வசந்த மாலை 2012 என் பார்வையில்...‏ - சக்தி -


 .
வசந்தமான மாலைப் பொழுது. வெய்யிலை சூரியன் தர குளிராய் தென்றல் வீச இயற்கை கொலுவீற்றிருக்கும் மலைப்பாங்கான இடத்தில் கச்சிதமாக வடிவமைக்கப் பட்டிருக்கும் மேடையோடு கூடிய மண்டபம். வரவேற்புப் பகுதியில் ஒரு புறம் பூரா பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிக் கதவின் திறந்திருந்த வாசல்வழி உள்நுழைகிறோம். மனித வலுவின் கைவண்ணம் வண்ணமின் விளக்குகளாலும் நவீன தொழில் நுட்பங்களாலும் வசீகரிக்கிறது; வரவேற்கிறது.
இந்த இடத்தை தெரிவு செய்ததற்குக் குறிப்பாக ஏதேனும் காரணம் இருக்கும் என்றால் அக்காரணம் தொடர்ந்து வாழட்டும்!
வரவேற்பு மண்டபத்தில் ரிக்கற்றை வாங்கி உள்நுழைகிறோம்.(குடும்பம் 35 டொலர்கள், தனி 15 டொலர்கள்) வழக்கமான சிட்னி ரிக்கற்றுக்களோடு ஒப்பிடும் இடத்து இதன் விலை மிகக் குறைவு. நேரம் 6 மணிக்கு 5 நிமிடங்கள் இருக்கின்றன. மக்கள் அதிகம் இல்லை.
6.10 மணி அளவில் நிகழ்ச்சி மங்கல குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது.10 நிமிட தாமதம் பொறுத்துக் கொள்ளத் தக்கதாகவே இருந்தது. நம் மக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் போலும். இப்போது மண்டபம் ஓரளவு நிறைந்திருந்தது. அது சரி, ஏன் நம்மக்கள் எப்போதும் தாமதமாகவே வந்து சேர்கிறார்கள்? வேலைக்கும் இப்படித்தான் போவார்களோ?


             
 






























 

ஷாஜஹானை ஏமாற்றிய மும்தாஜ் _சி.எல்.சிசில்

.

ஒரு தடவை மன்னன் ஷாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட ஷாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டு ஆய்வது.

அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள். அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார்.

சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை ஷாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ். 
___

Nantri:/ வீரகேசரி இணையம்

இளம் துளிர் -2012 14 April Sat in Melbourne

.

புலிப் பூச்சாண்டியை மீண்டும் கிளப்புகிறது இலங்கை?

.
கேள்வி எழுப்பும் இந்துப்பத்திரிகை
02_isbs_world_sri__1041945eபுலிப் பூச்சாண்டியை மீண்டும் இலங்கை கிளப்புகின்றதா? என்று சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து” நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் பயிற்சி பெற்ற சுமார் 150 பயங்கரவாதிகள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை கரையில் வந்திறங்கியிருப்பதாகவும் நாட்டை சீர் குலைய வைக்க அவர்கள் வந்திருப்பதாகவும் “ த ஐலண்ட்” பத்திரிகை நேற்று திங்கட்கிழமை இலங்கையின் புலனாய்வுத் துறையை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாகவே “ இந்து” இக்கேள்வியை எழுப்பியிருக்கிறது.

சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் ருத்ராபிஷேகம் 15.04.2012


முருகன் ஆலய பூங்காவனதிருவிழா என்பார்வையில் -செ.பாஸ்கரன்



.

சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை பூங்காவனத்தோடு இனிமையாக நிறைவுற்றது. பூங்காவன திருவிழாவை சிட்னி இளைஞர் வட்டம் வருடம்தோறும் பொறுப்பெடுத்து செய்து வருகின்றது. அனைத்து திருவிழாக்களிலும் அதிகூடிய மக்கள் நிறைந்த திருவிழாவாக இந்த பூங்காவன திருவிழாவே அமைந்திருந்தது. ஏறக்குறைய ஜயாயிரம் பேர் வரை வந்திருந்தார்கள் அதிலும் அரைவாசிக்கு மேல்  இளைஞர்கள் யுவதிகள் போன்றவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்க்கின்றபோது உண்மையில் மனதிலே மிகவும் சந்தோசமாக இருந்தது. இளைஞர்கள் செய்ய மாட்டார்கள் செய்யமாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு தாங்களே செய்யும் பெரியவர்களுக்கு சிட்னி முருகன் ஆலயத்தின் இந்த நிகழ்வு ஒரு பாடமாக அமையவேண்டும்.


சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது!

.
 தீபச்செல்வன்
சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது!
 நண்பன் எல்ரனை கடல் கொன்று விட்டது என்கிற செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. போருக்கு முகம் கொடுத்த வன்னியைச் சேர்ந்தவனாய், முன்னாள் போராளியாய், யாழ் பல்கலைக்கழக மணவனாய் என்று அவன் நடந்த தடத்தில் இணைந்திருந்த எல்லாரையும் இந்தச் செய்தி வருத்தக்கூடியது. எல்ரன் என்றாலே அவனின் பின்னாலுள்ள வறிய மீனவக் குடும்பம்தான் நினைவுக்கு வரும். குடும்பத்தைப் பற்றி வாழ்வைப் பற்றி எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு என்ன ஆனது என்பது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. வடமராட்சிக் கிழக்கில் கட்டைக்காட்டில் உள்ள கடலில் மூழ்கி இறந்து போயிருக்கிறான். 
2003 ஆம் உயர்தரம் படிக்கும் காலத்தில் அறிவமுது கல்வி நிலையத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பொழுதே எல்ரனை முதன் முதலில் பார்த்திருக்கிறேன். எல்ரனும் நானும் 2004 உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றிருக்கிறோம். அப்பொழுது அவன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தன். அன்றைய காலத்தில் நடந்த வௌ;வேறு தனியார் கல்வி நிலையங்களில் எல்ரனுடன் படித்து பழகியிருக்கிறேன். படிக்க வேண்டும் படித்தாலே வாழ்க்கையிலே எதாவது செய்யலாம் என்று அவன் அந்த நாட்களில் சொல்லுவான். அவன் பேசும் பொழுது பேச்சிலும் முகத்திலும் மெல்லிதாக நடுக்கம் காணப்படும். படிப்பதற்கான துடிப்பு எப்பொழுது அவனில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். வகுப்பில் இருந்து படிக்கும் பொழுது அவனது கையெழுத்தைப் பார்த்த நினைவுகள் எனக்குள் இன்னும் நிற்கின்றன.

சிட்னியில் சித்திரை திருவிழா - 22.04.2012

.

இலங்கைச் செய்திகள்

.
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் நீடிக்கும் வாதப்பிரதிவாதங்கள்
அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன?
வவுனியாவில் கடும் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் நீடிக்கும் வாதப்பிரதிவாதங்கள்
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் தணிவதாக இல்லை. நாளையும் நாளை மறுதினமும் அத்தீர்மானம் தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவிருக்கிறது.
இந்தத் தீர்மானம் எந்தளவுக்கு அரசாங்கத்திற்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பது குறித்து மக்கள் மத்தியில் பூச்சாண்டி காட்டும் பிரசாரங்களை அரசாங்கம் முன்னெடுத்துக்கொண்டுவருகின்றது. உண்மையிலேயே இது தொடர்பில் இன்னமும் கூட அரசாங்கம் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தான்தோன்றித்தனமாக பேசுவதற்கு அனுமதித்துக்கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் நடைபெறப்போகும் விவாதம் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஒவ்வொரு கட்சியும் அதனதன் வியாக்கியானங்களை முன்வைப்பதற்கு வாய்ப்பைக் கொடுக்க முடியும். ஆனால், மக்களுக்கு உண்மையான நிலைவரத்தை தெளிவுபடுத்துவதற்கு அந்த விவாதம் உதவுமா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை
.

28. குறளில் குறும்பு - பசியும் அழிக்குமா?

.


வானொலி மாமா நா மகேசன் எழுதிய குட்டி நாடகம்


ஞானா அம்மா......அம்மா......இஞ்சை ஒருக்கால் வாருங்கோ அம்மா.......

சுந்தரி என்ன ஞானா?.... கையிலை அலுவலாய் இருக்கேக்கை ஏன்
                       கூப்பிட்டுக் குழப்புறாய்?

ஞானா உங்களுக்கு ஒரு பத்து லட்சம் டொலர் லொட்டேவிலை
                      விழுந்தால் என்ன செய்வியள் அம்மா?

சுந்தரி உந்த விண்ணாணம் கேக்கவே உவ்வளவு அவசரமாய்
                      கூப்பிட்டனி ஞானா?

