தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
ஆண்டவனே வழிகாட்டு !
நவநீத கிருஷ்ணபாரதியார் அவர்களுக்கு நன்மொழி வாழ்த்து
சென்ற மே மாதம் 24 ஆம்திகதி நவநீத கிருஷ்ணபாரதியார் அவர்களுக்கு விழா எடுக்கப்பெற்றதை வாசகர் அறிவர்.
நவநீத கிருஷ்ணபாரதியார்
அந்தப்
பெருமகனாருக்கு யாழ்ப்பாணத்திலே ஆரிய
திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் 1952 திசம்பர் 1 இல் பொற்கிழியளித்து புலவர்மணிப் பட்டத்தை வழங்கிய பிரியாவிடைப் பாராட்டு விழா நடைபெற்ற
ஞான்று
புலவர்மணி
பண்டிதர் சோ இளமுருகனார் அவர்களால் பாடப்பெற்ற நன்மொழி வாழ்த்தை நேயர்களுடன்
பகிருகிறோம்.
பொற்கிழி
நிதி சேகரிப்புச் சபை சார்பாகப்
புலவர்மணி
பண்டிதர் சோ இளமுருகனார்
யாத்தது..
திணை :- பாடாண்டிணை துறை :- வாழ்த்தியல்
திரு க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார்
சால்பு
நுதலிய
நன்மொழி வாழ்த்து
பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி - யசோதா - விழா வர்ணனை தொடருகிறது ------
பாரதி இளமுருகனார் அவர்கள் இயற்றிய - 80 சிறுவர் பாடல்கள்
அடங்கிய இரு தொகுப்புகளைக் கொண்ட -செந்தமிழ்ப் பூக்கள் நூல்களை வெளியிட்டு வைத்த செஞ்சொற் செல்வர் பிரம்மசிறீ வீரமணி ஐயர் அவர்களைப்பற்றிப் பேச முன்னர் நவநீதகிருஷ்ண பாரதியார் அவர்களைப் பற்றியும் சில செய்திகளைப் பகிர்ந்தார்.
. இறைவணக்கத்துடன் தனதுரையை இப்படி ஆரம்பித்தார்"சான்றோருக்;கு விழா எடுக்கின்ற பெருமைக்குரிய வைத்திய கலாநிதி பாரதி
இளமுருகனார் ஐயா அவர்களே! சபையில் இருக்கின்ற சான்றோர் பெருமக்களே! எல்லோருக்கும்
எனது பணிவன்பான வணக்கம். ஆண்டுதோறும் சான்றோர் பெருமக்களுக்கு விழா எடுத்துத்
தமிழுக்குத் தொண்டு செய்துவருபவர்களைத் தமிழர்கள் மறக்கக்கூடாதென்று
பெருமைப்படுத்திக் கொண்டிருப்பவர் பாரதி ஐயா அவர்கள்! நாவலர் பெருமான் சி. வை தாமோதரம்பிள்ளை போன்ற பல
பெரியவர்களை ஆண்டுதோறும் நினைவு கொண்டவர்கள். இந்த ஆண்டு நவநீதகிருஷ்ண
பாரதியாரை நினைவுகொண்டார்கள். உண்மையிலே
ஈழநாடு வரப்பெற்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் நவநீதகிருஷ்ண பாரதியார்..
அவரைப்பற்றிக் கலையரசி சின்னையா அம்மையார் அவர்கள் மிகச் சிறப்பாக
எடுத்துரைத்தார்கள். நான் இராமநாதன் கல்லுரியிலே கற்ற ஒரு பழைய மாணவன். ஆரம்பக்
கல்வியை இராமநாதன் கல்லூரியிலே கற்றவன்.
பரமேசுவராக் கல்லுரியினுடைய நூற்றாண்டு விழாத்தொடர்பாக - நீண்ட நாள்களாக அதற்கு
ஒரு மலர் வெளியிட வேண்டுமென்று பல பெரியவர்கள் விரும்பினார்கள்.
