மண்ணுலகு வாழும் வரை மண்டேலாவும் வாழ்வார் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்


சொந்த சகோதரர் சொத்தினைத் தின்றிடும்,
பந்து மித்திரர் பணப் பசி கொண்டிடும்,
வந்த புத்திரர் வரவினை கணக்கிடும்,
இந்த உலகிலும் ………………………

உரிமைக்காக ஊண் , உயிர் ஈந்த 
உன்னதத் தலைவர் மண்டேலாவுக்கு
இதோ ஒர் இரங்கற் பா!

ஒன்பது என்பது பெருக்கின் வர்க்கம்
பதினெட்டாம் ஆண்டு பதினெட்டாம் தேதி
ஆடியில் பிறந்த பெருக்கு - உம்மிடம்
இல்லை -  தான் எனும் செருக்கு

இன வெறி ஆதிக்கம் வைத்தது 
இருபத்து ஏழு ஆண்டு சிறை.
ஆனாலும் உலகு உம்மிடம்
கண்டதில்லை ஒரு கறை

ஆயுள் தண்டனை  மீண்ட  போது
உடல் எங்கும் கொண்டது சுருக்கம்
ஆனாலும்  நின் மனஉறுதி கண்டதோ  
உருக்கின் இறுக்கம்.

காதலனை தேடுகிறாள்!

தலைவனும் தலைவியும் உயிருக்குயிராய் காதலித்தனர். இணைபிரியாத துணையாக வாழ்ந்தனர். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த போது தலைவன் சொன்னான் ‘நான் பொருளீட்டி வந்தபிறகு நமக்கு திருமணம் நடைபெறட்டும். நான் இப்போது பொருளீட்ட வெளியூர் செல்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன்.’ என்று. தலைவியும் நம்பிக்கையோடு மூன்று வருடங்களாய் தலைவனுக்காய்க் காத்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில் தலைவனைத் தேடி அவன் சென்ற ஊருக்கே போய் அவனைத் தேடுகிறாள். அப்போது பாடுகிறாள் இப்படி.


பாலமிட்ட பால்நிலவு பால்வெளியில் பாடுதடா!
கோலமிட்ட காதல்நிலா காதலனை தேடுதடா!!
கன்னத்தின் வீக்கத்தை கண்ணீரின் ஏக்கத்தை
எண்ணங்களை கவிதைகளாய் எழுதுதடா என்பேனா!!

பனிவாடைக் காடுகளில் பகல்நேரம் பாடுகிறேன்!
துணிவோடு நானுனையே துணையாகத் தேடுகிறேன்!!
வெயில்நேரம் வந்தபோதும் குயில்கூவும் சத்தம்!
உயிரோடு பதிந்ததடா உன்நினைவே நித்தம்!!

காற்றோடு பேசுகிறேன் கவிதைவழி பாடுகிறேன்!
நேற்றோடு போனவனே நெஞ்சோடு வாழ்பவனே!!
கொஞ்சிக்கொஞ்சிப் பேசவந்து காதல்தனை வளர்த்தவனே!
வஞ்சியென் மனங்கவர்ந்து வாழ்க்கைத்துணை தந்தவனே!!

மணமேடை ஏறும்முன்னே மணாளனேநீ போனதென்ன!
பிணவாடை வீசுவதுபோல் பிணமாகநான் ஆனதென்ன!!
செத்தாலும் சுகந்தருமே முத்தாக உன்முகம்வருமே
கத்தாத குயில்நானே பித்தாக ஆனேனே!!

மோனநிலை கனவுறக்கம் மங்கையென் உயிரிருக்கும்!
தேனொழுக நீபேச முத்துமுத்தாய் கவிபிறக்கும்!!
எங்கேயோ போனாயே என்னோடு வாநீயே!
மங்காத புகழோடு வாழ்வோம் இங்கேயே!!
-  முனைவென்றி நா. சுரேஷ்குமார்

உறவுக் கரங்கள் 14.12.2013

.

நெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு உலக தலை­வர்கள் அனு­தாபம்




07/12/2013    தென்­னா­பி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டேலா வியா­ழக்­கி­ழமை தனது 95 ஆவது வயதில் மர­ண­மா­ன­தை­யொட்டி உலகத் தலை­வர்கள் பலரும் ஆழ்ந்த கவ­லையை வெளி­யிட்­டுள்­ளனர்.

இந்த உல­கத்­திற்­கான மிகப் பெரிய ஒளி மறைந்து விட்­டது என பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் தனது அனு­தாபச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.
எமது காலத்தில் உச்ச நிலை­யி­லி­ருந்த உலகின் உண்­மை­யான வீர­பு­ருஷர் ஒரு­வ­ர் மர­ண­ம­டைந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.
பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்கொயிஸ் ஹொலன்ட் தனது அனு­தாபச் செய்­தியில், நெல்சன் மண்­டே­லாவின் மறைவானது சுதந்­தி­ரத்­துக்­காக போரா­டு­ப­வர்­க­ளுக்கு உத்­வே­க­ம­ளிப்­ப­தாக தொடர்ந்தும் இருப்­ப­துடன் பிர­பஞ்ச உரி­மை­களை பாது­காப்­பதில் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிப்­ப­தா­கவும் இருக்கும் என தெரி­வித்தார்.

விநாயகர் ஷஷ்டி - சிட்னி முருகன் கோவில்

படப்பிடிப்பு  ஞானி




சமயச் சொற்பொழிவு - Religious discourse in English 14 - 12 - 2013 10AM








தகவல் தினம் 15 - 12 - 2013






உலகச் செய்திகள்


அமெரிக்காவில் ரயில் விபத்து: நால்வர் பலி

விமான விபத்தில் 33 பேர் பலி

யேமன் பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தின் மீது குண்டுத் தாக்குதல்

==========================================================================

அமெரிக்காவில் ரயில் விபத்து: நால்வர் பலி


02/12/2013    அமெரிக்கா, புரான்ஸ் பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியானதுடன் 65க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், புரான்ஸ் என்ற இடத்தில் சென்ற போது, வளைவில் வேகமாகத் திரும்பியுள்ளது. இதன்போது, ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
இந்த விபத்தையடுத்து நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.    நன்றி வீரகேசரி 

நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 1) - மருதன்


    ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் இருவரிடம் இருந்தும் மனிதத்தன்மை களவாடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவரும்போது, இந்த இருவரையும் விடுவிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதை நாம் அடைந்துவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை. நாம் இன்னும் முழுமையான சுதந்தரத்தை அடையவில்லை. பயணத்தின் இறுதி இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. மாறாக, முதல் அடியை மட்டும் எடுத்து வைத்திருக்கிறோம். நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உதறித்தள்ளுவது மட்டும் சுதந்தரம் ஆகாது. மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் நாம் மதிக்கவேண்டும். மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக நம் வாழ்க்கை அமையவேண்டும்.  - - நெல்சன் மண்டேலா
Nelson_Mandela-2Nelson-Mandela’s-Top-Five-Contributions-to-Humanityசிறையில் இருந்தபோது மண்டேலா எழுதிய சுயசரிதை 1994 இறுதியில் The Long Walk to Freedom என்னும் பெயரில் வெளியானது. தென் ஆப்பிரிக்காவில் அதுவரை வெளிவந்த புத்தகங்களில் அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்த புத்தகம் இதுவே. தென் ஆப்பிரிக்கா தனது நீண்ட பாதையில் ஓரடியைத்தான் எடுத்து வைத்துள்ளது என்று மண்டேலா அதில் குறிப்பிட்டிருந்தார்.  அனைவருக்கும் விடுதலை தேவை. ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குபவர்களுக்கும். ‘விடுதலைக்கான நீண்ட பாதையில் நான் நடந்து சென்றிருக்கிறேன். ஒரு கணம்தான் என்னால் ஓய்வெடுத்துக்கொள்ளமுடியும். சுதந்தரத்தோடு சேர்ந்து பொறுப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. எனவே, எனது நீண்ட பயணம் இன்னும் முடிவடையவில்லை.’ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மண்டேலா அந்தப் பாதையில் ஓய்வில்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.

நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 2) - மருதன்




Nelson Madela-10இனவெறிக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின் போராட்டத்துக்கு க்யூபா அளித்த ஆதரவும் பங்களிப்பும் முக்கியமானது. தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல ஆப்பிரிக்காவிலும் பல அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று மண்டேலாவைப் போலவே காஸ்ட்ரோவும் விரும்பினார்.

அசலான கம்யூனிச தேசங்களாக சோவியத் யூனியன், சீனா இரண்டும் திகழ்ந்தபோது, அவை தம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட பிற நாட்டு மக்களுக்கும் ஆதரவு அளித்துவந்தன. இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், சோவியத்திடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் உதவியும் உத்வேகமும் பெற்றனர். ஸ்டாலின், மாவோ இருவரும் தொலை தேசங்களில் நடந்துவரும் போராட்டங்களையும் அறிந்து வைத்திருந்தனர். அந்தப் போராட்டங்களில், ஒடுக்கப்படுபவர்கள் யார், ஒடுக்குபவர்கள் யார் என்பது பற்றிய மதிப்பீட்டை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்களது வெளியுறவுக் கொள்கை அவ்வாறே வடிவம் பெற்றது.

திரும்பிப்பார்க்கின்றேன் 18 இசைத்தமிழ் ஆய்வில் ஈடுபட்ட இனிய நண்பன் ராஜ ஸ்ரீகாந்தன் முருகபூபதி







நேற்று      எம்மிடம்       இல்லை,      நாளை      எப்படியோ     தெரியாது.   



  ஆனால்,       கைவசம்       இருப்பது    இன்று.      இன்று    இப்படி    ஒரு    பதவி     கிடைக்கும்    என     எதிர்பார்க்கவில்லை.     நெருங்கிய    இலக்கிய   நண்பர்களிடம்      ஆலோசித்துவிட்டே      பொறுப்பேற்கிறேன்.”
ராஜ    ஸ்ரீகாந்தன் -      தினகரன்      பிரதம    ஆசிரியர்    பதவியை ஏற்றவேளையில்       தொலைபேசியில்     நிதானமாகச்     சொன்ன     அந்த  வார்த்தைகள்     எவ்வளவு      தீர்க்கதரிசனமானவை      என்பதை   அவர் அப்பதவியிலிருந்து     விலக்கப்பட்டதன்      பின்புதான்       புரிந்து கொள்ள  முடிந்தது.
லேக்ஹவுஸ்       எனப்படும்       ஏரிக்கரை      இல்லத்திலிருந்து  மும்மொழிகளிலும்      பத்திரிகைகள்     வெளியானாலும்      தினகரன் பத்திரிகைக்கெனவும்       தனிவரலாறு     உள்ளது.       எட்டு தசாப்தங்களுக்கு    (80 ஆண்டுகள்)    முன்பு     விஜேவர்தனாவால்     சிங்கள     ஆங்கில  பத்திரிகைகளுடன்      உதயமானதுதான்      தினகரன்.

இலங்கைச் செய்திகள்

அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள்: மனோ கணேசன்

ஐ.நா. விசேட அறிக்கையாளர் பெயானி இலங்கை வருகை

ஐ.நா. விசேட பிரதிநிதியுடன் விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடல்

நள்ளிரவில் கதவைத் தட்டிய கப்பல் கப்டன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு

முல்­லைத்­தீவு விகாரையின் காணி உறுதியை ஐ.நா. பிரதிநிதியிடம் காண்பித்த உரிமையாளர்

கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து இடைநிறுத்தம்

பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்புப்பேரணியும்


'எங்களுக்கு எதுவும் வேண்டாம் சொந்த இடத்தில் வாழவிடுங்கள்"



