மரண அறிவித்தல் - திருமதி டொறின் செல்வராணி ஞானப்பிரகாசம்

 .

                 திருமதி டொறின் செல்வராணி ஞானப்பிரகாசம்

மறைவு  30.03.2022 

சூராவத்தையை பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி டொறின் செல்வராணி ஞானப்பிரகாசம் அவர்கள் 30.03.2022 அன்று மாமூலை முல்லைத்தீவில் காலமானார். 

அன்னார் காலம் சென்ற Dr சங்கரப்பிள்ளை மற்றும் தங்கச்சிப்பிள்ளையின் அன்பு மகளும்,  காலம்சென்ற தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் மற்றும் ஆசிரியை ராசமணியின் அன்பு மருமகளும், காலம்சென்ற அலோசியஸ் ஜெயமன்னன் அவர்களின் அன்பு மனைவியும்.

ஜெயச்சந்திரா, ஜெயக்குமார், ஜெயரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஆன், டெலினா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 01.04 2022 அன்று பிற்பகல் 4 மணிக்கு மாமூலை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்று, மாமூலை சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் ஏ.ஜே ஜெயச்சந்திரா மகன்

தொலைபேசி இலக்கம் - 0415 934 591


இலங்கை வானொலி மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் விடை பெற்றார்

 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உலகளாவிய புகழ் கொண்டு


முன்னணி வானொலி நிலையமாகத் திகழ்ந்த போது அதனைக் கட்டியெழுப்பிய சிற்பிகள் பலர் நம் காதுகளுக்குள் உறவாடும் குரல்களாகவும், வானொலியின் இயக்கத்துக்குப் பின்னணியில் இயங்கியவர்களாகவும் அமைந்து விளங்கினர்.


இவர்களில் பெரும்பாலானோர் 83 இனக் கலவரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நாடு தாண்டி உலகின் பல்வேறு கரைகளைத் தொட்ட போது அவுஸ்திரேலியாவும் சில ஆளுமைகளை வாரிக் கொண்டது.

அந்த வகையில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அமரர் சுந்தா சுந்தரலிங்கம், அமரர் காவலூர் இராசதுரை, அமரர் பொன்மணி குலசிங்கம் மற்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் திருமதி பாலம் லஷ்மணன் அம்மா, எஸ்.எழில்வேந்தன் ஆகியோரோடு இன்னொரு மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அம்மாவையும் குறிப்பிட வேண்டும்.

எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை  ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச்  சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வானொலிக்கால இனிய நினைவுகளை மீட்டினார். http://www.madathuvaasal.com/2014/10/blog-post_15.html

2007 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைச் சந்திக்க்கிறேன். நீண்டதொரு உரையாடலின் பின் தன்னுடைய அனுபவப் பகிர்வு நூலான “The Green Light” ஐயும் அன்போடு தந்து வழியனுப்பினார்.

திருமதி ஞானம் அவர்கள் ஒரு வழிகாட்டி அறிவிப்பாளராகவும், மக்கள் சேவையாளராகவும் தன்னுடைய வானொலிப் பணியை முன்னெடுத்தவர் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதன்மைத் தலைவர் மற்றும் இயக்குநர் நாயகம்  (chairman) பொறுப்பேற்ற திரு நெவில் ஜெயவீர குறிப்பிட்டிருக்கிறார்.



