மரண அறிவித்தல் - திருமதி சாந்திமலர் சுரேஷ்குமார்

.


மரண அறிவித்தல் - திருமதி சாந்திமலர் சுரேஷ்குமார்

சாந்திமலர் சுரேஷ்குமார்  (ரதி) சிட்னி ஆஸ்திரேலியா (ஓய்வுபெற்ற நூலக உதவியாளர்) வலிவடக்கு பிரதேச சபை, காங்கேசன்துறை.

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் சிட்னி ஆஸ்திரேலியா வை வதிவிடமாகவும் கொண்ட சாந்திமலர் சுரேஷ்குமார் அவர்கள் 18/03/2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலம் சென்ற சண்முகதாஸ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அளவெட்டியைச் சேர்ந்த காலம் சென்ற பாலசுப்ரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும், சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியும், ஐஸ்வர்யா அவர்களின் பாசமிகு தாயாரும், ஸ்ரீராம்   அவர்களின்  அன்பு மாமியாரும், சிட்னி ஆஸ்திரேலியா - சந்திரமலர் (பபி) , மகேந்திரன்  அவர்களின் அன்பு சகோதரியும், சிட்னி ஆஸ்திரேலியா - சிவஞானசுந்தரம், சாரதாதேவி, சூரியகுமார், செந்தில்குமார், சிவகுமார் (சிவம் போட்டோ சுன்னாகம்), 
கனடா - சந்திரகுமார் , சூரியகலா, சக்திகலா, காலம்சென்ற சசிகலா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

ஈமைக் கிரியைகள் விபரம்:
20/3/2019 மாலை 6.30 - 8.30 வரை Guardian Minchinbury Chapel இல் பார்வைக்காக வைக்கப்படும்.

21/03/2019 மதியம் 12-1.30pm மணிக்கு அன்னாரின் வீட்டில் சைவ கிரியைகள் நடைபெறும் 


21/3/2018 1.30 - 3.30pm  தகனகிரிகைகள்  West Chapel, Pinegrove Crimatorium  இல் இடம்பெறும்.

தொடர்பு
மக்கள் - ஐஸ்வர்யா - (+61) 0430208484
மருமகன் ஸ்ரீராம்  - (+61) 0435607262
மைத்துனர் சிவஞானசுந்தரம் - (+61) 0405227578
மைத்துனர் செந்தில்குமார் - (+61) 0431243639

சிட்னி முருகன் ஆலய 6ம் திருவிழா பகல், இரவு நிகழ்வுகள்

.


No photo description available.

Image may contain: 1 person, standing and indoor


சிட்னி முருகன் ஆலய 5ம் திருவிழா

.


Image may contain: 4 people, indoor


Image may contain: 9 people, outdoor

கழுவேற்ற வேண்டும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


            பொள்ளாச்சி என்றவுடன் வந்துநிற்பார் மகாலிங்கம்
               வள்ளலாய் அவரிருந்து வாரியே வழங்கிநின்றார் 
           தெள்ளுதமிழ் நூல்படைப்பார் சிறந்தபக்தி நூல்படைப்பார் 
image1.JPG                 நல்லபடி வாழ்வதற்கு அள்ளியே அவர்கொடுத்தார் 

           மகாலிங்கம் எனும்பெரியார் வாழ்ந்ததனால் பொள்ளாச்சி
                மக்களிடம் பேரூராய் புகழ்பெற்று விளங்கியதே  
           இனிமைநிறை இளநீரை கொடுத்துநின்ற காரணத்தால்  
                எல்லோரின்  மனத்தினிலும் நின்றதுவே பொள்ளாச்சி 

           பொள்ளாச்சி எனும்பெயரை இப்போது  உச்சரிக்க
                 பொறுக்காத வெறுப்புத்தான் மேலோங்கி வருகிறது 
           நல்லவர்கள் வாழ்ந்தவிடம் நலனழிந்து நிற்பதனால்
                 நாடெல்லாம் பொள்ளாச்சி பேச்சுத்தான் எழுகிறது 

           செல்வாக்கு மிக்கவரும் செல்வமுடன் இருப்பாரும் 
                 நல்வழியை விட்டுவிட்டு தம்வழியில் செல்லுகிறார்
          பொல்லாத செயலையவர் பொறுப்பென்றே மனதிருத்தி
                 தொல்லையினை கொடுப்பதையே சொர்க்கமாய் எண்ணுகிறார்

          வாழவெண்ணும் மங்கையரை மயக்கமொழி பேசியவர்
               வாழ்விழக்கச் செய்துநிற்கும் வலைவிரித்தே நிற்கின்றார் 
          ஏழ்மைநிலை தனையவரும் சாதகமாய் ஆக்கிநின்று 
                இறுமாப்பு கொண்டபடி இன்பம் கொண்டாடுகிறார் 

