அணையாத சுடரேற்றுவேன்! - -கே. ரவி

.

அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்
அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்
கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்
கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்
அணையாத சுடரேற்றுவேன்!
விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான                             
விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற
எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்
விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள
அணையாத சுடரேற்றுவேன்!
பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்
போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி
பொய்யாகிப் போய்மறைய – எந்தப்
பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ
அணையாத சுடரேற்றுவேன்!

முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவு

.

கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro 9௦) காலமானார்.
13 ஆகஸ்ட் 1926ம் ஆண்டு பிறந்த இவர் 25 நவம்பர் 2016 இல் காலமானார் .  இந்த துயர சம்பவத்தை ராகுல் காஸ்ட்ரோ அவர்கள் அறிவித்திருக்கிறார்.
ஏறத்தாழ 50 வருடங்கள் கியூபா நாட்டை கட்டி காத்துவந்த பிடல் காஸ்ட்ரோ  உடல்  நலக்குறைவால்  2008ம் ஆண்டு தனது சகோதரனான ராகுல் காஸ்ட்ரோவிடம் ( Raúl Castro)ஆட்சியை ஒப்படைத்தார் . உலகத்தில் அதிக வைத்தியர்களை உருவாக்கி  உலக நாடுகளுக்கு வைத்திய உதவிக்காக வைத்தியர்களை அனுப்பி உதவி புரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் குல மாணிக்கத்தை  வைத்தியர்களால்கூட காப்பாற்ற முடியாமல் போய்  விட்டது என்பது கவலையே.


தினம் - (சிறுகதை) - முருகபூபதி

  .                                    
        " கழுத்தில்  சயனைற்  குப்பி, கரத்தில்  ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன்,  இப்போது எதுவுமே  இல்லாமல்  காற்றுப்போல்  அலைகிறான்."
                                                         
சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத்  தயாராகிறது.
இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட  அழகிய காருக்குப்பின்னால்  தத்தம்  கார்களில் அணிவகுத்து வருவார்கள்.
மயானத்திற்குச்சென்றபின்னர்,   எரிவாயுவில்  என்னை சாம்பலாக்கிவிடுவார்கள். செம்மணியிலும்  கோம்பயன் மணலிலும் மரக்குற்றிகளும் விறகுகளும் மண்ணெண்ணையும்  செய்யும் கைங்கரியத்தை கண்ணுக்குப்புலப்படாத  வாயு  இந்த நாட்டில் என்னை  தகனமாக்கப்போகிறது.
நாட்டுக்கு  நாடு  இந்த  அக்கினி  சங்கமத்தில்தான் எத்தனை வேறுபாடு...?
காராளசிங்கம்,  மருமகனிடமும்  மரணச்சடங்கிற்கு வந்தவர்களிடமும் சொன்னதையே  மீண்டும்  மீண்டும் அலுப்புத்தட்டாமல்,  வாய் ஓயாமல்  சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு  சொல்வதில் பெருமிதமும்  காண்கிறார்.


ஈழத்து இசை வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் வைசாலி.

.
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்.


யார் இந்த வைசாலி? கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கொண்ட இசைக்குடும்பத்தைச் சேர்ந்த திரு. யோகராஜன், திருமதி. நீதிமதி யோகராஜன் ஆகியோரின் செல்வப்புதல்வி. 2014 ஆம் ஆண்டு ஈழத்தில் சக்தி தொலைக்காட்சியினரால் நடாத்தப்பட்ட “யூனியர் சுப்பர் ஸ்டார்”   என்கின்ற வெற்றி மகுடத்தைத் தன் இசை ஞானத்தினாற் தனதாக்கிக்;  கொண்ட  குட்டித் தேவதை. அப்போது இவளுக்கு வயது பதினொன்று.
அம்மம்மாவின் தாலாட்டில் மெய்மறந்து துயில்கொண்டும், பெரியம்மா ஹேமவதி கபிலதாஸின் இசை வகுப்புகளைத் தினமும் செவிமடுத்தும், வளர்ந்த இந்தக் குழந்தையிடம் குடி கொண்டிருந்த இசையாற்றலை, முதன் முதலிற் கண்டறிந்தவர் இவரின் அம்மம்மாதான். அம்மம்மாவின் அறிவுறுத்தலின் படி மூன்று வயதில் இருந்தே அப்பா யோகராஜனும், அம்மா நீதிமதியும் வைசாலிக்கு இசையைக் கற்பிக்க ஆரம்பித்து விட்டனர். வைசாலிக்கு ஐந்து வயதாக இருக்கும் போது ஈழத்தின் மிகச் சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகர்களில் ஒருவரும், இராமநாதன் நுன்கலைக் கழகத்தில் மிக நீண்ட காலமாக மிகச்சிறந்த இசை விரிவுரையாளராகக் கடைமை புரிந்தவருமான திரு ஏ.கே.கருணாகரன் அவர்கள் வைசாலியின் இசை ஞானத்தினைக் கேள்வியுற்றுத் தனது “ஆலாபனா” சபையில் மும்மூர்த்திகள் விழாவிற் பாடவைத்தார்.

