நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !
அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் மெல்பன் மணி மறைந்தார் ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலச்சங்கத்தில் இணைந்திருந்தவர் ! முருகபூபதி
அவுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த
முன்னாள்
ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பன் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.
நான் உடல் நலம் குன்றியிருக்கும்
சமகாலத்தில், தமது மகள், மருமகனுடன் என்னைப்பார்க்க வந்து ஆறுதல் சொன்னவர், இந்த இலக்கிய
சகோதரி.
அவர் பற்றி, இடம்பெற்ற
ஒரு விரிவான ஆக்கம், கடந்த மார்ச் மாதம் நான் வெளியிட்ட யாதுமாகி ( இரண்டாம் பாகம்
) நூலிலும் வெளியாகியிருக்கிறது.
முன்னர் ஊடகங்களில் அந்த ஆக்கம் வெளியானபோதும் அவர் அதனை வாசித்திருக்கிறார்.
மீண்டும் அந்தப்பதிவை எமது
வாசகர்களுக்கு வழங்குகின்றேன்.
தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 ஆம் ஆண்டு
ஆரம்பித்தபோதே, நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியையும் அதில் இணைத்துக்கொண்டோம். கடந்த பல வருட காலமாக இந்நிகழ்வு நடந்துவருகிறது.
எழுத்தாளர்கள் எவ்வளவுதான்
எழுதினாலும் அவற்றை படிப்பதற்கு வாசகர்கள் இல்லையேல், எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். கலைஞர்களுக்கு
ரசிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் மிக மிக முக்கியம்.
2003 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் விழாவை நான் வதியும்
மெல்பனில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, எனது கண்ணில் கலியுகத்தின் சில பக்கங்கள் என்ற சமூக நாவல் தென்பட்டது. அதனை எழுதியிருந்தவர் மெல்பன் மணி. எனக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அப்போதுதான் முதல்
முதலில் அறிமுகமானது.
எழுதியவர் பெண்தான் என்பதை
அக்கதையின் படைப்பு மொழியிலிருந்து புரிந்துகொண்டேன். பின்னர் விசாரித்துப்பார்த்தேன். அவ்வாறுதான் அவுஸ்திரேலியா
விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் வதியும் திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை அவர்கள் எனக்கு முதலில்
அறிமுகமானார்.
2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடந்த விழாவில் , கவிஞர் அம்பியின் தலைமையில் நடந்த கருத்தரங்கில் மெல்பன் மணி, “ முதியோரும் புலம்பெயர் வாழ்வும் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சிவஞானத் தமிழ்ப் பேரவை நடாத்தி வரும் திருத்தலத் திருமுறை முற்றோதல் 200ஆவது வார நிகழ்வு
பன்னிரு திருமுறைகள் சைவத் தமிழ் அடியார்களுக்குக் கிடைத்த பெரும் அருட் செல்வம்.
இவற்றிலே
முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் ஆகும்.
இத்திருமுறைகள்
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இறையருள்
பெற்று அருளிய மிகச் சிறப்பான பதிகங்கள் கொண்டவை.
இந்த நாயன்மார்கள் இப்பதிகங்களைப் பாடிப் பல அற்புதங்களை நிகழ்த்தி
இருக்கின்றார்கள். இப்பதிகங்களைப்
பாராயணஞ் செய்யும் அடியார்கள் இன்றைக்கும் பல அற்புதங்களைத் தங்கள் வாழ்விலே கண்டு
வருகின்றார்கள். சைவத்தையும் தமிழையும் போற்றிப் பாதுகாக்க நாயன்மார்கள் பல
தலங்களுக்கும் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானைப் பரவிப் பாடி
அருளிய பதிகங்கள் இவை.
இத்தேவாரப்
பதிகங்களைத் தல வாரியாக முற்றோதல் செய்வது சைவ மரபாகப் பல நூற்றாண்டுகளாக இருந்து
வருகின்றது. அந்த வகையில் சிவஞானத்
தமிழ்ப் பேரவை இப்பதிகங்களைத் தலவரிசையில் முற்றோதல் செய்து வருகின்றது.
இந்த
முற்றோதலை சிவாக்கர
யோகிகள் திருஞானசம்பந்தர் திருமடம் திருமுறைக் கலாநிதி அருட்குருநாதர் தவத்திரு
ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்கள் மிகச்சிறப்பாக நடாத்தி வருகின்றார்கள்.
ஒவ்வொரு தலத்தின் சிறப்பையும் வரலாற்றையும் சுவாமிகள் விரிவாகச் சொல்லி
அத்தலத்தில் அருளப்பட்ட அனைத்துப் பதிகங்களையும் உரிய பண்ணோடு பாடி
வருகின்றார்கள். பதிகங்களில்
பொதிந்திருக்கும் அரிய கருத்துகளையும் அடியார்களுக்கு விளக்கி வருகின்றார்கள்.