இளஞ்சேய் அவர்கள் கலையரசி அவர்களது ; தம்பி. இலண்டனில் இருக்கின்றார். அவர் என்னோடு தொடர்பு கொண்டு மலரை வெளியிட்டோம். அப்பொழுது இந்த நவநீதகிருஷ்ண பாரதியாரைப்பற்றி இராமநாதன் கல்லூரி - பரமேசுவராக் கல்லூரிகளில் இருந்த சான்றோர்கள் எல்லாம் தேடி அந்தப் புத்தகம் வெளிவந்தது. சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களை முழுமையாக இன்னும் பலர் விளங்கிக்கொள்ளவில்லை. அவருடைய அரசியலைப்பற்றித்தான் பலர் சொல்லுவார்கள். இரண்டு பாடசாலகள் கட்டினார்கள் என்று சுருக்கமாக முடித்துவிடுவார்கள்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி (1932 - 2011) நினைவுகள் ஜூலை 06 - 14 ஆவது நினைவு தினம் முருகபூபதி
ஒரு மனிதரைப்பற்றி நினைப்பது சுகமானது. ஆனால் அந்த மனிதரைப்பற்றி எழுதுவது சுகமானதல்ல. சுலபமானதும் அல்ல. என்று பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு இதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில் சோவியத் தமிழ் அறிஞர் கலாநிதி வித்தாலி ஃபுர்ணிக்கா பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன்.
நெஞ்சில்
நிலைத்த நெஞ்சங்கள் தொடர்
பின்னர் அதே பெயரில் சிட்னியிலிருக்கும் எழுத்தாளர் மாத்தளை
சோமுவின் தமிழ்க்குரல் பதிப்பகத்தினால் (1995 இல்) வெளியானது.
மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை
இத்தொடரில் எழுதும் பொழுது குறிப்பிட்ட மேற்கண்ட வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.
1976 முதல் அவர் மறையும் வரையிலிருந்த இலக்கிய நட்புணர்வுதான் இந்தப்பத்தியின் ரிஷிமூலம்.
பேராசிரியர்
சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு
விவேகானந்தா
வித்தியாலயத்தில் 1972 இல்
நடந்த பூரணி காலாண்டிதழ்
வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்த நிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது
குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம்.
பெரேராவின் வீட்டுக்கு அருகில்
வசித்துவந்தார்.
அதே வீதியில்தான் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ சார்பு) தலைமைக்காரியாலயமும் கட்சியின் பத்திரிகைகளான அத்த (சிங்களம்) தேசாபிமானி - புதுயுகம் (தமிழ்) Forward ( ஆங்கிலம்) என்பனவும் வெளியாகின. தமிழ் இதழ்களில் பணியாற்றிய நண்பர் கனகராஜனை சந்திப்பதற்கு அங்கு அடிக்கடி செல்வேன். எனது கதைகள் கட்டுரைகளும் குறிப்பிட்ட தமிழ் இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
வெள்ளிவிழாக் காணுகின்ற சிவபூமி
வீறுநடை
போட்டரிய சேவைபல இயற்றி
;வெள்ளிவிழாக்
காணுகின்ற சிவபூமி அமைப்பு
நூறுவீதம்
தன்னலமிலாச் சேவை புரிந்து
நுவலரிய சரித்திரம்படைத் திட்டதி
றந்தனைக்
கூறிடவோ
நினைத்திடவோ மேனிபுல் லரிக்கும்!
குரிசில்திரு முருகனவன்
கனவெலாம் நனவாய்
ஆறுமுகன்
அருளருள மலர்ந்த தம்மா!
அற்புதவி ழாச்சிறக்க வாழ்த்து கின்றேன்!
கிருஷ்ணரின் இதயம் பூரி ஜகன்னாதரிடமா?
கன்னித் தாய் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
எம் ஜி ஆருடன் ஜெயலலிதா ஜோடியாக நடித்த ஆயிரத்தில் ஒருவன்
வெற்றி பெற்றது என்ற செய்தி எவரை மகிழ்வித்ததோ இல்லையோ படத் தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவரை மகிழ்ச்சியில் குளிப்பாட்டியது எனலாம். காரணம் அவர் தொடர்ந்து தயாரித்த எம் ஜி ஆர் படங்களில் எல்லாம் எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவி. ஆனால் வேட்டைக்காரன் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய சென்ற போது சரோஜாதேவியின் தாயாரான ருத்ரம்மாவுடன் ஏற்பட்ட தகராறில் காரணமாக இனி தேவர் பிலிம்ஸ் படத்தில் சரோஜாதேவி கிடையாது என்று தீர்மானித்து விட்டார் தேவர். அவரின் குணசம்சங்களை அறிந்த எம் ஜி ஆரும் அதில் தலையிடவில்லை. அதன் பின்னர் வேட்டைக்காரனில் சாவித்திரி கதாநாயகியாக நடித்து படமும் வெற்றி கண்டது.