AMAF proudly presents முத்தமிழ் மாலை - 16




தாடியில் கூட விஷம் தடவினர்.. அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த மாவீரன் பிடல் காஸ்ட்ரோ

.


ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 முறை அமெரிக்கா முயன்றது. அவரது முக்கியத்துவத்தை இந்த சம்பவங்களே உலகத்திற்கு புடம் போட்டு காட்டும். அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளை சுவைப்பதற்காகவும் கியூபாவுக்கு படையெடுத்து வந்தனர் அமெரிக்க கணவான்கள். தங்கள் நாடு, அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதை பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே கிடையாது. ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறியவர்தான் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்கா தனது கையாட்களை கியூபாவின் அதிபர்களாக நியமித்து, கால்பந்தாக உருட்டி விளையாடியது.

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே நூல் வெளியீடு 03 12 2016

.
கலாநிதி கா. ரூபமூர்த்தி அவர்களின் நூல் வெளியீடு 03 12 2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு  சிட்னி முருகன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற உள்ளது.


கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு

.

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் சங்கராகுப்தம் இவர் பிறந்த ஊர். இவருக்கு முரளி கிருஷ்ணா என்றே பெயர் சூட்டப்பட்டது. தனது 8-வது வயதிலேயே விஜயவாடாவில் தனது முதல் கச்சேரியில் பாடினார்.
அப்போது, ஹரிகதா புகழ் முசுநுரி சூரிய நாராயண மூர்த்தி பாகவதர் என்பவர் 8 வயதில் முரளி கிருஷ்ணாவின் முதல் கச்சேரியைக் கேட்டுவிட்டு ‘பால’ என்ற அடைமொழியைச் சேர்த்தார், அன்று முதல் இவர் பாலமுரளி கிருஷ்ணா என்று அழைக்கப்பட்டார்.

 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

திரிமுகி, பஞ்சமுகி, சப்த முகி, நவமுகி ஆகியவற்றின் மூலம் தாள அமைப்பில் புதியன புகுத்தினார் பாலமுரளி கிருஷ்ணா. 

பாடகர் என்பதுடன் வயலின், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பார் பாலமுரளி. 

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு

.


 அவுஸ்திரேலியாவில்  பலவருடங்களாக இயங்கிவரும்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்   ஆண்டுப்பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (26 ஆம் திகதி) சனிக்கிழமை  மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House  மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால்  உயிரிழந்தவர்களுக்காகவும்  கடந்த  ஆண்டு இறுதியில்  மறைந்த   முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2015-2016 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சங்கத்தின் புதிய நடப்பாண்டுக்கான ( 2016 -2017) புதிய நிருவாகிகள் தெரிவு, கிடைக்கப்பெற்ற பரிந்துரைப்படிவங்களின் (Nominations) அடிப்படையில் நடைபெற்றது.


உலகச் செய்திகள்


ஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 27 மணி நேர வரலாற்று சத்திரசிகிச்சை ; தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் முதல் தடவை சந்தித்த கண்கொள்ளா காட்சி

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : மறுபடி வாக்கு எண்ணிக்கை நடத்த ஹிலாரி அணி கோரிக்கை

 பக்தாத்தில் குண்டு வெடிப்பு :பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் கெஸ்ட்ரோ  காலமானார்



அப்போலோவிற்குள் சென்ற இயந்திரமும்... பிராதாப் ரெட்டியின் பேட்டியும்!

