தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



தையெங்கள் வாழ்வில் தலையாய மாதம்
தைபிறந்த பின்னால் வழிபிறக்கு மென்போம் 
பொங்கலெனும் பரிசைச் சுமந்துவரும் மாதம்
தையெனவே எண்ணி தான்மகிழ்ந்து நிற்போம் 

தைதொடங்கி விட்டால் தைரியமும் பெருகும்
தைப்பொங்கல் வாழ்வில் தனிதிருப்பம் அளிக்கும்
உள்ளமதில் உவகை ஊற்றெடுத்து நிற்கும்
உழைப்பதனை மனமும் ஏற்றுவிடத் துடிக்கும் 

பொங்கலெனும் வார்த்தை பூரிப்பைக் காட்டும்
மங்கலமாய் பொங்கி மகிழ்கவென உணர்த்தும்
சொந்தமெலாம் சேர்ந்து நிற்கவெனச் சொல்லும்
சூழ்ந்திருந்து சுவையாய் சுவைக்கும்படி வைக்கும் 

அஞ்சலிக்குறிப்பு ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் விடைபெற்றார் ! முருகபூபதி

 “ வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு


உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம் சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான்.

ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல.


மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறு வேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றி பெற்றுவிடுகின்றன. 

இவ்வாறு அர்த்தம் பொதிந்த எழுத்தை எழுதிய எமது அருமை இலக்கிய நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் நேற்றைய தினம் கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி என்னை வந்தடைந்தபோது, அதிர்ந்துவிட்டேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டும்  அஞ்சலிக் குறிப்பிற்கான ஆண்டாகத்தான் தொடங்கப் போகின்றதோ என்ற மனவேதனையுடன் இந்தக் குறிப்புகளை எழுத நேர்ந்துள்ளது.

சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்களை இறுதியாக கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இலக்கிய நண்பர் நடேசன் ஏற்பாடு செய்திருந்த நம்மவர் பேசுகிறார் மெய்நிகர் அரங்கில்தான் சந்தித்து உரையாடியிருந்தேன்.

    குறிப்பிட்ட  இந்த அரங்கு எம் அனைவரதும் இனிய இலக்கிய  நண்பர்       ‘ மக்கத்துச்சால்வை  ‘ எஸ். எல். எம். ஹனீபாவுடைய படைப்புலகம் மற்றும் அரசியல் , சமூகப்பணி சார்ந்து நிகழ்ந்த உரையாடல் சந்திப்பு.

பவளவிழாக்காணும் நாட்டிய நர்த்தகி கலாநிதி கார்த்திகா கணேசர் முருகபூபதி


இலங்கையின் மூத்த பரத நாட்டிய நர்த்தகியும், தமிழ்க்கலை உலகப்புகழ்பெற்ற நடனக்கலைஞர் ( அமரர் )  பத்மபூஷன்  வழுவூர் இராமையா பிள்ளை அவர்களின் சிரேஷ்ட மாணவியுமான கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள் இந்த ஆண்டு பவளவிழாக் காணுகிறார்.

அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் இவர்,  இங்கும் தனது ஆற்றல்களை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தியவாறு நடனம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவருகிறார்.

அத்துடன் சிட்னியிலிருந்து தினமும் 24 மணி நேரம் ஒலிபரப்பாகும் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சியிலும் பகுதி நேர நிகழ்ச்சித்தயாரிப்பாளராகவும் ஒலிபரப்பாளராகவும் இயங்கிவருகிறார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், சிட்னி உயர்திணை


இலக்கிய வட்டம் ஆகியனவற்றிலும் இணைந்திருக்கும் கார்த்திகாவின் வாழ்வும் பணிகளும்  நடனக்கலையுடன் பின்னியிருக்கின்றன.

இவரது கவிஞன் கனவு நாட்டிய நாடகம் 1982 இல் பாரதி நூற்றாண்டு காலத்தில்  இலங்கைத்தலைநகரில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மேடையேறியபோது,  அமைச்சர்கள் செல்லையா இராசதுரை, சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நாட்டய நாடகத்திற்கு இந்திய பிரபல இசையமைப்பாளர் எம்.பி. ஶ்ரீநிவாசன் இசையமைத்திருந்தார். அத்துடன் அவரும் குறிப்பிட்ட நிகழ்ச்சியின்போது இலங்கைக்கு வருகைதந்து கலந்து சிறப்பித்தார்.


