தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம் !

 


























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா



ஆதியந்த மில்லா அருருளான சோதியை
அதிமதுரத் தமிழினில் அமர்த்தினார் வாசகர்
தேசமே வியந்தேற்ற திவ்ய திருவாசகமாய்
மலர்ந்துமே வந்து மனமமர்ந்து நிற்கிறது

வாதவூர் பிறந்தார் மனமெல்லாம் இறையே 
சோதனையை வாதவூரர் சுகமாகக் கண்டார்
காதலுடன் கடவுளை கைகூப்பி நின்றார்
கையணைத்துக் கடவுளும் கரையேற்றி விட்டார் 

மந்திரியாய் இருந்தார் மனமெல்லாம் சிவனே
மாணிக்கம் வைரம் மனமேற்க வில்லை
பார்க்கு மிடமெங்கும் பரமனே தெரிந்தார்
பாடினார் வாசகத்தைப் பரமனுமே ஏற்றார்

பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி -யசோதா விழா வர்ணனை தொடருகிறது ------ திருமதி கலையரசி சின்னையா அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் தொடர்ச்சி

 

பண்டித ஆசிரிய கலாசாலை -  -ஆரம்பித்தைமை!

36 ஆம் ஆண்டு நடேசபிள்ளை அவர்கள் யாழ் பரமேசுவராக் கல்லூரியிலே ஒரு பண்டித ஆசிரிய கலாசாலையை ஆரம்பித்தார். "அந்தக் கலாசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நான் நினைக்கிறேன் நவநீதகிருஷ்ண பாரதியாருக்குத் தான் எல்லா இலக்கியங்களையும் இலக்கணங்களையும் தனது தமிழறிவை மற்றவர்களுக்குப்  புகட்டக் கூடிய அந்தத் தன்மை இருந்திருக்கிறது என்று. ஏனென்றால் அந்த ஆரம்பப் பாடசாலையில் மூன்று வருடம் படிக்க வேண்டும்.    3 வருடம் படித்துச் சித்தி அடைந்தால்மட்டும் போதாது. அதன்பின் பண்டித பரீட்சையிலும் சித்தியடைய வேண்டும்.  அந்தப் பண்டித வகுப்புக்கும் பாடம் படிப்பித்தார் நவநீத கிருஷ்ண பாரதியார். பண்டிதர் கழகம் ஒன்றை அமைத்தார்கள் என்றால்  நீங்கள் விளங்கிக்கொள்ளலாம். அந்தக் காலத்திலே இவர் பண்டிதர்களை உருவாக்குவதற்கு எவ்வளவு வழிகாட்டியாய் இருந்தார் என்று.இப்படி அவருடைய ஆசிரியப்பணி போகின்ற பொழுது இவர் பல  சங்கங்களுடன் தொடர்புடையவரைக இருந்தார். அந்தச் சிறுமி கூறியதுபோல ஈழநாட்டுப் புலவர் மன்றம் ஒன்றை உருவாக்கியதுடன் அமையாது ஆரிய திராவிட   பாசா விருத்திச் சங்கத்துடன் சேர்ந்து அங்கு பரீட்சகராக இருந்தார். அவர் எழுதிய நூல் ஒன்று அந்தப் பண்டித பரீட்சைக்குப் பாடநூலாக இருந்தது. அது மாத்திரம் அல்லாமல் சு நடேசபிள்ளையால் ஆரம்பிக்கப்பட்ட கலாநிதியம் என்ற என்ற மன்றத்திலும் அவர்   ஆலோசக இருந்தார். அது வெளிப்படுத்திய பத்திரிகைகளிலும் அவர் கட்டுரைகள் எழுதிவந்தார். அது மாத்திரம் அல்லாமல் இன்று இந்த சான்றோர் விழாவை நடத்திக்கொண்டிருக்கும் டாக்டர் பாரதி அவர்களின் தந்தையார் இளமுருகனார் அவர்கள் மறைமலை அடிகள் ஈழநாட்டுக்கு வந்த பின்னர் ஏற்படுத்திய தனித்தமிழ் இயக்கத்தினாலே ஏற்படுத்திய தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தின் ஒரு காப்பாளராகவும் விளங்கினார். நவநீத கிருஷ்ணபாரதியார்

ஜூன் 27 அமரர் மல்லிகை ஜீவாவின் 98 ஆவது பிறந்த தினம் முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூலின் முன்னுரை இந்நூலை அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

இலங்கை யாழ்ப்பாணத்தில்   சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து,  உயர்கல்வியை பெறுவதற்குரிய  வாய்ப்பு வசதிகளை இழந்து,  அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே  மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா,   2021 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.

 ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா,  மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012  ஆம் ஆண்டு வரையில்  வெளியிட்டார்.  இதுவரையில் நானூறுக்கும் மேற்பட்ட


இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில் பார்க்கமுடியும்.

டொமினிக் என்பது அவரது இயற்பெயர்.  தமிழகத்திலிருந்து பொதுவுடமை இயக்கத்தோழர் ஜீவானந்தம் பிரித்தானியர் காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவரது கருத்துக்களினால் கவரப்பட்ட டொமினிக்,  தனது பெயருடன் ஜீவா என்ற எழுத்துக்களையும் இணைத்துக்கொண்டார்.

மல்லிகை  ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து சுயமுயற்சியோடு  அதனை வெளியிடத்தொடங்கியதும்,  மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார்.

அவரது இந்த நாமம் இலங்கையெங்கும் மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது.

இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின் நூறுவயதையும் எட்டியிருப்பார்.

ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளரகவே இலக்கிய உலகில் பிரவேசித்தவர். அவரது முதலாவது கதைத்தொகுதி தண்ணீரும்  கண்ணீரும்.

அதற்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது. அதுவே இலங்கையில் தமிழில் தேசிய மட்டத்தில்   இலக்கியத்திற்காக அவ்வாறு கிடைத்த முதல்விருதுமாகும்!

 
விருதை  வாங்கிக்கொண்டு  யாழ்ப்பாணத்துக்கு  ரயிலில்              திரும்பிவருகிறார்.  ஊர்மக்கள்  அச்சமயம்  யாழ்ப்பாண               மேயராக  பதவியிலிருந்த  துரைராஜாவின்   தலைமையில்    மாலை   அணிவித்து  அவரை  வரவேற்றனர்.

மன்னார்குடியில் மருதமுத்துக்கு குழந்தை பிறந்தது !

-


சங்கர சுப்பிரமணியன்.





பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் முதல் அடியையே மனிதர்கள் இன்னும் சரியாக உள்வாங்கவில்லை. ஆதலால் இரண்டாவது அடியான சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையானை தற்போது தள்ளி வைப்போம். ஏனெனில் இப்போது நம் கதைக்கு அது தேவையில்லை.

எவ்வளவுதான் படித்து முன்னேறி இருந்தாலும் இன்னும் மக்கள் மனதில் ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்ற பேதம் நிலைத்து வேறூன்றியுள்ளது. முற்றாக அழிந்தபாடில்லை.
சான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை என்று பழமொழியே இதை வலியுறுத்துகிறது. தமிழில் பழமொழிக்கு பஞ்சமா என்ன? ஏன் பெண்பிள்ளையானாலும் பொன்பிள்ளை என்று ஒரு பழமொழி உருவாகவில்லை?

ஏனென்றால் பெண்ணடிமைச் சமுதாயம் என்று தோன்றியதோ அன்றிலிருந்து பெண்ணை சரிசமமாகப் பார்க்கும் வழக்கொழிந்தது. ஔவையார் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் போன்று பெண்பால் புலவர்கள் தமிழ் மண்ணில் தோன்றியதை எல்லாம் தமிழ்கூறும் நல்லுலகம் மறந்தே போயிற்று.

பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணுக்கு தங்க நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் கார் ரொக்கப் பணம் துடைப்பக்கட்டை போன்றவற்றை மாப்பிள்ளைக்கு கொடுக்கும் வழக்கம் தோன்றியது. இந்த லட்சணத்தில் தரமான திருமண சீர்வரிசைப் பொருட்கள் வாங்க சிறந்த இடம் என்று விளம்பரம் வேறு.
வரதட்சணையை ஒழிக்க பாடுபடும்போது இதுபோன்ற விளம்பரங்களால் சான் ஏற முழம் சரிவது போல் ஆகிறது.