Chairman_18389.jpg“முதல்வர் ஜெயலலிதா மனவலிமை மிக்கவர் என்பதால் விரைவாக குணமடைந்துவிட்டார். இயல்புநிலைக்கு திரும்பி உள்ள அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் உடல்நிலை குறித்து பிரதாப் ரெட்டி இப்படிக் கூறுவது முதல்முறை அல்ல. “முதல்வர் நலமுடன் உள்ளார், வீடு திரும்புவதைப் பற்றி அவர்தான் முடிவு செய்யவேண்டும்” என்று முதலில் பேசியவர், அடுத்த முறை “முதல்வரின் உடல் உறுப்புகள் சீராவதற்கு ஏழு வாரங்கள் ஆகும்” என்று சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில்தான் இன்று “பிசியோதெரபி சிகிச்சை” என்று மீண்டும் பிரதாப் ரெட்டி சொல்லியுள்ளார். முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபடும் தகவல், கடந்த மாதமே வெளியானது. குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து இந்த சிகிச்சை அளிக்க இரண்டு பெண் மருத்துவர்கள் அப்போலோவுக்கு வருகை தந்தனர். ஆனால், ஒரு மாதம் கடந்த பிறகும் ஏன் இப்போது பிசியோதெரபி சிகிச்சை பற்றி மீண்டும் பிரதாப் ரெட்டி பேசுகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. 

திருமுறை முற்றோதல் 04 12 2016

.

‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடல் புகழ்பெற்ற பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா

.


பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார்.

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இசை உலகைத் தன் கம்பீர குரல்வளத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மூத்த இசை அறிஞர். சென்னையில் தங்கியிருந்த பால முரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

பால முரளியின் இயற்பெயர் முரளி கிருஷ்ணா. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மங்களப்பள்ளி என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்தொண்டு புரிந்து வருகிறார். தாய் சூர்ய காந்தம்மாள், தந்தை பட்டாபி ராமய்யா. இருவருமே இசைக் கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்கள். பாலமுரளி கிருஷ்ணா ஐந்து வயதிலேயே இசை ஆர்வம் காட்டினார்.

ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன. இவர் 15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன்படுத்தி கிருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார். இசை ஆர்வம் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார்.

வானமுதம் நடாத்திய சிறுகதை, கவிதைப் போட்டிகள்

.

"இளைய நிலா பொழிகிறதே " தரிசனம் 2016 03.12.2016

.

கொடூர சர்வாதிகாரி பிடல் காஸ்ட்ரோ: விஷத்தை கக்கிய டிரம்ப்!

.
மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி என அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் அருகேயுள்ள சிறிய தீவு நாடு கியூபா. இந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. நீண்ட காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. கியூபாவின் புரட்சிகர மக்கள் தலைவராக விளங்கிய அவர், அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு அடிபணியாமல்  அந்த நாட்டிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக  தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் பிடல் காஸ்ட்ரோவை ஒரு கொடூர சர்வாதிகாரி என கடுமையான வார்த்தையால் குற்றம் சாட்டியுள்ளார்.

சமய சொற்பொழிவு கந்தர் அநுபூதி 01 12 2016

.

இலங்கைச் செய்திகள்


இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்: கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை

அரசுக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் கண்டனம்.!

இலங்கையை வாட்டும் எயிட்ஸ் : 10 மாதங்களில் மட்டும் 2436 பேர்

 மஹிந்தவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது.!

மங்களராம விஹாராதிபதியின் இனவாத செயற்பாட்டை கண்டித்து செங்கலடியில் பேரணி.!

வீடுகள் தேவையில்லை ; பிள்ளைகளை கொன்றவருக்கு தண்டனை பெற்றுக்கொடுங்கள் (வீடியோ இணைப்பு)

தற்கொலை அங்கி, ஐ.எஸ் கதை, பிக்குவின் இனவாதம் : இராணுவ புரட்சியை ஏற்படுத்த இனவாதிகள் எடுத்து கொண்ட ஆயுதங்களாகும் - சிவில் அமைப்புக்கள் எச்சரிக்கை 

 'அப்பாவை பார்க்க ஆசையாக உள்ளது : ஜனாதிபதி மாமா அப்பாவை விடுதலை செய்யுங்கள்'

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 மாணவர்களை சுடப்போவதாக பொலிஸார் மிரட்டல் ; யாழ்.பல்கலைக்கழக விடுதிக்குள் சம்பவம்

"எழுக தமிழ் பேரணி" மட்டக்களப்பில்

யாழிலிருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைக்கின்றது ; ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் பஷில்

மங்களராம விஹாராதிபதியின் இனவாதத்தை கண்டித்து சபையில் தீர்மானம்.!