ஞானா லொட்டோ விழாட்டிலும் காரியம் இல்லை அம்மா.......சும்மா ஒரு
                      பேச்சுக்குச் சொல்லுங்கோ,

சுந்தரி அப்பிடிப் பெரிய தொகை விழுந்தால், முதலிலை உன்ரை
                     கலியாணத்தை முடிச்சு வைப்பன்.

ஞானா என்ரை கலியாணத்தை முடிக்கிறதுக்கு அப்பிடிப் பெருந் தொகைப்
                     பணம் தேவையே அம்மா?

சுந்தரி எடி விசர்ப் பிள்ளை. உலகம் தெரியாத பெண்ணாய் இருக்கிறாய் நீ.
                  சிட்னியிலை இப்ப ஒரு கலியாண வீடு வைக்க ஆகக்குறைஞ்சது
                ஒரு லட்சம் டொலறாவது வேணுமாம். அது போகச் சீதணம் வீடு
                வாசல் கார் கண்ணி எண்டு பத்து லட்சம் டொலர் எந்த மூலைக்குக்
                காணும்.

தாயும், சேயும் - அ.முத்துலிங்கம்

.

நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும்இ மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு அதன் மேல் ஏறி நிற்கிறாள். எத்தனை வலி என்றால் அந்தத் தாய் அப்படிச் செய்திருப்பாள் என்று நினைக்கும்போதே மனம் பதைக்கிறது.

இந்தக் கதையை கேட்டபோது எனக்கு பல வருடங்களுக்கு முன்னர் நான் சிறுவனாய் இருந்த சமயம் யாழ்ப்பாணத்தில்இ பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்தில் நடந்த தமிழ் விழா நினைவுக்கு வந்தது. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளைஇ பெரியசாமி தூரன்இ கல்கிஇ தவத்திரு தனிநாயகம் அடிகள் போன்ற பெரியோர்கள் அங்கே உரையாற்றினார்கள். விழாவில் வேலைசெய்த தொண்டர்களில் ஆக வயதில் குறைந்தது நான்தான். இரும்பினால் செய்த ராட்சத தண்ணீர் டாங்கை சுத்தம் செய்வதற்காக என்னை அதற்குள் இறக்கிவிட்டார்கள். அரைநாளாக சுத்தம் செய்தேன். அதுதான் நான் தமிழுக்கு ஆற்றிய ஆகச் சிறந்த தொண்டு. 100இ000 மக்கள் குடித்த நீர் என் பாதம் பட்டுத்தான் அங்கிருந்து வெளியேறியது.

மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 2


.
வரலாற்று நாடகம்
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)
(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)
(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)

காட்சி 2
களம்:- சிற்றரசன் கவந்தீசனின் அரசவை
பங்கு கொள்வோர்:- அரசன் கவந்தீசன்
அமைச்சர்
துட்டகைமுனு
அரசவையினர்

(அமைச்சர் ஓலையை வாசிக்கிறார். அரசர் பலத்த சிந்தனையுடன் குறுக்கும் நெடுக்கமாக உலாவுகிறார்)

கவந்தீசன்:- என்ன செய்வது மந்திரியாரே! எல்லாளனின் வலிமையையும் நாம்
எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளதே.

அமைச்சர்:- உண்மைதான் மன்னவா. இந்த ஓலையின்படி எல்லாளன் நிச்சயம் நம்மீது
படையெடுப்பான். அவனது படையெடுப்பைத் தடைசெய்வதற்கு திறைசெலுத்துவதைத் தவிர வேறுவழி இல்லை.

உலகச் செய்திகள்

இடைத் தேர்தலில் ஆங்சான் சூகி வெற்றி மக்களின் வெற்றி என புகழாரம்

சைபீரியாவில் ரஷ்ய விமான விபத்து 16 பேர் பலி; பலர் படுகாயம்

பனிச்சரிவில் சிக்கி 135 பாக். வீரர்கள் மரணம்

பிரிட்டனில் வரலாறு காணாத பனி பொழிவு: சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்தது

இடைத் தேர்தலில் ஆங்சான் சூகி வெற்றி மக்களின் வெற்றி என புகழாரம்

Tuesday, 03 April 2012

aung_san_suu_kyi_ரங்கூன் : மியன்மாரின் எதிரணித் தலைவியும் மனித உரிமை ஆர்வலருமான ஆங் சான் சூகி நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதாக அவரது தேசிய ஜனநாயக லீக் அறிவித்திருக்கும் நிலையில் இவ் வெற்றியானது மக்களின் வெற்றி என சூகி தெரிவித்துள்ளார். ஆனால் 45 ஆசனங்களுக்காக நடத்தப்பட்ட இந்த இடைத் தேர்தலின் உத்தியோக பூர்வ முடிவுகள் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் சூகியின் சொந்த தேர்தல் தொகுதியான கவ்ஹ்முவில் அவர் இலகுவாக வெற்றி பெற்றுள்ளதாக தேசிய ஜனநாயக லீக் உறுதிப்படுத்தியுள்ளது.