பதிகங்களைப் பாடுதற்கு முன்னர் அப்பதிகத்தை அருளிய நாயனாரைத் துதிக்கும்
வகையில் உரிய பதினொராந் திருமுறைப் பாடலைப் பாடிப் பின்னர் பதிகம் பாடியதும் பெரிய
புராணத்தில் இருந்து அப்பதிகம் அருளப்பட்ட வரலாற்றைக் குறிக்கும் பாடல்களையும்
பாடுவது மிகவும் சிறப்பாக அமைந்து வருகின்றது.
நிறைவாக அத்தலத்தில் அருளப்பட்ட திருப்புகழ் பாடலையும் சுவாமிகள் பாடிப் பொருளுஞ் சொல்லி வருவது மேலும் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளது.
பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி - யசோதா - விழா வர்ணனை தொடருகிறது
"திருமதி
கலையரசி சின்னையா அவர்களின் அடக்கமான
பேச்சு! ஆழமாக கருத்துகள்! தெளிந்த
நீரோடைபோன்ற கனிந்த பேச்சு! விழா
அமைப்பாளர் சார்பிலே அவருக்கு எமது நன்றி. எங்கே அவருக்கு மீண்டும் ஒரு பலத்த கரகோசம்! " என்று
திருமதி கலையரசி சின்னையா அவர்களின் பேச்சுத் திறனை வியந்து பாராட்டியதைத் தொடர்ந்து சரோஜாதேவி சுந்தரலிங்கம் அவர்கள் அடுத்த நிகழ்ச்சியாகத்
தொடரும் இன்னிசைபற்றி அறிவிக்கும் பொழுது
பாரதி பள்ளியின் தமிழ்க் குழந்தைகளுக்கான முன்னோடிக் காணொளி இனி Youtube தளத்திலும் - கானா பிரபா
ஆஸி தேசத்தில் விக்டோரியா மாநிலத்தைத் தளமாகக் கொண்டு
இயங்கும் பாரதி பள்ளி கல்விக் கூடம்
தேவை உள்ளது. அத்துடன் குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் காட்சி ஊடகங்கள் பற்றிய சிந்தனைகளும் வளர வேண்டிய உள்ளது"
மண்டை ஒடுன்னா சும்மாவா!
-சங்கர சுப்பிரமணியன்.
திருப்பதி ஆண்டவர். ( Part 1) __________________ நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர்.
நீலவானம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
எம் ஜி ஆர் நடித்து வெற்றி பெற்ற தெய்வத் தாய் படத்துக்கு வசனம்
எழுதியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கே. பாலசந்தர். அந்தப் படத்தை டைரக்ட் செய்தவர் பி. மாதவன். தெய்வத் தாய் வெற்றி பெற்ற போதும் அதன் பிறகு பாலசந்தரும், மாதவனும் மீண்டும் எம் ஜி ஆருடன் இணைந்து வேறு படங்களில் பணியாற்றவில்லை. எம் ஜி ஆரை அணுசரித்துப் போவதில் உள்ள சிரமங்களை எண்ணி இரண்டு பட்டதாரி இளைஞர்களும் அவரை விட்டு ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஆனாலும் இவர்கள் இருவரும் இணைந்து சிவாஜியின் படம் ஒன்றில் பணியாற்றினார்கள். மாதவன் இயக்க பாலசந்தர் கதை வசனம் எழுதி உருவான அந்தப் படம் தான் நீலவானம்.
சொந்த தியேட்டரான சாந்தியின் சிவாஜி டிக்கெட் கிழிப்பவராக ஒரு காட்சியில் நடித்திருந்தார். அது மட்டுமன்றி இந்தப் படத்தில் சிவாஜிக்கு இரண்டு காதலிகள் இருந்தும் டூயட் இல்லை. அதே போல் சிவாஜியும், பாலசந்தரும் இணைந்த முதல் படமும், விசுவநாதன் தனித்து இசையமைக்கத் தொடங்கிய பின் சிவாஜிக்கு இசையமைத்த முதல் படமும் இதுவேயாகும்.
இலங்கைச் செய்திகள்
செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்
செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை
சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர
இலங்கை விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி குறித்து விசாரிப்பதற்கு விசேட விசாரணைக்குழு
அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
செம்மணியில் மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது-பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்
Published By: Rajeeban
04 Jul, 2025 | 08:28 AM
செம்மணியில் ஒரு மனித புதைகுழி தோண்டப்படுதல் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறதுஎன பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சியோபைன் மெக்டோனா எம்.பிதெரிவித்துள்ளார்.
செம்மணியில் ஒரு புதைகுழி தோண்டப்படுதல்தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்த வலி மற்றும் மௌனத்தைப் பேசுகிறது - மேலும் சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க செயல்பட வேண்டும் என்று கோருகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார்
உலகச் செய்திகள்
இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul, 2025 | 01:09 PM
புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செவ்வாயன்று (ஜூலை 1) நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கும் போது புதிய கட்டமைப்பை இறுதி செய்து கையெழுத்திட ஒப்புக்கொண்டனர்.