.
பிறந்தநாள் வாழ்த்து 


Eastwood ஐ சேர்ந்த  திரு பத்மசிறி மகாதேவா (பப்பு) அவர்கள் இன்று 04 .05.2012 தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடுகிறார் . இவரை அன்பு மனைவி பானு, மகள் அபிசாயினி, சகோதரர்கள், மைத்துனர்கள், மைத்துனிமார், உற்றார், உறவினர் நண்பர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள். இவரை தமிழ்முரசு அவுஸ்திரேலியாவும் பல்லாண்டு வாழ வாழ்துகிறது.

பெயரிடாத நடசத்திரங்கள் நூல் வெளியீடு


.

ஊடறு மற்றும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் பெயரிடாத நடசத்திரங்கள் என்னும் கவிதைத் தொகுதி 29ஃ04ஃ12 ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக வெளியிடப்பட்டது. பலரது ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிட்னியில் உள்ள பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டமை இந்நிகழ்வை மேலும் சிறப்படையச் செய்தது.
இந்நூலின் விலை 10 வெள்ளிகள் என்றபோதும் பலரும் மேலதிகமான பணத்தைக் கொடுத்து நூலை வாங்கியிருந்தனர். இந்நூலின் விற்பனையில் சேகரிக்கப்பட்ட பணம் அனைத்தும் ஈழத்தில் இயங்கிவரும் பெண்கள் நல அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்பதை ஏற்பாட்டாளர்கள் தமது உரையில் வலியுறுத்தியிருந்தனர்.


சிட்னி துர்க்கை அம்மன் கோவில் இராப்போசன விருந்து 28 - 04 - 2012


படப்பிடிப்பு கு கருணாசலதேவா 
கணேஷ் 

சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தின் கட்டிட நிதிக்கான இராப்போசன விருந்து சனிக்கிழமை 28.04.2012 இரவு இடம்பெற்றது. ஆலயத்தில் அமைந்திருக்கும் மண்டபம் நிறைந்த மக்களாக இந்நிகழ்வு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வந்தவர்களை ஆசனங்களில் அமரவைப்பதில் சற்று தாமதம் இருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 6.30 மணிக்கு   திரு செ.பாஸ்கரனின் அறிவிப்போடு திருமதி லஷ்மி பாஸ்கரன் திருமதி செல்வராணி லிங்கம் ஆகியோர் மங்கள விளக்கேற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து பகீசா பூபாலசிங்கம் அபிசா பூபாலசிங்கம் சகோதரிகள் இனிமையாக தமிழ்மொழி வாழ்த்து பாடினார்கள். அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ செந்தில்நாதகுருக்கள் இறைவணக்கத்தையும் ஆசிச் செய்தியையும் வழங்கினார்கள். சுருக்கமாகவும் ஆழமாகவும் அவருடைய உரை அமைந்திருந்தது.

யாரோ என் நெஞ்சை தீண்டியது - கவிஞர் தாமரை


.

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது.

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

சிட்னி துர்க்கை அம்மன் கோவில் சமய அறிவுப் போட்டிகள் 29 - 04 - 2012

 .


வருடம் தோறும் சி ட்னி துர்கை அம்மன் ஆலயம் நடாத்தும் சமய அறிவுப்போட்டி 29 .04.2012. அன்று துர்கை அம்மன் ஆலயத்தில் நடை பெற்றது. வழமை போல் ஐந்து பிரிவுகளில் இப்போட்டிகள் இடம் பெற்றது. போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அவர்களின் பெறுபேறுகள் உடனடியாகவே அறிவிக்கப்பட்டது .குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டும் போட்டியில் நான்கு வயதுப்பிள்ளையும் கலந்து கொண்டதைக்  காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களில் ஒரு பகுதியினரையும் நடுவர்களையும் படங்களில் காணலாம். 

இலங்கைச் செய்திகள்

.
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர்....

இலங்கையில் 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸுடன் பிறந்துள்ளன; 3000 நோயாளிகளும் உள்ளனர்

அவசரமாகத் தேவைப்படும் மதச்சார்பற்ற சிந்தனைகள்

மீண்டும் 13+ கதை

யுத்த விதவைகளுக்கு சுய வலுவூட்டும் முன்முயற்சி

ஹக்கீமின் மத்தியஸ்தம்...?

யுத்தம்; பொதுமக்களை பாதுகாக்கவா? அழிக்கவா?