இஸ்ரேலா ? ஈரானா ? : எந்நேரத்திலும் போர் வெடிக்கலாம் : யாருக்கு இராணுவ பலம் அதிகம்

 

28 Jun, 2025 | 12:22 PM


எம்.டி. லூசியஸ்

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரானது உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், ஏதோ ஒரு வகையில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என கூறினாலும் கூட, மீண்டும் எந்நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு நாடுகளின் இராணுவ கட்டமைப்பு மற்றும் ஆயுதபலம் தொடர்பில் இந்த கட்டுரையில் நாம் விரிவாக ஆராய உள்ளோம்.

உலகில் அதிக ராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 15-ஆவது இடத்திலும் ஈரான் 16-ஆவது இடத்திலும் உள்ளன.

இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரான் இராணுவத்தில் அதிக ராணுவ வீரர்கள் உள்ளனர். ஆனால் ஆயுதங்களை ஒப்பிடும்போது ஈரான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

ரஷ்யாவின் பழங்கால டி-72, ஜுல்பிகர், காரர் ஆகிய டாங்கிகளை மாத்திரமே ஈரான் பயன்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் இராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இராணுவ தொழில்நுட்பத்தில் அந்த நாடு முன்னிலையில் இருக்கிறது.

குழந்தையும் தெய்வமும் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 படத்தின் தயாரிப்பாளர் பெங்களூரில் ஆங்கிலப் படம் ஒன்றை


காட்டி இந்தக் கதையை கருவாக வைத்து தமிழுக்கு ஏற்றாற் போல் திரைக் கதையை எழுதித் தாருங்கள் என்று சொல்லி விட்டார். ஆங்கிலப் படத்தின் கதையோ சற்று ஏடகூடமானது. அதை எவ்வாறு தமிழ் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றுவது என்று எண்ணியபடி சென்னை திரும்ப விமானத்தில் ஏறினார் கதாசிரியர். விமானத்தில் ஒரு பழைய நடிகையை கண்டார். அவ்வளவுதான், தமிழ் படத்தின் கதை அவர் மனத்துக்குள் உதித்து விட்டது. அவ்வாறு உருவான படம்தான் குழந்தையும் தெய்வமும். 



ஆங்கிலப் படத்தின் கதையை சொன்னவர் ஏவி. எம் . குமரன்.

தமிழுக்கு எழுதவிருந்தவர் ஜாவர் சீதாராமன். விமானத்தில் அவர் கண்ட நடிகை ஜி . வரலஷ்மி. வரலஷ்மியை கண்டவுடன் இவருக்கு ஏற்றாற் போல் ஒரு கதாப் பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழ் படத்துக்கான திரைக் கதையை எழுதி விடலாம் என்ற ஐடியா ஜாவருக்கு உடனே தோன்றி விட்டது. ஒரு சிக்கலின் காரணமாக கணவனும், மனைவியும் விவாகரத்தாகின்றனர். அவர்களின் இரு குழந்தைகளும் ஆளுக்கொருவராய் தாயுடனும், தந்தையுடனும் வளர்கின்றனர். இப்படி அமைந்த ஆங்கிலப் படத்தை குமரன் முதலில் டைரக்டர் ஏ. சி. திருலோகச்சந்தருக்கு காட்டி அபிப்பிராயம் கேட்டார்.

ஆங்கில படத்தைப் பார்த்த திருலோகசந்தர் தமிழ் பட ரசிகர்கள் ஏற்க முடியாத சப்ஜெக்ட் இது என்று கூறி ஒதுங்கி விட்டார். அதன் பின் ஜாவருக்கு படம் காட்டப்பட்டது. படம் பார்த்து விட்டு அரை மனதோடு விமானம் ஏறிய ஜாவர் வரலஷ்மியை பார்த்ததும் கதையை தீர்மானித்து விட்டார். மாமியாரின் அவமரியாதைகளை பொறுத்துக்க கொள்ள முடியாத தன்மானமுள்ள மருமகன் ஒரு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். மற்றைய குழந்தை தாயுடன் தங்கி விடுகிறது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இரு குழந்தைகளும் சேர்ந்து முயற்சி செய்து பெற்றோரை சேர்த்து வைக்கிறார்கள். 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

13-07-2025 Sun: Laughing Go Laughing - comedy drama - Bryan Brown Theatre, cnr of Chapel and Rickard Roads, 80 Rickard Road, Bankstown NSW 2200 at 6 PM.