ஜோடி என்ற கேள்வி எழுந்ததும் தேவரிடம் கே. ஆர் . விஜயாவை ஜோடியாக்கலாம் என்று சொல்லப்பட்டது. தாழம்பூ படப்பிடிப்பில் விஜயாவை பார்த்த தேவர் , இது என்ன எம் ஜி ஆருக்கு தங்கை மாதிரி இருக்கு என்று சொல்லி விட்டார். அதன் பின் புதுமுகம் ரத்னா ஹீரோயினாக நடிக்க, விஜயா வில்லி போன்ற வேடத்தில் நடித்தார். இதனிடையே எம் ஜி ஆர் , விஜயா ஜோடி சேர்ந்த தாழம்பூ, பணம் படைத்தவன் இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது தேவரின் எண்ணத்துக்கு வலு சேர்த்தது.
தமிழரசு கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும்
Published By: Vishnu
08 Jul, 2025 | 06:52 PM
டி.பி.எஸ். ஜெயராஜ்
ஒய்வுபெறும் உயர்நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர அண்மையில் நீதிமன்றத்தில் உரையாற்றியபோது முக்கியமான பல கருத்துக்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வருகின்ற வெளி அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்துநிற்க முடியும் என்கிற அதேவேளை, உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு நயவஞ்சகத்தனமான ஆபத்தை தோற்றுவிக்கின்றன.
" சரியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நீதிபதியினால் வெளி நெருக்குதல்களை எதிர்த்துநிற்க முடியும். ஆனால், முறைமைக்குள் இருந்தே அச்சுறுத்தல்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்வது கடடினமானதாக இருக்கும் " என்று மாண்புமிக்க நீதியரசர் அமரசேகர கூறியதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளிருந்து வருகின்ற ஒரு அச்சுறுத்தல் வெளியில் இருந்து வருகின்ற ஒரு சவாலை விடவும் பெருமளவுக்கு ஆபத்தானது என்று நீதியரசர் தெரிவித்த மிகவும் பொருத்தமான கருத்து பரவலாக பொருந்துவதாகும். அதற்கு பல சந்தர்ப்பங்களை கூறமுடியும்.
இலங்கையில் தற்போது இலங்கை தமிழரசு கட்சி நீதியரசர் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் மெய்யறிவை அனுபவிக்கின்றது. இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி தற்போது உள்ளிருந்து வரும் சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் எதிர்கொள்கிறது. வெளிச்சவால்களை கட்சியினால் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்த அதேவேளை, பெருமளவுக்கு ஆபத்தான தன்மையுடன் கூடிய அச்சுறுத்தல் உள்ளிருந்தே வெளிக்கிளம்புகின்றது போன்றே தோன்றுகிறது.
கடுமையான அரசியல் சச்சரவுக்கு மத்தியிலும், தேர்தல்களில் அண்மைக் காலங்களில் தமிழரசு சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது. 2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் பல தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்கிய போதிலும், தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையே ஆதரித்தது. தேசிய மட்டத்தில் சஜித் பிரேமதாச அநுர குமார திசநாயக்கவுக்கு அடுத்ததாக இரண்டாவதாக வந்தார். ஆனால், ஒரு பிராந்திய மட்டத்தில், தமிழரசு கட்சியின் உறுதியான ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவே வடக்கு, கிழக்கின் மாவட்டங்களில் கூடுதல் வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்தார்.
இலங்கைச் செய்திகள்
ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறித்து டிரம்பின் அறிவிப்பு !
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : 54 எலும்புக்கூடுகள் மீட்பு !
செம்மணி விவகாரத்தில் பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு
பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? உமா குமரன் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி
செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு - பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சர்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா
ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !
11 Jul, 2025 | 02:56 PM
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
மஸ்க்கின் புதிய அரசியல் கட்சி - டிரம்ப் கடும் விமர்சனம்
'காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்" முன்னாள் பாதுகாப்பு ஊழியர் பிபிசிக்கு தகவல்
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவு
இஸ்ரேல் 60 நாள் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது- டிரம்ப்
அமெரிக்கா தாக்கிய போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் கட்டுமான பணிகள் - செய்மதிபடங்கள் காண்பிப்பதாக பிபிசி தெரிவிப்பு
மஸ்க்கின் புதிய அரசியல் கட்சி - டிரம்ப் கடும் விமர்சனம்
07 Jul, 2025 | 02:41 PM
அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலன்மஸ்க்கின் புதிய அரசியல் கட்சியை அபத்தமானது என வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மஸ்க் தவறான பாதைக்கு திரும்பிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக கட்சிக்கும் குடியரசுகட்சிக்கும் சவாலாக விளங்கும் என எலன்மஸ்க் கருதும் அவரது புதிய கட்சியை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூன்றாவது கட்சியொன்றை ஆரம்பிப்பது அபத்தமானது என நான் கருதுகின்றேன்,அமெரிக்கா எப்போதும் இரண்டு கட்சி நாடாகவே இருந்து வந்துள்ளது என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மூன்றாவது கட்சியை ஆரம்பிப்பது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் என கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆடிப்பூர உற்சவம் 18/07/2025 - 28-07-2025
ஆடிப்பூர விழா தேவிகளை போற்றும் வகையில், துர்கை தேவியின் பராகாசத்தையும், பக்தர்களை ஆசீர்வதிக்க இந்த உலகிற்கு அவள் வந்ததையும் கொண்டாடும் புனித நாள் ஆகும்.
ஜூலை (ஆடி) மாதம் வந்து விட்டது.
இந்த ஆண்டின் ஆடிப்பூரத் திருவிழாவை 10 நாட்கள் கொண்டாட இருக்கிறோம். விழா வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி ஜூலை 2025 அன்று விநாயகர் பூஜையுடன் தொடங்கி, திங்கள் 28ஆம் தேதி ஜூலை 2025 வரை நடைபெறும்.
தினமும் இரவுகளில் ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் பரிவார மூர்த்திகளின் பிரதக்ஷணம் (சுற்றுப் பணிகள்) நடைபெறும்.
ஆடிப்பூரத் தேர் திருவிழா ஞாயிறு 27ஆம் தேதி ஜூலை 2025 அன்று நடைபெறவுள்ளது.
நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !
அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் மெல்பன் மணி மறைந்தார் ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலச்சங்கத்தில் இணைந்திருந்தவர் ! முருகபூபதி
அவுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த
முன்னாள்
ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பன் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.
நான் உடல் நலம் குன்றியிருக்கும்
சமகாலத்தில், தமது மகள், மருமகனுடன் என்னைப்பார்க்க வந்து ஆறுதல் சொன்னவர், இந்த இலக்கிய
சகோதரி.
அவர் பற்றி, இடம்பெற்ற
ஒரு விரிவான ஆக்கம், கடந்த மார்ச் மாதம் நான் வெளியிட்ட யாதுமாகி ( இரண்டாம் பாகம்
) நூலிலும் வெளியாகியிருக்கிறது.
முன்னர் ஊடகங்களில் அந்த ஆக்கம் வெளியானபோதும் அவர் அதனை வாசித்திருக்கிறார்.
மீண்டும் அந்தப்பதிவை எமது
வாசகர்களுக்கு வழங்குகின்றேன்.
தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 ஆம் ஆண்டு
ஆரம்பித்தபோதே, நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியையும் அதில் இணைத்துக்கொண்டோம். கடந்த பல வருட காலமாக இந்நிகழ்வு நடந்துவருகிறது.
எழுத்தாளர்கள் எவ்வளவுதான்
எழுதினாலும் அவற்றை படிப்பதற்கு வாசகர்கள் இல்லையேல், எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். கலைஞர்களுக்கு
ரசிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் மிக மிக முக்கியம்.
2003 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் விழாவை நான் வதியும்
மெல்பனில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, எனது கண்ணில் கலியுகத்தின் சில பக்கங்கள் என்ற சமூக நாவல் தென்பட்டது. அதனை எழுதியிருந்தவர் மெல்பன் மணி. எனக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அப்போதுதான் முதல்
முதலில் அறிமுகமானது.
எழுதியவர் பெண்தான் என்பதை
அக்கதையின் படைப்பு மொழியிலிருந்து புரிந்துகொண்டேன். பின்னர் விசாரித்துப்பார்த்தேன். அவ்வாறுதான் அவுஸ்திரேலியா
விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் வதியும் திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை அவர்கள் எனக்கு முதலில்
அறிமுகமானார்.
2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடந்த விழாவில் , கவிஞர் அம்பியின் தலைமையில் நடந்த கருத்தரங்கில் மெல்பன் மணி, “ முதியோரும் புலம்பெயர் வாழ்வும் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சிவஞானத் தமிழ்ப் பேரவை நடாத்தி வரும் திருத்தலத் திருமுறை முற்றோதல் 200ஆவது வார நிகழ்வு
பன்னிரு திருமுறைகள் சைவத் தமிழ் அடியார்களுக்குக் கிடைத்த பெரும் அருட் செல்வம்.