தொடரும் அட்டூழியம்: காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயத்துக்கு தீவைப்பு

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட விவகாரம்: அம்பாறையில் ஹர்த்தால்

தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர்.... _

23/4/2012

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் பிக்குகள் தலைமையிலான பெரும்பான்மை இனத்தவர்களால் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டது.

அதன் பின்னர் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதன் சுருக்கம் வருமாறு,

எமக்கு நீதியையும் பாதுகாப்பையும் பெற்றுத்தாருங்கள் - தம்புள்ளை பகுதி தமிழ்பேசும் மக்கள்

மெல்பேர்ண் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் - 2012;

.

மெல்பேர்ண் The Basin ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நிகழும் 2012ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எதிர்வரும் சித்திரை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகின்றது. இறைவனின் ஐந்தொழில்களைக் குறித்து நடைபெறும் மகோற்சவத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் காலையும், மாலையும் நடைபெறுகின்றது. .
தினமும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மாலையில் கொடித்தம்ப பூசை, வசந்த மண்டபப்பூசை, யாகதரிசனம், விநாயகப் பெருமான் உள்வீதி, வெளிவீதி உலா வருதல் நிகழ்கின்றது.,
சித்திரை 28ம் திகதி சனிக்கிழமை இறைவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சங்காரம் என்ற அழித்தல் தொழிலை உணர்த்தி செய்யப்படும் தேர்த்திருவிழா கோலாகரமாக நடைபெறவுள்ளது. காலை 10மணியிலிருந்து 12மணிவரை பஞ்சமுக விநாயகப் பெருமான் தேரிலேறி நகர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். அன்றைய தினம் மாலை பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பச்சை சாத்தி ஆராதனைகள் நடைபெறும்.


எங்கே மனம்? - மணிமேகலா


.

கடந்த வாரம் கடைத் தொகுதி ஒன்றில் காரைக் கழுவக் கொடுத்திருந்தேன்.

அதனைச் செவ்வனே பராமரித்த காலங்கள் எல்லாம் இப்போது மலையேறி விட்டன.கார் வாங்கிய ஆரம்ப காலங்களில் வாரம் ஒருமுறை கழுவி உள்ளும் புறமும் துடைத்து அதை முன்னும் பின்னும் பார்த்து திருப்தியான பின் தான் நகருவது வழக்கம். பின் அது மாதம் ஒன்றாகி இப்போது அவற்றைக் கழுவுவதற்கே நேரமில்லாமல் கடைகளில் கொடுத்து கழுவுகிற காலத்துக்கு வந்தாயிற்று.

என்னே ஒரு காலத்தின் மாற்றம்!

பல நாட்களாய் ஒரு வித குற்ற உணர்வு அதனைப் பார்க்கும் தோறும் வந்து கொண்டே இருந்தது. அதன் முன் சில்லுகள் எல்லாம் தூசிகள் சேர்ந்து கறுப்பேறி விட்டன. இன்று எப்படியேனும் அதற்கொரு வழி பார்க்க வேண்டும் என்று தீர்மானம்.

தமிழ் எழுத்தாளர் விழா 2012 -- 13.05.12

.

மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 5


.
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)

(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)

காட்சி 6

களம்:- எல்லாளன் அரசவை

பங்குகொள்வோர்:- எல்லாளன்
அமைச்சர்
தளபதி
அரசவையினர்

(இரண்டு நர்த்தகிகள் நடனமாடுகின்றனர்)

(நடனம் முடிய, அனைவரும் கைதட்டிப் பாராட்டகிறார்கள்).

எல்லாளன்:- செந்தமிழின் புகழ்பாடும் சிறப்பு மிகு புலவர்களே! சீரிளமைத் தமிழ்
மொழியின் ஆர்வலரே. ஈழத்தமிழ் நாட்டின் எழில்பூத்த ஓவியங்களே! காவியம் படைக்கவந்த கன்னிமலர்களே! பாடும் பாவத்தில், போடும் தாளத்தில், ஆடும் வேகத்தில், அழகிய கோலத்தில் ஞாலத்தின் கலைக்கெல்லாம் சாலச்சிறந்தது நம்கலைதான் என்று சூழுரைத்துச் சொல்ல வைத்துவிட்டீர்கள். வாழ்க உங்கள் கலை. வளர்க உங்கள் தலைமுறை. அமைச்சரே!

அமைச்சர்:- (பரிசுப்பொருளை நீட்டி) இதோ மன்னா.

