தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
வைகாசி விசாகம் மகத்துவம் மிக்கது !
வாழ்க வளமுடன் மந்திரச் சொல்லே !
மகிழ்ச்சி மலரும் மனமும் சிறக்கும்
நட்பு தொடரும் நல்லன விளையும்
ஆனந்தம் அகத்தில் அமர்ந்தே இருக்கும்
கண்ட உடனே களிப்புடன் பேசு
காலையில் கண்டால் வணக்கம் சொல்லு
புதிதாய் கண்டால் மலர்ச்சியைக் காட்டு
புத்துணர் வுன்னுள் புறப்பட்டு நிற்கும்
பேச்சினில் இகழ்ச்சியைத் தவிர் – அன்பு ஜெயா பா வகை: வஞ்சிப் பா (குறளடி).
வஞ்சிப்பா:
எப்போதுமே
எவ்விடத்திலும்
தப்பாமலே
தவறினைத்தவிர்!
உன்நினைவில்
உயரெண்ணமே
என்றுமெழவே
இயன்றதைச்செய்!
மற்றமாந்தரும்
மாண்புடையரே
உற்றயிடமும்
உவந்தளித்திடு!
இனம்தனையே இகழ்வோரையும்
மனம்மாற்றவே
முயன்றுவென்றிடு!
தனிச்சொல்:
என்றும்,
ஆசிரியச்
சுரிதகம்:
உன்றன் எண்ணம்
உயர்வாய் வைத்திரு,
நன்மை பெருகும்
நாட்டிலே,
அன்று இன்பம்
ஆறாய்ப் பெருகுமே!
மங்கையும் மயக்கமும்
-சங்கர சுப்பிரமணியன்
அந்தி சாயும் அற்புதமான அந்த வேளை
ஆற்று மணலில் கைகோர்த்து நடந்தோம்
என் இடக்கையும் அவள் வலக்கையும்
ஆயுள் ரேகைகள் இனையும்படி சேர்ந்தன
இணைந்திருப்போம் ஆயுள்வரை என்றோ
ஆற்று மணல் எங்களுக்கு பாய் விரிக்க
அருகிருந்த படகில் அவள் தோள் சாய்க்க
அவள் மடியில் நான் தலை சாய்த்தேன்
கண்ணதாசனும் என் நினைவில் வந்தான்
சிறு நெல்லின் மணிதனைப் போலவே
எந்தன் நிழலைக் கண்டேன் அவள் கண்ணில்
பகலோ மெல்ல மெல்ல இரவை நெருங்கியது
அவள் முகமும் என் முகத்தை நெருங்கியது
பகலை முழுதாய் விழுங்கியே இருள் சூழ்ந்தது
என் முகத்தை அவள் கார்குழலும் சூழ்ந்தது
நீர்க்குமிழி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
கதை வசனகர்த்தாவாக,படத் தயாரிப்பாளராக, டைரக்டராக,
ஸ்டூடியோ ஓனராக தமிழ் சினிமாவில் வளம் வந்தவர் ஏ கே வேலன். தமிழ் படித்து கற்றுத் தேர்ந்த இவர் ஒரு புலவரும் கூட. இதனால் புலவர் ஏ கே வேலன் என்று பலரும் இவரை அழைப்பார்கள். வணங்காமுடி, சுகம் எங்கே போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய இவர் 1960 ஆண்டு தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற படத்தை சிறிய பஜெட்டில் எடுத்து அந்தப் படம் பெரும் வெற்றி பெற அதில் கிடைத்த இலாபத்தில் அருணாசலம் ஸ்டுடியோவை நிறுவினார். ஆனால் அதன் பிறகு இவர் எடுத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை.
வேலன் அதனை படமாக தயாரிக்க தீர்மானித்தார். ராகினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரான அந்த நாடகத்தின் பெயர் நீர்க்குமிழி. அரசாங்க உத்தியோகத்தில் இருந்து கொண்டு நாடகங்களையும் நடத்திக் கொண்டிருந்த கே . பாலசந்தர் தான் அதன் கதாசிரியர் இயக்குனர். எம் ஜி ஆர் மூலம் அவரின் தெய்வத் தாய் படத்துக்கு வசனம் எழுதி திரைக்கு அறிமுகமான பாலசந்தர் தொடர்ந்து பூஜைக்கு வந்த மலர், நீலவானம் போன்ற படங்களுக்கும் கதை வசனம் எழுதினார். இப்போது அவரின் நீர்க்குமிழி நாடகத்தை படமாக்க முன் வந்த வேலன் இன்னும் ஒரு படி மேலே போய் பாலசந்தரை இயக்குனராகவும் அறிமுகப் படுத்த துணிந்தார். இந்த வகையில் நீர்க்குமிழி மூலம் பாலசந்தர் பட டைரக்டரானார்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
15-06- 2025 Sun : சைவமன்றம் வழங்கும் கலை அரங்கம்
22-06-2025 Sun: வராஹி அம்மன் கும்பாபிஷேகம் - சிட்னி துர்க்கை அம்மன் கோயில்
28-06- 2025 Sat: ETA presents Charity Night 2025 - Dinner Dance - Roselea Community Centre, Carlingford
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
இலங்கைச் செய்திகள்
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் - மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
பிலிப்பைன்ஸ் பிரஜையை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 வருட வதிவிட வீசா
தையிட்டி பிரச்சினை குறித்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை சமர்ப்பிப்பு
செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!