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

எதிர்த்துப் போராடும் ஈரானின் மன உறுதி பற்றி தப்புக் கணக்கு போட்ட இஸ்ரேல்

 

29 Jun, 2025 | 03:15 PM

லத்தீப் பாரூக்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் ஆதரவோடு  ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டத்தையும்  ஆட்சியையும் அழிக்க இஸ்ரேல் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் இராணுவத் தாக்குதல்களுக்கு, ஈரான் இஸ்லாமிய குடியரசு அளித்த விரைவான மற்றும் பேரழிவு தரும் பதில்  இஸ்ரேலுக்கும் குற்றங்களில் அதன் கூட்டாளிகளுக்கும் பெரும் இழிவை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு செய்ததன் மூலம்  தமது இருப்புக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நம்பியுள்ள அரபு சர்வாதிகாரிகளுக்கு ஈரான் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது.  அவர்களது ஆட்சிகள் ஒடுக்குமுறை, ஊழல் மற்றும் மதச்சார்பற்றவை. இந்த ஆட்சிமுறை அவர்களின் அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தங்கள் மக்களை கல்வியறிவற்றவர்களாகவும் வறுமையுடனும் வாழ வைத்திருக்கிறது.

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ், துறைமுக நகரமான ஜாஃபா மற்றும் பல நகரங்களுக்கு ஈரான் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை எரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை தெருக்களில் தள்ளியுள்ளது. உயரமான கட்டிடங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளதால் அவை அழிவுக்குப் பிறகு காஸா போல தோற்றமளிக்கின்றன.

இலங்கைச் செய்திகள்

யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்று இரு மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !

வடக்கில் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை !

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு மீதான விசாரணை செப்டெம்பர் மாதம்

பகிடிவதையால் பல்கலை மாணவன் உயிரிழப்பு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது

மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே புதிய வர்த்தமானியை வெளியிட்டிருக்கிறது அரசு - எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை 


யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்று இரு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் 

27 Jun, 2025 | 09:27 PM

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ( 27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது. 

இன்றைய  அகழ்வு பணிகளின் போது இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

உலகச் செய்திகள்

 ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி

காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி

சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப் பரப்பு மூடல்

கட்டாரிலுள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : தாக்குதலை முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவிப்பு

ஈரான் ஏவுகணைதாக்குதல் - இஸ்ரேலில் மின்விநியோகம் பாதிப்பு



ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி

26 Jun, 2025 | 04:09 PM

ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனி திருமஞ்சனம்

 


ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரம், திதி சிறப்புக்குரியதாகவும், வழிபாட்டிற்கு உரியதாகவும் அமையும். அப்படி வழிபாட்டிற்கு உரிய ஆனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சிவ வழிபாட்டிற்கு உரியதாகும். சிவ பெருமானின் ரூபமான ஆடல் அரசன் நடராஜரை வழிபட வேண்டிய நாளாகும்.

2025 ஆவணி மாதம் வாய்மொழி தொடர்பாடல் பரீட்சையிலும், 2025 ஐப்பசி மாதம் எழுத்து பரீட்சையிலும் தோற்றும் மாணவர்களிற்கான விசேட பயிற்சிப்பட்டறை.

 

Rectangle: Rounded Corners: தமிழ் உயர்தர பரீட்சை பயிற்சிப்பட்டறை
HSC Tamil workshop 2025


 

 

 

 



Laughing கோ Laughing 13/07/2025

 


சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025



கவி கண்ணதாசன் கடவுளின் வரமே !