=====================================================================

அழிவு வரும்; வந்தே தீரும்; காத்திருங்கள்: மனோ கணேசன்

03/12/2013    கொழும்பு கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான காணிக்கை உண்டியல் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் நான்கு இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் மலையகத்தில் நடைபெற்றுள்ளன. வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு-கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல்மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 
கொள்ளை சம்பவத்துக்கு உள்ளான கல்கிசை படோவிட 2ம் வட்டார ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்துக்கு நேரடியாக இன்று காலை சென்ற மனோ கணேசன், அங்கு ஆலய குருக்கள் மற்றும் அறங்காவலர் சபை உறுப்பினர்களிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார். மனோ கணேசனுடன் ஜமமு மாநகரசபை உறுப்பினர்கள் சண். குகவரதன், எஸ். பாஸ்கரா ஆகியோரும் சென்றிருந்தனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,

உலகின் ஒப்பற்ற ஓவியக் க​லைஞனாகத் திகழ்ந்த ஏ​ழை… ​

.

முனைவர் சி.சேதுராமன்

buonarroti_michelangelo

 தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

வாங்க….வாங்க…என்னங்க ​வேகமா வர்ரீங்க…என்ன ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்கு வி​டையக் கண்டுபிடிச்சிட்டீங்களா…?என்ன இல்​லையா…? முயற்சி பண்ணி​னேன் ஆனா வி​டையத் ​தெரிஞ்சுக்க​வே முடிய​லேன்னு ​சொல்றீங்களா…? பராவாயில்​லை. நீங்க முயற்சி பண்ணிருக்கீஙகள்ள…அதுவ​ரையிலும் பாராட்டணும்… சில ​பேரு எதுவு​மே ​செய்யாம எல்லாம் நடக்கணும்ணு ​நெனக்கிறாங்க.. அது முடியுமா…? ஒங்களப் ​போல முயற்சியாவது ​செய்யணும்…


முயற்சி பயிற்சி​யைத் தரும்…அந்தப் பயிற்சி வாழ்க்​கையில ​பெரிய ​வெற்றியத் தரும்…. இதப் புரிஞ்சிக்கணும்…நம்ம வள்ளுவப் ​பெருமான்கூட “முயற்சி திருவி​னையாக்கும்” அப்படீன்னு ​சொல்லியிருக்கார்ல..இப்படி முயற்சி ​செய்யறவங்கதாங்க ஊ​ழை(விதி​யை) ​வெல்லக் கூடியவங்க.. வள்ளுவர் கூறிய வழியில முயற்சியால ஏழ்​மையிலிருந்து விடுபட்டு உலக​மே புகழும் அளவுக்கு உயர்ந்தவருதான் ​மைக்கலாஞ்ச​லோ அப்படீங்கற ஓவியர். ஐ​ரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்துல சிற்பக்க​லை, ஓவியக்க​லை, கட்டடக்க​லை, கவி​​தைக்க​லை என்ற நான்கு க​லைகளுக்கும் மறுமலர்ச்சி​யை ஏற்படுத்தியவரு இந்த ஓவியர்தான். ஐ​ரோப்பிய வரலாறு இவ​ரை நான்கு உயிர்கள் ​கொண்ட உன்னதக் க​லைஞனாக வருணிக்கின்றது. அவரப் பத்திச் ​சொல்​றேன் ​கேளுங்க…
பிறப்பும் க​லைகளில் ஆர்வமும்

1475-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் இத்தாலியில் உள்ள ​கேப்​ரெஸ் (Caprese) என்ற நகரில் பிறந்தார். அவரு​டைய முழு​மையான ​பெயர் மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி என்பதாகும். அவர் பிறந்த ​நேரம் அவரது குடும்பம் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தது. அவ​ரைப் படாதபாடுபட்டு அவரு​டைய ​பெற்​றோர் வளர்த்தாங்க.
ஒரு கட்டத்துல அவருக்குச் சரியாச் சாப்பாடுகூடக் ​கொடுக்க முடியாத நி​லையில மைக்கலாஞ்சலோ​வை ஒரு கல்தச்சர் வீட்டில் அவரு​டைய ​பெற்​றோர் விட்டுட்டாங்க. அந்தச் சிறுவயதிலிருந்​தே மைக்கலாஞ்சலோ உளியையும், சுத்தியலையும் பயன்படுத்தி சிற்பங்க​ளைச் ​செதுக்கத் தொடங்கினார். இருப்பினும் ஓவியத்தின் மீது மைக்கலாஞ்சலோவிற்கு அலாதியான விருப்பம் இருந்தது.