பொள்ளாச்சி - ருத்ரா


மின்னணு உலகம்
உருவாக்கிய‌
குகைகளில்
மீண்டும் ஒரு கற்காலம்.
தொலைபேசி என்றாலே
பணக்கார வர்க்கத்தின்
அடையாளமாய் இருந்ததை
தூக்கியெறிந்தது
அந்த "பூலியன் அல்ஜீப்ரா."
ஆனால்
கைபேசிக்குள்
இந்த காமத்தின்
காண்டாமிருகங்கள்
குடியிருக்க‌
காரணமாய் இருந்தது
கார்ப்பரேட் மிருகம்.
ரூபாய்க்கு இத்தனை ஜிபி ஃப்ரீ
என்று
வியாபாரத்தைக்குவித்தது அது.
இந்த ஈசல்களும்
பட்டாம்பூச்சிகளும்
அவர்களின் "லாபத்தீயில்"
கருகி விழுகின்றன.
காமப்பசியை காசாக்கும்
இந்த மனித மிருகங்களுக்கு
எத்தனை எத்தனை
பாதுகாப்புகள்?

இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் உலகை வென்றார்

.





13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.

The World's Best என்ற அமெரிக்க நாட்டின் பல்துறை இசை வித்தக நிகழ்ச்சியில் தனி நபர் பிரிவில் தன் அசாத்திய பியானோ வாசிப்புத் திறனால் நடுவர்களையும், வந்திருந்த இசை வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தி இறுதிச் சுற்றில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசினை வென்று சாதனை படைத்திருக்கிறார். இது உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் சாதனையாளர்கள் அரங்கேறும் போட்டிக் களமாகும்

லிடியன் நாதஸ்வரம் இதற்கு முந்திய பல சுற்றுகளை வெற்றிகரமாகத் தன்னுடைய இசைத் திறமையால் கையகப்படுத்தி சாம்பியன் பிரிவில் நுழைந்த போது ஹாலிவூட் பிரபலங்களோடு, இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற இசைப் புயல் ரஹ்மானின் ஆச்சரியம் கலந்த பாராட்டையும் பெற்றவர்.

காலங்கள் செய்யும் கோலங்கள் - முருகபூபதி


தொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது.
நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின.
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.
1988 இற்குப்பின்னர் வீரகேசரி அச்சுக்கூடத்தில் திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து,  பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது.
அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள்.
அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா? சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார்.
மற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார்.  அத்துடன் நில்லாமல், தனது மகளை  கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார்.
ஒரு அச்சுக்கோப்பாளர் மலையகத்திலிருந்து பூக்களை வரவழைத்து பூமாலை கட்டி திருமணவீடுகளுக்கும் இதர வைபவங்களுக்கும் கொடுப்பதுடன்,  மலர்களினாலேயே அழகிய மணவறைகளும் செய்து வாடகைக்கு விடுகிறார்.

பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் வலதுசாரி பயங்கரவாதி – அவுஸ்திரேலிய பிரதமர்


16/03/2019 நியூசிலாந்தில் முஸ்லீம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கைதுசெய்யப்பட்டுள்ள நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.

முருகபூபதியின் “சொல்ல வேண்டிய கதைகள் “ வாழ்வியல் அனுபவங்களைப் பதிவுசெய்யும் கதைகள் ஞா.டிலோசினி, கிழக்குப் பல்கலைக்கழகம் -இலங்கை