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா     



நீறுடை நெற்றி குங்குமப் பொட்டு 
உருத்திராட்ச மாலை உய்ர்ந்திடு தோற்றம்
நல்ல நிறமும் களையான முகமும்
நாட்டுக் கோட்டை நமக்கீந்த கொடையே 

ஆத்தீகம் அகத்தில் நிறைந்தே இருந்தது
அனைத்தும் கடவுளே அவரது நினைப்பே
எழுதிக் குவிக்க எண்ணம் எழுந்தது
ஏறினார் வண்டி சென்னையை நோக்கி 

அறிமுகம் இல்லா நிலையில் வந்தார்
ஆண்டவன் கருணையை நம்பியே நின்றார்
எழுதும் வாய்ப்பு இறையால் விளைந்தது
எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார்

செல்வ மகளும் சிதறிய கனவும்:


-சங்கர சுப்பிரமணியன்


 




அம்மாவின் சாயலிலே அப்படியே என்மகள்

இருப்பதாக

அக்கம் பக்கத்தில் ஆசையாய் பலரும்

சொன்னபோது

அள்ளி எடுத்தவளை அன்புடனே நான் 

உச்சி முகர்ந்தேன்

 

வெண்ணிலா வேண்டி அவள் விரும்பியே 

அழுதபோது

ண்ணீரில் பிம்பம் காட்டி கண்ணீரை நான்துடைத்தேன்

யானை மீது அம்பாரி போக அவள் ஆசைப்பட்டதுமே

நான் ஆனேன் யானையாக என் முதுகில் 

அவள் இருக்க

 

பட்டுச் சொக்காய் பாவடையில் பதவிசாய் நின்றவளும்

சட்டெனவே வளர்ந்தின்று தாவணியும்

அணிந்து நின்றாள்

தாண்டித் தாண்டியே பாண்டி விளையாடி 

வந்தவளும்

வேண்டாம் அதுவென்றே பல்லாங்க்குழி 

முன்னமர்ந்தாள்

பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - ---யசோதா தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி

















சிவத்திரு நவநீத கிருஸ்ணபாரதியார்

விழா நாயகனான நவநீத கிருஸ்ணபாரதி அவர்களைப்பற்றிச் சிறப்புரை   ஆற்றுவதற்குத் திருமதி கலையரசி சின்னையா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பெற்றார்.

 



                     









திருமதி கலையரசி சின்னையா

"யாழ். சர்வகலாசாலையிலே சிரேட்ட விரிவுரையாளராகப் பணிபுரிந்து இளைப்பாறியவர் இவர். தனது பேச்சுத் திறனால் தமிழர்களிடையே ஒரு தனி இடத்தைப் பெற்று விளங்கிய இவர் வித்துவான் வேந்தனார் அவர்களின் மகளாவார்"  என்று விழாவின் தொகுப்பாளர் திருமதி சரோஜாதேவி அறிமுகப்படுத்தனார்.

கலங்கரை விளக்கம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 1965ம் ஆண்டு வெளிவந்த படங்களுள் ஏழு படங்கள் ஆள்


மாறாட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவான கதைக் களத்தைக் கொண்டிருந்தன. எங்க வீட்டுப் பிள்ளை, பஞ்சவர்ணக் கிளி, ஆசைமுகம், சாந்தி, இதயக் கமலம், நீ, என்ற வரிசையில் உருவான மற்றுமொரு படம்தான் கலங்கரை விளக்கம். 



இந்த மாதிரியான கதை என்றால் அதில் எம் ஜி ஆர் தான் இரட்டை

வேடத்தில் வருவார். ஆனால் இம்முறை அந்த வாய்ப்பு படத்தின் கதாநாயகி சரோஜாதேவிக்கு வழங்கப்பட்டது. இப்படி இரு வேடங்களில் நடிப்பதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் இரண்டரை இலட்சம் ரூபாய். அறுபது ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப் பட்ட இந்த ரேட் சரோஜாதேவிக்கு அன்று இருந்த மவுசை வெளிப்படுத்தியது. 


எம் ஜி ஆர் நடிப்பில் படகோட்டி படத்தை கலரில் எடுத்து விட்டு , இந்தப் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்தார் தயாரிப்பாளர் ஜி .என் . வேலுமணி. படத்தின் கதையை எழுதும் பொறுப்பு கதாசிரியர் மா . லட்சுமணனிடம் விடப்பட்டது. 1958ம் வருடம் ஆல்ப்ரெட் ஹிட்ச்கொக் ஆங்கிலத்தில் இயக்கிய வெர்டிகோ என்ற மர்மப் படத்தின் கதைக் கருவை எடுத்து தமிழ் படுத்தியிருந்தார் லட்சுமணன் . சும்மா சொல்லக் கூடாது , ஹிட்ச்கோக்கே கலங்கரை விளக்கத்தை பார்த்தால் கூட இது ஆங்கிலத்தில் தான் இயக்கிய படம் என்று நம்பியிருக்க மாட்டார். 