ஆண்டவனால் "அம்மையே " என்று அழைக்கப்பட்ட தமிழ்த்தாய் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா


 

  பக்திப் பெருவெளியில் பல அடியார்கள் வருகிறார்கள்.ஒவ்வொரு அடியாரும் ஒவ்வொரு விதத்தில் உண்மைப்பொருளாம் அந்தப்


பரம் பொருளை நாடியும்தேடியுமே நிற்கிறார்கள். தேடும் விதமும் நாடு ம் விதமும் வேறுபாட்டினைக் காட்டி நின்றாலும் அவர்களின் சிந் தையெலாம் இறைவன் மட்டுமே என்பதுதான் மனங்கொள்ளல் வேண்டும்.வருகின்ற அடி யார்களில் கற்றவரும் இருப்பர். கல்லா தவரும் இருப்பர். அந்தஸ்த்தில் உயர்ந்தவரும் இரு ப்பர். அதில் குறைந்தவர்களும் இருப்பர். ஆனாலும் அவர்கள் அனைவரையும் இணைப்பது ஆண்டவனது அடியார்கள் என்னும் பிணைப்பேயாகும். ஆண்களும் இருப்பார்கள் . பெண்க ளும் இருப்பார்கள். ஆண்டியும் இருப்பர். அரசரும் இருப்பர். அனைவரும் பக்தி என்னும் பாதையில் பயணிக்கும் பக்குவமான பரமனின் பயணிகளேயாவர்.அந்தப் பயணிகள் வரி சையில் ஒருவர் சற்று வித்தியாசமானவராக அமைகின்றார். அவர் யாரென்று அறிந்திட ஆவல் மேலிடுகிறதல்லவா? வாருங்கள் அவரைக் காணுவோம்.

  "  அம்மையே அப்பா ஒப்பிலா மணியே " என்று ஆண்டவனையே அடியார்கள் விழித்துப் பாடுவார்கள். ஆண்டவனை அடியார்கள் யாவருமே " அப்பன் நீ அம்மை நீ " என்றுதான் அல்லும்பகலுமே


ஆராக்காதலுடன் ஏற்றிப் போற்றியும் நிற்பார்கள். இதுதான் நடை முறை யாக இருந்து வருகிறது. அம்மையே அப்பா என்று அடியவர்களால் ஏற்றிப் போற்றி நிற் கும் எப்பிரானே ஒரு அடியவரை எம்மைப் பேணும் அம்மை இவள் " என்று ;  " அம் மையே " என அருள் சுரந்து அழைத்தாராம். ஆண்டவனால் " அம்மையே " என்று அழை க்கப்படும் அளவுக்கு உரித்தாய் நின்றவர்தான் " தமிழீன்ற தவப்பு தல்வி காரைக்கால் அம்மையார் அவர்கள்.

  பக்தி உலகிலே நால்வருக்கும் மூத்தவர். நால்வரும் பக்திப் பெரு வெளியில் உத்வேக மாய் காலூன்றிப் பயணப்பட முன்னோடியானவர். அவர்களால் பாடப்பட்ட பக்திப் பனுவல் களுக்கெல்லாம் ஆசா னாகவும் விளங்கியவர். அவர்கள் எப்படியெல்லாம் தமிழில் இறை வனது திருவருளினைப் பாடலாம் என்பதற்கெல்லாம் பாவடிவுகளைபா இனங்களை யெல்லாம் காட்டி நின்ற பேராளுமை என்று அவரைப் பல நிலைகளில் நோக்கக் கூடிய தாகவே இருக்கிறது.

  சைவபக்தி வரலாற்றில் அம்மையாரின் வருகை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். இவர் இறைவனை உருவகிக்கும் பாங்குஇறைவனை விழிக்கும் பாங்கு யாவுமே இவரு க்கே தனித்துவமான ஒன்றாகவே விளங்குகிறது என்பதுதான் உண்மையாகும். அன்பி னுருவமாய் ஆண்டவனை இவர் காணுகின்றார். இந்த உலகத்தைத் தோற்றுவித்த முதல் வனாய் விளங்குகிறான் என்று போற்றிப்பாடுகின்றார்.அத்வைதத்தை ஆதிசங்கரரே பரப் பினார் என்று அறிகின்றோம். ஆனால் காரைக்கால் தந்த எங்கள் தமிழ்ச்செல்விதான் அத் வைதத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பதை அவரின் பாடல்களின் கருப் பொருட்களால் அறியக்கூடியதாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும். ஈசனே சகலமும் என்னும் கரு த்தினை அம்மையார் சுட்டுவதன் மூலம் அரன் அரிஅயன் என்னும் அத்தனை நிலையும் ஒன்றாய் அடங்குவதையே வெளிப்படுத்தி நிற் கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