இவற்றிலே
முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் ஆகும்.
இத்திருமுறைகள்
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இறையருள்
பெற்று அருளிய மிகச் சிறப்பான பதிகங்கள் கொண்டவை.
இந்த நாயன்மார்கள் இப்பதிகங்களைப் பாடிப் பல அற்புதங்களை நிகழ்த்தி
இருக்கின்றார்கள். இப்பதிகங்களைப்
பாராயணஞ் செய்யும் அடியார்கள் இன்றைக்கும் பல அற்புதங்களைத் தங்கள் வாழ்விலே கண்டு
வருகின்றார்கள். சைவத்தையும் தமிழையும் போற்றிப் பாதுகாக்க நாயன்மார்கள் பல
தலங்களுக்கும் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானைப் பரவிப் பாடி
அருளிய பதிகங்கள் இவை.
இத்தேவாரப்
பதிகங்களைத் தல வாரியாக முற்றோதல் செய்வது சைவ மரபாகப் பல நூற்றாண்டுகளாக இருந்து
வருகின்றது. அந்த வகையில் சிவஞானத்
தமிழ்ப் பேரவை இப்பதிகங்களைத் தலவரிசையில் முற்றோதல் செய்து வருகின்றது.
இந்த
முற்றோதலை சிவாக்கர
யோகிகள் திருஞானசம்பந்தர் திருமடம் திருமுறைக் கலாநிதி அருட்குருநாதர் தவத்திரு
ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்கள் மிகச்சிறப்பாக நடாத்தி வருகின்றார்கள்.
ஒவ்வொரு தலத்தின் சிறப்பையும் வரலாற்றையும் சுவாமிகள் விரிவாகச் சொல்லி
அத்தலத்தில் அருளப்பட்ட அனைத்துப் பதிகங்களையும் உரிய பண்ணோடு பாடி
வருகின்றார்கள். பதிகங்களில்
பொதிந்திருக்கும் அரிய கருத்துகளையும் அடியார்களுக்கு விளக்கி வருகின்றார்கள்.
பதிகங்களைப் பாடுதற்கு முன்னர் அப்பதிகத்தை அருளிய நாயனாரைத் துதிக்கும்
வகையில் உரிய பதினொராந் திருமுறைப் பாடலைப் பாடிப் பின்னர் பதிகம் பாடியதும் பெரிய
புராணத்தில் இருந்து அப்பதிகம் அருளப்பட்ட வரலாற்றைக் குறிக்கும் பாடல்களையும்
பாடுவது மிகவும் சிறப்பாக அமைந்து வருகின்றது.
நிறைவாக அத்தலத்தில் அருளப்பட்ட திருப்புகழ் பாடலையும் சுவாமிகள் பாடிப் பொருளுஞ் சொல்லி வருவது மேலும் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளது.
பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி - யசோதா - விழா வர்ணனை தொடருகிறது
"திருமதி
கலையரசி சின்னையா அவர்களின் அடக்கமான
பேச்சு! ஆழமாக கருத்துகள்! தெளிந்த
நீரோடைபோன்ற கனிந்த பேச்சு! விழா
அமைப்பாளர் சார்பிலே அவருக்கு எமது நன்றி. எங்கே அவருக்கு மீண்டும் ஒரு பலத்த கரகோசம்! " என்று
திருமதி கலையரசி சின்னையா அவர்களின் பேச்சுத் திறனை வியந்து பாராட்டியதைத் தொடர்ந்து சரோஜாதேவி சுந்தரலிங்கம் அவர்கள் அடுத்த நிகழ்ச்சியாகத்
தொடரும் இன்னிசைபற்றி அறிவிக்கும் பொழுது
பாரதி பள்ளியின் தமிழ்க் குழந்தைகளுக்கான முன்னோடிக் காணொளி இனி Youtube தளத்திலும் - கானா பிரபா
ஆஸி தேசத்தில் விக்டோரியா மாநிலத்தைத் தளமாகக் கொண்டு
இயங்கும் பாரதி பள்ளி கல்விக் கூடம்
தேவை உள்ளது. அத்துடன் குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் காட்சி ஊடகங்கள் பற்றிய சிந்தனைகளும் வளர வேண்டிய உள்ளது"