பி.கே.பாலச்சந்திரன்
 கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும்  முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு -- காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை  இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும்.
பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமையிலான மத்திய  அரசாங்கம் ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும் 35 ஏ பிரிவையும்  ஜனாதிபதியின் உத்தரவொன்றின் ஊடாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி  செல்லுபடியற்றதாக்கியது. ஜனாதிபதியின் அந்த உத்தரவு ஜம்மு -- காஷ்மீர் ' மாநிலத்தை ' மிகவும் குறைந்தளவு சுயாட்சியுடைய இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியிருக்கிறது.
இந்த நடவடிக்கை மூன்று இலக்குகளை  மனதிற்கொண்டு மேற்கொள்ளப்பட்டது ;  ஜம்மு -- காஷ்மீரில் பாகிஸ்தானின் அனுசரணையுடனான  பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்த்துப் போராடுதல், ஜம்மு -- காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒன்றிணைத்தல், அந்த மாநிலத்துக்கு இந்திய சட்டங்களை பிரயோகிப்பதற்கும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களும் மூலதனமும் வருவதற்கும்  கட்டுப்பாடுகளை  விதிக்கும்  370 மற்றும் 35 ஏ பிரிவுகளின் விளைவாக இதுகாலவரை அடையமுடியாதிருந்த பொருளாதார அபிவிருத்தியை  காஷ்மீரிகளுக்கும் கிடைக்கச்செயதல்.