 

“ எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை ! “ யாதுமாகி – மின்நூல் வெளியீட்டில் ஏற்புரை முருகபூபதி

( கடந்த சனிக்கிழமை நடைபெற்ற  “ யாதுமாகி  “ மின்நூல் மெய்நிகர் வெளியீட்டில்  நிகழ்த்தப்பட்ட ஏற்புரையின் முழுமையான பதிவு )

 


எமது வேண்டுகோளை ஏற்று இந்த மெய்நிகர்  அரங்கினை தலைமை தாங்கி நடத்தியிருக்கும்  சகோதரி கலையரசி சின்னையா,  யாதுமாகி நூல் பற்றி தங்கள் வாசிப்பு அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொண்ட  திருமதிகள்  விஜி இராமச்சந்திரன், கனகா கணேஷ்,  முனைவர் வள்ளி, மருத்துவர் வாசுகி சித்திரசேனன் ஆகியோருக்கும், 

இந்த அரங்கினை ஏற்பாடு செய்து தந்த  கன்பரா தமிழ் அரங்கம் பிரம்மேந்திரன், மற்றும் இந்நிகழ்வின் அழைப்பினை வடிவமைத்த எழுத்தாளர் – ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம்,  இந்நிகழ்ச்சி பற்றி இலங்கை ஊடகங்கள் வீரகேசரி, தினகரன், தினக்குரல், காலைக்கதிர்,  ஈழநாடு , தமிழ் முரசு, தீம்புனல்  ஆகிய பத்திரிகைகளில் வெளியிட்ட  அவற்றின்  ஆசிரியர்களுக்கும் 

கனடா பதிவுகள், தமிழ்நாடு திண்ணை, லண்டன் வணக்கம் லண்டன், அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு ஆகிய இணைய இதழ்களின் ஆசிரியர்களுக்கும்,  மற்றும் இந்நிகழ்ச்சி பற்றி தங்கள் வலைப்பூக்கள் -  முகநூல்களில் பதிவேற்றியவர்களுக்கும்  லண்டனிலிருந்து என்னை தொடர்புகொண்டு,  தமது காணொளி YouTube channel  ஊடாக நேர்காணலை ஒளிபரப்பிய  அதன் இயக்குநர் திரு. எஸ். கே. ராஜென் மற்றும் செய்தியை ஒலிபரப்பிய  சிட்னி  Focus Thamil  இணைய வானொலி இயக்குநர் சத்தியபாலன் ஆகியோருக்கும்  இந்த அரங்கில் இணைந்திருந்தவர்களுக்கும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டவர்களுக்கும்  எனது  மனமார்ந்த நன்றி.

பல வருடங்களுக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டளவில் எனது நெஞ்சில்


நிலைத்த நெஞ்சங்கள்
நூல் வெளிவந்தபோது,  ( இந்நூல் மறைந்த கலை, இலக்கிய ஆளுமைகள் 12 பேரைப்பற்றிய பதிவு )   சில பெண்கள் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்:

 “ இந்த நூலில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவருமே ஆண்கள்தான், ஏன் பெண்களைப்பற்றி நீங்கள் எழுதவில்லை..? “ 

அதற்கு நான் சொன்ன பதில்:   “ பெண்களுக்கு ஆயுள் அதிகம். 

