சைவமும் வைணவமும் சங்கமிக்கும் சமயவிழா

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 


  " மாதங்களில் நான் மார்கழி " என்று கீதையில் கண்ணன்


கூறுகிறார்.திருவெம்பாவையினைத் தந்து சிவனை முன்னுறுத்துகிறார் மணிவாசகப் பெருமான் மார்கழியில். ஆண்டாள் நாச்சியாரும் வந்து திரு வாய் மொழியினை வழங்கித் திருமால் பெருமையைப் பேசுகின் றார். சைவமும் வைணவமும் சங்க மிக்கும் சமய நிகழ்வாய் சமய விழாவாய் " மார்கழியில் திருவெம்பாவையும் திருப்பாவையும் " அமைகிறது அல்லவா ! ஆனால் மார்கழியில் மங்கல நிகழ்ச்சிகளுக்கு இடங் கொடுக்காமல் விட்டு விட்டோம். இந்த வகையில் இணைவதாய்

ஆடியும் வந்து நிற்கிறது. ஆனால் ஆடியும்
  - மார்கழி போல் மகத்தான மாதமேயாகும். மார்கழியில் சைவமும் வைணமும் சங்கமிப்பது போல - ஆடியிலும் சங்க மிக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

  ஆடியில் வருகின்ற பூரம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். ஆடிப்பூரம் சைவ ஆலயங்களிலும்.  வைணவ ஆலயங்களிலும் மிகவும் முக்கியத்துவம் மிக்க சமய நிகழ்வாய் சமய விழாவாய் இடம் பெறுவதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது.ஆடிப் பூரம் அம்மனின் அற்புதத் திருவிழாவாகும். மக்களையும் உலகினையும் காப்பதற்கு அம்பாள் சக்தியின் உருவாய் அவதரித்த தினமாய் ஆடிப் பூரம் கொள்ளப்படுகிறது. அதே வேளை வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகவும் கொள்ளப்படுகிறது. உமாதேவி அவதாரம் செய்ததாய் சிவபுராணம்சொல்லுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடிக்கு அருகில் குழந்தையாய் ஆண்டாள் நாச்சியார் அவ தாரம் செய்ததாக வைணவவர்கள் நம்புகின்றார்கள். சக்தியின் அவதாரமாகவே ஆண்டாளின் அவதாரம் கொள்ளப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கது.இந்த ஆடிப்பூர தினத்தில்த்தான் சித்தர்களும்,யோகிகளும் தவத்தைத் தொடங்குவார்கள் என்று புராணங்கள் புகலுவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

அமரர் சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு நினைவை இன்று கொண்டாடும் கரவெட்டி மக்கள்

 July 20, 2023 4:04 pm 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் உடுப்பிட்டி, நல்லூர் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் பிறந்ததின நூற்றாண்டு நினைவை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான வடமராட்சி, கரவெட்டி மக்களின் சார்பில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியம் இன்று வியாழக்கிழமை மாலை அங்குள்ள மகேசன் விளையாட்டரங்கில் விழாவொன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

அவரின் அரசியல் வாழ்வை விபரிக்கும் ‘தலைவர் சிவா 100’ என்ற ஆவண நூலும் வெளியிட்டு வைக்கப்படுகிறது.

சிவசிதம்பரத்தை ‘சிவா’ என்றே எல்லோரும் அன்புடன் அழைப்பர். அவர் கரவெட்டியின் அடையாளங்களாக விளங்கிய மகத்தான ஆளுமைகளில் ஒருவர். சிவாவை நினைவு கூருவது என்பது சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழர் அரசியலை ஆகர்சித்திருந்த பெருந்தலைவர்களில் ஒருவரின் நினைவை மீட்டுவது என்பதற்கு அப்பால், கரவெட்டி மக்களைப் பொறுத்தவரை தங்கள் மத்தியில் வாழ்ந்த ஆளுமையின் நினைவை கொண்டாடுவதாக அமைகிறது.

தமிழறிஞர் ஜி.யு.போப் திருவுருவச் சிலை அவர் பிறந்த மண்ணில் - நிகழ்வும் செவ்வியுமான பகிர்வு - கானா பிரபா


ஜி.யு.போப் எனத் தமிழர்களால் அறியப்பட்ட ஜோர்ஜ் உக்லோ போப், 1820ஆம் ஆண்டில் கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள பெடெக் எனும் ஊரில் பிறந்தார்.
உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியை அவர் தனது 17வது வயதிலேயே கற்கத் தொடங்கினார். அவர் 1839ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தமிழ் மொழியில் புலமை பெற்றார்.
திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை இவரது சிறப்பான சேவையாகும்.
இந்தியாவில் 42 ஆண்டுகள் சேவையாற்றியபின் 1881ஆம் ஆண்டில் இங்கிலாந்து திரும்பிய திரு போப், அங்குள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.
கனடாவில் பிறந்த ஜி.யு.போப் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் தமிழ்ப் பணியாற்றினார். ( சிங்கை தமிழ் முரசு செய்திக் குறிப்பு)