முட்டாள் ஆவது ஏப்ரலில் மட்டுமா?

.
- நெல்லை சு. முத்து
செளராட்ரிய வழக்கப்படி "நவ ரோஸ்' (புது நாள்) என்பது மார்ச் 15 ஈரானியப் புத்தாண்டுப் பிறப்பு. அதன் பதின்மூன்றாம் நாள் குறும்பு விளையாட்டுத் தினம். கி.மு.536-ம் ஆண்டு தொடங்கிய சம்பிரதாயம். அதைத்தான் முட்டாள்கள் தினம் என்று உலகு எங்கும் திணித்துவிட்டார்கள்.
 இந்தியாவில் ஆலம் ஆரா, ஒளரங்கசீப், அர்த்ஷீர் கோத்ரெஜ், தாதாபாய் நௌரோஜி, ஃபெரோஸ் கான், ஹோமி ஜஹாங்கிர் பாபா, ஜஹாங்கிர் ரத்தன் டாடா, சொராப்ஜி, குர்ஷித், நாரிமன், குஷானா, வாடியா மேத்தா, நானி பல்கிவாலா போன்ற பாரசீகப் பூர்வீகத்தினர் வழக்கம் இது.
 பிரெஞ்சு மொழியில் "பாய்ஸன் டி ஏவ்(ப்)ரில்'. இத்தாலியில் "பிஸ்ழ்ஸ டி ஏப்ரிலே'. ஒன்றும் இல்லை, மீன்தினம் என்று பொருள். சூரியன் பங்குனி மீன ராசியில் இருந்து சித்திரை மேஷ ராசியில் நுழையும் நாள். பண்டை இந்தியர் வழக்கில் சந்திரன் மீனத்தில் முழுநிலாவாகத் தோன்றும் நாள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசாம் பூரண் போளிக்கு..

.
பூரண் போளி என்னும் இந்த அருமையான சுவையான வஸ்துவைச் சமைக்க ஆரம்பிக்குமுன், நாள் நட்சத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதைப் பஞ்சாங்கத்தில் பார்த்துக் கொள்வது முக்கியம். குறிப்பாகப் “போறாத” காலம் இல்லாத பொழுதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு போளியும் சமைக்கும் போது ஒவ்வொரு கண்டத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் அமைந்து விடும்.

இந்த பூமியும் அதில் உலவும் கட்டைகளாகிய நாமும் மட்டுமல்ல, போளியும் பஞ்சபூதங்களால் தயார் ஆனவையே என்று என்னப்பன் நெய்யப்பன் புளுகிய புராணத்தில் அருளிச்செய்திருக்கிறான். அதாவது, மாவுநிலமாகித் தாங்கி நிற்க, நெய்யானது நீராகப் பெய்யப்பட்டு, சமையல்வாயு பகவானின் அருளுடன், லைட்டாக எரியும் அக்னி பகவானின் கருணையால் சுடப்படும் போளியில் அண்டசராசரம் ஆகாயமெங்கும் பரவி நிற்கும் பரம்பொருளெனப் பூரணம் விரவி நிற்கும். மும்மூர்த்திகளை இணைத்துப் பரம்பொருளென்று அழைப்பது போலவே கடலைப்பருப்பு, வெல்லம், ஏலக்காய் இவற்றின் கூட்டணியும் பூரணமென்று பொதுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
நானும் என் காமிராவும் சுட்டவை..

ஓர் அனுபவக் குறிப்பு






அப்போது நான் வெளிநாட்டின் பிரபல பல்கலைக் கழகம் ஒன்றின் வியாபார நிர்வாகம் கற்கும் மாணவன்.

