகள் நாமல்ல, நாங்கள் மலையகத்தவர்கள்: சுந்தானந்த தேரர்
=======================================================================
உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக எடுக்கப்பட்ட வீடுகளும் மற்றும் காணிகளும் இராணுவத்தினால் சுற்றுலா நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன

- டினுக் கொழம்பகே

 நான் அரசியல் உரிமை வேண்டும் என்பதற்காக போராடவில்லை, நிச்சயமாக நான் தனிநாடு கோரவுமில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் எனது வீட்டுக்கு திரும்பச்செல்லும் ஒரு வாய்ப்பு மற்றும் என்னுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் அவர்களுக்கு சொந்தமாக உள்ள ஓரிடத்தில் வாழ்வதை உறுதி செய்வதுமே ஆகும்”

valikamam-1உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு கீழ் வருகின்றன என்று சமாதானம் சொல்லி யாழ் குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்திய சர்ச்சைக்குரிய விடயம், ஆயிரக்கணக்கா யாழ்ப்பாணவாசிகளை வீடற்றவர்களாக ஆக்கியிருப்பதோடு மற்றும் முக்கியமான விவசாய நிலங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமலும் செய்துள்ளது.

உள்ளுர் வாசிகளுக்கு மறைவாக, வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினை இராணுவம் சுற்றுலா நோக்கங்களுக்காக அபிவிருத்தி செய்துவருகிறது, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும்போது அவர்களின் இழப்பில் இதைச் செய்வது மிகவும் துரதிருஷ்டம்.

ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான இராப் போசன விருந்து 20 July 2013



இராப் போசன  விருந்து   
20 யூலை 2013, மாலை 6 மணி
தமிழர்  மண்டபம்
ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்,  
21- 23  Rose Crescent Regents Park NSW 2143 

கட்டிட  நிதிக்காக தனி நபருக்கு $20
அறவிடப்படும்
 

காவியமாகும் கல்லறைகள் முருகபூபதி





  எந்தவொரு    உயிரினத்துக்கும்   கருவறை   இருக்கிறது.   ஆனால்  எல்லா  உயிரினங்களுமே     மரணித்தவுடன்    கல்லறைகளுக்குச்செல்வதில்லை.    பெரும்பாலான    நிலத்திலும்  நீரிலும் வாழும்    ஜீவராசிகள்    ஆறறிவு   படைத்த    மனிதர்களினால்    கொல்லப்பட்டதும்  உணவாகி    வயிற்றறைக்குச்சென்று     செமிபாடாகிவிடுகின்றன.
இந்த    மனிதர்களுக்கு     மாத்திரம்    கல்லறைகள்    இருப்பதாக    நாம்   கருதமுடியாது.  அவுஸ்திரேலியா    உட்பட   பல  மேலைநாடுகளில்    தமது    செல்லப்பிராணிகள்  மரணித்தவுடன்    அவற்றை  அடக்கம்    செய்து   கல்லறை   அமைக்கின்ற  நாகரீகம் பரவியுள்ளது.    இந்துசமயத்தவர்கள்;    இறந்தால்     தகனக்கிரியை  செய்து  அஸ்தியை  எங்காவது    புனித    கங்கைகளில்   அல்லது    கடலில்  கரைத்துவிடுவார்கள்.    ஆனால்  எல்லா    இந்துக்களும்  அப்படி   அல்ல.  கல்லறைகளுக்குள்    அடக்கமானவர்களும்  இருக்கிறார்கள்.

உலகச் செய்திகள்


வெனிசூலாவில் தஞ்சமடைகிறார் ஸ்னோடென்

புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு: கனேடிய அரசாங்கம் கண்டனம்

புத்தகாயா குண்டுவெடிப்பு: தகவல் கொடுத்தல் இலட்சாதிபதியாகலாம்!

தீவிரவாதிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும்: ஐ.நா. இளைஞர் அமர்வில் மலாலா உருக்கம்
========================================================================
வெனிசூலாவில் தஞ்சமடைகிறார் ஸ்னோடென்

snowdenஅமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென் வெனிசூலாவில் தஞ்சமடைய இருக்கிறார். அவர் ரஷியாவின் சிரிமெத்யோவ் விமான நிலையத்தில் ஜூன் 23-ம் தேதி முதல் பதுங்கியுள்ளார். இந்நிலையில், அரசியல் அடைக்கலம் தரத் தயாராக இருப்பதாக வெனிசூலா விடுத்த அழைப்பை ஸ்னோடென் ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ரஷியா வெளியுறவு விவகாரங்களுக்கான குழு தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்னோடன், கியூபாவில் தஞ்சமடைவார் என்று செய்தி வெளியானது. எனினும் ஸ்னோடெனை எவ்வாறு வெனிசூலா தொடர்பு கொண்டது என்ற தகவலும், அவர்களது அழைப்பை எப்படி ஸ்னோடென் ஏற்றுக் கொண்டார் என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. ஸ்னோடெனுக்கு எந்த நாடும் அடைக்கலம் தரக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.நன்றி தேனீ  


வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 1. அடியும் முடியும்



ஞானா -    (கூப்பிட்டு) அப்பா . . .. அப்பா.......................

அப்பா -    என்ன ஞானா என்ன வேணும?

ஞானா -    திருவள்ளுவர் ஒரு குறும்புக்காரன் இல்லையாப்பா.

அப்பா -    எங்கடை பழந்தமிழ் அறிஞரிலை கல்லெறிபடாதவர் திருவள்ளுவர் ஒருவர்தான். நீ இப்ப அவரையும் வம்புக்கு இழுக்கிறாயே.

ஞானா—    ஐயையோ! திருவள்ளுவரை நான் அப்பிடி நினைப்பேனா அப்பா? அவர் சொல்லிய சில கருத்துகள் குறும்பாய் இருக்கு என்றுதான் சொல்லவாறன்.

அப்பா -    திருவள்ளுவரிலை குறும்பு காணுவதும் ஒரு புதுமைதான். நீ விசயத்தைச் சொல்லு.

ஞானா -    கோயிலுக்குப் போகாதவை வாழ்க்கையைச் சுகமாய் கழிக்க மாட்டினம். என்று சொல்லுறது குறும்பாய் இல்லையா அப்பா?

எனது அப்பா புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் -- பொப் இசைப் பாடகி மாயா தெரிவித்துள்ளார்.



நான் அப்படித் தான் இருப்பேன் ! மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி
மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி  அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம்கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கு எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். மடோனா போன்ற உலகப் புகழ்மிக்க பாடகிகளுடன் இவர் இணைந்து பல இசை நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். சமீபத்தில் இவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தான் ஒரு பாடகியா இல்லை அரசியல் வாதியா என்று யாரும் முடிவெடுக்க முடியாது. பாடகி அரசியல் பேசக்கூடாது என்று விதிகள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருரே பாடகி இவராகத்தான் இருக்க முடியும். புலிகளை தான் ஆதரிக்கிறேன் ! அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று இவர் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் உலகில் வாழும் பல சிங்களவர்கள், இவருக்கு எதிராகப் போர்கொடி தூக்கியுள்ளார்கள். இவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு முன்னார் சிங்களவர்கள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியும் உள்ளார்கள்.   -   ஈழம்ரஞ்சன்

அருள்மொழி: இறைவன் விரும்பும் பூவும் பழமும்


ஓம் ஸ்ரீ சாயிராம்


தெருவில் வாங்கக் கிடைக்கும் பூவோ பழமோ இறைவனுக்குத் தேவையில்லை. தூய இதயம் என்னும் மணமுள்ள மலரையும், மனம் என்னும் கனியையும் அவனிடம் கொண்டு வாருங்கள். இவை ஆன்ம சாதனையினால் பக்குவப்பட்டவையாக இருக்க வேண்டும். இவையே அவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவை; சந்தையில் விற்கும் தயார்ப் பொருள்களல்ல. விலைக்கு வாங்கும் பொருள்கள் உன் மனதை உயர்த்த வல்லவையல்ல. ஆன்ம சாதனையே மனதை உயர்த்தும். 
இந்தச் சுவையை அறிய வேண்டுமானால் நீ நல்லோரின், மகான்களின் கூட்டத்தில் இருக்கவேண்டும். நல்லவற்றைச் சிந்திப்பதில் மகிழ்ச்சி அடையவேண்டும். ஏதாவது செய்து உன் ஆனந்தத்தையும் விவேகத்தையும் அதிகரித்துக் கொள். இவற்றால் உன்னை நிரப்பிக் கொண்டால், தேவைப்படும்போது நீ இந்தச் சேகரத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சுவாமியின் அருளுரை, செப்டம்பர் 1, 1958
நன்றி சாய் கீதை

திருக்கோவையார் பொருள் விளக்கம் - சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம்

.

 மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. உள்ளத்தை உருக்கும் பக்திப் பனுவலான திருவாசகம் பலரும் படித்து விளங்கக் கூடியது.
திருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக  அமைந்துள்;ளது. பாடல்கள் எளிதில் பொருள் விளங்க முடியாதனவாக உள்ளன.
தமிழில் கவிதைகள் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, விருத்தப்பா முதலிய வகைகளாக வளர்ந்து அந்தாதி, சிலேடை, சிந்து, கோவை முதலியனவாக விரிந்து பரந்துள்ளன. கவிதை வடிவம் தமிழ் மொழியில் வளரந்தளவிற்கு பிற மொழிகளில் வளரவில்லை எனலாம். தமிழ்க் கவிதை வளர்ச்சியில் பின்வந்த சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது கோவை. பல நிகழ்ச்சிகளைக் காட்டும் பல்வேறு பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கோக்கப்பட்டதால் கோவை எனப்படுகிறது. 
மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகப்பாடல்களை இறைவனே தனது திருக்கையால் எழுதினாரென்றும், அவற்றை எழுதியபின், பாவை பாடிய வாயால் கோவை பாடும்படி இறைவன் வேண்ட, அவர் திருக்கோவையாரையும் பாடியதாகவும் கூறுவர். திருக்கோவையார் சிற்றம்பலம் என்னும் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது.
திருவெம்பாவையில் வரும் அன்பர்கள் சிவன் புகழ் பாடுபவர்கள். சிவனிடமும் சிவனடியார்களிடமும் அன்பு கொண்டவர்கள்@ “உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம், “எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க, என்றெல்லாம் பாடுகிறார்கள். திருக்கோவையாரில் காணும் அன்பர்களும் சிவனிடம் பக்தி பூண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்

'வசூலித்தவர்கள் வசதியாக வாழ்கிறார்கள்!' - மூத்த ஈழப் போராளியின் வாக்குமூலம்


.
ழப் படுகொலைகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காலத்தாலும் அது கொடுத்த படிப்பினைகளாலும் சத்தியசீலன் முக்கியத்துவம் பெறுகிறார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் அனைத்து ஆயுதக் குழுக்களும் உருவாக அஸ்திவாரமாக இருந்த 'தமிழ் மாணவர் பேரவைஅமைப்பை நிறுவிய சத்தியசீலன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது... ''இலங்கையில் சிறுபான்மை   தமிழ்ச் சமூகம் அரசுத் துறைகளில் செல்வாக்குச் செலுத்தியது, ஒரு பொறாமையாக சிங்களர்களிடையே உருவானது. இதனால், தமிழர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அடுத்தடுத்து தமிழர் விரோதச் சட்டங்களைக் கொண்டுவந்தனர். இந்த அதிருப்திக்குள் மாணவர்கள் அழைத்து வரப்படக் காரணமாக இருந்ததுதான், 1970-ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்துதல் சட்டம். அப்போது நான், அரியரட்ணம், முதல் தற்கொலைப் போராளியான சிவக்குமாரன், முத்துக்குமாரசாமி, வில்வராஜா, இலங்கை மன்னன் என இன்னும் பலரும் இணைந்து 'தமிழ் மாணவர் பேரவைஎன்ற அமைப்பை உருவாக்கினோம். அடுத்த சில நாட்களில் அனைத்து பள்ளிக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து ஊர்வலம் ஒன்றை நடத்தினோம். ஆனால், அது போலீஸாரால் கடுமையாக ஒடுக்கப்  பட்டது.

சே குவேராவின் சிந்தனையும் கம்யூனிசமும் தமிழ் இளைஞர்களிடையே செல்வாக்குச் செலுத்த... அதன் போக்கில் ஆயுதப் போராட்டமாக உருமாற்றம் அடைந்தது. ஆயுதம் வாங்க, அமைப்பைக் கட்டமைக்கப் பணம் தேவைப்பட்டது. இந்த எண்ணம் வேர் விட்டபோது பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்களின் உதவியும் ஆதரவும் முதன்முதலாக எங்களுக்குக் கிடைத்தது. கொஞ்சம் டைனமைட் வாங்கவும், ஈழத்துக்கான தேசிய கீதம் பண்ணவும் நான் சென்னை வந்தேன். பிரபாகரன், அவரது அண்ணன்மனோகரன், ஜோதிலிங்கம், ஜெகன், குட்டிமணி, தங்கதுரை அனைவரும் ஒருங்கிணைந்தோம். அதில் மிகவும் இளையவர் தம்பி பிரபாகரன்.