இலங்கை எழுத்தாளர்கள் பேராசிரியர்  இந்திரபாலா, நீர்வை பொன்னையன், செ. கணேசலிங்கன்  ஆகியோரின் புதல்விகளும் கார்த்திகாவின் நடனப்பள்ளி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

கொழும்பில்  கலை  இலக்கிய  நண்பர்கள்  கழகம்  என்ற  அமைப்பு 1970  களில்  இயங்கியது.   இதில்  எழுத்தாளர்கள்  சாந்தன்,  மாவை நித்தியானந்தன்,   குப்பிழான்  சண்முகன்,  யேசுராசா,  இமையவன், நெல்லை க. பேரன், கே. எஸ். சிவகுமாரன்   உட்பட  சிலர்   அங்கம்வகித்து  அடிக்கடி கலை,  இலக்கிய  சந்திப்புகளை   நடத்திக்கொண்டிருந்தார்கள்.

புட்டும் தேங்காய்ப் பூவும் என்னவாயிற்று ? அவதானி


இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு,  இந்த ஆண்டுடன் 35 ஆண்டுகளாகின்றன.

1987 இற்குப்பின்னர், அதாவது குறிப்பிட்ட ஒப்பந்தம் உருவாகியபின்னர் இலங்கையிலும் இந்தியாவிலும் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

ராஜீவ்காந்தி, ஜே.ஆர். ஜெயவர்தனா, பிரேமதாச ஆகியோர் மறைந்துவிட்டனர். இவர்களில் இருவர் தற்கொலைக் குண்டுதாரிகளினால் கொல்லப்பட்டவர்கள். அந்த உடன்படிக்கையில்   ஒப்பமிட்ட ஜே.ஆர். இயற்கை மரணமெய்தினார்.

1987 இற்கும் மலர்ந்துள்ள 2022 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் அதிபர்கள், பிரதமர்களும் மாறிவிட்டனர்.

1987 இல் பிறந்த குழந்தைகள், திருமணமாகி


பெற்றோர்களுமாகியிருப்பர்.  2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்த போர்க்காலத்தில் பிறந்த குழந்தைகளும் 13 வயதை நெருங்கிவிட்டனர்.

எனினும்  ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய அந்த ஒப்பந்தம் இதுவரையில் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்றளவும் அது ஏட்டுச்சுரக்காய்தான்.

அந்தச்சுரக்காயை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்… பேசுகிறார்கள்… முடிவற்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷவும் இந்தியப் பிரதமர்  மோடியும் சில தடவைகள் இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் சில நாடுகளில் நடந்த உலக மாநாடுகளிலும் சந்தித்து பேசியும்விட்டனர்.

மீண்டும் சந்திப்பார்கள். பரஸ்பரம் கைகுலுக்குவார்கள். சுகநலன் விசாரிப்பார்கள்.  பருவகாலம் பற்றி பேசுவார்கள்.

அவ்வாறாயின்,  35 வருடத்திற்கு முன்னர் உருவான இந்த ஒப்பந்தம் பற்றி ஏதும் பேசமாட்டார்களா..? 

இலங்கையில் இன்னமும் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்ற உண்மை இந்தியப்பிரதமருக்கு இதுவரையில் தெரியாதா..?  குறிப்பிட்ட  இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்குரிய அதிகார பரவலாக்கம் நடக்கவில்லை என்பதாவது தெரியாதா..?

கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்து ஐந்து ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

                 

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவர்கள் எழுதும்   கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம்  அங்கம் 25 இன்று வெளியாகுகின்றது . மெல்பேர்னில் வசிக்கும் எழுத்தாளர் தொடர்ச்சியாக தமிழ்முரசுக்கு எழுதி வாசகர்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றுள்ளார் . வெள்ளிவிழா வாராமான இன்று அவருக்கு எமது நன்றியும் பாராட்டுக்களும் . நீண்ட காலம் அவர் மக்களுக்காக எழுத வாழ்த்துக்கள் .

ஆசிரியர் குழு 

   பழக்கடைகளில் பலபழங்கள் மத்தியில் பனம்பழம்


இடம்
 பெறாவிடி னும் தெரு ஓரங்களில் பனம் பழங்களை விற்பதும் அதனை வாங்குவதும் நடைபெற்று வருகிறது என்னும் செய்தியானது - எங்களின் சொந்தப்பழம் எங்களை விட்டுப் போய்விடவே இல்லை என்பது மகிழ்வினை ஏற்படுத்துகிறதல்லவா ! தமிழ்நாட்டில் சேலத்தில் தெரு ஓரங் களில் பனம்பழங்களை விற்பவர்களைக் காணலாம்.விவசாயிகள் பலர் சேலம் பகுதியில் தெரு ஓரங்களில் பனம்பழக் காலங்களில் பனம் பழங்களை எடுத்துவந்து அதனைக் குவியலாக வைத்து விற்று வருகிறார்கள்.பச்சையாகவும் கொடுக்கிறார்கள். விரும்பினால் அதே இடத்தில் பனம்பழத்தினைச் சுட்டும் விற்பனை செய்கிறார்கள்.ஒரு பனம் பழத்தை இருபது அல்லது முப்பது ரூபாய்க்கு விற்பதாக விற்பனையில் ஈடு பட்டி ருக்கும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இலங்கை யிலும்