என் கல்விக் காலத்தின் இறுதி வருடத்தில் ஒரு முறை என் பல்கலைக்கழக விரிவுரை மண்டபமொன்றில் வகுப்பின் இறுதியில் பதில் சொல்வதற்கான கேள்விக் கொத்தொன்று தரப் பட்டது.அதன் கடசிக் கேள்வி இந்த விரிவுரை மண்டபத்தைத் துப்பரவு செய்பவரின் பெயர் என்ன என்பதாகும்.

தமிழ் சினிமா

.
தனுஷின் “3” திரைவிமர்சனம்

3_movie_



















தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பெரும்எதிர்பார்ப்பிற்கு பின்பு தனுசின் “3“ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

திரைக்கதை தனுஷின் வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது. பள்ளிப் பருவத்தில் காணப்படும் நாயகன் தனுஷ் தன்னுடைய பள்ளிப் பருவத்திற்கே திரும்பியுள்ளார்.

நாயகன் தனுசும், நாயகி ஸ்ருதியும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களாக வருகிறார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் ஆரம்பமாகிறது.

பள்ளிப் பருவத்தில் நாயகி ஸ்ருதியை கவர நாயகன் தனுஷ் செய்யும் விளையாட்டுகள் ரசிகர்களை கை தட்ட வைக்கிறது.

பின்னர் கல்லூரி வரை செல்லும் இந்த காதலர்கள் வழக்கம் போல திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். திருமணத்திற்கு பெற்றோரிடம் சம்மதம் கேட்க, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு, இவர்களது திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு பின்பு நாயகன் தனுஷ், நாயகி அம்மாவாக நடித்துள்ள ரோகிணியிடம் பேசும் காட்சிகள் எதார்த்தமாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் சிவாகார்த்திகேயன் தன்னுடைய டைமிங் நகைச்சுவையால் கலக்குகிறார்.

இந்நிலையில் தனுஷின் “கொலைவெறி” கிறுக்குத்தனம் ஆரம்பமாகிறது.

அதாவது தனுஷ் “பை போலார் டிஸ் ஆர்டர்” என்ற மனநோயால் பாதிக்கப்படுகிறார். இந்த வியாதியை திருமணத்திற்கு பின்பு தன் மனைவி ஸ்ருதியிடமிருந்து மறைக்கிறார். இதற்கு பின்பு என்ன நடக்கிறது என்பது தான் “3” திரைப்படத்தின் திரைக்கதை.

”கொலைவெறி” பாடல் மூலம் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய காட்சிப் பிழைகள், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை “3” ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவை புகழ்வதில் தவறில்லை.

இருப்பினும் செல்வராகவனின் உதவியாளர் என்பதால் துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களின் சாயல்களை “3” திரைப்படத்தில் காணமுடிகிறது.

ஆனால் இப்படத்தின் மூலம் ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை என்ற நிலை உறுதியாக வந்துவிட்டது. திரையுலகில் “3” படம் அவருக்கென்று தனி மதிப்பை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.

3_movie_2
நாயகன் தனுஷ் சாதரணமாக நடிப்பதை விட கிறுக்கனாக நடிப்பதில் திறமையாக செயற்படுகிறார். ஆனால் இனி அடுத்து வரும் படங்களில் ரசிகர்கள் தனுஷை சைக்கோவாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.

நாயகி ஸ்ருதியின் நடிப்பு ஏழாம் அறிவில் இருந்து ஒரு படி முன்னேறியே உள்ளது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் ரசிகர்களால் சகிச்ச முடியவில்லை.

இயக்குனர் ஐஸ்வர்யா என்பதை மறந்து தனுசும், ஸ்ருதியும் படத்தில் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டியுள்ளனர். சிவகார்த்திகேயன் காமெடி கலட்டா மிகப் பிரமாதம், சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது. சந்தானம் ஏதோ வந்து போகிறார். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து(நண்பன் ஒருவனைத் தவிர), மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி. லாஜிக் மீறல் கொஞ்சம் அதிகம்.

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும் படியாக உள்ளது. உலகமெங்கும் ஹிட்டான ”கொலவெறி” பாடலே இதற்கு சாட்சி. வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை.

இளைஞர் பட்டாளத்திற்கு “3” திரைப்படம் நிச்சயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. “3” படத்தின் மூலம் ஐஸ்வர்யாவுக்கு திரையுலகில் மதிப்பு இனி அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
3_movie_3



















நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன், இளையதிலகம் பிரபு, பானுப்பிரியா, ரோஹிணி, சந்தானம், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா தனுஷ்

நன்றி தினக்குரல்