கருத்து உதைக்குது -குட்டி நாடகம் குறளில் குறும்பு

வானொலி மாமா நா. மகேசனின்

ஞானா: (கூப்பிட்டு) அப்பா........அப்பா........ இந்தக் குறளைப் பாருங்கோ அப்பா.....

அப்பா: எந்தக் குறளை ஞானா?

ஞானா: படிக்கிறன் கேளுங்கோ அப்பா.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்


என்னுடைய ரேனும் இலர்.

அப்பா: குறள் சரியாய்த் தானே இருக்கு ஞானா.

ஞானா: குறள் சரியாத்தான் இருக்கு அப்பா. ஆனால் கருத்துத்தானே உதைக்கிது.

சுந்தரி: (வந்து) ஆர், ஆருக்கு உதைக்கப் போறியள் அப்பா?

அப்பா: வாரும் சுந்தரி வாரும்......இவள்பிள்ளை ஞானா திரக்குறளுக்கு உதைக்கப்போறாளாம்.

எப்படி வாழ்த்த வேண்டும்?‏ - தினகரன்

.
சற்குரு என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட குருவானவர் சதுரகிரி மலை அடிவாரத்தில்  ஆசிரமம் அமைத்து தன் சீடர்களுடன் தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார்.

தினமும் மாலை வேளைகளில் குருவைக் காண பல ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.அவரும் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அருளுரை, வாழ்த்து, நல்வாக்கு  வழங்கி ஞான மார்க்கத்தைப்  புகட்டி வந்தார். சில சமயம் சீடர்களுக்கும் குருவின் வாழ்த்தும், வாக்கும், போதனையும்  வியப்பை அளிக்கும்.எப்படியோ, குருவின் நல்வாக்கும் வாழ்த்தும் முறையும் அவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தன.
ஒரு நாள் செல்வந்தர் ஒருவர் தன் குடும்ப சகிதம் குருவைக் காண வந்திருந்தார்.
தன்னை நாடி வரும் அன்பர்களை குரு சந்திக்கும் மாலை வேளை வந்தது.குருவும் பர்ணசாலையில்  வந்து அமர்ந்தார். ஒவ்வொருவராக குருவை சந்தித்து அருளாசியுடன் விடை பெற்று சென்றுகொண்டிருந்தார்கள்.அப்போது குருவைக் காணவந்த தற்பெருமை பேசும் ஒரு அன்பர் தனக்கு உபதேசம்  வழங்க வேண்டிக்கொண்டார்.
சற்குரு  உபதேசத்தை ஆரம்பித்தார் :

"தகப்பன் சரியில்லை சொத்து போச்சு..
தாய் சரியில்லை பாசம் போச்சு..
சகோதரர்கள் சரியில்லை நேசம் போச்சு..
நண்பன் சரியில்லை உண்மை போச்சு..
பிள்ளகைகள் சரியில்லை மரியாதை  போச்சு..
மனைவி சரியில்லை எல்லாமே போச்சு.."

உலகச் செய்திகள்

.
தென் கொரியத் தலைநகரை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம்: வட கொரியா மிரட்டல்

லண்டன் பௌத்த நிலையம் மீது குண்டுத் தாக்குதல்


ஆசியா மீதான புலனாய்விற்காக அமெரிக்கா வகுத்துள்ள புதிய திட்டம்

பிரிட்டனில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி

கிலானிக்கு 30 வினாடிகள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தென் கொரியத் தலைநகரை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம்: வட கொரியா மிரட்டல்

Tuesday, 24 April 2012

தென் கொரியத் தலைநகர் சியோலை மூன்று நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று வட கொரியா இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த 1950ம் ஆண்டு உள்நாட்டு கலவரத்திற்கு பின் ஒருங்கிணைந்த கொரியா வட கொரியா, தென் கொரியா என இரு நாடுகளாக பிரிந்தன.

தென் கொரியா ஜனநாயக ரீதியிலும், வட கொரியா கம்யூனிச கொள்கையிலும் செயல்பட தொடங்கின. அதன்பின் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது.

தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை) வித்யாசாகர்!