தமிழ் சினிமா

வணக்கம் சென்னை

மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானத்தின் கலக்கல் காம்பினேஷனில் வெளியான படம் 'வணக்கம் சென்னை'.
தேனியில் இருந்து வேலைக்காக புறப்படும் சிவாவையும், லண்டனில் இருந்து போட்டோகிராபிக்காக கிளம்பும் ப்ரியா ஆனந்தையும் அன்புடன் வரவேற்கிறது சென்னை.
இருவருக்கும் சென்னை புதிது என்பதால், தங்கள் குடியேறும் வீட்டின் ப்ரோக்கரின் தில்லு முல்லால் ஒரே வீட்டில் குடியேறும் சூழல் ஏற்படுகிறது.
பின் என்ன வந்தாரை வாழ வைக்கும் சென்னை, இவர்கள் இருவரையும் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக டான்ஸ் ஆட வைக்கிறது கலகலப்புடன்.
ஹோலிப்பண்டிகையில் ப்ரியா ஆனந்த் பூசிய வண்ணத்தில் கலர்புல்லாக, காதலின் நிறம் தேட ஆரம்பித்து விடுகிறார் சிவா.
இந்நிலையில் இவர்களை ஏமாற்றிய வீட்டு ப்ரோக்கராக நமது கொமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி கொடுக்க, அதை தெரிந்தும், தெரியாததைப் போல் சிவா சமாளித்து விட்டு விடுகிறார்.
பின் தன் காதலை ப்ரியா ஆனந்துடன் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், ப்ரியா ஆனந்துக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரிய வருகிறது.
இதனால் கோபமடைந்த சிவா, தங்களை ஒன்றாக தங்கவைத்து எஸ்கேப்பான சந்தானத்தை கண்டுபிடித்து மாறுகால் மாறுகை வாங்குகிறார்.
அதற்கு பரிகாரம் செய்வதற்கு இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக சிவாவிடம் சரண்டர் ஆகிறார் சந்தானம்.
வழக்கம் போல் சில முயற்சிகளில் மிஸ் ஆகி, இறுதில் ப்ரியா ஆனந்துக்கும் காதல் மலர்கிறது.
அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்... ஒன்னுமில்லைங்க நம்ம ப்ரியா ஆனந்துக்கு நிச்சயம் பண்ண அந்த அமெரிக்க மாப்பிள்ளை... ஆ..சாரி..சாரி... இதில் லண்டன் மாப்பிள்ளையாக ராகுல் ரவிந்திரன் என்ட்ரி கொடுக்கிறார்.
அப்புறம் என்ன, இவங்க காதல் கைகூடுச்சா..? இல்ல பிரிஞ்சுட்டாங்களா..? என்பது மீதிக்கதையின் சுருக்கம்.
சிவா வழக்கம்போல் ஒரே ஸ்டைலில் வந்து ஏதோ நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரதர்!
ப்ரியா ஆனந்த் தனது கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ, அதை கச்சித்தமாக செய்திருக்கிறார். கேட்ஸ் ஆப் ப்ரியா!
சந்தானம் கொஞ்சம் இடைவெளிவிட்டு(படத்தில்) வந்தாலும், கொமெடி சரவெடியை கோலாகலமாகவே வெடிக்கவைத்திருக்கிறார்.
ராகுல் நவிந்திரன், லண்டன் மாப்பிளையின் தேவைக்கேற்ப நடித்துள்ளார்.
பின், நிழல்கள் ரவி, ரேணுகா, ப்ளாக் பாண்டி, ஊர்வசி, நாசர், மனோபாலா, சுவாமிநாதன், ஆர்த்தி என்று அவரவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியுள்ளனர்.
அறிமுக பெண் இயக்குனரான கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்துக்கள். தான் நினைத்ததை பெர்பக்ஷனோடு எடுத்திருக்கிறார்.
கதையில் சில இடங்களில் ஓட்டை, உடசல்கள் தெரிந்தாலும் அதை தனது கொமெடிக் கலந்த திரைக்கதையால், நம் கண்களை மறைத்து விடுகிறார்.
அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
லண்டன், சென்னை, தேனி ஆகிய இடங்களுக்கு நம்மை பிக்னிக் கூட்டிச் செல்கிறது ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவு.
அதுவும் 'ஓ பெண்ணே..பெண்ணே' பாடல் கமெரா வெவ்வேறு கோணங்களில் நகர்வது மிக அழகு. சல்யூட் ரிச்சர்ட்!
படத்தின் திரைக்கதை நீண்ட நேரம் பயணித்தாலும்... பார்ப்பவர்களின் பார்வைக்கு சற்றும் சலனம் தராமல், தத்தம் தனது பணியை வெகு சிறப்பாக செய்திருக்கிறார் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ். சூப்பர் பாஸ்!
மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, லாஜிக் விதிகளையும் மறந்து திரையரங்குக்கு வருவோரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது இந்த வணக்கம் சென்னை.
நடிகர்கள்: சிவா, சந்தானம், ராகுல் ரவிந்திரன்
நடிகைகள்: ப்ரியா ஆனந்த், ஊர்வசி, ரேணுகா, ஆர்த்தி
ஒளிப்பதிவு: ரிச்சர்ட்.எம்.நாதன்
இசை: அனிருத்
இயக்கம்: கிருத்திகா உதயநிதி
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்
நன்றி விடுப்பு