பனம்பழங்
 கள் விற்கப்பட்டன என்றும் அறிந்திட முடிகிறது.பனம்பழக் காலத்தில் புத்தளம்சிலாபம் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் பனம்பழங்கள் நூறு ரூபா தொடக்கம் நூற்று ஐம்பது ரூபாய் வரைக் கும் விற்பனை செய்யபட்டிருக்கிறது. எங்களின் சொந்தப் பழமான பனம்பழமானது மற்றய பழங்களுக்கு ஈடு கொடுக்கும் பாங்கிலே இருக்கிறது என்ப தைக் கருத்திருத்துதல் அவசியமே யாகும். யாழ்ப்பாணம் என்றவுடன் மாம்பழமே யாவரதும் நினைவுக்கு வந்து நிற்கும். மாம்பழத்துடன் பனம்பழமும் யாழ்மண் ணில் சிறப்பாய் அமைகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - கொஞ்சும் சலங்கை - ச. சுந்தரதாஸ் - பகுதி 26

.


பரதக் கலையினதும் நாதஸ்வர இசையினதும் மகோன்னதத்தை விளக்கும் வகையில் தில்லானா மோகனாம்பாள் என்ற படம் 1968ல் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது தெரிந்ததே.ஆனால் இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 1962ல் ஒரு படம் பரதத்தையும் நாதஸ்வரத்தையும் மேன்படுத்தி வெளிவந்தது ! சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அந்தப் படம்தான் கொஞ்சும் சலங்கை.வண்ணப் படங்கள் மிக அரிதாக வெளிவந்த அந்த கால கட்டத்தில் டெக்னிக் கலரில் இந்தப் படம் உருவானது.படத்தின் கலர் பிரதிகள் லண்டன் மாநகரில் பதிவு செய்யப்பட்டன.

பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு உதாரணமாக மிகுந்த பொருட்செலவில் ஏராளமான செட்கள் போடப் பட்டு ரசிகர்களை பிரமை கொள்ளும் வகையில் படமாகியிருந்தார்கள்.அறுபது ஆண்டுகளுக்கு முன்னமே இப் படத்தை நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் படமாக்கி இருந்தார்கள்.இன்றைய மதிப்பில் இது பல கோடிகளை எட்டும் . எம் ஜீ ஆருக்கு ஒரு நாடோடி மன்னன்,சிவாஜிக்கு ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரிசையில் ஜெமினிக்கு இந்தப் படம் அமைந்தது.கதாநாயகனாக ஜெமினி நடித்த முதல் கலர் படமும் இதுதான்.அதுமட்டுமன்றி அவரின் மனைவி சாவித்திரியின் நூறாவது படமாகவும் இது அமைந்தது.

படத்தின் மற்றுமொரு சிறப்பாக பிரபல நாதஸ்வர வித்வானாக திகழ்ந்த காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரம் படத்தில் வியாப்பித்திருந்ததாகும்.நாதஸ்வர கலைஞனாக வரும் ஜெமினிக்கு காருக்குறிச்சியாரின் நாதமே பயன்பட்டது.குறிப்பாக இன்றும் காலத்தால் மறையாத சிங்கார வேலனே தேவா என்ற பாடல் எஸ் ஜானகியின் குரலோடு கருக்குரிச்சி அருணாசலத்தின் நாதத்தோடு, தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றலாக ரசிகர்களை வசீகரித்தது.

இலங்கைச் செய்திகள்

 இலங்கையின் உறுதியான, நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும்

 பிரதமர் தலைமையில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழா

ஒமிக்ரோன் அலையின் விளிம்பில் இலங்கை

யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள்

தற்காலிகமாக தங்கியிருப்போர் பொலிஸில் பதிய வேண்டும்

வாரமஞ்சரி பிரதி ஆசிரியர் வாசுகியின் கணவர் எஸ். சிவகுமார் காலமானார்

நல்லூரானை தரிசித்த எதிர்க்கட்சித் தலைவர்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையருக்கு பாதிப்பு

புதிய குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில்!