.
சார் வணக்கம் சார்..”
“ம்ம்.. ம்ம்..”
“எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?”
“எந்தா வேணும் பர”
“சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…”
“அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் -
“சார்....”
“சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும், நான் பிசியா இருக்கேன்ல”
“அப்படியே என் சம்பளம் பத்தி..யும்..”
“சம்பளம்தான் போட்டாச்சே பேங்குக்குப் போய்க்காணும், அவ்வட சென்னு நோக்கு”
“வந்துச்சு சார் இரண்டு நாள் குறைவா வந்திருக்கு சார் அதான் என்னன்னுக் கேட்கலாம்னு..”
“அப்படியா, அங்க ஒங்க முதலாளி இருக்கார்ல போயி அவரைக் கேளு”
“என்ன சார்..?”
“சென்னு அவரை நோக்குன்னு..”
“சரி சார்..”
அவர் சரியென்று தலையாட்டிவிட்டு அந்த அறைவிட்டு வெளியேப் போனதும், அவன் துள்ளிக் குதித்துச் சிரித்தான், பக்கத்து அறையிலிருந்து நான் என்ன ரசூல் என்னாச்சு ஏன் இப்படி சிரிக்கிற என்றேன், அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. எழுந்து என் அறைக்கு வந்து என்னிடம் –
“சா...ர்.., சம்பளவு குறைவு சார்...” மீண்டும் காலை உதைத்துக்கொண்டு சிரித்தான். அவன் நாங்கள் பணிபுரியும் குவைத்து நாட்டின் தனியார் நிறுவனத்தில் உடன் வேலையாற்றுமொரு கணக்காளன், கேரள நாட்டைச் சேர்ந்தவன், தமிழரைக் கண்டால் தெரிந்தோரிடம் தமிழ்கலந்து மலையாளம் பேசுவான், புதிய தமிழர்கள் எனில் முற்றிலும் மலையாளத்தில் பேசி தன்னை தனித்த தேசத்திற்கு உரியவனாகக் காட்டிக் கொள்பவன்.

தமிழ் சினிமா

ஊ ல ல லா...

ooh_la_la_la_1 'மடை திறந்து... பாயும் நதியலை நான் மனம் திறந்து...' என்றொரு செவிக்கினிய பாடலை நாள்தோறும் வானொலியில் கேட்டு லயித்து போயிருந்த எனக்கு நாலு நாளைக்கு முன்புதான்

அதை டி.வி யில் பார்க்க நேர்ந்தது. என்ன வாழ்க்கைடா இது என்று அரளி விதையை அரைக்கிற அளவுக்கு கொண்டு போய் விட்டது அந்த மூன்று நிமிடங்கள். வேறொன்றுமில்லை, வாகை சந்திரசேகர் தனது வழக்கமான ஜெனரேட்டர் சிரிப்போடு ஆடிக் கொண்டிருந்தார். அவருக்கு இரு புறமும் தலா ஐந்து இளங்குமரிகள் அவரை கட்டியணைத்தபடி இடுப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். (சார் காதல் மன்னனாம், எங்க அண்ணனுங்க காலமெல்லாம் ரொம்ப டெரராத்தான் இருந்திருக்கும் போல)

சந்திரசேகர் ரேஞ்சுக்கு இல்லை என்றாலும், ஜோதி கிருஷ்ணாவை எல்லாபெண்களும் விரட்டி விரட்டி கிஸ் கேட்கிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் பதினாலு ரீலீலும் நம்மை ஜோக்கில் மூழ்கடிக்க நினைத்த ஜோ.கி யின் ஆசை ஓரளவு பலித்திருப்பது ஆறுதல்.

ஒரு மொக்கை ஃபிகர் கிடைத்தாலும் அதை உலக அழகியாக கற்பனை செய்து கொண்டு அவளை விரட்ட ஆரம்பித்துவிடும் ஜோதி கிருஷ்ணாவுக்கு, கிடைப்பதெல்லாம் தலையணை சைசுக்கு ஏச்சும் பேச்சும்தான். ஒம் மூஞ்சுக்கு இதெல்லாம் தேவையா என்கிற அத்தனை ஃபிகர்களையும் வெறுப்பேற்றுகிற மாதிரி அவருக்கு ஒரு காதலி கிடைக்கிறாள். அவர்தான் கதாநாயகி திவ்யா பண்டாரி.

ooh_la_la_la_2
தனது மூக்கை பதம் பார்த்த ஃபிகர்களுக்கு மத்தியில் அவளை இழுத்துப்போய் அறிமுகப்படுத்தி வைத்து திருப்பி மூக்குடைக்கும் ஜோதி கிருஷ்ணா, ஒரு கட்டத்தில் நிஜமான காதலியை விட்டு விட்டு முழு நேரமும் கோபியர்கள் கொஞ்சும் ரமணாவாக திரிகிறார். இடையில் காதலி திவ்யா பண்டாரியை இவர் கிஸ்ஸடிக்கும் காட்சி ஒன்று கசிந்து நெட்டில் பரவி அவரது வாழ்க்கையையே சின்னா பின்னாமாக்குகிறது. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே கேள்வியாகி விட்டதே என்ற அவமானத்தில் கூனிக்குறுகும் ஜோதி கிருஷ்ணா அதற்கப்புறம் என்ன செய்தார் என்பதுதான் முடிவு.