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 73 துக்கம் விசாரிப்பதற்கான தாயகப் பயணம் ! ஒரு மாத காலம் சூறாவளிச் சுற்றுலா !! முருகபூபதி


கனடா பயணத்தை நிறைவுசெய்துகொண்டு, கட்டார் மார்க்கமாக எனது தாயகத்திற்கு புறப்பட்டபோது,  எனது நிகழ்ச்சி நிரலை மனதிற்குள் பதிவேற்றிக்கொண்டேன்.

இலங்கையில் நிற்கப்போகும்  சுமார் ஒரு மாத காலத்துள் யார், யாரை சந்திக்கவேண்டும், எத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டும் என்பது பற்றிய ஒரு பதிவை எனது கணினியில் ஏற்கனவே எழுதி வைத்திருந்தேன்.

இம்முறை  எனது  தாயகப் பயணம் சற்றுவித்தியாசமாகத்தான்


இருக்கும் என்பது  அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பே எனக்குத்  தெரியும்.

இறுதியாக 2019 ஆம் ஆண்டு இரண்டு தடவைகள் அடுத்தடுத்து இலங்கைக்கு வரநேர்ந்தது.  அதன்பின்னர் கொவிட் பெருந்தொற்று நெருக்கடி வந்தமையால், சுமார் நான்கு ஆண்டுகள் அவுஸ்திரேலியா எல்லையை விட்டு நகரமுடியாமல் இருந்தது.

2023 மே மாதம்  கனடா , கட்டார், இலங்கை பயண ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தவேளையில், எனக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இலங்கை சென்றவேளையில் எதிர்பாராதவகையில் இறந்துவிட்டனர்.

இதில் இருவர் விமானத்திலேயே உயிர் துறந்திருந்தனர்.  ஒருவர் இலங்கைக்கு சென்றவிடத்தில் மரணித்திருந்தார். 

நான் நீண்டகாலமாக நிரிழிவு உபாதையுடனும் இதயம் சம்பந்தப்பட்ட  சிகிச்சைகளுடனும் இயங்குவதனால், எனது நீண்ட பயணம் குறித்த கவலை எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொற்றியிருந்தது.  

ஒரு சில நண்பர்களின் அறிவுறுத்தலினால்,  பயண காப்புறுதியும்  ( Travel Insurance ) செய்துகொண்டுதான் புறப்பட்டேன்.

கனடாவிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் தமிழர் தகவலின் 32 ஆவது ஆண்டுமலருக்காக அதன் ஆசிரியர் – நண்பர் எஸ். திருச்செல்வம் என்னிடமிருந்து ஒரு ஆக்கம் கேட்டிருந்தார்.

அதன் தலைப்பு :  

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிறந்த பிரேரணை சமர்ப்பிப்பு

 July 20, 2023 10:43 am 

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றுமுன்தினம் (18) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னர் விருப்பம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தான் ரணில் விக்கிரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ஷ அல்ல என்றும் தெரிவித்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை தேதி: 30 ஜூலை, 2023 - ஞாயிறு

SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508

 





நிகழ்ச்சி காலை 8:30 மணிக்கு தொடங்குகிறது 

காலை 8.30 மணி : நிருத்தி வலம்புரி கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனையும் அதைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) மூலவருக்கு அபிஷேகம். சுந்தரரின் தேவாரம் பாடுதல் மதியம் 12.30 மணி : சுந்தரமூர்த்தி நாயனார் பஞ்சலோக சிலைக்கு சிறப்பு பூஜை, மகாதீபாராதனை மற்றும் சிவன் கோவில் வளாகத்தில் ஊர்வலம்.  பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுந்தரரின் தேவாரப் பாடல்களின் தொகுப்பைப் பாடுவதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்




நல்ல முடிவு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 நல்லவன் ஒருவன் ஊரில் காலமானால் ஊரே கூடி அனுதாபம்


தெரிவிக்கும். ஆனால் இறந்தவன் கெட்டவன் என்றால் ஊரே ஒன்று சேர்ந்து ஆனந்தக் கூத்தாடும். ஆனால் இறந்தவன் கெட்டவன் என்றாலும் அவன் இறந்தது எப்படி என்ற மர்மம் நீடித்தால் செத்தும் கெடுத்தான் பாவி என்ற நிலையே நீடிக்கும். இந்த பிரச்சனை எவ்வாறு தீர்ந்தது என்பதை விளக்கும் படம்தான் நல்ல முடிவு.