02 Jun, 2025 | 03:38 PM
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது.
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
உலகச் செய்திகள்
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட நான்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளிற்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாட்டிற் கு நன்றி.. கர்நாடகாவில் தக் லைப்க்கு தடை.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி
பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்
டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்: 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டம்
எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது'' - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட நான்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளிற்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு
Published By: Rajeeban
06 Jun, 2025 | 11:19 AM
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதிஉட்பட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.
நால்வரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகளை இலக்குவைத்து செயற்பட்ட நீதிபதியொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைகாசி விசாகம் - சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், 09 ஜூன் 2025, மாலை 5.30
வைகாசி விசாகம் முருகப்பெருமானின் (கார்த்திகேயரின்) பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி மாதம் (மே மாதம்) விசாகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
துர்க்கை கோவிலில் ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேனா ஆகியோருக்கு ஹோமம், பால் கலச அபிஷேகம் மற்றும் தங்க ரத ஊர்வலம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் - 9 ஜூன் 2025
உருவமற்ற, உருவமற்ற, தொடக்கமில்லாத, ஒளித் தூணாக ஒன்றாய் நின்ற பரம பிரம்மன், ஆறு கருணை முகங்களுடனும் பன்னிரண்டு கரங்களுடனும், உலக மீட்பிற்காக முருகனாக தெய்வீக அவதாரத்திற்கு வந்தார்.
முருகப் பெருமானின் உயர்ந்த தெய்வீக அவதாரம் தமிழ் மாதமான வைகாசி மாதத்தில் (மே மாதத்தின் நடுப்பகுதி - ஜூன் மாதத்தின் நடுப்பகுதி) நட்சத்திரக் கூட்டத்தில் நடந்தது.
மங்களகரமான "விசாக நட்சத்திரம்" என்பது வானத்தில் பிரகாசமாக பிரகாசிக்கும் மூன்று நட்சத்திரங்களின் கலவையாகும். இந்த நாளில்தான் இருண்ட சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், உயர்ந்த பாதுகாப்பையும் ஞானத்தையும் வழங்கவும் முருகன் தோன்றினார்.
SVT இல் "வைகாசி விசாகம்" திருவிழா ஜூன் 9, 2025 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சி: காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
முருகனுக்கு மூல மந்திர ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை.
வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநாக்ஷத்திரம் 09/06/2025
நம்மாழ்வார் திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) பிறந்தார். தனது வாழ்நாள் முழுவதும் (இந்த சம்சாரத்தில் 32 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது), புளியமரத்தடியில் (திருப்புலி ஆழ்வார்) தங்கியிருந்து, ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியே எப்போதும் யோகத்தில் (தியானத்தில்) இருந்தார்.
நம்மாழ்வார் 4 திவ்ய பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
· திருவிருத்தம் (ரிக் வேத சாரம்)
· திருவாசிரியம் (யஜுர் வேத சாரம்)
· பெரிய திருவந்தாதி (அதர்வண வேத சாரம்)
· திருவாய்மொழி (சாம வேத சாரம்)
நம்மாழ்வாரின் பிரபந்தங்கள் 4 வேதங்களுக்கு இணையாக இணைக்கப்பட்டுள்ளன. அவர் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றும் அழைக்கப்படுகிறார் - தனது தமிழ் பிரபந்தங்கள் மூலம் சமஸ்கிருத வேதங்களின் சாரத்தை வழங்கியவர்.
இதன் முன்னோட்டமாக, ஜூன் 7ஆம் தேதி தொடங்கி, ஜூன் 9ஆம் தேதி காலை வரை தினமும் மாலையில் திவ்யப் பிரபந்தம் (திருவோய்மொழி -1102 பாசுரங்கள்) ஓதப்படும்.
நிரல்
காலை 09.00 மணி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சன்னதியில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி தாயார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதை மற்றும் ஸ்ரீ லட்சுமணர் மற்றும் பிற தெய்வங்களுக்கு அபிஷேகம்.
காலை 10.30 மணி: சுவாமி நம்மாழ்வாருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்).
தொடர்ந்து அலங்காரம், மகா தீபாராதனை, சதுர்முறை நடைபெறும்.
ஆஷாதன நவராத்திரி மற்றும் மஹா சண்டி ஹோமம் 26/06/2025
சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஜூன் 26, 2025வியாழக்கிழமை முதல் ஜூலை 04, 2025 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாள் ஆஷாதன நவராத்திரி விழாவிற்கு துர்கா தேவியின் ஆசிகளையும் அருளையும் பெற பக்தர்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஜூன் 29, 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.
மஹா சண்டி யாகத்தில் கலந்து கொண்டு துர்கா அன்னையின் அருளைப் பெற ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானம் உங்களை அன்புடன் அழைக்கிறது.