அவுஸ்திரேலியப் புலம்பெயர் எழுத்தாளர்களுள் ஒருவரான லெ.முருகபூபதி அவர்கள் இலங்கையின் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். படைப்பாளியாகவும் பத்திரிகையாளராகவும் இயங்கி வரும் முருகபூபதி,  பத்திரகையில் செய்தி மற்றும் அறிக்கை எழுதுவது நேர்காணல்களைப் பதிவு செய்வது முதலான பணிகளில் ஈடுபடுபவர்.
 இலக்கியப் படைப்பிலும் முருகபூபதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1975இல் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி ‘சுமையின் பங்காளிகள்’ வெளிவந்தது. நாவல், சிறுகதை தொகுப்புக்கள் , புனைவுசாரா இலக்கியம் என்ற வகையில் இவரது பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் புனைவுசாரா இலக்கியம் என்ற வகையில் இவரது சொல்ல வேண்டி கதைகள் தொகுப்பு’ காணப்படுகிறது.
ஜீவநதியின் 82வது வெளியீடாக முருகபூபதியின் சொல்ல வேண்டிய கதைகள் (2017) பத்தி கட்டுரைகளின் தொகுப்பு வெளிவந்தது. இப்பத்தி கட்டுரைகள் 2013 தைமாத ஜீவநதியில் வெளிவரத் தொடங்கி, ஜீவநதியின் 20 இதழ்களில் தொடராக வெளியானவையாகும்.
 முருகபூபதி தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களை, தன்வாழ்வியலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை,  சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை சுவாரசியமான மொழியில் மனதில் பதிந்து நிற்கும் வகையில் இப்பத்தி கட்டுரைகளில் எழுதியுள்ளார்.
பொலிஸ்காரன் மகள், குலதெய்வம், யாதும் ஊரே, நாற்சார் வீடு, ஊருக்கு புதுசு, மனைவி இருக்கிறாவா…?, திசைகள், காவியமாகும் கல்லறைகள், எங்கள் நாட்டு தேர்தல், தனிமையிலே இனிமை, படித்தவற்றை என்ன செய்வது?, வீட்டுக்குள் சிறை, நடைப் பயிற்சி, கனவுகள் ஆயிரம், நம்பிக்கை, ஸ்கைப்பில் பிள்ளை பராமரிப்பு, துண்டு கொடுக்கும் துன்பியல், பேனைகளின் மகத்மியம், இயற்கையுடன் இணைதல், இலக்கியத்தில் கூட்டணி ஆகிய 20 பத்திக் கட்டுரைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.
இத்தொகுப்பில் இடம்பெறும் ‘பொலிஸ்காரன் மகள்’ அவரது தாயுடனான நினைவுகளை ஞாபகப் படுத்துகின்றன. முருகபூபதியின் அம்மாவின்  வீட்டு பெயர் பொலிஸ்காரன் மகள் என்பதாகும். அம்மாவின் தந்தை பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் பொலிஸில் இருந்தவர் என்பதால் இவ்வாறு அழைத்தனர். தனது தாயை மையப்படுத்தி எழுதியமையால் அக்கட்டுரைக்கு தாயின் வீட்டு பெயராகிய பொலிஸ்காரன் மகள் எனத் தலைப்பிட்டுள்ளார்.
 தலைப்புக்கு பொருத்தமான சம்பவங்கள் கட்டுரையில் ஊடுருவுகின்றன. வீட்டுத் தலைமைப் பொறுப்பை முருகபூபதிக்கு கொடுத்த தாய், அவர் 1987இல் அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து செல்ல இருக்கும் போது குடும்ப பொறுப்புக்களை நினைவுபடுத்தி அழுதமையையும், அவுஸ்ரேலியாவுக்கு செல்ல ஆயத்தமான போது எழுந்த அயலவர்களின் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளது.

சிட்னி முருகன் - விசேட தவில் நாதஸ்வர கச்சேரி 24/03/2019






உலகச் செய்திகள்


"737 மேக்ஸ் 8 ரக" விமான விநியோகத்தை நிறுத்திய போயிங் 

இடைத்தேர்தலையும் சந்திக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம்..!

போயிங் 737 மேக்ஸ் 8 தரையிறக்கம்- இன்று 35 விமானங்களை ரத்து

போயிங் 737  மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை:ட்ரம்பின் இறுதி தீர்மானம்

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மீண்டும் தோல்வியை சந்திந்தது  பிரெக்ஸிட் ஒப்பந்தம்

 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் சரண்


"737 மேக்ஸ் 8 ரக" விமான விநியோகத்தை நிறுத்திய போயிங் 

15/03/2019   "737 மேக்ஸ் 8 ரக" விமானங்களை விநியோகம் செய்வதை போயிங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

இலங்கைச் செய்திகள்


அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமறியல்

ஓமந்தை ரயில்க்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி 

கிளிநொச்சி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் 

மன்னாரிலும் அதிபர், ஆசிரியர்கள்   சுகயீன விடுமுறை போராட்டம்

மஹிந்த உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மனு வாபஸ்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு மீள் விசாரணை!

ஆரம்பமானது யாழில் மாபெரும் பேரணி: நீதி கோரி மக்கள் முழக்கம்

முறைப்பாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்


அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமறியல்


14/03/2019 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட  அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா - பூமராங் திரைவிமர்சனம்


இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், RJ பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது பூமராங். படம் நதிநீர் இணைப்பை வலியுறுத்தும் கதை என ட்ரைலர் மற்றும் படக்குழு வெளியிட்ட சில நிமிட காட்சிகளின் மூலமே புரிந்தது. மொத்த படத்தையும் பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி? வாருங்கள் பாப்போம்.
கதை:
காட்டுத்தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சிவா. அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து போகிறார் அவர். அதன்பின் முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர் கூற, அதற்கு ஒப்புக்கொண்டு மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் சக்தி (அதர்வா)வின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புகிறார் அவர்.
பின்னர் அதர்வாவின் அழகை கண்டு காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்க ஒரு நாள் அதர்வாவை கொலை செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரரான அதர்வா உண்மையில் யார் என அறிய தேடி செல்கிறார்.
பின்னர் சக்தியின் பிளாஷ்பேக் கதை ஓடுகிறது. ஒரு பிரபல ஐடி கம்பெனியில் பணியாற்றும் சக்தி (அதர்வா), RJ பாலாஜி, இந்துஜா உள்ளிட்டவர்கள் கூண்டோடு வேலையில் இருந்து நீக்குகிறது நிறுவனம். பின்னர் என்ன செய்வது என அறியாது நின்றிருக்கும் அவர்கள் அதர்வாவின் குடும்ப நிலத்தில் விவசாயம் செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள்.
ஆனால் அந்த ஊரில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. ஊருக்கு தண்ணீர் கொண்டுவர 20 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு ஆற்றில் இருந்து இந்த ஊர் அருகில் இருக்கும் ஆற்றை இணைத்தால் விடிவு பிறக்கும் என முடிவெடுத்து அதற்காக போராடுகிறார்கள்.
நதிகளை இணைக்கவேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேறியதா? அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் அனைத்தையும் காட்டுகிறது மீதி படம்.
இதையெல்லாம் அறிந்து தற்போது அதர்வா முகத்துடன் இருக்கும் சிவா என்ன செய்தார் என்பது தான் படத்தின் கிளைமக்ஸ்.
படத்தை பற்றிய அலசல்:
நதிநீர் இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் இடங்களாக மாற்றலாம் என்ற கருத்து நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் ஒன்று, ஆனால் அதற்காக அரசாங்கமே பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்ததில்லை. இந்த திட்டங்களை எல்லாம் நடக்காமல் இருக்க காரணமாக இருக்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் சாட்டை அடி கொடுக்கும் விதத்தில் உள்ளது பூமராங்.
அதர்வா இந்த ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். செம அழகாக இருக்கும் மேகா ஆகாஷுக்கு ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது (வழக்கமாக அனைத்து படங்களை போல).
நடிகர் ஆர்ஜே பாலாஜி இதுநாள் வரை காமெடி செய்து பார்த்த நமக்கு அவருக்கு குணச்சித்திர வேடத்திலும் நடிக்க வரும் என காட்டிவிட்டது பூமராங்.
சுஹாசினி, காமெடியன் சதிஷ், இந்துஜா தங்கள் பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.
க்ளாப்ஸ்:
படம் நம் மனதில் பதிவு செய்த கருத்து தான் படத்தின் பெரிய ப்ளஸ். கத்தி படத்திற்கு பிறகு விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி நம்மை சலிப்படைய வைக்காமல் படம் முழுவதும் பேசியுள்ள படம் இது. படம் பார்க்கும்போது பல இடங்களில் கத்தி படம் நினைவிற்கு வந்து செல்வதையும் தவிர்க்க முடியவில்லை.
நிஜ வாழ்க்கையில் நம் நாட்டில் நடந்த பல விஷயங்களை பற்றி ஆங்காங்கே வரும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு பெரிய கிளாப்.
சில பாடல்களே இருந்தாலும் அது எதுவும் வேகத்தடையாக இல்லை.
பல்ப்ஸ்:
இருப்பினும் படத்தை பற்றி குறையே சொல்ல முடியாது என சொல்லிவிடமுடியாது. பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள்.
ஆபரேஷன் செய்து தையல் போட்டு தழும்பு உள்ள இடத்தில் முடி வளர்வது சாத்தியம் இல்லாத ஒன்று என அனைவர்க்கும் தெரியும். ஆனால் முகத்தை மாற்றி அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில மாதங்களில் அந்த தழும்புகளை மறைக்க தாடி வளர்த்துகொள்வார் அதர்வா. வாட் எ மெடிக்கல் மிராக்கில் மொமெண்ட் தான் இது.
மண்சரிவு என கூறி மணலையா காட்டுவது? அதுவும் அந்த சீனின் கிராபிக்ஸ் காட்சிகள் படுமோசம்.
இடைவேளைக்கு முன்னர் தான் படமே விறுவிறுப்பு பெறுகிறது. அது வரை படம் சற்றுபொறுமையை சோதிக்கும். சதிஷின் காமெடி அந்த முதல் பாதியில் சற்று ஆறுதல்.
மொத்தத்தில், பூமராங் - எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருமுறை பார்க்கலாம்.
நன்றி CineUlagam.


















சிட்னி முருகன் ஆலய 5 ம் திருவிழா

.