எனது இந்தக்கருத்தை வேடிக்கையாக அல்ல, உண்மையாகவே சொல்கின்றேன்.  உங்கள் குடும்பங்களிலும் இந்த உண்மையை நீங்கள் அவதானித்திருக்க முடியும்.  இதிலிருந்து பெண்களின் ஆயுளையும் ஆளுமைப் பண்புகளையும் எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பிட்ட நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் இடம்பெற்றிருந்தவர்கள் அனைவரும் ஆண்கள்தான்.  ஆனால், அந்த நூல் மெல்பனில் வெளியானபோது


அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கியவர் எமது மதிப்பிற்குரிய திருமதி பாலம் லக்‌ஷ்மணன் அம்மையார்.

அவர் தனது உரையில்,     முருகபூபதி,  விருப்பு வெறுப்பு பார்க்காமல் காய்தல் – உவத்தல் இன்றி,  தான் சந்தித்த ஆளுமைகளின் மேன்மையான பக்கங்களை மாத்திரமே பதிவுசெய்துள்ளார். அதாவது அன்னப்பறவையைப் போன்று செயல்பட்டுள்ளார்  “ எனத் தெரிவித்தார்.

இதனை அந்தச்  சபையில் கேட்டுக்கொண்டிருந்த -  எம்மத்தியில் வாழ்ந்த  மதிப்பார்ந்த மூத்த ஓவியக்கலைஞர் கே. ரி. செல்வத்துரை அய்யா அவர்கள்,  அடுத்த வாரமே தனது கைவண்ணத்தினால், ஒரு அழகிய பெரிய அன்னப்பறவை ஓவியத்தை வரைந்து அதற்கு சட்டமிட்டு எடுத்துவந்து எனக்கு பரிசளித்தார்.

எங்கள் வீட்டின் வரவேற்பறையில் அந்தப்படம் காட்சியளிக்கிறது.

1998 ஆம் ஆண்டு எனது மூன்று நூல்கள் சிட்னியில் மறைந்த மூத்த கலைஞர் ‘


அப்பல்லோ சுந்தா  ‘ சுந்தரலிங்கம் அவர்களின் அரங்கில் நடந்த போது அதற்கு தலைமை தாங்கியவர்தான் இன்றைய அரங்கில் தலைமை தாங்கியிருக்கும் திருமதி கலையரசி சின்னையா அவர்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சி சுந்தா அரங்கில் நடப்பதை எனது அழைப்பிதழ் மூலம் அறிந்த சிட்னியில் வதியும் மூத்த ஓவியக்கலைஞர் ‘ ஞானம்  ‘ ஞானசேகரம் அவர்கள், தமது கைவண்ணத்தில் சுந்தா அவர்களின் உருவத்தை வரைந்து சட்டமிட்டு எடுத்துவந்து  அனைவரதும் முன்னிலையில் வழங்கினார்.

அதனையே அவ்வரங்கில் விளக்கேற்றி, மாலை அணிவித்து நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.

குறிப்பிட்ட அமரர் சுந்தாவின் ஓவியம், அன்னாரின் குடும்பத்தினரிடம் அதாவது எங்கள்  கலை இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அக்காவிடம் சேர்ப்பிக்கப்பட்டது.

இங்கு நான் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் நான் எதிர்பாராமல் நடந்தவை.  எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்று எனது எழுத்துப்பதிவுகளில் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.


இன்று வெளியாகும் யாதுமாகி நூலை சகோதரி பராசக்தி அக்கா அவர்களுக்கே சமர்ப்பித்துள்ளேன். ஆனால்,  இதுவிடயம் அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ இதுவரையில் தெரியாது.  நூலை கிண்டிலில் தரவிறக்கிப்பார்க்கும்போது அல்லது அதன் மூலப்பிரதி அச்சில் வரும்போது கவனிப்பீர்கள்.

இத்தகைய பாக்கியங்களை நான் எனது எழுத்துலக வாழ்வில் நிறைய பெற்றிருக்கின்றேன்.

1970 களில் அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்த எழுத்துலகில் பிரவேசித்தபோதே  படைப்பிலக்கியவாதியாக மட்டுமன்றி, பத்திரிகையாளனாகவும் வாழத் தொடங்கிவிட்டேன்.