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

 “மாவீரர்தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது” : பாதுகாப்பு அமைச்சு

யாழ்.பல்கலை வளாகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

கோப்பாய் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு  அஞ்சலி

கிளிநொச்சியில்  பிரபாகரனை வாழ்த்தி சுவரொட்டிகள்


ஒரு நிமிடக் கதை: கருணை

.

வசந்தி, மாலா இருவரும் அலுவலக தோழிகள். வெவ் வேறு இடத்தில் இருந்து தினமும் மின்சார ரயில் பிடித்து ஒரே அலுவலகம் செல்ப வர்கள்.
வசந்தி நல்ல நிறமாக, நாகரிகமாக இருப்பவள். மாலா மாநிறம்தான். வசந்தி மாடர்னாக உடை உடுத்துவதுடன், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகளில் கவனம் செலுத்துபவள். அளவாக சாப்பிட்டு உடலை ஒல்லியாக வைத்திருப்பாள்.
ரயிலில் ஏறிய நிமிடம் முதல், டிவியில் அல்லது புத்தகத்தில் படித்த அழகு குறிப்பை பற்றி விலாவாரியாக சொல்லிக்கொண்டு வருவாள். மாலாவுக்கு போர் அடிக்கும். இருந்தாலும் பேசாமல் வருவாள்.
அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்தது. ரயில் நிலைய மேம்பாலத்தை தாண்டி செல்லவேண்டும். வசந்தி வழக்கம் போல பிளாட்பாரத்தில் எடை பார்க்கும் இயந்திரம் வைத்திருப்பவரிடம் சென்று, இரண்டு ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு எடை பார்த்தாள்.
“ஐயோ, என்னடி ரெண்டு நாள்ல ஒரு கிலோ கூடிடுச்சு” என்றவாறு நடந்தாள்.
மாலாவுக்கு ஒரே எரிச்சல். அப்படி என்ன அழகு வேண்டி கிடக்கிறது? ஆரோக்கியமாக இருந்தால் போதாதா? என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
அன்று மதியமும் வசந்தி கொண்டுவந்த உணவை சாப் பிடாமல், அலுவலக உதவி யாளரை அழைத்து பழச்சாறு வாங்கி பருகினாள்.
மாலை வீடு திரும்பும்போது அதே இடத்தில் வசந்தி எடை பார்க்க நின்றாள். “மதியம் பட்டினி.. ஆனாலும் எடை பார்ப் பது ரொம்ப அவசியமோ?” என்று உதட்டை சுழித்தவாறு நடந்தாள்.

ஏங்கிநின்று அழுகுதையா ! -.எம். ஜெயராமசர்மா… அவுஸ்திரேலியா

.

கந்தர்வக் குரலோனே காலனுனைக் கவர்ந்தானோ
சிந்தையிலாக் காலனவன் நொந்துவிடச் செய்துவிட்டான்
உந்தனது இசைகேட்க உலகமே துடிக்குதையா
உனைக்கவர்ந்த காலனுக்கு உள்ளமே இல்லையையா !
இசையுலகம் அழுகிறது
எழுகடலும் அழுகிறது 
இசைச்சுரமும் அழுகிறது 
எல்லோரும் அழுகின்றோம் 
அசையாமல் இசையுலகில் 
அரசாட்சி புரிந்தவரே
ஆர்வருவார் உனைப்போல
அருமையிசை தருவதற்கு !
இளவயதில் இசைக்குள்ளே
எப்படித்தான் இணைந்தாயோ
வசையில்லா இசைபாடி
வைரமென ஜொலித்தாயே
புதுராகம் புதுத்தாளம்
புறப்பட்டு வரச்செய்தாய்
புன்சிரிப்பு முகம்காணா
புலம்புகிறோம் நாங்களெல்லாம் !

ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா - அப்பலோ மருத்துவமனை

.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா (கோப்புப்படம்)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 'ட்ராக்யோஸ்டமி' செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

சென்னைக்கு அருகில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதாப் ரெட்டி, "ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டவர்கள் பொதுவாகப் பேச முடியாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சிறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பேசுவது எளிதல்ல. மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசவேண்டும். சில நொடிகளோ, நிமிடங்களோ அப்படிப் பேசுகிறார்" என்று கூறியிருக்கிறார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காய்ச்சல் காரணமாகவும் நீர்ச்சத்து குறைவின் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக மருத்துவமனை முதலில் தெரிவித்தது.