ஜூனோ மற்றும் ஆதலால் காதல் செய்வீர் - ஷைன்சன்

.

ஜூனோ (அமெரிக்கா, இயக்குநர் – ஜேசன் ரைட்மன்) மற்றும் ஆதலால் காதல் செய்வீர் (தமிழ்நாடு, இயக்குநர் – சுசீந்திரன்) இரண்டு கலாச்சாரங்களும் ஒரு நிகழ்வும்





இவ்விரண்டு திரைப்படங்களும் கலைப்படைப்புகள் என்ற அளவில் பெரிய மைல்கற்கள் அல்ல. கலாசாரப் பிரதிபலிப்பு என்ற தளத்திலேயே இவை செயல்படுகின்றன. இவ்விரண்டுமே ஒரே நிகழ்வினை மையமாகக் கொண்டுள்ளன- எதிர்பாராமல் கருவுறுதல். இந்நிகழ்வுக்கு இரு வேறுபட்ட சமூகங்கள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை இத்திரைப்படங்களின் மூலம் காண்கிறோம்.

இரண்டு திரைப்படங்களிலும் வரும் குடும்பங்கள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவையே. எனவே சமூகப்படிநிலையின் தாக்கத்தைப் பற்றி நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை. கலாச்சாரத் தாக்கமே இரண்டு திரைப்படங்களையும் வேறுபடுத்துகிறது.

ஜூனோ திரைப்படத்தில் உடலுறவில் ஈடுபடும் பிளீக்கருக்கும், ஜூனோவுக்குமான உறவு நட்பு என்ற அளவில் தான் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை உடல் உறவு என்பது அவர்கள் வயதுக்கேற்ற ஒரு கண்டுணர்தலே. பிளீக்கரைப் பொறுத்த வரையில் ஜூனோவிடம் நட்பையும் கடந்த ஒரு ஈடுபாடு இருந்தும் அவன் அதைப் பற்றி அழுத்தமாகப் பேசுவதில்லை. ஜூனோ அவர்களிருவருக்குமான உறவை நட்பு என்றே புரிந்து கொள்கிறாள்.