இன்றைய கால கட்டத்தில் காதல் பட்டென்று முறிந்து விடுகிற முருங்கை மரமாகதான் இருக்கிறது என்பதை நெஞ்சில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கிறார். அந்த ஒரே காரணத்துக்காக ஜோதியை பாராட்டலாம். 'பரங்கிமலை ஜோதி' தியேட்டருக்கு இப்படத்தை அர்ப்பணிக்கிற அளவுக்கு கதையில் 'சதைப் பிடிப்பு' இருந்தும் அப்படியெல்லாம் வேலி தாண்டிய வெள்ளாடாக மாறாமல் இருந்ததற்கும் ஜோதிக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.

வில்லன் கூட்டத்தில் ஒரு தடி நபரை மட்டும் குறிவைத்து கல்லெறியும் இவரது சாகசம், சிறு குழந்தைகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதே போல அவ்வப்போது இவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் அந்த பாழடைந்த பஸ்சும் ஒரு கேரக்டரை போல வந்து போவது தனியாக கவனிக்க வைக்கிறது. உடைந்து போன ஒரு மாடிப்படியும் கூட அவ்வப்போது இடம்பெற்று தனி கவனம் பெறுகிறது.

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு நம்மை உள்ளே வர வழைத்த திவ்யா பண்டாரி, எக்ஸ்ரேவுக்கு சட்டை போட்ட மாதிரி இருக்கிறார். நம்ம ஊரு டேஸ்ட்டுக்கு இந்த சைசெல்லாம் ஆகாதும்மா...

கஞ்சா கருப்புவை நடிக்க வைத்தே தீருவதென்று சபதம் போட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜோதிகிருஷ்ணா.

பட்டிமன்ற ராஜாவுக்கு சிறப்பான ஒரு கேரக்டரை தந்திருக்கிறார்கள். இவருக்கெல்லாம் தியேட்டர்களில் சுண்டல் விற்போர் சங்கத்தினர் தனியாக போராடியாவது ஓய்வு நிதி திரட்டித் தரலாம். நடமாடும் து£க்க மாத்திரையாகவே படம் முழுக்க திரிகிறார் மனுஷன்.

எப்பவும் நெருப்பாக பொறியும் தலைவாசல் விஜய்யும், அவரது பொறுமைக்கார பொண்டாட்டி ராணியும் ஒரு நிஜ குடும்பத்தையே கண்முன் நிறுத்துகிறார்கள். 'இல்லாதப்பதான் அருமை தெரியும்' என்ற டயலாக் பல தம்பதிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடும். வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்க தலைவாசல் விஜய் பிரயத்தனப்படுவதும், அந்த சுண்ணாம்பு டப்பாக்களை அந்த குடும்பமே எது எதற்கோ பயன்படுத்தி அவரை அவமானப்படுத்துவதுமாக பல சீன்களில் நகைச்சுவை கலந்த நுணுக்கம்.

ooh_la_la_la_3
சேகர் சந்திரா என்ற புதியவரின் இசை ரசிக்க வைக்கிறது. பாடல்களோடு குழைந்து பாராட்ட வைக்கிறது கிராபிக்ஸ் தொழில் நுட்பம்.

டைரக்டர் ஜோதிகிருஷ்ணாவும், நடிகர் ஜோதி கிருஷ்ணாவும் மாறி மாறி வந்து தோளை தட்டிவிட்டு போகிறார்கள். மனதை தட்டுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்குமோ?

நன்றி தினக்குரல்





ஒரு கல் ஒரு கண்ணாடி


உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.

அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை.

ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று பாஸ்ட் பார்வர்டு கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.

குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.

ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்.

மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது.

தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!

முந்தைய மூன்று படங்களை விட இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.

உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.

ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கி விட்டார்கள். ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.

குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.

வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்.

எழுத்து- இயக்கம்: ராஜேஷ் எம்.

தயாரிப்பு: ரெட் ஜெயன்ட்


நன்றி விடுப்பு