இலங்கையின் உறுதியான, நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும்

இலங்கையின் உறுதியான, நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும்-Indian Foreign Minister S Jaishankar-Sri Lankan Finance Minister Basil Rajapaksa.jpg

- இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் உறுதியளிப்பு

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

வட கொரியா மூன்றாவது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை வீச்சு

நேட்டோ-ரஷ்யா பேச்சில் தொடர்ந்தும் பின்னடைவு

தடுப்பூசி பெறாதோருக்கு ஒமிக்ரோன் திரிபு ஆபத்து

உக்ரைன் தாக்குதல்: நிராகரித்தது ரஷ்யா

படகின் மீது பாறை வீழ்ந்து எழுவர் பலி

ஆங் சான் சூகியிற்கு மேலும் 4 வருட சிறைத் தண்டனை


வட கொரியா மூன்றாவது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை வீச்சு

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் மேற்பார்வையின் கீழ் மற்றுமொரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏவப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயற்பட்டு கடலில் சுமார் 1,000 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் இலக்கை தாக்கியதாக அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நவீன அரிச்சந்திரன் – சிறுகதை கே.எஸ்.சுதாகர்

குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கும் மேல் இருக்கலாம்.


தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை ஆசிரியர். பாடசாலை கேற்றிலிருந்து மைதானத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த அவரை இடைமறித்தாள் பார்வதி. அவளின் சேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான் கோபாலன்.

 “சேர்! என்னுடைய மகன் கோபாலன் பள்ளிக்கூடத்துக்கு எடுபட்டிருக்கின்றான். பாடசாலைக் கட்டிட நிதிக்கு 500 ரூபா கொடுத்திட்டு பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்படி கடிதம் வந்திருக்கு.”

 “உம்… சேர்க்கிறதுதானே!”

“எங்களிட்டை அவ்வளவு காசு இல்லை. அவரும் தோட்ட வேலைதான் செய்கின்றார். 200 ரூபா தான் தரமுடியும்.”

 அவர் பார்வதியை உற்றுப் பார்த்தார்.

 “அப்ப வேறை பள்ளிக்கூடத்திலை சேர்த்துக் கொள்ளுங்கோ” சொல்லிவிட்டு நடையைத் தொடர்ந்தார்.

 பார்வதி திகைத்துப் போனாள். இந்தப் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. கோபாலனுக்கு மூத்த சகோதரர்கள் இருவர் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் கெட்டிக்காரர்கள். கோபாலன் இதுவரைகாலமும் வீட்டிற்கு அண்மையாகவிருந்த ஆரம்பப் பாடசாலையில் படித்தான். இரண்டாம்நிலைப் படிப்பிற்காக இந்தப் பள்ளிக்கூடத்திற்கு விண்ணப்பித்திருந்தான். அதற்கான போட்டிப்பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தான். தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களில், புள்ளியடிப்படையில் கோபாலனுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருந்தது.

 பார்வதி ஆசிரியரைப் பார்த்தாள். கொஞ்சத் தூரம்தான் நடந்திருந்தார். பின்னாலே கலைத்துக் கொண்டு போனாள்.

தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தைப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 20/01/2022

 தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தைப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 20.01.22 அன்று காலை 10.00 மணி தொடக்கம் 11.30 மணி வரை நடைபெறும்.

சிறப்புப்பேச்சு: செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள்




தொடர்புகளுக்கு: 
பரமசாமி பஞ்சாட்சரம்     - தலைவர் :      0434006841
பொன்னையா இளங்கோ - செயலாளர்:  0421820266 

சிட்னி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் திருவிழா

 



மெல்போர்ன் முருகன் திருக்கோவில் திருவிழா



 

தை பூசம் திருவிழா ஞாயிறு 23 ஜனவரி 2022

 SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia



"தை பூசம்" என்பது ஒரு புனிதமான இந்து பண்டிகையாகும், இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

தை பூசம் நாள் ஆண்டுதோறும் தை மாதம்  'பூசம்' நட்சத்திரத்தின் போது அனுசரிக்கப்படுகிறது.   

ஸ்ரீ முருகன்,  சிவன் ஒளிமற்றும் ஞானத்தின் உருவமாக  அருள்பாலிக்கிறார்.

தீயதை முறியடிக்கும் தெய்வீக த்தடைநீங்க, பக்தர்கள் அவரை வேண்டிக்கொள்கிறார்கள்.

காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் 

பேர்த் பால முருகன் திருக்கோயில் - தை பூசம்