.
நான்கு அமர்வுகளில் நிகழ்ச்சிகள்
ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்
பாராட்டு -
கருத்தரங்கு
நூல் அறிமுகம் -
ஆவணப்படம்
-
குறும்படம் காட்சிகள்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமும் இணைந்து, கன்பராவில் கலை இலக்கியம் - 2016 என்னும் நிகழ்ச்சியை கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் (Canberra Tamil Senior Citizens Hall, 11 Brumby Street, Isaacs,
ACT 2607)
எதிர்வரும் 4 ஆம் திகதி (04-06-2016) சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஒழுங்குசெய்துள்ளன.
நான்கு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை கன்பரா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ஞானசிங்கம், கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள்
சங்கத்தின் தலைவர் திரு. முருகேசு ருத்திரன், கனடாவிலிருந்து வருகைதந்துள்ள இலக்கிய ஆர்வலர் கலாநிதி கே. கணேசலிங்கம், இலங்கையிலிருந்து
வருகைதந்துள்ள எழுத்தாளர் திருமதி ஞானம் ஞானசேகரன், கவிஞி திருமதி ஆழியாள் மதுபாஷினி ரகுபதி ஆகியோர் மங்கள விளக்கேற்றி தொடக்கிவைப்பர்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கையின் மூத்த படைப்பாளியும் ஞானம் ஆசிரியருமான
டொக்டர் தி. ஞானசேகரனின் அயராத இலக்கியசேவைகளை பாராட்டி எழுத்தாளர் திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம் உரையாற்றுவார்.
ஞானசேகரனுக்கு
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்படும்.
டொக்டர் ஞானசேகரன் தமது ஏற்புரையுடன் "
ஈழத்து இலக்கியமரபின் இன்றைய நிலை " என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துவார்.