சில வேளை படைப்பிலக்கியவாதியாக மாத்திரம் நான் இயங்கியிருப்பேனேயானால், என்னிடத்திலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மனப்பான்மை உருவாகி, மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்களின் மேன்மைகளை இனம் காணும் பண்பு என்னிடத்திலும்  இல்லாமல் போயிருக்கும்.  ஆனால், நான் ஒரு பத்திரிகையாளனாகவும் ஊடகவியலாளனாகவும்  தொடர்ந்து பயணிக்கின்றமையால் இந்த விருப்பு வெறுப்பு  பார்க்கும் குணாதிசயம் என்னை என்றைக்குமே அண்டவில்லை.

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியராக திகழ்ந்த முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளார்

 Sunday, March 27, 2022 - 6:00am

130ஆவது பிறந்ததினம் இன்று

முத்தமிழ் வித்தகரும், உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892_ -ஜூலை 19, 1947) கிழக்கின் காரைதீவில் பிறந்தார். சுவாமியின் தாயார் பெயர் கண்ணம்மை. தந்தையார் சாமித்தம்பி. அவருக்கு இயற்பெயராக தம்பிப்பிள்ளை என்ற நாமத்தை சூட்டினர். எனினும் பின்னர் மயில்வாகனன் என்று நாமம் இட்டனர்.

ஆரம்பக் கல்வியை கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கற்றார். கேம்பிரிட்ஜ் சீனியர் சோதனையில் சித்தியடைந்த பின்னர் அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.

ஸ்வீட் சிக்ஸ்டி 7 -மனிதன் மாறவில்லை - - - ச சுந்தரதாஸ்

 .

தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் சம காலத்தில் பல வெற்றி படங்களை தயாரித்தவர்கள் விஜயா புரொடக்ஷன்ஸ் அதிபர்களாக நாகிரெட்டி - சக்கரபாணி.ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோவான வாஹினி ஸ்டுடியோவின் அதிபர்களாக இவர்கள் அம்புலிமாமா மாத இதழை 16 மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டார்கள்!அது மட்டுமன்றி பொம்மை,மங்கை ஆகிய மாத இதழ்களையும் பிரசுரம் செய்து அவை வாசகர்களின் வரவேற்பை பெற்றன. இவர்கள் சென்னையில் அமைத்த விஜயா மருத்துவமனை பிரபலமாக விளங்கியது.


இவ்வாறு பல துறைகளில் சாதனை புரிந்த இவர்கள் இருவரும் ஜெமினி கணேசன் சாவித்ரி நடிப்பில் மிஸ்ஸியம்மா,மாயாபசார்,கடன் வாங்கி கல்யாணம்,குணசுந்தரி ஆகிய படங்களை தயாரித்து அவை ரசிகர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டன.இந்த வரிசையில் 1962ல் அவர்கள் தயாரித்த படம்தான் மனிதன் மாறவில்லை.நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை குதூகலப் படுத்தும் விதத்தில் படங்களை தயாரிக்கும் இவர்கள் மனிதன் மாறவில்லை படத்தையும் அவ்வாறே உருவாக்கினார்கள்.

ஜெமினி கணேசன்,நாகேஸ்வரராவ்,சாவித்ரி,கே சாரங்கபாணி,ஜமுனா,சுந்தரிபாய்,எஸ் வீ ரங்காராவ்,சி டீ ராஜகாந்தம்,டீ கே ராமசந்திரன்,எல் விஜயலஷ்மி,ஸ்ரீநாத் சட்டாம்பிள்ளை வெங்கடராமன் ,செருக்களத்தூர் சாமா என்று பலரும் நடித்த இப் படம் தெலுங்கிலும் சம காலத்தில் தயாரானது. ஜெமினிக்கு பதில் என் டீ ராமா ராவ் நடித்தார்.