ஆறு பாடல்கள், மூன்று சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் , சிவகாமியின் சபதம் நாவலின் இடைச் செருகல் இவை எல்லாம் வேர்ட்டிகோவில் இருந்தனவா என்ன! வேர்டிகோ என்றால் தலை சுற்றல் என்று அர்த்தம். தமிழ் படத்தை பார்த்திருந்தால் ஹிட்ச்க்கொக்கிற்கு அதுதான் ஏற்பட்டிருக்கும்!

இலக்கியவெளியின் நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

  https://youtu.be/wHw95C7WvmI?si=tzSMGfX_6tg1Bqo6




ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைதல்: உலகப் பொருளாதார தாக்கங்கள் மற்றும் இலங்கையின் வணிக எதிர்நோக்குகள்

 Published By: Digital Desk 2

22 Jun, 2025 | 11:55 AM

ஏ.ஜி. எஸ் சுவாமிநாதன் சர்மா
பட்டயக் கணக்காளர்
வரி, முகாமைத்துவ ஆலோசகர்

மத்திய கிழக்கு பெரும்பாலும் பதற்றமுள்ள பகுதியில் ஒன்றாகவே இருந்துள்ளது. சமீபத்தில் தீவிரமடைந்த ஈரான் –இஸ்ரேல் போரின் நிலை அந்தப் பதற்றத்தை மீறி ஒரு புதிய ஆபத்தான கட்டத்திற்குள் நம்மை இழுத்து செல்கின்றது. இஸ்ரேல் மீது மேற்கொண்ட வரலாற்றிலேயான நேரடி இயங்குதிரைகள் மற்றும் அதற்கான பதிலடி தாக்குதல்களின் பின்னணியில் இப்போர் நிலைமை வெறும் இடைக்கால முரண்பாட்டைவிட அதிக ஆபத்தானதாக மாறியுள்ளது. மனிதாபிமான பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதன் பொருளாதார தாக்கங்களும் கடுமையானவையே. குறிப்பாக, எரிபொருள் இறக்குமதியையே சார்ந்து இயங்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாகும்.

போரின் தொடக்கக் காரணங்கள் என்ன?

2024 ஏப்ரலில், இஸ்ரேல் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தை விமான தாக்குதலின் மூலம் குறிவைத்தது. இதில் ஐ.ஆர்.ஜி.சி.யின் உயர் அதிகாரிகள் பலியாகினர். இதைத் தொடர்ந்து ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது 300  இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பி தாக்கியது. பெரும்பாலான தாக்குதல்கள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் தடுக்கப்பட்டன. இருப்பினும், ஈரான் இப்போது நேரடியாக தலையீடு செய்யத் தயார் எனும் செய்தியை இது வெளிப்படையாகக் கூறியது.

இந்த தாக்குதலுக்குப் பதிலாக இஸ்ரேல், ஈரானின் விமானப்படைத் தளங்கள் மற்றும் உள்நாட்டு இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்கியது. இந்நிலையில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து போன்ற நாடுகள் அருகில் கண்காணிக்கின்றன. அமெரிக்கா, இதற்கிடையில் பாரசீக வளைகுடாவில் தனது இராணுவத்தை அதிகரித்துள்ளது.

உடனடி பொருளாதார தாக்கங்கள்

இலங்கைச் செய்திகள்

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் போராட்டம் முன்னெடுப்பு

பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? ; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி    

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ; மனைவி தலைமறைவு

மலையக மக்களுக்கான காணி உரிமை கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்


புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம் 

Published By: Digital Desk 2

20 Jun, 2025 | 08:04 PM

யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, “புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதி வேண்டும்” என்ற கோசத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்தக் கோரிக்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் பல சமூக அமைப்புகள், உரிமைப் பாதுகாப்பாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பெண்கள் குழுக்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களால் வெள்ளிக்கிழமை (20) முன்வைக்கப்பட்டது.