தமிழ் சினிமா

கடவுள் இருக்கான் குமாரு


இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களின் பல்ஸ் பிடித்து படம் நடிப்பவர் தான் ஜி.வி.பிரகாஷ். இவர் படம் என்றாலே அடெல்ட் ஒன்லீ ரேஞ்சில் இருக்க முதன் முறையாக ராஜேஸ் கூட்டணியில் அதிலும் யு சான்றிதழுடன் வெளிவந்துள்ள படம் தான் கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஸ் படம் என்றாலே ஜாலி, கேலி பஞ்சம் இருக்காது. அப்படி நம்மை ஜாலியாக கொண்டு சென்றதா? இந்த கடவுள் இருக்கான் குமாரு, பார்ப்போம்.

கதைக்களம்

தமிழ் படத்திற்கே உண்டான பாரம்பரியம் ஹீரோவுக்கு வேலையில்லை. நண்பருடன் அரட்டை அடித்து ஊரை சுற்றுகிறார் ஜி.வி. முதல் காட்சியிலேயே அவருக்கு நிக்கி கல்ராணியுடன் திருமண ஏற்பாடு நடக்கின்றது.
திருமணத்திற்கு முந்தைய நாள் பாலாஜியுடன் பேச்சுலர் பார்ட்டி சென்று வரும் நேரத்தில் போலிஸ் இவர்கள் வந்த காரை வழிமறிக்கின்றது.
கார் நிறைய சரக்கு பாட்டில்கள் இருக்க, போலிஸான பிரகாஷ்ராஜ் பணம் எதிர்ப்பார்க்கிறார். அவர்களிடமிருந்து ஜிவி, பாலாஜி தப்பிக்க, போலிஸ் அவர்களை துரத்த, பிறகு திருமணம் நடந்ததா? இல்லையா? என்று எங்கெங்கோ கதை செல்கின்றது.

படத்தை பற்றிய அலசல்

ஜி.வி இன்னும் எத்தனை படத்தில் தான் இப்படியே நடிப்பார், போதும் ஜி.வி என்று சொல்ல வைக்கின்றது. ஆனந்தியுடன் முந்தைய காதல், அப்படியே த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு எபிசோட் பார்ப்பது போல் உள்ளது.
ஆர்.ஜே.பாலாஜியின் ஹைலைட்டே அவரின் ட்ரெண்ட் வசனங்கள் தான், தற்போது வழக்கத்தில் உள்ள வசனத்தை கலாய்த்து இளைஞர்களிடம் அப்லாஸ் வாங்குகிறார். ராஜேஸ் படத்தில் இப்படி ஒரு சொதப்பலா, சந்தானம் இல்லாத குறை தெரிகிறது பாஸ்.
ஆனந்திக்கு கூட இரண்டு, மூன்று காட்சிகள் இருக்க, நிக்கி கல்ராணி ஏதோ வைக்க வேண்டுமே என்று வைத்துள்ளார்கள். ராஜேஸ் படத்தில் நாம் மிகவும் எதிர்ப்பார்த்து போவது காமெடி தான்.
யாரையும் விட்டு வைக்கமாட்டார், கலாய்த்து எடுத்துவிடுவார். இதிலும் பஞ்சாயத்து பேசும் ஒரு நிகழ்ச்சியை கலாய்க்கும் காட்சி, சிரிப்பிற்கு கேரண்டி. ஆனால், படம் முழுவதும் ராஜேஸ் டச் மிஸ்ஸிங்.
கலாய்ப்பு வசனம் இருக்கலாம், அதற்காக ஒருத்தரை மனம் நோகடிக்கும் படியான வசனம் தேவையா? ஸ்ருதிஹாசனை கிண்டல் செய்யும் வசனம் எதற்கு? பேய் எபிசோட் எல்லாம் எதற்கு? இப்படி பல கேள்விகள் நாமே கேட்டுக்கொண்டால் தான் உண்டு.
ஜி.வி ஹீரோ ஆயிட்டிங்க, ஓகே, இசையமைப்பாளர் வேறு யாரையாவது கமிட் செய்யலாமே? பாடல்களும் அத்தனை கொடுமை.

க்ளாப்ஸ்

பிரகாஷ் ராஜ், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி வரும் ஒரு சில காட்சிகள்.
கிளைமேக்ஸ் கலகலப்பு.

பல்ப்ஸ்

தெளிவே இல்லாத திரைக்கதை, அதிலும் பேய் சீன்கள் எல்லாம் பொறுமையை சோதிக்கின்றது.
மொத்தத்தில் கடவுள் இருக்கான் குமாரு ரொம்ப சோதனை குமாரு.
நன்றி  cineulagam