சித்தியின்கொடுமைக்கு ஆளாகும் லட்சுமி பொறுமையின் சிகரமாக விளங்குகிறாள்.ஆனால் சித்தியோ தன் மகள் சரோஜாவை செல்லமாக வளர்க்கிறாள்.அவளை எப்படியாவது தன் மகனுக்கு கட்டிக்க கொடுக்க வேண்டும் என்று அவளின் தாய் மாமன் குப்புசாமி முயற்சி செய்து வரும் திருமண வரங்களை எல்லாம் குழப்புகிறான்.தனவந்தரான சிதம்பரனார் தன் இரு புதல்வர்களான பஞ்சு,ராஜா இருவரையும் லக்ஷ்மிக்கும்,சரோஜாவுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.ஆனால் அதற்கு முன் சரோஜாவையும் அவள் தாயான சுப்பம்மாவையும் திருத்த விரும்புகிறார். அதற்கமைய பஞ்சு, இருவரும் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளாமல் சுப்பம்மா வீட்டிற்கு சென்று தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள்.

இப்படி அமைந்த கதை முழு நீள காமெடி படமாக எடுக்கப்பட்டிருந்தது.

படத்தின் கதை வசனத்தை தஞ்சை ராமாயாதாஸ் எழுதியிருந்தார்.காட்சிக்கு காட்சி அவர் எழுதிய நகைச்சுவை வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தன.அவற்றை மேலும் மெருகு படுத்துவது போல் ஜெமினி நடித்திருந்தார்!சீரியசானப் படங்களில் நடிக்கும் ஜெமினிக்கும் அவரின் ரசிகர்களுக்கும் இது வித்தியாசமான படமாக அமைந்தது.

திரையிசையை தனது காந்தர்வக் குரலால் வசீகரித்து வைத்துள்ள மாபெரும் பாடகர்

 Thursday, March 24, 2022 - 4:22pm



மாபெரும் பாடகர் அமரர் ரி.எம்.சௌந்தரராஜனின் பெயரைத் தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை எவரும் எழுதி விட முடியாது. தமிழ்த்திரையிசையை 60வருட காலமாக தனது இசை ஆளுமையினால் கட்டி வைத்திருந்தவர் அவர்.அந்த மகா இசைக்கலைஞனின் 99வது பிறந்த தினம் இன்றாகும் (24.03.1923).  பதினோராம் நூற்றாண்டில் சௌராஷ்டிர மக்கள் தென்னகத்தில் தஞ்சம் புகுந்தனர். தமிழ்நாட்டில் அவர்கள் 

தங்கிய 45ஊர்களில் மதுரை மிக முக்கியமான இடம். அவ்வாறு மதுரையில் தஞ்சம் கொண்ட பரம்பரையில் வந்தவர்தான் ரி.எம்.சௌந்தரராஜன். இவர்களில் பெரும்பாலானோர்கள் நெசவுத் தொழில் செய்து வந்தனர். மதுரை தெற்கு பெருமாள் கோயிலில் புரோகிதம் செய்த வைதீகர்தான் சௌந்தரராஜனின் தந்தை மீனாட்சி அய்யங்கார். ரி.எம்.எஸ்ஸின் தாயார் பெயர் வேங்கடம்மாள்.இவர்களின் பரம்பரை பெயர் 'தொஹுலுவா'. தொஹுலுவா மீனாட்சி அய்யங்கார் சௌந்தரராஜன். இதன் சுருக்கமே ரி.எம்.எஸ்.  