கிராமத்தில் செல்வத்துடனும், செல்வாக்குடனும் வளம் வரும்

முத்துலிங்கம் ஓர் அயோக்கியன். ஊரில் உள்ள பெண்களை எல்லாம் பெண்டாள நினைக்கும் சண்டாளன். மீனாட்சி அந்த ஊரில் தங்கை, தகப்பனுடன் வாழ்ந்து வருகிறாள். கூடவே ரங்கையா என்ற மாட்டையும் அருமை, பெருமையாக வளர்த்து வருகிறாள். ஊரில் பட்டதாரியாக விளங்கும் கணேசனுக்கும் அவளுக்கும் இடையே காதல் வருகிறது. ஆனால் முத்துலிங்கமோ , மீனாட்சி, அவள் தங்கை, அவனின் அடியாளாக மாயாண்டியின் மகள், மனநிலை பாதிக்கப் பட்ட ஒரு பெண் என்று எல்லோரையும் தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்த அலைகிறான். இதனை தட்டி கேட்கும் அவனின் மனைவி, தம்பி இருவரையும் நிந்தனை செய்கிறான். இந்த நிலையில ஓர் இரவு காட்டு பங்களாவில் முத்துலிங்கம் படுகொலை செய்யப்படுகிறான். அவனை கொன்றது யாரென்ற மர்மம் நீடிக்கிறது . இறுதியில் மர்மம் விலகி நல்ல முடிவு ஏற்படுகிறது .

மர்மக் கதை ஒன்றை கிராமிய சூழலில் எழுதியிருந்தார் பாலமுருகன். சிவாஜியின் ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதியிருந்த இவர் வித்தியாசமான ஒரு கதையை அமைத்திருந்தார். அதற்கு அவர் எழுதிய வசனங்கள் கருத்துடன் அமைந்தன. படத்தில் ஹீரோவாக ஜெமினி கணேசன் நடிக்க அவருக்கு ஜோடியாக ஜெயந்தி நடித்தார். அன்றைய சீசனில் இவர்கள் இணைந்து பல படங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திலும் அது தொடர்ந்தது. ஆனாலும் நடிப்பில் மட்டுமன்றி உருவத்திலும் இருவரிடையே முதிர்ச்சி தெரிந்தது! படத்தில் மற்றுமொரு ஜோடி முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா. இருவர் நடிப்பும் ரசிக்கும் படி இருந்தது.

கிழக்கிலங்கையில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்சி



அவுஸ்திரேலியாவிலிருந்து  நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் அம்பாறை மாவட்ட  தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவும் அண்மையில்  பாண்டிருப்பு மகா வித்தியாலய மண்டபத்தில்,  கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபவிருத்தி நிறுவகத்தின் தலைவர்,    முன்னாள்  அதிபர்  திரு. ந. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேராசிரியர் சி. மௌனகுரு, எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், விரிவுரையாளர் திரு. அற்புதன், பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் திரு. வில்வராஜா ஆகியோரும், உதவிபெறும் மாணவர்களும்  அவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

கல்வி நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதி,  நிதியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பயன்பாடும் பற்றி உரையாற்றினார்.

எத்தகைய  நெருக்கடிகள் வந்தாலும் கல்வி மீதான  தமது ஈடுபாட்டினை  ஆர்வத்துடன்  காண்பிக்கும் மாணவர்கள் தமது வாழ்நாளில் சாதனைகளை நிச்சயம் நிகழ்த்துவார்கள் என்பதற்கு பல உதாரணங்களை பேராசிரியர் மௌனகுரு தமது உரையில் சுட்டிக்காண்பித்தார்.

மாணவர்களின் உரையும் இடம்பெற்றது.

மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் வழங்கப்பட்டதுடன்   மதியவிருந்துபசாரமும் இடம்பெற்றது.

உலகின் அதிக வெப்பம் நிலவும் மாதம் இது; எதிர்காலத்தில் உஷ்ணம் மேலும் அதிகரிக்கும்!

- நாசா விஞ்ஞானி எச்சரிக்கிறார்

July 23, 2023 7:02 am 

 

இந்த வருடம் ஜூலை மாதம்தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் உலகின் மிக அதிக வெப்பமான மாதமாக இருக்கும் என்று நாசாவின் முக்கியமான காலநிலை நிபுணர் கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு எச்சரிக்கைத் தகவலையும் கொடுத்துள்ளார் அவர்.

உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஜூலை மாதம்தான் இருக்கும் என நாசா காலநிலை விஞ்ஞானி கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டு இதைவிட உச்சங்களை எட்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு

 July 23, 2023

இந்தியாவின் தலையீட்டைக் கோரி நான்கு கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியிலிருந்து மூன்று கடிதங்களும், சிவில் சமூகத்திடமிருந்து ஒரு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.
கட்சிகளை பொறுத்தவரையில், ஒப்பீட்டடிப்படையில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தில், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயம் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஏனைய கட்சிகளான, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (முன்னணி) மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவை, இந்தியா சமஷ்டியை வலியுறுத்தவேண்டுமென்று, கோரியிருந்தன.
ஆனால் சிவில் சமூகத்தின் கடிதம் ஒன்றுதான், மிகவும் தெளிவாகவும், இந்தியாவின் அயலுறவுக் கொள்கை தொடர்பான புரிதலுடன் முன்வைக்கப்பட்டிருந்தது.
சிவில் சமூகம் சுட்டிக்காட்டியவாறு, இந்தியா அதன் நிலைப்பாட்டை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியிருக்கின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஒகஸ்ட் 21 ஆரம்பம்; முன்னேற்பாடு தொடர்பாக கலந்துரையாடல்

 July 21, 2023 4:09 pm 

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (21) காலை 10 மணியளவில் யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

இளைஞர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்ய Family Pairing அம்சத்தை மேம்படுத்தும் TikTok

July 17, 2023 11:26 am 

குறும் வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, அதன் இளைஞர் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய முயற்சிகள் குறித்து அறிவித்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் வயது வந்தவர்களின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, TikTok அதன் உள்ளடக்க Filter செய்யும் திறன்களை Family Pairingக்குள் விரிவுபடுத்தியுள்ளது. இந்தப் புதிய அம்சம் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் Appஐ பயன்படுத்தும் போது தங்கள் குழந்தைகள் உலாவும் உள்ளடக்கத்தை மேலும் தனிப்பயனாக்க உதவுகிறது.

இலங்கைச் செய்திகள்

மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி பாராட்டு; உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் போர்க்கப்பல்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர் அதானியுடன் ஜனாதிபதி சந்திப்பு

மதுரையிலிருந்து-யாழுக்கு விரைவில் விமான சேவை

யாழில் ஆரம்பிக்கப்படும் வரை ஏற்பாடு; சபையில் அமைச்சர் டிரான் அலஸ் வட பகுதி மக்களுக்கு குருநாகலில் சேவை NIC ஒரு நாள் சேவை


மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி பாராட்டு; உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு

- விமான, கப்பல் சேவைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு

July 21, 2023 1:33 pm 

 ஜனாதிபதி ரணில் – பிரதமர் மோடி சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு
– திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்து தென்னிந்தியாவில் இருந்து எரிபொருள் குழாய்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (21) சந்தித்தார்.

உலகச் செய்திகள்

 செல்வாக்கு மிக்க கவுச்சீட்டுகளில் சிங்கப்பூர் முதலிடம்

உக்ரைன் செல்லும் கப்பல்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை: கோதுமை விலை அதிகரிப்பு

ஐரோப்பாவில் வெப்ப அலை உச்சம்: ஆசியாவிலும் பாதிப்பு

சீனா, வியட்நாமில் சூறாவளியால் பல்லாயிரம் மக்கள் வெளியேற்றம்

தென் கொரியாவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பதையில் இருந்து 9 சடலங்கள் மீட்பு


செல்வாக்கு மிக்க கவுச்சீட்டுகளில் சிங்கப்பூர் முதலிடம்

July 20, 2023 5:03 pm 

உலகில் அதிக செல்வாக்கு மிக்க கடவுச்சீட்டை கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்திய – இலங்கை இணைந்த பொருளாதார தொலைநோக்கு: தொடர்புகளை மேம்படுத்தல், செழுமையை உறுதிப்படுத்தல்

 

July 21, 2023 4:47 pm 

இன்று (21) புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பெறுபேறுகளை இலக்காகக் கொண்ட பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில் இந்திய இலங்கை பங்குடமையானது வலுவான மூலாதாரமாக இருந்ததாக இரு நாடுகளினதும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த அதேசமயம், இலங்கை மக்களுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் முன்னொருபோதுமில்லாத வகையில் இந்தியாவால் தக்கதருணத்தில் வழங்கப்பட்ட ஆதரவுக்காக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விசேட பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

2. இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி, ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணிப்பினையும் நம்பிக்கையினையும் இரு தலைவர்களும் இச்சந்திப்புகளின்போது மீள வலியுறுத்தியிருந்த அதேவேளை, நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதற்காகவும் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் நலன்களுக்காக ஸ்திரமானதும் சமமானதும் வலுவானதுமான பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் தோற்ற பார்வை புகைப்படம் வெளியீடு

 July 20, 2023

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடிக்கும் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் அறிவியல் புனைவு கதை திரைப்படம் ‘ப்ராஜெக்ட் கே’ . இதில் பொலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், தீபிகா படுகோன்,  ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ்,  பொலிவுட் நடிகை திஷா படானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தெலுங்கில் பிரபலமான முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.