உலகச் செய்திகள்

 போரை முடிக்க ரஷ்யாவுக்கு பொதுச் சபையில் அழுத்தம்

வட கொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணைச் சோதனை வெற்றி

ரஷ்யாவை தடுப்பதில் தாமதித்ததாக ஐரோப்பா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

 132 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்து




போரை முடிக்க ரஷ்யாவுக்கு பொதுச் சபையில் அழுத்தம்

உக்ரைனில் ரஷ்யா மோசமான நிலையை ஏற்படுத்தியதற்காக ரஷ்யாவை கண்டிப்பது, உக்ரைனிய பொதுக்களை பாதுகாப்பது மற்றும் உதவிகள் செல்வதற்கு அழுத்தம் கொடுக்கும் ஐ.நா பொதுச்சபை தீர்மானத்திற்கு கிட்டத்தட்ட முக்கால் பங்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

சர்வகட்சி மாநாடும் சருகாகிவிடும் அரசியலும் ! அவதானி


இந்தப்பதிவை எழுதத் தொடங்கியபோது,  இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷ  ஏற்பாடு செய்த சர்வகட்சி  மாநாடு பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தன.

இதுபோன்ற சர்வகட்சி மாநாடுகள் முன்னரும் நடந்துள்ளன. அல்லது அறிவிப்போடு மறக்கப்பட்டுமிருக்கின்றன.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல், ஜனநாயகத்தின் பேரில் நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆரம்பமான காலம் முதல் சர்வகட்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை கொவிட் பெருந்தொற்று நெருக்கடியை அடுத்து, பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் வேளையில் அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷ இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறார். 

பஞ்ச பாண்டவர் பற்றி அறிந்தோம். இப்போது பஞ்சத்தை ஆண்டவர்களின் காலத்தில் மற்றும் ஒரு சர்வகட்சி  மாநாட்டை  நாம் சந்திக்கின்றோம்.

தற்போது பஞ்சத்தை ஆண்டவர்களின் அரசின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச முதலானோர் தங்கள் அமைச்சுப்பதவிகளிலிருந்து அதிபரினால் நீக்கப்பட்டுள்ள பின்னணியிலும் மற்றும் ஒரு பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, நவசமாஜக்கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார முதலானோர் அரசு மீது நம்பிக்கையற்று


விமர்சித்துக்கொண்டிருக்கும் வேளையில் அதிபர், இந்த மாநாட்டுக்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்திருக்கிறார்.

1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 140 ஆசனங்களில் வெற்றிபெற்று ஆறில் ஐந்து பங்கு பலம்பெற்று பதவிக்கு வந்த  சட்டமேதை ( பாரிஸ்டர் ) ஜே.ஆர். ஜெயவர்தனா, விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்.

அதற்கு முன்னர் 1970  இல் நடந்த தேர்தலில் தோல்வி கண்டிருந்த அவரது  ஐக்கிய தேசியக்கட்சி  ஏழு ஆண்டுகளின் பின்னர் அபரிமிதமான வெற்றியை கண்டதும்,   அவர் செய்த முதல் வேலை,  அரசியல் சட்டத்தில் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியதுதான்.

    ஏன் இவ்வாறு மாற்றம் செய்கிறீர்கள்..? எனக்கேட்டதற்கு அவர் சொன்ன பதில் :  1970 தேர்தலில் தமது கட்சி தோல்வி கண்டிருந்தாலும்,  முழு நாட்டிலும் தொகுதிவாரியாக தமது கட்சிக்குத்தான் அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன.

ஆனால்,  மொத்த வாக்குகளில் தமது ஐக்கிய தேசியக்கட்சியை விட  குறைந்த வாக்குகளைப்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  இரண்டு இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து 1970 இல் அரசை அமைத்துள்ளது.

எனினும்,  தேர்தல் வாக்கின் அடிப்படையில் தமது ஐ.தே. கட்சிக்குத்தான் ஆதரவு அதிகம்.  எனவே விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துகின்றேன்  என்றார், அன்று அதாவது 45 வருடங்களுக்கு  முன்னர் அவர் அவ்வாறு செய்தமையால்தான் இன்று நாடாளுமன்றில் பல உதிரிக்கட்சிகள் பெருகியிருக்கின்றன.

கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் [ சுவை முப்பத்து ஐந்து ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா





வடலியாக இருந்து வளர்ந்து பனையாகி வந்தபின்னர் கொடுக்கும் அத்தனையையும் பனையென்னும் கற்பகதரு கொடுத்தபடியே இருக்கும். கேளாமல் கொடுக்கும் வள்ளல் தன்மையினைப் பனை கொண்டி ருப்பதால் அது மரங்களுக்களுக் குள்ளேயே உயர்வானதாகவே நிமிர்ந்து நிற்கிறது எனலாம். தனது அடி முதல் நுனிவரை அமைந்து காணப்படும் பகுதிகளில் என்னென்ன பலன் இருப்பதாகக் கருதுகிறீர்களோ அவைகள் அத்தனையையும் தாராளமாகவே எடுத்துக் கொள்ளுங்கள் என்று திறந்த மனத்தோடு தெரிவி த்து மிகவும் தெளிவாய் இருப்பதுதான் பனை எனலாம். " செத்தும் கொடுத்தான் சீதக்காதி " என்று ஒரு சொல்லுவது பழக்கத்தில் இருப்பதை யாவரும் அறிவோம்.                                         

      சீதக்காதி என்பவர் தனது வாழ்நாளெல்லாம் வரையாது


வழங்கினார் என்றும் அறிகின்றோம்.அவரிடம் வருவோர்களை மதம் பாராது
இனம் பாராது கொடுத்தபடியே இருப்பாராம்.அவரிடம் உதவிகேட்டு வந்த வருக்கு பொருள் கொடுத்த போது அவர் அதனை பின்பு வந்து பெற்றுக்கொள்ளுவ தாகக் கூறி நன்றி சொல்லிச் சென்றுள்ளார். அவருக்கு பொருள் தேவை யான வேளை    சீதக்காதியை நாடி வந்திருக்கிறார். அதற்குள் சீதக்காதி வள்ளலோ இறந்து விட்டார். வந்தவரே கவலையுடன் அவரின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தலாம் என்று உறவுகளுடன் சென்றிருக்கிறார். அப்பொழுது அங்கே ஒரு அதிசயம் நடந்ததாம்.சீதக்காதியின் சமாதியி லிருந்து அவரது ஒரு கை மேலே எழுந்ததாம். அந்தக் கையில் ஒரு விரலில் விலைமதிப்பான மோதிரம் இருந்ததாம். உறவினர் அந்த மோதிர த்தை எடுத்து வந்தவரிடம் கொடுத்தார்களாம் என்பதுதான் அந்த அதிசய சம்பவமாகும். செத்தாலும் வள்ளல் தன்மை மட்டும் உயிர்த்துடிப்புடன் இருந்திருக்கிறது என்பதுதான் இங்கு முக்கியத்துவப் படுத்தப்படுகிறது எனலாம். பனைக்கும் இச்சம்பவத்தும் என்னதான் தொடர்பு இருக்கிறது என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா பனையானது உயிர்ப்புடன் இருக்கும் பொழுது கொடுத்து உதவியது. அது உயிர்ப்பு அற்று பட்ட மரமாகிய பின் பும் பயனைக் கொடுக்கும் வகையிலும் இருக்கிறது என்பது தான் இங்கு தொடர்பாக அமைகிறது.

இலங்கைச் செய்திகள்

 நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்துவதற்கு ஆர்வம்


நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு

த.தே.கூட்டமைப்பு தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களையும் சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வோம் − இரா.சம்பந்தன்

“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர கவனத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று, (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவித்தல், குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 19 "புலம்பெயர்ந்தோரின் சிறுகதைத் தொகுப்புக்கள் சில… - உரையாடல்"


நாள்:
         ஞாயிற்றுக்கிழமை 03-04-2022       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM, Facebook

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

                     

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/

 

மேலதிக விபரங்களுக்கு:  - அகில் சாம்பசிவம் - 001416-822-6316

 

சிறுகதை  நூல்களைப் பேசுவோம்: